தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முன்னோர் வழங்கிய மூலிகை: அரத்தை

View previous topic View next topic Go down

முன்னோர் வழங்கிய மூலிகை: அரத்தை Empty முன்னோர் வழங்கிய மூலிகை: அரத்தை

Post by mohaideen Thu Jan 29, 2015 4:57 pm

முன்னோர் வழங்கிய மூலிகை: அரத்தை Ht3236
சிறுவர்கள் இருமலுடன் அவதிப்படும் போது பெரியவர்கள் ஒரு வேரையும் அதனுடன் பனங்கற்கண்டையும் சேர்த்து சிதைத்து வாயில் அடக்கி கொள் என்பார்கள். அதை சுவைக்க காரமும் இனிப்பும் சேர்ந்து நம்மை அதை விரும்பச்செய்யும். வாயில் அடக்கி சாற்றை உள்ளுக்கு விழுங்குவது என்ன என்றே தெரியாமல் சாப்பிட்டு இருமலை போக்கிக்கொள்வோம். இன்றைக்கும் பல கிராமங்களில் இதை நாம் பார்க்க முடியும். அந்த வேருதான் அரத்தைகிழங்கு. அரத்தையானது இஞ்சி இனத்தை சேர்ந்த சிறு செடியினம். பார்ப்பதற்கு மஞ்சள் செடிபோலவே காட்சிதரும். 5 அடி உயரம் வளரும். 

குத்தாக பக்க இலைகள் விட்டு இருக்கும். அழகிய பூக்களும், சிவந்த பழங்களும் உடையது. அரத்தையின் மணம் குருமிளகு வாசனை போல் இருக்கும். கிழங்குகளுக்காக பயிரிடப்படுகிறது. கிழங்கு கடினத்தன்மை கொண்டது. இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரு இனம் உண்டு. பெரும்பாலும் கோழையகற்றவும், பசி மிகுத்தல் மருந்தாகவும் பயன்படுகிறது. நெஞ்சுக்கோழை, ஈளை, மார்புநோய், வீக்கம், பல்நோய், மார்புநோய், நாள்பட்ட ஐயம், கரப்பான், வாதசோணிதம், போக்கி பசியை உண்டாக்கும். மூட்டுவாத வீக்கம், வயிற்றுப்புண், தொண்டைப்புண் முதலியவற்றை குணப்படுத்தும்.

5 வயது முதல் 8 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு ஏற்படும் சளி மற்றும் பித்த நோய்கள், காய்ச்சல், சீதளக்காய்ச்சல் முதலியவற்றுக்கு 100கிராம் சிற்றரத்தையை பொடியாக்கி அதனுடன் 100கிராம் பனங்கற்கண்டை பொடித்து போட்டு இதில் சிறிதளவு வாயில் போட்டு சுவைத்து விழுங்கவேண்டும். அதன் பிறகு இளம் சூடான பசும்பால் 200 மிலி அருந்தினால் நோய்கள் குணமாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் மந்தம், கபம், கணை முதலியவற்றுக்கு சிறிய அளவிலான சிற்றரத்தை ஆமணக்கெண்ணெயில் நனைத்து விளக்கில் சுட்டு கரியாக்கி அதை எடுத்து தேனில் குழைத்து மிகச்சிறிய அளவில் கொடுத்தால் உடனடி குணம் ஏற்படும். 

சிற்றரத்தைப்பொடியை 2முதல் 4கிராம் வரை தேனுடன் கலந்து கொடுத்து வந்தாலும், சிற்றரத்தையை சிதைத்து 30மிலி வெந்நீரில்போட்டு 3 மணிநேரம் கழித்து வடிகட்டி 20 மிலி முதல் 45மிலி வரை தேன்சிறிது கலந்து கொடுத்தாலும் முன்சொன்ன நோய்கள் அனைத்தும் நீங்கும். சிற்றரத்தை பொடியை 1 கிராம் அளவில் எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டுவர சுரம், சளி, ஈளை, அருமல், தொண்டைப்புண், நீர்க்கோர்வை, வாயு பீனிசம் தீரும். அம்மியில் அல்லது சிமெண்ட் தரையில் இஞ்சிசாறு விட்டு அதில் சிற்றரத்தையை தேய்த்தால் அரத்தை கரைந்து மென்மையாக விழுது வரும். அதனுடன் மேலும் சிறிது இஞ்சிசாறு கலந்து சூடாக்கி தாங்கும் பதத்தில் கீழ் முதுகு தண்டுபகுதியில் வலிக்குமிடத்தில் பற்றுபோட்டால் முதுகு வலி தீரும்.

ஒரு துண்டு சிற்றரத்தையை வாயிலிட்டு சுவைத்துவர தொண்டையிற்கட்டும் கோழை வாந்தி இருமல் தணியும். அதிமதுரம், தாளிசம், திப்பிலி, சிற்றரத்தை வகைக்கு 10 கிராம் அளவில் எடுத்து அம்மியில் தண்ணீர் விட்டு அரைத்து 75மிலி தண்ணீரில் கலக்கி பொங்கிவரும்வரை அடுப்பில் வைத்து ஆறியபிறகு தேன் கலந்துசாப்பிட இருமல், கோழைகட்டு, குத்திருமல், தலைவலி, சீதளம், காய்ச்சல் முதலியவை குணமாகும். வாயுகோளாறுகள், தொடர் இருமல், அடிக்கடி ஏற்படும் தலைவலி, வாந்தி, பித்த மயக்கம், சுவாசக்கோளாறுகள் ஏற்பட்டால் சிற்றரத்தை எடுத்து நசுக்கி 15கிராம் அளவு எடுத்து கொள்ளவேண்டும். 200மிலி தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்கவைத்து ஆறியபிறகு வடிக்கட்டி அதனுடன் 50கிராம் கற்கண்டை பொடித்து போட்டு 50மிலி அளவில் குடித்து வந்தால் நோய் தீரும்.

அழலோடு உண்டாகும் கோழைகளுக்கு பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடவேண்டும். சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் கப, வாயு பித்த நோய்கள் அனைத்திற்கும் சிற்றரத்தையை சுட்டு தேனில் இழைத்து தாய்பாலில் கலந்து கொடுக்கவேண்டும். இது குறித்து தேரையர் கூறும்போது,

இதேபோல் பேரரத்தையும் மருத்துவ குணம் வாய்ந்ததுதான். வளிநோய், உடல்வலி, புறவலி, அழலைப்பற்றி ஐயசுரம், தலையேற்றம், சூதகவலி, நஞ்சுகளை நீக்கும் ஆற்றல் கொண்டது. 

http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3246
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

முன்னோர் வழங்கிய மூலிகை: அரத்தை Empty Re: முன்னோர் வழங்கிய மூலிகை: அரத்தை

Post by ஸ்ரீராம் Tue Feb 24, 2015 10:02 am

பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முன்னோர் வழங்கிய மூலிகை: அரத்தை Empty Re: முன்னோர் வழங்கிய மூலிகை: அரத்தை

Post by kanmani singh Tue Feb 24, 2015 11:29 am

செடியையும் கிழங்கையும் பார்த்திருக்கிறேன்.. ஆனால் இவ்வளவு பயனுள்ளது என்று இப்போதுதான் அறிந்து கொண்டேன்! நன்றி!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

முன்னோர் வழங்கிய மூலிகை: அரத்தை Empty Re: முன்னோர் வழங்கிய மூலிகை: அரத்தை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum