தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அரை மணி நேரத்தில் சென்னையிலிருந்து திருநெல்வேலி போகலாம்!

View previous topic View next topic Go down

அரை மணி நேரத்தில் சென்னையிலிருந்து திருநெல்வேலி போகலாம்! Empty அரை மணி நேரத்தில் சென்னையிலிருந்து திருநெல்வேலி போகலாம்!

Post by செந்தில் Thu Feb 05, 2015 10:06 am

[You must be registered and logged in to see this image.]
தலைப்பைப் பார்த்ததும், ‘இது சாத்தியமா’ என்ற அவநம்பிக்கை எழக் கூடும்! ஆனால் மனித குலத்தின் ஒவ்வொரு டெக்னாலஜி முன்னேற்றமும், சாத்தியம் ஆகாதவற்றை சாத்தியம் ஆக்கியதில்தானே முடிந்திருக்கிறது. சென்னையிலிருந்து திருநெல்வேலி 630 கிலோமீட்டர். ரயிலில் சுமார் 12 மணி நேரம் ஆகிறது. விமானத்தில் தூத்துக்குடி போய்ச் சென்றாலும் நான்கு மணி நேரம் ஆகும். அரை மணி

நேரத்தில் எப்படி சாத்தியம்?
‘ஹைபர்லூப்’ பயணத்தில் இது முடியும்! மணிக்கு 1220 கி.மீ தூரப் பயணம் இதில் சாத்தியம். ‘‘கப்பல், விமானம், ரயில், ஆட்டோமொபைல் வண்டிகள் ஆகிய நான்கு மட்டுமே இதுவரை இருக்கும் பயண

வழிகள். இது எதிலும் சேராத புதுமையான கண்டுபிடிப்பே ஹைபர்லூப்’’ என்கிறார் இதன் பிதாமகர் இலான் மஸ்க்.

‘பஞ்ச தந்திரம்’ படத்தில் பார்த்திருப்பீர்கள்... ஸ்டார் ஹோட்டலின் ஏதோ ஒரு தளத்திலிருந்து சலவை செய்ய வேண்டிய துணிகளை மூட்டையாக ஒரு டியூபில் போடுவார்கள். அது வழுக்கிக் கொண்டு பயணித்து, தரைத் தளத்தில் இருக்கும் சலவையகத்தை அடையும். (இந்த டியூப் வழியாக சடலத்தை அனுப்பும் காமெடி காட்சியை மறக்க முடியுமா?)
சில துணிக்கடைகளில் நீங்கள் ஐந்தாவது மாடியில் பர்ச்சேஸ் செய்யும் டிரஸ்களை ஒரு கவரில் போட்டு, அங்கிருக்கும் ஒரு துவாரத்தில் திணிப்பார்கள். அது வழுவழு டியூபில் வந்து டெலிவரி கவுன்ட்டரில் விழும். இதே டெக்னாலஜியில் மனிதர்களை அனுப்பினால்... அதுதான் ஹைபர்லூப்! ஆனால் இதேபோல மூட்டை கட்டி அனுப்பாமல் மிகுந்த பாதுகாப்போடு அனுப்புகிறார்கள்.
[You must be registered and logged in to see this image.]பொதுவாக அதிவேக ரயில்களுக்கு இரண்டு பிரச்னைகள்தான்... ஒன்று தண்டவாளத்தோடு ஏற்படும் உராய்வால் வேகம் தடைபடும்; இன்னொன்று, காற்றின் எதிர்ப்பால் வேகம் தடைபடுவது! இந்த இரண்டையும் தவிர்த்துவிட்டு வேகப் பயணத்தை சாத்தியமாக்க உலகெங்கும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அதில் முக்கியமான ஒரு மைல்கல்லைத் தொட்டிருக்கிறார் இலான் மஸ்க்.

அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபரான இவர், ‘பே பால்’ வர்த்தக இணையதளத்தை ஆரம்பித்து, புகழ்பெறச் செய்து, அதை பெரும் லாபத்துக்கு விற்றவர். கிடைத்த பணத்தை வைத்து, ரஸ்க் சாப்பிடாமல் ஏகப்பட்ட ரிஸ்க் எடுத்துக் கொண்டிருக்கிறார். உலகின் மிகச் சிறந்த எலெக்ட்ரிக் காரில் ஆரம்பித்து ராக்கெட் வரை தயாரித்துக் கொண்டிருப்பவர். சயின்ஸ் ஃபிக்ஷன் கதைகளில் வரும் சகல கற்பனைகளையும் நிஜமாக்கும் சாத்தியங்களை ஆராய்ந்து கொண்டிருப்பவர். அப்படித்தான் இதையும் சாத்தியமாக்கும் திட்டத்தை கடந்த மாதம் அறிவித்திருக்கிறார். முதல் கட்டமாக லாஸ்
ஏஞ்சல்ஸ் நகரத்தையும் சான் ஃபிரான்சிஸ்கோவையும் இணைக்கும் பாதையை ரெடி செய்ய பிளான் ரெடி!
இதன் டெக்னாலஜி கொஞ்சம் புதுமையானது. சென்னையில் மெட்ரோ ரயிலுக்காக தூண்களின் மீது பாலங்கள் கட்டி, உயரத்தில் ரயிலுக்குப் பாதை இருக்கிறதே... அது போல தூண்களின் மீதுதான் இந்தப் பாதையும் அமையும். ஆனால், அவ்வளவு பெரும் பொருட்செலவு தேவையில்லை. 40 முதல் 100 அடி உயரத் தூண்களை ஒவ்வொன்றும் 300 அடி இடைவெளியில் நிறுவினால் போதும். அதன்மீது உறுதியான, ஆனால் எடை அதிகமில்லாத உலோகத்தில் குழாய்கள் பதிக்கப்பட்டிருக்கும். பிரமாண்ட தண்ணீர்க் குழாய்கள் போல இரண்டரை மீட்டர் அகலத்தில் இவை இருக்கும். இரண்டு குழாய்கள் அருகருகே... ஒன்று போகும் வழிக்கு; இன்னொன்று திரும்பும் வழிக்கு! இவற்றுக்கு மேலே சூரிய சக்தி தகடுகள் பதித்து மின்சாரம் தயாரிக்கப்படும்.
கேப்ஸ்யூல் மாத்திரைகள் சாப்பிடுவீர்களே... அதை பிரமாண்ட சைஸில் உறுதியான அலுமினியத்தில் உருவாக்குவதாக கற்பனை செய்யுங்கள். அப்படிப்பட்ட கேப்ஸ்யூல்கள்தான் இந்தக் குழாயில்

பயணிக்கும் வாகனங்கள். விமானத்தில் இருப்பது போல இருக்கையில் பயணிகளை வரிசையாக உட்கார வைத்து, சீட் பெல்ட் போட்டுக் கொள்ளச் சொல்வார்கள். அதன்பிறகு இந்த கேப்ஸ்யூல்

மூடப்பட்டு, குழாய்க்கு அனுப்பப்படும். கேப்ஸ்யூலின் முன்பக்கம் இருக்கும் ஏர் கம்ப்ரஸ்ஸர் இயங்க ஆரம்பித்ததும், அந்த விசையில் அது வேகமாகப் பயணிக்கும். குழாயின் உள்புறத்தில் அழுத்தம்

குறைவாக இருப்பதாலும், கேப்ஸ்யூல் அதற்குள் காற்றில் மிதந்தபடி பறப்பதாலும், உராய்வோ, தீ விபத்தோ ஏற்படும் ஆபத்து இல்லை. தரையை விட உயரமான இடத்தில், குழாய்க்குள் பயணிப்பதால்

வேறு மாதிரியான விபத்துகளும் நிகழாது. ஒரு நிமிடத்துக்கு ஒரு கேப்ஸ்யூல் என குழாய்க்குள் அனுப்பிக் கொண்டே இருக்கலாம். அடுத்த கேப்ஸ்யூல் பயணத்தை ஆரம்பிப்பதற்குள், முதல் கேப்ஸ்யூல்

25 கி.மீ தூரம் போயிருக்கும். அதனால் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளாது. பாதுகாப்புக்காக எமர்ஜென்சி பிரேக்கும் கேப்ஸ்யூலில் இருக்கும்.

‘‘விமானப் பயணத்தை விட, ரயில் பயணத்தைவிட குறைந்த கட்டணத்தில் இதில் பயணம் சாத்தியம். லேபாரட்டரி பரிசோதனைகளில் வெற்றி பெற்றுவிட்டோம். அடுத்து ஆரம்பிக்க வேண்டியதுதான்’’
என்கிறார் மஸ்க்.

அவர் இதற்கு காப்புரிமை வாங்கவில்லை. யாரும் எங்கு வேண்டுமானாலும் இதை முயற்சிக்கலாம் என்கிறார். இங்கே யாராவது ரெடியா?

[You must be registered and logged in to see this image.]
நன்றி -http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=6107&id1=4&issue=20131028
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அரை மணி நேரத்தில் சென்னையிலிருந்து திருநெல்வேலி போகலாம்! Empty Re: அரை மணி நேரத்தில் சென்னையிலிருந்து திருநெல்வேலி போகலாம்!

Post by kanmani singh Thu Feb 05, 2015 11:33 am

அடேங்கப்பா !!!!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

அரை மணி நேரத்தில் சென்னையிலிருந்து திருநெல்வேலி போகலாம்! Empty Re: அரை மணி நேரத்தில் சென்னையிலிருந்து திருநெல்வேலி போகலாம்!

Post by ஜேக் Fri Feb 06, 2015 7:14 am

வெளிநாட்டில் வருவதை வரவேற்கலாம்.

நம்நாட்டிற்கு வந்தால் நம்மவர்கள் விக்ரம், விஜய், அஜீத், போன்றவர்களுடைய காலைகாட்சிக்கும், டாஸ்மாக்குக்கும், அரசியல் மீட்டிங்குகளுக்கும் வந்துபோவதற்குதான் பயன்படுத்துவார்கள். முடியலை  

(இப்பவே ரிசர்வ் பண்ணப்பட்ட பகுதியில் அரசியல் மீட்டிங் செல்கிற தொண்டர்கள் ஆக்ரமித்து பயணிகளுக்கு தருகிற தொல்லை இருக்கிறதே...)  முடியலை
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

அரை மணி நேரத்தில் சென்னையிலிருந்து திருநெல்வேலி போகலாம்! Empty Re: அரை மணி நேரத்தில் சென்னையிலிருந்து திருநெல்வேலி போகலாம்!

Post by முரளிராஜா Sat Feb 07, 2015 7:35 am

சரிதான் ஜேக் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அரை மணி நேரத்தில் சென்னையிலிருந்து திருநெல்வேலி போகலாம்! Empty Re: அரை மணி நேரத்தில் சென்னையிலிருந்து திருநெல்வேலி போகலாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum