தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வாந்தி பேதி மருந்துகள்

View previous topic View next topic Go down

வாந்தி பேதி மருந்துகள் Empty வாந்தி பேதி மருந்துகள்

Post by mohaideen Mon Feb 09, 2015 4:39 pm

வாந்தி, பேதி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்களை நம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்காமல் இருக்க முடியாது. வாந்தி என்றாலே, அது
90 சதவிகிதம் உணவுக்குழாய் பிரச்னை என்று அர்த்தம். 10 சதவிகித அளவுக்கு காய்ச்சல் நோயாளிகளுக்கும் மூளை சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் வாந்தி வரலாம்.

வாந்தி பேதி மருந்துகள் Ht3268
வாந்தி என்பது என்ன? 

உடலுக்கு ஒப்புக் கொள்ளாத, தேவையில்லாத விஷமான ஒன்றை இரைப்பைக்குள் உறிஞ்ச விடாமல், உணவுக்குழாய்க்குள் மேலும் கீழும் செல்லவிடாமல் தடுக்கும் ஓர் அற்புதமான தற்காப்பு செயலே! இது எத்தனை பேருக்குத் தெரியும்? அதனால்தான் சில வேளைகளில் வாந்தி எடுத்த பின், உபாதைகள் நீங்கி நலமாக ஆகிவிட்டது போல தோன்றும். வாந்தி நின்றுவிட்டாலே மருத்துவத்தையோ, மருத்துவரையோ தேட மாட்டார்கள். இதனால் வாந்தியை மீறி உணவுக்குழாய்க்குள் செல்லும் கிருமிகளோ, வேண்டாத உணவோ உணவுக்குழாயின் மற்றொரு நோயாக வயிற்றுப்போக்குப் பேதியை உருவாக்கும்.

இந்தியா போன்ற கோடை நாடுகளில் பயணத்தின் போது ஏற்படும் வைரஸ் கிருமிகளாலான Travaler’s Diarrhea சில வேளைகளில் தானாகவே நின்று விடும். பெரும்பாலான நேரங்களில் கையை சுத்தமாக கழுவாதவர்கள், சரியாகக் கழுவி பராமரிக்கப்படாத பாத்திரங்கள், சுகாதாரமற்ற உணவுத் தயாரிப்பு, காய்கறிகள், இறைச்சி, முறையாக தேக்கி   வைத்து சுத்தமாக சமைக்கப் படாதது, சமைக்கப்பட்ட உணவு சுத்தமாக பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு பரிமாறப் படாதது, பரிமாறுபவர்களின் சுத்தம், சுகாதாரம் இல்லாமை என அனைத்து நிலைகளிலும் உணவில் கிருமிகள் கலக்கலாம்.

வாந்தியுடன் கூடிய பேதிக்கு வாந்தியை நிறுத்த Ondansetron மருந்துகள் வாந்தியின் போது தண்ணீர் இல்லாமலே வாயிலேயே கரையும் மருந்துகளாக, சொட்டு மருந்துகளாக, மாத்திரையாகக் கிடைக்கிறது. இந்த மருந்துகளை எடுத்து ஒரு மணி நேரம் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் வாந்தி நின்று விடும். வாந்தி மட்டுமே இருந்தாலும் இம் மருந்தால் குணமானாலும் அடுத்து சில மணி நேரங்களில் வரப்போகும் பேதிக்காக மருத்துவரை அணுகி தேவையான மருந்துகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். வாந்தியுடன் திரவ உணவுகளை முழுங்க முடிந்து திட உணவுகளை முழுங்க முடியாமல் இருந்தால் உணவுக்குழாய் கேன்சராக இருக்கலாம்.

இரண்டு அல்லது மூன்று முறைக்கு மேல் நீராக ரத்தமின்றி, ரத்தமுடன் முழுமையாக ஜீரணமாகாத உணவுடன், வயிற்று வலியுடனோ வலி இல்லாமலோ பேதியானால் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது. காரணமே இல்லாது, ஒப்புக் கொள்ளாத உணவு அல்லது அதிகப்படியான உணவு காரணமாக ஏற்படும் வயிற்றுப்போக்கு இரு முறைக்கு மேல் இருந்தால் - வயிற்றுப்போக்கை நிறுத்தும் மருந்தை எடுத்து நன்றாக ஆகிவிட்டதுபோல ஓர் உணர்வு இருந்தால்கூட மருத்துவரிடம் சென்று நோய்க்கான காரணத்துக்கு மருந்துகள் வாங்குவது நல்லது.

காரணம்... பேதியாவதற்கு முக்கிய காரணிகளான வைரஸ், பாக்டீரியா, புரோட்டோசோவா, காளான் (Fungus), புழு (Worms) போன்ற கிருமிகள். குடல் அசைவைத் தடுக்கும் மருந்துகளை உட்கொண்டு பேதியாவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தாலும் கூட, நோய் முற்றிய உடலில் நீர் இழந்த நிலையில் மருத்துவரை நாட வேண்டியது வரும். பேதியாவதற்கு மேலே கூறிய காரணங்களைத் தவிர பாலுக்கு ஒவ்வாமை (Lactose Intolerance) இருந்தாலும், அதிகமாக கிருமி மருந்துகளை உட்கொள்ளுவதாலும், மருந்துகளை அடிக்கடி உட்கொள்வ தாலும், குடலில் நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் கொல்லப்படுவதாலும், ஹைப்பர் தைராய்டிஸம் என்ற பிரச்னையாலும் குடல் கேன்சரினாலும்   கூட பேதியாவது சகஜம். முதியவர்களுக்கு மலச்சிக்கலும் பேதியும் மாறி மாறி வருவதாக இருந்தால் குடல் கேன்சராக இருக்கலாம்.

பேதியாகும் போது கிருமிகள் தாக்கத்தால் குடலிலிருந்து நீர் வெளியேறுவதும், கிருமிகள் இருக்கும் இடங்களில் அப்போது குடல் சுருங்குவதால்
அதனால் ஏற்படும் வலியும், சிலவேளைகளில் ரத்தப்போக்கும், வயிற்றுப்போக்கின் நோய் அறிகுறிகளை விளக்குவதால் வெறும் பேதியை நிறுத்தும் மருந்தால் நோயிலிருந்து முழு நிவாரணம் அடைய முடியாது.

பேதி என்பது முழுக்க முழுக்க குடலிலிருந்து கிருமிகளின் தாக்கத்தால் நீர் வெளியேறுவது. அதனால் உடலிலிருந்து நீருடன் சில உப்புகளும் வெளியேறுவதுதான் உடலைப் பாதிக்கும் ஒரு முக்கியமான நோயின் தாக்கமாகும். அதனால், உடலுக்கு நீர் தருவது, தேவையான அளவு உப்புக்கரைசலுடன் தருவது (ORS  Oral Rehydration Salts)  மிக முக்கியமான சிகிச்சை. நம் மக்கள் பேதியோ, ஜுரமோ, பச்சைத் தண்ணீர் கூட பல்லிலே படாமல் இருந்தால் சரியாகி விடும் என்ற தவறான எண்ணத்தில் இருக்கின்றனர். பேதியாகும் போது எவ்வளவு நீர் வெளியேறுகிறதோ, அந்த அளவுக்கு வீட்டில் தயாரிக்கும் அளவான உப்புடன் தாராளமான அரிசி நொய் கஞ்சி எடுப்பது மிகச் சிறந்த மருந்தாகும். அதற்கு அடுத்தது புளிக்காத மோர், இளநீர், ளிஸிஷி பவுடர் கரைசல்கள், பழச்சாறு போன்றவையும் கொடுக்கலாம். 

இதற்குப் பிறகு மருத்துவரை அணுகும் முன், அவசரத்துக்கு பிரயாணத்தின் போது, மருத்துவர் பரிந்துரைக்கும் பேதியை நிறுத்தும் குடல் அசைவைத் தடுக்கும் மருந்துகளை (Anti Motlity Drugs) எடுத்துக் கொள்ளலாம். அது வேலை செய்யும் 6 - 8 மணி நேரத்துக்குள் மருத்துவரைச் சந்தித்து கிருமிகளுக்கான நீர் வெளியேற்றத்தைத் தடுக்கும் மருந்து எடுத்துக் கொள்வது அவசியம். பேதியை நிறுத்தும் மருந்துகளை அடுத்த வேளை பேதி இல்லாத போது எடுத்துக் கொண்டால் மலச்சிக்கலை உருவாக்கும். அடிக்கடி பேதியானால் மட்டுமே, மருத்துவர் பரிந்துரைக்கும் போது எடுத்துக் கொள்ளவும். 

15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இதை கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கொடுக்கும் போது குடல் விரிந்துவிட (Paralytic Ileus) வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, இந்த மருந்துகளை கொடுக்க வேண்டாம். Loperamide, Codeine (Paralytic Ileus போன்ற மருந்துகளை குழந்தைகளுக்கு கண்டிப்பாக கொடுக்கக் கூடாது. மூத்த குடிமக்கள் 12 மணி நேரத்துக்கு ஒரு முறை தேவைப்பட்டால் மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். பேதி நின்றாலும் நோய் காரணிக்கான மருந்துகளை உட்கொள்வது, சில நேரங்களில் ஈரலில் ஏற்படும் சீழ் கட்டிகள் மற்றும் அப்பென்டிசைடிஸ் போன்ற அறுவை சிகிச்சை நோய்களுக்குக் கூட ஆரம்ப கட்ட வைத்தியத்தினால், மருந்தினால், அறுவை சிகிச்சை இல்லாமல் பூரண குணமாக வாய்ப்பு இருக்கிறது.   
 
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3278
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வாந்தி பேதி மருந்துகள் Empty Re: வாந்தி பேதி மருந்துகள்

Post by முரளிராஜா Tue Feb 10, 2015 11:04 am

பயனுள்ள தகவலுக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வாந்தி பேதி மருந்துகள் Empty Re: வாந்தி பேதி மருந்துகள்

Post by ரானுஜா Tue Feb 10, 2015 5:12 pm

பயனுள்ள தகவல்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

வாந்தி பேதி மருந்துகள் Empty Re: வாந்தி பேதி மருந்துகள்

Post by செந்தில் Tue Feb 10, 2015 8:40 pm

அறிய தந்தமைக்கு நன்றி நண்பா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

வாந்தி பேதி மருந்துகள் Empty Re: வாந்தி பேதி மருந்துகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum