தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிந்தனை செய் மனமே

View previous topic View next topic Go down

சிந்தனை செய் மனமே Empty சிந்தனை செய் மனமே

Post by முழுமுதலோன் Wed Feb 11, 2015 3:28 pm

ஓயாது பேசிக் கொண்டிருப்பவன்
தன் உள்ளத்தில் ஒன்றுமில்லையென்பதைத் காட்டிக் கொள்கிறான்.

ஒன்றுமே பேசாதிருப்பவன்
தன்னுள்ளத்தில் எதையோ மறைத்துக் கொண்டிருக்கிறான் என்பதைக் காட்டி விடுகிறான்.

முன்னவனை ஓட்டைவாயன் என்றும்; பின்னவனை அறிஞன் என்றும் கூறுகிறவன் தன் அவசரப் புத்தியைக் காட்டிக் கொள்ளுகிறான்.

முன்னவனை நல்லவன் என்றும் பின்னவனை வஞ்சகன் என்றும் கூறுகிறவன் அவனைவிட அவரசக்காரன் என்பதைக் காட்டிக் கொள்ளுகிறான்.

இந்நால்வரும் சிந்தனைச், செல்வத்தை இழந்து விட்டவர் என்பது அறிஞரின் & சான்றோர்களின் முடிவு
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்தனை செய் மனமே Empty Re: சிந்தனை செய் மனமே

Post by முழுமுதலோன் Wed Feb 11, 2015 3:29 pm

நம்பிக்கையைத் தூண்டும் பத்து வழிகள்


1. அடிமனதில் வெற்றிபெற துடிக்கும் எண்ணங்களை வரிசைப்படுத்து.

2. சிறப்பான வழிகளை தேர்வு செய்

3. எப்படி செய்வதென எழுது

4. வழக்கமான பணி நேரம் போக இதற்கென நேரத்தை ஒதுக்கு

5. தினமும் எப்படி செய்வதென எழுது

6. தயார் நிலைக்கு வந்ததும் சரியான சூழலை எதிர் நோக்கு

7. தினமும் அதற்காக செயற்படப்போவதை கற்பனை செய் செயலாக்கு

8. வெற்றி பெற்றவர் அணுகுமுறையை கையாள்

9. தினமும் வெற்றி பெற்றவர்களை பார் படி
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்தனை செய் மனமே Empty Re: சிந்தனை செய் மனமே

Post by முழுமுதலோன் Wed Feb 11, 2015 3:29 pm

தவிர்த்துவிடுங்கள்

1. பொய் பேசும் நா.
2. கர்வ பார்வை.
3. தீமை செய்யும் கை.
4. தீயதை திட்டமிடும் அறிவு.
5. தீய காரியங்களை செய்ய விரையும் கால்.
6. பொய் சொல்ல எழும் சாட்சி.
7. நண்பர்களிடம் பகைமை வளர்க்கும் மனிதர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்தனை செய் மனமே Empty Re: சிந்தனை செய் மனமே

Post by முழுமுதலோன் Wed Feb 11, 2015 3:30 pm

* உங்களுக்கு எது செய்யப்பட கூடாது என்று விரும்புகிறிர்களோ அதை மற்றவர்களுக்கு செய்யாதிர்கள்.--கன்பியுசியஸ்.

* வித்தியாசமான மனிதர்களிடமும் விதம் விதமாக சிந்தனை போக்குகளிலும் ஒருமையை உணர பழகுங்கள் .ஒருமையே பிரபஞ்ச ரகசியம் .--நரேந்தர்

* உன்னுடைய பலம் எது பலவீனம் எது என்று பட்டியலிடுவதை விட பலத்தை மேன்மேலும் அதிகப்படுத்தும் போது பலவீனம் காணமல் போகிறது .
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்தனை செய் மனமே Empty Re: சிந்தனை செய் மனமே

Post by முழுமுதலோன் Wed Feb 11, 2015 3:31 pm

ஒருவன் கால்களை இழந்துவிட்டால், கால்ளைக் கொடுக்க முடியாது.
ஆனால்
கால்கள் இல்லாமல் வாழமுடியும் என்ற தன்னம்பிக்கையைத் தர முடியும்.


"வெற்றியால் மகிழ்ச்சி மட்டும் தான் கிடைக்கும் ..
ஆனால் தோல்வியால் நல்ல அனுபவமும்
அதனால் பக்குவமும் கிடைக்கும் …
அனுபவம்தான் வாழ்கையில் வெற்றி பெற உதவும்"

*உழைப்பு உடலை வலிமையாக்கும்
துன்பம் மனதை வலிமையாக்கும்
`

*புகழும்போது வெட்கப்பட்டும், அவமானப் படுத்தும்போது அமைதியாக இருந்தும் பழக்கப் பட்டவன் எவனோ அவனே மனிதர்களில் மேம்பட்டவன்
`

* எந்த மனிதனுக்கும் அவன் வாழும் வழியை முற்றிலும் சொல்ல முடியாது. அவனாக உணர்ந்து கண்டுபிடிக்க உதவத்தான் முடியும்.

- கலிலியோ.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்தனை செய் மனமே Empty Re: சிந்தனை செய் மனமே

Post by முழுமுதலோன் Wed Feb 11, 2015 3:31 pm

*சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்

*பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம்
இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

*அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல் - நெப்போலியன்

*நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!

*மது உள்ளே சென்றால் அறிவு வெளியே செல்கிறது
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்தனை செய் மனமே Empty Re: சிந்தனை செய் மனமே

Post by முழுமுதலோன் Wed Feb 11, 2015 3:32 pm

தண்டனை கொடுப்பதற்கு தாமதம் செய்
ஆனால்
மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை செய்யாதே


ஒருவரை ஒருவர் ஆலோசனை கேட்டுக் கொள்ளுங்கள். அதில்தான் தவறுகளும், பயனற்ற பிழைகளும் செய்யாமல் தப்ப வழி இருக்கிறது.

அறிவுரை தேடிச் செல்லாதவன் மடையன். அவனது மயக்கம், அவனை உண்மை அறியாமல், குருடாக்கி விடும். அவனைத் தீயவனாய், பிடிவாதக்காரனாய், சுற்றி இருப்பவர்க்கு ஆபத்தானவனாய் ஆக்கி விடும்.

விசாலமான அறிவையும, அனுபவங்களையும், மதிப்பீட்டு அறிவையும் நான் வளர்த்துக் கொள்ளவில்லையெனில், நான் ஒரு ஆலோசகன் ஆக முடியாது.

அவசரத்தை நிதானமாக்கு. வாய்ப்புக்கள் வருகையில் சோம்பேறியாய் இருக்காதே. அப்போதுதான் பெரிய பிழைகளைத் தவிர்க்கலாம். முளைவிட்ட நெருப்பு அணைந்து சாம்பலாகும்வரை சும்மா இருந்து விட்டு, அப்புறம் ஊதிக்கொண்டிருப்பவனைப் போல் இராதே.

கடந்து போனவைபற்றி எண்ணி நம்பிக்கை இழந்து விடாதே. திரும்பி வராதவைகளுக்காக அழுது புலம்புவது மனித பலவீனம். நேற்று என் செயல்களுக்கு வருந்தினேன். இன்று நான் என் பிழைகளையும், தீமைகளையும் புரிந்து கொள்கிறேன். அத்தோடு என் நடுக்கத்தையும் அழித்து விட்டேன்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்தனை செய் மனமே Empty Re: சிந்தனை செய் மனமே

Post by முழுமுதலோன் Wed Feb 11, 2015 3:33 pm

வாழ்க்கை ஒரு இசைக்கருவி போன்றது. இசைக்கருவி தன்னிலே சூன்யமாய் இருப்பினும் இனிய, ஆழமான, அழகிய இசையை பிரதிபலிக்கும் தகுதி கொண்டது. அதை மீட்டுபவர்களை பொறுத்து இசையின் தன்மை அமையும். அதே போல்தான் வாழ்க்கையும். வாழ்க்கையின் திசையை, அதன் போக்கை நிர்மாணிப்பது நாமே. நம் வாழ்வை சொர்க்கமாக்குவதும், நரகம் ஆக்குவதும் நம் கையில்தான் உள்ளது. அதற்கு நமக்கு உள்ள சுதந்திரத்தை சரியாக பயன்படுத்தி, நம் வாழ்வை மகிழ்ச்சியாக, பயன் உள்ளதாக நாமே உருவாக்க வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்தனை செய் மனமே Empty Re: சிந்தனை செய் மனமே

Post by முழுமுதலோன் Wed Feb 11, 2015 3:33 pm

1) மற்றவர்களின் குறைகளைப் பற்றி மட்டுமே ஆராய்ந்து கொண்டிருக்காதே. அவர்களின் நல்ல குணங்கள் உனக்கு தெரியாமலே போய் விடும்.
`
2) உன் கண்களில் கருனையையும், உன் வார்த்தையில் அன்பையும் காட்டு, பகையாளியும் உன்வசமாவான்.
`
3) நான் என்ற அகந்தையை விடு. நான் எல்லாம் தெரிந்தவன் என்று மற்றவர்களை குறைவாக மதிப்பிடாதே. அந்த மமதை உன்னை அளித்து விடும்.
`
4) எல்லோரையும் பாராட்டும் மனப்பான்மையை வளர்த்துக் கொள். தன்மானத்தை என்றும் விடாதே
`
5) பொறுமைக்கு என்றும் அழிவில்லை. பொறாமை குணத்தை விட்டொழி.
`
`
அன்னைதெரசா
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்தனை செய் மனமே Empty Re: சிந்தனை செய் மனமே

Post by முழுமுதலோன் Wed Feb 11, 2015 3:34 pm

யார் எப்படி அவமானப்படுத்தினாலும் கோபமே வராது அந்த துறவிக்கு.
அந்த ரகசியத்தை அறிந்து கொள்வதில் ஒரு சிஷ்யருக்கு ஆர்வம்.
`
துறவி விளக்கினார்.
"ஒரு ஏரியில் காலியானபடகில் அமர்ந்து தியானம் செய்வது என் வழக்கம். அப்படி ஒருமுறை தியானத்தில் இருந்தபோது நான் அமர்ந்திருந்த படகை வந்து முட்டியது ஒரு படகு.
'இப்படி அஜாக்கிரதையாக முட்டவிட்டது யார்?' என்று கோபமாகக் கண்களைத்திறந்து பார்த்தால் அது வெற்றுப்படகு!
`
காற்றுக்கு அசைந்து அசைந்து வந்து மோதியிருக்கிறது.
என்கோபத்தினை அந்த வெற்றுப்படகிடம் காட்டி என்ன பயன்?
`
யாராவது என்னைக் கோபப் படுத்தும்போது இதுதான் நினைவுக்கு வரும்;
இதுவும் வெற்றுபடகுதான் என்று அமைதியாகி விடுவேன்!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்தனை செய் மனமே Empty Re: சிந்தனை செய் மனமே

Post by முழுமுதலோன் Wed Feb 11, 2015 3:35 pm

1.நீ யாரை வேண்டுமானாலும் சந்தேகி.ஆனால் உன்னையேயல்ல.

2.வாய்ப்பு ஏற்படும் போது உடனடியாக நல்லது செய்து விடுங்கள்.

3.மகிழ்சியைப் போல் ஒரு அழகு சாதனம் அழகிற்கு வேறெதுவுமில்லை.

4.வாழ்கையின் ஏற்றத்தாழ்வுகளை நிதானத்துடன் எடுத்து கொள்ள வேண்டும்.

5.சுத்தம் உண்மையாக தெய்வீகத்திற்கு அடுத்தபடியானது.

6.வாழ்கையின் மிகப்பெரிய இலட்சியம் அறிவல்ல செயல்தான்.

7.தன்னையே தேடும் முடிவில்லாத போக்கே வாழ்க்கை.

8.அன்பான சொல் மருந்தாகவுமிறிக்கிறது.வாழ்த்தவும் செய்கிறது.

9.மென்மையான சொல் இரும்பு வாசலைத் திறக்கிறது.

10.திருப்தி மாதிரிப் பொக்கிஷம் வேறெதுவும் கிடையாது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்தனை செய் மனமே Empty Re: சிந்தனை செய் மனமே

Post by முழுமுதலோன் Wed Feb 11, 2015 3:35 pm

* நம்பிக்கையோடு வாழுங்கள்.

* நியாயமான தவறுகளை மறந்துவிடுங்கள்.

* வாழ்க்கையில் முன்னோக்கிப் போக வேண்டும்;பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.

* என்னுடைய நம்பிக்கை என்னும் ஊற்று காயாமல் இருக்க வேண்டும் என்று கவனமாக இருக்கிறேன்.

* முள்ளை முள்ளால் எடுக்கலாம். ஆனால் ஒரு தவறை இன்னொரு தவறால் திருப்பிக் கொடுக்க வேண்டாம்.

* எதிரியாக இருந்தாலும் பசி தீருங்கள்.

* விழலாம், எழாமல் இருக்கக் கூடாது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்தனை செய் மனமே Empty Re: சிந்தனை செய் மனமே

Post by முழுமுதலோன் Wed Feb 11, 2015 3:36 pm

* எதையும், யாரையும் சமாளிக்க முடியும். முப்பத்திரண்டு பற்களுக்கிடையில் ஒரு மெல்லிய நாக்கு வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா?

* உங்கள் உதடுகளில் எப்போதும் ஒரு புன்முறுவல் ஒட்டிக் கொண்டிருக்கட்டும். எதிர் வருவோர் எல்லோரையும் அது பற்றிக் கொள்ளும்.

* சோதனைகளை எதிர்கொள்வதில்தான் மனிதனின் சக்தி வெளிப்படுகிறது.

* பணம் போனாலும் பரவாயில்லை. சொல்லை சிதறவிடக் கூடாது.

* எதையுமே உடனே செய்து முடித்துவிடுங்கள். ஒதுக்கி வைத்தால் சுமை கூடி இறுதியில் ஒன்றையுமே செய்ய முடியாமல் போய்விடும்.

* சிந்திக்காமல் படித்துக் கொண்டே போவது, ஜீரணிக்காமல் சாப்பிட்டுக் கொண்டே இருப்பதைப் போல.

http://www.no1tamilchat.com/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்தனை செய் மனமே Empty Re: சிந்தனை செய் மனமே

Post by செந்தில் Wed Feb 11, 2015 3:44 pm

முத்தான சிந்தனைகள் .
' கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சிந்தனை செய் மனமே Empty Re: சிந்தனை செய் மனமே

Post by kanmani singh Wed Feb 11, 2015 4:15 pm

அத்தனையும் முத்துக்கள்!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

சிந்தனை செய் மனமே Empty Re: சிந்தனை செய் மனமே

Post by mohaideen Wed Feb 11, 2015 6:07 pm

அனைத்தும் அருமை
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சிந்தனை செய் மனமே Empty Re: சிந்தனை செய் மனமே

Post by முரளிராஜா Thu Feb 12, 2015 9:43 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சிந்தனை செய் மனமே Empty Re: சிந்தனை செய் மனமே

Post by ஸ்ரீராம் Thu Feb 12, 2015 10:04 am

உண்மை உண்மை
அருமையான பதிவு. நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சிந்தனை செய் மனமே Empty Re: சிந்தனை செய் மனமே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum