Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அராபிய குதிரை சிந்தனை
Page 1 of 1 • Share
அராபிய குதிரை சிந்தனை
டாக்டர் சுபா சார்லஸ்
திருமணத்தில் இணைகிற, குறிப்பாக ஏற்பாட்டுத் திருமணங்களில் இணைகிற கணவனும் மனைவியும், ஒரே கூண்டில் அடைக்கப்படுகிற எலி-பூனையைப் போன்றவர்கள். இரண்டு பேரின் குணாதிசயங்களும் நெறிமுறைகளும் வேறு வேறு. பூனைக்கு எலியை அடித்துத் தின்பது பாவமான செயல் அல்ல. அதைப் பொறுத்தவரை அது தனக்குப் பசியாற்றும் ஒரு வழி.
அடுப்பங்கரைக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து, உணவைத் திருடித் தின்பது எலியின் பார்வையில் தவறே அல்ல. தனக்கும், தன் குட்டிகளுக்கும் பசியாற்ற அதற்குத் தெரிந்த வழி அது. கணவன் - மனைவியும் இப்படித்தான். இரண்டு பேரும் வேறு வேறு சூழலில், கலாசார பின்னணியில் வளர்ந்து, வாழ்க்கையில் இணைகிறார்கள். அவர்களது சிந்தனைகளும் நெறிமுறைகளும் குடும்பத்துக்குக் குடும்பம் வேறுபடும். இதுதான் சரி... இது தவறு என ஒரு தீர்ப்பை முன் வைப்பது முறையற்றது. திருமணத்துக்குப் பிறகு இருவரும் இணைந்ததும், அவர்களுக்கென ஒரு கலாசாரமும் நெறிமுறையையும் உருவாக்கி, அதன்படி இணக்கமாக வாழ்வதுதான் சரியாக இருக்க முடியும்.
மாதவனும் மலர்விழியும் அமெரிக்கா வாழ் இந்தியர்கள். இவர்களுக்கு ஒரு மகன். ஒரு வருடத்துக்கு முன்பே மலர்விழி மகனுடன் இந்தியா வந்து விட்டார். மகனை இங்கேயே பள்ளியில் சேர்த்துவிட்டார். ரொம்ப நாட்களாகவே கணவன்-மனைவிக்குள் பிரச்னை. 3 மாத விடுமுறையில் இந்தியா வந்த போது என்னை சந்தித்தார் மாதவன்.மாதவன் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். மலர்விழியோ நகரத்துவாசி. பொகாரோ ஸ்டீல் சிட்டியில் பிறந்து வளர்ந்தவர். தமிழ்ப் பெண் என்றாலும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் சரளமாகப் பேசும் திறமை கொண்டவர். அவரது அப்பா அங்கே பெரிய ஆபீசராக இருந்து சமீபத்தில்தான் ரிட்டயர் ஆகியிருக்கிறார்.
அதன் பிறகு சென்னைக்கு வந்து சொந்த வீடு வாங்கி, வசதியாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பவர்கள். மாதவனோ கிராமத்துப் பின்னணியில் பிறந்து, வளர்ந்து, பிறகு அவரது படிப்புத் திறமையால் படிப்படியாக முன்னேறி, அமெரிக்காவில் வேலை பார்க்கிற அளவுக்கு உயர்ந்தவர். அம்மா, அப்பா பார்த்து முடித்த மலர்விழியை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். உடனே அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கேயே குழந்தையும் பிறந்தது. மலர்விழியின் அம்மா அமெரிக்காவுக்கு வந்து கொஞ்ச நாள் கூடவே தங்கியிருந்து, மகளையும், பேரனையும் கவனித்துக் கொண்டார். இந்த நிலையில் மாதவனின் அம்மாவுக்கு திடீரென உடல் நலம் சரியில்லாமல் போனது.
மகனுக்கு மனது கேட்கவில்லை. அம்மாவின் பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்ள மலர்விழியை அனுப்ப முடிவு செய்தார். இதற்கிடையில் மலர்விழியின் பெற்றோரோ... ‘அவ சின்னப்புள்ளைய வச்சுக்கிட்டு கஷ்டப்படறா. அவ வர வேண்டாம். நாங்க உங்க அம்மாவை பார்த்துக்கறோம். அவங்க கிராமத்துல வசதி இருக்காது. அதனால சென்னையில எங்கக்கிட்ட வரச் சொல்லுங்க... எங்க வீட்டுக்குப் பக்கத்துல பெரிய ஆஸ்பத்திரி இருக்கு. அங்க சேர்த்து நாங்க நல்லா கவனிச்சுக்கறோம்’ எனச் சொல்லியிருக்கிறார்கள். அதன்படி மாதவனின் அம்மாவும் சென்னை வந்து 2 மாதங்கள் தங்கியிருந்து சிகிச்சைகள் எடுத்துக் கொண்டார்.
உடம்பு தேறியதும் மறுபடி கிராமத்துக்கே கிளம்பி விட்டார். மாதவனுக்கோ அம்மா, அப்பாவை கிராமத்தில் தனியே விட்டு வைப்பதில்உடன்பாடில்லை. மனைவியைக் கட்டாயப்படுத்தி அவர்களிடம் அனுப்பி வைத்திருக்கிறார். மலர்விழியும் போயிருக்கிறார். ஆனால், அவரால் அந்த கிராமத்துச் சூழலை தாக்குப்பிடிக்க முடியவில்லை. லேப்டாப் இல்லாமல், நெட் வசதி இல்லாமல் சமாளிக்க முடியவில்லை. அப்போதுதான் மாதவனுக்கு மலர்விழி, திருமணத்துக்கு முன்பே பிபிஓ கம்பெனியில் நைட் ஷிஃப்ட்டில் வேலை பார்த்த விவரமே தெரிய வந்திருக்கிறது. அதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம்.‘அதெப்படி நீ பிபிஓ வேலைக்கெல்லாம் போனே’ என மாதவன் கேட்க, ‘அதுல என்ன இருக்கு... சென்னை வந்ததும் எனக்கு அந்த வேலைதான் கிடைச்சது. எனக்குப் பிடிச்சிருந்துச்சு. போனேன்.
அதுல என்ன தப்பு’ என மலர்விழியும் வாக்குவாதம் செய்திருக்கிறார்கள். வேலைக்குப் போன விஷயத்தைத் தன்னிடம் சொல்லவில்லை என்பதில் மாதவனுக்குக் கடுப்பு. ‘பொண்ணு பார்க்க வந்தப்பவே உங்க வீட்டாளுங்கக்கிட்ட எல்லாத்தையும் சொல்லியாச்சு. நீங்க கேட்டிருந்தா நான் உங்கக்கிட்டயும் சொல்லியிருப்பேனே...’ என்பது மலர்விழியின் வாதம். மாமியாரைப் பார்க்க வந்த இடத் தில் மலர்விழியின் குழந்தைக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போனது. மருத்துவ வசதிகள் இல்லாத அந்த கிராமத்தில் தன் குழந்தைக்கு சிகிச்சை கொடுக்க விருப்பமின்றி, தன் அப்பாவுக்கு போன் செய்து வரவழைத்து, அவருடன் சென்னைக்குக் கிளம்பி விட்டார் அவர். அந்த விஷயத்திலும் கணவன்-மனைவிக்குள் கடுமையான வாக்குவாதம்.
அம்மாவை விட்டுவிட்டுப் போனதில் மாதவனுக்குக் கோபம். ‘ஒரு வசதியும் இல்லாத அந்த ஊர்ல நானும் என் புள்ளையும் எப்படிக் காலம் தள்ள முடியும்? எனக்கு இந்தியும் இங்கிலீஷும்தான் சரளமா வரும். உங்கம்மாவுக்கு நான் பேசறது புரியாது. எங்க ரெண்டு பேருக்கும் சரியா வராது‘ என்பது மலர்விழியின் பதில். இப்படியே நாட்கள் நகர்ந்தன. மாதவன் இந்தியா வரும்போது கூட மலர்விழி அவருடன் புகுந்த வீட்டில் தங்குவதைத் தவிர்த்தார். ஒரே ஒரு நாள் போய் பார்த்துவிட்டு திரும்பி விடுவார். மலர்விழிக்கோ திரும்பவும் அமெரிக்கா செல்வதில் இஷ்டமில்லை. பிள்ளையையும் சென்னையில் பள்ளிக்கூடத்தில் சேர்த்தாயிற்று. தானும் ஒரு வேலையைத் தேடிக் கொண்டு, அம்மா அப்பாவுடனேயே தங்கி விடலாமா என்றும் மாதவனை நிரந்தரமாகப் பிரிந்து விடலாமா என்றும் யோசனை.
மாதவன் வருமானத்தின் பெரிய பகுதியை தன் கிராமத்தில், விவசாயத்தில் முதலீடு செய்து, விவசாயம் படுத்துப் போய் நஷ்டமானதில் பெரிய வருத்தத்தில் இருந்தார். மண்ணில் போட்ட பணமெல்லாம் மண்ணாகிப் போனதில், கிராமத்துக்கும் போக முடியாமல், மனைவியுடனும் சேர்ந்து வாழ முடியாமல் குழப்பமான ஒரு மனநிலையில்தான் என்னை சந்திக்க வந்தார்.மாதவனுக்கு அவர் மனைவி தன்னை ஏமாற்றி விட்டதாக ஓர் எண்ணம். திருமணத்துக்கு முன்பு வேலைக்குச் சென்றதை வேண்டுமென்றே மறைத்ததாக நினைத்துக் கோபப்பட்டார். திருமணத்துக்கு முன்பு பார்த்த மனைவியின் வேலைதான் அவரை இப்படி தான்தோன்றித் தனமாக நடந்து கொள்ளச் செய்வதாக நம்பினார்.
‘‘உங்களுடையது பெரியவங்க பார்த்துப் பேசி முடிச்சு வச்ச கல்யாணம்தான். உங்க வீட்டுப் பெரியவங்க விசாரிச்சிருக்கணும். உங்க மனைவி நைட் ஷிஃப்ட் வேலை பார்த்தது நீங்க தவறா பேசற அளவுக்கு தப்பான விஷயமில்லை. நைட் ஷிஃப்ட் பார்க்கிறதாலதான் உங்க மனைவி இப்படி நடந்துக்கிறதா நீங்க ஃபீல் பண்ணினா, அதை கல்யாணத்துக்கு முன்னாடியே நீங்க யோசிச்சிருக்கணும். உங்க மனைவி வேலைக்குப் போன விஷயத்தை வீட்டு ஆளுங்க உங்கக்கிட்ட சொல்லாம மறைச்சதுல உங்க மனைவிக்கு எந்த சம்பந்தமும் இல்லை. இதுல அவங்க தப்பு எதுவும் இல்லை. இத்தனை வருஷ திருமண வாழ்க்கையில உங்க மனைவியோட நடத்தையில நீங்க எந்தத் தவறையும் கண்டுபிடிக்கலை.
நைட் ஷிஃப்ட் வேலை பார்த்ததால ஆண்கள்கிட்ட முறையில்லாம பழகறதோ, பார்ட்டியே கதினு கிடக்கிறதோ அவங்கக்கிட்ட இல்லை. அதனால அவங்க வேலை விஷயத்தை நீங்க மறந்துட ணும். கிராமத்துல பிறந்து வளர்ந்த நீங்க அதே மாதிரி சூழல்ல பிறந்து வளர்ந்த ஒரு பெண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணியிருந்தீங்கன்னா உங்களுக்கேத்தபடி இருந்திருப்பாங்க. ஆங்கிலம், இந்தி பேசத் தெரிஞ்சிருக் காது. நீங்க உங்க மனைவி தனியா அமெரிக்காவுல சமாளிச்சதா சொன்னதெல்லாம் கிராமத்துப் பெண்ணா இருந்திருந்தா செய்திருக்க மாட்டாங்க. ஆனா, உங்க மனைவியோ நீங்க பிறந்து வளர்ந்த சூழல்லேருந்து முழுக்க வித்தியாசமான சூழல்ல வளர்ந்தவங்க. சுதந்திரமா வளர்ந்தவங்க.
நீங்க கிட்டத்தட்ட ஒரு அரேபிய குதிரையை கல்யாணம் பண்ணியிருக்கீங்க. ஆட்டுக்குட்டி மாதிரி ஒரு கிராமத்துப் பொண்ணைக் கல்யாணம் பண்ணியிருந்தா உங்களையே சுத்திச் சுத்தி வந்திருக்கலாம். அரேபிய குதிரையை நல்லா கவுன்சலிங் பண்ணி நான் ஆட்டுக்குட்டியா மாத்திடுவேன்னு சொன்னா முடியாத காரியம். அரேபிய குதிரையை அதோட சுபாவங்களுக்காக நீங்க நேசிக்கணும். உங்க மனைவியை அவங்களோட தனிப்பட்ட குணங்களுக்காக நீங்க நேசிக்கணும். அவங்களோட மொழிப் புலமைக்காகவும், பிள்ளையை வளர்க்கிற நேர்த்திக்காகவும், தைரியமான நடவடிக்கைக்காகவும் நேசிக்கணும்.
தேவையில்லாத அரட்டையோ, வம்புப் பேச்சோ இல்லாம, தான் உண்டு, தன் வேலை உண்டுனு இருக்காங்க. அவங்களோட சக்தியை, திறமையை நீங்க ஏத்துக்கிட்டு ரசிக்கணும். உங்க சின்ன குடும்பத்துக்கான பலமா பார்த்திருக்கணும். அதையெல்லாம் விட்டுட்டு, ‘ஐயையோ இவ ஆட்டுக்குட்டி மாதிரி நடந்துக்க மாட்டேங்கிறாளே’னு நினைக்கக் கூடாது. அரேஞ்சுடு மேரேஜ்ல இப்படி வித்தியாசங்கள் வர்றது சகஜம். அதை ஏத்துக்கிட்டு, அட்ஜஸ்ட் பண்ணி வாழக் கத்துக்கணும்’’ என அட்வைஸ் செய்து அனுப்பி வைத்தேன்.
பயிற்சி
ஒரே ஒரு பூமி உருண்டைதான். இன்னொன்றை தேடிக் கண்டுபிடிக்க முடியாது. எண்ணிலடங்காத நட்சத்திரங்களும் கோள்களும் இருக்கின்றன. ஆனாலும், பூமியைப் போல இத்தனை உயிரினங்கள் உள்ள இன்னொரு இடத்தை நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. இத்தனை கோடி மக்களிலும் ஒவ்வொரு மனிதரும் வித்தியாசமானவரே. ஒவ்வொருவருக்கும் விரல் ரேகையும் விழியும் கூட வித்தியாசப்படும். கல்யாணம் ஆனதும் தன் வாழ்க்கைத் துணையின் குணாதிசயங்களை மாற்றி விடலாம் என்கிற நினைப்பில் பலரும் வாழ்க்கையில் இணைகிறார்கள். ஆனால், அது சாத்தியமே இல்லை. அவர்கள் அவர்களாகத்தான் இருப்பார்கள்.
காட்டுக்குதிரையை வீட்டுக்குள் வளர்க்கிற ஆட்டுக்குட்டியாக மாற்றி விடுவேன் என கனவு காண்பது நடக்கவே நடக்காது. ஆட்டுக்குட்டியை அதன் குணங்களுக்காக நேசிக்க வேண்டும். காட்டுக்குதிரையை அதன் குணங்களுக்காக ரசிக்கவும், நேசிக்கவும் வேண்டும். பூக்களில் பல வகைகள் உள்ளன. ஒன்று மிகப் பெரியதாக, அழகாக இருக்கும். ஆனால், வாசனையே இருக்காது. ஒரு சின்ன மல்லிகைப் பூ மனதை கொள்ளை கொள்ளும். எந்தப் பூவையும் நாம் கெட்டது, அசிங்கமானது என ஒதுக்குவதில்லை. அந்த மாதிரிதான் மனிதர்களும். வித்தியாசங்களை ரசிக்கவும், ஏற்றுக் கொண்டு அனுசரித்து வாழ்வதில்தான் இருக்கிறது வாழ்க்கையின் சுவாரஸ்யமும் சவால்களும். அந்த அனுபவத்தைத் தவற விட வேண்டாம்.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: அராபிய குதிரை சிந்தனை
மிக அருமையானா மனோதத்துவ கட்டுரை
நன்றி அண்ணா
நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அராபிய குதிரை சிந்தனை
சிறப்பான கட்டுரை மணமக்கள் அனைவரும் படித்து புரிந்து நடக்கவேண்டிய கருத்தான பதிவு.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» கடல் குதிரை
» வாவ் ! குதிரை
» குதிரை ஓட்டி - முத்துக்கதை
» ஐம்பது வேளை சாப்பாடு - கடல் குதிரை.
» குதிரை வண்டியில் தபால் டெலிவரி
» வாவ் ! குதிரை
» குதிரை ஓட்டி - முத்துக்கதை
» ஐம்பது வேளை சாப்பாடு - கடல் குதிரை.
» குதிரை வண்டியில் தபால் டெலிவரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|