தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


யார் இந்த வைதேகி? - சில நிமிடங்கள் ஒதுக்கி படியுங்கள்.

View previous topic View next topic Go down

யார் இந்த வைதேகி? - சில நிமிடங்கள் ஒதுக்கி படியுங்கள்.  Empty யார் இந்த வைதேகி? - சில நிமிடங்கள் ஒதுக்கி படியுங்கள்.

Post by ஸ்ரீராம் Thu Feb 26, 2015 10:15 am

யார் இந்த வைதேகி? - சில நிமிடங்கள் ஒதுக்கி படியுங்கள்.  156053_931306580253155_4261678998497453653_n

யார் இந்த வைதேகி?

எதற்காக காத்திருக்கிறாள்?

இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்ள இந்த பதிவைப் படிக்க ஒரு சில நிமிடங்களை செலவழியுங்கள்.

ஏனெனில், உங்கள் நட்போ அல்லது உறவோ இல்லை யாரோ தூரத்து சொந்தமோ அவர்களுக்கு வைதேகியைப் பற்றி நீங்கள் சொல்வதால் நன்மை ஏற்படும்.

வைதேகியைப் பற்றிய சிறு குறிப்பு. அழகான தோற்றம், மென்பொருள் நிறுவனத்தில் வேலை, சரிசமமாக நடத்தும் கணவர், வாழ்க்கைக்கு வசந்தம் சேர்க்க மகள், சுதந்திரத்தைத் தட்டிப் பறிக்காத புகுந்த வீடு. இதுதான் வைதேகியின் வாழ்க்கை. இதைவிட என்ன வேண்டும் ஒரு பெண்ணுக்கு என நீங்கள் கேட்பது புரிகிறது. அப்படித்தான் வைதேகியும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தார். 2014-ம் ஆண்டு வரை.

எப்போதும் சுறுசுறுப்பாக, பரபரப்பாக வீடு, வேலை, குடும்பம், குழந்தை என இருந்த வைதேகிக்கு திடீரென வலது புற கழுத்தில் ஒரு கட்டி ஏற்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் வலி அதிகமாகிறது. காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் செல்ல சில மருந்துகளை தருகிறார். தற்காலிக நிவாரணம். உடனே, தனது குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை செய்கிறார். அவர் இதை அசட்டை செய்ய வேண்டாம் என எஃப்.என்.ஏ.சி. என்ற மிக முக்கியமான பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார்.

மருத்துவ பரிசோதனை முடிவு, வைதேகியின் கணவரிடம் தெரிவிக்கப்படுகிறது. கண்ணீர் கண்களை மறைக்க, மனைவியையும் மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறார். மருத்துவர் முதலில் ஒரு மணி நேரம் இருவருக்கும் கவுன்சிலிங் தருகிறார். வைதேகியின் நிலவரம் அறிந்து மொத்தக் குடும்பமும் நிலை குலைந்து போகிறது.

தனிமையில் சிந்திக்க ஆரம்பிக்கிறாள் வைதேகி... "நான் வெஜிடேரியன். ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கம் கொண்டவள். சோம்பேறி இல்லை. வீட்டு வேலை, அலுவலக வேலை என எப்போதும் பரபரப்பாக இருப்பவள். வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக பேணுபவள். உடற்பயிற்சிகள் செய்யத் தவறியதில்லை. அப்புறம் எப்படி எனக்கு..?" வைதேகியின் யோசனை நீள்கிறது. அவருக்கு ஒரு தெளிவு பிறக்கிறது.

இது போன்ற நோய் ஏற்பட இதுமட்டும்தான் காரணம் என குறிப்பிட்டு வரையறுக்க முடியாது. காரணம் எது வேண்டுமானாலும் இருக்கலாம். வாழ்க்கைமுறை இல்லாமல், பரம்பரை தாக்கம் இல்லாமல், வேறு ஏதோ ஒன்றுகூட காரணமாக இருக்கும் என புரிந்து கொள்கிறார்.

அந்த தெளிவு பிறந்தவுடன் தொடங்குகிறது ஒரு யுத்தம். அது 'lymphoma' என்ற வகையான புற்றுநோயுடனான யுத்தம். இரண்டாவது கட்டத்தை நோய் எட்டியிருந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். புற்றுநோய் என்பதே வேதனை என்றால் அதற்கான சிகிச்சையும் வேதனையளிப்பதாகவே இருக்கிறது. கீமோதெரபி, ஸ்டெராய்டு, நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் ஊசிகள். பக்க விளைவுகளும் வந்தன. அழகான, அடர்த்தியான கூந்தல் அனைத்தையும் கொத்து கொத்தாக வைதேகி இழந்து கொண்டிருந்தபோது, வைதேகியின் கணவர் தலையை முழுவதும் மொட்டை அடித்துக் கொண்டு வந்து நிற்கிறார். இறைவா இந்த அன்பைவிட எனக்கு வேறு என்ன வேண்டும் என்ற வைதேகி சிலாகிக்கிறாள்.

சிகிச்சைக்கு ஒத்துழைப்பதைத் தவிர வேறு வழியில்லை. பொறுமையாக காத்திருக்கிறாள் வைதேகி. வைதேகியை முன்பு பார்த்தவர்கள் அவளை அடையாளம் காண முடியாத அளவு உருக்குலைந்து கொண்டிருந்தது. கண்ணாடி பார்ப்பதை தவிர்த்தாள் வைதேகி. 4 சுற்று சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் பரிசோதனை செய்யப்படுகிறது. வைதேகி உடலில் புற்றுநோய் அறிகுறிகள் முற்றிலும் அழிந்திருந்தன. இருப்பினும் அணு அளவேனும்கூட இருந்துவிடக் கூடாது என்பதால் இன்னும் சில காலத்துக்கு மருந்து, மாத்திரை உட்கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்கள் அறிவுரை.

முழுமையாக ஓராண்டு கடந்துவிட்டது. இப்போது வைதேகி இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார். அவரது வருகைக்காகவே காத்திருந்த அவரது நிறுவனம் அவரை மீண்டும் பணியமர்த்திக் கொண்டது. ஸ்டெராய்டு தாக்கம் உடலில் இருந்து மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது. தலையில் முடி லேசாக எட்டிப்பார்க்க துவங்கியிருக்கிறது. வைதேகி காலையில் எழுந்து குழந்தையை பள்ளிக்குத் தயார் செய்து. உணவு சமைத்து. மின்சார ரயில் பிடித்து, பின்னர் ஒரு ஷேர் ஆட்டோ ஏறி அலுவலகம் செல்கிறார். வைதேகி யுத்தத்தில் வெற்றி பெற்றுவிட்டார் என்று உங்கள் மனசு சொல்வது கேட்கிறது.

இந்த வைதேகியை நீங்கள் எப்படி இந்த எழுத்தின் மூலம் தெரிந்து கொண்டீர்களோ... அதேபோல்தான் நானும் எழுத்து மூலம் தெரிந்து கொண்டேன். ஆம், வைதேகியே அவரது வலைப்பதிவு பக்கத்தில் பதிந்திருந்த பதிவில் இருந்து அறிந்து கொண்டேன்.

இன்றைய காலகட்டத்தில் அன்றாடம் யாருக்காவது புற்றுநோய் வருகிறது. சிலர் போராடுகிறார்கள் பலர் தோற்றுப்போகிறார்கள் என்றுதானே சொல்கிறீர்கள். உண்மைதான். ஆனால், வைதேகி தனது வெற்றியோடு நின்றுவிடவில்லை. வைதேகி காத்திருக்கிறாள். தன்னைப் போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனதிடத்தை வளர்த்துக் கொள்வதற்கான ஆலோசனை வழங்க, சிகிச்சை பெறும் வழிமுறைகள் கூற, சிகிச்சை பின்விளைவுகளை ஏற்றுக் கொள்வது எப்படி என தெரிவிக்க காத்திருக்கிறாள். தன் வலைப்பதிவின் கீழ் அவர் பதிந்திருக்கும் நிலைத்தகவல் இதுவே...

"புற்றுநோய் எனக்கு நிறைய பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறது. நண்பர்கள் யார் என அடையாளம் காட்டியிருக்கிறது. உறவுகளின் நம்பகத்தன்மையை உணர வைத்திருக்கிறது. இவற்றைவிட முக்கியமானது மனக்குழப்பத்தை தவிர்க்க வேண்டும் என்பது. இருப்பது ஒரு லைஃப். அதை அமைதியாக வாழ்வோமே. நீங்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு சிற்சில ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம். நான் வாழத் தொடங்கியிருக்கிறேன். வாழ்ந்து காட்டுவேன்."

இப்போது புரிகிறதா வைதேகி ஏன் காத்திருக்கிறாள் என்று.

வைதேகியின் பதிவில் இருந்து சில பாடங்கள்:

1. புற்றுநோய் பேதம் பார்ப்பதில்லை. ஏழை, பணக்கார, சாதி, மதம், வயது வித்தியாசம் இதற்குக் கிடையாது.

2. நான் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் கொண்ட நபர். எனக்கு புற்றுநோய் வர வாய்ப்பே என்ற எண்ணம் தவறானது.

3. அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்வது நல்லது.

4. மருத்துவப் பரிசோதனைகளுக்கு செலவு செய்வது தேவையற்றது என்ற எண்ணம் கூடாது.

5. சரி, நோய் வந்தேவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். முடங்கிப் போகாதீர்கள்.

6. இருப்பது ஒரு வாழ்க்கை அதை மகிழ்ச்சியாக அனுபவிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு இவை தவிர்த்தும் வேறேனும் தோன்றியிருக்கலாம். படித்த கையோடு பகிர்ந்துவிடுங்கள்.

வைதேகியின் பிளாக்: http://vaidehivc.blogspot.in/

நன்றி: இந்து பேப்பர் Via அறிவோம் ஆயிரம்.


Last edited by ஸ்ரீராம் on Thu Feb 26, 2015 10:28 am; edited 1 time in total
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

யார் இந்த வைதேகி? - சில நிமிடங்கள் ஒதுக்கி படியுங்கள்.  Empty Re: யார் இந்த வைதேகி? - சில நிமிடங்கள் ஒதுக்கி படியுங்கள்.

Post by முரளிராஜா Thu Feb 26, 2015 10:18 am

வலைபக்க முகவரி எங்கே ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

யார் இந்த வைதேகி? - சில நிமிடங்கள் ஒதுக்கி படியுங்கள்.  Empty Re: யார் இந்த வைதேகி? - சில நிமிடங்கள் ஒதுக்கி படியுங்கள்.

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 26, 2015 10:20 am

ஏதோ ஒரு குறையோடுதான் மனிதன் வாழ வேண்டியிருக்கு போல...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

யார் இந்த வைதேகி? - சில நிமிடங்கள் ஒதுக்கி படியுங்கள்.  Empty Re: யார் இந்த வைதேகி? - சில நிமிடங்கள் ஒதுக்கி படியுங்கள்.

Post by ஸ்ரீராம் Thu Feb 26, 2015 10:30 am

முரளிராஜா wrote:வலைபக்க முகவரி எங்கே ராம்

மேலே இணைத்துவிட்டேன் முரளி. கண்டுபிடிக்க சற்று தாமதம் ஆகிவிட்டது.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

யார் இந்த வைதேகி? - சில நிமிடங்கள் ஒதுக்கி படியுங்கள்.  Empty Re: யார் இந்த வைதேகி? - சில நிமிடங்கள் ஒதுக்கி படியுங்கள்.

Post by kanmani singh Thu Feb 26, 2015 12:06 pm

வைதேகி வாழ்க வளமுடன்!!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

யார் இந்த வைதேகி? - சில நிமிடங்கள் ஒதுக்கி படியுங்கள்.  Empty Re: யார் இந்த வைதேகி? - சில நிமிடங்கள் ஒதுக்கி படியுங்கள்.

Post by ஸ்ரீராம் Thu Feb 26, 2015 12:17 pm

kanmani singh wrote:வைதேகி வாழ்க வளமுடன்!!

ஆமாம் சகோதரி. சென்னையை சேர்ந்த பெண். யாருக்கும் இந்த கஷ்டம் வரக்கூடாது. வைதேகி நீந்தி கரை சேர்ந்து இருக்கிறாள்.

வாழ்க வளமுடன் வைதேகி.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

யார் இந்த வைதேகி? - சில நிமிடங்கள் ஒதுக்கி படியுங்கள்.  Empty Re: யார் இந்த வைதேகி? - சில நிமிடங்கள் ஒதுக்கி படியுங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum