Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அருள்மிகு லட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோயில், தேனி
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
அருள்மிகு லட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோயில், தேனி
மூலவர் : லட்சுமிநாராயணர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி
தல விருட்சம் : மகிழம்
தீர்த்தம் : சுரபி நதி
ஆகமம்/பூஜை : பாஞ்சராத்ரம்
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : அரிகேசவநல்லூர்
ஊர் : சின்னமனூர்
மாவட்டம் : தேனி
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
சித்ராபவுர்ணமி, புரட்டாசி சனிக்கிழமை.
தல சிறப்பு:
பெருமாள் அருகில் ஆஞ்சநேயர் அருள்பாலிப்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு லட்சுமி நாராயணப்பெருமாள் கோயில், சின்னமனூர் - 625 515. தேனி மாவட்டம்.
போன்:
+91- 4554 - 247 486, 247 134.
பொது தகவல்:
இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் திரிதளம் எனப்படும்.இங்கிருந்து சற்று தூரத்தில் சிவன், பூலாநந்தீஸ்வரர் என்ற பெயரில் கோயில் கொண்டிருக்கிறார். இங்குள்ள சிவன், சன்னதிக்கு வெளியில் எங்கிருந்து பார்த்தாலும் ஒரே அளவில் காட்சி தருவார் என்பது சிறப்பான அம்சம்.
பிரார்த்தனை
குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக, விவசாயம் செழிக்க, முதலாளிகளிடம் விசுவாசம் நிலைத்திருக்க இங்கு வேண்டிக் கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் படைத்து, நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
பெருமாளுடன் ஆஞ்சநேயர்: கருவறையில் லட்சுமிநாராயணர், நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். பல்லாண்டுகளுக்கு முன்பு இக்கோயிலில் ஆஞ்சநேயருக்கு சன்னதி அமைக்க முற்பட்டனர். அதற்காக சிலை வடித்து, சன்னதியும் எழுப்பப்பட்டது. சன்னதியில் ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்யும் முன்பாக, பக்தர் ஒருவர் மூலமாக அசரீரியாக ஒலித்த பெருமாள், தன் பக்தனான ஆஞ்சநேயரை தனக்கு அருகில் பிரதிஷ்டை செய்யும்படி கூறினார். அதன்படி ஆஞ்சநேயர் சிலையை மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்தனர். தற்போதும் ஆஞ்சநேயரை, மூலஸ்தானத்தில் சுவாமிக்கு அருகில் தரிசிக்கலாம். இவர் சுவாமியின் பாதத்தைவிட, உயரம் குறைவானவராக காட்சி தருவது விசேஷம். இவருக்காக அமைக்கப்பட்ட சன்னதி, பிரகாரத்தில்இருக்கிறது. அனுமன் ஜெயந்தியன்று இவருக்கு விசேஷ பூஜைகள் நடக்கும். ஆஞ்சநேயர், சூரியபுத்திரன் என்பதால் ஞாயிற்றுக் கிழமைகளில் இவருக்கு வடை மாலை அணிவித்து வழிபடுவது விசேஷம்.
கம்பு பிரார்த்தனை: தீராத நோய், வயிற்று வலி நோயால் அவதிப்படுபவர்கள், தங்களுக்குரிய நட்சத்திர நாளில் சுவாமிக்கு துண்டு கட்டி வேண்டிக்கொள்கிறார்கள். பக்தர்கள் கொடுக்கும் துண்டை, சுவாமியின் மடியில் கட்டி திருமஞ்சனம் செய்கின்றனர். பின்பு ஈரமான துண்டை, பக்தர்களிடம் கொடுத்து விடுகிறார்கள். இதை வீட்டில் விரித்து, அதன் மீது படுத்துக்கொண்டால், நோய் நிவர்த்தியாவதாகச் சொல்கிறார்கள். திருமஞ்சனம் செய்வதற்கு கட்டணம் உண்டு.
இப்பகுதி விவசாயம் செழித்த பகுதியென்பதால் பக்தர்கள், தங்கள் வயலில் நெல் விதைக்கும் முன்பாக சுவாமியின் பாதத்தில் வைத்து பூஜித்துச் செல்கிறார்கள். மேலும் விவசாய நிலம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்பதற்காக, காவலுக்கு கொண்டு செல்லும் கம்புகளை சுவாமியிடம் வைத்து, சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து வேண்டிக்கொள்ளும் வழக்கமும் இருக்கிறது. திருமணத்தடை உள்ள பெண்கள் பெருமாளுக்கும், ஆண்கள் ஸ்ரீதேவிக்கும் மாலை அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள். நிலம் தொடர்பான பிரச்னை நீங்க, பூமாதேவிக்கு செவ்வாய் கிழமைகளில், செவ்வாய் ஓரை நேரத்தில் குங்கும அர்ச்சனை செய்து, அதை தங்களது நிலத்தில் தூவி வேண்டிக் கொள்கிறார்கள்.
சுரபிநதியின் கிழக்கு கரையில் அமைந்த கோயில் இது. சுவாமி குருவாயூர் அமைப்பில் காட்சி தருவதால், அக்கோயிலைப் போலவே இங்கும் லட்சுமிநாராயணர் கையில் வைத்திருக்கும் சந்தனத்தையே பிரசாதமாகத் தருகிறார்கள். கிருஷ்ண ஜெயந்தியன்று சுவாமிக்கு கிருஷ்ணரைப்போல் அலங்காரம் செய்து விசேஷ பூஜைகள் செய்வர். அன்று உற்சவர் குழந்தை கிருஷ்ணராக அலங்காரத்தில், கையில் வெண்ணெய் தாழியுடன் புறப்பாடாவார். சுவாமி இங்கு பிரதானம் என்பதால், பரிவார மூர்த்திகள் இல்லை. சுவாமிக்கு எதிரே கருடாழ்வார் மட்டும் இருக்கிறார். பிரகாரத்தில் மகிழ மரத்தின் கீழ் சிவலிங்கம், நாகர் இருக்கின்றனர். சனி, குரு பெயர்ச்சி காலத்தில் உலக நன்மைக்காக விசேஷ ஹோமங்கள் நடக்கும். சித்ராபவுர்ணமி விழா, சுவாமிக்கு விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அன்று சுவாமி குதிரை வாகனத்தில் பெரியாற்றில் எழுந்தருளுவார். சிவனுக்குரிய மகிழ மரம் இத்தலத்தின் விருட்சமாகும்.
தல வரலாறு:
முற்காலத்தில் இப்பகுதியில் வசித்த பெருமாள் பக்தர்கள், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அமைப்பில் இங்கு சுரபி நதிக்கரையில் சிலை வடித்து கோயில் எழுப்பினர். ஒருசமயம் அந்நியர் படையெடுப்பின்போது, கோயில் சேதமடைந்தது. பின்பு இப்பகுதியை சேர மன்னர்கள் ஆண்டு வந்தனர். அப்போது ஸ்ரீதேவி, பூதேவியுடன் மன்னர் கனவில் தோன்றிய பெருமாள், தனது இருப்பிடத்தைச் சுட்டிக்காட்டி இங்கு கோயில் எழுப்பும்படி கூறினார். அதன்பின்பு இங்கு குருவாயூரப்பன் அமைப்பில் சுவாமிக்கு சிலை வடித்த மன்னர், தாயார்களுடன் பிரதிஷ்டை செய்தார். குருவாயூரில் சின்னக்கண்ணனாக காட்சி தரும் பெருமாள் இங்கு, தாயார்களுடன் காட்சி தருவது விசேஷமான தரிசனம். பொதுவாக மகாலட்சுமி தாயாருடன் மட்டும் காட்சி தரும் மூர்த்தியே, "லட்சுமி நாராயணர்' என்ற பெயரில் அழைக்கப்படுவார். ஆனால், இங்கு சுவாமியின் மார்பிலுள்ள மகாலட்சுமி பிரதான தாயாராக கருதப்படுவதால், சுவாமிக்கு இப்பெயரே அமைந்துவிட்டது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: பெருமாள் அருகில் ஆஞ்சநேயர் அருள்பாலிப்பது சிறப்பு.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அருள்மிகு லட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோயில், தேனி
நல்லதொரு ஆலய பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» கம்பம் அருள்மிகு கம்பராயப்பெருமாள் திருக்கோயில், தேனி
» வீரபாண்டி அருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோயில், தேனி
» பெரியகுளம் அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், தேனி
» அருள்மிகு பெத்தாக்ஷி விநாயகர் திருக்கோயில், தேனி
» சுருளிமலை அருள்மிகு பூதநாராயணசுவாமி திருக்கோயில், தேனி
» வீரபாண்டி அருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோயில், தேனி
» பெரியகுளம் அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், தேனி
» அருள்மிகு பெத்தாக்ஷி விநாயகர் திருக்கோயில், தேனி
» சுருளிமலை அருள்மிகு பூதநாராயணசுவாமி திருக்கோயில், தேனி
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|