தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அருள்மிகு பஞ்சவடீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

View previous topic View next topic Go down

அருள்மிகு  பஞ்சவடீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம் Empty அருள்மிகு பஞ்சவடீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

Post by முழுமுதலோன் Tue Mar 10, 2015 11:21 am

அருள்மிகு  பஞ்சவடீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம் T_500_1568

மூலவர் : பஞ்சவடீஸ்வரர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : பிரஹன்நாயகி, கல்யாணசுந்தரி
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : ஆனந்ததாண்டவபுரம்
மாவட்டம் : நாகப்பட்டினம்
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:

-

திருவிழா:

பிரதோஷம், சிவராத்திரி

தல சிறப்பு:

இத்தலத்தில், ஜடாநாதர் எனும் திருநாமத்துடன், அரிந்தெடுத்த கூந்தலை இடதுகையில் பிடித்தபடி காட்சி தரும் சிவனாரை காண்பது கோயிலின் தனி சிறப்பு. சப்தகன்னியரில் கவுமாரி வழிபட்ட தலம் இது.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு பஞ்சவடீஸ்வரர் திருக்கோயில் ஆனந்த தாண்டவபுரம், மயிலாடுதுறை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்.


பொது தகவல்:

ஆடல்வல்லான், ஆனந்ததாண்டவம் ஆடிய திருத்தலம் இது; எனவே , ஊரின் பெயர் ஆனந்ததாண்டவபுரம் என்றானது. இங்கே ஆனந்ததாண்டவமூர்த்தியாக, அழகுற தரிசனம் தரும் ஸ்ரீநடராஜ பெருமானின் அழகுத் திருமேனி அற்புதம்.


பிரார்த்தனை

திருமணத்தடை நீங்க, பிறவிப் பிணிகள் நீங்க, இல்லறத்தில் ஏற்படும் சிக்கல்கள் விலக, மனதுள் நிம்மதி நிலைக்க இங்குள்ள சிவனையும், அம்மனையும் வழிபடுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கும், அம்மனுக்கும் புது வஸ்திரம் அணிவித்து, அபிஷேகம் செய்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

தலபெருமை:

இந்தத் தலத்தில் இரண்டு அம்பிகையர்! ஒருவர் பிரஹன்நாயகி. இன்னொருவர் கல்யாணசுந்தரி அம்பாள். பரத்வாஜ முனிவரின் வேண்டுகோளை ஏற்று, மணக்கோலத்தில் காட்சி தந்ததால், அம்பிகைக்கு இந்தத் திருநாமம். சிவனடியாராக வந்த சிவனார் நீராடிய திருக்குளம் இங்கு உள்ளது. இந்தத் தீர்த்தத்தில் நீராடி, பிரஹன்நாயகி கல்யாணசுந்தரி சமேத பஞ்சவடீஸ்வரரையும் மானக்கஞ்சாற நாயனாரையும் வணங்கி வழிபட்டால், பிறவிப் பிணிகள் நீங்கும்; மனதுள் நிம்மதி நிலைக்கும்!

தல வரலாறு:

எந்நாட்டவர்க்கும் இறைவனான சிவனாரின்மீதும், அவர்தம் அடியார்கள் மீதும் அப்படியொரு பக்தி மானக்கஞ்சாறருக்கு! வேளாளரான இவர், படைக்குத் தலைமை வகித்து நடத்தியவர்; எனினும், அன்பிலும் சிவபக்தியிலும் கட்டுண்டு கிடந்தார். தன் மனைவியுடன் சிவனடியார்களுக்குச் சேவை செய்வதில் மகிழ்ந்த மானக்கஞ்சாறருக்கு, ஒரே ஒரு குறை.. தனக்கொரு வாரிசு இல்லையே என்று! நாள்தோறும் தவறாமல் சிவவழிபாடு செய்யும் கல்யாணசுந்தரியும் கஞ்சாறரரும் கண்ணீரும் பக்தியும் பெருக்கெடுக்க, வாரிசு வரம் கேட்டுப் பிரார்த்தித்து வந்தனர். இவர்களது வேண்டுதல் நிறைவேறும் காலமும் வந்தது. கஞ்சாறரின் மனைவி, ஒரு சுபயோக சுபதினத்தில் கருவுற்றாள்; உரிய காலத்தில் அழகிய பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள். நாங்கள் எந்த ஜென்மத்தில் செய்த புண்ணியமோ... எங்களுக்குக் குழந்தைச் செல்வத்தைத் தந்தருளிவிட்டாய் என நெகிழ்ந்தவர்கள், மகளுக்கு புண்ணியவர்த்தினி எனும் பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். காலங்கள் ஓடின. புண்ணியவர்த்தினியும் வளர்ந்தாள்; கருகருவென நீண்ட கூந்தலுடன், அழகு ததும்பக் காட்சி அளித்த மகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் தருணமும் வந்தது. சிவபக்தியில் திளைத்த கலிக்காமன் என்னும் இளைஞனைத் தன் மகளுக்கு மணம் முடிக்க ஏற்பாடுகள் செய்தார் கஞ்சாறர். இதையறிந்த ஊர்மக்கள், அடடா...! மாமனாரும் சிவபக்தர்; மருமகப் பிள்ளையும் சிவபக்தர் எனக் கொண்டாடினர். வெகு விமரிசையாக திருமண ஏற்பாடுகள் நடக்க... முகூர்த்த நாளும் நெருங்கியது. அடியவர் வீட்டுத் திருமண வைபவத்துக்கு, ஆண்டவன் வராமல் இருப்பானா?!

திருமணத்துக்கு முதல் நாள்.. காவி உடையும், கழுத்தில் ருத்திராட்ச மாலைகளும் அணிந்து, மேனி முழுவதும் திருநீறு தரித்தபடி சிவனடியார் ஒருவர் வந்தார். அவர்... மாவிரதியர். அதாவது சிரசின் முடியை ஐந்து பிரிவுகளாக்கி பூணூலாக அணிந்துகொள்ளும் வழக்கம் உள்ளவர். வடக்கில் உள்ள சிவனடியார்கள் சிலர் இப்படித்தான் பூணூல் தரிப்பர் என்பதை அறிந்தார் கஞ்சாறர்; தொலைவிலிருந்து வந்த சிவனடியாரை அன்புடன் வரவேற்றார். மனைவி, மகள் சகிதம் விழுந்து வணங்கினார். அப்போது, அந்த மணமகளின் நெடுங்கூந்தலைக் கண்ட சிவனடியார், இவளின் முடி, நமக்குப் பஞ்சவடி (பூணூல்) என்று சொல்லிப் புன்னகைத்தார். உடனே கஞ்சாறர், என் பாக்கியம், என் பாக்கியம்...! என் மகளின் தலைமுடி, தங்களுக்குப் பூணூலாகப் பயன்படப் போகிறதே! எனச் சொல்லிச் சிலிர்த்தவர், சற்றும் யோசிக்காமல் அந்தக் கணமே தன் மகளின் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து, அடியோடு அறுத்து, சிவனடியாரிடம் பணிவுடன் கொடுத்து, வணங்கினார்.

திருமணக் கூட்டம் வாயடைத்துப் போனது. என்ன இது கொடுமை...! விடிந்தால் அவளுக்குத் திருமணம். அவளின் தலைமுடியை அறுத்துக் கொடுப்பது தகுமா?! என்று நினைத்து மருகியது. அப்போது, அந்தத் திருவிளையாடல் முடிவுக்கு வந்தது. அங்கே, கஞ்சாறருக்கும் அவர்தம் மனைவி மகளுக்கும் திருக்காட்சி தந்தார் சிவனார். மணமகளின் கூந்தல் அவளது தலையில் பழையபடியே அழகுறக் காணப்பட்டது. சிவனே... என் சிவனே என்று நெடுஞ்சாண்கிடையாக விழுந்து, கண்ணீரும் மகிழ்ச்சியும் பீறிட... வணங்கினார், கஞ்சாறர் அன்று முதல் மானக்கஞ்சாற நாயனார் உலகத்தாரால் போற்றப்பட்டார். இவரின் மாப்பிள்ளை மட்டும் சளைத்த வரா என்ன?! விஷயம் தெரிந்து ஓடோடி வந்த கலிக்காமன், கதறினான்; கண்ணீர் விட்டான். மனைவியாக வரப் போகிறவளின் தலைமுடி பறிபோய்விட்டதே என்று அவன் கலங்கவில்லை. பிறகு?! நான் என்ன பாவம் செய்தேன்?! இறை தரிசனம் எனக்குக் கிடைக்காமல் போய்விட்டதே! திருமணம் முடிந்த பிறகு இறைவன் வந்து கேட்டிருந்தால், மனைவியின் தலை முடியை நானே அறுத்துக் கொடுத்திருப்பேனே! எனக்கு அந்தப் பெருமை கிடைக்காமல் போய்விட்டதே! என வருந்தினான். பின்னாளில் அவர், கலிக்காம நாயனார் எனப் போற்றப்பட்டார்; அறுபத்து மூவரில் ஒருவரானார்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்தில், ஜடாநாதர் எனும் திருநாமத்துடன், அரிந்தெடுத்த கூந்தலை இடதுகையில் பிடித்தபடி காட்சி தரும் சிவனாரை காண்பது கோயிலின் தனி சிறப்பு. சப்தகன்னியரில் கவுமாரி வழிபட்ட தலம் இது.


நன்றி தினமலர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அருள்மிகு  பஞ்சவடீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம் Empty Re: அருள்மிகு பஞ்சவடீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

Post by ஸ்ரீராம் Tue Mar 10, 2015 5:16 pm

சிறப்பான ஒரு ஆலயத்தை அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அருள்மிகு  பஞ்சவடீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம் Empty Re: அருள்மிகு பஞ்சவடீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

Post by செந்தில் Tue Mar 10, 2015 6:39 pm

நல்லதொரு ஆலய பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அருள்மிகு  பஞ்சவடீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம் Empty Re: அருள்மிகு பஞ்சவடீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

Post by முரளிராஜா Wed Mar 11, 2015 10:55 am

ஆலய பகிர்வுக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அருள்மிகு  பஞ்சவடீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம் Empty Re: அருள்மிகு பஞ்சவடீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» செம்பொனார்கோவில் அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
» திருக்கண்ணங்குடி அருள்மிகு லோகநாதப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்
» செம்பொனார்கோவில் அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
» திருநின்றியூர் அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
» அருள்மிகு சிவலோகத்தியாகர் திருக்கோயில், நாகப்பட்டினம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum