Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அருள்மிகு லட்சுமிநாராயணர் திருக்கோயில்,வேப்பஞ்சேரி,சித்தூர்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
அருள்மிகு லட்சுமிநாராயணர் திருக்கோயில்,வேப்பஞ்சேரி,சித்தூர்
மூலவர் : லட்சுமிநாராயணர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : மகாலட்சுமி
தல விருட்சம் : பாரிஜாதம்
தீர்த்தம் : தசாவதார தீர்த்தக்குளம்
ஆகமம்/பூஜை : -
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : வேம்பஞ்சம்ஹரி
ஊர் : வேப்பஞ்சேரி
மாவட்டம் : சித்தூர்
மாநிலம் : ஆந்திர பிரதேசம்
பாடியவர்கள்:
-
திருவிழா:
கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி, வைகுண்ட ஏகாதசி
தல சிறப்பு:
குளத்தின் அருகிலேயே, 21 அடி உயரத்தில், ஒரே கல்லில் அழகிய வேலைபாடுகளுடன், பத்து அவதாரங்களுடன் கிருஷ்ணரின் தசாவதார சிலை உள்ளது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில், வேப்பஞ்சேரி, சித்தூர் மாவட்டம். ஆந்திரா மாநிலம்.
போன்:
-
பொது தகவல்:
கோயிலின் கொடிமரத்தை தாண்டி உள்ளே சென்றால், அமைதி தவழும் முகத்துடன் கருடனையும், துவாரகபாலகரையும் வழிபடலாம்.கருவறை விமானத்தில் கலியுக கண்ணன் அமர்ந்துள்ளார். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஸ்ரீனிவாசபெருமாள் கண்ணைக்கவரும் விதத்தில் அமர்ந்துள்ளார்.சகல பாவத்தையும் போக்கும் சுதர்சன சக்கரமும் அமைந்துள்ளது. ஆழ்வார்களும் இக்கோயிலில் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.லட்சுமிதேவியை தன் மடி மீது அமர வைத்து, சாந்தமாக காட்சி தரும் லட்சுமி நாராயணனை தரிசிப்பதற்கு எல்லோருக்கும் கொடுத்து வைக்க வேண்டும். இந்த அதிசய லட்சுமி நாராயணனை தரிசிக்க ஆந்திராவிலுள்ள வேப் பஞ்சேரி செல்ல வேண்டும்.
பிரார்த்தனை
திருமணத் தடை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், கடன் பிரச்சனை, கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பெற, உடல்நலம் குன்றியோர், தொழில் பாதிப்படைந்தோர் இக்கோயிலுக்கு வந்து முறையாக பூஜை செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இக்கோயிலின் தென்புறம், ஸ்ரீ அஷ்டலட்சுமி கோயில் அமைந்துள்ளது. இங்கு வழிபட்டால் மது அருந்துபவர்கள் மனம் திருந்துகின்றனர். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் ராகுகால பூஜையில் பங்கேற்று பல நன்மைகள் அடைகின்றனர். லட்ச தீப வழிபாட்டில் கோடி நன்மைகள் கிடைக்கும்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
தலபெருமை:
கோயிலின் கொடிமரத்தை தாண்டி உள்ளே சென்றால், அமைதி தவழும் முகத்துடன் கருடனையும், துவாரபாலகரையும் வழிபடலாம். கருவறை விமானத்தில் கலியுக கண்ணன் அமர்ந்துள்ளார். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஸ்ரீனிவாசபெருமாள் கண்ணைக்கவரும் விதத்தில் அமர்ந்துள்ளார். சகல பாவத்தையும் போக்கும் சுதர்சன சக்கரமும் அமைந்துள்ளது. ஆழ்வார்களுக்கும் இக்கோயிலில் இடம் உண்டு. கோயிலுக்கு தசாவதார தீர்த்தக்குளமும் உண்டு. குளத்து நீர் இனிப்பு சுவையுடன் உள்ளது. பாவங்களை போக்கி பரிகாரம் செய்ய பயன்தருகிறது. இக்குளத்தை சுற்றி அழகிய வேலைபாடுகளுடன் கூடிய, தசாவதார சிலைகள் தனித்தனியே அமைத்துள்ளனர். குளத்தின் நடுவே நீரில் காளிங்க நர்த்தனம் புரிபவராக கிருஷ்ணர் அமைந்துள்ள காட்சியை காண கண்கள் கோடி வேண்டும். குளத்தின் அருகிலேயே, 21 அடி உயரத்தில், ஒரே கல்லில் அழகிய வேலைபாடுகளுடன், பத்து அவதாரங்களுடன் கிருஷ்ணரின் தசாவதார சிலையை தரிசிக்காமல் வரமுடியாது. இக்கோயிலின் தென்புறம், ஸ்ரீ அஷ்டலட்சுமி கோயில் அமைந்துள்ளது. இங்கு வழிபட்டால் மது அருந்துபவர்கள் மனம் திருந்துகின்றனர். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் ராகுகால பூஜையில் பங்கேற்று பல நன்மைகள் அடைகின்றனர். லட்ச தீப வழிபாட்டில் கோடி நன்மைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
தல வரலாறு:
ஆந்திர மாநிலத்தில் 750 ஆண்டுகளுக்கு முன் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சி காலத்தில் இக்கோயில் அமையப்பெற்றது.பின்னர் அடுத்தடுத்து நடந்த படையெடுப்பு காரணமாக கோயிலின் பெருமை குறைந்தது. பசு வளர்ப்பு, விவசாயம் இக்கிராமத்து மக்களின் முக்கிய தொழில். மழை பொய்த்ததால் விவசாயம் பாதித்தது; கால்நடைகள் தீவனம் இன்றி தவித்தன; பசி, பட்டினியால் மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறினர்.இவைகளுக்கு காரணம் தெரியாமல் மக்கள் தவித்தனர். நாளடைவில் விடைதேடிய கிராம மக்கள் ஒன்று கூடினர்; விவாதித்தனர். வேப்பஞ்சேரியின் காக்கும் கடவுளான லட்சுமி நாராயணனுக்கு கடந்த காலங்களில் பூஜை நடைபெறவில்லை என்பதை உணர்ந்தனர்.அப்போது அசரீரியாக ஒலித்த குரல், "எனக்கு முன் போல் நித்ய பூஜைகளும், அபிஷேகங்களும், குறைவில்லாமல் செய்து வந்தால், என்னுடைய அருளால் இக்கிராமம் செழிக்கும், குலம் விளங்கும், மாடு, கன்று, பயிர்கள் செழிக்கும்; உங்களின் பாவங்களிலில் இருந்து விடுதலையும் கிடைக்கும்' என்று கூறியது.இதை தொடர்ந்து இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு, நித்ய பூஜைகளும், பிரம்மோற்சவம் முதலான விழாக்களும் நடந்து வருகின்றன.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: குளத்தின் நடுவே நீரில் காளிங்க நர்த்தனம் புரிபவராக கிருஷ்ணர் அமைந்துள்ளார். குளத்தின் அருகிலேயே, 21 அடி உயரத்தில், ஒரே கல்லில் அழகிய வேலைபாடுகளுடன், பத்து அவதாரங்களுடன் கிருஷ்ணரின் தசாவதார சிலையை தரிசிக்காமல் வரமுடியாது.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அருள்மிகு லட்சுமிநாராயணர் திருக்கோயில்,வேப்பஞ்சேரி,சித்தூர்
நல்லதொரு ஆலய பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: அருள்மிகு லட்சுமிநாராயணர் திருக்கோயில்,வேப்பஞ்சேரி,சித்தூர்
தலத்தின் சிறப்பை அறியத்தந்தமைக்கு நன்றி அண்ணா
Similar topics
» வேப்பஞ்சேரி அருள்மிகு லட்சுமிநாராயணர் திருக்கோயில், சித்தூர்
» அம்பாசமுத்திரம் அருள்மிகு லட்சுமிநாராயணர் திருக்கோயில், திருநெல்வேலி
» காளஹஸ்தி அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில், சித்தூர்
» காணிப்பாக்கம் அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில், சித்தூர்
» நாராயணவனம் அருள்மிகு கல்யாண வீரபத்திரர் திருக்கோயில், சித்தூர்
» அம்பாசமுத்திரம் அருள்மிகு லட்சுமிநாராயணர் திருக்கோயில், திருநெல்வேலி
» காளஹஸ்தி அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில், சித்தூர்
» காணிப்பாக்கம் அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில், சித்தூர்
» நாராயணவனம் அருள்மிகு கல்யாண வீரபத்திரர் திருக்கோயில், சித்தூர்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|