Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இறுதி வரை உறுதி வேண்டும்!
Page 1 of 1 • Share
இறுதி வரை உறுதி வேண்டும்!
ஃபிட்னஸ் : முனைவர் : மு.ஸ்டாலின் நாகராஜன்
கடந்த வாரம் மூத்த நண்பர்கள் மூவரோடு கோல்ஃப் ஆடிக் கொண்டிருந்தேன். மூவருமே 70 வயதைத் தாண்டியவர்கள். 3 மணி நேரம் எனக்கு இணையாக ஆடிய அவர்களின் உடல் மற்றும் மன வலிமையைக் கண்டு ஆச்சரியம் தெரிவித்தேன். அந்த மூவரும் இணைந்து, குழந்தைகளால் கைவிடப்பட்ட, ஒதுக்கித் தள்ளிய, அடித்து துரத்திய, வயோதிக பெற்றோருக்காக ‘இலவச முதியோர் இல்லம்’ அமைத்து, மாபெரும் சேவையை செவ்வனே செய்து வருகிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது!
எனது ஆச்சரியம் கண்ட அவர்களில் ஒருவர், ஒரு நீதிக் கதையோடு ஆரம்பித்தார்... ‘‘தலைசிறந்த, ஒழுக்கம் வாய்ந்த, படிப்பறிந்த, பணக்கார பெற்றோர் தங்களின் குழந்தைகளை சீரும் சிறப்புமாக வளர்த்து, ஆளாக்குகிறார்கள். அனைத்துச் செல்வங்களையும் வழங்கி, திருமணம் செய்து வைத்து, சொத்துகள் அனைத்தையும் எல்லோருக்கும் சமமாக பிரித்து கொடுத்து, பேரப்பிள்ளைகளைப் பார்த்து சந்தோஷம் அடைகிறார்கள். இனி தங்கள் இருவரையும் பிள்ளைகள் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை வந்த போதுதான் வயது முதிர்வு சைத்தானின் தாண்டவம் தொடங்கியது.
நோய்கள் வந்தன. உடல்நலம் குன்றியது. இனி பெற்றோரால் பயன் இல்லை என்று தெரிந்து கொண்ட பிள்ளைகளோ, அவர்களை வைத்து காப்பாற்ற ஆர்வம் காட்டாமல், வெறுத்து ஒதுக்கி, ஒரு சிறிய வீட்டில் தனியே விட்டு விட்டனர். கடைசியில் பெற்றோர் இருவரும் உடல் நொந்து, மனம் வெந்து, வெம்பி இறந்து விட்டனர். அவர்களின் அடக்கம் முடிந்த பின், ‘சனியன்களின் தொல்லை தீர்ந்தது’ என பிள்ளைகள் சந்தோஷமாக இருக்கும் வேளையில், அந்த சிறிய வீட்டில் இருந்த தாத்தா-பாட்டியின் பொருட்களை பேரப்பிள்ளைகள் சேகரிக்கத் தொடங்கினார்கள்.
‘ஏன் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள்’ எனக் கேட்ட போது, குழந்தைகள் நிதானமாக கூறினார்கள்... ‘நீங்கள் தாத்தா-பாட்டியை ஒதுக்கி, தனியே வாழ வைத்தது போல, நாளை உங்களையும் நாங்கள் தனியே விடும் போது, இதையெல்லாம் கொடுக்கத்தான்!’ என்று’’ இந்த நீதிக் கதையை முடித்துவிட்டு, முதியோர் இல்லத்தில், கொடுமைகள் பல கண்ட ஒரு பெற்றோர் எழுதிய உருக்கமான கடிதத்தையும் கொடுத்தார். அதன் சாராம்சம்...‘எங்களது பேரன்புக்குரிய பிள்ளைகளே!
நாங்கள் இருவரும் முதுமை அடைந்த பிறகு, முடிகள் பஞ்சு போல வெளுத்து, விழுந்து, பார்வை மங்கி, பல் எல்லாம் கொட்டி, தோல் சுருங்கி, அருவெறுப்பான தோற்றத்தோடு, கை, கால், உடல், மனவலிமை அனைத்தையும் இழந்து, ஒவ்வொரு நோயாக எங்களை துவம்சம் செய்ததே... எங்களின் வயோதிகத்தை, முதுமையின் முடிவை, குழந்தைகளாகிய நீங்கள் பொறுமையாக, அன்பாக, இயற்கையின் உண்மையாக புரிந்து கொள்வீர்கள் என நம்பிய எங்கள் நம்பிக்கை சுக்கு நூறாகி விட்டதே!
இப்போது வேளாவேளைக்கு முன்பு போல பசி வருவதில்லை. அப்படி பசி வந்த நேரங்களில், நாங்கள் சாப்பிடும் போது கைகள் நடுங்கி சிதறும் போதும், கழிவறைக்குப் போக முடியாமல், குளிக்கக்கூட தெம்பு இல்லாமல், உடை உடுத்த வலுவிழந்த போதும், உடை உடலில் நிற்காது விழுந்த போதும், நீங்கள் எங்களை திட்டி, கத்திய வார்த்தைகள், இன்றும் காது கேட்காத காதில் ரீங்காரமிடுகிறது. இதே நிலையில் நீங்கள் குழந்தையாக இருந்த காலகட்டத்தில், பேசத் தெரியாத உங்களை பேச வைத்தோம். சாப்பிடத் தெரியாத உங்களை நிலவைக் காட்டி, இயற்கையைக் காட்டி, பஸ், கார்களை, சைக்கிள்களை காட்டி ஒவ்வொரு வேளைக்கும் 2 மணி நேரம் பொறுமையாக ஊட்டினோம்.
குளிக்க முடியாத, தெரியாத உங்களை வெதுவெது நீரில் குளிக்க வைத்து, விதவிதமான உடைகள் உடுத்தி, பவுடர் அடித்து திருஷ்டிப் பொட்டு வைத்து அழகு பார்த்தோம். உங்களுக்கு நலக்குறைவுகள் வரும் போது, அதிகாலை, மதியம், மாலை, நடு இரவு என எந்நேரமானாலும் டாக்டர்களிடம் ஓடி பணத்தை இறைத்து உயிர் காத்தோம். உயர் கல்வி அளித்தோம்.
உங்களது அனைத்து உரிமைகளுக்காகவும் உண்ணாமல், உறங்காமல் உங்களின் முன்னேற்றம் ஒன்றே எங்களின் குறிக்கோளாக கருதி, எங்களை உங்களுக்காக அர்ப்பணித்ததை கொஞ்சமாவது நினைத்துப் பார்க்க கூடாதா? உங்கள் குடும்ப வாழ்க்கையில், குழந்தை வளர்ப்பில் ஏதாவது தவறு இருந்தாலோ, தினசரி வாழ்க்கையின் அணுகுமுறையில் தவறுகள் செய்யும் போது, ‘இது பின்னால் பேரழிவை ஏற்படுத்துமே’ என பயந்து, அறிவுரை செய்தோம்... ‘வயசான காலத்தில், சும்மா தொண தொணத்து சொன்னதையே சொல்லிக்கிட்டு எங்கள் உயிரை வாங்குகிறீர்கள்... எங்கேயாவது போய் தொலைய வேண்டியதுதானே’ என்கிறீர்கள். நீங்கள் குழந்தையாக இருந்தபோது, உங்களை தூங்க வைக்கும் நேரம் சொன்ன கதையையே ஆயிரம் தடவை கேட்ட ஞாபகம் இல்லையா, எங்களது அருமை குழந்தைகளே!
கடந்த வாரம் மூத்த நண்பர்கள் மூவரோடு கோல்ஃப் ஆடிக் கொண்டிருந்தேன். மூவருமே 70 வயதைத் தாண்டியவர்கள். 3 மணி நேரம் எனக்கு இணையாக ஆடிய அவர்களின் உடல் மற்றும் மன வலிமையைக் கண்டு ஆச்சரியம் தெரிவித்தேன். அந்த மூவரும் இணைந்து, குழந்தைகளால் கைவிடப்பட்ட, ஒதுக்கித் தள்ளிய, அடித்து துரத்திய, வயோதிக பெற்றோருக்காக ‘இலவச முதியோர் இல்லம்’ அமைத்து, மாபெரும் சேவையை செவ்வனே செய்து வருகிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது!
எனது ஆச்சரியம் கண்ட அவர்களில் ஒருவர், ஒரு நீதிக் கதையோடு ஆரம்பித்தார்... ‘‘தலைசிறந்த, ஒழுக்கம் வாய்ந்த, படிப்பறிந்த, பணக்கார பெற்றோர் தங்களின் குழந்தைகளை சீரும் சிறப்புமாக வளர்த்து, ஆளாக்குகிறார்கள். அனைத்துச் செல்வங்களையும் வழங்கி, திருமணம் செய்து வைத்து, சொத்துகள் அனைத்தையும் எல்லோருக்கும் சமமாக பிரித்து கொடுத்து, பேரப்பிள்ளைகளைப் பார்த்து சந்தோஷம் அடைகிறார்கள். இனி தங்கள் இருவரையும் பிள்ளைகள் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை வந்த போதுதான் வயது முதிர்வு சைத்தானின் தாண்டவம் தொடங்கியது.
நோய்கள் வந்தன. உடல்நலம் குன்றியது. இனி பெற்றோரால் பயன் இல்லை என்று தெரிந்து கொண்ட பிள்ளைகளோ, அவர்களை வைத்து காப்பாற்ற ஆர்வம் காட்டாமல், வெறுத்து ஒதுக்கி, ஒரு சிறிய வீட்டில் தனியே விட்டு விட்டனர். கடைசியில் பெற்றோர் இருவரும் உடல் நொந்து, மனம் வெந்து, வெம்பி இறந்து விட்டனர். அவர்களின் அடக்கம் முடிந்த பின், ‘சனியன்களின் தொல்லை தீர்ந்தது’ என பிள்ளைகள் சந்தோஷமாக இருக்கும் வேளையில், அந்த சிறிய வீட்டில் இருந்த தாத்தா-பாட்டியின் பொருட்களை பேரப்பிள்ளைகள் சேகரிக்கத் தொடங்கினார்கள்.
‘ஏன் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள்’ எனக் கேட்ட போது, குழந்தைகள் நிதானமாக கூறினார்கள்... ‘நீங்கள் தாத்தா-பாட்டியை ஒதுக்கி, தனியே வாழ வைத்தது போல, நாளை உங்களையும் நாங்கள் தனியே விடும் போது, இதையெல்லாம் கொடுக்கத்தான்!’ என்று’’ இந்த நீதிக் கதையை முடித்துவிட்டு, முதியோர் இல்லத்தில், கொடுமைகள் பல கண்ட ஒரு பெற்றோர் எழுதிய உருக்கமான கடிதத்தையும் கொடுத்தார். அதன் சாராம்சம்...‘எங்களது பேரன்புக்குரிய பிள்ளைகளே!
நாங்கள் இருவரும் முதுமை அடைந்த பிறகு, முடிகள் பஞ்சு போல வெளுத்து, விழுந்து, பார்வை மங்கி, பல் எல்லாம் கொட்டி, தோல் சுருங்கி, அருவெறுப்பான தோற்றத்தோடு, கை, கால், உடல், மனவலிமை அனைத்தையும் இழந்து, ஒவ்வொரு நோயாக எங்களை துவம்சம் செய்ததே... எங்களின் வயோதிகத்தை, முதுமையின் முடிவை, குழந்தைகளாகிய நீங்கள் பொறுமையாக, அன்பாக, இயற்கையின் உண்மையாக புரிந்து கொள்வீர்கள் என நம்பிய எங்கள் நம்பிக்கை சுக்கு நூறாகி விட்டதே!
இப்போது வேளாவேளைக்கு முன்பு போல பசி வருவதில்லை. அப்படி பசி வந்த நேரங்களில், நாங்கள் சாப்பிடும் போது கைகள் நடுங்கி சிதறும் போதும், கழிவறைக்குப் போக முடியாமல், குளிக்கக்கூட தெம்பு இல்லாமல், உடை உடுத்த வலுவிழந்த போதும், உடை உடலில் நிற்காது விழுந்த போதும், நீங்கள் எங்களை திட்டி, கத்திய வார்த்தைகள், இன்றும் காது கேட்காத காதில் ரீங்காரமிடுகிறது. இதே நிலையில் நீங்கள் குழந்தையாக இருந்த காலகட்டத்தில், பேசத் தெரியாத உங்களை பேச வைத்தோம். சாப்பிடத் தெரியாத உங்களை நிலவைக் காட்டி, இயற்கையைக் காட்டி, பஸ், கார்களை, சைக்கிள்களை காட்டி ஒவ்வொரு வேளைக்கும் 2 மணி நேரம் பொறுமையாக ஊட்டினோம்.
குளிக்க முடியாத, தெரியாத உங்களை வெதுவெது நீரில் குளிக்க வைத்து, விதவிதமான உடைகள் உடுத்தி, பவுடர் அடித்து திருஷ்டிப் பொட்டு வைத்து அழகு பார்த்தோம். உங்களுக்கு நலக்குறைவுகள் வரும் போது, அதிகாலை, மதியம், மாலை, நடு இரவு என எந்நேரமானாலும் டாக்டர்களிடம் ஓடி பணத்தை இறைத்து உயிர் காத்தோம். உயர் கல்வி அளித்தோம்.
உங்களது அனைத்து உரிமைகளுக்காகவும் உண்ணாமல், உறங்காமல் உங்களின் முன்னேற்றம் ஒன்றே எங்களின் குறிக்கோளாக கருதி, எங்களை உங்களுக்காக அர்ப்பணித்ததை கொஞ்சமாவது நினைத்துப் பார்க்க கூடாதா? உங்கள் குடும்ப வாழ்க்கையில், குழந்தை வளர்ப்பில் ஏதாவது தவறு இருந்தாலோ, தினசரி வாழ்க்கையின் அணுகுமுறையில் தவறுகள் செய்யும் போது, ‘இது பின்னால் பேரழிவை ஏற்படுத்துமே’ என பயந்து, அறிவுரை செய்தோம்... ‘வயசான காலத்தில், சும்மா தொண தொணத்து சொன்னதையே சொல்லிக்கிட்டு எங்கள் உயிரை வாங்குகிறீர்கள்... எங்கேயாவது போய் தொலைய வேண்டியதுதானே’ என்கிறீர்கள். நீங்கள் குழந்தையாக இருந்தபோது, உங்களை தூங்க வைக்கும் நேரம் சொன்ன கதையையே ஆயிரம் தடவை கேட்ட ஞாபகம் இல்லையா, எங்களது அருமை குழந்தைகளே!
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: இறுதி வரை உறுதி வேண்டும்!
நாங்கள் உங்களிடம் வேண்டுவதெல்லாம்...
எங்களை வெறுத்து ஒதுக்காதீர்கள்.
எங்கள் மேல் கோபம் கொள்ளாதீர்கள்.
உங்களுக்காகவே வாழ்ந்து, உடல்-மன வலிமை அனைத்தையும் இழந்து, வாழ மனம் இல்லாமல்,
மரணத்துக்காகக் காத்திருக்கும் வேளையில் ‘இதைச் செய், அதைச் செய்’ என கட்டாயப்படுத்தாதீர்கள்.
எங்களின் முதுமைக்கு, வயதுக்கு மரியாதை தாருங்கள்.
நாங்கள் உங்களோடு இருப்பதால் எங்களக் கண்டு கவலையோ, பரிதாபமோ அடைய வேண்டிய அவசியம் இல்லை. எங்களை புரிந்து கொண்டாலே போதும்.
எங்களால் உங்களுக்கு இப்போது தர முடிவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்... அது ‘எங்களின் ஆசீர்வாதங்கள்!’
கடிதத்தை படித்த முடித்து என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. எனது
கண்ணீரை துடைத்து விட்ட நண்பர் மேலும் கூறிய சில வார்த்தைகள்...
‘50 வயதை நெருங்கும் போதும், 50 வயதை தாண்டும் போதும், அனைவரும் உடல்நலத்தை அதிக அக்கறையுடனும் கவனத்தோடும் பேணிக்காக்க வேண்டியது அவசியம். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும் பட்சத்தில், உங்கள் பிள்ளைகள், பேரக்குழந்தைகளை பார்த்துக் கொள்ள, பராமரிக்க, பள்ளிக்கு கூட அனுப்பி பின்பு அழைத்து வர, சமைக்க, வீட்டுவேலைகள் செய்ய, காய்கறி, மளிகைக்கடை செல்ல, அவர்கள் சினிமா, கல்யாணம், விசேஷம், வெளியூர் செல்லும் போது வீட்டையும் குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள என அனைத்து வேலைகளுக்காகவும் உங்களை வீட்டோடு வைத்துக் கொள்வார்கள்.
இதற்காக உங்கள் பிள்ளைகளிடையே ஒரு போட்டியே நடக்கும். உங்கள் உடல்நலம் நன்றாக இல்லாவிட்டால் திண்ணையோ, வீட்டின் மூலையோ முதியோர் இல்லமோதான். அதனால், டாக்டரின் அறிவுரைக்குப் பிறகு உடற்பயிற்சியை தொடங்காமல், இளமையில் தொடங்கி, நடுவயதில் தொடர்ந்து, முதுமையில் உடற்பயிற்சியின் பளு அளவினை குறைத்து, தொடர்ந்து கொண்டே இருந்தால், இறுதி நாள் வரை மகிழ்ச்சியாக இருக்கலாம்’ எனக்கூறி எனது ஆச்சரியத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் எனது வயோதிக நண்பர்!
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3418
எங்களை வெறுத்து ஒதுக்காதீர்கள்.
எங்கள் மேல் கோபம் கொள்ளாதீர்கள்.
உங்களுக்காகவே வாழ்ந்து, உடல்-மன வலிமை அனைத்தையும் இழந்து, வாழ மனம் இல்லாமல்,
மரணத்துக்காகக் காத்திருக்கும் வேளையில் ‘இதைச் செய், அதைச் செய்’ என கட்டாயப்படுத்தாதீர்கள்.
எங்களின் முதுமைக்கு, வயதுக்கு மரியாதை தாருங்கள்.
நாங்கள் உங்களோடு இருப்பதால் எங்களக் கண்டு கவலையோ, பரிதாபமோ அடைய வேண்டிய அவசியம் இல்லை. எங்களை புரிந்து கொண்டாலே போதும்.
எங்களால் உங்களுக்கு இப்போது தர முடிவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்... அது ‘எங்களின் ஆசீர்வாதங்கள்!’
கடிதத்தை படித்த முடித்து என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. எனது
கண்ணீரை துடைத்து விட்ட நண்பர் மேலும் கூறிய சில வார்த்தைகள்...
‘50 வயதை நெருங்கும் போதும், 50 வயதை தாண்டும் போதும், அனைவரும் உடல்நலத்தை அதிக அக்கறையுடனும் கவனத்தோடும் பேணிக்காக்க வேண்டியது அவசியம். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும் பட்சத்தில், உங்கள் பிள்ளைகள், பேரக்குழந்தைகளை பார்த்துக் கொள்ள, பராமரிக்க, பள்ளிக்கு கூட அனுப்பி பின்பு அழைத்து வர, சமைக்க, வீட்டுவேலைகள் செய்ய, காய்கறி, மளிகைக்கடை செல்ல, அவர்கள் சினிமா, கல்யாணம், விசேஷம், வெளியூர் செல்லும் போது வீட்டையும் குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள என அனைத்து வேலைகளுக்காகவும் உங்களை வீட்டோடு வைத்துக் கொள்வார்கள்.
இதற்காக உங்கள் பிள்ளைகளிடையே ஒரு போட்டியே நடக்கும். உங்கள் உடல்நலம் நன்றாக இல்லாவிட்டால் திண்ணையோ, வீட்டின் மூலையோ முதியோர் இல்லமோதான். அதனால், டாக்டரின் அறிவுரைக்குப் பிறகு உடற்பயிற்சியை தொடங்காமல், இளமையில் தொடங்கி, நடுவயதில் தொடர்ந்து, முதுமையில் உடற்பயிற்சியின் பளு அளவினை குறைத்து, தொடர்ந்து கொண்டே இருந்தால், இறுதி நாள் வரை மகிழ்ச்சியாக இருக்கலாம்’ எனக்கூறி எனது ஆச்சரியத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் எனது வயோதிக நண்பர்!
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3418
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» மனதில் உறுதி வேண்டும்
» மன உறுதி
» பற்கள்: இறுதிவரை உறுதி பெற…
» உடலினை உறுதி செய்
» உழைப்புக்கு உயர்வு உறுதி
» மன உறுதி
» பற்கள்: இறுதிவரை உறுதி பெற…
» உடலினை உறுதி செய்
» உழைப்புக்கு உயர்வு உறுதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|