Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
செத்துவிட மாட்டேன் போ!
Page 1 of 1 • Share
செத்துவிட மாட்டேன் போ!
தொட்டுத் தொடராத உன்பந்தம், என்நெஞ்சைச்
சுட்டெரிக்கும் தீப்பந்தம் ஆனதடி -கட்டழகே!
முத்தமிட்ட ஞாபகங்கள் முள்ளாகத் தைத்தாலும்
செத்து விடமாட்டேன் போ!
மடிதந்தாய் என்றே மகிழ்ந்திருந்தேன்; மீளா
இடிதந்தாய்; கைக்கழுவி இன்று - விடைதந்தாய்
நித்தம் இளைத்து நடைபிணமாய் ஆனாலும்
செத்து விடமாட்டேன் போ!
விக்கித் தவிக்கின்ற நேரம் குடத்துநீர்போல்
பக்கத்தில் வந்து, பருகுமுன் - கைக்கெட்டா
மைத்த முகில்போல் கலைந்தின்று போனவளே
செத்து விடமாட்டேன் போ
காலத்தின் கட்டளையோ கல்நெஞ்சால் நீங்கினையோ
ஞாலத்தில் உள்ளவரை கன்னியுன் - கோலத்தை
நித்திரை யில்கூட நான்மறவேன்; என்றாலும்
செத்து விடமாட்டேன் போ!
மறக்க மனம்வாங்கி வந்த,உனை யெண்ணி
இறக்க மனம்வாங்கி வந்தேன் - சிறுக்கியுன்
பித்தம் தொலையாத பேய்மகன்தான் என்றாலும்
செத்து விடமாட்டேன் போ!
இருண்டது வாழ்வென்(று) இனியவளே நெஞ்சம்
மருண்டு தவிக்கையில் நீயோ - இருவிழியைக்
குத்திக் குருடாக்கிப் போகின்றாய்; என்றாலும்
செத்து விடமாட்டேன் போ!
பாட்டுக் குயில்பறந்து போனபின் னால்வெறுங்
கூட்டைச் சுமக்கும் மரம்போல - ஏட்டிலுன்
சித்திரத்தைத் தீட்டும் சுகமொன்றே கொண்டாலும்
செத்து விடமாட்டேன் போ!
பற்கள் படிந்து படியாமல் நான்கடிக்கும்
சொர்க்கச் சுகங்கேட்டு விம்மிவரும் - சிற்றிடைமேல்
தத்தையிள மார்பாய்த் தவிக்கின்றேன்; என்றாலும்
செத்து விடமாட்டேன் போ!
இணையற்ற காதல் நமதென்றாய்; இல்லை
இணையற்ற காதல் எனதே! - "இணை"யற்ற
பித்தப் பெருங்காதல் என்நெஞ்சில் தந்தவளே!
செத்து விடமாட்டேன் போ!
நீயென்னைப் பார்த்துச் சிரித்த சிரிப்பெல்லாம்
ஊரென்னைப் பார்த்துச் சிரிப்பதற்கோ? - யாரென்னை
நித்திலமே இங்கு சிரித்தால் உனக்கென்னெ?
செத்து விடமாட்டேன் போ!
வீட்டில் விளக்கேற்ற வந்தவள், என்தலை
மாட்டில் விளக்கேற்றிப் போகின்றாய்! - தீட்டுப்போல்
மொத்தமாய் என்னைத் தலைமுழுகிப் போனவளே!
செத்து விடமாட்டேன் போ!
பூநீயும் இல்லாமற் போனதனால், என்வாழ்க்கை
நாணயம் இப்போது செல்லாக்கா(சு) - ஆனதடி
தித்தித்தக் காதல் திகட்டித்தான் போனதுவோ?
செத்து விடமாட்டேன் போ!
வண்டைக் குடைகின்ற வண்ண மலர்முகம்தான்
தொண்டைக் குழிக்கும்,நெஞ் சுக்குமுயிர்த் - திண்டாடித்
தத்தளிக்கும் போதுமென் கண்ணில் வருமேனும்
செத்து விடமாட்டேன் போ!
கூட்டிலுயிர் ஆனவளே! கொஞ்சியுனை வாழவரங்
கேட்டுவர வில்லையடி; நீயிங்கு - கேட்டுவந்தாய்!
புத்தம் புதுவாழ்வில் பூரித்து நீவாழ்க!
செத்து விடமாட்டேன் போ!
என்றைக்கு நான்சிரித்தேன் என்வாழ்வில் ஏந்திழையே
இன்று புதிதாய் அழுவதற்கு? - நன்றிங்கு
பத்துடனே ஓராறு பெற்றுநீ வாழ்க;நான்
செத்து விடமாட்டேன் போ!
மாதமொரு பத்து, மகனாய் மணிவயிற்றில்
மாதொருத்தி என்னைச் சுமந்தாளே - போதுமடி
இத்தரணி மீதினிலே இன்னோர் சுகம்வேண்டாம்
செத்து விடமாட்டேன் போ!
-----------ரௌத்திரன்
சுட்டெரிக்கும் தீப்பந்தம் ஆனதடி -கட்டழகே!
முத்தமிட்ட ஞாபகங்கள் முள்ளாகத் தைத்தாலும்
செத்து விடமாட்டேன் போ!
மடிதந்தாய் என்றே மகிழ்ந்திருந்தேன்; மீளா
இடிதந்தாய்; கைக்கழுவி இன்று - விடைதந்தாய்
நித்தம் இளைத்து நடைபிணமாய் ஆனாலும்
செத்து விடமாட்டேன் போ!
விக்கித் தவிக்கின்ற நேரம் குடத்துநீர்போல்
பக்கத்தில் வந்து, பருகுமுன் - கைக்கெட்டா
மைத்த முகில்போல் கலைந்தின்று போனவளே
செத்து விடமாட்டேன் போ
காலத்தின் கட்டளையோ கல்நெஞ்சால் நீங்கினையோ
ஞாலத்தில் உள்ளவரை கன்னியுன் - கோலத்தை
நித்திரை யில்கூட நான்மறவேன்; என்றாலும்
செத்து விடமாட்டேன் போ!
மறக்க மனம்வாங்கி வந்த,உனை யெண்ணி
இறக்க மனம்வாங்கி வந்தேன் - சிறுக்கியுன்
பித்தம் தொலையாத பேய்மகன்தான் என்றாலும்
செத்து விடமாட்டேன் போ!
இருண்டது வாழ்வென்(று) இனியவளே நெஞ்சம்
மருண்டு தவிக்கையில் நீயோ - இருவிழியைக்
குத்திக் குருடாக்கிப் போகின்றாய்; என்றாலும்
செத்து விடமாட்டேன் போ!
பாட்டுக் குயில்பறந்து போனபின் னால்வெறுங்
கூட்டைச் சுமக்கும் மரம்போல - ஏட்டிலுன்
சித்திரத்தைத் தீட்டும் சுகமொன்றே கொண்டாலும்
செத்து விடமாட்டேன் போ!
பற்கள் படிந்து படியாமல் நான்கடிக்கும்
சொர்க்கச் சுகங்கேட்டு விம்மிவரும் - சிற்றிடைமேல்
தத்தையிள மார்பாய்த் தவிக்கின்றேன்; என்றாலும்
செத்து விடமாட்டேன் போ!
இணையற்ற காதல் நமதென்றாய்; இல்லை
இணையற்ற காதல் எனதே! - "இணை"யற்ற
பித்தப் பெருங்காதல் என்நெஞ்சில் தந்தவளே!
செத்து விடமாட்டேன் போ!
நீயென்னைப் பார்த்துச் சிரித்த சிரிப்பெல்லாம்
ஊரென்னைப் பார்த்துச் சிரிப்பதற்கோ? - யாரென்னை
நித்திலமே இங்கு சிரித்தால் உனக்கென்னெ?
செத்து விடமாட்டேன் போ!
வீட்டில் விளக்கேற்ற வந்தவள், என்தலை
மாட்டில் விளக்கேற்றிப் போகின்றாய்! - தீட்டுப்போல்
மொத்தமாய் என்னைத் தலைமுழுகிப் போனவளே!
செத்து விடமாட்டேன் போ!
பூநீயும் இல்லாமற் போனதனால், என்வாழ்க்கை
நாணயம் இப்போது செல்லாக்கா(சு) - ஆனதடி
தித்தித்தக் காதல் திகட்டித்தான் போனதுவோ?
செத்து விடமாட்டேன் போ!
வண்டைக் குடைகின்ற வண்ண மலர்முகம்தான்
தொண்டைக் குழிக்கும்,நெஞ் சுக்குமுயிர்த் - திண்டாடித்
தத்தளிக்கும் போதுமென் கண்ணில் வருமேனும்
செத்து விடமாட்டேன் போ!
கூட்டிலுயிர் ஆனவளே! கொஞ்சியுனை வாழவரங்
கேட்டுவர வில்லையடி; நீயிங்கு - கேட்டுவந்தாய்!
புத்தம் புதுவாழ்வில் பூரித்து நீவாழ்க!
செத்து விடமாட்டேன் போ!
என்றைக்கு நான்சிரித்தேன் என்வாழ்வில் ஏந்திழையே
இன்று புதிதாய் அழுவதற்கு? - நன்றிங்கு
பத்துடனே ஓராறு பெற்றுநீ வாழ்க;நான்
செத்து விடமாட்டேன் போ!
மாதமொரு பத்து, மகனாய் மணிவயிற்றில்
மாதொருத்தி என்னைச் சுமந்தாளே - போதுமடி
இத்தரணி மீதினிலே இன்னோர் சுகம்வேண்டாம்
செத்து விடமாட்டேன் போ!
-----------ரௌத்திரன்
Re: செத்துவிட மாட்டேன் போ!
பின்னிட்டீங்க ரௌத்திரன்!
ஆனால்
பாட்டுக் குயில்பறந்து போனபின் னால்வெறுங்
கூட்டைச் சுமக்கும் மரம்போல
இந்த இடத்தில் மட்டும் எனக்கு ஏதோ இடறுகிறது
கூட்டுக்கும் குயிலுக்கும் சம்பந்தம் இல்லை அல்லவா நண்பரே!
அருமையான வார்த்தைக் கோர்வைகள்
அற்புதமான மரபு நடை
மொத்தத்தில் அண்மையில் என்னை கவர்ந்த சூப்பர் கவிதை
ஆனால்
பாட்டுக் குயில்பறந்து போனபின் னால்வெறுங்
கூட்டைச் சுமக்கும் மரம்போல
இந்த இடத்தில் மட்டும் எனக்கு ஏதோ இடறுகிறது
கூட்டுக்கும் குயிலுக்கும் சம்பந்தம் இல்லை அல்லவா நண்பரே!
அருமையான வார்த்தைக் கோர்வைகள்
அற்புதமான மரபு நடை
மொத்தத்தில் அண்மையில் என்னை கவர்ந்த சூப்பர் கவிதை
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: செத்துவிட மாட்டேன் போ!
"பாட்டுப் பறவை" = "காதலி"
"கூடு" = "நினைவு"
பறவை வேறு காடு அல்லது நாடு நோக்கி பறக்கும் போது கூட்டையும் எடுத்துக் கொண்டு போவதில்லை. பறவை பறந்த பிறகு அது தங்கியிருந்த கூட்டை சுமந்து நிற்கும் மரம்போல், நீ பிரிந்த பிறகு உன் நினைவை சுமந்து வாழ்கிறேன் என்று எழுதியிருக்கிறேன். இதிலென்ன நெருடல்? பறவை பறந்து விட்டால் மரத்திற்கு கூடு மட்டுமே சொந்தம். உறவு பிரிந்து விட்டால் அங்கே நினைவு மட்டுமே சொந்தம்!---------நன்றி!
"கூடு" = "நினைவு"
பறவை வேறு காடு அல்லது நாடு நோக்கி பறக்கும் போது கூட்டையும் எடுத்துக் கொண்டு போவதில்லை. பறவை பறந்த பிறகு அது தங்கியிருந்த கூட்டை சுமந்து நிற்கும் மரம்போல், நீ பிரிந்த பிறகு உன் நினைவை சுமந்து வாழ்கிறேன் என்று எழுதியிருக்கிறேன். இதிலென்ன நெருடல்? பறவை பறந்து விட்டால் மரத்திற்கு கூடு மட்டுமே சொந்தம். உறவு பிரிந்து விட்டால் அங்கே நினைவு மட்டுமே சொந்தம்!---------நன்றி!
Re: செத்துவிட மாட்டேன் போ!
ஏற்றுக் கொள்கிறேன்
மாற்றுக் கருத்துக்கு
மன்னியுங்கள்!
மாற்றுக் கருத்துக்கு
மன்னியுங்கள்!
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Similar topics
» காதலிக்க மாட்டேன் ...
» உயி௫ள்ள வரை மறக்க மாட்டேன்
» நான் இறக்கவே மாட்டேன்
» துடிக்க மாட்டேன் (கஸல்)
» தோழியைக் கண்டு பயப்பட மாட்டேன்…!!
» உயி௫ள்ள வரை மறக்க மாட்டேன்
» நான் இறக்கவே மாட்டேன்
» துடிக்க மாட்டேன் (கஸல்)
» தோழியைக் கண்டு பயப்பட மாட்டேன்…!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|