தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மகிழ்ச்சியை யாரால் தர முடியும்

View previous topic View next topic Go down

மகிழ்ச்சியை யாரால் தர முடியும்  Empty மகிழ்ச்சியை யாரால் தர முடியும்

Post by முழுமுதலோன் Wed Jun 10, 2015 11:00 am

மகிழ்ச்சியைத் தேடி ஒவ்வொருவரும் எங்கெங்கோ செல்கின்றனர். சினிமா, பார்க், பீச், சர்க்கஸ், சுற்றுலா என்று அவர்கள் செல்லாத இடமே இல்லை. உண்மையில் மகிழ்ச்சி எங்கு உள்ளது என்று ஆராய்வோமானால், கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு, அதைத் தேடி ஊர் முழுக்க அலைந்த கதையாகத் தான் இருக்கிறது.

எப்போதும் மகிழ்ச்சியாக யார் தான் இருக்கிறார்கள்? மகிழ்ச்சியும், துக்கமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. எல்லா செயலையும் அழகுணர்ச்சியுடன் செய்யும் போது தான் அதை நாம் நன்றாக செய்ய முடிகிறது. அப்படி செய்யும் போது தான் அவன் அந்த துறையில் ஒரு உன்னத கலைஞனாகிறான்.

ஒரு கலைஞனுக்கு முக்கியத் தேவை தன்னம்பிக்கை. தன்னால் இந்தக் காரியத்தை எல்லாம் சாதிக்க முடியுமா? என்ற அவநம்பிக்கை ஒருவருக்கு இருந்தால் அவரால் சாதிக்கவே முடியாமல் போய் விடும். தன் ஆற்றல் மீது முழு நம்பிக்கை கொண்டு இடைவிடாமல் உழைப்பவர்களாலேயே நிச்சயம் சாதிக்க முடியும்.

பிறர் தன்னை விமர்சிப்பதற்கு முன் தானே தன்னை விமர்சித்துக் கொள்ள வேண்டும். தனக்குத் திருப்தி ஏற்படுகின்ற வரை எழுதுகிறவன் சிறந்த எழுத்தாளனாகிறான். தன் மனம் நிறைவு பெறும் வரை படம் வரைகிறவன் ஓவியனாகிறான். தானே ஒரு இசையைக் கேட்டு, மெய்மறக்கும் வரை, மனமொன்றி பாடுகிறவன் இசைக்கலைஞனாகிறான்.

எந்த ஒரு கலைஞனுக்கும் தூண்டுகோலாக இருப்பது அவனது சுய திருப்தியே. எந்த ஒரு கலைஞனுக்கும் உன்னதமான பரிசு என்பது ரசிகர்களின் பாராட்டுக்கள் தான். விமர்சனத்தைக் கண்டு அஞ்சாதவனே உண்மையான கலைஞனாகிறான். தொடர் தோல்வியால் துவளும் போது சிலர் கலையை விட்டு விட்டு ஓடி விடுகின்றனர். உலக மக்களின் விருப்பத்தை ஒரு பொருட்டாக கருதாமல், தனது திறமையை திறம்பட வளரப்பவன் காலபோக்கில், உலக மக்களின் விருப்பமாகவே மாறிவிடுகிறான்.

நாம் நம்மை கெட்டிக்காரர் என்று நினைத்துக் கொண்டு பிறரை ஏமாற்ற முயன்றால், வசமாக மாட்டிக் கொள்ள நேரும். நம்மை விடக் கெட்டிக்காரர்கள் உலகில் உண்டு என்பதை மறந்து விடக்கூடாது.

நாம் ஒருவரிடம் உதவியை பெறும்போது நமது தேவையை மட்டும் கருதிக்கொண்டு உதவியைக் கேட்கக்கூடாது. நமக்கு உதவுபவர் எந்த தகுதியில் இருக்கிறார் என்பதையும் புரிந்து அவரிடம் உதவி பெற வேண்டும். உலகில் வாழும் அனைவரையும் தன் சகோதர, சகோதரிகளாக பாவிக்கிறவரால் தான் மனம் தளராமல் பிறருக்கு உதவி செய்ய முடியும்.

உழைத்து வாழும் போது தான் ஒரு மனிதனுக்கு உண்மையான சந்தோஷம் கிடைக்கிறது. உழைப்பை போல சிறந்த நண்பன் உலகில் எவரும் இல்லை என்றே சொல்லலாம். புன்முறுவல், துணிவு, நம்பிக்கை, நாணயம், ஒற்றுமை போன்றவைகளைக் கொண்டு சிறப்பாக தொழில் செய்பவர்களையே உலகம் வியந்து போற்றுகிறது. `எல்லாம் என் தலையெழுத்து’ என்று அழுது கொண்டு எந்த ஒரு தொழிலையும் செய்பவர்களை யாரும் விரும்புவதில்லை. அவர்கள் முன்னேறுவதுமில்லை. எப்படி இருந்தார்களோ, அப்படியே தான் இருப்பார்கள். நம்மிடம் எது இல்லையோ, அதை மற்றவர்களுக்குத் தர முடியாது. அழுது கொண்டே இருப்பவர்களால் மற்றவர்களுக்கு எந்த ஒரு மகிழ்ச்சியையும் தந்து விட முடியாது. அப்படி என்றால், மகிழ்ச்சியை யாரால் தர முடியும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள். மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுங்கள். மகிழ்ச்சியானவர்களால் இந்த உலகம் பெரும் மகிழ்ச்சியடைய வேண்டும்.


தினமலர் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மகிழ்ச்சியை யாரால் தர முடியும்  Empty Re: மகிழ்ச்சியை யாரால் தர முடியும்

Post by kanmani singh Wed Jun 10, 2015 12:13 pm

பதிவுக்கு மிக்க மகிழ்ச்சி!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

மகிழ்ச்சியை யாரால் தர முடியும்  Empty Re: மகிழ்ச்சியை யாரால் தர முடியும்

Post by செந்தில் Wed Jun 10, 2015 12:36 pm

தன்னம்பிக்கை தரும் பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மகிழ்ச்சியை யாரால் தர முடியும்  Empty Re: மகிழ்ச்சியை யாரால் தர முடியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum