Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
விளத்தொட்டி அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
விளத்தொட்டி அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
மூலவர் : பிரம்மபுரீஸ்வரர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : இட்சுரச நாயகி
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : விளத்தொட்டி
மாவட்டம் : நாகப்பட்டினம்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை
தல சிறப்பு:
பாலமுருகன் தொட்டிலில் தவழ்ந்து உறங்கிய தலம் இது என்பதால், பாலமுருகனுக்கு மரியாதை தரும் வகையில், தங்கள் வீட்டில் பிறக்கும் குழந்தைகளை, பிறந்து பத்து தினங்கள் வரை தொட்டிலில் படுக்க வைப்பதில்லை இவ்வூர் மக்கள். அந்த சமயத்தில் தொட்டிலைக் கட்டுவது கூட இல்லை.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் விளத்தொட்டி, நாகப்பட்டினம்.
பொது தகவல்:
மகாமண்பத்தின் வாயிலின் இடதுபுறம் பிரம்மா சிவபெருமானை பூஜிக்கும் காட்சி புடைப்புச் சிறப் வடிவில் உள்ளது. இறைவனின் தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். மேற்கு பிரகாரத்தில் பிள்ளையார், பாலமுருகன், கஜலட்சுமி சன்னதிகளும், வடக்குப் பிரகாரத்தில் சண்டீஸ்வரர் சன்னதியும் உள்ளன. மண்டபத்தின் இடதுபுறம் வேணுகோபால பெருமாள், ருக்மணி, சத்யபாமா, கருடாழ்வார் ஆகியோர் அருள்பாலிக்கும் தனிச் சன்னதி உள்ளது. வலது புறம் நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் ஆகியோர் திருமேனிகள் உள்ளன.
பிரார்த்தனை
பக்தர்கள் குழந்தை வரம் வேண்டி இங்குள்ள பாலமுருகனை வழிபட்டுச் செல்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
தங்களது பிரார்த்தனை நிறைவேறியதும் ஒரு தொட்டில் வாங்கி வந்து பாலமுருகன் சன்னதியில் கட்டி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
ஆலய முகப்பைக் கடந்ததும் சிறப்பு மண்டபமும், அதை அடுத்து மகா மண்டபமும், உள்ளன. மகா மண்டபத்தின் இடதுபுறம் ஆபத்துக் காத்த விநாயகர் அருள்பாலிக்கிறார். வழக்கமான விநாயகர் திருமேனிகளை விட சற்றே அளவில் பெரியதாகவும், அகன்ற மேனியுடனும் அருள்பாலிக்கிறார். ஆனைமுகன் எத்தகைய ஆபத்தாக இருந்தாலும், அதிலிருந்து தனது பக்தர்களைக் காத்து அருள் புரியக்கூடியவர். அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில், இறைவன் பிரம்மபுரீஸ்வரர் லிங்கத் திருமேனியராக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். பிரம்மாவின் கர்வத்தைப் போக்கியவர் இவர். மகா மண்டபத்தின் இடதுபுறம், பெருமாளின் தனி சன்னதி உள்ளது. சிவாலயத்தில் இப்படிப்பட்ட அமைப்பு இருப்பது அரிது. சைவ வைணவ நல் இணக்கத்திற்கு எடுத்துக்காட்டு இது. பெருமாள் வேணுகோபாலராக ருக்மணி சத்யபாமாவுடன் சேவை சாதிக்கிறார். இவரை தரிசித்தால் வாழ்வில் மங்களங்கள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. எதிரே கருடாழ்வாரின் திருமேனி உள்ளது. அன்னை இட்சுரச நாயகிக்கு தனிக் கோயில் உள்ளது. கரும்புச் சாறு போன்று பக்தர்களுக்கு இன் அருளையும் இனிய வாழ்வையும் அளிப்பவள் என்பதால் அன்னைக்கு இப்பெயர். (இட்சு என்றால் சமஸ்கிருதத்தில் கரும்பு, ரசம் என்றால் சாறு.) அன்னை நின்ற திருக்கோலத்தில் கீழ்த் திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். மூலவரின் சன்னதிக்கு நேர் பின்புறம் உள்ளது பால முருகனின் சன்னதி. குமாரவயலூரில் உள்ளது போலவே இங்கும் தன் தந்தையை முன் நிறுத்தி, பின்னே நின்று அருள்பாலிக்கிறான் பாலமுருகன்.
அன்னையின் சன்னதி அருகிலேயே இருப்பதால், அவளது நேரடி கண்காணிப்பில் பாலமுருகன் அருள்பாலிப்பது கூடுதல் சிறப்பு. குழந்தையாய் இருந்தபோது முருகன் வளர்ந்த தலமாம். இத்தலத்தில்தான் அன்னை பார்வதி தேவி குழந்தை பாலமுருகனை தொட்டிலில் கிடத்தி, தாலாட்டுப் பாடி, தூங்க வைத்தாளாம். பாலமுருகன் தொட்டிலில் தவழ்ந்து உறங்கிய தலம் இது என்பதால், இந்த ஊர் மக்களிடையே ஓர் வினோதமான பழக்கம் ஒன்று உள்ளது. பாலமுருகனுக்கு மரியாதை தரும் வகையில், தங்கள் வீட்டில் பிறக்கும் குழந்தைகளை, பிறந்து பத்து தினங்கள் வரை தொட்டிலில் படுக்க வைப்பதில்லை இவ்வூர் மக்கள். அந்த சமயத்தில் தொட்டிலைக் கட்டுவது கூட இல்லை. முருகன் தொட்டிலில் வளர்ந்த தலமானதால் இந்த ஊர் வளர்தொட்டி என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டதாம். அது மருவி விளத்தொட்டி என்று தற்போது அழைக்கப்படுகிறது. பாலமுருகன், குழந்தையாக மட்டுமல்லாமல் காவல் தெய்வமாகவும் திகழ்கிறான்.
தல வரலாறு:
ஆரம்பத்தில் ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மா, சிவனைப்போலவே தனக்கும் ஐந்து தலைகள் இருப்பதை எண்ணி பெருமிதம் கொண்டார். படிப்படியாக அதுவே தலைக்கனமாக மாறிவிட, தன்னைவிட உயர்ந்தவர் எந்த உலகிலும் எவருமில்லை என்ற கர்வத்தோடு, தான்தோன்றித் தனமாகத் திரிந்தார். அவரது அகந்தை அளவுமீறிப் போகவே ஒரு கட்டத்தில் சினந்த சிவபெருமான், பிரம்மாவின் தலைகளுள் ஒன்றைக் கொய்தார். அதோடு அவருடைய படைப்பாற்றலையும் பறித்தார். தலைபோனதும் தலைக்கனமும் போய்விட, தன் தவறை உணர்ந்தார், பிரம்மா. மன்னிக்கும்படி வேண்டி, சிவபெருமான் அருள்பாலிக்கும் பல தலங்களுக்குச் சென்று ஆராதித்தார். இவ்வாறு பிரம்மா பூஜித்த இடங்களிலெல்லாம் உள்ள சிவபெருமான், பிரம்ம புரீஸ்வரர் என்று அழைக்கப்படலானார். அந்த வகையில் நான்முகன் சிவபூஜை புரிந்த தலங்களுள் விளத்தொட்டியும் ஒன்று. அதுவே இத்தல இறைவன் பிரம்மபுரீஸ்வரர் என அழைக்கப்படக் காரணமானது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: பாலமுருகன் தொட்டிலில் தவழ்ந்து உறங்கிய தலம் இது என்பதால், பாலமுருகனுக்கு மரியாதை தரும் வகையில், தங்கள் வீட்டில் பிறக்கும் குழந்தைகளை, பிறந்து பத்து தினங்கள் வரை தொட்டிலில் படுக்க வைப்பதில்லை இவ்வூர் மக்கள். அந்த சமயத்தில் தொட்டிலைக் கட்டுவது கூட இல்லை.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: விளத்தொட்டி அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
நல்லதொரு ஆலய பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: விளத்தொட்டி அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
ஆலயத்தின் பெருமையை அறியத்தந்தமைக்கு நன்றி அண்ணா
Similar topics
» செம்பொனார்கோவில் அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
» திருக்கண்ணங்குடி அருள்மிகு லோகநாதப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்
» செம்பொனார்கோவில் அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
» குறுமாணக்குடி அருள்மிகு கண்ணாயிரமுடையார் திருக்கோயில், நாகப்பட்டினம்
» திருமணிமாடக்கோயில் அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில், நாகப்பட்டினம்
» திருக்கண்ணங்குடி அருள்மிகு லோகநாதப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்
» செம்பொனார்கோவில் அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
» குறுமாணக்குடி அருள்மிகு கண்ணாயிரமுடையார் திருக்கோயில், நாகப்பட்டினம்
» திருமணிமாடக்கோயில் அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில், நாகப்பட்டினம்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|