தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வாத நோய் போக்கும் நன்னாரி

View previous topic View next topic Go down

வாத நோய் போக்கும் நன்னாரி Empty வாத நோய் போக்கும் நன்னாரி

Post by mohaideen Sun Jun 28, 2015 1:01 pm

Ankari herb, narunetti, Cellar muli, kopaku, caripam, paratkoti, nirunti, known by many different names that cariyam nannariஅங்காரி மூலி, நறுநெட்டி, பாதாள முளி, கோபாகு, சாரிபம், பாறட்கொடி, நீறுண்டி, சாரியம் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நன்னாரி நமது உடலில் ஏற்படும் அதிகமான வெப்பத்தை அகற்றி பல்வேறு வெப்ப நோய்களையும் நீக்குகிறது. நன்னாரி என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது சர்பத்துதான். இதன் மனத்திற்கும் சுவைக்கும் ஆட்படாதவர்களே இல்லை என்று கூறலாம்.

அதுவும் கோடைகாலத்தில் சில் என்று அதை குடிக்கும் போது ஏற்படும் அனுபவமே தனியானது. எதிரடுக்கில் நீண்ட இலைகள் கொண்டது. இதன் கொடிகம்பி போன்று அமைந்திருக்கும். மணம் வீசும் வேர்கள் மருத்துவ குணம் கொண்டவை. தானாகவே வளரும் பாலுள்ள கொடி இனம். நறுக்குமூலம்,நறுநீண்டி, தாதுவெப்ப அகற்றியாகவும் வியர்வை, சிறுநீர் ஆகியவற்றை பெருக்கும் மருந்தாகவும் நோயகற்றி உடல் தேற்றவும் உடல் உரமூட்டவும் பயன்படும். குடும்ப வாழ்க்கையில் ஈடுபடும் போது சில ஆண்களுக்கு எரிச்சல் ஏற்படும். இவர்கள் நன்னாரி வேரை 15 கிராம் அளவில் எடுத்து 500 மிலி தண்ணீரில் நசுக்கி போட்டு 250 மிலியாக சுண்டியதும் வடிகட்டி 50மிலி அளவில் மூன்று நாட்கள் காலை மாலை குடித்து வர எரிச்சல் நீங்கி முழுமையான குணம் ஏற்படும்.

பச்சை நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து 200 மிலி பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், மே வெட்டை, நீர் கடுப்பு, நீர் சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும். நீண்ட நாட்கள் இதை சாப்பிட்டு வர நரை முற்றிலும் மாறும். பச்சை வேரை சிதைத்து 20 கிராம் எடுத்து 200 மிலி தண்ணீரில் ஒரு நாள் ஊற போட்டு வடிகட்டி 100 மிலி வீதம் காலை மாலை குடித்து வர பித்தநோய், சிறு நஞ்சு, நீரிழிவு, வெட்டை சூடு, கிரந்தி, சொறி சிரங்கு, தாகம், மிகுபசி, மேகநோய் தீரும். இச்சாபத்தியம் உண்டு.

நன்னாரி வேரை குடிநீர் செய்து இளம் சூட்டில் 100மிலி அளவில் குடித்து வந்தால் ஆண்மை பெருகும். நன்னாரி சர்பத்தாகவும் குடிக்கலாம். நன்னாரி வேர் 20 கிராம் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு 200 மிலியாக காய்ச்சி 100 மிலி வீதம் காலை மாலை சாப்பிட்டு வர நாட்பட்ட வாதம். பாரி சவாதம், தோல் நோய்கள் நீங்கி குணமடையும். பித்த குன்மம் முற்றிலும் நீங்கும்.

நன்னாரி வேரை இடித்து 135 கிராம் எடை எடுத்து அதனுடன் 700 மில்லி வெந்நீர் விட்டு நான்கு மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி 1 கிலோ அளவில் சீனியை சேர்த்து சிறு தீயில் காய்ச்சி வைத்துக் கொண்டு வேளை ஒன்றுக்கு 2 தேக்கரண்டி வீதம் தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் வெப்பம் தணியும். நன்னாரி வேரை வாழை இலையில் சுருட்டி பொட்டலாமாக கட்டி அதை கும்பிசாம்பலில் புதைத்துவைத்து மறுநாள் எடுத்து நன்னாரி வேரில் உள்ள நரம்பை நீக்கிவிட்டு, வெல்லம், சீரகம் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு உருண்டையாக பிடித்து உண்டு வந்தால் நீர் சுருக்கு, நீர் எரிச்சல் நீங்கும்.

வேர்சூரணம் அரை கிராம் காலை மாலை வெண்ணெயில் வைத்து சாப்பிட ஆரம்ப குஷ்டம் தீரும். சூரணத்தை தேனில் குழைத்து சாப்பிட காமாலை நீங்கும். நன்னாரியை பொடி செய்து சம அளவு கொத்துமல்லியைத் தூள் செய்து கொதிக்க வைத்து வடி கட்டி இளம் சூட்டில் அருந்தினால் பித்த சம்பந்தமான கோளாறுகள் நீங்கும். வயிறு, குடல் முதலியவற்றில் உண்டாகும் நோய்கள் நீங்கும்.

கடுமையான ஒற்றை தலைவலியால் அவதிப்பட்டு வருபவர்கள் நன்னாரிவேர், அதிமதுரம், கோட்டம், வசம்பு, கரு நெய்தல், இவற்றை காடி விட்டரைத்து எண்ணெய் கலந்து பூசி வர தலைவலி நீங்கும். வேரை அரைத்து சோற்றுக் கற்றாழையின் சோற்றுடன் கலந்து சாப்பிட்டால் கடுமையான வண்டு கடி நஞ்சு போகும். வேரை அரைத்து பற்று போட்டால் மூட்டுவலி, கட்டி, புண் ஆகியவை நீங்கி குணமடையும்.

நோஞ்சான் குழந்தையாக இருப்பவர்களுக்கு நன்னாரி வேர் பட்டையை நீரில் ஊற வைத்து தேவையான அளவு பாலும் சர்க்கரையும் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் உடலை தேற்றும் நாட்பட்ட இருமல் நிற்கும். கழிச்சலும் நீங்கும். என்கின்றார் தேரையர் . தாகம் தீர்க்கும் நன்னாரி நமது உடலுக்கு எந்த வகையில் நன்மை செய்யும் என்பதை அறிந்து, தேவையானவற்றை பயன்படுத்தும் முறையை நமக்கு சொன்ன முன்னோர்கள் வழியில் பயன்படுத்தி நலமுடன் வாழ்வோம்.

http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3675
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வாத நோய் போக்கும் நன்னாரி Empty Re: வாத நோய் போக்கும் நன்னாரி

Post by ஸ்ரீராம் Mon Jun 29, 2015 6:10 pm

நல்லதொரு தகவலுக்கு நன்றி மொஹைதீன்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வாத நோய் போக்கும் நன்னாரி Empty Re: வாத நோய் போக்கும் நன்னாரி

Post by kanmani singh Tue Jun 30, 2015 12:29 pm

அருமையான பகிர்வு!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

வாத நோய் போக்கும் நன்னாரி Empty Re: வாத நோய் போக்கும் நன்னாரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum