தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உடுமலை அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருப்பூர்

View previous topic View next topic Go down

உடுமலை அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருப்பூர் Empty உடுமலை அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருப்பூர்

Post by முழுமுதலோன் Sun Jul 26, 2015 11:01 am

உடுமலை அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருப்பூர் T_500_2000
மூலவர் : மாரியம்மன்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : அரசமரம், வேம்பு
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : காமிக ஆகமம்
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் :
ஊர் : உடுமலை
மாவட்டம் : திருப்பூர்
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:

-

திருவிழா:

இத்தலத்தின் வருட வைபவம் 15 நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படும் தேர்த்திருவிழா உற்சவம் ஆகும். பங்குனி அமாவாசைக்கு அடுத்து வரும் செவ்வாய் அன்று நோன்பு சாட்டுதலில் தொடங்கி கம்பம் நாட்டுதல், காமதேனு, யானை, ரிஷபம், அன்னம், சிங்கம், மயில் குதிரை ஆகிய வாகனங்களில் திருவீதி உலா, மாவிளக்கு வழிபாடு என தினசரி திருவிழா கோலம்தான். 15ம் நாள் திருக்கல்யாணமும் தேர்த்திருவிழாவும் சீருடனும் சிறப்புடனும் நடைபெறும். தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை முதல்நாள் வைகாசி விசாகம், ஆடிப்பூரம், கந்தசஷ்டி, தைப்பொங்கல், பங்குனி உத்திரம், பௌர்ணமி ஆகிய தினங்கள் இத்தலத்தின் விஷேச திருநாட்கள் ஆகும். பௌர்ணமி தினம் அம்பாளுக்கு உகந்த தினம். அன்று பூஜையில் கலந்து கொள்வது மிக்க பலனைத் தரும்.

தல சிறப்பு:

அம்மனுக்கு கூழும் முருங்கை கீரையும் நிவேதனமாகப் படைக்கப்படுவது சிறப்பு.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் பெரியகடை வீதி, உடுமலை 642126. திருப்பூர் மாவட்டம்.

போன்:

+91 4252 224755

பொது தகவல்:

கிழக்கு வாயிலில் நுழைந்து உள்ளே சென்றால் அழகிய நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய மணிமண்டபம் உள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் வந்தாலும் இலகுவாக நின்று தரிசனம் செய்ய ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் நீண்டுயர்ந்த கொடிமரம் கம்பீரமாய் நிற்கிறது. மகாமண்டபம், அர்த்த மண்படத்தை அடுத்துள்ள கருவறையில் உள்ள உயர்ந்த பீடத்தில் மாரியம்மன் இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்டு வீற்றிருக்கிறாள். நான்கு கரங்களில் அங்குசம், டமருகம், கத்தி, கபாலம் ஏந்தி அக்னி கொழுந்து சுடர்விட்டு பிரகாசிக்கும் கிரீடத்துடன் நீல நிறப்புடவையில் அருளாட்சி புரியும் சாந்த சொரூபிணி. உயர்ந்த பீடத்தில் அமர்ந்திருப்பதால் கிழக்கு கோபுர வாசலில் நுழையும் போதே அம்மனை காணும்படி உள்ளது.

கருவறையின் பின்புறம் சக்தி விநாயகர் மற்றும் முருகன் செல்வ முத்து குமரனாக தனிச் சந்நதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இத்தலத்தில் மிகவும் விசேசமாக விளங்கும் சந்நதி, வடக்கு வாசலை ஒட்டி தொன்மையான அரசமரத்தடியில் நேர்த்தியாக அமைக்கப்பட்ட அஷ்ட நாக பீடம் ஆகும். அனந்தன், வாசுகி, தட்சகன், கார்கோடன் பத்மன், சங்கபாலன், குளிகன் மற்றும் மகாபத்மன் என எண்மரும் எட்டு திக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். இக்கோவிலில் காமிக ஆகமப்படி பூஜைகள் நடைபெறுகிறது. காலை 7.30 மணிக்கு காலசந்தி, முற்பகல் 11 மணிக்கு உச்சிக்காலம், இரவு 7.00 மணிக்கு அர்த்த ஜாமம் என தினசரி 3 கால பூஜைகள் நடைபெறுகிறது. கோவில் கிழக்கு நோக்கி இருந்தாலும் வடக்கு நுழைவு வாயில் தனியே நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது.


பிரார்த்தனை

மருத்துவரிடம் சிகிச்சை பெற்றும் குணமாகாத, தீராத கண் சம்பந்தமான வியாதிகளுக்கு அம்மனின் அருட்தீர்த்தமே மாமருந்தாக அமைந்து நலம் தருவதாக பயனடைந்தோர் தெரிவிக்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

நீண்ட நாள் தடைபட்ட விவாகங்கள், குழந்தை பேறு இன்மை, உடல் நலக்குறைவு போன்ற வேண்டுதல்களை கனிவோடு நிறைவேற்றி வைப்பதை அனைவரும் அறிவர். வேண்டுதல்கள் நிறைவேறிய பின் தனது சக்திக்கு ஏற்ப பூவோடு எடுத்தல், மாவிளக்கு படைத்தல், உப்பிடுதல் உருவமிடல், முளைபாலி கையிடுதல் போன்ற நேர்த்திக் கடன்களை தேர்த்திருவிழா சமயத்தில் அம்மனுக்குச் செலுத்துகின்றனர்.

தலபெருமை:

கொங்கு மண்டலத்தில் உடம்பே ஆலயம் என்னும் ஆகம விதிகட்கு உட்பட்டு அமைந்த சிறப்பு வாய்ந்த தலம். திருமூலர் அருளிய உள்ளம் பெருங்கோவில் ஊன் உடம்பு ஆலயம் எனும் பாடல் நினைவுக்கு வருகின்றது. மாரியம்மன் திருமேனி மிகப் பழமையானது. கருங்கல்லில் துல்லியமாகச் செதுக்கப்பட்ட சிற்பம் ஆகும். தோளில் நெளியும் சர்ப்பங்கள், வலது காதில் ஸ்ரீசக்ர வடிவ தாடகங்கள், இடது காதில் தோடு, திருமேனியில் பலவித ஆபரணங்கள் என அருள் வடிவமாக காட்சி தருகிறாள்.

மாரியம்மன் நட்சத்திரம் மகம். எனவேதான் மகமாரி என அழைக்கப்படுகிறாள். பொதுவாக மாரியம்மன் உக்கிரமான தோற்றத்துடன் இருப்பாள். பக்தியோடு தொழாதவரை பயமுறுத்தும் சுபாவம். ஆவேசமான நோக்குடன் தலைமட்டும் கருவறையில் இருக்கும் நிலையில் சில கோவில்களில் காணலாம். தலை மட்டும் தனித்திருக்க இந்த உலகமே அவளுக்கு உடம்பு. ஆனால் இங்கு ஆவேசம் அடங்கிய நிலையில் சாந்த ரூபினியாக முழு அளவில் அருள்பாலிக்கின்றார்.

தேர்திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். அச்சமயத்தில் ஒருதாய், நோய்வாய்ப்பட்டு மரணத்தைத் தழுவும் நிலையில் இருந்த ஏழு வயது மகனை கோவிலுக்கு எடுத்து வந்து ஆலய வளாகத்தில் கிடத்தினாள். தன் மகனுக்கு உயிர் பிச்சை கேட்டு அம்மனிடம் மன்றாடி கதறி அழுதாள். மூன்று நாட்கள் தன் மகனுடன் கோவிலிலேயே தங்கி சதா சர்வ காலமும் அம்மனை மனதில் வேண்டி துதித்துக் கொண்டே இருந்தாள். பரிவுடன் தாயுள்ளத்தோடு கருணை புரியும் அன்னையல்லவா மாரியம்மன்? மதங்களைத் தாண்டிய அன்புள்ளம் கொண்டவள் அல்லவா? மூன்று நாளும் தீர்த்தமும் பிரசாதமும் வழங்கப்பட்டன. அச்சிறுவன் பூரண குணம் அடைந்தான். தன் நன்றியை கண்ணீரால் சமர்ப்பித்து திரும்பினாள். இதில் ஆச்சரியமூட்டும் செய்தி என்னவென்றால் அத்தாய் முஸ்லீம் மதத்தைச் சார்ந்தவர் என்பது தான். இச்செய்தி தல வரலாற்றில் காணப்படுகிறது. அம்மனின் சந்நதியில் வழங்கப்படும் தீர்த்தம் தீராத நோய்களைத் தீர்க்கவல்ல அருமருந்து. ஏனைய தலங்களில் அபிஷேக காலங்களில் மட்டுமே தீர்த்தம் வழங்கப்படும். ஆனால் இங்கு எல்லா நேரங்களிலும் தரிசனம் முடித்தவுடன் தீர்த்தம் வழங்கப்படுகிறது.

நாக பூஜை செய்தால் கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும், பிரிந்த சொந்த பந்தங்கள் ஒன்று சேர்வர். சத்ருக்கள் உபாதை நீங்கும். நாக தோஷங்கள் நீங்கி விவாகப் பிராப்தி, சந்தான பிராப்தி கிடைக்கும். மாங்கல்ய பலம், சொத்து பாதுகாப்பு என ஏராளமான பலன்கள் கிட்டுகிறதாம். நாகர் பல சமூகத்தவர்களின் குலதெய்வமாக வணங்கப்பட்டு வருகிறது. ஆயில்ய நட்சத்திரத்தின் அதிதேவதை நாகராஜாவாகும். பஞ்சமி திதியில் நாகதோஷமுள்ள ஆயில்ய நட்சத்திரக்குறியவர்கள் பரிகார பூஜை செய்தால் தோஷ நிவர்த்தி கிடைக்கிறது. நாக பஞ்சமி வழிபாடு நாடெங்கிலும் கொண்டாடப்படும் விழாவாகும். வளர்பிறை தேய்பிறை பஞ்சமி திதியில் நாக தேவதைகளுக்கு பூஜை செய்வது எல்லா சுபகர்மாக்களுக்கும் உத்தமமாகும்.

ஊர் கூடி சாதி, மதம் கடந்து அனைத்து தரப்பினரும் ஒன்றாகக் கலந்து தேரில் மாரியம்மன் ஆடி அசைந்து வரும் அருட்காட்சியைக் காண தேரோடும் வீதியெங்கும் அலைமோதும் மக்கள் வெள்ளம் இத்தலத்தின் உன்னதத்தை உணர்த்தும். திருத்தேர் உடுமலை நகரின் முத்திரைச் சின்னமாக விளங்குகிறது. இறைவனை நாகங்கள் வழிபட்டு பேறுபெற்ற ஸ்தலங்கள் பல உள்ளன. ஆனால் இங்கு பக்தர்கள் நாகங்களை வழிபட்டு பேறு பெருகின்றனர்.

தல வரலாறு:

மாராசூரன் என்ற அசுரன் ஆணவமும் அகங்காரமும் கொண்டு மூவுலகையும் துன்பப்படுத்தினான். தேவர்களும், மனிதர்களும் லோகமாதாவான அன்னை பராசக்தியிடம் முறையிட்டனர். இவர்களின் வேண்டுகோளுக்கு மனம் இறங்கிய அம்மன் கோபத்துடன் மாராசுரனின் இரு கால்களையும் பிடித்து மேலே துõக்கி அவனது தலையை பூமியில் அழுத்தி, அவன் பெற்ற வரத்தின் படி அழித்தாள். தேவர்களும் முனிவர்கள் பூமாரி பொழிந்து அம்மனுக்கு நன்றி கூறினர்.அன்று முதல் அம்மனுக்கு மாரியம்மன் என்ற திருநாமமும் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் தீயவர்களை அழித்து நல்லவர்களை காக்க உடுமலை நகரில் இந்த மாரியம்மன் கோயில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.

தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: அம்மனுக்கு கூழும் முருங்கை கீரையும் வேதனமாகப் படைக்கப்படுவது சிறப்பு.

நன்றி தினமலர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உடுமலை அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருப்பூர் Empty Re: உடுமலை அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருப்பூர்

Post by செந்தில் Mon Jul 27, 2015 10:10 am

நல்லதொரு ஆலய பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum