Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கழுத்து பளபளக்க..!
Page 1 of 1 • Share
கழுத்து பளபளக்க..!
சரும வறட்சியின் அடுத்தகட்ட பாதிப்பு, சரும சுருக்கம். இந்தப் பிரச்னையைத் தவிர்ப் பதற்கான முன்னெச்சரிக்கைக் குறிப்புகளை வழங்குகிறார், சென்னை, ‘க்ரீன் டிரெண்ட்ஸ்’ பியூட்டி சலூனின் டிரெயினர் பத்மா...
[You must be registered and logged in to see this image.]
முகச்சுருக்கங்கள் நீங்க..!
மிக்ஸியில் அடித்த கனிந்த செவ்வாழைப் பழம் இரண்டு ஸ்பூனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவவும். இது சரும வறட்சியைத் தடுத்து, ஈரப்பதத்தைக் கொடுக்கும்.
அவகோடா பழத்தை தோல் நீக்கி, மிக்ஸியில் அடித்து, முகத்தை நன்கு கழுவிய பின் அந்த அவகோடா பேஸ்ட்டை முகம் முழுக்க பரவலாகப் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும். தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இதைச் செய்துவந்தால், ஏற்கெனவே இருக்கும் சரும சுருக்கங்கள் குறைவதுடன், மேலும் சுருக்கம் வராது.
முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் முகத்தில் தடவி, உலர்ந்து இறுகியதும் கழுவவும். வாரம் ஒருமுறை இதைச் செய்து வர, சரும சுருக்கம் நீங்கி இளமையான தோற்றம் கிடைக்கும்.
கழுத்து பளபளக்க..!
கழுத்தை தினமும் ஸ்க்ரப் செய்தாலே, பளிச் என்றிருக்கும். சப்போட்டா, தர்பூசணி, நாவல் என ஏதாவது ஒரு பழத்தின் கொட்டையைக் காயவைத்து மிக்ஸியில் பொடியாக்கிக்கொள்ளவும். இதுதான் சருமத்துக்கான இயற்கை ஸ்க்ரப். இந்த ஸ்க்ரப் பொடியுடன் ஏதாவது பழத்தின் சதைப் பகுதி சிறிதளவு சேர்த்துக் குழைத்து, கழுத்தில் தடவி, விரல்களால் சிறுசிறு வட்டங்கள் போல ஐந்து நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். உலரவிட்டுக் கழுவவும். அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கி பளிச் என்று ஆகும்.
இதே ஸ்க்ரப் பொடியை அரை ஸ்பூன் எடுத்துக்கொண்டு, ஒரு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் குழைத்து, கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இதுவும் சருமத்தின் இறந்த செல்களை நீக்கி, கழுத்தை மிருதுவாக்கும்.
இன்னும் எளிய வழி, கழுத்தை தண்ணீரால் நனைத்துக்கொண்டு, ஒரு ஸ்பூன் சர்க்கரையை எடுத்து கழுத்துக்கு மசாஜ் கொடுக்கவும். இறந்த செல்களை நீக்கும்; கழுத்தின் கருமையும் நாள்பட மறையும்.
விரல்கள் மற்றும் நகங்கள்..!
வாரம் ஒருமுறை விரல்களை ஸ்க்ரப் பொடிகொண்டு நன்கு தேய்த்து இறந்த செல்களை நீக்கிவிடவும். ஒரு பாத்திரத்தில் உள்ளங்கை மூழ்கும் அளவுக்கு வெதுவெதுப் பான நீரை ஊற்றி அதில் ஒரு மூடி எலுமிச்சைச் சாறு பிழிந்து, அதில் கைகளை 10 நிமிடங்கள் ஊறவிடவும். பின் சாஃப்ட்டான பிரஷ் கொண்டு கை விரல்களை மிருதுவாகத் தேய்க்க, இறந்த செல்கள் நீங்கும். கைகளைக் கழுவி துடைத்துவிட்டு, சிறிது ஆலிவ் ஆயிலை விரல்களிலும் நகங்களிலும் தடவி மசாஜ் செய்யவும். இதனால் கை விரல்களின் சுருக்கம் நீங்கி, நகங்களும் வலிமையாகும்.
தினமலர்
[You must be registered and logged in to see this image.]
முகச்சுருக்கங்கள் நீங்க..!
மிக்ஸியில் அடித்த கனிந்த செவ்வாழைப் பழம் இரண்டு ஸ்பூனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவவும். இது சரும வறட்சியைத் தடுத்து, ஈரப்பதத்தைக் கொடுக்கும்.
அவகோடா பழத்தை தோல் நீக்கி, மிக்ஸியில் அடித்து, முகத்தை நன்கு கழுவிய பின் அந்த அவகோடா பேஸ்ட்டை முகம் முழுக்க பரவலாகப் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும். தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இதைச் செய்துவந்தால், ஏற்கெனவே இருக்கும் சரும சுருக்கங்கள் குறைவதுடன், மேலும் சுருக்கம் வராது.
முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் முகத்தில் தடவி, உலர்ந்து இறுகியதும் கழுவவும். வாரம் ஒருமுறை இதைச் செய்து வர, சரும சுருக்கம் நீங்கி இளமையான தோற்றம் கிடைக்கும்.
கழுத்து பளபளக்க..!
கழுத்தை தினமும் ஸ்க்ரப் செய்தாலே, பளிச் என்றிருக்கும். சப்போட்டா, தர்பூசணி, நாவல் என ஏதாவது ஒரு பழத்தின் கொட்டையைக் காயவைத்து மிக்ஸியில் பொடியாக்கிக்கொள்ளவும். இதுதான் சருமத்துக்கான இயற்கை ஸ்க்ரப். இந்த ஸ்க்ரப் பொடியுடன் ஏதாவது பழத்தின் சதைப் பகுதி சிறிதளவு சேர்த்துக் குழைத்து, கழுத்தில் தடவி, விரல்களால் சிறுசிறு வட்டங்கள் போல ஐந்து நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். உலரவிட்டுக் கழுவவும். அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கி பளிச் என்று ஆகும்.
இதே ஸ்க்ரப் பொடியை அரை ஸ்பூன் எடுத்துக்கொண்டு, ஒரு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் குழைத்து, கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இதுவும் சருமத்தின் இறந்த செல்களை நீக்கி, கழுத்தை மிருதுவாக்கும்.
இன்னும் எளிய வழி, கழுத்தை தண்ணீரால் நனைத்துக்கொண்டு, ஒரு ஸ்பூன் சர்க்கரையை எடுத்து கழுத்துக்கு மசாஜ் கொடுக்கவும். இறந்த செல்களை நீக்கும்; கழுத்தின் கருமையும் நாள்பட மறையும்.
விரல்கள் மற்றும் நகங்கள்..!
வாரம் ஒருமுறை விரல்களை ஸ்க்ரப் பொடிகொண்டு நன்கு தேய்த்து இறந்த செல்களை நீக்கிவிடவும். ஒரு பாத்திரத்தில் உள்ளங்கை மூழ்கும் அளவுக்கு வெதுவெதுப் பான நீரை ஊற்றி அதில் ஒரு மூடி எலுமிச்சைச் சாறு பிழிந்து, அதில் கைகளை 10 நிமிடங்கள் ஊறவிடவும். பின் சாஃப்ட்டான பிரஷ் கொண்டு கை விரல்களை மிருதுவாகத் தேய்க்க, இறந்த செல்கள் நீங்கும். கைகளைக் கழுவி துடைத்துவிட்டு, சிறிது ஆலிவ் ஆயிலை விரல்களிலும் நகங்களிலும் தடவி மசாஜ் செய்யவும். இதனால் கை விரல்களின் சுருக்கம் நீங்கி, நகங்களும் வலிமையாகும்.
தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கழுத்து பளபளக்க..!
சிறப்பான அழகு குறிப்பு பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» முகம் பளபளக்க ......
» கூந்தல் பளபளக்க ...
» முகம் பளபளக்க...
» உடல் "பளபளக்க"அழகு குறிப்புகள்...
» கழுத்து வலி
» கூந்தல் பளபளக்க ...
» முகம் பளபளக்க...
» உடல் "பளபளக்க"அழகு குறிப்புகள்...
» கழுத்து வலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|