தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சுயநலம் எவ்வளவு கொடுமை என்பது அனுபவித்தவர்களுக்கு தெரியும்

View previous topic View next topic Go down

சுயநலம் எவ்வளவு கொடுமை என்பது அனுபவித்தவர்களுக்கு தெரியும் Empty சுயநலம் எவ்வளவு கொடுமை என்பது அனுபவித்தவர்களுக்கு தெரியும்

Post by முரளிராஜா Thu Sep 17, 2015 2:01 pm

நண்பர்கள் என்றால் நல்லா பேசுவர், நம்முடன் நேரம் செலவழிப்பர்; நம்மிடமிருந்து அனைத்தையும் பகிர்ந்து கொள்வர். ஆனால், சிலர் தனக்ெகன்று ஒரு வேலையோ, வாய்ப்போ, வாழ்க்கையோ வந்து விட்டால், மிக சுயநலமாய், அப்படியே கழட்டிவிட்டுவர். சுயநலம் என்பது எவ்வளவு கொடுமை என்பது, அனுபவித்து பார்த்தவர்களுக்கு தான் தெரியும்.
இவர்கள், நான் உனக்கு இதைச் செய்தால், நீ எனக்கு அதைச் செய் என, ஒப்பந்தத்தை மனதுக்குள் வைத்து கொள்வர். நீ மட்டும் அதைச் செய்தால், நான் உனக்காக இதைச் செய்துவிடுவேன் என, பதிலுக்கு பதில் செய்யத்தான் கணக்கு போடுவர். நட்புகளுக்கு இடையில் மட்டுமல்ல, சொந்தங்களுக்கு, உறவுகளுக்கு இடையிலும் இப்படி நடந்துக் கொள்வோர் இருப்பர்.பிறப்புக்கும், இறப்புக்கும் இடையே, நாம் வாழும் வாழ்வு அர்த்தமானதாக இருக்க வேண்டும். வாழ்ந்தோம் எனும் சொல்லுக்கும், வாழ்வு எனும் சொல்லுக்கும் ஒரு சிறப்பான அர்த்தம் இருக்கிறது. ஏதோ வாழ்ந்தோம் என்றில்லாமல், பலருக்கும் அர்த்தமாக, உதாரணமாக வாழ்ந்தோம் என்று, வாழ்வு இருக்க வேண்டும்.

வெற்றியாளர்களின் பின்னணிசுயநலமாய் நடப்போர் கண்கள், அவர்களின் நலம் வரைதான் கண்டுக் கொள்ளும்படி இருக்கும். அதாவது, சில மிருகங்கள் போல, ஒரு குறிப்பிட்ட தூரத்தை மட்டுமே பார்க்க முடியும். இப்படி சுயநலமாய் நடந்துக் கொள்வோர், அந்த நேரத்து வேலையை மட்டுமே கருத்தில் கொள்வர். சில ஆண்டுகளுக்கு பின், என்ன நடக்கும் என்பதை, அவர்களால் அனுமானிக்க முடியாது. இவர்கள் எப்படியென்றால், தன் நன்மையை மட்டும் நினைக்கும் சுயநலம்.இவர்கள் எவ்வளவு படித்திருந்தாலும், பணம் படைத்தவர்களாய் இருந்தாலும், ஆன்மிகவாதியாக இருந்தாலும் இவர்களுக்கு வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடக்கும் வாய்ப்பு குறைவுதான். வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர், ஒவ்வொருவர் பின்னணியில் எங்கேயோ அளவற்ற பொதுநலம் இருக்கும். அதற்காக, தன்னலத்தை துறந்தவர்களாய் இருக்கணும் என்று இல்லை. இவர்கள், வாழ்வின் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர் என்று அர்த்தம்.நம்மிடமிருந்தே துவக்கம்சுயநலமாய் இருப்பது, கெட்டதா என்பது தெரியாது. ஆனால், பொதுநலமாய் இருப்பது நல்லது. உலகில் அனைவருமே சுயநலமாய் இருந்துவிட்டால் நாடு எப்படி உருப்படும்? ஆனால், நாம் நம் நிலையை உயர்த்திக் கொள்வதில், சுயநலமாய் இருப்பதில்தான் ஒரு பொதுநலமும் அடங்கியுள்ளது.

என்னங்க ஒரே குழப்பமாய் இருக்கிறதா?
ஒழுங்கா, ஒழுக்கமாக சம்பாதிச்சா நம்முடைய வீடு, மனைவி, குழந்தைகள் நன்றாக இருப்பர். நம் ஒழுக்கமும், ஒழுங்கும் நம் வீட்டிலும் பிரதிபலிக்கும். அவங்க படிக்கிற படிப்பும், பார்க்கிற வேலையும் நாட்டுக்கு பயன்படுகிற மாதிரி இருந்தால் போதும். அதுவே, பொதுநலமாக மாறிவிடும். வீடும், ஊரும், நாடும் உருப்படும். அதாவது, நம் சுயநலத்தில், பொதுநலமும் கலந்து 
இருக்கணும்; அப்போ இந்த சுயநலம் தேவைதானே!

இப்போ புரியுதுங்களா?
நம் நலத்தை பேணிக்காக்காதவன், எப்படி பொதுநலம் ஆற்றமுடியும்? செயலின் முடிவு பொதுநலமாக இருந்தால் போதும். அதுவே, தன்னலத்தில் பொதுநலம் கருதும் செயலாக அமைந்துவிடும்.ஆனால், அயோக்கியத்தனமான சுயநலம் அமைந்துவிட்டால் என்ன செய்வது? யாரையும் காயப்படுத்தாத, சுரண்டாத சுயநலம் அனைவருக்கும் தேவைதான். இச்சுயநலம், ஒரு வகையில் கடமையும், பொறுப்பும் ஆகும். எந்தச் செயலும், நம்மிடமிருந்தே தான் துவங்க வேண்டும்; ஆனால், செயலின் முடிவு, பொதுநலமாக இருந்தால் போதும்.'மழை பெய்யணும்னு நினைக்கிறது பொதுநலம் நாம் நனையாம குடை பிடிச்சிக்கிறது சுயநலம்' சிந்தனையில், பொதுநலம் இருந்தாலே போதும். சின்ன சின்ன செயல்கள் நூறு செய்யலாம். பொது இடங்களை சுத்தமாக வைத்து கொள்வதும், பொது இடங்களில் புகை பிடிக்காமல் இருப்பதும், தண்ணீர், மின்சாரத்தை சேமிப்பது என்று துவங்கி, பலவற்றை பட்டியல் போடலாம். பொதுநல சிந்தனையுடன், என்னவெல்லாம் செய்யலாம், என்னவெல்லாம் செய்யாமல் இருக்கலாம் என்று, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஒரு புத்தகமே எழுதியுள்ளார். பொதுநல சிந்தனை மனதில் பூக்க இடமளித்தாலே போதும், உங்கள் அறிவு பொதுநல நோக்கில் 
என்ன செய்யலாம் என்று, வழிக்காட்டத் துவங்கும்.
பொதுநல சிந்தனையோடு... யார் யாரோ கண்டுபிடித்த பொருட்களையும் பயன்படுத்தி வருகிறோம். யார், யாரோ அமைத்து கொடுத்த, அடிப்படை வசதிகளை அனுபவித்து வருகிறோம். ஆனால், அதே சிந்தனையோடு, அடுத்த தலைமுறைக்காகவும், சக மனிதனுக்காகவும், நாம் செயல்பட தயங்குவதென்பது அநியாயம் தானே?
பெரிய அரசியல் தலைவர்கள், ஞானிகள் போன்றோரால் மட்டும் தான், பொதுநலத்துடன் சிந்திக்க முடியும் என்றும், மற்றபடி சராசரி மனிதர்களுக்கு அதெல்லாம் சாத்தியமில்லாத ஒன்றாகும் எனவும், நம்மில் பலர் நினைக்கிறோம்.

யாருக்கும் எந்த கெடுதல் நினைக்காமலும், செய்யாமலும் என் குடும்பத்தில், எனக்கு இருக்கும் கடமைகளை, எந்தக் குறையும் வைக்காமல் நிறைவேற்றினாலே போதாதா? என்று, ஒரு கேள்வியை கேட்டு, ஒரு வட்டம் போட்டு அதற்குள்ளேயே நின்றுக் கொள்கின்றனர். இன்றைக்கும் பொதுநல சிந்தனையோட, ஈர இதயங்கள் ஆங்காங்கே பலர் இருப்பதால்தான், இந்த சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அன்ன தானம். ரத்த தானம், கண் தானம், உடல் உறுப்புகள் தானம் வரை நடந்துக் கொண்டேயிருக்கிறது.
நாடென்ன செய்தது நமக்கு என கேள்விகள் கேட்பது எதற்கு? 
நீ என்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை நமக்கு...
மற்றும் நான் ஏன் பிறந்தேன்... இந்த நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்? இந்த முழு பாடல்களின் அர்த்தம் புரிந்தால் போதும்,நாமும் பொதுநலம் பார்த்து நடக்க ஆரம்பித்து விடுவோம்.

- ஆர்.வைத்தீஸ்வரி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சுயநலம் எவ்வளவு கொடுமை என்பது அனுபவித்தவர்களுக்கு தெரியும் Empty Re: சுயநலம் எவ்வளவு கொடுமை என்பது அனுபவித்தவர்களுக்கு தெரியும்

Post by செந்தில் Thu Sep 17, 2015 6:46 pm

உண்மைதான் அண்ணா!
எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum