தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  Empty காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 13, 2015 7:46 pm

பாடல்: அண்ணன் என்னடா தம்பி என்னடா
படம்: பழநி.
ஆண்டு: 1965
பாடலாக்கம்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்: T.M. செளந்தரராஜன்
இசை

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  Pazhani+Film+

அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே..

தாயும் பிள்ளையும் ஆனபோதிலும் வாயும்
வயிறும் வேறடா
சந்தைக் கூட்டத்தில் வந்த மந்தையில்
சொந்தம் என்பதும் ஏதடா..

அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே..

பெட்டைக் கோழிக்கு கட்டுச் சேவலை
கட்டி வைத்தவன் யாரடா..
அவை எட்டுக் குஞ்சுகள் பெற்றெடுத்ததும்
சோறு போட்டவன் யாரடா..

வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதும்
வருந்தவில்லையே தாயடா..
மனித ஜாதியில் துயரம் யாவுமே
மனதினால் வந்த நோயடா..

அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே..

வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய்
வந்து சேர்கிறார் பாரடா
கை வறண்ட வீட்டிலே உடைந்த பானையை
மதித்து வந்தவர் யாரடா..

பணத்தின்மீதுதான் பக்தி என்றபின்
பந்தபாசமே ஏனடா..
பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும்
அண்ணன் தம்பிகள் தானடா.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 13, 2015 7:47 pm

பாடல்: ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
திரைப்படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
ஆண்டு: 1958
பாடியவர்: திருச்சி லோகநாதன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
---------------------------------------------------------
ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே

பருவம் என்னும் காற்றிலே பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார் சுகம் பெருவார் அதிசயம் காண்பார்
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்?

ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே

வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே வடிவம் மட்டும் வாழ்வதேன்?
இளமை மீண்டும் வருமா மணம் பெருமா முதுமையே சுகமா?
காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்?

ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே

சூறைக் காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ?
வாழ்வில் துன்பம் வரவு சுகம் செலவு இருப்பது கனவு
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்?

ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 13, 2015 7:53 pm

ஆறு மனமே ஆறு

பாடல் – ஆறு மனமே ஆறு
திரைப்படம் – ஆண்டவன் கட்டளை (ஆண்டு 1964)
பாடலாக்கம்: கவியரசர் கண்ணதாசன்
இசை – திரு.M.S.விஸ்வநாதன், திரு.ராமமூர்த்தி
பாடியவர் – திரு.T.M.சௌந்தரராஜன்

++++++

ஆறு மனமே ஆறு - அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி

சொல்லுக்கு செய்கை பொன்னாகும்
வரும் இன்பத்தில் துன்பம் பட்டாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்

உண்மையைச் சொல்லி நன்மையை செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்

உண்மை என்பது அன்பாகும்
பெரும் பணிவு என்பது பண்பாகும்
இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆசை கோபம் களவு கொள்பவன்
பேசத் தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம்

இதில் மிருகம் என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 13, 2015 7:54 pm

இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை
-----
பாடல்: இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை
திரைப்படம்: திருவிளையாடல் (ஆண்டு 1965)
பாடியவர்: T.R. மஹாலிங்கம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: K.V. மஹாதேவன்

++++

இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை - நீ
இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை - இறைவா
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை - நீ
இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை - நீ
இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை

வசை வருமே பாண்டி நாட்டினிலே இறைவா ஆ... ஆ..
வசை வருமே பாண்டி நாட்டினிலே - குழலி
மணவாளனே உனது வீட்டினிலே
வசை வருமே பாண்டி நாட்டினிலே - குழலி
மணவாளனே உனது வீட்டினிலே
உயிர் மயக்கம் நாதப் பாட்டினிலே
உயிர் மயக்கம் நாதப் பாட்டினிலே - வெற்றி
ஒருவனுக்கோ மதுரைத் தமிழனுக்கோ - வெற்றி
ஒருவனுக்கோ மதுரைத் தமிழனுக்கோ

இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை

சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ - மாமன்
திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?
சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ - மாமன்
திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?
பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்ட உன்னை
பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்ட உன்னை
பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன?
பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன?

இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை

தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகர்க்கில்லையோ - அன்னை
தமிழுக்குப் பழி நேர்ந்தால் உனக்கில்லையோ
வேருக்கு நீரூற்றி விளைக்கின்ற தலைவா - உன்
ஊருக்குப் பழி நேர்ந்தால் உனக்கின்றி எனக்கில்லை
உனக்கின்றி எனக்கில்லை உனக்கின்றி எனக்கில்லை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 13, 2015 7:56 pm

உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை

பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: K.V. மஹாதேவன்
இயக்கம்: ஆ.பி.நாகராஜன்
நடிப்பு: சிவாஜி கணேசன், சரோஜாதேவி & தேவிகா

உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி கடவுள் செய்த குற்றமடி
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி கடவுள் செய்த குற்றமடி

மயங்க வைத்த கன்னியர்க்கு மணமுடிக்க இதயமில்லை
மயங்க வைத்த கன்னியர்க்கு மணமுடிக்க இதயமில்லை
நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை
நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை

உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி கடவுள் செய்த குற்றமடி

உனக்கெனவா நான் பிறந்தேன் எனக்கெனவா நீ பிறந்தாய்
உனக்கெனவா நான் பிறந்தேன் எனக்கெனவா நீ பிறந்தாய்
கணக்கினிலே தவறு செய்த கடவுள் செய்த குற்றம்டி
கணக்கினிலே தவறு செய்த கடவுள் செய்த குற்றம்டி
ஒரு மனதை உறங்க வைத்தான் ஒரு மனதைத் தவிக்க விட்டான்
ஒரு மனதை உறங்க வைத்தான் ஒரு மனதைத் தவிக்க விட்டான்
இருவர் மீதும் குற்றமில்லை இறைவன் செய்த குற்றமடி
இருவர் மீதும் குற்றமில்லை இறைவன் செய்த குற்றமடி

உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி கடவுள் செய்த குற்றமடி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by செந்தில் Tue Oct 13, 2015 7:59 pm

கைதட்டல் அருமையான பாடல்கள் அண்ணா. கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 13, 2015 8:01 pm

பாடல்: உலகம் பிறந்தது எனக்காக
படம்: பாசம் (ஆண்டு 1961)
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவியரசர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன, டி.கே. ராமமூர்த்தி
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக - அன்னை
மடியை விரித்தாள் எனக்காக

(உலகம்)

காற்றில் மிதக்கும் ஒலிகளிலே
கடலில் தவழும் அலைகளிலே
இறைவன் இருப்பதை நானறிவேன்
என்னை அவனே தானறிவான்
இறைவன் இருப்பதை நானறிவேன்
என்னை அவனே தானறிவான்

(உலகம்)

தவழும் நிலவாம் தங்கரதம்
தாரகை பதித்த மணி மகுடம்
குயில்கள் பாடும் கலைக்கூடம்
கொண்டது எனது அரசாங்கம்
குயில்கள் பாடும் கலைக்கூடம்
கொண்டது எனது அரசாங்கம்

(உலகம்)

எல்லாம் எனக்குள் இருந்தாலும்
என்னைத் தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோயில்
அவளே என்றும் என் தெய்வம்
அன்னை மனமே என் கோயில்
அவளே என்றும் என் தெய்வம்

உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக - அன்னை
மடியை விரித்தாள் எனக்காக
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 13, 2015 8:02 pm

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு

பாடல்: ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
படம்: இரத்ததிலகம் (ஆண்டு 1963)
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவியரசர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு

காவியத் தாயின் இளைய மகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன் - நான்
காவியத் தாயின் இளைய மகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
பாமர ஜாதியில் தனி மனிதன் - நான்
படைப்பதனால் என் பேர் இறைவன்

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழ்கின் சிரிப்பு
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு

மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் - அவர்
மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான்
மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் - அவர்
மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு
இசைப் பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு

(ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 13, 2015 8:03 pm

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  Thiruvilaiyadal+1

பாடல்: ஒருநாள் போதுமா? இன்றொரு நாள் போதுமா?
திரைப்படம்: திருவிளையாடல் (ஆண்டு 1965)
பாடியவர்: M. பாலமுரளிகிருஷ்ணா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: K.V. மஹாதேவன்

ஓரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா?
நான் பாட இன்றொரு நாள் போதுமா?
நாதமா கீதமா - அதை
நான் பாட இன்றொரு நாள் போதுமா?
புதுநாதமா சங்கீதமா - அதை
நான் பாட இன்றொரு நாள் போதுமா?

ராகமா சுகராகமா கானமா தேவகானமா?
ராகமா சுகராகமா கானமா தேவகானமா? - என்
கலைக்கிந்தத் திருநாடு சமமாகுமா? - என்
கலைக்கிந்தத் திருநாடு சமமாகுமா?
நாதமா கீதமா அதை
நான் பாட இன்றொரு நாள் போதுமா?

குழலென்றும் பததபம மபபமக கமமகரி ரிககரிஸ
காக்ரீஸ் நீதபமக
யாழென்றறும் பா பம பததப பமப ததப பம
பததபபம பததபபம பத மபமத பதமப
கமகப மபகம ரிகரிம கமரிக
ஸரிநிததா ஸரிநிததா ஸரிநிததா
ஸரிநிததா ஸரிநிததா ஸரிநிததா

குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவார் - என்
குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார்
குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவார் - என்
குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார்
அழியாத கலையென்று எனைப் பாடுவார் ஆ..
அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார் - எனை
அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார் - எனை
அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார்

இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ?
எழுந்தோடி வருவாரன்றோ?
எழுந்தோடி தோடி..
இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ?

எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ?
தர்பாரில் எவரும் உண்டோ தர்பாரில்...
எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ?

கலையாத மோகனச் சுவை நானன்றோ?
மோகனச் சுவை நானன்றோ? மோகனம் ஆ...
கலையாத மோகனச் சுவை நானன்றோ?

கானடா.. ஆ.. என் பாட்டு தேனடா இசை தெய்வம் நானடா
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 13, 2015 8:04 pm

ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்!

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  Vallavanukku+vallavan

பாடல்: ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்!
படம்: வல்லவனுக்கு வல்லவன் (ஆண்டு 1965)
இசை: வேதா
பாடல்: கவியரசு கண்ணதாசன்
பாடியவர்: டி.எம்.செளந்தரராஜன்
நடிப்பு: ஜெய்சங்கர், மணிமாலா

நூறுமுறை பிறந்தாலும்
நூறுமுறை இறந்தாலும்
உனைப் பிரிந்து வெகுதூரம் - நான்
ஒருநாளும் போவதில்லை
உலகத்தின் கண்களிலே
உருவங்கள் மறைந்தாலும்
ஒன்றான உள்ளங்கள்
ஒருநாளும் மறைவதில்லை!

ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்

(ஓராயிரம் பார்வையிலே)

இந்த மானிடக் காதலெல்லாம்
ஒரு மரணத்தில் மாறி விடும்
அந்த மலர்களின் வாசமெல்லாம்
ஒரு மாலைக்குள் வாடி விடும்
நம் காதலின் தீபம் மட்டும்
எந்த நாளிலும் கூட வரும்

(ஓராயிரம் பார்வையிலே)

இந்த காற்றினில் நான் கலந்தேன்
உன் கண்களை தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்
உன் ஆடையில் ஆடுகின்றேன்
நான் போகின்ற பாதையெல்லாம்
உன் பூமுகம் காணுகின்றேன்

(ஓராயிரம் பார்வையிலே)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 13, 2015 8:05 pm

கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம்

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  Vanambadi

பாடல்: கங்கைக் கரைத் தோட்டம்
திரைப்படம்: வானம்பாடி
பாடியவர்: சுசீலா
பாடல் வரிகள்: கண்ணதாசன்
இசை: கே.வி.மகாதேவன்

கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே
காலை இளம் காற்று பாடி வரும் பட்டு
எதிலும் அவன் குரலே

கண்ணன் முகத் தோற்றம் கண்டேன் கண்டவுடன் நாட்டம் கொண்டேன்
கண் மயங்கி ஏங்கி நின்றேன் கன்னிச் சிலையாகி நின்றேன்
என்ன நினைந்தேனோ தன்னை மறந்தேனோ
கண்ணீர் பெருகியதே…ஓ…கண்ணீர் பெருகியதே

(கங்கைக்கரை)

கண்ணன் என்னை கண்டு கொண்டான் கையில் என்னை அள்ளிக் கொண்டான்
பொன்னழகு மேனி என்றான் பூச்சரங்கள் சூடித் தந்தான்
கண் திறந்து பார்த்தேன் கண்ணன் அங்கு இல்லை
கண்ணீர் பெருகியதே…ஓ…கண்ணீர் பெருகியதே

அன்று வந்த கண்ணன் அவன் இன்று வர வில்லை
என்றோ அவன் வருவான்…

கண்ணன் முகம் கண்ட கண்கள் மன்னன் முகம் காண்பதில்லை
கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை
கண்ண்ன் வரும் நாளில் கன்னி இருப்பேனோ
காற்றில் மறைவேனோ…

நாடி வரும் கண்ணன் கோல மணி மார்பில்
நானே தவழ்ந்திருப்பேன்

கண்ணா…

(கங்கைக்கரை)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 13, 2015 8:06 pm

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  Panjavarnakili

பாடல்: கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
படம்: பஞ்சவர்ணக் கிளி
பாடியவர்: பீ.சுசீலா
இசை: எம். எஸ்.விஸ்வனாதன் - டி.கே.ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்
நடிகை: கே.ஆர்.விஜயா

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்

பச்சை வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க
பட்டு வண்ண சிட்டு வந்து மலர் கொடுக்க
பச்சை வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க
பட்டு வண்ண சிட்டு வந்து மலர் கொடுக்க
கன்னங்கரு காக்கை வந்து மை கொடுக்க
கண்ணன் மட்டும் கன்னத்திலே முத்தம் கொடுக்க
முத்தம் கொடுக்க...முத்தம் கொடுக்க

தத்தி தத்தி நடக்கையில் மயில் போலே
திக்கி திக்கி பேசுகையில் குயில் போலே
கொஞ்சி கொஞ்சி எடுக்கையில் கொடி போலே
அஞ்சி அஞ்சி விழுவாய் மடி மேலே
ஆரிரோ ஆரிராரிராரிராரிராரிரோ
ஆராரோ ஆரிராரிராரிராரிராரஓ
ஆரிராரிராரிராரிராரோ

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்

உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்
இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்
உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்
இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்
ஒருவரின் குரலுக்கு மயங்க வைத்தான்
உண்மையை அதிலே உறங்க வைத்தான்
உறங்க வைத்தான் ..உறங்க வைத்தான்
ஆரிரோ ஆரிராரிராரிராரிராரிரோ
ஆராரோ ஆரிராரிராரிராரிராரஓ
ஆரிராரிராரிராரிராரோ

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்---
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 13, 2015 8:07 pm

கண்ணா... கருமை நிறக் கண்ணா உன்னைக் காணாத கண்ணில்லையே

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  Naanum+Oru+Penn+-+Vijayakumari

பாடல்: கண்ணா... கருமை நிறக் கண்ணா
படம் : நானும் ஒரு பெண் (ஆண்டு 1963)
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர் : பி.சுசீலா
பாடல் வரிகள் : கவியரசர் கண்ணதாசன்

கண்ணா... கருமை நிறக் கண்ணா
உன்னைக் காணாத கண்ணில்லையே
கண்ணா... கருமை நிறக் கண்ணா
உன்னைக் காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை
என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை
(கண்ணா...)


மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர்முன் கொடுத்தாய் கண்ணா
மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர்முன் கொடுத்தாய் கண்ணா
இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய் கண்ணா
இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய் கண்ணா
நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா

கண்ணா... கருமை நிறக் கண்ணா
உன்னைக் காணாத கண்ணில்லையே

பொன்னான மனமொன்று தந்தாய் கண்ணா
அதில் பூப்போல நினைவொன்று வைத்தாய் கண்ணா
பொன்னான மனமொன்று தந்தாய் கண்ணா
அதில் பூப்போல நினைவொன்று வைத்தாய் கண்ணா
கண்பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா
கண்பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா
எந்தக்கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா
(கண்ணா...)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 13, 2015 8:08 pm

காவிரிக் கரையின் தோட்டத்திலே கானம் வந்தது தோழியரே

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  Iru+Vallavarkal+2

பாடல்: காவிரிக் கரையின் தோட்டத்திலே கானம் வந்தது தோழியரே
திரைப் படம்: இரு வல்லவர்கள் (ஆண்டு 1966)
பாடலாக்கம்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்கள்: பி.சுசீலா மற்றும் குழுவினர்
இசை: வேதா

சுசீலா:
காவிரிக் கரையின் தோட்டத்திலே
கானம் வந்தது தோழியரே
கானம் வந்த வழியினிலே
கண்ணன் வந்தான் தோழியரே

காவிரிக் கரையின் தோட்டத்திலே
கானம் வந்தது தோழியரே
கானம் வந்த வழியினிலே
கண்ணன் வந்தான் தோழியரே

குழுவினர்: ஆஹா கண்ணன் வந்தான் தோழியரே

சுசீலா:
இசை ஒன்று பாடினான்
இளம் பெண்ணை நாடி
மெதுவாகப் பேசினான்
பொருளென்ன தோழி
என் சின்ன உடல் ஆட
என் கன்னி இடை ஆட
பின் மன்னவனும் கூட
நான் என்ன சொல்லத் தோழி

அடடா மன்னன் கண்ணனடி
ஆயிரம் கலையில் மன்னனடி
பருவம் கவரும் கள்ளனடி
பள்ளியில் பாடும் கவிஞனடி

குழுவினர்:
காவிரிக் கரையின் தோட்டத்திலே
கானம் வந்தது தோழியரே

சுசீலா:
கானம் வந்த வழியினிலே
குழுவினர்:
கண்ணன் வந்தான் தோழியரே
சுசீலா:
ஓஹோ கண்ணன் வந்தான் தோழியரே

சுசீலா:
அறியாத பெண்ணிடம் அவன்
சொன்ன வார்த்தை
விரிவாகச் சொல்லவோ அறியேனே தோழி
ஹோ என்னை அவன் மெல்ல
தன் கையிரண்டில் அள்ள
நான் மெல்ல மெல்லத் துள்ள
ஓ என்னவென்று சொல்ல

அவனைக் கண்டால் வரச் சொல்லடி
அன்றைக்குத் தந்ததை தரச் சொல்லடி
தந்ததை மீண்டும் பெறச் சொல்லடி
தனியே நிற்பேன் எனச் சொல்லடி

குழுவினர்:
காவிரிக் கரையின் தோட்டத்திலே
கானம் வந்தது தோழியரே
சுசீலா:
கானம் வந்த வழியினிலே
கண்ணன் வந்தான் தோழியரே

குழுவினர்:
காவிரிக் கரையின் தோட்டத்திலே
கானம் வந்தது தோழியரே
சுசீலா: கானம் வந்த வழியினிலே
குழுவினர்: கண்ணன் வந்தான் தோழியரே
சுசீலா: ஆஹா கண்ணன் வந்தான் தோழியரே
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 13, 2015 8:10 pm

கொடி அசைந்ததும் காற்று வந்ததா

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  Paarthal+pasi+theerum+sivaji+&+saroja+devi

பாடல்: கொடி அசைந்ததும் காற்று வந்ததா
படம்: பார்த்தால் பசி தீரும் (ஆண்டு 1962)
இசை: MS விஸ்வநாதன் & ராமமூர்த்தி
பாடியவர்கள்: P சுசீலா, TM சௌந்தர்ராஜன்
பாடல் வரிகள்: கண்ணதாசன்

கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?
(கொடி..)

பாடல் வந்ததும் தாளம் வந்ததா?
பாடல் வந்ததும் தாளம் வந்ததா?
தாளம் வந்ததும் பாடல் வந்ததா?
பாவம் வந்ததும் ராகம் வந்ததா?
பாவம் வந்ததும் ராகம் வந்ததா?
ராகம் வந்ததும் பாவம் வந்ததா?

கண் திறந்ததும் காட்சி வந்ததா?
காட்சி வந்ததும் கண் திறந்ததா?
பருவம் வந்ததும் ஆசை வந்ததா?
ஆசை வந்ததும் பருவம் வந்ததா?
(கொடி..)

வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா?
வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா?
வாய் திறந்ததும் வார்த்தை வந்ததா?
பெண்மை என்பதால் நாணம் வந்ததா?
பெண்மை என்பதால் நாணம் வந்ததா?
நாணம் வந்ததால் பெண்மை ஆனதா?

ஓடி வந்ததும் தேடி வந்ததும்
பாடி வந்ததும் பார்க்க வந்ததும்
காதல் என்பதா? பாசம் என்பதா?
கருணை என்பதா? உரிமை என்பதா?
(கொடி..)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 13, 2015 8:11 pm

சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  Puthia+Paravai

பாடல்: சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து
படம்: புதிய பறவை (ஆண்டு 1964)
பாடியவர்: P.சுசீலா
கவியாக்கம்: கவியரசர் கண்ணதாசன்
இசையமைப்பு: விஸ்வநாதன் - ராமமூர்த்தி

சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து
சேர்ந்திடக் கண்டேனே
செவ்வானம் கடலினிலே
கலந்திடக் கண்டேனே
மொட்டு விரித்த மலரினிலே
வண்டு மூழ்கிடக் கண்டேனே
மூங்கிலிலே காற்று வந்து
மோதிடக் கண்டேனே

(சிட்டு)

பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே
எடுத்துச் சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே
என்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே

(சிட்டு)

ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா
இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா

(சிட்டு)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 13, 2015 8:12 pm

சின்னச் சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  Song+No+19+image

படம்: உதவி. The Hindu News Paper. நமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்

சின்னச் சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ

பாடல்: சின்னச் சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ?
படம்: வாழ்க்கைப் படகு (ஆண்டு 1965)
கவியாக்கம்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்: P.B. ஸ்ரீனிவாஸ்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே ராமமூர்த்தி

சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ

பால் மணக்கும் பருவத்திலே
உன்னைப் போல் நானிருந்தேன்
பட்டாடை தொட்டிலிலே
பித்துப் போல் படுத்திருந்தேன்
அன்னாளை நினைக்கையிலே என் வயது மாறுதடா
உன்னுடன் ஆடி வர உள்ளமே தாவுதடா
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ

ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா
இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா
ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா
இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா
ஈரேழு மொழிகளிலே என்ன மொழி பிள்ளை மொழி
கள்ளமற்ற வெள்ளை மொழி
தேவன் தந்த தெய்வமொழி
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ

பூப்போன்ற நெஞ்சினிலும் முள்ளிருக்கும் பூமியடா.....
பொல்லாத கண்களடா புன்னகையும் வேஷமடா.......
பூப்போன்ற நெஞ்சினிலும் முள்ளிருக்கும் பூமியடா.....
பொல்லாத கண்களடா புன்னகையும் வேஷமடா.......
நன்றி கெட்ட மாந்தரடா
நானறிந்த பாடமடா
நன்றி கெட்ட மாந்தரடா
நானறிந்த பாடமடா
பிள்ளையாய் இருந்து விட்டால்
இல்லை ஒரு துன்பமடா

கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 13, 2015 8:14 pm

செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  Malaiyitta+Mangai+Still

பாடல்: செந்தமிழ் தேன் மொழியாள்
படம்: மாலையிட்ட மங்கை (ஆண்டு 1958)
பாடியவர்: டி.ஆர். மஹாலிங்கம்
இயற்றியவர்: கவியரசர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி

சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே ஆ.ஆ. ஆஆஆஆஆ

செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்

காற்றினில் பிறந்தவளோ புதிதாய்க்
கற்பனை வடித்தவளோ ஆ..ஆஆ...ஆஆ.
காற்றினில் பிறந்தவளோ புதிதாய்க்
கற்பனை வடித்தவளோ
சேற்றில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ - அவள்

செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
சிர்க்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்

கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக்
கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ - அவள்

செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
சிர்க்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 13, 2015 8:15 pm

மேலும் தொடரும் தயவு செய்து இடையில் எவரும் ஒரே பாடலை மீண்டும்
பதிவு செய்யாதீர்கள்
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 14, 2015 3:14 pm

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

பாடல்: சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
படம்: தங்கப் பதக்கம் (ஆண்டு 1974)
பாடியவர்: T.M. செளந்தரராஜன்
பாடலாக்கம்: கவியரசர் கண்ணதாசன்
இசை: M.S. விஸ்வநாதன்

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல
நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல
பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல
எனக்கு அதிகாரம் இல்லையம்மா வானகம் செல்ல
ஒரு நாளும் நான் இது போல் அழுதவனல்ல
அந்த திருனாளை கடன் கொடுத்தவன் யாரிடம் சொல்ல

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி(2)
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

(மாமா… காஞ்சிப்போன பூமி எல்லாம் வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும். அந்த நதியே காஞ்சி போய்ட்டா?
துன்பப் படுறவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க. ஆனா தெய்வமே கலங்கி நின்னா?அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்?)

நானாட வில்லையம்மா சதையாடுது
அது தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது
பூவாக வைத்திருந்தேன் மனமென்பது
அதில் பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது
அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா
இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 14, 2015 3:15 pm

நான் மலரோடு தனியாக ஏனிங்கு வந்தேன்

பாடல்: நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன்
படம்: இரு வல்லவர்கள் (ஆண்டு 1966)
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: வேதா
பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 14, 2015 3:22 pm

பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?

பாடல்: பனியில்லாத மார்கழியா
படம்: ஆனந்த ஜோதி (ஆண்டு 1963)
பாடியவர்கள்: T.M. சௌந்தரராஜன், P. சுசீலா
இயற்றியவர்: கவியரசர் கண்ணதாசன்
இசையமைப்பு: M.S. விஸ்வநாதன், B. ராமமூர்த்தி

பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
இனிப்பில்லாத முக்கனியா இசையில்லாத முத்தமிழா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?

அழகில்லாத ஓவியமா ஆசையில்லாத பெண்மனமா?
அழகில்லாத ஓவியமா ஆசையில்லாத பெண்மனமா?
மழையில்லாத மாநிலமா மலரில்லாத பூங்கொடியா?
மலரில்லாத பூங்கொடியா?

பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
இனிப்பில்லாத முக்கனியா இசையில்லாத முத்தமிழா?

பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?

தலைவனில்லாத காவியமா தலைவி இல்லாத காரியமா?
கலையில்லாத நாடகமா காதலில்லாத வாலிபமா?
காதலில்லாத வாலிபமா?

பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?

நிலையில்லாமல் ஓடுவதும் நினைவில்லாமல் பாடுவதும்
பகைவர் போலே பேசுவதும் பருவம் செய்யும் கதையல்லவா?
பருவம் செய்யும் கதையல்லவா?

பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
இனிப்பில்லாத முக்கனியா இசையில்லாத முத்தமிழா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 14, 2015 3:23 pm

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது

பாடல்: பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது - கருடா செளக்கியமா?
படம்: சூரிய காந்தி (ஆண்டு 1973)
பாடலாக்கம்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்: T.M. செளந்தரராஜன்
இயக்கம்: முக்தா வி. சீனிவாசன்

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு அவ்வை சொன்னது
அது அவ்வை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால்
எந்த வண்டி ஓடும்
உனை போலே அளவோடு உறவாட வேண்டும்
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது
அது சிறுமை என்பது.. அதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும் போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது
இது கணவன் சொன்னது.. இதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 14, 2015 3:25 pm

பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா


பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா

பாடல்: பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா
திரைப்படம்: திருவிளையாடல் (ஆண்டு 1965)
பாடியவர்: K.B. சுந்தராம்பாள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: K.V. மஹாதேவன்

ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு
நாமுண்ணவும் கொடுத்த முருகா நீ ப்ரணவ
ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு
நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன்
உனக்கென்ன விதம் இக்கனியை நாமீவது என்று நாணித்தான்
முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு
நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன்
உனக்கென்ன விதமிக்கனியை நா..மீவது என்று
நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை...

முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு
நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ
உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று
நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை...
அப்பனித்தலையர் தரவில்லையாதலால் முருகா
உனக்குச் சாருமொரு பிழையில்லையே
ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசம் அன்பினொடு
நாமுண்ணவும் கொடுத்த நல்லகுரு நாதன் நீ
உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று
நாணித்தான்.. அப்பனித்தலையர் தரவில்லையாதலால்
முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே
முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே

சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் ஷண்முகா
சக்தி வடிவேல் வடிவேல் வேல்...
சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?
வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?
சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையும் உளதோ?
முருகா உனக்குக் குறையுமுளதோ?
வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?
சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா
உனக்கு.. குறையுமுளதோ?... முருகா உனக்குக் குறையுமுளதோ?

ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டுகொண்டு இங்குற்றோர் ஆண்டியானாய்?
முருகா நீ ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டுகொண்டிங்குற்றோர் ஆண்டியானாய்?
எமது வினை பொடிபடவும் அல்லவோ வந்து நீ இப்படி இங்கு இருக்கலாம்
என் ஆசான் அப்பன் அம்மையாம் என்னவும் எண்ணினேன்
தருவையரு பழனி மலையில் சந்ததம் குடிகொண்ட
சங்கரான் கும்பிடும் என் தண்டபாணி தண்டாபாணி தண்டபாணி
தண்டபாணித் தெய்வமே

பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா
பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா
சபைதன்னில் திருச்சபைதன்னில் உருவாகி புலவோர்க்குப் பொருள் கூறும்
பழனீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா

கண்ணொன்றில் கனலாய் வந்தாய் நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய் - ஆறு
கமலத்தில் உருவாய் நின்றாய் - ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய்
கார்த்திகைப் பெண்பால் உண்டாய் - திருக் கார்த்திகைப் பெண்பாலுண்டாய்
உலகன்னை அணைப்பாலே திருமேனி ஒரு சேர்ந்த தமிழ் ஞானப் பழம் நீயப்பா

ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு
ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு
நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு
நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு
தாயுண்டு மனம் உண்டு
தாயுண்டு மனம் உண்டு அன்புள்ள தந்தைக்கு தாளாத பாசம் உண்டு - உன்
தத்துவம் தவறென்று சொல்லவும் அவ்வையின் தமிழுக்கு உரிமை உண்டு

ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ?
ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ?
மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ?
மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ?
ஏறு மயிலேறு ஈசனிடம் நாடு இன்முகம் காட்டவா நீ
ஏற்றுக்கொள்வான் கூட்டிச் செல்வேன் என்னுடன் ஓடிவா நீ என்னுடன் ஓடிவா நீ
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 14, 2015 3:26 pm

பாட்டும் நானே பாவமும் நானே!


பாட்டும் நானே பாவமும் நானே!

பாடல்: பாட்டும் நானே பாவமும் நானே!
படம்: திருவிளையாடல் (ஆண்டு 1965)
பாடியவர்: T.M.செளந்தரராஜன்
பாடலாக்கம்: கவியரசர் கண்ணதாசன்
இசை: K.V. மகாதேவன்

பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைப்பேனே
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைப்பேனே
(பாட்டும்)

கூட்டும் இசையும் கூற்றின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ
கூட்டும் இசையும் கூற்றின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ
(பாட்டும்)

அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கமும் நானே
எதிலும் இயங்கும் இயக்கமும் நானே
என்னிசை நின்றால் அடங்கும் உலகே…
என்னிசை நின்றால் அடங்கும் உலகே…

நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா
ஆடவா எனவே ஆடவந்ததொரு
பாடும் வாயினையே மூடவந்ததொரு
(பாட்டும்)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum