Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சுக்கில் இவ்வளவு விஷயம் இருக்கா ?
Page 1 of 1 • Share
சுக்கில் இவ்வளவு விஷயம் இருக்கா ?
சுக்கு செய்யும் மருத்துவம்!
‘திரிகடுகம்’ எனும் நீதிநூல் “சுக்கு மிளகு திப்பிலி” என்ற மூன்று மருத்துவப் பொருட்களின் மருத்துவ குணங்களை உவமை காட்டி எழுதப்பட்ட ஒரு நூலாகும். திரிகடுகத்தில் முதலில் உள்ள பொருளான சுக்கு பற்றி நம் உமையாள் பாட்டி என்ன சொல்கிறாள்?! வாருங்கள் பாட்டியிடம் கேட்போம்!
“என்னப்பா இப்போதான் இந்த பாட்டி யாவகம் வந்ததா?! சரி… சரி… வா! வந்து உட்காரு.” என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்த மர நாற்காலியின் மேலிருந்த தாம்பாளத்தை அப்புறப்படுத்தி அதில் உட்காரச் சொல்லி உபசரித்தாள் உமையாள் பாட்டி.
“என்ன பாட்டி அது, தாம்பாளத் தட்டில்…?”
“ஓ அதுவா… அதுதான் சுக்கு!”
“சுக்குன்னா…?”
தொண்டைகட்டு, குரல்கம்மல், காதடைப்பு, கபம் இப்படி பல நோய்க்கு சுக்கு ஒரு நல்ல மருந்தா இருக்கு. “ஓ நீங்கல்லாம் சூப்பர் மார்க்கெட் ஜந்துக்கள்! உங்களுக்கு கலர் கலர் ப்ளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்டதை வாங்கிதான் பழக்கம். உங்களுக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்க நியாமில்லதான்” என்று சொல்லி நையாண்டி செய்தாள் பாட்டி.
“ஆமாம் பாட்டி! இப்பல்லாம் குழந்தைக கிட்ட பால் எதிலிருந்து கிடைக்கிறது’னு கேட்டா? பசுவிலிருந்து’ன்னு சொல்றதில்ல… பாக்கெட்ல இருந்துன்னுதான் சொல்றாங்க!”
“சரிதான்… காலம் எதைநோக்கி போய்கிட்டு இருக்குதோ, அப்பனே, முருகா! உனக்குத்தான் வெளிச்சம்…!” என்று பாட்டி சலித்துக்கொண்டாள்.
“சரி பாட்டி, நீங்க இந்த சுக்கு பத்தி இப்போ சொல்லுங்களேன், நான் தெரிஞ்சிக்குறேன்.”
“இஞ்சி உனக்கு தெரியுமா?”
“ஓ தெரியுமே!
இஞ்சி தின்ன குரங்கு மாதிரி ஏன் முழிக்கிற’னு எங்க கணக்கு வாத்தியார் அடிக்கடி சொல்லுவாரு.”
“ம்… அந்த இஞ்சி காஞ்சி போனா… அதுதான் சுக்கு.”
“ஓ அப்படியா?! சரி இதன் மருத்துவ குணம் என்னென்ன பாட்டி?”
“சுக்கிற்கு மிஞ்சிய மருந்துமில்ல… சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லனு சொல்லுவாங்க! ஒவ்வொன்னா சொல்றேன் கேட்டுக்கோ! தொண்டைகட்டு, குரல்கம்மல், காதடைப்பு, கபம் இப்படி பல நோய்க்கு சுக்கு ஒரு நல்ல மருந்தா இருக்கு. அஜீரணம், வயிற்று பொருமல், வாய்வு தொல்லைகளுக்கு சுக்கு பானம்(சுக்கு காபி) சிறந்த மருந்து. பசி உண்டாகாமல் இருப்பவர்க்கு பசி உண்டாக்க சுக்குப்பொடியை 3 விரலளவு எடுத்து அப்போது கறந்த பாலில் கலந்து கொடுத்து வரணும்.
….பிள்ளைபெற்ற தாய்க்கு கருப்பை இயல்புநிலை அடைய, பால்சுரப்பு தூண்ட, சுக்கும் சில மருத்துவப் பொருட்களும் சேர்த்து செய்யப்பட்ட ‘சௌபாக்கிய சுண்டி லேகியம்’ நல்ல பலன் தரும். இந்த சௌபாக்கிய சுண்டி லேகியம், சுக்கு பானம்… இதெல்லாம் நம்ம ஈஷா ஆரோக்கியா மருந்தகங்கள்ளயே கிடைக்குது. போய் வாங்கிக்கலாம்!”
“பாட்டி, சுக்கு பத்தி சும்மா சூப்பரா சொன்னீங்க பாட்டி. சரி…நான் கௌம்புறேன்!”
“இருப்பா, கொஞ்சம் சுக்கு காப்பி போடுறேன், குடிச்சிட்டு போ!” சொல்லிவிட்டு அடுப்பங்கரைக்குள் பாட்டி சுக்கு காப்பி போடச் சென்றாள்.
சுக்கின் மகத்துவம் அறிந்தபிறகு, அதுவரை எனக்குப் பிடிக்காமல் இருந்த சுக்கு காப்பியை அப்போது குடிக்க வேண்டும் என்ற ஆசை பிறந்தது.
குறிப்பு:
தொண்டைக்கட்டு மற்றும் குரல்கம்மலுக்கு: சுக்கை மென்று சாற்றை மட்டும் விழுங்க வேண்டும். சுக்கு, மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மையாக அரைத்து தொண்டையில் பூசி (வெளிப்புறமாக) வரலாம்.
குற்றிருமலுக்கு: சுக்கு மற்றும் அதிமதுரத்தை பொடி செய்து 1கிராம் அளவுகு தேனில் குழைத்துண்ணலாம்.
காதடைப்பு, கபம்: சிறு துண்டு சுக்கை சிதைத்து, துணியில் கட்டி காதினுள் வைத்தல்
பூரான்-தேள் கடி விஷம் முறிக்க: சுக்கு சிறு துண்டு, மிளகு 10, வெற்றிலை 1 ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மென்று தின்று ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்
சுக்குப்பற்று
நெற்றியிலட – தலைவலி தீரும்
கழுத்தின் மீதிட – தொண்டை வலி தீரும் (tansilitis)
புருவத்தின் மீதிட – அண்மைப் பார்வைக்குறை நீங்கும்
மூட்டின் மீதிட – மூட்டு வலி, வீக்கம் மறையும்
மருத்துவம்
‘திரிகடுகம்’ எனும் நீதிநூல் “சுக்கு மிளகு திப்பிலி” என்ற மூன்று மருத்துவப் பொருட்களின் மருத்துவ குணங்களை உவமை காட்டி எழுதப்பட்ட ஒரு நூலாகும். திரிகடுகத்தில் முதலில் உள்ள பொருளான சுக்கு பற்றி நம் உமையாள் பாட்டி என்ன சொல்கிறாள்?! வாருங்கள் பாட்டியிடம் கேட்போம்!
“என்னப்பா இப்போதான் இந்த பாட்டி யாவகம் வந்ததா?! சரி… சரி… வா! வந்து உட்காரு.” என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்த மர நாற்காலியின் மேலிருந்த தாம்பாளத்தை அப்புறப்படுத்தி அதில் உட்காரச் சொல்லி உபசரித்தாள் உமையாள் பாட்டி.
“என்ன பாட்டி அது, தாம்பாளத் தட்டில்…?”
“ஓ அதுவா… அதுதான் சுக்கு!”
“சுக்குன்னா…?”
தொண்டைகட்டு, குரல்கம்மல், காதடைப்பு, கபம் இப்படி பல நோய்க்கு சுக்கு ஒரு நல்ல மருந்தா இருக்கு. “ஓ நீங்கல்லாம் சூப்பர் மார்க்கெட் ஜந்துக்கள்! உங்களுக்கு கலர் கலர் ப்ளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்டதை வாங்கிதான் பழக்கம். உங்களுக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்க நியாமில்லதான்” என்று சொல்லி நையாண்டி செய்தாள் பாட்டி.
“ஆமாம் பாட்டி! இப்பல்லாம் குழந்தைக கிட்ட பால் எதிலிருந்து கிடைக்கிறது’னு கேட்டா? பசுவிலிருந்து’ன்னு சொல்றதில்ல… பாக்கெட்ல இருந்துன்னுதான் சொல்றாங்க!”
“சரிதான்… காலம் எதைநோக்கி போய்கிட்டு இருக்குதோ, அப்பனே, முருகா! உனக்குத்தான் வெளிச்சம்…!” என்று பாட்டி சலித்துக்கொண்டாள்.
“சரி பாட்டி, நீங்க இந்த சுக்கு பத்தி இப்போ சொல்லுங்களேன், நான் தெரிஞ்சிக்குறேன்.”
“இஞ்சி உனக்கு தெரியுமா?”
“ஓ தெரியுமே!
இஞ்சி தின்ன குரங்கு மாதிரி ஏன் முழிக்கிற’னு எங்க கணக்கு வாத்தியார் அடிக்கடி சொல்லுவாரு.”
“ம்… அந்த இஞ்சி காஞ்சி போனா… அதுதான் சுக்கு.”
“ஓ அப்படியா?! சரி இதன் மருத்துவ குணம் என்னென்ன பாட்டி?”
“சுக்கிற்கு மிஞ்சிய மருந்துமில்ல… சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லனு சொல்லுவாங்க! ஒவ்வொன்னா சொல்றேன் கேட்டுக்கோ! தொண்டைகட்டு, குரல்கம்மல், காதடைப்பு, கபம் இப்படி பல நோய்க்கு சுக்கு ஒரு நல்ல மருந்தா இருக்கு. அஜீரணம், வயிற்று பொருமல், வாய்வு தொல்லைகளுக்கு சுக்கு பானம்(சுக்கு காபி) சிறந்த மருந்து. பசி உண்டாகாமல் இருப்பவர்க்கு பசி உண்டாக்க சுக்குப்பொடியை 3 விரலளவு எடுத்து அப்போது கறந்த பாலில் கலந்து கொடுத்து வரணும்.
….பிள்ளைபெற்ற தாய்க்கு கருப்பை இயல்புநிலை அடைய, பால்சுரப்பு தூண்ட, சுக்கும் சில மருத்துவப் பொருட்களும் சேர்த்து செய்யப்பட்ட ‘சௌபாக்கிய சுண்டி லேகியம்’ நல்ல பலன் தரும். இந்த சௌபாக்கிய சுண்டி லேகியம், சுக்கு பானம்… இதெல்லாம் நம்ம ஈஷா ஆரோக்கியா மருந்தகங்கள்ளயே கிடைக்குது. போய் வாங்கிக்கலாம்!”
“பாட்டி, சுக்கு பத்தி சும்மா சூப்பரா சொன்னீங்க பாட்டி. சரி…நான் கௌம்புறேன்!”
“இருப்பா, கொஞ்சம் சுக்கு காப்பி போடுறேன், குடிச்சிட்டு போ!” சொல்லிவிட்டு அடுப்பங்கரைக்குள் பாட்டி சுக்கு காப்பி போடச் சென்றாள்.
சுக்கின் மகத்துவம் அறிந்தபிறகு, அதுவரை எனக்குப் பிடிக்காமல் இருந்த சுக்கு காப்பியை அப்போது குடிக்க வேண்டும் என்ற ஆசை பிறந்தது.
குறிப்பு:
தொண்டைக்கட்டு மற்றும் குரல்கம்மலுக்கு: சுக்கை மென்று சாற்றை மட்டும் விழுங்க வேண்டும். சுக்கு, மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மையாக அரைத்து தொண்டையில் பூசி (வெளிப்புறமாக) வரலாம்.
குற்றிருமலுக்கு: சுக்கு மற்றும் அதிமதுரத்தை பொடி செய்து 1கிராம் அளவுகு தேனில் குழைத்துண்ணலாம்.
காதடைப்பு, கபம்: சிறு துண்டு சுக்கை சிதைத்து, துணியில் கட்டி காதினுள் வைத்தல்
பூரான்-தேள் கடி விஷம் முறிக்க: சுக்கு சிறு துண்டு, மிளகு 10, வெற்றிலை 1 ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மென்று தின்று ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்
சுக்குப்பற்று
நெற்றியிலட – தலைவலி தீரும்
கழுத்தின் மீதிட – தொண்டை வலி தீரும் (tansilitis)
புருவத்தின் மீதிட – அண்மைப் பார்வைக்குறை நீங்கும்
மூட்டின் மீதிட – மூட்டு வலி, வீக்கம் மறையும்
மருத்துவம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சுக்கில் இவ்வளவு விஷயம் இருக்கா ?
சுக்கின் மகத்துவங்களை அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: சுக்கில் இவ்வளவு விஷயம் இருக்கா ?
சிறப்பான உடல் நல பகிர்வுக்கு நன்றி அண்ணா.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சுக்கில் இவ்வளவு விஷயம் இருக்கா ?
பாட்டியே வந்து தகவல் சொன்னதற்கு நன்றி!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?
» அட! வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா…?!!
» ஒ !! தேனில் இவ்வளவு விஷயம் இருக்கா ??
» புதினாவில் இவ்வளவு விஷயம் இருக்கா ?
» தக்காளியில் இவ்வளவு விஷயம் இருக்கா ?
» அட! வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா…?!!
» ஒ !! தேனில் இவ்வளவு விஷயம் இருக்கா ??
» புதினாவில் இவ்வளவு விஷயம் இருக்கா ?
» தக்காளியில் இவ்வளவு விஷயம் இருக்கா ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|