தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


செல்போன் மோகம்

View previous topic View next topic Go down

செல்போன் மோகம்  Empty செல்போன் மோகம்

Post by முழுமுதலோன் Fri Apr 15, 2016 4:57 pm

கடந்த காலங்களில் தொலைப்பேசியை பார்ப்பதே அரிதான, அதிசயமான ஒன்றாக இருந்தது. அபரிமிதமான விஞ்ஞான வளர்ச்சியின் வெளிப்பாடாக செல்போன் கண்டுபிடிக்கப்பட்டது. படிப்படியாக உலகையே செல்போன் கலாச்சாரம் வியாபித்தது.

வசதி படைத்தவர்கள் மட்டுமே வாங்க முடியும் என்ற நிலையில் தாறுமாறான விலையுடன் இந்தியாவிற்குள்ளும் செல்போன் களமிறங்கியது.

ஆரம்பத்தில் தடிமனான வடிவில் அதிக எடையுடன் வெளிவந்த செல்போன்கள் ரூ.20 ஆயிரம், ரூ.30 ஆயிரம் என விற்பனையானது. இன்கமிங் அழைப்புகளுக்கு கூட கட்டணங்கள் வசூலித்து கணக்கிலடங்கா லாபத்தை செல்போன் நிறுவனங்கள் கபளீகரம் செய்தன.காலப்போக்கில் படிப்படியாக நடுத்தரவாசிகளும் வாங்கும் அளவிற்கு விலை குறைந்தன. இந்தியாவின் தேவையை உணர்ந்த கொரியா, சீனா போன்ற நாடுகள் தங்களது தயாரிப்பு செல்போன்களை நினைத்து பார்க்க முடியாத குறைந்த விலையில் அளித்தன.

இதன் விளைவு தற்போது ரூ.500க்கும், ரூ.1000க்கும் செல்போனை கூவி கூவி விற்கும் நிலை வந்து விட்டது. செல்போன் தயாரிப்பு நிறுவனங்களும், இணைப்பு வழங்கும் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு பெருகியதால் இன்று செல்போன் இல்லாத நபர்களே இல்லை என்ற இலக்கை இந்தியா நிறைவு செய்து வருகிறது.

கூலித்தொழிலாளி முதல் தொழிலதிபர்கள் வரை அனைவரது கையிலும் அவரவர் வசதிக்கேற்ற செல்போன் அணிவகுத்துள்ளது. ஒரு கட்டத்தில் சிம்கார்டு பெறுவதற்கு ஏஜென்சிகளில் பதிவு செய்து வாரக்கணக்கில் காத்திருந்த நிலைமை மாறி இன்று குறிப்பிட்ட தொகைக்கு டாக் டைமும் கொடுத்து அத்துடன் சிம்கார்டையும் இலவசமாக நிறுவனங்கள் தருகின்றன.

வாடிக்கையாளர்களை தங்களது நிறுவன சேவையை பயன்படுத்த செய்தவதற்கும், ஈர்ப்பதற்காகவும் இதுபோன்ற சலுகைகளை வாரி வாரி வழங்குகின்றனர்.

தற்போது கோடை விடுமுறை துவங்கி விட்ட நிலையில் உறவினர்கள், நண்பர்களுடன் சரளமாக பேசிக்கொள்ள புல் டாக்டைம், இலவச எக்ஸ்ட்ரா டாக்டைம், இலவச எஸ்எம்எஸ் பேக்கேஜ், பாதி கட்டணம் என செல்போன்களுக்கு கணக்கிலடங்காத எஸ்எம்எஸ் வந்த வண்ணம் இருக்கிறது.

வாடிக்கையாளர்களை கவருவதற்காக only 4 u என்ற வாசகத்து டன் ரீசார்ஜ் வசூல் தந்திரத்தை கட்டவிழ்த்து விடுகின்றனர்.

இதன் காரணமாக ஆண், பெண் பாகுபாடின்றி மணிக்கணக்கில் செல்போன் பேச்சிலேயே மூழ்கி கிடக்கின்றனர். குறிப்பாக இளைஞர், இளம்பெண்கள் செல்போன்களுக்கு ஓய்வு அளிப்பதே இல்லை. சாலையில் நடக்கும் போதும், சாப்பிடும் போதும், அன்றாட பணிகளை கவனிக்கும் போதும் அவர்களது செவியையும், கையையும் செல்போன் ஆக்கிரமித்து கொள்கிறது. மீதி நேரத்தில் எஸ்எம்எஸ் டைப் செய்வது, கேம்ஸ் விளையாடுவதில் கவனம் செலுத்துகின்றனர். சிலர் கழிவறைக்குள் இருந்தும் கடலை போடுகின்றனர்.

உடல் நலத்துக்கு ஊறு விளைவிக்கும் எதிர்கால ஆபத்தை உணராமல் அத்தியாவசியத்திற்காக மட்டும் பயன்படுத்த வேண்டிய தகவல் தொழில்நுட்பத்துக்கு முழு நேர அடிமையாகி விடுகின்றனர்.

செல்போன் இல்லாவிட்டால் உலகமே இல்லை என்ற உச்ச போதை நிலைக்கு இளைஞர் பட்டாளம் சென்றுவிட்டது. செல்போன் கதிர்கள் இதயத்தை பாதிக்கும், செவித்திறனை மந்தமாக்கும், மூளையின் செயல்திறனை முடக்கும் என்ற மருத்துவர்களின் எச்சரிக்கைகளை காதில் வாங்கிக்கொள்வதே இல்லை.

செல்போன் அதிகம் பயன்படுத்துவதால் உடல்நலம் பாதிக்கப்படுவது ஒரு புறம் இருந்தாலும் பலரது வாழ்க்கையை சீரழித்துள்ளது என்பது வேதனையான விஷயம். தவறான விஷயங்களை படம் பிடித்தல், ஆபாச படங்கள் பார்த்தல், ஆபாச எஸ்எம்எஸ் அனுப்புதல், செல்போன் சில்மிஷங்களில் ஈடுபடுதல் போன்றவற்றால் கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் இளைஞர் சமுதாயம் சீரழிந்து வருகிறது.

ஆக்கப்பூர்வமான விஷயங்கள் பல இருந்தாலும் அழிவுப்பாதையையே இளைஞர்கள் விரும்புவது வருத்தத்திற்குரியது. இவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த கல்வி நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் முன் வர வேண்டும். செல்போன் இதயத்தை மட்டுமல்ல மூளையையும் விட்டு வைக்காது.

விழிப்புணர்வு இல்லாவிடில் வேதனை நிச்சயம்.

மாலைமலர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

செல்போன் மோகம்  Empty Re: செல்போன் மோகம்

Post by ஸ்ரீராம் Tue Apr 26, 2016 12:40 pm


ஆக்கப்பூர்வமான விஷயங்கள் பல இருந்தாலும் அழிவுப்பாதையையே இளைஞர்கள் விரும்புவது வருத்தத்திற்குரியது. இவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த கல்வி நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் முன் வர வேண்டும். செல்போன் இதயத்தை மட்டுமல்ல மூளையையும் விட்டு வைக்காது.

நல்ல அலசல். அருமை அருமை

சிறப்பான கட்டுரை பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

செல்போன் மோகம்  Empty Re: செல்போன் மோகம்

Post by செந்தில் Tue Apr 26, 2016 8:11 pm

கைதட்டல் விழிப்புணர்வு தரும் பகிர்வு கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

செல்போன் மோகம்  Empty Re: செல்போன் மோகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum