தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காதல் கவிதைகள் பல அதில் சில

View previous topic View next topic Go down

காதல் கவிதைகள் பல அதில் சில  Empty காதல் கவிதைகள் பல அதில் சில

Post by பூ.சசிகுமார் Mon Nov 26, 2012 11:59 pm

கவிதை எழுத
என்னை படைத்த பிரம்மன்
கவிதையாகவே
உன்னை படைத்து விட்டான்..!
அன்பே!


எழுதிய கவிதைகள்
அனைத்தும்
காத்திருப்பது
விற்பனைக்காக அல்ல!
விலையற்ற
உன்
ஒரு சில
பார்வைக்காக!...


இணைவோம் இணைவோமென்று
ஏதோ ஓர் நம்பிக்கையில்
இறுதி வரை
வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும்
இரு தண்டவாளங்களாய்…
பாதைகள் மாறாது
பயணங்கள் தொடர்ந்தாலும்
இணையாத தண்டவாளங்களாய்
இருவர் நிலையும்!



பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

காதல் கவிதைகள் பல அதில் சில  Empty Re: காதல் கவிதைகள் பல அதில் சில

Post by பூ.சசிகுமார் Tue Nov 27, 2012 12:00 am

என் துன்பம் கண்டு நீ
கலங்கி விடாதே..
அதை விட பெரிய துன்பம்
எனக்கு வேறில்லை.........

என் அன்பிற்கு சொந்தமான நீ
என்னருகில் இருந்த போது இருக்கும்
சந்தோசத்தை விட
தூரமாக இருக்கும் போது. .
பல மடங்கு அன்பு உன்னில் எனக்கு..

ஆயிரம் அழகிகளை சேர்த்தாலும்
ஈடு செய்ய முடியாதது
உன் அழகு!
ஆயிரம் ஜென்மங்கள் பிறந்திட்டாலும்
நெஞ்சை விட்டு நீங்காது
உன் நினைவு!
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

காதல் கவிதைகள் பல அதில் சில  Empty Re: காதல் கவிதைகள் பல அதில் சில

Post by பூ.சசிகுமார் Tue Nov 27, 2012 12:03 am

என் அன்பில் அடிமையாக
ஆயிரம் இதயங்கள் இருந்தாலும்
என் இதயம் அடிமையானது - உன்
அன்பில் மட்டும் தான்


யாகம் செய்தாலும் வருவதில்லை மழை
ஆனால் உன்னை நினைத்தாலே போதும்
அடுத்த நொடி என் கண்ணில் மழை!!!

கண்ணாடியாய் தான் வாழ்ந்து வந்தேன்!
பார்க்கும் பெண்களை
எல்லாம் ரசித்து வந்தேன்!
உன்னை பார்த்த நொடி
உடைந்து போனேன்!
உந்தன் உருவத்தை மட்டும்
உள் வாங்கி கொண்டு!
பார்த்தது பலரை!
பாதிந்தது நீ மட்டும் தான்!
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

காதல் கவிதைகள் பல அதில் சில  Empty Re: காதல் கவிதைகள் பல அதில் சில

Post by பூ.சசிகுமார் Tue Nov 27, 2012 12:05 am

என்னையும் மீறி
என்னை நேசிக்க நீ இருந்தால்
உலகையும் மீறி
உன் பின்னால் வர நான் தயார்....


உன்னை விரும்புகிற வரை
நீ நேசித்திடு...!
உன்னை வெறுக்கிற வரை
இன்னும் அதிகமாக நேசித்திடு...!
அதனால் தான் அன்பே!
உன்னை நான்
அதிகமாக நேசிக்கின்றேன்..!



கடல் இல்லை என்றால்' அலை இல்லை,
காற்று இல்லை என்றால்' புயல் இல்லை,
கதிரவன் இல்லை என்றால்' ஒளி இல்லை,
அன்பே’
நீ இல்லை என்றால் நான் இல்லை…



நாங்கள் நதிக்கரை
மணல் மீது நடந்ததில்லை
கடல் கரைதனில் கால் தடம்
பதித்ததில்லை.!
பூக்கள் பூத்துக்குளுங்கும்
பூங்காவிற்க்குள் புகுந்ததில்லை..!
திரையரங்கின் இருட்டிற்க்குள்
முத்தமிட்டுக் கொண்டதில்லை.!
யாருமில்லா இடத்தில்
சந்தித்து பேசிக்கொண்டதில்லை
இதுவரை விரல்களால் கூட
தொட்டுக்கொள்ளாமல்
விழிகளால் மட்டும்
தொட்டுக்கொண்டு
அவளுக்குள் நானும்
எனக்குள் அவளும் வாழும்
புனிதமான காதல் தான் இது...!
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

காதல் கவிதைகள் பல அதில் சில  Empty Re: காதல் கவிதைகள் பல அதில் சில

Post by பூ.சசிகுமார் Tue Nov 27, 2012 12:06 am

அசையாமல் காற்று..,
அலையாமல் கடல்..,
ஓடாமல் நதி..,
பூக்காமல் மலர்..
இவை எல்லாம்
சாத்தியமென்றால்..
நீ இல்லாது
நானும் சாத்தியம் தான்..!




நடந்து செல்லும் பாதையில்
என் இதயத்தை விரிக்கிறேன்
உன் கால்களை அதில் வைத்து செல்
மண்ணில் உன் கால் தடம் அழிந்து விடும்
என் இதயத்தில் பதிந்து விடும்


மலர் போன்ற உன் இதயத்துக்குள்
வாசமாக பிறக்க ஆசை படுகிறேன்
நீ உதிரும் போது
உன்னோடு நானும் உதிர்ந்து போக....
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

காதல் கவிதைகள் பல அதில் சில  Empty Re: காதல் கவிதைகள் பல அதில் சில

Post by பூ.சசிகுமார் Tue Nov 27, 2012 12:08 am

தேயும் நிலவை விட
வளரும் நிலவுக்கு தான் ஒளி அதிகம்..,
பார்த்துக்கொண்டிருக்கும் உறவை விட
காத்துக்கொண்டிருக்கும் உறவுக்குத்தான்
பாசம் அதிகம்!!!!


நீ என்னோடு பேசிய,
ஒவ்வொரு வார்த்தைகளும்
எனக்குள் ஒளிந்திருந்து,
கவிதைகளாய் மலர்கிறது...


தொலை தூரத்தில்
உன் குரல்
தொலைபேசியில்
கேட்கையில் தொலைந்து
போகிறது மனது திசை
அறியாமலே
உன்னை தேடி ..



நான் கடவுளிடம் கேட்டு
கொடுக்காத வரங்கள் நிறைய.....
ஆனால்!!!
நான் கேட்காமலே
''கடவுள்'' தந்த வரம் நீ......!
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

காதல் கவிதைகள் பல அதில் சில  Empty Re: காதல் கவிதைகள் பல அதில் சில

Post by பூ.சசிகுமார் Tue Nov 27, 2012 12:11 am

என்னவள் கேட்கிறாள்
என்னிடம்.............
என்னை உனக்கு எவ்வளவு
பிடிக்குமென்று.........
எப்படி புரிய வைப்பேன்
அவளுக்கு..........
அவள் மேல் உள்ள அன்பை
அளப்பதற்கு அளவு கோலே
இல்லை என்பதை............


உன்னை போல
ஒரு
பெண் குழந்தையை
பெற்றுவிடதே !
என்னை போல
பல
கிறுக்கன்கள் பிறக்க
கூடும் ..



அன்பே நான் உன் குழந்தை அல்லவா..???
நான் எந்த தப்பு செய்தாலும் என்னை மன்னித்து விடு
ஆனால் என்னை வெறுத்து ஒதுக்கதே
அடுத்த நொடி என் உயிர் போய் விடும்...!!


இதயத்தை விட்டு
என் இறுதி மூச்சு போகும் போது கூட‌
உன் சுவாசத்தை உரசிச்செல்லும்
தூரத்தில் இருக்கும் வரம் வேண்டும்...
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

காதல் கவிதைகள் பல அதில் சில  Empty Re: காதல் கவிதைகள் பல அதில் சில

Post by பூ.சசிகுமார் Tue Nov 27, 2012 12:16 am

வானத்தில் லட்ச்ச நட்சத்திரம்
இருந்தாலும் நிலாவை மட்டுமே
ரசிக்கிறோம் அதேபோல் தான் பெண்ணே
இந்த பூமியில் எத்தனை பெண்கள்
இருந்தாலும் என் கண்கள்
உன்னை மட்டுமே ரசிக்கிறது............


அன்பே
நிலவு பிடிக்கவில்லை
உந்தன் நினைவு பிடித்திருக்கின்றது
மலர்கள் பிடிக்கவில்லை
உந்தன் மனம் பிடித்திருக்கின்றது
குயில் பிடிக்கவில்லை
உந்தன் பார்வை பிடித்திருக்கின்றது
வார்த்தைகள் பிடிக்கவில்லை
உந்தன் கவிதை மட்டுமே
பிடித்திருக்கின்றது
உலகம் பிடிக்கவில்லை
உன்னை மட்டுமே பிடித்திருக்கிறது



உணர்ந்தேன் நான்..
உனது
கனவில்
நினைவில்
உருவில் ....
என்றும் நானே இருப்பேன் என்று
நீ தந்த முதல் முத்தத்தில்...

பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

காதல் கவிதைகள் பல அதில் சில  Empty Re: காதல் கவிதைகள் பல அதில் சில

Post by பூ.சசிகுமார் Tue Nov 27, 2012 12:17 am

பிடிக்கவில்லை என்று நீ சொன்னால். .
உயிர் விடுவேன் உன் கண் முன்னால். !
நான் உயிர் விடுவதும் உனக்கு
பிடிக்கவில்லை என்றால் என்னே செய்வேன். !


அவள் என் மார்பில்
தலை சாய்ந்து தூங்குகிறாள்,
ஒரு பக்கம் சந்தோசம் என்றாலும்,
ஒரு பக்கம் கவலையாய் இருக்கிறது,
எங்கே என் இதய துடிப்பு
அவளை எழுப்பி விடுமோ என்று......


என் இதயத்தின் துடிப்பு
இருமடங்கு ஆனதாக உணர்கிறேன்
எனக்கான தனிமைகளை உன்
நினைவுகள் ஆக்கிரமித்து கொள்கின்றன
எப்படி இப்படி மாறி போனேன்
என்ற வினாவிற்கும்
என்னிடம் விடை இல்லை .........¦¦¦


என் கவிதையை படித்த அனைவரும்
கேட்கிறார்கள்
யார் அந்த அவள் என்று.
நானோ
அந்தப்பெயரில் எந்த புயலும் இன்னும்
என்னை தாக்கவில்லை என்றே
சொல்லி வருகிறேன்
யாரிடம் சொல்வது
நீ தான் அந்த புயலென்று. !
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

காதல் கவிதைகள் பல அதில் சில  Empty Re: காதல் கவிதைகள் பல அதில் சில

Post by பூ.சசிகுமார் Tue Nov 27, 2012 12:19 am

இறந்த பின்பு
சொர்க்கத்திற்குப்போக
வேண்டுமா
நரகத்திற்குப்
போக வேண்டுமா
என்றால்
உன் மனதிற்குள்
போக வேண்டும்
என்பேன் ...


பெண்ணே
பிரமனுக்குஎவ்வளவு
லஞ்சம் கொடுத்தாய்
எங்களை
மண் கலவையில் செய்து
உன்னை மட்டும்
பொன் கலவையில்
செதுக்கி இருக்கிறான்



சேர முடியாது என தெரிந்தும்
தண்டவாளம் தொடர்ந்து
பயணிக்கிறது........
உன்னோடு நான் சேர முடியாது
என தெரிந்தும் ....
காதலோடு பயணிக்கிறேன் .....
உன் நினைவுகளை சுமந்து ..
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

காதல் கவிதைகள் பல அதில் சில  Empty Re: காதல் கவிதைகள் பல அதில் சில

Post by பூ.சசிகுமார் Tue Nov 27, 2012 12:21 am

பரிசு கொடுத்து தான் என் அன்பை
வெளிபடுத்த வேண்டும் என்றால்
என் அன்பிற்கு இணையான பொருளை
இவ் உலகில் நான் பார்த்ததில்லை !!!!!!!!



விண்ணில் ஒரே நிலவு இருக்க வேண்டும்
என்பதற்காகவோ என்னவோ
உன்னை இறைவன்
மண்ணில் படைத்தது விட்டான்..


உன்னை பற்றி கவிதைகள்!..
எழுத எனது பத்து விரல்கள் போதவில்லை,
அதனால் தான் பதினொராவது விரலாய்!..
பேனாவை பயன்படுத்துகிறேன்...


மரணத்தை கூட
காதல் செய்வேன்... அது
உன் வடிவில்
வந்தால்...


என் உயிர் போனால்
உனக்கு அழுகை வருமா? தெரியாது...
ஆனால் உனக்கு அழுகை வந்தாலே
என் உயிர் போயி விடும்.


பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

காதல் கவிதைகள் பல அதில் சில  Empty Re: காதல் கவிதைகள் பல அதில் சில

Post by பூ.சசிகுமார் Tue Nov 27, 2012 12:23 am

நெற்றியில் தரும் ஒற்றை முத்தம்..
சுகத்தில் சாய உன் மடி..
சோகத்தில் சாய உன் மார்பு..
தலை கோதும் உன் விரல்கள்..
இது போதும் எனக்கு

உன் கண்ணீரை துடைப்பதுக்கு
என் கைகள் துடிக்கின்றன,
ஆனால் முடியவில்லை
நாமிரு வரும் வெவ்வேறு
இடத்தில் ...



உன்னை நினைக்காமல்
எப்படி இருபேன் அதைகூட
என்னால் நினைக்க
முடியவில்லை..


விடிகின்ற‌ பொழுதெல்லாம்
உன்ன‌ருகில் ‌விடிய‌ வேண்டும்!
பிரிகின்ற‌ என் உயிரும்
உன்ம‌டியில் பிரிய‌ வேண்டும்!
வ‌ர‌ம் வேண்டும் தேவ‌தையே...
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

காதல் கவிதைகள் பல அதில் சில  Empty Re: காதல் கவிதைகள் பல அதில் சில

Post by பூ.சசிகுமார் Tue Nov 27, 2012 12:28 am

என் துன்பத்தை மட்டும்
உன்னிடம் இருந்து
மறைப்பேன்
நீ துயரப்பட கூடாது
என்பதற்காக...

எனக்கு மட்டுமே நீ வேண்டும்
நீ இல்லையென்றால்
இறுதியென்பது எனக்கு
இப்போதே வேண்டும்


விண்ணில் நிலவு இல்லாத
நாட்கள் உண்டு...!
மண்ணில் மழை பொழியாத காலமும் உண்டு...!
ஆனால், என்னுள் உன் நினைவு இல்லாத
நொடிகள் இல்லை...!
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

காதல் கவிதைகள் பல அதில் சில  Empty Re: காதல் கவிதைகள் பல அதில் சில

Post by பூ.சசிகுமார் Tue Nov 27, 2012 12:33 am

ஏழேழு ஜென்மம் வாழும் வரம் வேண்டாம்
ஒரு நிமிடம் உன் தோல் சாய்ந்து
உயிர் விடும் வரம் வேண்டும்

தருவாயா என் உயிரே


உன் உயிருடன்
உறவாக
கலந்து விட்டேன்
இனியும் வேண்டுமோ
ஒரு பிறவி!


கவிதை எழுதி எழுதி
களைத்து போய் விட்டேன்
என்னவளை பற்றியும்
என் காதலை பற்றியும் .....
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

காதல் கவிதைகள் பல அதில் சில  Empty Re: காதல் கவிதைகள் பல அதில் சில

Post by பூ.சசிகுமார் Tue Nov 27, 2012 12:37 am

என் மனதில் உள்ள ஏக்கம் எதிர் பார்ப்புகள் அனைத்தையும் அழகாக கவிதையாக்கிய என் தோழனே உனக்கு நன்றிகள் பல
நன்றி: சுதர்ஷன்

தொடர்ந்து பதிவு செய்ய இங்கு உள்ள நண்பர்களின் ஆதரவும் நிர்வாகத்கின் அனுமதியும் வேண்டும்

அன்புடன்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

காதல் கவிதைகள் பல அதில் சில  Empty Re: காதல் கவிதைகள் பல அதில் சில

Post by muruganandham Tue Nov 27, 2012 2:27 pm

முடியல ............... சூப்பர்
muruganandham
muruganandham
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 5

Back to top Go down

காதல் கவிதைகள் பல அதில் சில  Empty Re: காதல் கவிதைகள் பல அதில் சில

Post by முரளிராஜா Tue Nov 27, 2012 2:29 pm

muruganandham wrote:முடியல ...............
நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காதல் கவிதைகள் பல அதில் சில  Empty Re: காதல் கவிதைகள் பல அதில் சில

Post by ரானுஜா Tue Nov 27, 2012 2:39 pm

சூப்பரு...
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

காதல் கவிதைகள் பல அதில் சில  Empty Re: காதல் கவிதைகள் பல அதில் சில

Post by முரளிராஜா Tue Nov 27, 2012 2:42 pm

பாதைகள் மாறாது
பயணங்கள் தொடர்ந்தாலும்
இணையாத தண்டவாளங்களாய்
இருவர் நிலையும்!
இரண்டு தண்டவாளமும் இணைஞ்சா இரயில் கவுந்துடும் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காதல் கவிதைகள் பல அதில் சில  Empty Re: காதல் கவிதைகள் பல அதில் சில

Post by ஸ்ரீராம் Tue Nov 27, 2012 2:46 pm

முரளிராஜா wrote:
பாதைகள் மாறாது
பயணங்கள் தொடர்ந்தாலும்
இணையாத தண்டவாளங்களாய்
இருவர் நிலையும்!
இரண்டு தண்டவாளமும் இணைஞ்சா இரயில் கவுந்துடும் நக்கல்

நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு

கவிதை அருமை தம்பி நீ எழுதினியா????
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

காதல் கவிதைகள் பல அதில் சில  Empty Re: காதல் கவிதைகள் பல அதில் சில

Post by பூ.சசிகுமார் Tue Nov 27, 2012 3:27 pm

ஸ்ரீராம் wrote:
முரளிராஜா wrote:
பாதைகள் மாறாது
பயணங்கள் தொடர்ந்தாலும்
இணையாத தண்டவாளங்களாய்
இருவர் நிலையும்!
இரண்டு தண்டவாளமும் இணைஞ்சா இரயில் கவுந்துடும் நக்கல்

நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு

கவிதை அருமை தம்பி நீ எழுதினியா????


என் மனதில் உள்ள ஏக்கம் எதிர் பார்ப்புகள் அனைத்தையும் அழகாக கவிதையாக்கிய என் தோழனே உனக்கு நன்றிகள் பல
நன்றி: சுதர்ஷன்

தொடர்ந்து பதிவு செய்ய இங்கு உள்ள நண்பர்களின் ஆதரவும் நிர்வாகத்கின் அனுமதியும் வேண்டும்

அன்புடன்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

காதல் கவிதைகள் பல அதில் சில  Empty Re: காதல் கவிதைகள் பல அதில் சில

Post by பூ.சசிகுமார் Tue Nov 27, 2012 3:28 pm

அனைவருக்கும் நன்றி கள்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

காதல் கவிதைகள் பல அதில் சில  Empty Re: காதல் கவிதைகள் பல அதில் சில

Post by முரளிராஜா Tue Nov 27, 2012 3:29 pm

அனுமதி நிச்சயம் உண்டு உயிர் நண்பேன்டா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காதல் கவிதைகள் பல அதில் சில  Empty Re: காதல் கவிதைகள் பல அதில் சில

Post by பூ.சசிகுமார் Tue Nov 27, 2012 3:31 pm

முரளிராஜா wrote:அனுமதி நிச்சயம் உண்டு உயிர் நண்பேன்டா


நன்றி அண்ணா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

காதல் கவிதைகள் பல அதில் சில  Empty Re: காதல் கவிதைகள் பல அதில் சில

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum