Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நூற்றாண்டு விழா நாயகன் - பி.யு. சின்னப்பா
Page 1 of 1 • Share
நூற்றாண்டு விழா நாயகன் - பி.யு. சின்னப்பா
மே 6, 1916ல் பிறந்த நடிகர் பி.யு.சின்னப்பாவின்
நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
–
அன்று, புதுக்கோட்டையில் உள்ள சாமியார் மடத்தின்
வாசலில், கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து,
கோட்டும், சூட்டுமாக ஒரு மனிதர் இறங்கினார்.
அவர் தேடி வந்த சாமியார், மூலையில் மவுனமாக
அமர்ந்திருந்தார். அவர் கையை பிடித்து, ‘சின்னசாமி…
நீ இருக்க வேண்டிய இடம் இந்த சாமியார் மடம் இல்ல;
கலை உலகம்.
–
மேன் இன் த அயர்ன் மாஸ்க் என்ற கதைய தழுவி,
உத்தம புத்திரன்ங்கிற படத்தை எடுக்கப் போறேன்.
அதில், நீ தான், கதாநாயக மற்றும் வில்லன்.
என்னோடு புறப்பட்டு சேலம் மாடர்ன் தியேட்டர்சுக்கு
வா…’ என்றார், ஐரோப்பிய உடையில் இருந்த அந்த
மனிதர்.
–
சின்னசாமி என்று அழைக்கப்பட்டவர், பி.யு.சின்னப்பா;
அவரை அழைத்தவர்,டி.ஆர்.சுந்தரம்!
–
முதல் படத்தில் வில்லனாக நடித்த பி.யு.சின்னப்பா,
அடுத்தடுத்த படங்களில், சரியான வேடங்கள்
கிடைக்காததால், விரக்தி அடைந்து, சாமியார் ஆகி,
புதுக்கோட்டை சாமியார் மடத்தில் தஞ்சம் புகுந்தார்.
அவர் சாமியாராக நீடித்து இருந்தால், தமிழகம்
உன்னதமான ஒரு கலைஞனை இழந்திருக்கும்.
நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
–
அன்று, புதுக்கோட்டையில் உள்ள சாமியார் மடத்தின்
வாசலில், கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து,
கோட்டும், சூட்டுமாக ஒரு மனிதர் இறங்கினார்.
அவர் தேடி வந்த சாமியார், மூலையில் மவுனமாக
அமர்ந்திருந்தார். அவர் கையை பிடித்து, ‘சின்னசாமி…
நீ இருக்க வேண்டிய இடம் இந்த சாமியார் மடம் இல்ல;
கலை உலகம்.
–
மேன் இன் த அயர்ன் மாஸ்க் என்ற கதைய தழுவி,
உத்தம புத்திரன்ங்கிற படத்தை எடுக்கப் போறேன்.
அதில், நீ தான், கதாநாயக மற்றும் வில்லன்.
என்னோடு புறப்பட்டு சேலம் மாடர்ன் தியேட்டர்சுக்கு
வா…’ என்றார், ஐரோப்பிய உடையில் இருந்த அந்த
மனிதர்.
–
சின்னசாமி என்று அழைக்கப்பட்டவர், பி.யு.சின்னப்பா;
அவரை அழைத்தவர்,டி.ஆர்.சுந்தரம்!
–
முதல் படத்தில் வில்லனாக நடித்த பி.யு.சின்னப்பா,
அடுத்தடுத்த படங்களில், சரியான வேடங்கள்
கிடைக்காததால், விரக்தி அடைந்து, சாமியார் ஆகி,
புதுக்கோட்டை சாமியார் மடத்தில் தஞ்சம் புகுந்தார்.
அவர் சாமியாராக நீடித்து இருந்தால், தமிழகம்
உன்னதமான ஒரு கலைஞனை இழந்திருக்கும்.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: நூற்றாண்டு விழா நாயகன் - பி.யு. சின்னப்பா
-
மதுரை, ‘ஒரிஜனல் பாய்ஸ் கம்பெனி’ என்ற நாடக
மன்றம் தந்த கலைமாமணி, பி.யு. சின்னப்பா, சிறந்த
பக்திமான். ‘பக்தி கொண்டாடுவோம்…’ என்ற பாடலை
பாடிய படி தான், மேடையில் ஏறுவார்.
மேடையில் அவர் பாடிய தத்துவ பாடல்களும்,
ஏற்று நடித்த புராண கதாபாத்திரங்களும் அவருள்
ஆன்மிக உணர்வுகளை, தட்டி எழுப்பியதால்,
சினிமாவில், புகழ் அடைந்த பின்பும் கூட, ஆண்டுக்கு
ஒருமுறை என, தொடர்ந்தாற் போல், 40 நாட்கள்
மவுன விரதம் இருப்பார்.
கிருஷ்ணபக்தி படத்தில், சில காட்சிகளில், இவர்
முகத்தில் அருள் ஒளி வீசுவதை பார்க்கலாம்.
ஆண்டவனை பற்றி பாடும் போது, மெய் மறந்து
பாடுவார்.
தமிழ் சினிமாவில், முதன் முதலில் மகாகவி
பாரதியின் பாடலை பாடியவர், சின்னப்பா.
‘செந்தமிழ் நாடெனும் போதினிலே… இன்ப தேன்
வந்து பாயுது காதினிலே…’ என்ற பாடலை,
உத்தமபுத்திரன் படத்தில் பாடினார்.
எப்போதும், கதர் ஆடை அணியும் இவர், காங்கிரஸ்
அனுதாபி. பாரதியாருக்கு மணிமண்டபம் கட்ட, கல்கி
நிதி திரட்டிய போது, 200 ரூபாய் கொடுத்தார்.
அந்நாளில் அது பெரிய தொகை!
பாடுவதுடன், நடிப்பாற்றல், சிலம்பம் மற்றும் சுருள்
பட்டா போன்ற வீர விளையாட்டுகளில் தேர்ச்சி பெற்று,
மற்ற நடிகர்கள் எட்ட முடியாத உயரத்தில் இருந்தவர்,
சின்னப்பா.
ஆர்யமாலா படத்தில், சின்னப்பா, சிலம்பம்
ஆடுவதையும், ஜகதலப் பிரதாபன் படத்தில், மல்யுத்தம்
செய்யும் காட்சிகளின் மூலம் இதை அறியலாம்.
பிரித்விராஜன் படத்தில், இவர் வாள் வீசும் காட்சிகள்
வெகு சிறப்பாக அமைந்திருக்கும்.
இப்படம், புனே தேசிய திரைப்பட காப்பகத்தில்
பாதுகாக்கப் படுகிறது.
–
மங்கையர்க்கரசி படத்தில் சிலம்பம் ஆடும் காட்சிகள்
வெட்டப்பட்டு விட்டன.
மஹாமாயா, குபேர குசேலா, தயாளன், சவுக்கடி
சந்திர காந்தா மற்றும் யயாதி போன்ற படங்கள்
இன்று இல்லை என்றாலும், கண்ணகி, ஆர்யமாலா
மற்றும் ஜகதலப்பிரதாபன் போன்ற படங்கள், கால
வெள்ளத்தை நீந்தி, கரை சேர்ந்து விட்டன.
–
——————–
எஸ்.குரு
வாரமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா - எடப்பாடிக்கு செக் வைத்த நீதிமன்றம்
» இந்திய வீராங்கனை இனாயத் கானின் நூற்றாண்டு விழா
» காதலர் தினம் தமிழர் விழா? 2500 ஆண்டுகளுக்கு முன்பே காதல் விழா கொண்டாடிய தமிழர்கள்.. '
» 21- ம் நூற்றாண்டு விஞ்ஞானத்திற்க்கு நம்பிக்கையளிக்கும் தமிழ் மெய்ஞ்ஞானம்
» தமிழ் சினிமா 2016: ‘வர்த்தக நாயகன்’ சிவகார்த்திகேயன்!
» இந்திய வீராங்கனை இனாயத் கானின் நூற்றாண்டு விழா
» காதலர் தினம் தமிழர் விழா? 2500 ஆண்டுகளுக்கு முன்பே காதல் விழா கொண்டாடிய தமிழர்கள்.. '
» 21- ம் நூற்றாண்டு விஞ்ஞானத்திற்க்கு நம்பிக்கையளிக்கும் தமிழ் மெய்ஞ்ஞானம்
» தமிழ் சினிமா 2016: ‘வர்த்தக நாயகன்’ சிவகார்த்திகேயன்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|