தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முயற்சி !! முயற்சி !!

View previous topic View next topic Go down

முயற்சி !! முயற்சி !! Empty முயற்சி !! முயற்சி !!

Post by முழுமுதலோன் Fri May 06, 2016 4:13 pm

சுறுசுறுப்பிற்கு எப்பொழுதுமே எறும்பை உதாரணமாகச் சொல்வோம். எறும்பு படு சுறுசுறுப்புதான். எதில் சுறுசுறுப்பு? தனக்கெனச் செய்து கொள்ள

வேண்டிய வேலைகளில்! அதேபோல் புழு, பூச்சி, மிருகங்கள் என்று உலகிலுள்ள ஜீவராசிகள் அனைத்துமே ஏதோ ஒரு வேலையில் ஈடுபட்டவாறுதான் உள்ளன. சுறுசுறுப்போ, மெத்தனமோ ஏதோ ஒரு வேலை; அல்லது காரியம் - கூடு கட்டுதல், பசிக்கு இரை தேடுதல், தன் ஜோடியிடம் காதல், தேவைப்பட்டால் நீரில் 'சளக்'கென்று ஒரு குளியல். யாரும் சொல்லாமல், கட்டளையிடாமல், வற்புறுத்தாமல் தங்கள் வேலையைச் செய்து கொண்டே இருக்கின்றன. பிறகு நிம்மதியான உறக்கம்.

இதிலுள்ள அடிப்படைத் தத்துவம் நமக்கு முக்கியமானது. அது, ‘மகிழ்வாய் இருக்க வேண்டுமெனில் முயற்சியெடுத்துக் காரியமாற்றும் மனப்பக்குவம்.’

ஒரு காரியம் செய்ய வேண்டியிருக்கிறது. ‘அதற்கு மெனக்கெடணுமே’, ‘முயற்சி எடுக்கணுமே’ என்று தள்ளிப்போட்டால், செய்யத் தவறினால் என்னவாகும்? காரியம் ஆகாது. தவிர அது நம்மைப் பாதிக்கும்.

எளிமையான உதாரணம் ஒன்று: ஓரிரு நாட்களாய்க் காய்ச்சல். சுக்குக் கஷாயம், கை வைத்தியம் எதிலும் சரியாகவில்லை. என்ன செய்வது? எழுந்து சட்டையை மாட்டிக் கொண்டு, பை நிறையப் பணத்தை அடைத்துக் கொண்டு டாக்டரிடமும், அவருக்கே அவருக்கான பார்மஸிக்கும் செல்ல வேண்டும். அதெல்லாம் பிடிக்கவில்லை என்று தள்ளிப்போட்டாலோ, போக மறுத்தாலோ நிலைமை சீராகி விடுமோ? ஆகாது. பிரச்சினை நம்மை மேலும் பாதிக்கும்.

தேர்வு எழுத படிக்க வேண்டும். படகு ஓட்ட துடுப்புப் போட்டால்தான் நகரும்.

உடனே ‘மோட்டார் போட்?’ என்று வம்பு செய்யாதீர்கள். அதற்குப் பெட்ரோல் பங்க் சென்று டீசல் வாங்கி வைத்திருக்க வேண்டும். நீரை அள்ளி ஊற்றினாலெல்லாம் வேலைக்காவாது.

ஆக, எந்தவொரு காரியத்திற்கும் ஏதோ ஒருவகையிலான முயற்சி முக்கியம். அந்த முயற்சி சிறக்க நமது மனோபாவம் முக்கியம்.

ஒரு முயற்சி என்று இறங்கும்போது காரியம் நடைபெறுகிறது என்பது ஒரு விஷயம். அதனூடே மற்றும் சில நிகழ்கின்றன. முயற்சி நம்மைச் சோதிக்கும்; நம் திறனை நாம் பரீட்சித்துப் பார்க்க உதவும்; நமக்குப் பாடம் கற்பிக்கும்.

எப்படி என்கிறீர்களா? இல்லறம் என்றொரு முயற்சியில் இறங்குகிறீர்களில்லையா? இப்பொழுது யோசித்துப் பாருங்கள்.

எனவே ஒரு முயற்சியில் இறங்கும்போது அதை அனுபவிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு காரியத்தைச் செய்து முடிக்கவேண்டும் என்பதற்காக மட்டும் ஒரு முயற்சியில் இறங்கினால் அதில் மகிழ்விருக்காது. தவிர அம்முயற்சி ஏதேனும் காரணத்தால் கைகூடவில்லையெனில் மனம் சோர்ந்து போய்விடும்.

ஒரு விற்பனையாளன் தனது தொழில் நிமித்தமாய்ப் பலதரப்பட்ட மக்களைச் சந்திக்க முடிகிறது; பேச முடிகிறது; பழக முடிகிறது. மக்களைச் சந்தித்துப் பேசிப் பழகுவதால் ஏற்படும் அனுபவத்தை உணர்ந்து அவன் மகிழ்வுடன் தன் பணியைப் புரியும்போது அவனது மனம் உற்சாகமடைகிறது. அதனால் ஒரு நாள் குறிப்பிட்ட அளவிலான விற்பனை இல்லாது போனாலும் அவனது மனம் அதீதச் சோர்வடையாது; ஏமாற்றம் அடையாது.

ஈடுபடுவது எந்தக் காரியமாக இருந்தாலும் அதை அனுபவித்து உணர்ந்து மகிழ்வுடன் செய்யும்போது அந்த வேலையின் முடிவு இரண்டாம் பட்சமாகி ஏற்படும் திருப்தியும் மகிழ்வும் இருக்கிறதே அது முக்கியமானதாகிவிடுகிறது. இதைப் பொதுவாய் ஆங்கிலத்தில் job satisfaction என்போம். மனத்திருப்தியற்று ஒரு வேலையில் ஈடுபட்டால் அதில் லட்சலட்சமாய்ச் சம்பாதித்தாலும் மகிழ்வு தொலைந்து காணாமல் போய்விடும்.

"பணம்; பணம்" என்று நிற்காமல் கொள்ளாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோமே அது சொத்தைத் தரும். சுகத்தைத் தரும். மகிழ்வைத் தருமோ?

ஒரு செயலின் முடிவை மட்டுமே எண்ணி அளவுக்கதிகமாக அதில் கவனம் செலுத்தினால் நிகழ்காலத்தை அனுபவிக்க மறந்து விடுவோம். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை மட்டுமே மனதில் ஓடி ஓடி, செய்து கொண்டிருக்கும் காரியத்தை, அந்த நிமிடத்தை, அந்த நொடியை உணர்ந்து மகிழ மறந்துவிடுவோம். ஏனெனில் மகிழ்வு என்பது ஏதோ ஓர் இடத்தில் ஏதோ ஒரு குறிப்பிட்ட தருணத்தில் என்று நமக்காகக் காத்திருப்பதில்லை.

எனவே முயற்சியின் இறுதியில் ஏற்படப் போகும் முடிவை நினைத்துப் பெரிதும் அலட்டிக்கொள்ளாமல் ஈடுபடும் முயற்சியை உணர்ந்து மகிழக் கற்றுக் கொண்டால் செய்யும் காரியம் தானாகவே இன்பமானதாக ஆகிவிடும்.

வாரம் முழுதும் மனைவி உங்களுக்குச் சமைத்துப் போடுகிறார். ஒரு ஞாயிற்றுக்கிழமை நீங்கள் அவருக்கு இன்ப அதிர்ச்சி தர முடிவு செய்கிறீர்கள். அவர் உறக்கத்திலிருந்து எழுவதற்கு முன் நீங்கள் எழுந்து, தலைக்குக் குளித்து, அடுக்களைக்குச் சென்று காலையுணவு சமைக்கிறீர்கள். சமையல் அனுபவம் இல்லாத நீங்கள் அன்று அபூர்வமாய் ஈடுபடும் முயற்சியில் அந்த அனுபவத்தை உணர்ந்து, மகிழ்ந்து லயிப்புடன் செய்ய முனைந்து பாருங்கள். அது மிகப்பெரும் மன மகிழ்வை உங்கள் மனதில் ஏற்படுத்தும்.

அதன்பின் உங்கள் மனைவி எழுந்துவந்து அந்த உணவைச் சாப்பிட்டுவிட்டுப் பாராட்டினால் அது போனஸ். இல்லையென்றால் பெரிய பிரச்சினையில்லை. நீஙகள் அதிகம் மனவருத்தம் அடையப் போவதில்லை. ஏனெனில் உங்கள் மனதில் அன்றைய சமையல் பணியை, அந்தப் புது முயற்சியை ரசிப்பதற்கு மனதைத் தயார்படுத்திவிட்டீர்கள். அதுவே உங்கள் மனதில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

மனத் திருப்திக்காக ஒரு காரியம் புரியும்போது, அதில் ஈடுபடும்போது, அம்முயற்சி தானே நல்ல முடிவை தேடித்தரும். முயற்சி திருவினையாக்கும் என்பது இயற்கையின் விதி. ஆயினும் ஏதேனும் காரணத்தால் முடிவுகள் தாமதமானாலோ, அல்லது நீங்கள் நினைத்ததைப்போல் காரியம் அமையவில்லை என்றாலோ, அது உங்கள மன அமைதியைக் குலைக்காது. காரியத்தில் உள்ளார்ந்து ஈடுபட்ட திருப்தி மனதில் பரவியிருக்க, முடிவு வரும்போது வரட்டும் என்று அடுத்த முயற்சியில் இறங்கிவிடுவீர்கள்.

எல்லாம் சரி! ஒரு காரியத்தை விரும்பி திருப்திகரமாகப் புரிவது எப்படி? அதை நீங்கள் மனதில் ஒரு தீர்மானமாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். வேறு வழியில்லை.

ஒரு சிந்தனையாளர் கூறினார், "மன மகிழ்வின் இரகசியம் என்ன விரும்புகிறோமோ அதைச் செய்வதில் இல்லை; எதைச் செய்ய நேரிடுகிறதோ அதை விரும்புவதில் உள்ளது."

மாலைமலர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

முயற்சி !! முயற்சி !! Empty Re: முயற்சி !! முயற்சி !!

Post by செந்தில் Sat May 07, 2016 3:27 pm

சூப்பர்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum