Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஐ.பி.எல். கிரிக்கெட் மும்பை அணியை பழிதீர்த்தது பஞ்சாப்
Page 1 of 1 • Share
ஐ.பி.எல். கிரிக்கெட் மும்பை அணியை பழிதீர்த்தது பஞ்சாப்
விசாகப்பட்டினம்,
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி பழிதீர்த்தது.
பார்த்தீவ் பட்டேல் நீக்கம்
9-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 8 அணிகள் இடையிலான இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.
இந்த போட்டி தொடரில் விசாகப்பட்டினத்தில் நேற்று இரவு நடந்த 43-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. மும்பை அணியில் பார்த்தீவ் பட்டேலுக்கு பதிலாக உன்முக் சந்த் சேர்க்கப்பட்டார். பஞ்சாப் அணியில் பெஹர்டைன், அனுரீத்சிங்குக்கு பதிலாக மேக்ஸ்வெல், குர்கீரத்சிங் இடம் பிடித்தனர்.
அதிர்ச்சி தொடக்கம்
‘டாஸ்’ ஜெயித்த மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, உன்முக்சந்த் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரை சந்தீப் ஷர்மா வீசினார். முதல் பந்தை ரோகித் சர்மா பவுண்டரிக்கு விரட்டி ரன் கணக்கை தொடங்கினார்.
மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. உன்முக் சந்த் ரன் எதுவும் எடுக்காமல் மொகித் ஷர்மா பந்து வீச்சில் குர்கீரத்சிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து களம் கண்ட அம்பத்தி ராயுடு ரன் எதுவும் எடுக்காமல் சந்தீப் ஷர்மா பந்து வீச்சில் போல்டு ஆனார். இதனால் மும்பை அணி 2.5 ஓவர்களில் 8 ரன்னுக்கு 2 விக்கெட்டை இழந்து தடுமாறியது. மும்பை அணியில் டாப்-3 பேட்ஸ்மேன்களில் 2 பேர் ‘டக்-அவுட்’ ஆனது 2009-ம் ஆண்டுக்கு பிறகு (டெல்லிக்கு எதிராக) இதுவே முதல்முறையாகும்.
ரோகித் சர்மா 15 ரன்னில் அவுட்
இதைத்தொடர்ந்து நிதிஷ் ராணா, ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். பஞ்சாப் வீரர்களின் நேர்த்தியான பந்து வீச்சு தொடர்ந்ததால் பவுண்டரி, சிக்சர் தூக்க முடியாமல் மும்பை வீரர்கள் திணறினார்கள். பவர்பிளேயில் மும்பை அணி 2 விக்கெட்டை இழந்து 21 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த சீசனில் பவர்பிளேயில் ஒரு அணி எடுத்த குறைந்தபட்ச ரன் இதுவாகும். முதல் பந்தில் வந்த பவுண்டரிக்கு பிறகு 6-வது ஓவரில் தான் ஒரு சிக்சர் அடிக்க முடிந்தது.
இதனை அடுத்து தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 15 ரன்னில் (24 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) அக்ஷர் பட்டேல் பந்து வீச்சில் போல்டு ஆனார். நிதிஷ் ராணா 25 ரன்னில் (28 பந்துகளில் 3 சிக்சருடன்) ஸ்டோனிஸ் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். ஜோஸ்பட்லர் 9 ரன்னில் (10 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) ஸ்டோனிஸ் பந்து வீச்சில் குர்கீரத் சிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 13.3 ஓவர்களில் மும்பை அணி 61 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து இருந்தது
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி பழிதீர்த்தது.
பார்த்தீவ் பட்டேல் நீக்கம்
9-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 8 அணிகள் இடையிலான இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.
இந்த போட்டி தொடரில் விசாகப்பட்டினத்தில் நேற்று இரவு நடந்த 43-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. மும்பை அணியில் பார்த்தீவ் பட்டேலுக்கு பதிலாக உன்முக் சந்த் சேர்க்கப்பட்டார். பஞ்சாப் அணியில் பெஹர்டைன், அனுரீத்சிங்குக்கு பதிலாக மேக்ஸ்வெல், குர்கீரத்சிங் இடம் பிடித்தனர்.
அதிர்ச்சி தொடக்கம்
‘டாஸ்’ ஜெயித்த மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, உன்முக்சந்த் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரை சந்தீப் ஷர்மா வீசினார். முதல் பந்தை ரோகித் சர்மா பவுண்டரிக்கு விரட்டி ரன் கணக்கை தொடங்கினார்.
மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. உன்முக் சந்த் ரன் எதுவும் எடுக்காமல் மொகித் ஷர்மா பந்து வீச்சில் குர்கீரத்சிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து களம் கண்ட அம்பத்தி ராயுடு ரன் எதுவும் எடுக்காமல் சந்தீப் ஷர்மா பந்து வீச்சில் போல்டு ஆனார். இதனால் மும்பை அணி 2.5 ஓவர்களில் 8 ரன்னுக்கு 2 விக்கெட்டை இழந்து தடுமாறியது. மும்பை அணியில் டாப்-3 பேட்ஸ்மேன்களில் 2 பேர் ‘டக்-அவுட்’ ஆனது 2009-ம் ஆண்டுக்கு பிறகு (டெல்லிக்கு எதிராக) இதுவே முதல்முறையாகும்.
ரோகித் சர்மா 15 ரன்னில் அவுட்
இதைத்தொடர்ந்து நிதிஷ் ராணா, ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். பஞ்சாப் வீரர்களின் நேர்த்தியான பந்து வீச்சு தொடர்ந்ததால் பவுண்டரி, சிக்சர் தூக்க முடியாமல் மும்பை வீரர்கள் திணறினார்கள். பவர்பிளேயில் மும்பை அணி 2 விக்கெட்டை இழந்து 21 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த சீசனில் பவர்பிளேயில் ஒரு அணி எடுத்த குறைந்தபட்ச ரன் இதுவாகும். முதல் பந்தில் வந்த பவுண்டரிக்கு பிறகு 6-வது ஓவரில் தான் ஒரு சிக்சர் அடிக்க முடிந்தது.
இதனை அடுத்து தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 15 ரன்னில் (24 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) அக்ஷர் பட்டேல் பந்து வீச்சில் போல்டு ஆனார். நிதிஷ் ராணா 25 ரன்னில் (28 பந்துகளில் 3 சிக்சருடன்) ஸ்டோனிஸ் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். ஜோஸ்பட்லர் 9 ரன்னில் (10 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) ஸ்டோனிஸ் பந்து வீச்சில் குர்கீரத் சிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 13.3 ஓவர்களில் மும்பை அணி 61 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து இருந்தது
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: ஐ.பி.எல். கிரிக்கெட் மும்பை அணியை பழிதீர்த்தது பஞ்சாப்
-
மும்பை 124 ரன்கள்
அடுத்து குணால் பாண்ட்யா, பொல்லார்ட்டுடன் இணைந்தார். இருவரும் அடித்து ஆடினார்கள். 16.2 ஓவர்களில் மும்பை அணி 100 ரன்னை எட்டியது. இந்த இணையும் நிலைத்து நிற்க முடியாமல் ஏமாற்றம் அளித்தது. 17-வது ஓவரில் ஸ்டோனிஸ் பந்து வீச்சில் குணால் பாண்ட்யா (19 ரன்கள், 12 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன்), பொல்லார்ட் (27 ரன்கள், 20 பந்துகளில் 3 சிக்சருடன்) ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழந்தனர். டிம் சவுதி (1 ரன்), மெக்லெனஹான் (4 ரன்) ஆகியோர் வந்த வேகத்திலேயே ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார்கள்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது. ஹர்பஜன்சிங் 14 ரன்னுடனும், (10 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன்), ஜஸ்பிரித் பும்ரா 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். பஞ்சாப் அணி தரப்பில் ஸ்டோனிஸ் 4 ஓவர்கள் பந்து வீசி 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். 20 ஓவர் போட்டியில் அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும். சந்தீப் ஷர்மா, மொகித் ஷர்மா தலா 2 விக்கெட்டும், அக்ஷர் பட்டேல் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பஞ்சாப் அணி வெற்றி
பின்னர் 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய பஞ்சாப் அணி 17 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி முந்தைய ஆட்டத்தில் கண்டு இருந்த தோல்விக்கு பழிதீர்த்தது. ஹசிம் அம்லா ரன் எதுவும் எடுக்காமலும், விருத்திமான் சஹா 56 ரன்னிலும் (40 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) மேக்ஸ்வெல் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். கேப்டன் விஜய் 54 ரன்னும் (52 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), குர்கீரத்சிங் 6 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மும்பை அணி தரப்பில் மெக்லெனஹான் 2 விக்கெட்டும், டிம் சவுதி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பஞ்சாப் அணி வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
11-வது ஆட்டத்தில் ஆடிய பஞ்சாப் அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். 12-வது ஆட்டத்தில் விளையாடிய மும்பை அணி சந்தித்த 6-வது தோல்வி இது.
-
தினத்தந்தி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» .பி.எல் கிரிக்கெட்: ராஜஸ்தானை எளிதில் வீழ்த்தியது மும்பை அணி
» இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மும்பை வந்தனர்: உற்சாக வரவேற்பு
» ஐ.பி.எல். கிரிக்கெட் நாளை தொடக்கம்- முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை மோதல்
» ஐபிஎல் போட்டி: வீராட்கோலி அணியை டோனி மீண்டும் வீழ்த்துவாரா?
» போராடிய பிரான்ஸ் அணியை வீழ்த்தி போர்ச்சுக்கல் 'யூரோ' சாம்பியன்
» இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மும்பை வந்தனர்: உற்சாக வரவேற்பு
» ஐ.பி.எல். கிரிக்கெட் நாளை தொடக்கம்- முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை மோதல்
» ஐபிஎல் போட்டி: வீராட்கோலி அணியை டோனி மீண்டும் வீழ்த்துவாரா?
» போராடிய பிரான்ஸ் அணியை வீழ்த்தி போர்ச்சுக்கல் 'யூரோ' சாம்பியன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|