Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் லவங்கப்பட்டை
Page 1 of 1 • Share
சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் லவங்கப்பட்டை
லவங்கப்பட்டையில் மாங்கனீஸ், கால்சியம், இரும்பு போன்ற தாது சத்துகள் இருக்கின்றன. அதனால் இது ரத்த சோகைக்கும்நல்ல மருந்தாகிறது.
இந்திய உணவுகளில், நறுமண உணவுப் பொருட்கள் முக்கிய இடம் பெறுகின்றன. இந்திய நறுமண உணவுப் பொருட்களுக்கு உலக அளவில் சிறந்த வரவேற்பு இருக்கிறது. நறுமணப் பொருட்கள் உணவுக்கு சுவையையும், மணத்தையும் மட்டும் தருவதில்லை. அவை நோய்த் தடுப்பாற்றலையும் தருகின்றன.
நாம் அன்றாடம் உண்ணும் உணவுப் பொருட்களில் நமது உடலுக்கு கேடு விளைவிக்கும் நஞ்சுப் பொருட்கள் கலந்திருக்கின்றன. அவை நமக்குத் தெரியாமலே உடலுக்குள் சென்றுவிடுகின்றன. அவைகளை உடலில் இருந்து நீக்கும் வேலையை நறுமண உணவுப் பொருட்கள் செய்கின்றன. அதன் மூலம் ஜீரண நலம் பாதுகாக்கப்படுகிறது. உணவில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை உடலோடு சேர்க்கும் வேலையையும் நறுமணப் பொருட்கள் செய்கின்றன.
இத்தகைய பணிகளை சிறப்பாக செய்யும் நறுமண உணவுப் பொருட்களில் ஒன்று, லவங்கப்பட்டை.
இருமல், மூச்சிறைப்பு போன்ற நோய்களுக்கும் லவங்கப்பட்டை சிறந்த மருந்து.
200 மி.லி. நீரில், ஒரு தேக்கரண்டி லவங்கப்பட்டை தூள் கலந்து கொதிக்க வைத்து இறக்கி, அதில் சிறிதளவு தேன் கலந்து பருகினால் கபம் மற்றும் மூச்சிறைப்பு நீங்கும்.
இதன் தூளுக்கு தசைகளை வலுப்படுத்தும் தன்மை இருக்கிறது. அதனால் தசைகள் வலுவாகி தசை வலி மற்றும் மூட்டு வலி நீங்கும். இத்தகைய வலி இருப்பவர்கள் தினமும் அரை தேக்கரண்டி லவங்கத்தூளை காலை, மாலை இரு வேளை தேனில் கலந்து சாப்பிடவேண்டும்.
லவங்கப்பட்டையில் மாங்கனீஸ், கால்சியம், இரும்பு போன்ற தாது சத்துகள் இருக்கின்றன. அதனால் இது ரத்த சோகைக்கும்நல்ல மருந்தாகிறது.
லவங்கப்பட்டை, சுக்கு, ஏலக்காய் ஆகியவைகளை பொடிசெய்து வைத்துக் கொள்ளுங்கள். 100 மி.லி. நீரில் ஒரு தேக்கரண்டி பொடி சேர்த்து கொதிக்க வையுங்கள். சாப்பிட்ட பின்பு குடிநீராக அதை அருந்துங்கள். அருந்தினால் வயிற்று வலி, வயிற்று பொருமல், வயிற்றுக்கடுப்பு, கழிச்சல் போன்றவை நீங்கும்.
லவங்கப்பட்டை சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்து. முக்கியமாக உணவு உண்ட பின்பு அதிகரிக்கும் சர்க்கரையின் அளவை இது கட்டுப்படுத்தும். இன்சுலின் செயல்படுவதை போன்று லவங்கப்பட்டையும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை உடல் செல்களுக்குள் செலுத்த உதவுகின்றது. லவங்கப்பட்டை தூளை தினமும் சிறிதளவு காலை, மாலை உணவிற்கு முன்பு சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும். ரத்த அழுத்தமும் கட்டுப்படும். கெட்ட கொழுப்பும் குறையும்.
பெண்களுக்கு சினைப்பையில் நீர்க்கட்டிகள் தோன்றினால், மாதவிலக்கு குளறுபடிகள் தோன்றும். அதனால் பாதிக்கப்படுகிறவர்கள், தினமும் இதனை காலை–மாலை சிறிதளவு சாப்பிட்டு வந்தால் குணம் கிடைக்கும். லவங்கப்பட்டை பிரசவித்த பெண்களுக்கும் ஏற்றது. குழந்தை பிறந்த பிறகு கருப்பையில் உள்ள கழிவுகளை நீக்கி, கருப்பை சுருங்குவதற்கும் உதவுகின்றது.
இந்த பட்டையில் இருந்து நறுமண எண்ணெய் தயாரிக்கிறார்கள். இந்த எண்ணெய்யை நுகர்ந்தால் மன அமைதியும், ஆழ்ந்த தூக்கமும் கிடைக்கும். தூக்கமின்மையால் துன்பப்படுபவர்கள் தினம் ஒரு தேக் கரண்டி லவங்கப்பட்டை தூளை தேனில் கலந்து சாப்பிட்டு வரலாம்.
இந்த பட்டையில் இருந்து தயாரிக்கப்படும் நறுமண எண்ணெய் இருமல் மற்றும் உடல்வலிக்கான மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. சோப்பு, பற்பசை மற்றும் வாய் துர்நாற்றத்தை போக்க பயன்படுத்தப்படும் பொருட்களிலும் இந்த எண்ணெய் சேர்க்கப்படுகிறது.
சித்த மருந்துகளான சூரணங்கள் மற்றும் லேகியங்களிலும் லவங்கப்பட்டை சேர்க்கப்படுகிறது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» ரத்தத்தில் சர்க்கரையின் அளவு!
» சர்க்கரையின் பிடியிலிருந்து தப்பிக்க…
» ஹீமோகுளோபினின் அளவை அதிகரிக்க ..
» கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும் ஜூஸ் -
» பழந்தமிழரின் அளவை முறைகள்...!
» சர்க்கரையின் பிடியிலிருந்து தப்பிக்க…
» ஹீமோகுளோபினின் அளவை அதிகரிக்க ..
» கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும் ஜூஸ் -
» பழந்தமிழரின் அளவை முறைகள்...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|