தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சத்குரு பதில்கள்

View previous topic View next topic Go down

சத்குரு பதில்கள் Empty சத்குரு பதில்கள்

Post by rammalar Fri Jun 03, 2016 4:54 pm


ஆர். உமாராமர், ஸ்ரீலெட்சுமிபுரம்:
தங்களிடம் ஆசிர்வாதம் பெற வருபவரை,
நீங்கள் என்ன சொல்லி வாழ்த்துவீர்கள்?

-
என்னிடம் ஆசிர்வாதம் வாங்க வரும் பலபேர் பலவிதமான
விண்ணப்பங்களுடன்தான் வருகின்றனர். நான் எப்போதுமே
அவர்கள் என் கேட்கிறார்களோ அதற்காக அவர்களை
ஆசிர்வதிப்பதில்ல.

நான் எப்போதுமே அவர்களுக்கு எது சிறந்ததோ அது நிகழ
வேண்டும் என்றே ஆசிர்வதிப்பேன். எது தனக்கு நல்லது
என்று அவர்களுக்குப் புரியாவிட்டாலும்கூட. அவர்களுக்கு
எது நல்லதோ அது அவரகளுக்கு நிகழவேண்டும் என்றே
நான் ஆசிர்வதிப்பேன்.

உதாரணமாக ஒருவர் என்னிடம் வந்து ‘சத்குரு எனக்கு
நல்லபடியாக திருமணம் நடக்க வேண்டும்’ என்று கேட்டால்,
நான் உடனே அவருக்கு ‘திருமணம் நடைபெறட்டும்’ என்று
ஆசி கூறுவதில்லை.

அவர்களுடைய நல்வாழ்விற்கு எது உகந்ததோ அதன்படியே
அவர்களை ஆசிர்வதிப்பேன். ஒருவருக்கு எது நல்லதோ
அது கிடைப்பதுதானே அவசியம். விரும்புவதெல்லாம் கிடைக்க
வேண்டும் என்பது இல்லையே.

அதனால் என் ஆசி எப்போதும் என்னிடம் வருபவர்கள்
நலனுக்காக எது கிடைக்க வேண்டுமோ அதற்காகவே இருக்கும்.
-
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

சத்குரு பதில்கள் Empty Re: சத்குரு பதில்கள்

Post by rammalar Fri Jun 03, 2016 4:55 pm

சத்குரு பதில்கள் XVJLThT7uq907csdLHzQ+page0032_i2
-

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு:
வாழ்க்கை நலத்திற்காக என்று சடங்குகள் செய்வதைப்
பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


என் திருமணம்கூட சடங்குகள் இல்லாமல்தான் நடைபெற்றது.
எங்கள் திருமணத்தில் நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம்.
அன்பாக மாலை மாற்றிக் கொண்டோம்.

என் வாழ்வில் எனக்காக நான் எந்த சடங்குகளிலும்
ஈடுபடவில்லை என்றாலும், நான் பார்த்த சில சடங்குகள் என்னை
வியப்பில் ஆழ்த்தியிருக்கின்றன.

அவை தாந்திரீக முறையில் செய்யப்படும் சடங்கள்.
இச்சடங்குகளுக்கு தர்க்கரீதியாக எந்த விளக்கமும் நம்மால்
கொடுக்க இயலாது.

நான் சிறுவனாக இருந்தபோது என் கண்ணெதிரே ஒருவர் அரிசி
மாவினால் செய்த பொம்மை ஒன்றைச் சில அடி தூரம் நடக்கச்
செய்தார். அதை எதிர்த்து நான் அவருடன் சண்டையிட்டேன்.

ஆனால் பல ஆண்டுகள் கழித்தே இந்த மாதிரியான செயல்
ஒவ்வொனறிலும் அறிவியல் அடிப்படை இருப்பதை உணர்ந்து
கொள்ள முடிகிறது.
-
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

சத்குரு பதில்கள் Empty Re: சத்குரு பதில்கள்

Post by rammalar Fri Jun 03, 2016 4:55 pm

வி. பாலகிருஷ்ணன், செகந்திராபாத்:
தாங்கள் உணரும் சில உன்னத அனுபவங்களை தங்களது
வாழ்க்கைத் துணை உணராதபோது எரிச்சல்படுகிறவர்களைப்
பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
-

ஏதோ ஒருவிதமான உறவில் இருக்கும் இருவர் ஒரே சமயத்தில்
ஒரே மாதிரியான நிலையில் வளர்ச்சியை அடைய முடியாது.
அதற்கு எந்த வகையிலும் சாத்தியமே இல்லை. அவர்கள் எவ்வளவு
அன்யோன்யமாய் இருந்தாலும், அவர்கள் யாராய் இருந்தாலும்
அது முடியவே முடியாது.

நீங்கள் ஒரு தம்பதியாக இருந்தால், உங்களில் ஒருவருக்கு
சிறப்பாக ஏதாவது ஒன்று நடைபெற்றால், அது உங்களது
வாழ்க்கைத் துணைக்கும் கிடைப்பதை,நீங்கள் அனுபவித்த
உன்னதம் அவர்களுக்கும் நடப்பதை உறுதி செய்வது உங்கள்
வேலை.

அது காசோ, பணமோ செலவாவதாக இருந்தாலும் சரி,
எப்படியாவது அவர்களுக்கும் அது நிகழ்வதை நீங்கள்தான்
உறுதி செய்ய வேண்டும். நீங்கள் உண்மையிலேயே ஒருவர்
மேல் அன்பாக இருந்தால் உங்களுக்கு எவ்வளவு கஷ்டம்
வந்தாலும், அவருக்கு என்ன நன்மை செய்யவேண்டுமோ
அதனை நீங்கள் செயதே ஆக வேண்டும்.
-
------------------------------------------
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

சத்குரு பதில்கள் Empty Re: சத்குரு பதில்கள்

Post by rammalar Fri Jun 03, 2016 4:56 pm

சம்பூர்ண லட்சுமி, மதுரை:
ஒவ்வொரு குருவும் தான் செய்த செயல்களைப் பற்றிய
குறிப்பை ஏதாவது ஒருவகை குறியீட்டின் மூலம் வெளிப்படுத்திச்
செல்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
நீங்கள் அப்படி எதாவது செய்திருக்கிறீர்களா?

-
இந்தக் குறியீட்டின் பின்னணியில் ஒரு பெரிய பாரம்பரியமே
இந்தியாவில் உள்ளது. பாரம்பரிய முறைப்படி தோன்றிய
யோகங்களில் எல்லாம் பாம்பையே குண்டலினிக்கு குறியீடாக
பயன்படுத்தினார்கள்.

இப்போதும் அதைத்தான் உபயோகித்துக் கொண்டிருக்கிறோம்.
ஏனென்றால் குண்டலினியுடைய அசைவிலும், பாம்பு நகரும்
விதத்திலும் ஓர் ஒற்றுமை உள்ளது.

இதனால் பாம்பினை யோகத்தில் தங்களுக்கு ஏற்படும்
அனுபவங்களைக் குறிப்பிட, ஒவ்வொரு குருவும் அதை குறியீடாகப்
பயன்படுத்தினர்.

பாம்பு குறியீட்டை நாம் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்து
அந்த இடத்தில் என்ன மாதிரி வழக்கங்கள் புழக்கத்தில் இருந்தன
என்றுகூட கூறிவிட முடியும். ஆயிரம் வருடங்கள் கழித்து உண்மை
உணர்ந்த ஒரு மனிதர் ஈஷாவிற்கு வந்து நான் பாம்பு உருவத்தை
வரைந்துள்ள முறையைப் பார்த்தால் நான் எதுபோன்ற செயலில்
ஈடுபட்டேன் என்பதை அவரால் தெரிந்து கொள்ள முடியும்.

அந்தப் பாம்பு வடிவங்கள் எப்படிப்பட்ட சக்தியை இம்மனிதர்
கையாண்டிருக்கிறார். குண்டலினி சக்தியை எவ்வாறு
மேலெழுப்பினார் என்பதையெல்லாம் உணர்த்திவிடும்.

இவ்விஷயத்தைப் பற்றி இவ்வளவு சொல்வதே போதும் என்று
நினைக்கிறேன். ஏனென்றால் பாம்புகளை குறியீடாகப் பயன்
படுத்துவது ஒரு முடிவில்லா தொடர் கதை

அதைப் பற்றிச் சொல்லத் தொடங்கினால், முடிவே இல்லாமல்
சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
-
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

சத்குரு பதில்கள் Empty Re: சத்குரு பதில்கள்

Post by rammalar Fri Jun 03, 2016 4:57 pm

வா. மீனாவாசன், சென்னாவரம்:
படித்த, அறிவுள்ள மக்கள் நிறைந்த இந்த சமூகத்தில் இன்னும்
ஜாதிய முறைகள் வழக்கில் உள்ளதே?

இந்த ஜாதிய முறைகள் எல்லாம் ஐ.ஐ.டி.களும், ஐ.டி.ஐ.களும்
தோன்றும் முன்னர் உருவாக்கப்பட்டவை.

இவை உருவாக்கப்பட்ட காலத்தில் மக்களுக்கு பயிற்சியளிக்க
டிரெயினிங் சென்டர் எல்லாம் இருக்க வில்லை.
அதனால் ஒவ்வொரு தொழிலைச் சேர்ந்தவர்களும் அதற்கு
உண்டான பயிற்சிகளை தன் குடும்ப அமைப்பிற்குள்ளாகவே
உருவாக்கிக் கொண்டனர்.

நாம் நம் புத்தியை இழந்தபோது தங்கக் கொல்லர், இரும்புக்
கொல்லரை விட உயர்ந்தவர் என்பது மாதிரியான எண்ணம்
நம் மனங்களில் புகுந்துவிட்டது.
அதுதான் ஜாதியாக உருமாறியது. அன்றிலிருந்து இது ஓர்
அசிங்கமான வழக்கமாகிவிட்டது.
-
-----------------------------------------

நன்றி- குமுதம் பக்தி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

சத்குரு பதில்கள் Empty Re: சத்குரு பதில்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum