Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காசு, பணம் வேண்டாம்; கவிதை இருந்தால் பிழைத்துக்கொள்வேன்: லிங்குசாமி பேச்சு
Page 1 of 1 • Share
காசு, பணம் வேண்டாம்; கவிதை இருந்தால் பிழைத்துக்கொள்வேன்: லிங்குசாமி பேச்சு
காசு பணம் வேண்டாம், கவிதை இருந்தால் பிழைத்துக்கொள்வேன் என்று தனது கவிதை நூல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் லிங்குசாமி பேசியுள்ளார்.
இயக்குநர் லிங்குசாமி, ‘லிங்கூ’ என்கிற தனது முதல் கவிதைத் தொகுப்புக்குப் பிறகு தற்போது தனது இரண்டாவது படைப்பாக ‘லிங்கூ 2: செல்ஃபி எடுத்துக்கொள்கிறது மரம்’ என்கிற நூலை எழுதியுள்ளார். இந்நூலை டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பித்துள்ளது. இதன் வெளியீட்டு விழா லிங்குசாமியின் நண்பரும் இயக்குநருமான கௌதம் வாசுதேவ்மேனனின் திருவான்மியூர் கடற்கரையோர அலுவலகத்தில் நடைபெற்றது.
‘லிங்கூ-2’ கவிதை நூலை கவிக்கோ அப்துல்ரகுமான் வெளியிட இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ்மேனனும் பார்த்திபனும் பெற்றுக்கொண்டார்கள்.
இயக்குநர் லிங்குசாமி, ‘லிங்கூ’ என்கிற தனது முதல் கவிதைத் தொகுப்புக்குப் பிறகு தற்போது தனது இரண்டாவது படைப்பாக ‘லிங்கூ 2: செல்ஃபி எடுத்துக்கொள்கிறது மரம்’ என்கிற நூலை எழுதியுள்ளார். இந்நூலை டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பித்துள்ளது. இதன் வெளியீட்டு விழா லிங்குசாமியின் நண்பரும் இயக்குநருமான கௌதம் வாசுதேவ்மேனனின் திருவான்மியூர் கடற்கரையோர அலுவலகத்தில் நடைபெற்றது.
‘லிங்கூ-2’ கவிதை நூலை கவிக்கோ அப்துல்ரகுமான் வெளியிட இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ்மேனனும் பார்த்திபனும் பெற்றுக்கொண்டார்கள்.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: காசு, பணம் வேண்டாம்; கவிதை இருந்தால் பிழைத்துக்கொள்வேன்: லிங்குசாமி பேச்சு
-
விழாவில் இயக்குநர் லிங்குசாமி பேசும்போது: நான் எப்போதும் கவிதையுடன் இருப்பதாகவே உணர்கிறேன். எனக்குள் ஆதியில் தோன்றியது கவிதையாகவே இருந்திருக்கிறது. பிறகுதான் கதை எல்லாம் வந்தது என்பேன். ஊரிலிருந்து சென்னை வந்தபோது ரெண்டு மூணு கவிதைகளும் கொஞ்சம் நம்பிக்கையுடன்தான் இங்கு வந்தேன். கையில் காசு பணம் வேண்டாம் கவிதை போதும் பிழைத்துக்கொள்ள்ளலாம் என்றிருப்பேன்.
எதுவுமே இல்லை என்றாலும் கவிதை இருக்கிறது பார்த்துக்கொள்ளலாம் என்றிருப்பேன். அப்போதே அப்படி இருந்தேன். இப்போது இவ்வளவு பேர் கிடைத்திருக்கிறீர்கள். எனக்கென்ன கவலை?
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: காசு, பணம் வேண்டாம்; கவிதை இருந்தால் பிழைத்துக்கொள்வேன்: லிங்குசாமி பேச்சு
கவிதை சொல்வது என்பது என்னைச் சுற்றி தொற்று நோய் போல வந்துகொண்டிருக்கிறது. என் டிரைவர் முதல் ஆபீஸ் பாய் வரை இப்போதெல்லாம் கவிதை சொல்கிறார்கள்.
நான் எப்போதும் கவிதை ரசிக்கும் மனத்தோடு இருப்பவன். எவ்வளவு சோதனை வந்தாலும் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் கவிதைகளுக்கு முன்னால் அதெல்லாம் உண்மையிலேயே பெரிதாகத் தெரியாது. அந்த மனசு மட்டும் இருந்தால் போதும். எவ்வளவு சோதனை வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். இப்போது கூட வருகிற மிஸ்டுகாலில் 6-ல் மூன்று அழைப்புகள் பணம் திருப்பித்தரக் கேட்கும் பைனான்சியராகக்கூட இருக்கலாம். கடன் இருக்கிறது. என்றாலும் கவலை இல்லை.
காரணம் நான் யாரையும் ஏமாற்ற மாட்டேன். நான் உதவி இயக்குநராக சிரமப்பட்ட காலத்தில் கூட எல்லாக்கடைகளிலும் கடன் இருக்கும். 4 மாதம் கழித்து ஊர் போய்விட்டு வந்து எல்லாருக்கும் திருப்பிக் கொடுப்பேன். எங்கள் குடும்பம் ஊரு விட்டு வேறு ஊர் வந்தபோது கூட ஆயிரம் ரூபாய் கடன் கொடுப்பதற்காக மாட்டை விற்றுக் கொடுத்துவிட்டு வந்தவர் எங்கள் அப்பா. அந்த நேர்மை என் ரத்தத்திலேயே இருக்கிறது. எனக்குபொறுப்பும் கடமையும் இருக்கிறது.
இந்த மனநிலையோடு அடுத்தப் படத்தை தொடங்குகிறேன். நீங்கள் எல்லாம் இருக்கிறபோது எனக்கு எதுவுமே பிரச்னை இல்லை. எல்லாக் கஷ்டங்களும் கடந்து போய்விடும். இதுவும் கடந்து போகும். எல்லாம் கடந்து போகும். இதை என் தனிப்பட்ட விழாவாக நினைக்கவில்லை. எல்லாரையும் சந்திக்கிற ஒரு வாய்ப்பாக நினைக்கிறேன். அதற்காகவே நானாக ஏற்படுத்திக்கொண்ட சந்தர்ப்பமே இது. இங்கு வந்த அனைவருக்கும் நன்றி. நாம் தொடர்ந்து சந்திப்போம் என்றார்.
–தினமணி
நான் எப்போதும் கவிதை ரசிக்கும் மனத்தோடு இருப்பவன். எவ்வளவு சோதனை வந்தாலும் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் கவிதைகளுக்கு முன்னால் அதெல்லாம் உண்மையிலேயே பெரிதாகத் தெரியாது. அந்த மனசு மட்டும் இருந்தால் போதும். எவ்வளவு சோதனை வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். இப்போது கூட வருகிற மிஸ்டுகாலில் 6-ல் மூன்று அழைப்புகள் பணம் திருப்பித்தரக் கேட்கும் பைனான்சியராகக்கூட இருக்கலாம். கடன் இருக்கிறது. என்றாலும் கவலை இல்லை.
காரணம் நான் யாரையும் ஏமாற்ற மாட்டேன். நான் உதவி இயக்குநராக சிரமப்பட்ட காலத்தில் கூட எல்லாக்கடைகளிலும் கடன் இருக்கும். 4 மாதம் கழித்து ஊர் போய்விட்டு வந்து எல்லாருக்கும் திருப்பிக் கொடுப்பேன். எங்கள் குடும்பம் ஊரு விட்டு வேறு ஊர் வந்தபோது கூட ஆயிரம் ரூபாய் கடன் கொடுப்பதற்காக மாட்டை விற்றுக் கொடுத்துவிட்டு வந்தவர் எங்கள் அப்பா. அந்த நேர்மை என் ரத்தத்திலேயே இருக்கிறது. எனக்குபொறுப்பும் கடமையும் இருக்கிறது.
இந்த மனநிலையோடு அடுத்தப் படத்தை தொடங்குகிறேன். நீங்கள் எல்லாம் இருக்கிறபோது எனக்கு எதுவுமே பிரச்னை இல்லை. எல்லாக் கஷ்டங்களும் கடந்து போய்விடும். இதுவும் கடந்து போகும். எல்லாம் கடந்து போகும். இதை என் தனிப்பட்ட விழாவாக நினைக்கவில்லை. எல்லாரையும் சந்திக்கிற ஒரு வாய்ப்பாக நினைக்கிறேன். அதற்காகவே நானாக ஏற்படுத்திக்கொண்ட சந்தர்ப்பமே இது. இங்கு வந்த அனைவருக்கும் நன்றி. நாம் தொடர்ந்து சந்திப்போம் என்றார்.
–தினமணி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» காசு ... பணம்... துட்டு...
» காசு... பணம்... துட்டு!
» படம் சுமாராக இருந்தால் மோசமாக விமர்சிக்க வேண்டாம்
» லிங்குசாமி படத்திலிருந்து சிம்பு கழன்றாரா? கழற்றி விடப்பட்டாரா?
» பெட்ரோல் லிட்டருக்கு 10 காசு, டீசல் விலை 9 காசு உயர்வு: நள்ளிரவு முதல் அமல்
» காசு... பணம்... துட்டு!
» படம் சுமாராக இருந்தால் மோசமாக விமர்சிக்க வேண்டாம்
» லிங்குசாமி படத்திலிருந்து சிம்பு கழன்றாரா? கழற்றி விடப்பட்டாரா?
» பெட்ரோல் லிட்டருக்கு 10 காசு, டீசல் விலை 9 காசு உயர்வு: நள்ளிரவு முதல் அமல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|