தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பாடல் ஒன்று போதும்!

View previous topic View next topic Go down

பாடல் ஒன்று போதும்! Empty பாடல் ஒன்று போதும்!

Post by rammalar Mon Jul 25, 2016 5:13 pm

[img]பாடல் ஒன்று போதும்! 4j71uw[/img]
-
எனது படித்துறை திரைப்படத்திற்காக இளையராஜா
இசையில் நீங்கள் ஒரு பாட்டு எழுத வேண்டும் என
நண்பரும் இயக்குனருமான சுகா கேட்டபோது வியப்பாக
இருந்தது.
நடிகர் ஆர்யா தயாரிப்பில் சுகாவின் மதல்படமான
படித்துறையை உருவாக்கிக் கொண்டிருந்தது.

என்னை கேலி செய்கிறாரோ என நினைத்தபடியே விளையாடதீர்கள்
என்றபோது அவர் உறுதியான குரலில் வேடிக்கையில்லை என்னோட
படத்துக்கு நீங்கள், ஜெயமோகன், நாஞ்சில் நாடன் மூன்று பேரும்தான்
பாட்டு எழுதறீங்க. இது என் ஆசை மட்டுமில்லை. ராஜா சாரும் அதை
விரும்புகிறார் எனறார்.

என்னால நம்பமுடியவில்லை. பள்ளிவயதிலிருந்து இசைஞானி
அவர்களின் பாடல்களை கேட்டு வளர்ந்தவன். அவரது பரமரசிகன்.
இன்றைக்கும் எனது பயணத்துணை இளையராஜாவின் பாடல்களே.
எனது நண்பர்கள் பலரும் அவரது தீவிர ரசிகர்கள்.

ஒருநண்பர் தனது வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் உள்ள தூரம் எவ்வளவு
என்று கேட்டால் ஐந்து இளையராஜா பாடல் கேட்கும் தூரம் என்று
சொல்லுவார். அந்த அளவு ராஜா ரசிகர். இது போன்ற கன்னிச்
சாமிகளுக்கு குருசாமி போன்றவர் சுகா. அவரது செல்போன் முழுவதும்
இளையராஜா பாடல்களே.

இளையராஜாவின் எந்தப் பாடலை சொன்னாலும் உடனே ஒலிக்க
விட்டு இது தான் என்று கேட்பதுடன் அந்த பாடலின் ராகம் மற்றும்
சிறப்புகள் பற்றி பேசத்துவங்கிவிடுவார்.

சுகா முறையாக இசைபயின்றவர். இயக்குனர் பாலுமகேந்திராவின்
உதவி இயக்குனராக பணியாற்றி பாலு மகேந்திராவின் செல்லப்
பிள்ளைகளில் திருநெல்வேலியின் மண்மணம் கமழ எழுதுபவர்.

இளையராஜாவின் ப்ரியா இசைத்தட்டு வெளியான இரவில் நண்பனின்
வீட்டில் அனைவரும் ஒன்று கூடி இரவு முழுவதும் அந்த பாடல்களை
ஒலிக்கவிட்டு கேட்டுக் கொண்டேயிருந்த நாள் மனதில் அப்படியே
இருக்கிறது. விடிகாலையில் வீடு திரும்பும் போது ரவி என்ற நண்பன்
சொன்னான்:
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

பாடல் ஒன்று போதும்! Empty Re: பாடல் ஒன்று போதும்!

Post by rammalar Mon Jul 25, 2016 5:13 pm

பாட்டை கேட்கக் கேட்க சந்தோஷமா இருந்துச்சிடா. ஆனா மனசுல
அழுகையும் முட்டிக்கிட்டு வருது. அவர் கால்ல விழுந்து கும்பிடணும்னு
தோணுது.

இதைச் சொல்லி முடிக்கும் போது அவனால் அழுகையை கட்டுப்படுத்த
முடியவில்லை. தேம்பி அழுதான். இவனைப் போல எத்தனையோ
ஆயிரமாயிரம் பேர்களின் கண்ணீர்த்துளிதான் இசைஞானி பெற்ற
மிகப்பெரிய விருது.

அவரது இசையில் பாடல் எழுதுவது என்ற கனவோடு எத்தனையோ
பேர் காத்துக்கிடக்கிறார்கள். நான் கவிஞனில்லை. கதாசிரியன்.
என்னை எதற்காக பாடல் எழுத கூப்பிடுகிறார். எனக்கு கேட்ட
பாடல்களின் வரிகளே நினைவில் தங்காதே என தயக்கமாக இருந்தது.

இளையராஜாவை சந்தித்தால் போதும், எனது இயலாமையைச் சொல்லி
பாடல் எழுதாமல் தப்பித்துவிடலாம் என்று தான் நினைத்துக்
கொண்டிருந்தேன்.
ஆனால் சுகா திடீரென ஒரு நாள் போன் செய்து ‘ராமகிருஷ்ணன் ட்யூன்
ரெடி. பாட்டு எங்க வச்சு எழுதப்போறீங்க’ என்று கேட்டார். அய்யோ இனி
தப்பிக்க முடியாது. மாட்டிக் கொண்டேன் என்ற பதைபதைப்புடடன்
டியூனை கேட்கிறேன் என்றேன்.

ஒரு குறுந்தகடினை கொண்டு வந்து கொடுத்தார். இரவு முழுவதும்
கேட்டுப்பார்த்தேன். ஒரு வார்த்தைக்கூட மனதில் வரவில்லை. கதை
எழுதச் சொன்னால் கடகடவென ஒரு மணி நேரத்தில் இருபது பக்கம்
எழுதிவிட முடிந்த என்னால் ஒரு பாடலின் முதற்சொல்லைக் கூட
எழுத இயலவில்லை.

பாடல் எழுதுவதற்கு ஏதோ சூட்சுமம் இருக்கிறது. அது பிடிபடவில்லை
என்று நினைத்துக் கொண்டு திரைப்பட பாடல் எதுவும் ஒரு நண்பரிடம்
ஆலோசனை கேட்டேன். அது ரொம்ப சிம்பிள். நாலு தடவை கேட்டா
வார்த்தைகள் தானே வந்து விழும் என்றார். அது அவருக்கு. நாம் நானூறு
தடவைகள் கேட்டாலும் ஒரு சொல்கூட விழவில்லையே என்று சங்கடமாக
இருந்தது.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

பாடல் ஒன்று போதும்! Empty Re: பாடல் ஒன்று போதும்!

Post by rammalar Mon Jul 25, 2016 5:14 pm

நாளை இளையராஜாவை சந்திக்க இருக்கிறோம். பாடலுடன் வாருங்கள்
என்று சுகா தொலைபேசியில் சொன்னதும் அன்றிரவு தூக்கம்
வரவேயில்லை.
காலை பிரசாத் லேப்பில் உள்ள இளையராஜா அலுவலகத்திற்கு சென்றேன்.
சுகா வாசலில் காத்திருந்தார். ‘என்ன ஆச்சு பாட்டு?’ என்று கேட்டார்.
‘மனசில இருக்கு வெளியே வரமாட்டேங்குது’ என்று சொன்னேன். அவர்
என்னை கேலி செய்யும் குரலில் ‘இப்படி மாட்டிக்கிட்டு முழிக்கிறதை
பார்க்க நல்லா தான் இருக்கு’ என்றார்

சுகா மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர். இருவரும் சிரித்தபடியே
வாசலில் நின்றிருந்தோம்.
இளையராஜாவைக் காண யாரோ மலையாளப் பாடகரும் கவிஞரும்
வந்திருந்தார்கள். அந்த சந்திப்பு முடிந்து வெளியே வந்த போது சுகாவும்
நானும் உள்ளே சென்றோம். இளையராஜாவின் சிரிப்பு நிகரற்றது.
மிகுந்த நட்புணர்வோடு வரவேற்று உபசரித்தார். பின்பு சுகா சொன்ன
கேலிகளைக் கேட்டு ரசித்தபடியே ‘பாட்டு எழுதறது ஒண்ணும் பெரிய
கம்பசூத்திரமில்லை. நான் சொல்லித் தருகிறேன்’ என்று கையில் ஒரு
பேடும் பேப்பரும் தந்து ட்யூனுக்கு எப்படி வார்த்தைகள் பொருந்திவரக்
கூடும் என கடகடவென சொல்ல ஆரம்பித்தார்.

‘இதுவே நல்லா இருக்கே சுகா. இதை வச்சிக்கோங்க என்னை விட்டுருங்க’
என்று ரகசியமாக சொன்னேன்.

‘அவர் சொல்வதைக் கேட்டு அதுபோல நீங்களா எழுதுங்க. அதுக்குத்தானே
கூட்டிகிட்டு வந்திருக்கேன். பாட்டு எழுதறது ஈசியில்லை, ஒழுங்கா
உட்கார்ந்து எழுதுங்க’ என மிரட்டும் குரலில் மெதுவாகச் சொன்னார்.

இளையராஜா அவர்களின் வழிகாட்டுதல் இருந்தால் போதும் எவரும்
ஒரு பாடலை எளிதாக எழுதி விட முடியும் என்பதை அன்று முழுமையாக
உணர்ந்தேன்.

‘தேரோடும் வீதியிலே’ என முதலடியை அவர் எடுத்துக் கொடுத்திருந்தார்.
கண்ணை மூடிக் கொண்டு அடுத்த சில வரிகளை எழுதினேன்.
வாசிக்கச் சொல்லி சிறு திருத்தங்கள் சொன்னார். அடுத்த சரணங்களை
எழுதினேன். அதில், சில சொற்களை முன்பின்னாக மாற்றினார்.
ஒருமணி நேரத்தில் பாடல் எழுதி முடிந்துவிட்டது.

இளையராஜா புன்சிரிப்புடன் ‘இவ்வளவுதான் பாட்டு ரெடி’ என்று
சொன்னார்.

சிறுவயதில் காய்ச்சல் அடிக்கிறது என மருத்துவரிடம் போகும்போது
அவர் கண்ணை மூடிக்கொள்ள என்று சொல்லிவிட்டு ஊசியில் மருந்தை
ஏற்றி கையில் நறுக்கென சொருகிவிட்டு வலி தாங்கமுடியாமல் நெளியும்
போது கையை தடவிவிட்டபடியே ‘அவ்வளவுதான்’ என்று சிரிப்பதை
போலிருந்தது.

சுகா பாடலை வாங்கி வாசித்தார். நல்லா வந்துருக்கு என்று சொன்னார்.
நண்பர் ஆயிற்றே அப்படித்தான் சொல்வார் என நினைத்தபடியே இ
ளையராஜாவை பார்த்துக் கொண்டிருந்தேன்.

எத்தனை ஆயிரம் பாடல்களை உருவாக்கிய கைகள். ஒவ்வொரு நாளும்
உலகெங்குமுள்ள தமிழர்களை சந்தோஷப்படுத்திக் கொண்டேயிருக்கும்
மகத்தான கலைஞன் முன்பு அமர்ந்திருக்கிறேன் என்ற நினைவுடன்
அவரை பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவரோ வெகு இயல்பாக தான் படித்த புத்தகங்கள் பற்றியும் ஜெயகாந்தன்
குறித்தும் பேசத்துவங்கினார். சில தினங்களில் அந்தப் பாடலின் பதிவு
இருக்கும். உங்களை அழைக்கிறேன் என்று சொன்னார். அவரது அறையை
விட்டு வெளியே வந்த போதும் வியப்பு கலையவில்லை.

அடுத்த வாரத்தில் ஒரு நாள் பாடல் பதிவு என சுகா மறுபடியும்
இளையராஜாவிடம் அழைத்துச் சென்றார். பாடலை சுதா ரகுநாதன் பாடினார்.
அற்புதமான பாடகி. அவரது கச்சேரிகளை கேட்டிருக்கிறேன்.

எனது பாடல் வரிகளை அவர் பாடுவார் என கற்பனை கூட செய்து
பார்த்ததில்லை. இளையராஜா அவர்கள் அந்தப் பாடலை எப்படி பாட
வேண்டும் என பாடிக்காட்டினார். பின்பு சுதா ரகுநாதன் பாடத்துவங்கினார்.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

பாடல் ஒன்று போதும்! Empty Re: பாடல் ஒன்று போதும்!

Post by rammalar Mon Jul 25, 2016 5:14 pm

அவர் பாட ஆரம்பித்தவுடன் வரிகள் உயிர்பெற்று அசையத்துவங்கின.
அது ஒரு மாயம். பாடகரின் குரல் பாடல்வரிகளுக்கு உயிர் கொடுக்கும்
அற்புத தருணம். அந்த மாயத்தை உருவாக்கும் மகத்தான மந்திரக்
கலைஞனாக இசைஞானி காட்சியளித்தார்.

பாடல் பதிவு முடிந்தபிறகு அதை ஒலிக்கவிட்டு கேட்டார். இன்னும்
இசைச்சேர்க்கைகள் பாக்கியுள்ளன. அதனை இணைத்து இன்னொரு
நாள் கேட்கலாம் என சொல்லி எப்படியிருக்கிறது பாடல்? என கேலியான
குரலில் கேட்டார். நான் நெகிழந்து போயிருந்தேன்.

‘மைடாஸ் என்ற மன்னர் தொட்டதெல்லாம் பொன்னாகிவிடும் என்பார்கள்.
நீஙகள் தொட்ட அத்தனையும் மகத்தான இசையாகிவிடுகிறது’ என்றேன்.
அவர் சிரித்தபடியே தனது அறைக்கு அழைத்துச் சென்றார். அன்றும் நீண்ட
நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

பின்பு ஒருநாள் பாடல் தயாராகிவிட்டது என சுகா அழைத்துச் சென்று
பாடலினை ஒலிக்கவிட்டு கேட்க வைத்தார். கேட்டுமுடித்தபிறகு
சந்தோஷமான மனநிலையில் ‘நல்ல பாடல் ஒன்றில் என் பெயரும் ஒட்டிக்
கொண்டுவிட்டது அவ்வளவுதான்’ என்றேன்.

சினிமாவிற்குள் வந்த போது நான் எதற்கும் ஆசைப்பட்டதில்லை.
ஆனால் மனதிற்குள் இசைஞானியோடு ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள
வேண்டும் என்று மட்டும் சின்னஞ் சிறிய ஆசையிருந்தது.

அதற்கான சில தருணங்கள் வந்தபோது எனது கூச்சத்தால் புகைப்படம்
எடுத்துக் கொள்ளவில்லை. இதை சுகாவிடம் சொன்னது அவர் நானே
சொல்லணும்னு நினைச்சேன். இபபவே போட்டோ எடுத்துக் கொள்வோம்
என இசைஞானியை அழைத்து வந்தார். நாங்கள் மூவரும் இணைந்து
புகைப்படம் எடுத்துக் கொண்டோம். மறக்கமுடியாத புகைப்படமது.

படித்துறை என்ற சுகாவின் முதற்படம் எதிர்பாராத காரணங்களால்
இன்றுவரை வெளியாகவில்லை. ஆகவே பாடல்களும் வெளியாகவில்லை.
சுகா மனம் சோர்ந்து போனார். பின்பு புதிய நம்பிக்கையுடன் பாபநாசம்
படத்திற்காக கமல்ஹாசனுடன் இணைந்து வசனமேம்பாடு மற்றும்
உச்சரிப்பு பணிகளுக்கா வேலை செய்ததுடன் தூங்காவனம் படத்திற்கு
வசனம் எழுதி தனது வெற்றியைத் தேடிக் கொண்டார்.

இப்போது சுகா புதிய படம் ஒன்றை இயக்குவதில் ஈடுபட்டிருக்கிறார்.
அதுவும் நிச்சயம் பெரிய வெற்றிபெறும்.

மக்களின் காதுகளை சென்று அடையாத எனது முதற்பாட்டினை
இன்னொரு முறை கேட்கவேண்டும் என்ற ஆசை சமீபத்தில் ஏற்பட்டது.
சுகாவிடம் போனில் சொன்னேன். உடனே அப்பாடலை அனுப்பிவைத்தார்.

பாடலை திரும்பக் கேட்டபோது ஒரு எழுத்தாளனாக என் மீது கொண்டு
அன்பிற்கு சாட்சியாக இப்பாடலைப் பரிசாகத் தந்த இசைஞானிக்கும்
சுகாவிற்கும் என்ன செய்துவிட முடியும் என தோன்றியது.

எழுத்தாளனிடம் இருப்பது சொற்கள் மட்டும்தானே.
நன்றி… நன்றி… நன்றி என மூன்று முறை மனதிற்குள் சொல்லிக்
கொண்டேன். நன்றி என்பது சிறிய வார்த்தைதான். ஆனால் மனதின்
ஆழத்திலிருந்து வெளிவரும் சொல்.

நிச்சயம் மழைத்துளியைப் போல அன்பின் ஈரத்தை வெளிப்படுத்தும்
என்றே தோன்றியது.

————————————————-

– எஸ். ராமகிருஷ்ணன்
குமுதம்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

பாடல் ஒன்று போதும்! Empty Re: பாடல் ஒன்று போதும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum