தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அருணகிரிநாதர் போற்றி அகவல்

View previous topic View next topic Go down

அருணகிரிநாதர் போற்றி அகவல் Empty அருணகிரிநாதர் போற்றி அகவல்

Post by முழுமுதலோன் Thu Jul 28, 2016 3:35 pm

வ. சு. செங்கல்வராய பிள்ளை எழுதிய
அருணகிரிநாதர் போற்றி அகவல்




திருத்தணிகேசன் துணை.
அருணகிரிநாதர் போற்றி அகவல்


(போற்றி 108)


அருணைப் பதிவரும் அண்ணலே போற்றி
தவஞ்சார் குலத்தவ தரித்தனை போற்றி
புவிவாழ் வாழ்க்கை புண்தரும் என்று
சோகமுற் றுயிரைத் துறக்க, அருணைக்
கோபுரத் திருந்து குதித்த ஞான்று 5
பூர்வ புண்ணியப் பூர்த்தியின் பயனால்
எம்மான் பெம்மான் எந்தை முருகனால்
ஆட்கொளப் பெற்ற அரசே போற்றி
திருவடி தீஷை பெற்றனை போற்றி
மௌனோப தேச மாண்பது பெற்றும், 10
'அருணகிரி நாத'என் றழைக்கப் பெற்றும்,
கீரனை மீட்ட கிளர்வடி வேலால்
நாவிற் சடாக்ஷரம் நாட்டப் பெற்றும்
ஞான உயர்நிலை நயந்தனை போற்றி
'முத்தித் தரு' எனும் முதலடி முதல்வன் 15
எடுத்துக் கொடுக்க எழிலார் பாக்கள்
பதினா றாயிரம் பாடினை போற்றி
அண்ணா மலையரும் உண்ணா முலையளும்
திருநீ றளித்துச் செவ்வே புரக்கும்;
தண்ணருள் பெற்ற புண்ணிய போற்றி 20
மலநோய் மாண்டிட வள்ளியின் கரத்தால்
தீண்டப் பெற்ற ஆண்டகை போற்றி
தலந்தொறும் சென்று சண்முகற் றுதித்து
நலஞ்சார் பாடல் நவின்றனை போற்றி
திருவெணெய்ப் பதியில் திருநடங் கண்டு 25
களித்துப் பாடிய கவிஞனே போற்றி
தில்லையில் நடன திவ்விய தரிசனம்
ஒல்லையிற் கண்டங் குவந்தனை போற்றி
ஏரகப் பதியில் எந்தை பாத
தரிசனம் பெற்ற தவத்தோய் போற்றி
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அருணகிரிநாதர் போற்றி அகவல் Empty Re: அருணகிரிநாதர் போற்றி அகவல்

Post by முழுமுதலோன் Thu Jul 28, 2016 3:36 pm

திருவை யாறுடன் ஏழு திருப்பதி
விழாவைக் கண்ட மேலவ போற்றி
தண்ணியல் வயலூர்த் தலத்தினில் அத்தன்
வித்தக மருப்புடை வேழமுகத்தன்
மயில்வேல் கடம்பு மாணடி குக்குடம் 35
பன்னிரு தோளவை பயிலும் சந்தம்
பாடெனச் செப்பும் பாக்கியம் பெற்ற
உத்தம பத்தியில் உயர்ந்தோய் போற்றி
திருப்புகழ் நித்தம் செப்பும் பேற்றை
அத்தலத் தேபெற் றமர்ந்தனை போற்றி 40
'விகட பரிமள' எனவரும் வீறார்
அரிய பெரிய திருப்புகழ் அதனைச்
செப்பிய ஞான்று திருவார் முருகன்
கனிவுடன் ஏக முகத்துடன் கனவிடைத்
தோன்றி 'அன்ப! சுதினம் இன்றே 45
விராலி மலைக்கு வா' என விளக்கி
அவாவுடன் அழைக்க அணைந்தனை போற்றி
கருச்சந் திப்பைக் கழிக்க வல்ல
திருச்செங் கோட்டிற் சேயைக் கண்டு
நாலா யிரங்கண் நான்முகன் படைத்திலன் 50
அந்தோ என்றங் கழுங்கினை போற்றி
நாகா சலத்து நாத எனக்கு
நால்வகைக் கவிகள் நயந்தளித் தென்றும்
சாகா வரமதைத் தந்தனை என்றே
அநுபூதிக் கவி அருளினை போற்றி 55
எங்கே நினைப்பினும் அங்கே எனது
செங்கோட்டு வேலன் தேர்ந்தளிப் பானெனச்
செப்பி மகிழ்ந்த சீமான் போற்றி
செடிக்கா பலசூழ் சென்னி மலையிற்
படிக்காசு பெற்ற பண்ப போற்றி
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அருணகிரிநாதர் போற்றி அகவல் Empty Re: அருணகிரிநாதர் போற்றி அகவல்

Post by முழுமுதலோன் Thu Jul 28, 2016 3:36 pm

கொடுங்குன் றத்துக் குமரன் ஆடிய
நிர்த்த தரிசனம் நேரிற் காணும்
மாதவப் பேறு வாய்ந்தனை போற்றி
ஆவினன் குடிவாழ் அறுமுகன் அருளாற்
செபமாலை பெற்ற திறத்தோய் போற்றி 65
உனது பழநி ஊரைச் சேவித்
தறியேன் இதுவரை அந்தோ என்று
மனந்தடு மாற மலைமிசை ஏறி
அனந்தம் பாடல் அருளினை போற்றி
பழநி பழநி பழநி என்னும் 70
அமுதப் பேரை அநுதினம் சொல்லி
நெஞ்சே நற்கதி நேடிலை நீயென்
றிடித்துக் கூறின எம்மான் போற்றி
பழநிப் பெருமான் படிவம் மறவாக்
கலிசைச் சேவகன் கவினார் பத்தியை 75
மெச்சி வியந்து நச்சினை போற்றி
மதுரைப் பதியில் மதுரக் கவிகள்
சிலபல பாடித் திருப்பரங் குன்றிற்
செவ்வேள் மகிழத் திருப்புகழ் பாடிப்
பரவிப் பணிந்த பரம போற்றி 80
செந்தூர்ப் பதியிற் சேய்கழல் பாடி
முந்தூர் பத்தி முதிர்தரப் பெற்று
நெஞ்சங் குளிர்ந்த நிமல போற்றி
அத்தலந் தன்னில் அன்றொரு தினத்தில்
தன்கண் காணத் தனிமுதற் பெருமான் 85
பாலகுமரன் பயில்திரு நடனம்
கண்டு களித்த காதல போற்றி
வாதுக் கழைத்து வண்டமிழ்ப் புலவர்க்
கேதம் விளைத்த இயற்றமிழ்ப் புலவன்
வில்லி என்னும் வல்லவன் திகைக்க
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அருணகிரிநாதர் போற்றி அகவல் Empty Re: அருணகிரிநாதர் போற்றி அகவல்

Post by முழுமுதலோன் Thu Jul 28, 2016 3:37 pm

அந்தாதி பாடி அரும்பொருள் காண
முடியா வகையில் முடித்தொரு செய்யுளைச்
செப்பிய திறஞ்சேர் செம்மலே போற்றி
இலங்கைத் தீவின் எழிலுறு தலங்கள்
தரிசனம் செய்த சதுரனே போற்றி 95
மகாடவி ஒன்றில் வழியிழந் தங்கே
அலமந்த போதில் அறுமுக வள்ளல்
சகாயஞ் செய்யத் தழைத்தனை போற்றி
இலங்கைத் தீவில் எழி ற்கதிர் காமத்
தலத்தினில் வேடன் தந்த பூஜையை 100
மகிழ்ந்தவ என்ன மயிலவற் றுதித்தே
'அகரமு மாகி' எனவரும் அந்த
திவ்விய திருப்புகழ் திருவளர் சோலை
மலையினிற் பாடி வணங்கினை போற்றி
துருத்தித் தலத்தில் சுப்பிர மணிவேள் 105
மயிற்பொறி வேற்பொழி வழங்கப் பெற்ற
மகாதவம் பெற்ற மாண்பினை போற்றி
தணிகை மலையினிற் சாமி நடனங்
கண்டு களித்த கண்ணிய போற்றி
வள்ளி யாடிய வள்ளி மலையைக் 110
குன்னம் குறிச்சி வெளியாக் கியமலை
இஃதென விளக்கிய எந்தாய் போற்றி
தமது மடத்திற் சண்முகன் உருவைக்
கழிபே ருவகையில் வழிபாடாற்றிய
சோம நாதரின் தூய பத்தியை 115
எடுத்து விளக்கிய இறைவ போற்றி
செந்தமிழ் மணமுடன் தெய்வ மணங்கமழ்
அலங்கார மாலை அருளினை போற்றி
தேவி உபாசனைச் சம்பந் தாண்டான்
வரவழை முருகனை எனவழக் கிடலும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அருணகிரிநாதர் போற்றி அகவல் Empty Re: அருணகிரிநாதர் போற்றி அகவல்

Post by முழுமுதலோன் Thu Jul 28, 2016 3:38 pm

எடுத்து விளக்கிய இறைவ போற்றி தேவேந்த்ர சங்க வகுப்பது செப்பித்
தேவியைத் திருப்தி யூட்டிச் சேயை
மயிலுமாடி வாஎன் றழைத்து
மன்னன் பிரபுட தேவன் மகிழச்
சபைதனிற் காட்டிய சதுர போற்றி. 125
எடுத்து விளக்கிய இறைவ போற்றி கிளிஉரு அதனிற் கிளர்ந்து பறந்து
பண்ணவர் உலகுறு பாரி ஜாதப் பூ
மண்மிசைக் கொணர்ந்த மகிப போற்றி
தனதுடல் மறைந்த தகைமையைக் கண்டதும்
திருவருள் இஃதெனத் தேறிச் சுகவுரு 130
எடுத்து விளக்கிய இறைவ போற்றி சுகவுரு என்னச் சுகித்த நிலையில்
அநுபூ திக்கவி அருளினை போற்றி
அவ்வத் தலங்களில் அருளிய கவிகளில்
உலகோர் உய்யும் ஒருவழி காண
விளக்கம் பலபல விரித்தனை போற்றி 135
எடுத்து விளக்கிய இறைவ போற்றி கனைத்தெழும் பகட்டினன் கலக்குறும் செயலற
'உனைத்தினம்' எனும் புகழ் உரைத்தனை போற்றி
எப்போது வருவாய் என்முன் எனவரு
'முந்துதமிழ்ப்' பாவை மொழிந்தனை போற்றி
என்றுநின் தெரிசனை எனக்குறு மோஎனும் 140
எடுத்து விளக்கிய இறைவ போற்றி 'அந்தகன்' எனும்புகழ் அருளினை போற்றி
'வீணாள் படாதருள்' எனும் புகழ் விழைந்து
சொற்ற திருப்புகழ்ச் சுந்தர போற்றி
'நாத விந்து கலாதீ' என நவின்
றோது பூஜைப் புகழ்உல குய்ய 145
எடுத்து விளக்கிய இறைவ போற்றி ஓதின எங்கள் உத்தம போற்றி
இக்குறை உண்டிங் கிந்நலம் இல்லை
என்னிடத் தெனமுறை யிட்ட புகழ்ப்பா
உலகுய ஈந்த உண்மைய போற்றி
செனனமிங் குண்டெனில் செவிடு குருடெனும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அருணகிரிநாதர் போற்றி அகவல் Empty Re: அருணகிரிநாதர் போற்றி அகவல்

Post by முழுமுதலோன் Thu Jul 28, 2016 3:38 pm

எடுத்து விளக்கிய இறைவ போற்றி குறைகளாற் குன்றிக் குறைபடா வகைதந்
தென்மனம் என்றும் நின்பாற் பொருந்துக
எனுமுறை யீட்டை எம்பிரா னிடத்தே
வைத்த அருள் நிறை வித்தக போற்றி
முப்பால் செப்பிய கவிதையின் மிக்கதாம் 155
எடுத்து விளக்கிய இறைவ போற்றி தேவா ரஞ்சொலும் தெய்வம் இவரென
ஏத்தி ஓர் நுண்பொருள் இயம்பினை போற்றி
ஆறு முகமென ஆறு முறை சொலித்
திருநீ றிடும்வகை தெரித்தனை போற்றி
ஞான யோக நன்னிலையதனை 160
எடுத்து விளக்கிய இறைவ போற்றி 'ஞானங்கொள் பொறி'தனில் நாட்டினை போற்றி
'இகபர சௌ பாக்யம்' இருநிலத் தோர்பெற
'வசனமிக' என்னும் மாண்பார் பாவை
வகுத்த கருணைசேர் வரதனே போற்றி
'வரதா மணி' எனும்வலமார் புகழில் 165
எடுத்து விளக்கிய இறைவ போற்றி ரசவா தத்தை உதவா ரசமென
உதறித் தள்ளிய உத்தம போற்றி
மகவது வேண்டினோர் மகவது பெறவே
பிள்ளைப் பெருமநின் பீடுறு வாயால்
முத்தந் தந்தருள் எனவரும் மொய்ம்பார் 170
எடுத்து விளக்கிய இறைவ போற்றி புகழது செப்பிய புண்ணிய போற்றி
ஓவிய அந்தமே ஒன்றுக எனவிழை
ஓர்புகழ் உரைத்த ஒள்ளிய போற்றி
'நாவே றெ'னவரும் நற்றிருப் புகழில்
நீநான் அற எனும் நின்மல முத்தியை 175
எடுத்து விளக்கிய இறைவ போற்றி நாடி விரும்பிய நாதனே போற்றி
'இடர்சங் கைகளவை எனைக் கலக் காவகை
எந்தாய் அருளென எந்தையை வேண்டி
நாமுய 'அதிரும் கழலெனும்' நற்பா
தந்த கருணைத் தம்பிரான் போற்றி
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அருணகிரிநாதர் போற்றி அகவல் Empty Re: அருணகிரிநாதர் போற்றி அகவல்

Post by முழுமுதலோன் Thu Jul 28, 2016 3:39 pm

எடுத்து விளக்கிய இறைவ போற்றி சமாதி மனோலயம் தந்தருள் என்னும
சமானமில் புகழைச் சாற்றினை போற்றி
திருப்புகழ் செப்பும் திறத்தினர் உழைநான்
சேர்வகை யருளெனும் செம்மலே போற்றி
நோயிலா வாழ்வை நாம்பெறு நோன்மை 185
எடுத்து விளக்கிய இறைவ போற்றி பெற்றுய வேண்டிப் பேரரு ளோடே
'இருமலு ரோக முயலகன் வாதம்'
எனும்புகழ் எங்கட் கீந்தனை போற்றி
பகைத்திறம் வெல்லும் பாணம தாகும்
'சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும்' 190
எடுத்து விளக்கிய இறைவ போற்றி எனும்புகழ் செப்பிய எம்மான் போற்றி
'மைந்தா குமரா' எனுமந் திரத்தை
'அந்தோ மனமே' என அழைத் தழகாய்
உபதே சித்தஒரு முதல் போற்றி
'ஆடு மயிலின்' தத்துவம் அறிகிலேன் 195
எடுத்து விளக்கிய இறைவ போற்றி என உரைத் தேங்கிய எந்தாய் போற்றி
நாணமில் நிலையை நயந்தருள் என்னப்
பேணி இரங்கிய பெரும போற்றி
ஈதலே அறமென எடுத்துக் காட்டிய
மாதவ முநிவ மகிப போற்றி 200
எடுத்து விளக்கிய இறைவ போற்றி மணம்நிறை வேறும் வாய்ப்பினை வேண்டினோர்
நினைப்பது கூடிட 'நீலங்கொள்' என்னும்
அழகிய பாடலை அருளினை போற்றி
கருப்பம் நலனுறக் கருதினர் ஓத
'மதியால் வித்தகன்' எனவரும் மாண்பார் 205
எடுத்து விளக்கிய இறைவ போற்றி பாவினைத் தந்த பகவ போற்றி
உருகும் அன்புடன் முருகன் பொறையை
வியந்தங் கேத்திய மெய்த்தவ போற்றி
தாப சபலம் தணக்கும் வழியினைத்
தந்தருள் கந்த சண்முக குகனே 210
எனத்துதி செய்த எம்பிரான் போற்றி
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அருணகிரிநாதர் போற்றி அகவல் Empty Re: அருணகிரிநாதர் போற்றி அகவல்

Post by முழுமுதலோன் Thu Jul 28, 2016 3:40 pm

உதய மரணம் ஒன்றிடாப் பொருளை
உதவுக என்ற உத்தம போற்றி
விதிவழி யேஎனை வினைநோய் சூழின்
கலங்கா மதியைக் கருணா கரநீ 215
ஈந்தருள் என்ற இறைவ போற்றி
மதியோ கதியோ மாண்புறும் ஒன்றைத்
தந்தருள் என்ற சதுர போற்றி
'வேந்தா சேந்தா' என விழை மந்திரம்
வீண்போ காதென விளம்பினை போற்றி 220
யானென தறலே இன்ப முத்தி
எனுந்தத் துவத்தை இயம்பினை போற்றி
உண்பதன் முன்னர் 'சண்முக வா' என
உரைத்தங் கொருபிடி யீந்தபின் உண்க
எனுமுப தேசம் ஈந்தனை போற்றி 225
தனிவழி நடக்கும் தருணம் வேல்மயில்
எனச்சொலி நடக்கஎன் றியம்பினை போற்றி
முத்தி வேண்டினோர் முருகனற் பதத்தில்
கருத்தைப் புகட்டின் கடிதிற் பெறலாம்
எனுமறை மொழியை இசைத்தனை போற்றி 230
கொள்களின் கொடுமை குலைகுலைந் திடவே
'சேயவன் புந்தி' எனுந்திருப் பாவை
உலகுக் களித்த ஒருவ போற்றி
தும்மும் போதெலாம் 'குமர சரணம்'
எனச் சொலும் வழக்கம் ஏற்படின் உய்தி 235
பெறலாம் என்ற பெருமைய போற்றி
பிறவிக் கடலிற் பிடிபடா திருக்க
விரும்பினால் முருகன் மேதகு நாமம்
புகலுக என்று புகன்றனை போற்றி
புந்திக் கிலேசமும் காயக் கிலேசமும் 240
போக்க விரும்பினோர் புனித மூர்த்தியாம்
முருகனை மறவா முறைசித் திக்க
பொய்யை நிந்திக்க உண்மை சாதிக்க
என எடுத் துரைத்த ஏந்தலே போற்றி
தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் 245
தானம் இடுங்கோள் தவறா தென்றும்
இருந்த படியே இருங்கோள் என்ற
பேருப தேசம் பேசினை போற்றி
கதிபெற வேண்டின் கரவா திடுக
கருதுக வடிவேல் இறைதிருக் கழலை 250
எனக்குறிப் பிட்ட எந்தாய் போற்றி
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அருணகிரிநாதர் போற்றி அகவல் Empty Re: அருணகிரிநாதர் போற்றி அகவல்

Post by முழுமுதலோன் Thu Jul 28, 2016 3:40 pm

வாழி வாழி எனமற வாது
பரவிடின் சரண பங்கயம் தருவன்
முருகன் என்று மொழிந்தனை போற்றி
சிற்றடிப் பெருமையைச் செப்பினை போற்றி 255
வேலின் பெருமையை விளக்கினை போற்றி
வேல்வாங்கு திறத்தை விரித்தனை போற்றி
திருக்கை வழக்கம் தெரித்தனை போற்றி
ஞானவேழம் நவின்றனை போற்றி
சித்து வகுப்பைத் திறமுடன் ஓதித் 260
திருப்புகழ்ப் பெருமையைத் தெரித்தனை போற்றி
கருத்தன் அருளிய பெருத்த வசனப்
பெருமையின் அருமையைப் பேசினை போற்றி
கிள்ளை மொழியாள் வள்ளியின் வேளைக்
காரன் முருகெனக் கழறினை போற்றி 265
வேடிச்சி காவலன் வேலவ நீஎனப்
பாடிக் கசிந்துளம் பரவினை போற்றி
பூதவே தாள அலகைகள் போரிற்
கொண்ட குதூகலம் விண்டனைப் போற்றி
திருப்புயப் பெருமையைச் செப்பினை போற்றி 270
கந்தன் முருகன் கடம்பன் கருணையன்
கடைக்கண் இயலைக் கடைந்தெடுத் தோதிப்
பயன் பல உண்டு பாரீர் பாரீர்
வாரீர் வாரீர் எனப் பறை சாற்றிய
பரம கருணைப் பண்பனே போற்றி 275
மௌன நிலையே மதிப்பிலா திலகும்
சிவலோ கம்மெனச் செப்பினை போற்றி
இங்ஙனம் எம்மான் எழிலதை வகுத்துத்
தணிகை எம் பெருமான் தன் கரத் தமர்ந்த
சுக உரு விளங்கும் சுகமே போற்றி 280
அருண கிரி எனும் அப்பனே போற்றி
சுத்தனே போற்றி நித்தனே போற்றி
அத்தனே போற்றி பத்தனே போற்றி
கண்ணே போற்றி கண்மணியே போற்றி
போற்றி போற்றி பூதலம் உய்யத்
திருப்புகழ் தந்த தெய்வமே போற்றி. 286

சுபம்

வேலுமயிலுந் துணை.

http://www.projectmadurai.org/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அருணகிரிநாதர் போற்றி அகவல் Empty Re: அருணகிரிநாதர் போற்றி அகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum