தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


திருவலஞ்சுழி – கோயில்

View previous topic View next topic Go down

திருவலஞ்சுழி – கோயில் Empty திருவலஞ்சுழி – கோயில்

Post by rammalar Sat Sep 03, 2016 6:21 pm

கோயில்

கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம், மூன்று
திருச்சுற்றுகள், ஐந்து மண்டபங்கள், மூன்று விமானங்கள்
கொண்டு கோயில், நுழைந்ததும், உள்ள மிக விஸ்தாரமான
பிராகாரம், அதில் ஒரு திருக்குளம். குளத்தின் மேல் கரையில்
‘ஜடா தீர்த்த விநாயகர்’ சிறிய சன்னதி ஒன்றில்
குடிகொண்டுள்ளார்.

இரண்டாவது வாயிலில் பஞ்சமூர்த்தி சுதை வடிவங்கள்.
இது கட்டை கோபுரம் கொண்டுள்ளது.

இதைக் கடந்து இரண்டாவது பெரிய பிராகாரத்தில், மூலவரின்
கோபுரத்திற்கு முன்பாக ஸ்வேத விநாயகருக்கென்று தனிக்
கோயில். இக்கோயிலுக்கென கொடி மரம், நந்தி மண்டபம்
எல்லாம் உண்டு.

அழகிய வேலைப்பாடுகள் கொண்ட 36 தூண்கள் அமைந்த
மண்டபம், விநாயகர் கோயிலுக்கு தனி அழகைத் தருகின்ற
ஒரே கல்லில் குடைந்து செய்யப்பட்ட பலகணி சிற்பியின்
கலைத் திறனைக் காட்டுகி்ன்றன.

இந்த விநாயகரின் கருவறையை இந்திரன் விருப்பத்திற்கு
ஏற்ப தேவலோக சிற்பி விஸ்வகர்மாவே கட்டினார் என்று ஐதிகம்.

விநாயகர் கோயில் மூலஸ்தானம் காயத்ரி மண்டபம் என்று
அழைக்கப்படுகிறது. காயத்ரி மந்திர 24 அட்சரங்களுக்கு ஏற்ப
24 தூண்கள். எல்லாம் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள்
கொண்டவை காண்போரை வியக்கச் செய்பவை.

கருவறையில் கலச நிலைப்படி, கலசத்தேர் மாடம், கலச மஞ்சம்
ஆகியவற்றின் மேல் விநாயகர் தந்தம், அங்குசம், பாசம், மோதகம்
ஏந்திய நிலையில் வெண்மையான தோற்றத்தில் ஒரு முழ நீளமே
கொண்டவராக அமர்ந்துள்ளார். இவரை வழிபட்டால் மணப்பேறு,
மகப்பேறு கிட்டுவதாகச் சொல்கிறார்கள்.

ஆலயத்தின் பிரமாண்டம் நம்மை பிரமிக்க வைக்கிறது. மனிதர்கள்
கட்டியதா, பூதங்களும் சிவ கணங்களும் சேர்ந்து கட்டியதா என்று
வியப்படைச் செய்யும் விதமாக அமைந்துள்ளது.

அரசன் ஒருவன் செய்த தெய்வ குற்றத்திற்காக கண் பார்வை
இழந்தான். இத்தலத்து ஈசனை வேண்டி விரதமிருந்த பலனால்,
மீண்டும் கண்ணொளி பெற்றான். நேர்த்திக்கடனாக அவன் கட்டிய
மண்டபம் ஒன்று, ‘அபராத மண்டபம்’ எனும் பெயரில் விளங்குகிறது.
மற்றும் அலங்கார மண்டபம் நிறைமணி மண்டபம் உற்சவ மண்டபம்
ஆகியனவும் உள்ளன.

மூன்றாம் வாயிலைக் கடந்ததும் வருவது முதல் திருச்சுற்று.
அதன் தென்புறம் நவசக்தி லிங்கம், மேற்கில் தல விநாயகரான
வலஞ்சுழி விநாயகர், சோம தேவன், வள்ளி – தெய்வானை சமேத
சுப்பிரமணியர், வடக்கில் தேவர்கள் பூஜித்த லிங்கம் ஆகியோர்
பிரதிஷ்டைச் செய்யப்பட்டுள்ளனர்.

தெற்கு பிராகார இடதுபுற நீண்ட மண்டபத்தில் 32 சிவலிங்கங்கள்
ஒரே வரிசையில் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளன. அந்தந்த
சிவலிங்கத்திற்கும் மேலே சுவரில் அதன் பெயர்கள் எழுதி
வைக்கப் பட்டுள்ளது.

கருவறைப் புறச்சவர், பிறைகளில் பிட்சாடனர், நடராஜர்,
நர்த்தன கணபதி ஆகியோருக்கு அடுத்தபடியாகவே
தட்சிணாமூர்த்தி உள்ளார். நடராஜர் மற்றும் பிட்சாரடனர் சிற்பங்கள்
எழிலார்ந்தவையாக உள்ளன. நடராஜர் கையில் பாம்பு உள்ளது.

இக்கோயிலில் நவகிரக சன்னதி கிடையாது.

அதனால் கோஷ்டத்தில் பிரம்மா, துர்க்கை, அர்த்தநாரீசுவரரை
அடுத்து, சனீஸ்வர பகவானுக்கு தனி சந்நதி உள்ளது. சனீஸ்வரர்
கிழக்கு முகமாக இருக்க, நேர் எதிரே சூரியன், மேற்கு முகமாக
நிறுவப்பட்டுள்ளார். ஒருவரையொருவர் பார்த்தபடி இங்கு
சனீஸ்வரருக்கும் சூரியனுக்கு தனித்தனி பூஜைகள் உண்டு.

மூலவர் கபர்தீஸ்வரர் லிங்க வடிவில் கருவறையில் எழுந்தருளியுள்ளார்.
தெய்வ சாந்நித்யம் பரிபூரணமாகத் திகழும் சந்நதி. இவர் வலஞ்சுழி நாதர்
என்றும் அழைக்கப்படுகிறார்.

அம்பாள் பெரிய நாயகி எனும் பெயரில் தனிச் சந்நதியில் உள்ளார்.
அஷ்டபுஜ காளியும் எட்டுக் கரங்களுடன் தனிக்கோயில் கொண்டுள்ளார்.

காவிரியும் அரிசிலாறும் இத்தலத்தில் இரண்டு புண்ணிய தீர்த்தங்கள்.
கோயிலுக்குள் இருக்கும் திருக்குளம் – ஜடா தீர்த்தம், சிவனின்
ஜடாமுடியுள் உள்ள கங்கையின் பெயரால் அமைந்தது.

கோயிலில் நான்கு கால பூஜை நந்திக்கு பின்புறம் இருந்தே ஆராதனை
நடத்துகின்றன. பத்து நாள் பிரமோற்சவம் உண்டு. ஒன்பதாம் நாள்
விழாவில் இந்திரனுக்கென தனி பூஜை உண்டு. பத்தாம் நாள் பஞ்சமூர்த்தி
ஊர்வலம் சென்று தீர்த்தவாரி நடைபெறுகிறது.

அருகிலுள்ள அறுபடை தலமான சுவாமிமலைக் கோயிலின் உபகோயில்
இது. திருஞான சம்பந்தரால் தேவாரத்திலும் திருநாவுக்கரசரால்
திருத்தாண்டகத்திலும் பாடப்பெற்ற தலம்.

சம்பந்தர் இத்தலத்து ஈசனை வணங்கும்போது ‘என்ன புண்ணியம்
செய்தனை நெஞ்சே…’ என்று மனமுருகிப் பாடுகின்றார்.
பல சிறப்புகள் கொண்ட இத்தலத்தை நீங்களும் சென்று வழிபட்டு
வரலாமே.

எங்கே இருக்கு: கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில்
திருவலஞ்சுழி உள்ளது.

தரிசன நேரம்: காலை 6-12; மாலை 4-8

———————————————

– ஆர்.சி. சம்பத்
குமுதம் பக்தி செய்திகள்:
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

திருவலஞ்சுழி – கோயில் Empty Re: திருவலஞ்சுழி – கோயில்

Post by rammalar Sat Sep 03, 2016 6:57 pm


அரசன் ஒருவன் செய்த தெய்வ குற்றத்திற்காக கண் பார்வை
இழந்தான். இத்தலத்து ஈசனை வேண்டி விரதமிருந்த பலனால்,
மீண்டும் கண்ணொளி பெற்றான். நேர்த்திக்கடனாக அவன் கட்டிய
மண்டபம் ஒன்று, ‘அபராத மண்டபம்’ எனும் பெயரில் விளங்குகிறது.
மற்றும் அலங்கார மண்டபம் நிறைமணி மண்டபம் உற்சவ மண்டபம்
ஆகியனவும் உள்ளன.

மூன்றாம் வாயிலைக் கடந்ததும் வருவது முதல் திருச்சுற்று.
அதன் தென்புறம் நவசக்தி லிங்கம், மேற்கில் தல விநாயகரான
வலஞ்சுழி விநாயகர், சோம தேவன், வள்ளி – தெய்வானை சமேத
சுப்பிரமணியர், வடக்கில் தேவர்கள் பூஜித்த லிங்கம் ஆகியோர்
பிரதிஷ்டைச் செய்யப்பட்டுள்ளனர்.

தெற்கு பிராகார இடதுபுற நீண்ட மண்டபத்தில் 32 சிவலிங்கங்கள்
ஒரே வரிசையில் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளன. அந்தந்த
சிவலிங்கத்திற்கும் மேலே சுவரில் அதன் பெயர்கள் எழுதி
வைக்கப் பட்டுள்ளது.

கருவறைப் புறச்சவர், பிறைகளில் பிட்சாடனர், நடராஜர்,
நர்த்தன கணபதி ஆகியோருக்கு அடுத்தபடியாகவே
தட்சிணாமூர்த்தி உள்ளார். நடராஜர் மற்றும் பிட்சாரடனர் சிற்பங்கள்
எழிலார்ந்தவையாக உள்ளன. நடராஜர் கையில் பாம்பு உள்ளது.

இக்கோயிலில் நவகிரக சன்னதி கிடையாது.

அதனால் கோஷ்டத்தில் பிரம்மா, துர்க்கை, அர்த்தநாரீசுவரரை
அடுத்து, சனீஸ்வர பகவானுக்கு தனி சந்நதி உள்ளது. சனீஸ்வரர்
கிழக்கு முகமாக இருக்க, நேர் எதிரே சூரியன், மேற்கு முகமாக
நிறுவப்பட்டுள்ளார். ஒருவரையொருவர் பார்த்தபடி இங்கு
சனீஸ்வரருக்கும் சூரியனுக்கு தனித்தனி பூஜைகள் உண்டு.

மூலவர் கபர்தீஸ்வரர் லிங்க வடிவில் கருவறையில் எழுந்தருளியுள்ளார்.
தெய்வ சாந்நித்யம் பரிபூரணமாகத் திகழும் சந்நதி. இவர் வலஞ்சுழி நாதர்
என்றும் அழைக்கப்படுகிறார்.

அம்பாள் பெரிய நாயகி எனும் பெயரில் தனிச் சந்நதியில் உள்ளார்.
அஷ்டபுஜ காளியும் எட்டுக் கரங்களுடன் தனிக்கோயில் கொண்டுள்ளார்.

காவிரியும் அரிசிலாறும் இத்தலத்தில் இரண்டு புண்ணிய தீர்த்தங்கள்.
கோயிலுக்குள் இருக்கும் திருக்குளம் – ஜடா தீர்த்தம், சிவனின்
ஜடாமுடியுள் உள்ள கங்கையின் பெயரால் அமைந்தது.

கோயிலில் நான்கு கால பூஜை நந்திக்கு பின்புறம் இருந்தே ஆராதனை
நடத்துகின்றன. பத்து நாள் பிரமோற்சவம் உண்டு. ஒன்பதாம் நாள்
விழாவில் இந்திரனுக்கென தனி பூஜை உண்டு. பத்தாம் நாள் பஞ்சமூர்த்தி
ஊர்வலம் சென்று தீர்த்தவாரி நடைபெறுகிறது.

அருகிலுள்ள அறுபடை தலமான சுவாமிமலைக் கோயிலின் உபகோயில்
இது. திருஞான சம்பந்தரால் தேவாரத்திலும் திருநாவுக்கரசரால்
திருத்தாண்டகத்திலும் பாடப்பெற்ற தலம்.

சம்பந்தர் இத்தலத்து ஈசனை வணங்கும்போது ‘என்ன புண்ணியம்
செய்தனை நெஞ்சே…’ என்று மனமுருகிப் பாடுகின்றார்.
பல சிறப்புகள் கொண்ட இத்தலத்தை நீங்களும் சென்று வழிபட்டு
வரலாமே.

எங்கே இருக்கு: கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில்
திருவலஞ்சுழி உள்ளது.

தரிசன நேரம்: காலை 6-12; மாலை 4-8

———————————————

– ஆர்.சி. சம்பத்
குமுதம் பக்தி செய்திகள்:
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum