Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உறவின் பெருமை - சிறப்பு கட்டுரை.
Page 1 of 1 • Share
உறவின் பெருமை - சிறப்பு கட்டுரை.
அண்மையில் வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த ஆய்வு மாணவர் ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு நம் நாட்டில் உள்ள குடும்ப அமைப்பு பெருத்த வியப்பை ஏற்படுத்தியிருந்தது. அதுமட்டுமல்ல, நமது குடும்பங்களில் காணப்படும் உறவுமுறைகள் அவருக்கு திகைப்பை ஏற்படுத்தின.
மேலைநாடுகளிலும் குடும்பங்கள் உண்டு. ஆனால் அவர்களது உறவுமுறைகள் மிகவும் குறுகிய வட்டத்தில் அடங்கிவிடுபவை. எனவேதான் பல உறவுமுறைகளுக்கு அவர்களிடம் சொற்களே இல்லை. உதாரணமாக, மாமா, சித்தப்பா ஆகிய உறவுகளுக்கு ஆங்கிலத்தில் "அங்கிள்' என்ற ஒரு சொல்லே பொதுவானதாக உள்ளது.
அதுபோலவே, அத்தை, சித்தி போன்ற உறவுமுறைகளுக்கும் "ஆன்டி' என்பதே பொதுச்சொல். ஆனால் நமது சொற்களஞ்சியத்திலோ உறவுப் பெயர்களுக்கு தனிப் பட்டியலே உண்டு.
அம்மா, அப்பா, அண்ணன், அக்கா (தமக்கை), தம்பி, தங்கை, கணவன், மனைவி, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா, தாய்மாமா (அம்மான்), மாமி, அத்தை, மாமா, தாத்தா (அப்பச்சி, அம்மச்சி), பாட்டி (அப்பத்தா, அம்மத்தா), மாமனார், மாமியார், சம்பந்தி, மகன், மகள், மருமகன், மருமகள், மாப்பிள்ளை, மைத்துனர், பங்காளி, மைத்துனி, சட்டகர், அத்தான், அண்ணி, ஓரகத்தி, அத்திம்பேர், அம்மாஞ்சி, அத்தாத்தை, பேரன், பேத்தி, கொள்ளுப்பேரன், கொள்ளுப் பேத்தி, எள்ளுப் பேரன், எள்ளுப் பேத்தி.
இந்தப் பெயர்ச்சொற்களே வெளிநாட்டு நண்பருக்கு மயக்கம் ஏற்படுத்தின. இதுபோன்ற உறவுகளைக் கொண்டாடும் வாழ்வியல் வெளிநாட்டினருக்குப் புதியதுதான். ஆனால், அண்மைக்காலமாக, நாமும் உறவுமுறைகளின் சிறப்பம்சங்களை இழந்து வருகிறோம்.
பிறப்பின் அடிப்படையில் ரத்தத் தொடர்பு உள்ளவர்களால் உருவாகுபவையே உறவுகள். ஒருவருக்கொருவர் உதவவும், இன்ப, துன்பங்களில் உடனிருக்கவும் உறவுகள் முக்கியமானவை. அவர்களுக்குப் பிறகே நண்பர்களும், அண்டை வீட்டினரும், சக ஊழியர்களும் வருகின்றனர்.
நமது தாத்தா, பாட்டி காலத்தில், வீட்டு விசேஷங்களிலும், துக்க நிகழ்வுகளிலும் பெரும் உறவினர் படை கலந்துகொண்டதைக் கண்டிருக்கிறோம். திருமணங்கள் நான்கு அல்லது ஐந்து நாட்கள் நிகழ்ந்த காலமும் உண்டு. உறவினர்கள் ஒவ்வொருவருக்கும் வீட்டு விசேஷங்களில் குறிப்பிடத்தக்க கடமையுண்டு. இன்று நமது வீடுகளில் நிலவரம் எப்படி?
தொழில் நிமித்தமாக உறவுகளைப் பிரிந்து வாழும் நிர்பந்தமான காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். அதைவிட, குடும்பக் கட்டுப்பாட்டு முறையால் நமது குடும்பத்தை நாமே குறுக்கிக் கொள்ளும் சூழலில் நாம் சிக்குண்டிருக்கிறோம்.
நாட்டின் மக்கள்தொகையைக் கட்டுப்பாட்டில் வைக்க அரசு பெருமுயற்சி செய்கிறது. குடும்பக் கட்டுப்பாட்டு பிரசாரமும் பெரிய அளவில் செய்யப்படுகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு குடும்பக் கட்டுப்பாடு தேவையே.
அதேசமயம், ஒவ்வொரு பெற்றோரும் ஒற்றைக் குழந்தையுடன் மக்கட்செல்வத்தை குறுக்கிவிடுவது தேவையா என்ற கேள்வி எழுகிறது.
நமது முன்னோர் மக்கட்செல்வத்தை குடும்பச் சுமையாகக் கருதவில்லை; சமுதாய விழுதுகளாகவே கருதினார்கள். பதினாறு பேறுகளில் முதன்மையானது மக்கட்செல்வம் என்பதால்தான் நமது தாத்தாக்களின் காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் 10-க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தார்கள்.
அந்தக் குடும்பங்களில் குழந்தைகள் பெரியவர்களாக வளர்ந்தபோது, தங்களுக்கான வாய்ப்புகளை அவர்களே உருவாக்கினார்கள். அதன்மூலமாக குடும்பங்கள் உயர்ந்தன. தமிழகத்தின் முன்னணி தொழில் குடும்பங்கள் பல அவ்வாறு உருப்பெற்றவையே.
ஆனால் இன்று, பெரும்பாலான மக்கள் அளவான குடும்பம்- வளமான வாழ்வு என்ற கோட்பாட்டில் மூழ்கி, ஒற்றைக் குழந்தையுடன் நிறுத்திக் கொள்கிறார்கள். இவ்வாறு தனித்து வளரும் குழந்தைளுக்கு உறவுமுறைகள் எப்படி அமையும்? உடன் பிறந்தவர்கள் இல்லாமல், பிற உறவுமுறைகள் மலர்வது எப்படி?
குடும்பக் கட்டுப்பாட்டை கடந்த இரண்டு தலைமுறைகளாக தீவிரமாகப் பின்பற்றியதன் விளைவாக, இப்போது பல வீடுகளில் மாமா, அத்தை, சித்தப்பா, பெரியம்மா போன்ற உறவுமுறைகளே இல்லாது போய்விட்டது.
தற்போதைய தலைமுறையிலோ, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை போன்ற சகோதர உறவுகளின்றி, ஒற்றை மகவாக வளரும் குழந்தைகளே அதிகம்.
இவ்வாறு தனித்து செல்லமாக வளரும் குழந்தைகள் மூர்க்கமாகவும் பிடிவாத குணம் படைத்தவர்களாகவும் மாறுவதாக உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்தக் குழந்தைகள் பெரியவர்களாக வளரும்போது பெருத்த உறவு வெற்றிடம் ஏற்படுவது திண்ணம்.
இத்தகைய துர்பாக்கிய நிலை பெரும்பாலான உயர், நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் காணப்படுகிறது.
தற்போதைய பொருளாதாரச் சூழலில் ஒரு குழந்தையை வளர்ப்பதே சிரமம் என்கிறார்கள். இப்படி நமது பெரியவர்கள் நினைத்திருந்தால் நாம் பிறந்திருப்போமா?
உண்மையில் நமது தாத்தா - பாட்டிகள் இறை நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் மிகுந்தவர்களாக இருந்தார்கள். மங்கலமான மனைமாட்சியின் நன்கலம் நன்மக்கட்பேறு என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.
ஆனால் நமக்கோ இறை நம்பிக்கையும் இல்லை; தன்னம்பிக்கையும் இல்லை. அதனால்தான் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் வளர்க்க முடியுமா என்று மலைக்கிறோம்; நமது குழந்தைகளின் உறவுமுறைகளை முளையிலேயே கிள்ளி எறிகிறோம்.
குடும்பக் கட்டுப்பாட்டை கடுமையாக அமல்படுத்திய சீனாவிலேயே தற்போது இரு குழந்தைகளைப் பெற்றெடுக்கு மாறு அரசு வலியுறுத்துகிறது. நாம் எப்போது உறவின் பெருமையை உணரப் போகிறோம்?
நன்றி: தினமணி.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» உறவின் பெருமை
» நல்ல உறவின் அடையாளம் எது?
» காதல் உறவின் பிரிவை தாங்கிக் கொள்ள பின்பற்ற வேண்டியவைகள்
» வாழ்க்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள். - கட்டுரை
» மெய்வருத்தக் கூலி தரும் - கட்டுரை.
» நல்ல உறவின் அடையாளம் எது?
» காதல் உறவின் பிரிவை தாங்கிக் கொள்ள பின்பற்ற வேண்டியவைகள்
» வாழ்க்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள். - கட்டுரை
» மெய்வருத்தக் கூலி தரும் - கட்டுரை.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|