தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


‘எனது காலம் முடிந்துவிடவில்லை’- ரேகா அதிரடி

View previous topic View next topic Go down

‘எனது காலம் முடிந்துவிடவில்லை’- ரேகா அதிரடி Empty ‘எனது காலம் முடிந்துவிடவில்லை’- ரேகா அதிரடி

Post by rammalar Mon Oct 31, 2016 8:40 am

[img]‘எனது காலம் முடிந்துவிடவில்லை’- ரேகா அதிரடி 2dtahqw[/img]
-

-

இந்தித் திரையுலகில் வயதைக் கடந்தும் புகழுடன்
வாழ்ந்து வருகிறார், நடிகை ரேகா. ஜெமினி கணேசனின்
புதல்வியான அவரிடம் சில கேள்விகள்:

சினிமாவில் நடிக்காமல் எப்படி இத்தனை ஆண்டுகளாக
உங்களால் தாக்குப்பிடிக்க முடிந்தது?

தாக்குப்பிடிப்பது என்ற வார்த்தைக்கு என் அகராதியில்
இடமில்லை. நான் வாழ்க்கையை முழுமையாக
வாழ்கிறேனே தவிர, வெறுமனே தாக்குப்பிடித்துக்
கொண்டிருக்கவில்லை. திரும்பத் திரும்ப வந்த ஒரே
மாதிரியான கதாபாத்திரங்கள் எனக்கு அலுப்பை
ஏற்படுத்தின.

கேமிரா முன் நிற்காமல் இருப்பது எனக்கு வருத்தத்தைத்
தருவது உண்மை. ஆனால் சினிமாவுக்கு வரும் புதிய
திறமையாளர்கள் எனக்குத் தைரியத்தையும், ஊக்கத்தையும்
தருகிறார்கள். அவர்களின் நடிப்பைப் பார்க்க மகிழ்ச்சியாக
இருக்கிறது. மேலும் பொறுமையாக இருக்கவும், எனது
திறமைகளை மேம்படுத்தவும் அவர்கள் நல்ல சவால்
அளிக்கிறார்கள்.

எனது ரசிகர்களின் மாறாத அன்பு, பொறுமை, விசுவாசம்தான்,
எனது காலம் முடிந்துவிடவில்லை என்ற நம்பிக்கையையும்
தெம்பையும் தருகின்றன. சிறந்ததை இனிதான் நான் தர
இருக்கிறேன். அதற்கான கதாபாத்திரங்களை ஏற்க தயாராக
இருக்கிறேன்.

படிக்கும் காலத்தில் நீங்கள் அடக்கமான மாணவியா அல்லது
எதிர்க்குரல் எழுப்புபவரா?

நான் வாழ்க்கையின் மாணவி. இயற்கைதான் எனது ஆசிரியர்.
நான் எங்கம்மாவுக்கு பணிவான குழந்தையாக இருந்திருக்கிறேன்.
அவரது செயல்களை எதிர்த்து நான் கேள்வி கேட்டதேயில்லை.
நான் அமைதியான ஆனால் ஆழமான பெண். நான் அமைதியாக
இருக்கும்போதுதான் ரொம்ப வலுவாக இருப்பேன்.

என்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை அமைதியாக கவனித்துக்
கொண்டிருப்பேன். அதேபோல, ஞாபக விஷயத்தில் நான் யானை
மாதிரி. நான் மறக்க நினைக்கும் விஷயங்களைக் கூட என்னால்
மறக்க முடிவதில்லை. சுற்றி நடப்பவற்றை என் மனம் துல்லியமாகப்
புரிந்துகொள்ளும் என்றாலும், வாய் திறந்து நான் கேள்வி
கேட்பதில்லை.

யாரையும், எதையும் நான் திருப்பித் தாக்குவதில்லை.
வன்முறையில் எனக்கு நம்பிக்கையில்லை. எந்த எதிர்மறையான
விஷயமும் என்னிடம் இல்லை. எப்போதும் வாழ்வின் நல்ல
பக்கங்களை மட்டும் பார்க்கலாம் என்பது எனது எண்ணம்.

கோபமும் கூட ஒரு மதிப்புமிக்க, வலுவான உணர்வுதான் என்ற
போதும் அதையும் சரியான திசையில் செலுத்துவதுதான் சரி
என்று நான் கருதுகிறேன்.

பிறந்தநாள் கொண்டாடுவதில் உங்களுக்கு விருப்பம் உண்டா?
வழக்கமாக எப்படி பிறந்தநாளைக் கொண்டாடுவீர்கள்?

இதுபோன்ற சம்பிரதாயங்களில் எனக்கு விருப்பம் இல்லை.
அதைவிட, வாழ்வின் சிறந்த அம்சங்களைக் கொண்டாடத்தான்
நான் விரும்புகிறேன். நான் எனது வாழ்வின் ஒவ்வொரு
கணத்தையும் வாழ்வின் கடைசிக் கணமாக எண்ணி வாழ்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் கொண்டாட்டமே.
அதை நான் நன்றி உணர்வோடு கொண்டாடுகிறேன்.
நான் ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கிறேன். எனது பெற்றோர்,
எனது குடும்பத்தினர், எனது ரசிகர்கள், நலம்விரும்பிகள்
என் மீது பொழியும் ஆசீர்வாதங்களை மதிக்கிறேன்.
-
--------------------------------------------
தினத்தந்தி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum