Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பாரதி-"மகாகவியின் மன உணர்வுகள்" - (தொடர்)
Page 1 of 1 • Share
பாரதி-"மகாகவியின் மன உணர்வுகள்" - (தொடர்)
'பாரதி' என்னைத் தமிழ் இலக்கியப் பரப்பிற்குள் ஈர்த்த கவி. பாரதியை வாசிக்க வாசிக்க தமிழ் இலக்கியப் பரப்பின் விசாலம் புரிபடத் துவங்கியது. இத்தகைய இலக்கியப் பரப்பினை உண்டாக்கிய ஒரு
கவியின் மன உணர்வுகளாகச் செயல்பட்டவை எவை? என்பதை அறிவதே இக்கட்டுரைத் தொடரின் நோக்கம் ஆகும்.
பாரதி மீதான தாக்குதல்கள்:
தமிழக அரசியல் வரலாற்றில் மிக அதிகமாகக் கருப்புக்கொடி காட்டப்பட்டு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட அரசியல் தலைவராக ராஜாஜி என்ற சி.ராஜகோபாலாசாரியாரைச் சொல்வதுண்டு. இந்தத் திணிப்பு சனாதன ஈடுபாடு,ஆதிக்க வெளிப்பாட்டு முறைமை முதலான ராஜாஜியின் முரண்பாடுகள் மிகப்பெரிய எதிர்ப்புக்குக் காரனமாயின. சனாதன கருத்தியலானது ராஜாஜியை உயர்த்திப் பிடித்த காலகட்டத்தில் திராவிடக் கருத்தியல் ராஜாஜியை கடுமையாக எதிர்த்துப் போராடியது.
இந்த ஆதரவு*எதிர்ப்பு என்ற முரண் நிலையைத் தமிழ்ச் சமூக, அரசியல் புலமை இருக்கும் எவரும் மிக எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
ஆனால், பாரதி என்ற சி.சுப்ரமணிய பாரதியார் மீதான எதிர்ப்பும் ஆதரவும் இந்த எதிரெதிர் முரண் நிலையைத் தகர்திருக்கின்றன. மிகத் தீவிரமாக எதிரெதிர் கருத்து நிலையை முன்வைப்போர் கூட பாரதி எதிர்ப்பு என்ற தன்மையில் ஒன்றாக அடையாளங்கானப்பட்டனர்.
இந்த எதிர்ப்பு என்பது அவரவர் சார்ந்திருந்த கருத்தியலை அடிப்படையாகக் கொண்டே முன்வைக்கப்பட்டது. ஆனால் பாரதி எதிர்ப்பு என்ற அம்சம், ஒத்த தன்மை உடையதாக இருந்தது என்பதே நிதர்சனம்.
பாரதி வாழும் காலத்தில் எவ்விதமான எதிர்ப்புகளை/தாக்குதல்களை எதிர்கொண்டார் என்பது மிக முக்கியமான விடயமாகும். ஏனெனில் இந்த எதிர்ப்பும்,தாக்குதல்களும் பாரதியின் கருத்து நிலையை, கருத்தியற் சார்பை மிகவும் தெள்ளதெளிவாக எடுத்துக்கட்டிவிடும் தன்மை உடையன.
பாரதி, தான் வாழ்ந்த காலத்தில் யார் யாருடைய விரோதத்தைச் சம்பாதித்துக் கொண்டார்? அந்த விரோதம் எதனை அடிப்படையாகக் கொண்டது? அதைப் பாரதி எதிர் கொண்ட விதம் எத்தகையது? கடுமையான எதிர்ப்பு,தாக்குதல்களின் பின்னர் பாரதியின் கருதியர்சார்பில்,செயல்பாட்டில் பின்னடைவும் தயக்கமும் இருந்ததா?
எதிர்ப்பாளர்களிடம் சமரசம் செய்து கொண்டாரா? என்பன மிக முக்கியமான வினாக்கள் ஆகும்.
மேற்குறித்த வினாக்களுக்கான விடைகளே 'பாரதி' என்ற சமூக அங்கத்திணனை,சமூகச் செயல்பாட்டினை மதிப்பீடு செய்ய உதவக்கூடும். பாரதியின் சமகால,இந்திய,தேசிய,மற்றும் உலக அரசியல் மாற்றங்கள்,செயல்பாடுகள்,சமகாலச் சமூகச் சூழல்,முற்போக்குச் சிந்தனை வளர்ச்சியின் நிலை முதலானவற்றைக் கவனத்தில் கொள்ளாமல் பொத்தாம் பொதுவாக,பாரதியின் கவிதைகள் மற்றும் கட்டுரைகளில் இருந்து ஆங்காங்கே சிலவற்றை உருவி விமர்சித்தல் என்பது தவறான முடிவுகளையே அடையச் செய்யும்.
பாரதி பிறப்பால் பார்ப்பனர். பாரதியின் வளர்ச்சியில் உண்டான சமூகம் பற்றிய அரசியல் ரீதியிலான புரிதல்,அவரை ஒரு வைதீகப் பார்ப்பனராக வாழ அனுமதிக்கவில்லை. இந்துமதம் முன்வைத்திருந்த சாத்திய அடக்குமுறையை அவர் கடுமையாக எதிர்த்தார். சாதீய ஏற்றத் தழ்வற்ற இந்துசமயத்தைக் கட்டமைப்பது மிகவும் அவசியம் என்று நினைத்தார்.
(......தொடரும்)
கவியின் மன உணர்வுகளாகச் செயல்பட்டவை எவை? என்பதை அறிவதே இக்கட்டுரைத் தொடரின் நோக்கம் ஆகும்.
பாரதி மீதான தாக்குதல்கள்:
தமிழக அரசியல் வரலாற்றில் மிக அதிகமாகக் கருப்புக்கொடி காட்டப்பட்டு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட அரசியல் தலைவராக ராஜாஜி என்ற சி.ராஜகோபாலாசாரியாரைச் சொல்வதுண்டு. இந்தத் திணிப்பு சனாதன ஈடுபாடு,ஆதிக்க வெளிப்பாட்டு முறைமை முதலான ராஜாஜியின் முரண்பாடுகள் மிகப்பெரிய எதிர்ப்புக்குக் காரனமாயின. சனாதன கருத்தியலானது ராஜாஜியை உயர்த்திப் பிடித்த காலகட்டத்தில் திராவிடக் கருத்தியல் ராஜாஜியை கடுமையாக எதிர்த்துப் போராடியது.
இந்த ஆதரவு*எதிர்ப்பு என்ற முரண் நிலையைத் தமிழ்ச் சமூக, அரசியல் புலமை இருக்கும் எவரும் மிக எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
ஆனால், பாரதி என்ற சி.சுப்ரமணிய பாரதியார் மீதான எதிர்ப்பும் ஆதரவும் இந்த எதிரெதிர் முரண் நிலையைத் தகர்திருக்கின்றன. மிகத் தீவிரமாக எதிரெதிர் கருத்து நிலையை முன்வைப்போர் கூட பாரதி எதிர்ப்பு என்ற தன்மையில் ஒன்றாக அடையாளங்கானப்பட்டனர்.
இந்த எதிர்ப்பு என்பது அவரவர் சார்ந்திருந்த கருத்தியலை அடிப்படையாகக் கொண்டே முன்வைக்கப்பட்டது. ஆனால் பாரதி எதிர்ப்பு என்ற அம்சம், ஒத்த தன்மை உடையதாக இருந்தது என்பதே நிதர்சனம்.
பாரதி வாழும் காலத்தில் எவ்விதமான எதிர்ப்புகளை/தாக்குதல்களை எதிர்கொண்டார் என்பது மிக முக்கியமான விடயமாகும். ஏனெனில் இந்த எதிர்ப்பும்,தாக்குதல்களும் பாரதியின் கருத்து நிலையை, கருத்தியற் சார்பை மிகவும் தெள்ளதெளிவாக எடுத்துக்கட்டிவிடும் தன்மை உடையன.
பாரதி, தான் வாழ்ந்த காலத்தில் யார் யாருடைய விரோதத்தைச் சம்பாதித்துக் கொண்டார்? அந்த விரோதம் எதனை அடிப்படையாகக் கொண்டது? அதைப் பாரதி எதிர் கொண்ட விதம் எத்தகையது? கடுமையான எதிர்ப்பு,தாக்குதல்களின் பின்னர் பாரதியின் கருதியர்சார்பில்,செயல்பாட்டில் பின்னடைவும் தயக்கமும் இருந்ததா?
எதிர்ப்பாளர்களிடம் சமரசம் செய்து கொண்டாரா? என்பன மிக முக்கியமான வினாக்கள் ஆகும்.
மேற்குறித்த வினாக்களுக்கான விடைகளே 'பாரதி' என்ற சமூக அங்கத்திணனை,சமூகச் செயல்பாட்டினை மதிப்பீடு செய்ய உதவக்கூடும். பாரதியின் சமகால,இந்திய,தேசிய,மற்றும் உலக அரசியல் மாற்றங்கள்,செயல்பாடுகள்,சமகாலச் சமூகச் சூழல்,முற்போக்குச் சிந்தனை வளர்ச்சியின் நிலை முதலானவற்றைக் கவனத்தில் கொள்ளாமல் பொத்தாம் பொதுவாக,பாரதியின் கவிதைகள் மற்றும் கட்டுரைகளில் இருந்து ஆங்காங்கே சிலவற்றை உருவி விமர்சித்தல் என்பது தவறான முடிவுகளையே அடையச் செய்யும்.
பாரதி பிறப்பால் பார்ப்பனர். பாரதியின் வளர்ச்சியில் உண்டான சமூகம் பற்றிய அரசியல் ரீதியிலான புரிதல்,அவரை ஒரு வைதீகப் பார்ப்பனராக வாழ அனுமதிக்கவில்லை. இந்துமதம் முன்வைத்திருந்த சாத்திய அடக்குமுறையை அவர் கடுமையாக எதிர்த்தார். சாதீய ஏற்றத் தழ்வற்ற இந்துசமயத்தைக் கட்டமைப்பது மிகவும் அவசியம் என்று நினைத்தார்.
(......தொடரும்)
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: பாரதி-"மகாகவியின் மன உணர்வுகள்" - (தொடர்)
ஆம் நண்பரே...! ஆனால் இறுதி இரண்டு பத்திகள் மட்டும் இப்போது எழுதப்பட்டவை. புதிதாக வாசிப்போருக்காக மீண்டும் இணைத்தேன்.
மன்னித்தருள்க....(தொடர் இடையில் தடை பட்டதால் மீண்டும் முன் எழுதியதை இணைக்க வேண்டிய நிர்ப்பந்தம்)
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: பாரதி-"மகாகவியின் மன உணர்வுகள்" - (தொடர்)
நன்றி வனவாசி. தொடர் பதிவை பதியும் போது இந்த திரியிலேயே பதியவும்.
Re: பாரதி-"மகாகவியின் மன உணர்வுகள்" - (தொடர்)
முரளிராஜா wrote:தொடருங்கள் நானும் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்
நானும் தான் அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: பாரதி-"மகாகவியின் மன உணர்வுகள்" - (தொடர்)
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்,
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்,
பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்;
பார்மீது நான்சாகா திருப்பேன்,காண்பீர்!
மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய்கூ றேன்யான்,
மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே,
நலிவுமில்லை,சாவுமில்லை!கேளீர்,கேளீர்!
நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை
- பாரதி யின் சுயசரிதையில் வரும் இந்த வரிகள் பித்தனின் மனதில் தோன்றுகிறது.
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்,
பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்;
பார்மீது நான்சாகா திருப்பேன்,காண்பீர்!
மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய்கூ றேன்யான்,
மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே,
நலிவுமில்லை,சாவுமில்லை!கேளீர்,கேளீர்!
நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை
- பாரதி யின் சுயசரிதையில் வரும் இந்த வரிகள் பித்தனின் மனதில் தோன்றுகிறது.
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
பாரதி-"மகாகவியின் மன உணர்வுகள்"
சாதியப் படிநிலையியல் நம்பிக்கை கொண்டிருந்த அதனால் இலாபம் அடைந்துகொண்டிருந்த பார்ப்பனீயம், வருணாசிரமம் தர்மத்தை நிலைநாட்டுவதில், பேணிக்காத்து வருவதில் முனைப்புக் காட்டிற்று. ஆகவே தனது பிறப்பால் தன்மீது சுமத்தப்பட்டிருந்த பார்ப்பன அடையாளத்தை உத்தரவும் அதற்கு எதிராக கலகம் செய்யவும் பாரதி துணிந்தார்.
பூணூலை அறுத்தெறிதல், தாழ்த்தப்பட்டவர்களுடன் நெருக்கமாக உறவு கொண்டாடுதல்,இஸ்லாமியர்களின் கடையில் வேண்டுமென்றே வெளியில் அமர்ந்து தேநீர் அருந்துதல், தாழ்த்தப்பட்டவர்களுக்கு பூணூல் அணிவித்தல்,மாரியம்மன் போன்ற வைதீக தெய்வங்களுக்குப் புறம்பான தெய்வங்களை போற்றிப் பாடுதல்,அல்லா,ஏசு கிறிஸ்து போன்ற வேறு மதக் கடவுளர்களைப் போற்றுதல் என்பன போன்ற பாரதியின் செயல்பாடுகள் வைதீகப் பார்ப்பனியத்தை எதிர்த்த கலகங்களே என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
(தொடரும்...)
பூணூலை அறுத்தெறிதல், தாழ்த்தப்பட்டவர்களுடன் நெருக்கமாக உறவு கொண்டாடுதல்,இஸ்லாமியர்களின் கடையில் வேண்டுமென்றே வெளியில் அமர்ந்து தேநீர் அருந்துதல், தாழ்த்தப்பட்டவர்களுக்கு பூணூல் அணிவித்தல்,மாரியம்மன் போன்ற வைதீக தெய்வங்களுக்குப் புறம்பான தெய்வங்களை போற்றிப் பாடுதல்,அல்லா,ஏசு கிறிஸ்து போன்ற வேறு மதக் கடவுளர்களைப் போற்றுதல் என்பன போன்ற பாரதியின் செயல்பாடுகள் வைதீகப் பார்ப்பனியத்தை எதிர்த்த கலகங்களே என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
(தொடரும்...)
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: பாரதி-"மகாகவியின் மன உணர்வுகள்" - (தொடர்)
பாரதி என்ற ஆளுமையை ஒரு சிறு வரையறைக்குள் அடக்கிவிட இயலாது.
பிராமணன் என்ற சொல்லுக்கு பொருள் என்ன வென வேதங்களை வினவுகையில்
"தர்மத்தின் நெறி தவறாமலும், ஒழுக்க நெறி நின்று பிரம்மத்தை உணர யார் வேதத்தின் படி வாழ்வை செலுத்துகிறார்களோ அவர்களே பிராம்மணன்" என வேதம் சொல்கிறது. ஆகவே பாரதி வேதங்களை முழுமையாக காசி பாட சாலையில் கற்று உணர்ந்தவன். அவன் எதிரானவன் அல்ல, ஆனால் அடையாளமாக கொள்ளவில்லை, உண்மையில் பிரம்மத்தை தேடுபவர்கள் அடையாளத்தை துறக்க வேண்டும் என்பது ஞான பாதையில் பால பாடம். அகவே சாதாரண மக்களை போல அடையாளம் சூடிக்கொள்ளாமல் வாழ்ந்தான்.
மேலும் புணூல் பற்றியும் , சிறு தெய்வ வழிபாடு, போன்றவற்றை பற்றி காலம் அருளும் போது பித்தன் தன் மனதில் பட்டதை பிதற்றுவான்.
பிராமணன் என்ற சொல்லுக்கு பொருள் என்ன வென வேதங்களை வினவுகையில்
"தர்மத்தின் நெறி தவறாமலும், ஒழுக்க நெறி நின்று பிரம்மத்தை உணர யார் வேதத்தின் படி வாழ்வை செலுத்துகிறார்களோ அவர்களே பிராம்மணன்" என வேதம் சொல்கிறது. ஆகவே பாரதி வேதங்களை முழுமையாக காசி பாட சாலையில் கற்று உணர்ந்தவன். அவன் எதிரானவன் அல்ல, ஆனால் அடையாளமாக கொள்ளவில்லை, உண்மையில் பிரம்மத்தை தேடுபவர்கள் அடையாளத்தை துறக்க வேண்டும் என்பது ஞான பாதையில் பால பாடம். அகவே சாதாரண மக்களை போல அடையாளம் சூடிக்கொள்ளாமல் வாழ்ந்தான்.
மேலும் புணூல் பற்றியும் , சிறு தெய்வ வழிபாடு, போன்றவற்றை பற்றி காலம் அருளும் போது பித்தன் தன் மனதில் பட்டதை பிதற்றுவான்.
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: பாரதி-"மகாகவியின் மன உணர்வுகள்" - (தொடர்)
நல்ல தொடர் வனவாசி.
தொடருங்கள்...................!
தொடருங்கள்...................!
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பாரதி-"மகாகவியின் மன உணர்வுகள்" - (தொடர்)
பித்தன் wrote:பாரதி என்ற ஆளுமையை ஒரு சிறு வரையறைக்குள் அடக்கிவிட இயலாது.
பிராமணன் என்ற சொல்லுக்கு பொருள் என்ன வென வேதங்களை வினவுகையில்
"தர்மத்தின் நெறி தவறாமலும், ஒழுக்க நெறி நின்று பிரம்மத்தை உணர யார் வேதத்தின் படி வாழ்வை செலுத்துகிறார்களோ அவர்களே பிராம்மணன்" என வேதம் சொல்கிறது. ஆகவே பாரதி வேதங்களை முழுமையாக காசி பாட சாலையில் கற்று உணர்ந்தவன். அவன் எதிரானவன் அல்ல, ஆனால் அடையாளமாக கொள்ளவில்லை, உண்மையில் பிரம்மத்தை தேடுபவர்கள் அடையாளத்தை துறக்க வேண்டும் என்பது ஞான பாதையில் பால பாடம். அகவே சாதாரண மக்களை போல அடையாளம் சூடிக்கொள்ளாமல் வாழ்ந்தான்.
மேலும் புணூல் பற்றியும் , சிறு தெய்வ வழிபாடு, போன்றவற்றை பற்றி காலம் அருளும் போது பித்தன் தன் மனதில் பட்டதை பிதற்றுவான்.
பாரதி பார்ப்பன ஆதரவாளரா அல்லது எதிராக இயங்கினாரா என்பது இங்கு முக்கியமல்ல. அதேபோல அவர் வேதங்களை கற்றதும் கூட நமக்கு நிதர்சனம்.
யாம் இங்கு கூற வந்த விடயம் சாதியத்திற்கு எதிராக பாரதி எவ்வாறு இயங்கினார் என்பதே. சமூகத்தில் உயர்ந்த நிலையாக கருதப்பட்டு வந்த பார்ப்பனியத்தின் மீதிருந்து அவரால்,
"சாதிகள் இல்லையடி பாப்பா
குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்"
என்று எவ்வாறு பாட முடிந்தது? எப்படி அவை பாமர மக்களை சென்றடைந்தது?
தான் சார்ந்திருந்த, தன மீது சுமத்தப்பட்டிருந்த அடையாளத்தை
அவர் கடந்து வந்ததால் தான் என்பதே இங்கு நோக்கத்தக்கது .
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: பாரதி-"மகாகவியின் மன உணர்வுகள்" - (தொடர்)
கருத்து ஒன்றே நோக்கும் விதம் மட்டுமே வேறு வேறு .........
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Similar topics
» பாரதி-"மகாகவியின் மன உணர்வுகள்"
» மேலூர் தென்றலின் கவிதைகள்
» பாரதி-சில விவாதங்கள்.
» எனக்குள் ஒரு பாரதி..
» உங்களை உயர்த்தும் உணர்வுகள்….
» மேலூர் தென்றலின் கவிதைகள்
» பாரதி-சில விவாதங்கள்.
» எனக்குள் ஒரு பாரதி..
» உங்களை உயர்த்தும் உணர்வுகள்….
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|