தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தெற்கு ரெயில்வேயில் தண்ணீர் தட்டுப்பாடு: ரெயில் பெட்டிகள் தூய்மை பணியில் தொய்வு

View previous topic View next topic Go down

தெற்கு ரெயில்வேயில் தண்ணீர் தட்டுப்பாடு: ரெயில் பெட்டிகள் தூய்மை பணியில் தொய்வு Empty தெற்கு ரெயில்வேயில் தண்ணீர் தட்டுப்பாடு: ரெயில் பெட்டிகள் தூய்மை பணியில் தொய்வு

Post by rammalar Tue May 23, 2017 4:30 am

சென்னை,

ரெயில் பெட்டி கழிவறைக்கு குடிநீரை பயன்படுத்தும் நிலைக்கு
பயணிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

50 கோடி பயணிகள்
இந்தியன் ரெயில்வே நாட்டில் 17 மண்டலங்களாக செயல்பட்டு
வருகிறது. இதில் சென்னை சென்டிரலை தலைமை இடமாக
கொண்டு தெற்கு ரெயில்வே இயங்குகிறது. சென்னை, திருச்சி,
மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்கள்
தெற்கு ரெயில்வேயில் இடம் பெற்றுள்ளன.

தெற்கு ரெயில்வேயில் நாள் ஒன்றுக்கு 6 லட்சத்து 20 ஆயிரம்
பயணிகள் வீதம் என ஆண்டுக்கு சுமார் 50 கோடி பயணிகள்
ரெயிலில் பயணிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2016–17–ம் நிதி ஆண்டில் பயணிகள் வருவாய் மூலம்
ரூ.3 ஆயிரத்து 565 கோடி பெற்று இந்தியன் ரெயில்வேயில்
தெற்கு ரெயில்வே முதல் இடத்தை பிடித்தது.

வெந்த புண்ணில்...
தெற்கு ரெயில்வே மூலம் மத்திய அரசுக்கு அதிக வருவாய்
கிடைத்தாலும், ரெயில்வே பட்ஜெட்டுகளில் தெற்கு ரெயில்வே
கண்டு கொள்ளப்படுவது இல்லை என்பது நிதர்சனமான உண்மையாக
இருந்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்
நேரத்தில், தமிழகத்தில் தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்கள்
அறிவிக்கப்படுமா? பழைய ரெயில் பெட்டிகளுக்கு பதிலாக புதிய
ரெயில் பெட்டிகள் வழங்கப்படுமா? என்று பயணிகள் ஆவலுடன்
எதிர்பார்ப்பதும், கடைசியில் ஏமாற்றமே மிஞ்சுவதும் சம்பிரதாயமாக
இருக்கிறது.

தெற்கு ரெயில்வேயில் பெரும்பாலான ரெயில் பெட்டிகள் மிகவும்
பழமை வாய்ந்ததாக இருப்பதால் ரெயில்கள் வேகமாக இயக்கப்படும்
நேரங்களில் பெட்டிகள் தடதடவென்று பயங்கர சத்தத்துடன் அதிர்கின்றன.
இதனால் குழந்தைகளும், வயதான, நோயுற்ற பயணிகளும் அவதிக்கு
உள்ளாகின்றனர். குறிப்பாக இரவு நேர ரெயிலில் பயணிக்கும் போது
அதிர்வு சத்தம் பயணிகளின் தூக்கத்தை தொலைப்பதாக அமைந்துள்ளது.


இது ஒருபுறம் இருக்க எலி, வி‌ஷ பூச்சிகள் ஆதிக்கமும் ரெயில்
பயணிகளை பெருந்துயரத்தில் ஆழ்த்துகிறது. தெற்கு ரெயில்வேயில்
பயணிக்கும் பயணிகள் இதுபோன்ற இன்னல்களை அனுபவித்து வரும்
வேளையில், ‘‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது’’ போன்று தண்ணீர்
பிரச்சினையும் அமைந்துள்ளது.

சொல்லொண்ணா துயரம்

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியால் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு
தெற்கு ரெயில்வேயிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
ரெயில் பெட்டி கழிவறைகளில் தண்ணீர் விரைவில் தீர்ந்து விடுவதால்,
இயற்கை உபாதையை கழிக்க செல்லும் பயணிகள் சொல்லொண்ணா
துயரம் அடைகின்றனர்.

குடிப்பதற்காக பாட்டில்களில் கொண்டு செல்லும் தண்ணீரை கழிப்பறைக்கு
பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது. மேலும் ரெயில்வே
பணிமனைகளில் ரெயில் பெட்டியை சுத்தம் செய்யும் பணியிலும் தொய்வு
காணப்படுகிறது.

தண்ணீர் தேவை
இதுகுறித்து ரெயில்வே தொழிற்சங்கத்தை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:–

தெற்கு ரெயில்வேயில் 6 ஆயிரத்து 300 ரெயில் பெட்டிகள் பராமரிக்கப்படுகிறது.
24 பெட்டிகள் கொண்ட ஒரு ரெயிலை சுத்தப்படுத்த 21 ஆயிரத்து 600 லிட்டர்
தண்ணீர் தேவைப்படுகிறது. இதில் ஒரு பெட்டியின் உள் பகுதியை தூய்மைப்படுத்த
100 லிட்டர் தண்ணீரும், வெளிப் பகுதியை தூய்மைப்படுத்த 250 லிட்டர்
தண்ணீரும் செலவாகிறது.

ரெயில் பெட்டி கழிவறை, வாஷ்–பே‌ஷன் ஆகிய பயன்பாடுகளுக்காக
ஒரு பெட்டியில் 900 லிட்டர் தண்ணீர் நிரப்பப்படுகிறது. 300 கி.மீட்டர்
ரெயில் சென்ற பின்னர் தண்ணீர் தேவைக்கு ஏற்ப மீண்டும் தண்ணீர்
நிரப்பப்படும். தற்போது நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாட்டால்
20 முதல் 30 சதவீதம் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் ரெயில் பெட்டிகளை அரை குறையாக சுத்தம் செய்ய வேண்டிய
நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ரெயில் பெட்டி கழிவறை பயன்பாட்டிற்கான
தண்ணீரும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ரெயில்கள் சிறிது தொலைவு சென்றவுடனே
கழிவறைகளில் தண்ணீர் தீர்ந்து விடுவதால் பயணிகள் கோபத்துக்கு
ரெயில்வே ஊழியர்கள் ஆளாகுகின்றனர். ரெயில்வே ஊழியர்கள் மீது
பயணிகள் அதிருப்தி அடைகின்றனர்.

எனவே ரெயில் பணிமனைகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை
போக்க தேவையான நடவடிக்கைகளை தெற்கு ரெயில்வே நிர்வாகம்
மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டங்கள்
நடத்தவும் நாங்கள் திட்டமிட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

கசப்பாகும் பயணம்
-
ரெயில் நிலையங்களில் இருந்து ரெயில்கள் புறப்படும் நேரத்தில்,
‘உங்கள் பயணம் இனிதாகுக...’ என்று ஒலிக்கும் வாசகங்கள்,
தற்போது தெற்கு ரெயில்வேயில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டால்
கசப்பானதாகவே அமைந்துள்ளது என்று சொன்னால் மிகை ஆகாது.
-
தினத்தந்தி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» அலுமினிய ரெயில் பெட்டிகள் தயாரிக்க திட்டம் ஐ.சி.எப். பொதுமேலாளர் தகவல்
» மெட்ரோ ரெயில் பெட்டிகள் சென்னைக்கு வந்தன: விரைவில் சோதனை ஓட்டம்
» தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து நெல்லை, செங்கோட்டைக்கு தினமும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில்
» தூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் !
» டெல்லி பாதுகாப்பு பணியில் 41 பெண் கமாண்டோக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum