தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இரத்த சோகை இல்லா இந்தியா!

View previous topic View next topic Go down

 இரத்த சோகை இல்லா இந்தியா! Empty இரத்த சோகை இல்லா இந்தியா!

Post by பூ.சசிகுமார் Thu Dec 20, 2012 9:35 pm

இரத்த சோகை உள்ளவர்களுக்கு ஏற்படும் சில வித்தியாசமான சந்தேகங்கள்...

கேள்வி : என்வீட்டில் குழந்தைகள் (சில பெரியவர்கள் கூட ) பேப்பர் தின்பது, சாக்பீஸ், பென்சில் தின்பது போன்ற பழக்கங்கள் கொண்டிருப்பார்கள், இதற்கும் காமாலைக்கும் சம்பந்தம் உண்டா..?

பதில் : உண்டு. உடலில் இரும்புசத்து குறைந்து இரத்தசோகை ஏற்படும் போது, இதுபோன்ற வித்தியாசமான பழக்கங்கள் ஏற்படுவது உண்டு. இதை பைகா என்பார்கள். இதுபற்றி இன்னும்கூட ஆராய்ச்சி நடந்து வருகிறது. இவர்களுக்கு வைத்தியம் செய்த பின்பு, இரும்பு சத்து அதிகமாகி இரத்த சோகை நன்றாகிவிடும் வேளையில், இந்த பழக்கம் நின்றுவிடும். காமாலை என்பதை வழக்கில் கிராமங்களில் பல வியாதிகளுக்கு உபயோகிக்கிறார்கள். ‘ஊது காமாலை’ என்று இதை அழைப்பதுண்டு. ஆனால் உண்மையில் காமாலைக்கு இதற்கும் சம்பந்தம் இல்லை.

கேள்வி : நான் தினமும் ஒரு மல்டி வைட்டமின் சாப்பிடுகிறேன். இருந்தும் நாள் முழுவதும் மிகவும் களைப்பாக இருக்கிறேன். தினந்தோறும் செய்யும் வழக்கமான வேலைகளைக் கூட செய்ய முடிவதில்லை. என் Hb% அளவும் 12gm% உள்ளது. இரண்டு மாதங்களாக இரும்புச் சத்து மாத்திரைகளைச் சாப்பிட்டும் பலனில்லை, ஏன்?

பெரும்பாலும் உடலில் இரத்த சோகை ஏற்படும்போது, இது போன்ற களைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வைட்டமின் மாத்திரைகள், ஹீமோகுளோபினை அதிகப்படுத்தாது. மேலும், உடலில் இருக்க வேண்டிய தேக்க இரும்புச்சத்து குறையும்போது இரத்த சிகப்பணுக்கள் தயாரிக்க போதுமான இரும்புச் சத்து கிடைக்காமல் போய், இரத்த சோகை ஏற்படலாம். எனவே, இரும்புச்சத்து அதிகரிக்க ஆயத்தங்கள் செய்து கொள்ளவேண்டும்

கேள்வி : என் குழந்தைக்கு 1 வருடம் ஆகிறது. குழந்தைக்கு இரத்தசோகை இருப்பதாக டாக்டர் கூறுகிறார். நாங்கள் குழந்தையை நன்றாகத் தான் கவனித்து வருகிறோம். இருந்தும் இரத்த சோகை ஏன்..?

பதில் : குழந்தை கருவில் இருக்கும்போது, கிடைக்கும் பிராணவாயு குறைவு என்பதால் இயற்கையாக குழந்தையின் Hb% அளவு 16gm% என்று அதிகமாக இருக்கும் RBC எண்ணிக்கையும் அதிகம் இருக்கும். பிறந்த பின்பு, எல்லோரையும் போல் Hb% அளவும் RBC அளவும் குறையச் செய்யும். இந்த பற்றாக்குறையை சமாளிக்க, மீண்டும் உடல் அதிக RBCIயும் Hb% சரிக்கட்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் ஏற்படும் இந்த இரத்த சோகையை physiological anaemia என்பர். அதாவது நோயில்லாத இரத்த சோகை என்று கூறுவர். நாளடைவில் தானே சரியாகும். இதேபோல் பருவ வயதில் பெண்களுக்கு இது போன்று ஏற்படலாம். இதுவும் பல சமயங்களில் தானே சரியாகிவிடும்.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

 இரத்த சோகை இல்லா இந்தியா! Empty Re: இரத்த சோகை இல்லா இந்தியா!

Post by பூ.சசிகுமார் Thu Dec 20, 2012 9:36 pm

கேள்வி : என் வயது 30, நான் அடிக்கடி இரத்ததானம் செய்கிறேன். இது வரை 17 முறை இரத்ததானம் செய்துள்ளேன். எனக்கு இரத்த சோகை வர வாய்ப்புள்ளதா?

பதில் : டாக்டர் சுகுமார், ஈரோடு அவர்கள் இதுவரை 100 முறைக்கு மேல் இரத்தநானம் செய்துள்ளார். நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். இரத்த தானம் செய்தாலும், ஒருசில மணி நேரங்களிலேயே உடல், புதிதாக இரத்த அணுக்களை உற்பத்தி செய்து அதை ஈடுகட்டிவிடும். அதனால் இரத்த தானம் செய்பவர்களுக்கு என்றும் இரத்த சோகை வருவதில்லை.

கேள்வி : எனக்கு தலைமுடி நிறைய உதிர்கிறது..? இதற்கும் இரத்த சோகைக்கும் சம்பந்தம் உண்டா?

பதில் : பொதுவாக இரத்த சோகை உள்ளவர்களுக்கு, புரதச் சத்தும் குறைவாக இருந்தால், இதுபோல உதிரலாம். இருப்பினும், தோல் சம்பந்தப்பட்ட, பொடுகு, fungus போன்ற இதர பிற வியாதிகள் இருக்கின்றனவா என்று தோல் மருத்துவரிடம் அறிந்து கொண்டு, இரத்த சோகை இருந்தால் அதையும் சேர்த்து சரிசெய்து கொள்ளவும்.

கேள்வி : என்விரல் நகங்கள் எல்லாம் தட்டையாக கோடு கோடாக உள்ளன. மருத்துவர் இரத்த சோகை என்கிறார். உண்மையா?

பதில் : இரத்த சோகை நாட்பட உள்ளவர்கள் விரல் நகங்கள் தட்டையாக ஆவது மட்டும் இல்லாமல் ஸ்பூன் மாதிரியும் குழி விழுவதுண்டு.

கேள்வி : திடீர் திடீரென்று வேலை செய்யும்போது கைகளில் ஷாக் அடிப்பதுபோல் ஓர் உணர்வு ஏற்பட்டு சோர்வு உண்டாகிறது. எனக்கு இரத்த சோகை இருக்குமா..?

பதில்: இது போன்ற அறிகுறிகள், கழுத்துப்பகுதி முதுகெழும்பு தேய்வதால் உண்டாகக்கூடும். வெறும் இரத்த சோகையால் உண்டாக வாய்ப்பில்லை. இருக்கிறதா என்பதை எலும்பு மருத்துவரிடம் காண்பிக்கவும்.


(நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்)

பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum