தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?

View previous topic View next topic Go down

முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது? Empty முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?

Post by முரளிராஜா Mon Jan 14, 2013 2:28 pm

முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது? 1

தெருநாய் கடித்தால், ‘ரேபீஸ்’ என்னும் ‘வெறிநோய்’ வரும் என்று பலருக்கும் தெரியும். இது உயிருக்கே உலை வைக்கும் ஆபத்து நிறைந்தது. உலகில் வெறிநாய்க்கடியால் இறப்பவர்களில் 80 சதவீதம் பேர் இந்தியர்கள் என்று கூறுகிறது உலக சுகாதார அமைப்பு. அதே நேரத்தில் நாம் சற்றுக் கவனமாக இருந்தால் இந்த நோயைத் தடுப்பதும் எளிது.

வெறிநோய் எப்படி வருகிறது?

‘ரேபீஸ்’ எனும் கொடிய வைரஸ் கிருமிகள் காரணமாக இந்த நோய் வருகிறது. இந்த வைரஸ்கள் தெருநாயின் உமிழ்நீரில் வசிக்கும். வெறிநோயுள்ள தெருநாய்கள் மனிதர்களைக் கடிக்கும்போது, கடிபட்ட நபருக்கு வெறிநோய் வந்துவிடும்.

அறிகுறிகள் என்ன?

இந்த நோயாளிகள் தண்ணீரைக் கண்டாலே பயந்து அலறுவார்கள். இதுதான் இந்த நோய்க்கு முக்கிய அறிகுறி. இவர்களுக்குத் தொண்டைச் சதைகள் சுருங்கிவிடுவதால் தண்ணீர் குடிக்கவோ, உணவு சாப்பிடவோ முடியாது. இன்னும் சொல்லப்போனால், இவர்கள் தண்ணீரைப் பார்த்தாலே தொண்டைச் சதைகள் இறுகி, சுவாசத்தை நிறுத்திவிடும். இதனால் உயிர் போவது போன்ற உணர்வு உண்டாகும். இதற்குப் பயந்துகொண்டு தண்ணீர் குடிக்க மாட்டார்கள். இதற்குத் ‘தண்ணீர் பயம்’ என்று பெயர். சுவாசிக்க சிரமப்படுவார்கள். வலிப்பு வரும். அதைத் தொடர்ந்து உயிருக்கு ஆபத்து வரும்.

என்ன செய்ய வேண்டும்?

நாய் கடித்தவுடன் கடிபட்ட இடத்தை உடனே சோப்பு நீரால் பலமுறை நன்கு கழுவ வேண்டும்.

வேகமாக விழுகிற குழாய்த் தண்ணீரில் காயத்தைக் கழுவுவது இன்னும் நல்லது.

காயம் ஆழமாக இருந்தால் காயத்தை நன்கு விலக்கிச் சுத்தப்படுத்த வேண்டும்.

காயத்தின் மீது டெட்டால் அல்லது ஸ்பிரிட் தடவ வேண்டும்.

தாமதிக்காமல் மருத்துவரிடம் சென்று, முறையான சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

என்ன செய்யக்கூடாது?

காயத்துக்கு கட்டுப் போடக்கூடாது. சூரிய ஒளியில் இந்த வைரஸ் கிருமிகள் இறந்துவிடும் என்பதால் காயத்தை மூடாமல் வைத்திருப்பது நல்லது. திறந்த காயமென்றாலும், ஆழமான காயமென்றாலும் தையல் போட்டு மூடக்கூடாது.
நாய் கடித்த இடத்தில் சுண்ணாம்பு, சந்தனம், சாம்பல், பச்சிலைச்சாறு போன்றவற்றைத் தடவக் கூடாது. அப்படித் தடவினால் கிருமிகள் உடலை விட்டு வெளியேறுவது தடைபடும்.

தடுப்பூசி முக்கியம்!

நாய் கடித்துவிட்டால் உடனே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். சாதாரண நாய் கடித்தால் ஒரு டெட்டனஸ் தடுப்பூசி போதும். கடித்தது வெறிநாயாக இருந்தால், ‘வீரோரோப்’ எனும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். கடித்த நாளில் முதல் ஊசியும், அதன் பிறகு 3, 7, 14, 28-ம் நாள்களில் என்று மொத்தம் 5 முறைத் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். திறந்த காயமென்றால் காயத்தைச் சுற்றிலும் நாய் கடித்த இடத்தைச் சுற்றிலும் ‘இமுனோகுளாபுலின்’ தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாய் கடித்த நபருக்கு வெறிநோயிலிருந்து முழுவதுமாக விடுதலை கிடைக்கும். இந்தத் தடுப்பூசி இலவசமாக அரசு மருத்துவமனைகளில் கிடைக்கிறது.

நாய்க்குத் தடுப்பூசி:

வீட்டில் நாய் வளர்ப்போர் நாய்க்குட்டிக்கு இரண்டு மாதம் முடிந்ததும் ஒரு தடுப்பூசி, மூன்று மாதம் முடிந்ததும் ஒரு தடுப்பூசி போட்டுவிட வேண்டும். அதன்பிறகு ஆண்டுக்கு ஒருமுறை இதே தடுப்பூசியைப் போட வேண்டும். முக்கியமாக, வீட்டுநாயைத் தெருநாயோடு பழகவிடக்கூடாது. அப்போதுதான் வீட்டு நாய்க்கு வெறிநோய் வராது.


டாக்டர் கு.கணேசன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது? Empty Re: முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?

Post by மகா பிரபு Mon Jan 14, 2013 5:04 pm

நன்றி அண்ணா. எனக்கு ஒரு முறை நாய் பல் பட்டுவிட்டது. அதற்கு நாலு முறை ஊசி போட்டேன். அனைவரும் கவனமாக இருக்கவும்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது? Empty Re: முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?

Post by mohaideen Mon Jan 14, 2013 5:12 pm

தகவலுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது? Empty Re: முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?

Post by முரளிராஜா Mon Jan 14, 2013 5:16 pm

என்னையும் ஒரு நாய் கடிச்சது . ஆனா கடிச்ச அரை மணி நேரத்தில் அந்த நாய் செத்து போச்சு முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது? Empty Re: முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?

Post by மகா பிரபு Mon Jan 14, 2013 5:18 pm

பயந்து ஓடு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது? Empty Re: முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?

Post by முரளிராஜா Mon Jan 14, 2013 5:19 pm

மகா பிரபு wrote:பயந்து ஓடு
நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது? Empty Re: முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?

Post by mohaideen Mon Jan 14, 2013 5:22 pm


என்னையும் ஒரு நாய் கடிச்சது . ஆனா கடிச்ச அரை மணி நேரத்தில் அந்த நாய் செத்து போச்சு முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது? 3137150671

பாவம் நாய் நக்கல்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது? Empty Re: முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?

Post by மகா பிரபு Mon Jan 14, 2013 5:23 pm

என்ன சிரிப்பூ! கோபம்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது? Empty Re: முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?

Post by முரளிராஜா Mon Jan 14, 2013 5:25 pm

மகா பிரபு wrote:என்ன சிரிப்பூ! கோபம்
முஹைதீன் சிரிச்சா உங்களுக்கு என்ன பிரச்சனை ?
புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது? Empty Re: முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?

Post by மகா பிரபு Mon Jan 14, 2013 5:35 pm

நான் கேட்டது உங்களை! சோகம்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது? Empty Re: முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?

Post by முரளிராஜா Mon Jan 14, 2013 5:37 pm

மகா பிரபு wrote:நான் கேட்டது உங்களை! சோகம்
தெரியும் ஒரு வில்லங்கத்த ஏற்படுத்தலாம்னுதான் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது? Empty Re: முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?

Post by mohaideen Mon Jan 14, 2013 5:38 pm

யாரும் நல்லா இருக்கிறது பிடிக்காதே?முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது? 427302201
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது? Empty Re: முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum