Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உடல் ஆரோக்கியத்துக்கு
Page 1 of 1 • Share
உடல் ஆரோக்கியத்துக்கு
ஆரோக்கியம் தரும் திணை
தினை என்பது ஒரு வகை தானியமாகும். ஆங்கிலத்தில் இது மில்லட் எனும் வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ள தானியமாகும். ஆங்கிலத்தில் மில்லட் என்பது சோளம், கம்பு கேப்பை (கேழ்வரகு) போன்ற தானிய வகையைக் குறிப்பதாகும். இதில் சைனீஸ் மில்லட், ஜெர்மன் மில்லட், ஹங்காரியன் மில்லட், எனும் விதம் விதமான தானியங்கள் அடங்கிய ஒரு வகைப்பாடு ஆகும். இதில் தினை என்பது நரி வாலைப் போல பச்சை நிறத்தில் காட்சியளிப்பதால் இதை ஃபாக்ஸ் டைல் மில்லட் என அழைக்கப்படுகின்றது.
தினை உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் இரண்டாவது தானிய வகையாகும். இதில் இந்தியா இரண்டாவது இடத்தையும் சீனா முதலிடத்தையும் வகிக்கின்றன. பழங்காலத்தில் முதலாவதாக பயிரிடப்பட்டு மனிதனால் உபயோகிக்கப்பட்ட தானிய வகை தினை தான். அதுவும் 6000 கி.மு விலேயே சீனாவில் பயிரடப்பட்டு உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது.தற்பொழுதும் சீனாவின் வட மாநிலங்களில் அதிகம் பயிரிடப்பட்டு உபயோகமாகி வரும் தானியம் தினை.
தினை என்றவுடன் தமிழ் கடவுள் முருகப் பெருமான் வயதான தோற்றத்துடன் சென்று வள்ளியிடம் சாப்பிட தினை மாவு கேட்டதாகவும், பின் வள்ளியை திருமணம் செய்ததாகவும் புராணத்தில் படித்த கதைகள் நம் நினைவுக்கு வரும். இதிலிருந்து, புராண காலம் தொட்டே தினையை பயன்படுத்தி வந்தது நமக்கு புரியும்.தினை இந்தியாவில் பயிராகும் ஒரு வகை உணவுப் பொருளாகும். தினை மாவு அதிக சத்து கொண்ட உணவுகளில் ஒன்று.
உடல் வலுப்பெற நம் முன்னோர்களின் உணவுகளான அரிசி, கேழ்வரகு, கம்பு, வரகு, தினை முதலியனவாக இருந்தது. இதனால் அவர்களின் உடலானது தேக்கு மரம் போல் திடமாக இருந்தது. இன்று இவற்றின் உணவுப் பயன்பாடு குறைந்து கடைசியாக அரிசியையும் தவிடு நீக்கி, பாலீஷ் செய்து சாப்பிடும் நிலைக்கு வந்து விட்டோம்.
இதனால் இன்று உடல் வலுவிழந்து நோயின் பாதிப்புக்கு ஆளாகிறது.
இப்படி நாம் இழந்த பொருட்களுள் தினையும் ஒன்று. மலைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேனும், தினைமாவுமே உணவாக இருந்தது. தற்போது அவர்களும், தினை என்றால் என்ன என்று கேட்கின்றனர். தினையில் உடலுக்குத் தேவையான புரத சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.
அக்காலத்தில் புகழ் பெற்ற தினையை இக்கால முறைப்படி எவ்வாறு எளிதாக தங்கள் அன்றாட உணவில் இடம்பிடிக்க வைக்கலாம் என இதோ சில யோசனைகள்
I.திணை இனிப்பு பொங்கல்
தேவையான பொ௫ட்கள்
திணைஅரிசி-200கி
வெல்லம்-300கி
பாசிபருப்பு-1/2கரண்டி
நெய்-100கி
தேங்காய்-1/2மூடிதுருவியது
ஏலக்காய்-4-5
முந்திரி,திராட்சை-25கி
உப்பு-தேவைக்கேற்ப
செய்முறை
திணை அரிசியையும், பாசிபருப்பையும் மூன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். நன்றாக குழைந்து வெந்தவுடன் வெல்லம், சிட்டிகை உப்பு சேர்க்கவும். வெல்ல வாசனை மறையும் வரை நன்றாக கிளரவும். பின்பு அடுப்பிலிருந்து இறக்கி வைத்து அதனுடன் தேங்காய், ஏலக்காய், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்.
II.திணை இனிப்பு இடியாப்பம்
தேவையான பொ௫ட்கள்
திணைமாவு-1/2கிலோ
சர்க்கரை-200கி
தேங்காய்-1
ஏலக்காய்-5-6
உப்பு-தேவையான அளவு
செய்முறை
தண்ணீரை கொதிக்க வைத்து அதில் திணை மாவை சேர்த்து கிளரவும். அந்த மாவை இடியாப்ப அச்சில் இட்டு பிழிந்து வேக வைத்து எடுக்கவும். கடைசியாக அதில் தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலப்பொடி சேர்க்கவும்.
III.திணை இனிப்பு புட்டு
தேவையான பொ௫ட்கள்
திணைமாவு-1/2கிலோ
சர்க்கரை-150கிராம்
தேங்காய்-1
ஏலக்காய்-1சிட்டிகை
உப்பு-சிறிதளவு
செய்முறை
தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். திணை மாவுடன் உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து பிசறி வைத்துக் கொள்ளவும். பின்பு குக்கரில் வைத்து வேக வைத்து வெந்தவுடன் ஒரு தட்டில் பரப்பி வைக்கவும். அதனுடன் சர்க்கரை, துருவிய தேங்காய், ஏலப்பொடி சேர்க்கவும்.
IV.திணை இட்லி
தேவையான பொ௫ட்கள்
திணைஅரிசி-400கி
வெந்தயம்-1டே.ஸ்பூன்
உளுத்தம்பருப்பு-1டம்ளர்
உப்பு-தேவைகேற்ப
செய்முறை
திணை அரிசி, வெந்தயம் ஊற வைக்கவும். உளுத்தம் பருப்பை தனியாக ஊற வைக்கவும். தனித்தனியாக அரைத்து எடுக்கவும். பின்பு இரண்டு மாவையும் உப்புடன் கலக்கவும். நான்கிலிருந்து ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும். மாவை இட்லி தட்டில் ஊற்றி வேக வைக்கவும்.
V.திணை பாயாசம்
தேவையான பொ௫ட்கள்
திணைமாவு-200கி
சர்க்கரை-11/2டம்ளர்
ஏலக்காய்-4-5
முந்திரி-10கி
திராட்சை-10கி
நெய்-தேவைக்கேற்ப
செய்முறை
ஒரு பாத்திரத்தில் 4 டம்ளர் நீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். அதில் கழுவிய திணை அரிசியை சேர்த்து நன்கு வேக வைக்கவும். அதனுடன் சர்க்கரை சேர்த்து 10 நிமிடத்திற்கு கிளரவும். பின்பு வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். 3 நிமிடம் கழித்து ஏலப்பொடி சேர்க்கவும்.
VI.திணை பக்கோடா
தேவையான பொ௫ட்கள்
திணைமாவு-100கி
கடலைமாவு-50கி
சின்னவெங்காயம்-200கி
இஞ்சி-சிறியதுண்டு
கொத்தமல்லி-சிறிதளவு
கறிவேப்பிலை-சிறிதளவு
எண்ணெய்-தேவைக்கேற்ப
மஞ்சள்தூள்-1சிட்டிகை
உப்பு-தேவைக்கேற்ப
செய்முறை
திணை மாவு, கடலை மாவு மற்றும் அதனுடன் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, நறுக்கிய இஞ்சி, மஞ்சள் தூள், உப்பு அனைத்தையும் ஒன்றாக கலந்து அதனுடன் 2 ஸ்பூன் சுட்ட எண்ணெய் விட்டு, தேவையான அளவு நீர் சேர்த்து பிசிறினார் போல பிசைந்து கொள்ளவும். பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள பக்கோடா மாவை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
தினை என்பது ஒரு வகை தானியமாகும். ஆங்கிலத்தில் இது மில்லட் எனும் வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ள தானியமாகும். ஆங்கிலத்தில் மில்லட் என்பது சோளம், கம்பு கேப்பை (கேழ்வரகு) போன்ற தானிய வகையைக் குறிப்பதாகும். இதில் சைனீஸ் மில்லட், ஜெர்மன் மில்லட், ஹங்காரியன் மில்லட், எனும் விதம் விதமான தானியங்கள் அடங்கிய ஒரு வகைப்பாடு ஆகும். இதில் தினை என்பது நரி வாலைப் போல பச்சை நிறத்தில் காட்சியளிப்பதால் இதை ஃபாக்ஸ் டைல் மில்லட் என அழைக்கப்படுகின்றது.
தினை உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் இரண்டாவது தானிய வகையாகும். இதில் இந்தியா இரண்டாவது இடத்தையும் சீனா முதலிடத்தையும் வகிக்கின்றன. பழங்காலத்தில் முதலாவதாக பயிரிடப்பட்டு மனிதனால் உபயோகிக்கப்பட்ட தானிய வகை தினை தான். அதுவும் 6000 கி.மு விலேயே சீனாவில் பயிரடப்பட்டு உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது.தற்பொழுதும் சீனாவின் வட மாநிலங்களில் அதிகம் பயிரிடப்பட்டு உபயோகமாகி வரும் தானியம் தினை.
தினை என்றவுடன் தமிழ் கடவுள் முருகப் பெருமான் வயதான தோற்றத்துடன் சென்று வள்ளியிடம் சாப்பிட தினை மாவு கேட்டதாகவும், பின் வள்ளியை திருமணம் செய்ததாகவும் புராணத்தில் படித்த கதைகள் நம் நினைவுக்கு வரும். இதிலிருந்து, புராண காலம் தொட்டே தினையை பயன்படுத்தி வந்தது நமக்கு புரியும்.தினை இந்தியாவில் பயிராகும் ஒரு வகை உணவுப் பொருளாகும். தினை மாவு அதிக சத்து கொண்ட உணவுகளில் ஒன்று.
உடல் வலுப்பெற நம் முன்னோர்களின் உணவுகளான அரிசி, கேழ்வரகு, கம்பு, வரகு, தினை முதலியனவாக இருந்தது. இதனால் அவர்களின் உடலானது தேக்கு மரம் போல் திடமாக இருந்தது. இன்று இவற்றின் உணவுப் பயன்பாடு குறைந்து கடைசியாக அரிசியையும் தவிடு நீக்கி, பாலீஷ் செய்து சாப்பிடும் நிலைக்கு வந்து விட்டோம்.
இதனால் இன்று உடல் வலுவிழந்து நோயின் பாதிப்புக்கு ஆளாகிறது.
இப்படி நாம் இழந்த பொருட்களுள் தினையும் ஒன்று. மலைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேனும், தினைமாவுமே உணவாக இருந்தது. தற்போது அவர்களும், தினை என்றால் என்ன என்று கேட்கின்றனர். தினையில் உடலுக்குத் தேவையான புரத சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.
அக்காலத்தில் புகழ் பெற்ற தினையை இக்கால முறைப்படி எவ்வாறு எளிதாக தங்கள் அன்றாட உணவில் இடம்பிடிக்க வைக்கலாம் என இதோ சில யோசனைகள்
I.திணை இனிப்பு பொங்கல்
தேவையான பொ௫ட்கள்
திணைஅரிசி-200கி
வெல்லம்-300கி
பாசிபருப்பு-1/2கரண்டி
நெய்-100கி
தேங்காய்-1/2மூடிதுருவியது
ஏலக்காய்-4-5
முந்திரி,திராட்சை-25கி
உப்பு-தேவைக்கேற்ப
செய்முறை
திணை அரிசியையும், பாசிபருப்பையும் மூன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். நன்றாக குழைந்து வெந்தவுடன் வெல்லம், சிட்டிகை உப்பு சேர்க்கவும். வெல்ல வாசனை மறையும் வரை நன்றாக கிளரவும். பின்பு அடுப்பிலிருந்து இறக்கி வைத்து அதனுடன் தேங்காய், ஏலக்காய், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்.
II.திணை இனிப்பு இடியாப்பம்
தேவையான பொ௫ட்கள்
திணைமாவு-1/2கிலோ
சர்க்கரை-200கி
தேங்காய்-1
ஏலக்காய்-5-6
உப்பு-தேவையான அளவு
செய்முறை
தண்ணீரை கொதிக்க வைத்து அதில் திணை மாவை சேர்த்து கிளரவும். அந்த மாவை இடியாப்ப அச்சில் இட்டு பிழிந்து வேக வைத்து எடுக்கவும். கடைசியாக அதில் தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலப்பொடி சேர்க்கவும்.
III.திணை இனிப்பு புட்டு
தேவையான பொ௫ட்கள்
திணைமாவு-1/2கிலோ
சர்க்கரை-150கிராம்
தேங்காய்-1
ஏலக்காய்-1சிட்டிகை
உப்பு-சிறிதளவு
செய்முறை
தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். திணை மாவுடன் உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து பிசறி வைத்துக் கொள்ளவும். பின்பு குக்கரில் வைத்து வேக வைத்து வெந்தவுடன் ஒரு தட்டில் பரப்பி வைக்கவும். அதனுடன் சர்க்கரை, துருவிய தேங்காய், ஏலப்பொடி சேர்க்கவும்.
IV.திணை இட்லி
தேவையான பொ௫ட்கள்
திணைஅரிசி-400கி
வெந்தயம்-1டே.ஸ்பூன்
உளுத்தம்பருப்பு-1டம்ளர்
உப்பு-தேவைகேற்ப
செய்முறை
திணை அரிசி, வெந்தயம் ஊற வைக்கவும். உளுத்தம் பருப்பை தனியாக ஊற வைக்கவும். தனித்தனியாக அரைத்து எடுக்கவும். பின்பு இரண்டு மாவையும் உப்புடன் கலக்கவும். நான்கிலிருந்து ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும். மாவை இட்லி தட்டில் ஊற்றி வேக வைக்கவும்.
V.திணை பாயாசம்
தேவையான பொ௫ட்கள்
திணைமாவு-200கி
சர்க்கரை-11/2டம்ளர்
ஏலக்காய்-4-5
முந்திரி-10கி
திராட்சை-10கி
நெய்-தேவைக்கேற்ப
செய்முறை
ஒரு பாத்திரத்தில் 4 டம்ளர் நீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். அதில் கழுவிய திணை அரிசியை சேர்த்து நன்கு வேக வைக்கவும். அதனுடன் சர்க்கரை சேர்த்து 10 நிமிடத்திற்கு கிளரவும். பின்பு வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். 3 நிமிடம் கழித்து ஏலப்பொடி சேர்க்கவும்.
VI.திணை பக்கோடா
தேவையான பொ௫ட்கள்
திணைமாவு-100கி
கடலைமாவு-50கி
சின்னவெங்காயம்-200கி
இஞ்சி-சிறியதுண்டு
கொத்தமல்லி-சிறிதளவு
கறிவேப்பிலை-சிறிதளவு
எண்ணெய்-தேவைக்கேற்ப
மஞ்சள்தூள்-1சிட்டிகை
உப்பு-தேவைக்கேற்ப
செய்முறை
திணை மாவு, கடலை மாவு மற்றும் அதனுடன் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, நறுக்கிய இஞ்சி, மஞ்சள் தூள், உப்பு அனைத்தையும் ஒன்றாக கலந்து அதனுடன் 2 ஸ்பூன் சுட்ட எண்ணெய் விட்டு, தேவையான அளவு நீர் சேர்த்து பிசிறினார் போல பிசைந்து கொள்ளவும். பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள பக்கோடா மாவை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உடல் ஆரோக்கியத்துக்கு
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி கேசவன்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» உடல் பருமனுக்கும் உடல் வலிகளுக்கும் என்ன தொடர்பு?
» உடல் ஆரோக்கியத்துக்கு
» உடல் ஆரோக்கியத்துக்கு
» உடல் ஆரோக்கியத்துக்கு
» உடல் ஆரோக்கியத்துக்கு
» உடல் ஆரோக்கியத்துக்கு
» உடல் ஆரோக்கியத்துக்கு
» உடல் ஆரோக்கியத்துக்கு
» உடல் ஆரோக்கியத்துக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|