தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில்

View previous topic View next topic Go down

குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் Empty குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில்

Post by மகா பிரபு Tue Feb 19, 2013 2:43 pm

திருப்பதி வேங்கடாசலபதி மீது அபார பக்தி கொண்டிருந்த ரிஷி குணசீலருக்கு, ஓர் எண்ணம் உதித்தது. ""பெருமாளை தரிசிக்க திருப்பதி சென்று வருகிறோமே... ஏன் பெருமாளையே நம் ஆசிரமத்தில் எழுந்தருளச் செய்யக் கூடாது?'' - இந்த எண்ணம் அலைமோத பெருமாளை நோக்கி ஆழ்ந்த தவத்தில் ஈடுபட்டார். அவரது தவத்துக்கு இரங்கிய பெருமாள் காட்சி தந்து வேண்டும் வரம் கேட்டார். அவரிடம் தன் ஆசையைச் சொன்னார் குணசீலர். அவர் விருப்பப்படி பெருமாள் அங்கு எழுந்தருள, அந்த இடம் முனிவரின் பெயரால் குணசீலம் என்றே ஆனது.

ஒரு முறை, ரிஷி குணசீலரின் குரு, குணசீலரைத் தன்னுடன் இருக்குமாறு அழைத்தார். அவருக்கு மிகுந்த மனக்குழப்பம். தவமிருந்து பெற்ற பெருமாளை விட்டுவிட்டுச் செல்வதா அல்லது குருவின் கட்டளையை மறுப்பதா? இப்படிப்பட்ட மனக் குழப்ப நிலையில், குருவுடன் இருக்குமாறு பெருமாள் ஒரு மருந்தைச் சொன்னார். அதன் பேரில் அவர் குருவிடம் செல்லும்போது, தன் சீடன் ஒருவனிடம் பெருமாளை ஒப்படைத்து, தினமும் பூஜை செய்துவரக் கட்டளையிட்டார். சீடனும் அதைக் கருத்தில் ஏற்று செய்துவந்தான். காவிரி பாயும் அந்த வனப்பகுதியில், நெடுகிலும் காடாக இருக்க, காவிரிக் கரையில் குணசீலம் இருந்தது. ஒரு முறை வன விலங்குகள் ஆசிரமத்தைச் சூழ்ந்து கொள்ளவே, அவற்றால் மிகவும் அச்சமுற்ற சீடன், உயிருக்குப் பயந்து அந்த இடத்தை விட்டு ஓடினான். பின்னர் ஆசிரமம் கேட்பாரற்றுப் போனது. நாளடைவில் ஆசிரமத்தில் புதர் மண்டி, விக்ரஹத்தை புற்று மண் மூடியது.

மன்னர் ஞானவர்மன். பகவத் அனுபவத்தில் ஞானம் பெற்ற அவரின் ஆட்சியில் ஒரு நாள்... அவரது அரண்மனைப் பசுக்கள் மேய்ச்சலுக்கு சென்றன. ஒரு குறிப்பிட்ட பகுதிக்குச் சென்றுவந்த பசுக்கள் மட்டும் பால் குறைவாகக் கொடுத்தன. ஒரு நேரம், அரண்மனைப் பாத்திரங்களில் வைத்திருந்த பால் காணாமல் போக, குழப்பமடைந்த மன்னனுக்கு அசரீரி வாக்காக பெருமாள் தன்னை உணர்த்தினார். ஒரு பெரியவரின் வழிகாட்டுதல்படி, புற்று மண்ணுக்கு பாலபிஷேகம் செய்த மன்னனுக்கு பெருமாள் தன்னை வெளிக்காட்டினார். அதன்பின்னர் மன்னன் அங்கே அழகிய ஒரு கோயிலைக் கட்டினான். இவ்வாறு குணசீலம் கோயில் அழகுற எழும்பியது.

திருச்சியில் இருந்து சேலம் செல்லும் சாலையில், முசிறிக்கு சற்று முன்னர் சுமார் 25 கி.மீ. தொலைவில், காவிரியின் மறு கரையில் உள்ளது கோயில். ஆலயத்தின் முகப்பில் ஒரு தீபஸ்தம்பம். அதில் அனுமன் புடைப்புச் சிற்பமாகத் திகழ்கிறார். கோயில் அழகிய கோபுரம், கொடிமரம், தீர்த்தக் குளம் உள்ளிட்ட அனைத்துடனும் திகழ்கிறது. இங்கே ஒரு விசேஷ அம்சமாக, வைகானஸ ஆகமத்தைத் தோற்றுவித்த ஸ்ரீவிகனஸருக்கு தனி சந்நிதி உள்ளது. ஆவணித் திருவோண நாளில் இவர் புறப்பாடு கண்டருள்கிறார். இங்கே பெருமாளுக்கு மட்டுமே சந்நிதி உள்ளது. தாயாருக்கு இல்லை. வேறு பரிவார மூர்த்தங்களும் இல்லை. மூலவர் சாளக்ராம மாலை அணிந்து அழகாகக் காட்சி தருகிறார். திருப்பதி வேங்கடேசரைப் போன்ற உருவம். உற்ஸவர் ஸ்ரீனிவாசர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராகக் காட்சி தருகிறார். சுவாமி சந்நிதியை வலம் வரும்போது, கோஷ்ட தெய்வங்களாக நவநீத கிருஷ்ணர், நரசிம்மர், வராஹர், யக்ஞநாராயணர் ஆகியோர் உள்ளனர். சந்நிதி வலம் வரும்போது உத்தராயன, தட்சிணாயன வாசல்கள் இருப்பதைக் காணலாம்.

இங்கே தினமும் மூலவருக்கு திருமஞ்சனம் நடக்கிறது. திருமஞ்சனம் செய்த தீர்த்தம் மற்றும் சந்தனம் பக்தர்களுக்கு பிரசாதமாகத் தரப்படுகிறது.

மனக்குழப்பத்துக்கு மருந்து: மனக்குழப்பம் உள்ளோர், மனநோயால் பாதிக்கப்பட்டோர் நிவர்த்தி அடைய வழிபடவேண்டிய தலம் இது. இங்கே, மனநோயாளிகள் தங்கியிருக்க இலவசமாக செயல்படும் மறுவாழ்வு மையம் உள்ளது.

காலை, மாலையில் பெருமாளுக்கு நடக்கும் விசேஷ பூஜைகளின்போது இவர்களுக்கு பிரசாத தீர்த்தம் தருகின்றனர். மதியமும், இரவிலும் மனநோயாளிகளை சுவாமி சந்நிதியில் அமரச் செய்து, நடக்கும் பூஜையை தரிசிக்கச் செய்கின்றனர். திருமஞ்சன தீர்த்தத்தை பாதிக்கப்பட்டவர்களின் முகத்தில் தெளிக்கிறார்கள்.

மேலும், கண் நோயால் பாதிக்கப்பட்ட பரத்வாஜரின் சீடர் ச்ருத தேவன், கால் முடத்தால் பாதிக்கப்பட்ட பகுவிராஜ மன்னன் ஆகியோர் இங்கே தங்கள் குறை நீங்கப் பெற்றுள்ளனர். இவ்வாறு, பார்வைக் கோளாறு, உடல் குறைபாடு உள்ளவர்கள் தங்கள் மன நிம்மதிக்காகவும், நிவாரணம் பெறவும் பெருமாளை வேண்டிக் கொள்கின்றனர்.

கோயில் திருவிழாக்கள்: சித்ரா பெüர்ணமி, தெப்பத் திருவிழா, ராமநவமி, கோகுலாஷ்டமி, புரட்டாசி சனிக்கிழமைகள் விசேஷமானவை.

ஒவ்வொரு மாத திருவோணத்திலும் கருடசேவையில் பெருமாளை தரிசிக்கலாம். புரட்டாசி பிரம்மோற்ஸவத்தில் குணசீலருக்கு பெருமாள் காட்சி தந்த வைபவம் சிறப்பாக

நடக்கிறது.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6.30-12.30 வரை, மாலை 4-8.30 வரை.

தகவலுக்கு: 04326 275210 / 275310

தினமணி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் Empty Re: குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில்

Post by மகா பிரபு Tue Feb 19, 2013 2:44 pm

குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் T_500_1090
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் Empty Re: குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில்

Post by செந்தில் Tue Feb 19, 2013 3:22 pm

கைதட்டல் சூப்பர்பகிர்வுக்கு நன்றி கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் Empty Re: குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» அமிர்தபுரி பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்
»  அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில், கோயம்புத்தூர்
» கிருஷ்ணாபுரம் அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருநெல்வேலி
» அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில்,கிருஷ்ணாபுரம் ,திருநெல்வேலி
» மேல்திருப்பதி திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோயில், சித்தூர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum