தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கருப்பையை பாதுகாப்பது எப்ப‍டி? கருப்பை அகற்றியவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? -

View previous topic View next topic Go down

கருப்பையை பாதுகாப்பது எப்ப‍டி? கருப்பை அகற்றியவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? - Empty கருப்பையை பாதுகாப்பது எப்ப‍டி? கருப்பை அகற்றியவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? -

Post by முழுமுதலோன் Thu Feb 28, 2013 1:59 pm

கருப்பையை பாதுகாப்பது எப்ப‍டி? கருப்பை அகற்றியவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? -
கருப்பை பெண்ணின் உடல் வலிமைக்கு தேவையான ஹார்மோ ன்களைத் தருகிறது. கருப்பை அகற்றியவர்கள் சந்திக்கும் பிரச் னைகள் என்ன, கருப்பையை எப்படி பாதுகாப்பது போன்ற வை குறித்து விளக்குகிறார் மகப் பேறு மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர் சுமதி செந்தில் குமார். பெண்கள் வயதுக்கு வந்ததில் இருந்து மாதவிடாய் நிற்கும் வரை சினை முட்டைப் பையில் இருந்து மாதம் ஒரு முட்டை வெளியாகும். அது விந்துவுடன் சேர்ந்து கரு உருவாகும். அது கருப்பையில் வளர்ச்சியடைந்து குழந்தை பிறக் கிறது. பலரும் சினைப்பையும், கருப்பையும் குழந்தை பிறப்பதற் காக மட்டும் தான் என்று நினைக்கிறார்கள்.

பெண்களின் சினை முட்டைப் பையில் உருவாகும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தான் பெண் தன்மை மற்றும் சத்துக்களை கொடுக்கி றது. எலும்புகளை வலுப்படுத்துகிறது. மாதவிடாய் நிற்கும் வரை சினை முட்டைப் பையில் ஈஸ்ட்ரோ ஜன் சுரப்பு அதிகம் இருக்கும். அதன் பின்னர் மெல்ல மெல்ல குறைந்து விடும். பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் சராசரி வயது 51. மாதவிடாய் நிற்பதற்கு முன்பே கருப்பையை எடுத்து விடுவதால் பெண்கள் பல்வேறு தொல்லை களுக்கு ஆளாகின்றனர். உடல்சூடு, இரவில் அதிகம் வியர்த்தல், தூக்கமின்மை, அடிக்கடி கோபம், சலிப்பு, மறதி, மனஉளைச்சல், உடல் வலி போன்ற பிரச்னைகள் தாக்கும்.

சிறுநீர்ப்பையில் கிருமித்தொற்று உண்டாகும். உடலுறவில் பிரச் னை ஏற்படும். எலும்பு தேய்மானம் மற்றும் முதுகெலும்பு உடை தல் உள்ளிட்ட தொந்தரவுகளும் வரும். பெண்கள் 45 வயதுக்கு முன்னரே கருப்பையை எடுக்கும் போது இது போன்ற பிரச்னைக ளை சந்திக்க வேண்டியிருக்கிறது. தவிர்க்க முடியாத காரணத் தால் கருப்பையை எடுக்க நேரும்போது, சினை முட்டைப் பையை விட்டு விட்டால் இப்பிரச்னைகள் வராமல் தடுக்கலாம் என்று சிலர் நினைக் கின்றனர். ஆனால் கருப்பை எடுத் த சில ஆண்டுக ளிலேயே சினை முட்டைப் பையும் இயங்காது. இந்த மெனோபாஸ் அறிகுறிகளுக்கு ஹார்மோன் ரீபிளேஸ்மெ ன்ட் தெரபி சிகிச்சை உண்டு. ஆனால் அது கடும் எதிர்விளை வுகளை ஏற்படு த்தும்.

ரத்தக் குழாயில் ரத்தம் உறைதல், மார்பக புற்றுநோய் போன்ற பிரச் னைகளுக்கு வழிவகுக்கும். எனவே கருப்பையை எடுப்பதை விட அதை பாதுகாப்பதே சிறந்தது. பாதுகாப்பு முறை: அதிகமாக உதிரம் போதல், வலி, சிறிய கட்டிகள், வெள்ளைப் படு தல் ஆகிய வற்றை காரணம் காட்டி கருப்பையை அகற்ற வேண் டாம். இதுபோன்ற பிரச்னைகளுக்கு மாற்று வழிகளை கடைபிடிக்கலாம். கட்டி மிகவும் பெரிதாக இருத்தல், வளர்ந்து கொண்டே போதல், கேன்சர் கட்டியாக மாற வாய்ப்பு இருத்தல், மாதவிடாய் உதிரம் மருந்துக்குக் கட்டுப்படாமல் போத ல் போன்ற வழியில்லாத கார ணத்தால் மட்டுமே கருப்பையை அகற்றலாம். பிறகு கட்டி வரலாம் என்ற கற்பனையில் கருப்பை யை அகற்றக் கூடாது.

நவீன மருத்துவத்தில் சினைப்பை மற்றும் கருப்பையை அகற்றா மலேயே கட்டியை அகற்ற லேப்ராஸ்கோபி முறையில் பல சிகிச் சைகள் உள்ளன. மெனோபாஸ் பிரச்னைகளுக்கு கர்ப்பவியல் நிபுணர்களை அணுகும் போது சரியான மருத்துவம் கிடைக்கும். கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை எதுவாக இருந்தாலும் அதில் சில பிரச்னைகளும் இருக்கும். கருப் பை வாயில் புற்று நோய் ஏற்பட வாய்ப்பு ள்ளதா என்பதை சிறிய சோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம். 24 வயது முதல் 64 வயது வரை உடலுறவு வைத்துக் கொள்ளும் பெண்கள் மூன்று ஆண்டுக்கு ஒரு முறை பேப்ஸ்மியர் டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும். முடிந்தளவு கரு ப்பை மற்றும் சினை முட்டைப் பையை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

ரெசிபி
ஆட்டு ஈரல் சூப்:
ஆட்டு ஈரல் கால் கிலோ எடுத்து பொடியாக நறுக்கி கொள்ளவும். சின்ன வெங்காயம் 10 உரித்து வெட்டிக் கொள்ளவும், தனியா, மிளகு, சீரகம், மஞ்சள் தூள் ஆகிய வற்றை ஒரு டீஸ்பூன் எடுத்து க் கொள்ளவும். பெரிய வெங்காயம் – பாதி, தக்காளி 1, கருவேப் பிலை மற்றும் கொத்தமல்லி தேவையா ன அளவு. தனியா, சீரகம், மிளகு ஆகியவற்றை பொடியாக்கிக் கொ ள்ளவும். அரிசி களைந்த தண்ணீ ரை குக்கரில் ஊற்றி அதில் ஈரல் துண்டுகள், அரைத்த பொடி, வெங் காயத்தை தனியாக வதக்கி அரைத்து இத்துடன் சேர்க்கவும். மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து கடைசியில் மிளகுத்தூள், கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்க வும். இதில் போதுமான அளவு இரும்புச் சத்து உள்ளது. பெண்கள் வாரம் ஒரு முறை இதை அருந்தலாம்.

பனீர் கேரட் குருமா:
பனீர் அரை கப், கேரட் கால் கிலோ, வெங்கா யம் 4, தக்காளி 4, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, பச்சை மிளகாய், கரம்மசாலா அரை டீஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு, பட்டை கிராம்பு உள்ளி ட்டவற்றை வதக் கவும். பின்னர் இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். சின்ன வெங்காய ம், தக்காளியை தனியாக வதக்கி அரைத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிதளவு தண்ணீர் விட்டு நீளவாக்கி ல் கேரட்டை வெட்டி போடவும். தேவையான உப்பு சேர்த்து வேக விடவும். மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா த்தூள் சேர்க்கவும். தக்காளி, வெங்காயம் அரைத்த பேஸ்ட் சேர்த்து கொதிக்க விட வும். இறுதியில் பனீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். கொத்தமல்லித் தழை சேர்த்து பரிமாற லாம்.

நூடுல்ஸ் கட்லட்:
தேவையான அளவு நூடுல்சை தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணியை அரை வேக்காடாக எடுத் துக் கொள்ளவும். உருளைக் கிழங்கை தனியாக வேக வைத்து மசித்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு அரைத்துக் கொள் ளவும். வேக வைத்த நூடுல்ஸ், வேகவைத்த காய்கறிகள், உரு ளைக் கிழங்கு சேர்த்து பிசைந்து கொள்ளவும். வெண்ணெயைத் துருவி இதில் சேர்த்து பிசைந்து கொள்ளவும். மைதா, பிரட் தூள் ஆகிவ ற்றை எடுத்துக் கொள்ளவும். பிசைந்த கலவையை பிடித் த வடிவத்தில் தட்டி முதலில் மைதாவில் பிரட்டி பின்னர் ரொட்டி த் தூளில் பிரட்டி பின்னர் தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இரு புறமும் சிவக்க வேக வைத்து எடுக்கவும்.

டயட்
அடிக்கடி அபார்ஷன், அதிக டெலிவரி, மாதவிலக்கின் போது அதிக ரத்தப்போக்கு, சிறுநீரகத் தொற்று, சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, உடல் பருமன், தைராய்டு போன்ற உடல் நலக் குறை பாடு இருப்பவர்களுக்கு கருப்பை பிரச்னை ஏற்படும் வாய்ப்பு அதிகம். பரம் பரை காரணங்களாலும் பெண்களுக்கு வரலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அள வை சோதித்து கட்டுப்பாட்டில் வைக்க வேண்டியது அவசியம். அதே போல் உயரத்துக்கு ஏற்ற எடை யை பராமரித்தல், தினமும் வாக்கிங், சத்தான உணவு என்று வாழ்க் கை முறையை மாற்றிக் கொண்டால் தான் கருப்பையை காப்பா ற்றிக் கொள்ள முடியும்.

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் உட்கொள்ள வேண்டும். இரு ம்புச் சத்து உணவுகள் அவசியம். உப்பை கண்டிப்பாக குறைக்கவு ம். குளிர்பானங்கள், பதப்படுத்தப் பட்ட உணவுகள், இனிப்பு வகை கள், ஐஸ் கிரீம், மாவுச்சத்து அதி கம் உள்ள உணவுகள், கிழங்கு வகைகளை தவிர்க்க வேண்டும் . அரிசி உணவுகளையும் குறை க்க வேண்டும். உணவில் ஒரு கப் சாதத்துடன் இரண்டு கப் காய் கறி இருக்குமாறு பார்த்துக் கொ ள்ள வேண்டும். கட்டாயம் ஒரு கீரை இருக்கட்டும். முளைக்கீரை மற்றும் வெந்தயக் கீரை ஆகிய வற்றை வாரம் இரண்டு முறை யாவது சேர்க்க வேண்டும்.
கருப்பையை எடுத்தவர்கள் ஒரு நாளைக்கு 1200 கலோரி அளவு க்கான உணவு மட்டுமே எடுத்துக் கொள் ளலாம். ஏனெனில் கருப்பை எடுத்த உடன் பெண்களின் எடை அதிகரிக்கும். மேலும் சாதத் துக்கு பதிலாக பழங்கள், கீரைகள் அதிகம் சாப்பிடுவது அவசியம் . இத்துடன் பிறப்புறுப்பு, கருப்பை வாய் ப்பகுதியில் நோய்த் தொற்று ஏற்படாத வாறு சுத்தத்தை கடை பிடிக்க வேண்டி யதும் அவசியம் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

பாட்டி வைத்தியம்

வெள்ளரி விதையை அரைத்து பாலில் கலந்து குடித்தால் சிறுநீர் தொடர்பான பிரச்னைகள் தீரும்.
வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து சாப்பிட் டால் உடல் சூடு தணியும்.
மாதவிலக்கு குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படாதவர்கள் வெங்காயத் தாள், காயவைத்த கறுப்பு எள், கருஞ்சீரகம் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்துக் கொள்ளவும். மாதவிலக்கு தடைபடும் காலங்களில் காலை, மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு மூன்று நாட்கள் சாப்பி ட்டால் மாதவிலக்கு ஏற்படும்.
விளா மரத்தின் பிசினை மஞ்சள் சேர்த்து ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் வெள் ளைப்படுதல் குணமாகும்.
வாழைப்பூவை இடித்து சாறு எடுத்து அதில் பனங்கற்கண்டு சேர் த்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குண மாகும்.
வல்லாரைக் கீரை சாற்றில் பெரு ஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பி ட்டால் மாதவிலக்கு கோளாறு சரியாகும்.
லவங்கப் பட்டையை பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அள வுக்கு சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது அதிக ரத்தப் போக்கு நிற்கும்.
முள் இலவம்பட்டையை 200 கிராம் அளவுக்கு எடுத்து பொடிசெய்து தினமு ம் காலை, மாலை இரு வேளையும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்னை குண மாகும்.
முருங்கை கீரையை அடிக்கடி உணவி ல் சேர்த்துக் கொண்டால் கருப்பை பலப்படும்.
சிறப்பு மருத்துவர் சுமதி செந்தில்குமார்
Posted on February 27, 2013 by vidhai2virutcham
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கருப்பையை பாதுகாப்பது எப்ப‍டி? கருப்பை அகற்றியவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? - Empty Re: கருப்பையை பாதுகாப்பது எப்ப‍டி? கருப்பை அகற்றியவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? -

Post by முரளிராஜா Thu Feb 28, 2013 2:12 pm

பலரது சந்தேகங்களை தீர்த்து வைக்கும் பதிவு
நன்றி கேசவன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கருப்பையை பாதுகாப்பது எப்ப‍டி? கருப்பை அகற்றியவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? - Empty Re: கருப்பையை பாதுகாப்பது எப்ப‍டி? கருப்பை அகற்றியவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? -

Post by mohaideen Thu Feb 28, 2013 5:25 pm

பெண்களுக்கான சிறந்த தகவல்கள்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கருப்பையை பாதுகாப்பது எப்ப‍டி? கருப்பை அகற்றியவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? - Empty Re: கருப்பையை பாதுகாப்பது எப்ப‍டி? கருப்பை அகற்றியவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? -

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum