தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டி

View previous topic View next topic Go down

உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டி Empty உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டி

Post by Guest Sun Jul 11, 2010 9:08 am

உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதை வைத்து நாட்டில் 5,000 கோடி ரூபாய் அளவிற்கு சூதாட்டம் நடந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 300 கோடி ரூபாய்க்கு மேல் சூதாட்டம் நடந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி முதல் உலகத்தையே தன்வசப்படுத்தியுள்ள உலககோப்பை கால்பந்து போட்டி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா அணிகள் தோல்வியை தழுவிய நிலையில் நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் அணிகள் இன்று 11ம் தேதி நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் கோப்பையை வெல்ல பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இதனால் கால்பந்து ரசிகர்களின் பார்வை முழுவதும் இறுதிப்போட்டி நடக்கவுள்ள தென் ஆப்ரிக்காவின் "சாக்கர் சிட்டி' மைதானத்தை நோக்கி திரும்பியுள்ளது. அங்கு நேரில் சென்று போட்டியை ரசிக்க முடியாத ரசிகர்கள் "டிவி' நேரடி ஒளிபரப்பை காண்பதற்கு தவம் கிடக்கின்றனர். இவர்களை போலவே இறுதிப்போட்டியை எதிர்நோக்கி லேப் - டாப், கம்யூட்டர்கள், இன்டர்நெட், மெயில் வசதிகள் கொண்ட மொபைல்போன்கள் சகிதமாக, சூதாட்டக்காரர்களும் பதட்டத்துடன் வலம் வருகின்றனர். அந்தளவிற்கு கால்பந்தாட்ட சூதாட்டம் களை கட்டியுள்ளது.

வெளிநாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆன்- லைன் சூதாட்டங்கள் அமோகமாக நடக்கும் நிலையில் இந்தியாவில் அவை தடைசெய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் நடக்கும் ஆன் - லைன் சூதாட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்றால், சர்வதேச வங்கிகளில் கணக்கு வைத்திருக்கவேண்டும். அதனால், நாட்டில் உள்ள மிகப்பெரிய சூதாட்டக்காரர்கள், வெளிநாடுகளில் உள்ள நண்பர்கள் உதவியுடன், அவர்களது வங்கி கணக்கை ஆன் - லைனில் குறிப்பிட்டு சூதாடி வருகின்றனர்.

இந்த ஆன் - லைன் சூதாட்டத்தில் இந்தியாவில் இருந்து இதுவரை 15,000 கோடி ரூபாய்க்கு மேல் சூதாட்டம் நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இறுதிப் போட்டிக்கு மட்டும் 5,000 கோடி ரூபாய் அளவிற்கு சூதாட்டம் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுமட்டுமின்றி பங்கு சந்தை, ஆன் - லைன் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களும் நம்பகமான ஆட்களை வைத்தும் கால்பந்தாட்ட சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னை போன்ற பெருநகரங்களில் இதுபோன்ற சூதாட்டங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன. இதிலும் இறுதிப் போட்டிக்கு 2,000 கோடி ரூபாய் அளவிற்கு சூதாட்டம் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சென்னையில் வர்த்தகர்கள் அதிகம் மிகுந்த பாரிமுனை, மண்ணடி, சவுகார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கால்பந்தாட்ட சூதாட்டம் களைக்கட்டியுள்ளது.

இதற்கென சூதாட்டக்காரர்கள் பங்கு சந்தை அலுவலகம் போல் ரகசிய அலுவலகங்களை அமைத்து செயல்படுகின்றனர். இந்த சூதாட்டத்தில் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே ஆட்கள் சேர்த்துக் கொள்ளபடுகின்றனர். சென்னையை தலைமையிடமாக வைத்து நடக்கும் இந்த சூதாட்டத்தில் கோவை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களை சேர்ந்தவர்களும் பணத்தை அதிகளவில் முதலீடு செய்துள்ளனர்.

இதுவரை நடந்த போட்டிகளில் 700 கோடி ரூபாய் வரையும், இறுதிப்போட்டிக்கு மட்டும் 300 கோடி ரூபாய்க்கு மேல் இங்கு சூதாட்டம் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. எந்த அணி வெற்றி பெறும், எந்த அணி எத்தனை கோல் போடும், ஆட்டத்தின்முதல் பகுதியில் எத்தனை கோல், இரண்டாவது ரவுண்டில் எத்தனை கோல் அடிக்கப்படும், எந்தெந்த வீரர்கள் கோல் அடிப்பர் என்பதை அடிப்படையாக வைத்து "பெட்டிங்' வைக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து அணிகளின் ஆடைகள் கிட்டத்தட்ட ஒரே நிறத்தில் இருப்பதால் இறுதிப் போட்டியில் எந்த அணியின் ஆடை நிறம் மாறும் என்பதை முன்வைத்தும் "பெட்டிங்' நடந்துள்ளது. இந்தியாவில் கிரிக்கெட்டில் மட்டுமே அதிகளவில் சூதாட்டம் நடக்கும். சமீபத்தில் நடந்த ஐ.பி.எல்., போட்டியில் 10,000 கோடி ரூபாய் அளவிற்கு சூதாட்டம் நடந்ததாக தகவல் வெளியானது.

உலகம் முழுவதும் பார்க்கப்படும் போட்டி என்பதால் கால்பந்து போட்டியில் அதைவிட அதிகளவில் சூதாட்டம் நடக்கிறது. இவ்வாறு பணம் கட்டும் நபர் வெற்றி பெற்றால், காலையில் அவர் வீட்டிற்கு பால்காரர் வருவதற்குள் பணம் வந்துவிடும். அதேநேரத்தில் தோல்வியடைந்து அவர் பணம் தர மறுத்தால், அது அவரது உயிருக்கே உலை வைத்துவிடும்.

- நமது சிறப்பு நிருபர் -
Anonymous
Guest
Guest


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum