தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


படை திரட்டி இலங்கை செல்ல தயார்; அனுமதிக்கத் தயாரா?: கருணாநிதிக்கு சீமான் கேள்வி

View previous topic View next topic Go down

படை திரட்டி இலங்கை செல்ல தயார்; அனுமதிக்கத் தயாரா?: கருணாநிதிக்கு சீமான் கேள்வி   Empty படை திரட்டி இலங்கை செல்ல தயார்; அனுமதிக்கத் தயாரா?: கருணாநிதிக்கு சீமான் கேள்வி

Post by Guest Tue Jul 13, 2010 8:47 am

தமிழர்களை காக்க படை திரட்டி இலங்கை செல்ல தாங்கள் தயாராக உள்ளதாகவும், இலங்கைக்கு பகடியம் பேசிய முதலமைச்சர் கருணாநிதி அதனை தடுத்து நிறுத்தாமல் இருக்க தயாரா என்றும் நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் கேள்வி விடுத்துள்ளார்.

தமிழக மீனவரைக் கொன்ற இலங்கை கடற்படையினரை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சீமான் பிரிவினையை தூண்டும் விதமாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காவல்துறையினரால் இன்று சென்னையில் கைது செய்யப்பட்டார்.

அதற்கு முன்னதாக அவர் பத்திரிகையாளர்களிடம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நமது மீனவர்களை காக்க வேண்டிய இந்திய அரசும், தமிழக அரசும் கண்ணாமூச்சி விளையாட்டு போல் கடிதம் எழுதிக் கொண்டு தமிழக மக்களை ஏமாற்றிவருகின்றனர். இதைக் கண்டித்து நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினால் என் மீது பிரிவினை தூண்டினார், இறையாண்மைக்கு எதிராகப் பேசினார் என்றெல்லாம் பொய் வழக்கு போட்டு கைது செய்யத் துடிக்கிறது தமிழக அரசு.

இலங்கையில் ஈழத்தமிழரை இலட்சக் கணக்கில் இனப்படுகொலை செய்தது போதாதென்று இந்தியாவிலும் தமிழினத்தை அதாவது நம் மீனவர்களை இனப்படுகொலை செய்துவரும் சிங்கள இனவெறியர் அதிபர் இராஜபக்சே அரசை நாம் கண்டித்தால், தமிழக அரசுக்கும், இங்குள்ள அமைச்சர் துரைமுருகனுக்கும் கோபம் பொத்துக் கொண்டு வருவது ஏன்?

இராஜபக்சே இவர்களுக்கு அண்ணனா, தம்பியா? மாமனா, மைத்துனரா? தமிழின விரோதியைத் திட்டினால் தமிழினக் காவலருக்கு கோபம் வருவதேன்? தமிழர்களின் உயிரென்றால் உங்களுக்கு துச்சமா?அல்லது இராஜபக்சே அரசுக்கு நீங்கள் என்ன அங்கமா?

ஈழத்தமிழரைப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், 6வது திருத்தச் சட்டம் என அடக்குமுறைச் சட்டங்களைக் காட்டி மிரட்டுவதைப் போல், தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் இங்கேயும் அடக்குமறைச் சட்டம் போடுவோமென மிரட்டுகிறார் என்றால், இவர்கள் தமிழக மீனவர்களை காப்பாற்ற இலங்கைமீது சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்க மாட்டார்களாம்!

ஆனால் அதைக் கண்டித்துப் பேசும் எங்களுக்குத் தான் வாய்ப்பூட்டுச் சட்டம் போடுவாராம்.! இவர் தமிழ் நாட்டு மக்களுக்கு அமைச்சரா? இல்லை இலங்கைக்கு அமைச்சரா?

அரசு, ஆட்சி, அதிகாரம் எல்லாம் உங்கள் கைகளில் தானே இருக்கிறது! அவையெல்லாம் எதற்கு? ராஜபக்சேவிற்கு வெண்சாமரம் வீசுவதற்கா?

சிங்கள கடற்படையினரால் கொடூரமாகச் சுட்டும், அடித்தும் கொல்லப்படும் தமிழக மீனவர்கள் இந்தியர்களில்லையா? அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டா இல்லையா? எனக்கேட்டால், தன்னைத் தமிழன் என்று மார்த்தட்டிக் கொள்ளும் பொறுப்புள்ள ஒரு தமிழக முதலமைச்சர், 'சூராதி சூரர்கள், சூரபத்ம பேரர்கள் இதோ புறப்பட்டுவிட்டது இலங்கைக்கு எங்கள் படை என்று கடற்படையை அனுப்பப் போகின்றார்களா?' என்றும் 'கொழும்புக்கு கடலிலேயே நீந்திச் சென்று அங்குள்ள கோட்டைக் கொத்தளங்களை முற்றுகையிடப் போகிறார்களா?' என்றும் தமிழர்களைக் கேலி பேசி இருப்பது தமிழினத் தலைவருக்கு அடையாளமா?.

செம்மொழி மாநாடு நடத்தியவருக்கு பாவம் இராஜராஜ சோழன் காலத்தில், நந்திவர்ம பல்லவன் காலத்தில் இலங்கைக்குப் படையெடுத்துச் சென்று தமிழரிடம் வாலாட்டிய சிங்கள மன்னர்களின் கொட்டத்தை அடக்கிய வரலாறு தெரியாதென்று சொல்ல முடியாது.

பதவிப்பித்தும், குடும்பச் சொத்தும் தமிழக முதல்வரைத் தமிழர் வீரத்தைப் பற்றியே கேலியும் கிண்டலும் செய்யத் தூண்டியிருக்கிறது.இதுதான் அண்ணா, பெரியார் உங்களுக்கு காட்டிய வழியா?

தமிழனுக்கு என்றொரு நாடோ, படையோ இன்றில்லாவிட்டாலும் முப்படைகளைக் கொண்டிருக்கும் இந்திய அரசில் தன்னை பங்காளி ஆக்கிக்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் கலைஞர் தன்னை எம்.ஜி.ஆரைப் போல் எண்ணிக்கொண்டு, சோனியா காந்தி தன்னை இந்திராகாந்தி போல் கருதிக்கொண்டு அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆயதங்களும், பயிற்சியும், நிதியுதவியும் செய்தததைப் போல எங்களைப்போன்ற இளைஞர்களுக்கு உதவிகள்கூட செய்ய வேண்டாம். குறைந்தது எங்களைத் தடுத்து நிறுத்தாமல் இருக்க முடியுமா உங்களால்?
Anonymous
Guest
Guest


Back to top Go down

படை திரட்டி இலங்கை செல்ல தயார்; அனுமதிக்கத் தயாரா?: கருணாநிதிக்கு சீமான் கேள்வி   Empty Re: படை திரட்டி இலங்கை செல்ல தயார்; அனுமதிக்கத் தயாரா?: கருணாநிதிக்கு சீமான் கேள்வி

Post by Admin Tue Jul 13, 2010 9:44 am

சும்ம இருங்கப்பா.... இனி நடக்க வேண்டியதை பாருங்க சும்மா சவால் விடாம...
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

படை திரட்டி இலங்கை செல்ல தயார்; அனுமதிக்கத் தயாரா?: கருணாநிதிக்கு சீமான் கேள்வி   Empty Re: படை திரட்டி இலங்கை செல்ல தயார்; அனுமதிக்கத் தயாரா?: கருணாநிதிக்கு சீமான் கேள்வி

Post by Guest Tue Jul 13, 2010 9:45 am

Admin wrote:சும்ம இருங்கப்பா.... இனி நடக்க வேண்டியதை பாருங்க சும்மா சவால் விடாம...

படை திரட்டி இலங்கை செல்ல தயார்; அனுமதிக்கத் தயாரா?: கருணாநிதிக்கு சீமான் கேள்வி   616867
Anonymous
Guest
Guest


Back to top Go down

படை திரட்டி இலங்கை செல்ல தயார்; அனுமதிக்கத் தயாரா?: கருணாநிதிக்கு சீமான் கேள்வி   Empty Re: படை திரட்டி இலங்கை செல்ல தயார்; அனுமதிக்கத் தயாரா?: கருணாநிதிக்கு சீமான் கேள்வி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum