தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நோயின்றி வாழ குறைவற்ற வழிகள்

View previous topic View next topic Go down

நோயின்றி வாழ குறைவற்ற வழிகள் Empty நோயின்றி வாழ குறைவற்ற வழிகள்

Post by முழுமுதலோன் Mon Mar 25, 2013 6:31 pm


உடலில் நோய் ஏற்படாமல் தடுப்பதற்கு சிறந்த வழி என்றால், அது நம்மை நாமே சரியாக பார்த்துக் கொள்வது தான். அதிலும் உடலில் நோயின்றி, நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை நீண்ட நாட்கள் வாழ்வதற்கு பல வகையான வழிகள் உள்ளன. அத்தகைய வழிகளை சரியாக பின்பற்றி வந்தால், நோயின்றி பல நாட்கள் வாழ முடியும்.

குறிப்பாக தற்போது பெரும்பாலானோர் அடிக்கடி நோயால்
பாதிக்கப்படுவதற்கு பெரும் காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் தான் காரணம். எனவே அத்தகைய வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களை சரியாக பின்பற்றி வந்தால், அனைவருமே சூப்பராக வாழ முடியும்.

எனவே இப்போது நோயின்றி வாழ்வதற்கான சில இரகசியங்களுள் ஒருசிலவற்றை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம். அவை அனைத்தும் அன்றாடம் நாம் மேற்கொள்ளும் செயல்களாகத் தான் இருக்கும். ஆகவே அத்தகைய செயல்கள் என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, அதனை தினமும் பின்பற்றி, நோயின்றி வாழுங்கள்.

1) சாப்பிடும் முன் மட்டும் தான் கைகளை கழுவ வேண்டும் என்பதில்லை. தினமும் அவ்வப்போது வெளியே சென்று வந்தாலோ அல்லது ஏதேனும் உணவுப் பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து வைக்கும் போதெல்லாம் கைகளை கழுவ வேண்டும். இதனால் உடல் மற்றும் சருமத்தில் நோய்கள் வருவதைத் தவிர்க்கலாம்.

2) நிறைய பேருக்கு மூக்கில் விரலை வைத்து குடையும் பழக்கம் இருக்கும். இவ்வாறு அடிக்கடி மூக்கை நோண்டிக் கொண்டிருந்தால், அவையும் நிறைய கிருமிகளை மூக்கின் மூலம் உடலுக்கு செல்ல வழிவகுக்கும். எப்படியெனில் கண்ட பொருட்களை தொட்டுவிட்டு, பின் விரலை மூக்கில் வைத்தால், கிருமிகள் உள்ளே செல்லாதா?

3) எப்போதும் ஒரே நிலையில் உட்காராமல், அவ்வப்போது நீட்டி மடக்கி, நெளிந்து உட்கார வேண்டும். இதனால் நிறைய வலிகள், பிடிப்புக்கள் போன்றவற்றை தவிர்க்கலாம். சொல்லப்போனால் தினமும் காலையில் சிறிது நேரம் ஸ்ட்ரெட்ச்சிங் உடற்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது.

4) உடலை ஆரோக்கியத்துடன் வைப்பதில் சுவாச்சத்தலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனால் நுரையீரலானது நன்கு செயல்பட்டு, அதிகமான ஆக்ஸிஜன் உடலுக்கு கிடைத்து, உடலில் இரத்த ஓட்டமும், செயல்பாடும் அதிகரிக்கும்.

5) தவறாமல் காலையில் சாப்பிட வேண்டும் அதிலும் நன்கு ஆரோக்கியமான உணவுகளை காலையில் உட்கொண்டால், உடல் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்கும். எப்படியெனில் மற்ற நேரத்தில் சாப்பிடுவதை விட, காலையில் சாப்பிடுவதில் தான், ஒரு நாளைக்கு வேண்டிய சக்தியானது கிடைக்கும். அவ்வாறு காலை உணவை தவிர்த்தால், பின் அந்த நாளில் வேறு எப்போது சாப்பிட்டாலும், உடல் வலிமையிழந்து தான் இருக்கும்.

6) தினமும் மறக்காமல் குளிக்கும் பழக்கத்தை கொள்ள வேண்டும். இதனால் உடலில் இருக்கும் கிருமிகள், அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும்.

7) நீளமான நகங்கள் இருந்தால், எந்த ஒரு செய்யும் செயலும் ஆரோக்கியமானதாக இருக்காது. ஏனெனில் நகங்களின் இடுக்குகளில் அழுக்குகள் நுழைந்து, பின் எவ்வளவு தான் கைகளை கழுவி சாப்பிட்டாலும், கிருமிகள் போகாமல், உண்ணும் உணவின் மூலம் உடலில் சென்று நோயை உண்டாக்கும். எனவே அடிக்கடி நகங்களை வெட்டும் பழக்கத்தை கொள்ள வேண்டும்.

8) சிலர் நண்பர்கள், உறவினர்கள் தான் என்று நினைத்து, எதைக் கேட்டாலும் கொடுத்துவிடுவார்கள். கொடுப்பது தவறல்ல. ஆனால் ஒருசில முக்கிய உடைமைகளான ரேசர், டூத் பிரஷ், நெயில் கிளிப் போன்றவற்றை பகிரக் கூடாது. இவ்வாறு பகிர்வது கிருமிகளை பகிர்வதற்கு சமமானது.

9) வெளியே செல்லும்போது சன் ஸ்கிரீன் லோசனை தடவிச் செல்லும் பழக்கத்தை கொள்ள வேண்டும். இதனால் சூரியக்கதிர்களின் அதிகப்படியான தாக்கத்தினால் ஏற்படும் சருமப் பிரச்சனைகளான சரும புற்றுநோய், பழுப்பு நிற சருமம் போன்றவை வராமல் தடுக்கலாம். மேலும் நீண்ட நாட்கள் இளமையோடும் இருக்க முடியும்.

10) இனிப்பு உணவுகளை சாப்பிடுவது, ஆல்கஹால் மற்றும் சிகரெட் பிடிப்பதற்கு சமம். ஏனெனில் அதிகப்படியான இனிப்பு உடலில் இருந்தால், உடல் எடை அளவுக்கு அதிகமாவதோடு, நீரிழிவு ஏற்படும் அபாயமும் ஏற்படும். எனவே இனிப்புப் பொருட்களை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

11) உடலில் இருந்து தினமும் வியர்வையானது நிச்சயம் வெளியேற வேண்டும். அதற்கு உடற்பயிற்சி தான் சரியான வழி. எனவே குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சியை செய்து வந்தால், உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் வலுவாவதோடு, மன அழுத்தம் குறைந்து, உடல் எடையும் சீராக இருக்கும்.

12) தினமும் குறைந்துது 8 மணிநேர தூக்கமானது மிகவும் அவசியம். எவ்வளவு நேரம் தூங்குகிறோமோ, அதைப் பொறுத்து தான் உடல் ஆரோக்கியமும் உள்ளது. மேலும் சரியான தூக்கம் இல்லாவிட்டால், டென்சன் அதிகரித்து, மன இறுக்கம் ஏற்பட்டு, எந்த செயலையும் பொறுமையாக சரியாக செய்ய முடியாது.

13) எந்த ஒரு விஷயத்தையும் நினைத்து கவலைக் கொள்ளக் கூடாது. அவ்வாறு கவலைப் பட்டால், மன அழுத்தம், மன தளர்ச்சி, தூக்கமின்மை மற்றும் இதய நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே கவலை மனதில் ஏற்பட்டால், அதனைப் போக்க தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவற்றை செய்ய வேண்டும்.

14) தற்போது கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்வோரின் எண்ணிக்கை தான் அதிகம் உள்ளது. மேலும் சிறு குழந்தைகளும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். அவ்வாறு கம்ப்யூட்டர் முன் வேலை பார்க்கும் போது, கண்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு, கண்களுக்கு கண்ணாடி அணிந்து கொண்டு வேலை செய்ய வேண்டும். இதனால் இரவில் நல்ல தூக்கத்தைப் பெறலாம்.

15) தினமும் குறைந்தது 8-10 டம்ளர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். போதுமான தண்ணீர் உடலில் இல்லாவிட்டால், உடலில் வறட்சி ஏற்பட்டு, செல்கள் சரியாக செயல்படாமல் போய்விடும்.

16) ஜங்க் உணவுகளை சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இத்தகைய உணவுகளை அதிகம் சாப்பிட்டால், அந்த உணவுகளில் உள்ள கொழுப்புக்கள், சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியைப் பயன்படுத்துவதால், உடலில் மிகவும் மோசமான நோய்கள் உண்டாகும். அந்த நோய்கள் என்னவென்று சொல்ல முடியாது. அந்த அளவில் நோய்களானது உடலில் வந்துவிடும்.

17) ஒரு சிகரெட் பிடித்தாலும், அவை உடலில் இரத்த ஓட்டத்தை குறைத்து, நுரையீரல்களில் அடைப்புக்கள், இதய நோய் போன்றவற்றை ஏற்படுத்தும். எனவே புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.

18) உடலுறவு கொள்வது என்பது ஒருவித சந்தோஷமான ஒரு அனுபவம். இத்தகைய உறவில் சிறிது முட்டாள்தனமாக செயல்பட்டாலும், பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே உடலுறவு கொள்ளும் போது, குழந்தை வேண்டாம் என்று நினைத்தால், கருத்தடைப் பொருட்களை பயன்படுத்தி மேற்கொள்வது எப்போதும் சிறந்தது.

19) உடல் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமெனில், முதலில் ஒருவர் தன்னையே நேசிக்க வேண்டும். உடலில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், தன்னையே நேசித்து, அத்தகைய பிரச்சனைகளை தம்மால் சரிசெய்துவிட முடியும் என்று நினைத்து, தன்னையே நேசித்து, மன உறுதியுடன் செயல்பட்டாலும், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

20) உணவுகள் சாப்பிடுவதில் அனைத்து வகையான காய்கறிகளையும் விரும்பி சாப்பிடும் பழக்கத்தை கொள்ள வேண்டும். ஏனெனில் உடலுக்கு வேண்டிய சத்துக்களை உணவுகள் மூலம் பெறுவதால், உணவுகளில் காய்கறிகளை அதிகம் விரும்பி சாப்பிட வேண்டும். மேலும் காய்கறிகளில் நார்ச்சத்து, அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், இதனை தினமும் உணவில் சேர்க்க, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

தகவல் http://www.muruganandam.in/


முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நோயின்றி வாழ குறைவற்ற வழிகள் Empty Re: நோயின்றி வாழ குறைவற்ற வழிகள்

Post by முரளிராஜா Tue Mar 26, 2013 10:21 am

நோயின்றி ஆரோக்கியமாக வாழ நல்ல வழிமுறைகள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum