தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வலிக்கு "ஐஸ்" வையுங்கள்

View previous topic View next topic Go down

வலிக்கு "ஐஸ்" வையுங்கள் Empty வலிக்கு "ஐஸ்" வையுங்கள்

Post by முழுமுதலோன் Wed Apr 10, 2013 10:36 am






வாய்ப்புண் குணமாக...

ரத்த காயம் குணமாக...

அடிபடுவதும் அலறுவதும் குழந்தைகள் உள்ள வீடுகளில் அன்றாடம் சகஜம்தான். ரத்தப் பெருக்கை உடனே தடுக்க, அடிபட்ட இடத்தில் கொஞ்சம் சர்க்கரையைத் தூவிப் பாருங்கள். ரத்தப்பெருக்கு நிற்கும். பிறகு டாக்டரிடம் காட்டச் செல்லலாம். நிறைய பேர் மண்ணைத் தூவுவார்கள். அது ஆபத்து.

பேன் தொல்லையா?

பள்ளிக்கூடம் போகும் சிறுமிகள் தலையில் பேன்கள் எப்போதும் ஸ்டாக் இருந்துகொண்டே இருக்கும். எந்த மருந்தைப் போட்டாலும் சுலபத்தில் சாகாத வரம் பெற்றவை இந்த பேன்கள் அதற்கான வைத்தியம். தலைமுடியின் அடர்த்திக்குக் தகுந்தவாறு 1 கப் அல்லது அரை கப் நல்லெண்ணெய் எடுத்து வாணலியில் ஊற்றி, புகை வரும்படி காய்ச்சுங்கள். அதில் ஒரு கைப்பிடி வேப்பம் பூவைப் போட்டுப் பொரிக்கவும். பொரித்த வேப்பம்பூவை அரித்தெடுத்து வைத்துக்கொண்டு, எண்ணெய் ஆறியதும் தலையின் அடிப்பாகம் வரையில் நன்கு தேய்த்து ஊறுவைத்து, பின் சீயக்காய் தேய்த்துக் குளிக்கலாம். ஷாம்பு வேண்டாம். இதுபோல் வாரத்துக்கு இரண்டு முறை வீதம் ஒரு மாதம் போலத் தொடர்ந்து செய்தால் பேன் தொல்லை ஒழியும்.

இருமல் நீங்க....

கற்பூரவல்லி இலையின் சாற்றைச் சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால், குழந்தைகளின் கபம் கலந்த இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்குத் திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, தேனில் குழைத்துக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். இதை அனைவரும் செய்யலாம்.

உடம்பு வலி குடைச்சல்!

சுக்கைத் தட்டிக் கஷாயம் வைத்து, பாலில் கலந்து சாப்பிட்டால், இடுப்புப் பிடிப்பு - அதிலும் பெண்களின் வாயுப் பிடிப்பு நீங்கும். ஒரு நாளைக்கு 2 முறை வீதம் சாப்பிட்டால், மூன்று நாட்களில் பிரேக் டான்ஸ் ஆடுகிற அளவுக்கு இடுப்பு சொன்னபடி கேட்கும்!

பிடிப்புக்குப் பட்டை போடு!

முருங்கைப் பட்டை, உசிலம் பட்டை, வேப்பம் பட்டை மூன்றையும் சம அளவுக்கு எடுத்து இடித்து, பிடிப்புகளில் தடவி வந்தாலும் சீக்கிரத்தில் குணம் பெறலாம்.

வாய்வுக் குத்தலுக்கு ஒரு ரசம்

சாதாரணமாக நாம் வீட்டில் வைக்கும் ரசத்தைப் போல புளி, உப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு வைத்து, அத்துடன் கடைந்த துவரம் பருப்பு நீர்க்க விடவும். ஒரு ஸ்பூன் தனியா, ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம் - இவைகளுடன் ஐந்தாறு கண்டந்திப்பிலி, நாலைந்து பூண்டுப் பல் சேர்த்து, கொஞ்சமாக எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து, அரைத்து ரசத்தில் சேர்த்துக் கொதி வரும்போது இறக்கி கடுகு தாளிக்கவும். கொத்துமல்லியைக் கிள்ளிப் போடவும். இந்த ரசத்தை வெறும் வயிற்றில் - அதாவது, சாப்பிட உட்கார்ந்ததும் நேரடியாக ரசம் சாதத்துக்குப் பாய்ந்துவிட வேண்டும். மோர் வேண்டாம்.எண்ணெய் ஸ்நானத்துக்குப் பிறகு இந்த ரசத்தை ஒரு பிடி பிடித்தால் வாயுப் பிடிப்பாவது ஒன்றாவது! உடம்பு அமர்க்களமாக இருக்கும்!

வலிக்கு "ஐஸ்" வையுங்கள்

பல சமயங்களில் ஏதாவது கனமான பொருட்களைக் காலில் போட்டுக் கொள்வோம். அல்லது, எங்காவது இடித்து ரத்தம் கட்டிக்கொள்ளும். இதுபோன்ற சமயங்களில் வலியுள்ள பாகத்துக்கு ஐஸ் ஒத்தடம் போல வேறெதுவும் சுகம் தராது. வெதுவெதுப்பான நீரில் நீலகிரித் தைலம் போட்டும் வலியுள்ள இடத்தில் மெதுவாக ஊற்றலாம்.

வாய்ப்புண் நீங்க....

குன்றுமணி இலையின் சாற்றை எடுத்து வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும். தொடர்ந்து இரண்டு நாட்களுக்குத் தடவி வரவேண்டும்.
இலந்தை மர இலையைப் பறித்துக் கஷாயம் வைத்து, அதில் வாய் கொப்பளித்து வந்தாலும் வாய்ப்புண் மறையும். வசம்பு, சித்தரத்தை - இவைகளைப் பொடி செய்து வைத்துக் கொண்டு, வெந்நீரில் கலந்து வாய் கொப்பளித்தாலும் நல்ல பலன் தரும். வெற்றிலையில் சுண்ணாம்பு தடவும்போது அதிகமாகிவிட்டாலும் வாய் வெந்துவிடும். இதற்கு சுத்த காம்பு (நாட்டுமருந்துக் கடையில் சகஜமாகக் கிடைக்கும்) ஒன்றை எடுத்துக் கடித்து, சாற்றை வாய் முழுவதும் பரவச் செய்தாலும் புண் உடனே ஆறிவிடும்.

பற்கறை நீங்க

டேபிள் சால்ட்டுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து பற்களில் தேய்த்துக் கழுவினால் பற்கள் பளிச்சிடும்.

பளபள பற்கள்...

சுக்கு - 50 கிராம், கருவேலம் பட்டை - 25 கிராம், கடுக்காய் தோல் - 25 கிராம், களிப் பாக்கு - 25 கிராம், டேபிள் சால்ட் - 25 எடுத்துக் கொள்ளுங்கள். சுக்கைத் தோல் நீக்கிக் கொள்ளுங்கள். பாக்கை இடித்து, வறுத்துக் கொள்ளுங்கள். அனைத்தையும் மிக்ஸியில் போட்டுச் சன்னமாகப் பொடி செய்து கொள்ளுங்கள். அதில் டேபிள் சால்ட்டையும் போட்டுக் கலந்து, ஒரு மண்சட்டியில் போட்டு, துணியால் வேடுகட்டி, (ஒரு மெல்லிய சுத்தமான துணியால் மூடி) 2 மணி நேரம் வெயிலில் வைத்து, பின் ஒரு கண்ணாடி டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகிக்கலாம். இத்துடன் ஏலக்காய், பச்சைக் கற்பூரம், கிராம்பு சேர்த்து சாப்பிட்டால், வாயில் உள்ள துர்நாற்றம் போய்... வாய் மணக்கும்!

ஈறுகள் பலமாக ரோஜாப்பூ....

நல்ல பன்னீர் ரோஜாப்பூவுடன் உலர்ந்த திராட்சை சேர்த்துக் கொதிக்க வைத்து, அந்த நீரினால் தொடர்ந்து வாய் கொப்பளித்து வந்தால், ஈறுகள் வலுப்படும்.

தமிழ்ச் சமுதாயம் - தமிழுக்காக தமிழர்களுக்காக ஒரு பகுதிவலிக்கு "ஐஸ்" வையுங்கள் 62622_497150647001601_2126581728_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வலிக்கு "ஐஸ்" வையுங்கள் Empty Re: வலிக்கு "ஐஸ்" வையுங்கள்

Post by ரானுஜா Wed Apr 10, 2013 2:49 pm

பகிர்வுக்கு நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum