Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஒரு பக்க கதைகள் ...!!!
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 3 of 3 • Share
Page 3 of 3 • 1, 2, 3
ஒரு பக்க கதைகள் ...!!!
First topic message reminder :
கல்யாண புரோக்கர் ரகுபதியிடம் வந்தார். நீட்டினார்
ரகுபதி அலசினார். ஒன்றைத் தேர்வுசெய்தார்
-
“ரவி, இந்த இடம் நல்லாயிருக்கு, பார்த்து ஓ.கே. சொல்லு”
என்றார், பிள்ளையிடம் தந்தார்.
-
“ப்ச், பொண்ணு சுமார் அழகு, வேண்டாமே”
-
“டேய்…அழகு சோறு போடாது, பொண்ணு வீடு நல்ல வெயிட்
ஏகத்துக்கு நிலம் ,நீச்சு இருக்கு.., யோசி…”
-
ரவி தலையாட்டினான். தாலியைக் கட்டினான்.
ஒரு மாதம் கடந்தது. ரவியின் புது மனைவி எகிறினாள்.
-
‘இந்தாங்க..இனமேயும் தாங்காது! என் அப்பா வீட்டுகிட்ட
தனிக்குடித்தன்ம போயிடலாங்க…”
-
‘ஒரு மாசத்துலயா? ஊர் சிரிக்கும்டி, என் அப்பா எவ்ளோ
கஷ்டப்படுவார்…?”
-
‘ஊர் வாய் துட்டு தராது, சொந்தம் சொத்து தராது.
என் அப்பா தருவார், யோசிங்க…”
-
ரவி மீண்டும் தலையாட்டினான்…நடையைக் கட்டினான்.
-
அப்பா விதிர்த்து போய் நின்றார்…!
-
———————————–
>ச.பிரசன்னா
-
கல்யாண புரோக்கர் ரகுபதியிடம் வந்தார். நீட்டினார்
ரகுபதி அலசினார். ஒன்றைத் தேர்வுசெய்தார்
-
“ரவி, இந்த இடம் நல்லாயிருக்கு, பார்த்து ஓ.கே. சொல்லு”
என்றார், பிள்ளையிடம் தந்தார்.
-
“ப்ச், பொண்ணு சுமார் அழகு, வேண்டாமே”
-
“டேய்…அழகு சோறு போடாது, பொண்ணு வீடு நல்ல வெயிட்
ஏகத்துக்கு நிலம் ,நீச்சு இருக்கு.., யோசி…”
-
ரவி தலையாட்டினான். தாலியைக் கட்டினான்.
ஒரு மாதம் கடந்தது. ரவியின் புது மனைவி எகிறினாள்.
-
‘இந்தாங்க..இனமேயும் தாங்காது! என் அப்பா வீட்டுகிட்ட
தனிக்குடித்தன்ம போயிடலாங்க…”
-
‘ஒரு மாசத்துலயா? ஊர் சிரிக்கும்டி, என் அப்பா எவ்ளோ
கஷ்டப்படுவார்…?”
-
‘ஊர் வாய் துட்டு தராது, சொந்தம் சொத்து தராது.
என் அப்பா தருவார், யோசிங்க…”
-
ரவி மீண்டும் தலையாட்டினான்…நடையைக் கட்டினான்.
-
அப்பா விதிர்த்து போய் நின்றார்…!
-
———————————–
>ச.பிரசன்னா
-
Last edited by கவிஞர் கே இனியவன் on Tue Jul 23, 2013 4:40 pm; edited 1 time in total
Re: ஒரு பக்க கதைகள் ...!!!
தண்டனை
******************
தன் பேரன் சிறு சிறு தவறுகள் செய்யும் போதெல்லாம் ஒருவர் கடுமையான தண்டனைகள் கொடுத்து வந்தார்.சிறுவனின் தகப்பனாரால் தன் தகப்பனாரை கண்டிக்க முடியவில்லை.சிறுவனின் நன்மைக்காகத்தான் தண்டனைகள் கொடுப்பதாக பெரியவர் கூறிவிடுவார்.
ஒரு நாள் பெரியவர்,சிறுவனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.சிறுவன் சரியாகக் கவனிக்கவில்லை என்று கோபம் கொண்டு சிறுவனை கடும் பனியில் நிறுத்தி விட்டார்.
சிறுவன் நடுங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த தகப்பனால் தாங்க முடியவில்லை.பெரியவரையும் ஒன்றும் கேட்கவும் முடியாத சூழ் நிலையில் சடசடவென தன் சட்டையைக் கழட்டினார்.
வெளியே சென்று பனியில் தன் பையனுடன் சேர்ந்து நின்றார்.பெரியவர்,''நீ ஏன் குளிரில் நிற்கிறாய்?''என்று கேட்டார்.அவர் உடனே பதில் சொன்னார்,''தந்தையே!நீங்கள் என் மகனை குளிரில் நடுங்க வைத்து சிரமப்படுத்துகிறீர்கள்.
பதிலுக்கு நான் என்ன செய்ய முடியும்?உங்கள் மகனைக் குளிரில் நடுங்க வைத்து சிரமப்படுத்துகிறேன்.''
இருவரையும் உள்ளே வரச் சொன்ன பெரியவர் அதன் பின் பேரனைக் கண்டிப்பதை நிறுத்தி விட்டார்.
நன்றி ;இருவர் உள்ளம் தளம்
******************
தன் பேரன் சிறு சிறு தவறுகள் செய்யும் போதெல்லாம் ஒருவர் கடுமையான தண்டனைகள் கொடுத்து வந்தார்.சிறுவனின் தகப்பனாரால் தன் தகப்பனாரை கண்டிக்க முடியவில்லை.சிறுவனின் நன்மைக்காகத்தான் தண்டனைகள் கொடுப்பதாக பெரியவர் கூறிவிடுவார்.
ஒரு நாள் பெரியவர்,சிறுவனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.சிறுவன் சரியாகக் கவனிக்கவில்லை என்று கோபம் கொண்டு சிறுவனை கடும் பனியில் நிறுத்தி விட்டார்.
சிறுவன் நடுங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த தகப்பனால் தாங்க முடியவில்லை.பெரியவரையும் ஒன்றும் கேட்கவும் முடியாத சூழ் நிலையில் சடசடவென தன் சட்டையைக் கழட்டினார்.
வெளியே சென்று பனியில் தன் பையனுடன் சேர்ந்து நின்றார்.பெரியவர்,''நீ ஏன் குளிரில் நிற்கிறாய்?''என்று கேட்டார்.அவர் உடனே பதில் சொன்னார்,''தந்தையே!நீங்கள் என் மகனை குளிரில் நடுங்க வைத்து சிரமப்படுத்துகிறீர்கள்.
பதிலுக்கு நான் என்ன செய்ய முடியும்?உங்கள் மகனைக் குளிரில் நடுங்க வைத்து சிரமப்படுத்துகிறேன்.''
இருவரையும் உள்ளே வரச் சொன்ன பெரியவர் அதன் பின் பேரனைக் கண்டிப்பதை நிறுத்தி விட்டார்.
நன்றி ;இருவர் உள்ளம் தளம்
Re: ஒரு பக்க கதைகள் ...!!!
அபசகுனம்
*******************
அந்தணர் ஒருவர் முக்கியமான காரியத்திற்காக குளித்துவிட்டு ஈர உடையுடன் வீட்டை விட்டு தெருவில் இறங்கினார் .அவருக்காகவே காத்திருந்தது போல ஒரு பூனை குறுக்கே ஓடியது.''சனியன் பிடித்த பூனை'' என்று ஆங்காரமான குரலில் கத்தினார் அந்தணர்.ஓடிய பூனை நின்றது.
கோபத்துடன் திரும்பிப் பார்த்து அவரை முறைத்தது.மீசை துடிக்க,''ஏ மனிதனே,எதற்காக என்னைத் திட்டினாய்?''என்று கடுமையான குரலில் கேட்டது.வியப்படைந்த அந்தணர்,''முக்கியமான காரியமாக நான் புறப்பட்டேன்.அந்த சமயத்தில் கறுப்புப் பூனையாகிய நீ அபசகுனம் போல குறுக்கே வரலாமா?''என்றார்
சற்று சமாதானமான குரலில்.பூனை அவரைப் பார்த்துக் கேட்டது,''எல்லாம இறைவன் சித்தப்படிதான் நடக்கும் என்று நீ ஓதிய வேதங்கள் கூறவில்லையா?அப்படியிருக்க சகுனத்தின் பேரில் பழி போடுவது நியாயமா?இந்த சகுனம் பற்றி உனக்குக் கற்பித்தது யார்?உன் தாயா,தந்தையா,குருவா,அல்லது நீ ஓதிய வேதங்களா?''அனல் போல் பொழிந்த பூனையின் வாதங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் அந்தணர்.
பூனை தொடர்ந்தது,''மூன்று நாட்களாக ஒரு எலியைக் குறி வைத்து நான் பாயும் போதெல்லாம் உங்கள் வீட்டிலிருந்து யாராவது குறுக்கே வந்துள்ளீர்கள்.அதற்காக நான் உங்களைத் திட்டினேனா?சரி,நமக்கு இன்னும் நேரம் வரவில்லை என்று என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன்.இன்றாவது அது சிக்கும் என்ற நம்பிக்கையில் நான் சென்று கொண்டிருக்கிறேன்.
''அபசகுனம் என்று வீட்டுக்குத் திரும்ப நினைத்த அந்தணர் தனது முடிவை மாற்றிக் கொண்டு,பூனைக்கு வந்தனம் சொல்லிவிட்டு தன பயணத்தைத் தொடர்ந்தார்.
----குருஜி வாசுதேவ் எழுதிய 'மாறுபட்டு சிந்தியுங்கள்'என்ற நூலிலிருந்து.
*******************
அந்தணர் ஒருவர் முக்கியமான காரியத்திற்காக குளித்துவிட்டு ஈர உடையுடன் வீட்டை விட்டு தெருவில் இறங்கினார் .அவருக்காகவே காத்திருந்தது போல ஒரு பூனை குறுக்கே ஓடியது.''சனியன் பிடித்த பூனை'' என்று ஆங்காரமான குரலில் கத்தினார் அந்தணர்.ஓடிய பூனை நின்றது.
கோபத்துடன் திரும்பிப் பார்த்து அவரை முறைத்தது.மீசை துடிக்க,''ஏ மனிதனே,எதற்காக என்னைத் திட்டினாய்?''என்று கடுமையான குரலில் கேட்டது.வியப்படைந்த அந்தணர்,''முக்கியமான காரியமாக நான் புறப்பட்டேன்.அந்த சமயத்தில் கறுப்புப் பூனையாகிய நீ அபசகுனம் போல குறுக்கே வரலாமா?''என்றார்
சற்று சமாதானமான குரலில்.பூனை அவரைப் பார்த்துக் கேட்டது,''எல்லாம இறைவன் சித்தப்படிதான் நடக்கும் என்று நீ ஓதிய வேதங்கள் கூறவில்லையா?அப்படியிருக்க சகுனத்தின் பேரில் பழி போடுவது நியாயமா?இந்த சகுனம் பற்றி உனக்குக் கற்பித்தது யார்?உன் தாயா,தந்தையா,குருவா,அல்லது நீ ஓதிய வேதங்களா?''அனல் போல் பொழிந்த பூனையின் வாதங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் அந்தணர்.
பூனை தொடர்ந்தது,''மூன்று நாட்களாக ஒரு எலியைக் குறி வைத்து நான் பாயும் போதெல்லாம் உங்கள் வீட்டிலிருந்து யாராவது குறுக்கே வந்துள்ளீர்கள்.அதற்காக நான் உங்களைத் திட்டினேனா?சரி,நமக்கு இன்னும் நேரம் வரவில்லை என்று என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன்.இன்றாவது அது சிக்கும் என்ற நம்பிக்கையில் நான் சென்று கொண்டிருக்கிறேன்.
''அபசகுனம் என்று வீட்டுக்குத் திரும்ப நினைத்த அந்தணர் தனது முடிவை மாற்றிக் கொண்டு,பூனைக்கு வந்தனம் சொல்லிவிட்டு தன பயணத்தைத் தொடர்ந்தார்.
----குருஜி வாசுதேவ் எழுதிய 'மாறுபட்டு சிந்தியுங்கள்'என்ற நூலிலிருந்து.
Re: ஒரு பக்க கதைகள் ...!!!
எதையும் செய்வேன்
********************************
ஒரு நாடோடி ஒரு கிராமத்தை நோக்கி செல்கையில் பசி எடுத்ததால் சாப்பாட்டிற்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.அப்போது அந்த வழியே ஒரு சுல்தான் குதிரையில் வந்து கொண்டிருந்தான்.
சுல்தான் இவனைப் பார்த்து,''இப்படி நாடோடியாகத் திரிகிறாயே?சாப்பாட்டுக்கு என்ன செய்வாய்?''என்று கேட்டார்.அதற்கு நாடோடி,''நான் நினைத்தால் எதையும் செய்வேன்,''என்றான்.
சுல்தான்,''என்னப்பா,ஒரு நாட்டிற்கே அதிபதியான எனக்கே நான் நினைத்ததைஎல்லாம் செய்ய முடியாது.ஒரு நாடோடியாகிய நீ எல்லாம் முடியும் என்கிறாயே?''என்று வியப்புடன் கேட்டார்.நாடோடி சொன்னான்,''உங்களால் முடியாது.
ஆனால் என்னால் முடியும்.''உடனே சுல்தான் ,''எங்கே என்னைக் குதிரையிலிருந்து இறங்க வை பார்ப்போம்,''என்று சவால் விட்டார்.அதற்கு அவன்,''அய்யா,உங்களைப் போன்ற சுல்தானைக் குதிரையிலிருந்து இறங்க வைக்க முடியாது.ஆனால் நீங்கள் குதிரையிலிருந்து இறங்கினால்,அடுத்த நிமிடமே உங்களைக் குதிரையில் திரும்ப ஏற வைக்க
முடியும்,''என்றான்.உடனே சுல்தானும் கீழே இறங்கினார்.உடனே நாடோடி,''இதோ,நான் சொன்ன உடனே இறங்கி விட்டர்கள்,பார்த்தீர்களா?''என்றான்.சுல்தானுக்கக் கோபம் வந்து விட்டது.''நீ சரியான் ஏமாற்றுப் பேர்வழி,''என்று கூறிக் கொண்டே மீண்டும் குதைரை மீது ஏறி கிளம்பினார்.அவன் சொன்னான்,''பார்த்தீர்களா?நான் சொன்னது போல நீங்கள் குதிரையிலிருந்து இறங்கிய உடனே திரும்பவும் ஏற வைத்து
விட்டேன்.''என்றான்.சுல்தான்,அந்த நாடோடி தன்னை முட்டாளாக்கி விட்டான் என்பதை உணர்ந்தாலும் அவனுடைய சாமர்த்தயத்தை மெச்சி ஒரு தங்கக் காசினைக் கொடுத்துவிட்டு சென்றார்.நாடோடிக்கு இப்போதைக்கு சாப்பாட்டுப் பிரச்சினை தீர்ந்தது.
நன்றி ;இருவர் உள்ளம் தளம்
********************************
ஒரு நாடோடி ஒரு கிராமத்தை நோக்கி செல்கையில் பசி எடுத்ததால் சாப்பாட்டிற்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.அப்போது அந்த வழியே ஒரு சுல்தான் குதிரையில் வந்து கொண்டிருந்தான்.
சுல்தான் இவனைப் பார்த்து,''இப்படி நாடோடியாகத் திரிகிறாயே?சாப்பாட்டுக்கு என்ன செய்வாய்?''என்று கேட்டார்.அதற்கு நாடோடி,''நான் நினைத்தால் எதையும் செய்வேன்,''என்றான்.
சுல்தான்,''என்னப்பா,ஒரு நாட்டிற்கே அதிபதியான எனக்கே நான் நினைத்ததைஎல்லாம் செய்ய முடியாது.ஒரு நாடோடியாகிய நீ எல்லாம் முடியும் என்கிறாயே?''என்று வியப்புடன் கேட்டார்.நாடோடி சொன்னான்,''உங்களால் முடியாது.
ஆனால் என்னால் முடியும்.''உடனே சுல்தான் ,''எங்கே என்னைக் குதிரையிலிருந்து இறங்க வை பார்ப்போம்,''என்று சவால் விட்டார்.அதற்கு அவன்,''அய்யா,உங்களைப் போன்ற சுல்தானைக் குதிரையிலிருந்து இறங்க வைக்க முடியாது.ஆனால் நீங்கள் குதிரையிலிருந்து இறங்கினால்,அடுத்த நிமிடமே உங்களைக் குதிரையில் திரும்ப ஏற வைக்க
முடியும்,''என்றான்.உடனே சுல்தானும் கீழே இறங்கினார்.உடனே நாடோடி,''இதோ,நான் சொன்ன உடனே இறங்கி விட்டர்கள்,பார்த்தீர்களா?''என்றான்.சுல்தானுக்கக் கோபம் வந்து விட்டது.''நீ சரியான் ஏமாற்றுப் பேர்வழி,''என்று கூறிக் கொண்டே மீண்டும் குதைரை மீது ஏறி கிளம்பினார்.அவன் சொன்னான்,''பார்த்தீர்களா?நான் சொன்னது போல நீங்கள் குதிரையிலிருந்து இறங்கிய உடனே திரும்பவும் ஏற வைத்து
விட்டேன்.''என்றான்.சுல்தான்,அந்த நாடோடி தன்னை முட்டாளாக்கி விட்டான் என்பதை உணர்ந்தாலும் அவனுடைய சாமர்த்தயத்தை மெச்சி ஒரு தங்கக் காசினைக் கொடுத்துவிட்டு சென்றார்.நாடோடிக்கு இப்போதைக்கு சாப்பாட்டுப் பிரச்சினை தீர்ந்தது.
நன்றி ;இருவர் உள்ளம் தளம்
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» ரசித்த ஒரு பக்க கதைகள்
» வலி – ஒரு பக்க கதை
» பயம் – ஒரு பக்க கதை
» கண்டிஷன் – ஒரு பக்க கதை
» அடடே – ஒரு பக்க கதை
» வலி – ஒரு பக்க கதை
» பயம் – ஒரு பக்க கதை
» கண்டிஷன் – ஒரு பக்க கதை
» அடடே – ஒரு பக்க கதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|