தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;3)

View previous topic View next topic Go down

காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;3) Empty காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;3)

Post by இம்சை அரசன் Fri Oct 26, 2012 5:51 pm

காசிநாதனின் நடவடிக்கைகள் ,அவனது குடும்பத்தாருக்கு முற்றிலும் குழப்பங்கலை உருவாக்க தொடங்கியது...
"உன் புள்ளை காசிநாதன்,தன்னை பெரிய கடவுள் போல நினத்தே பேசுறான். மனநிலை சரியில்லாம இருக்கான் போலிருக்கு...அவன் மனசுல என்ன நினைக்கிறான்னு...மனநல மருத்துவரை சந்தித்து கூறி,அவனுக்கு தகுந்த சிகிச்சையை செய்யுற வழியப்பாருப்பா....",
பெருமாள் கோவில் நம்பூதிரி கூறியதும்,
"நீங்க சொல்ரதும் சரிதான் ,அதற்கான ஏற்ப்பாட்டை செய்கிறேன்...",
என்றார் காசிநாதனின் தந்தை.
நாட்கள் ஓடின.............

காசிநாதனை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர்.
மருத்துவ உலகம் சரியாக முன்னேறாத காலம் அது.
கேரளா எர்ணாகுளம் கரிக்குமாரியை சேர்ந்த,"கிருஷ்ணதேவ நாயர்",என்ற மனநல மருத்துவர் மட்டுமே அன்றைய தினத்தில் பிரபல்யமான மருத்துவர்.
காசிநாதனை பரிசோதித்த கிருஷ்ணதேவ நாயர்,காசிநாதனை மெல்ல ஆழ்நிலைக்கு கொண்டு சென்று உறங்கவைத்தார்.
"தம்பி காசிநாதா....இப்ப நான் கேட்க்கிற கேள்விக்கெல்லாம் தெளிவா பதில் சொல்லனும்....",
என மருத்துவர் மெல்ல கூற,
காசிநாதனும் மகுடிக்கு மயங்கியப் பாம்பைப் போல் தலையசைத்தான்.
"நீ யாருன்னு உனக்கு இப்பதெரியுதா?",.
மருத்துவர் கேட்டதும்,
"தெரியுது....",
காசிநாதன் மென்மையாக பதில் கூறினான்.
"நீ யாருன்னு சொல்லு...."
மருத்துவர் கேட்டதும் காசிநாதன் மவுனமானான்.
"சொல்லுப்பா....உன் மனசுல என்ன இருக்கு?நீ யாரு?",
மீண்டும் மருத்துவர் சற்றே அதட்டலாக கேட்டதும்,

"விட்டுப்போகும் காற்று...
தொட்டுப் போகும் சொந்தம்...
கெட்டுப் போகும் உடலும்.....
என கண்டறிந்த
தோரணமலை சித்தன் நான்....
முதல் பிறப்பு சித்தனாகும்,
இடைப்பிறப்பு இதுவாகும்....
கடைப்பிறப்பு புதிராய் போகும்...",

என தன் குரலில் இருந்து சற்றே மாறுபட்டு பேசத்தொடங்கினான்.

"அப்படின்னா...நீ சாமியா?மகானா?",
மருத்துவர் அலச்சியமாக கேட்க,
"என்னை ஆராய்ச்சி செய்கின்றாய்...
உன் தேகத்தை ஆராய்ச்சி செய்துப் பார்...
அதனுள் காசநோய் இருப்பது உனக்கு தெரியும்...",
காசிநாதன் கூறியதும் மருத்துவரின் முகம் மாறியது,
"எனக்கு காசநோயா?அது எப்படி உனக்கு தெரியும்?நீ என்ன மருத்துவரா?",
மருத்துவர் கேட்க,

"மருத்துவம் சொல்ல வரவில்லை...
இறை மகத்துவம் சொல்லவே வந்தவன் நான்...
பிறப்பின் அர்த்தம் புரிந்தேன்....இறந்துவிட்டேன்...
இறப்பின் அர்த்தம் புரிந்தேன்....பிறந்துவிட்டேன்....
பிறப்பேன்...இறப்பேன்...
மறுபடி இன்னும் ஓர்முறை இறப்பேன்...மறுபடியும் பிறப்பேன்......",

என காசிநாதன் சற்றும் தடங்கல் இல்லாமல் பேசத்தொடங்கினான்.

சுற்றியிருந்தவர்கள் முற்றிலும் குழம்பிப்போனார்கள்....
"டாக்டர்....என் புள்ளை ஏன் இப்படியெல்லாம் பேசுறான்..?",
காசிநாதனின் தந்தை கண்கலங்கினார்...
"உங்கப் பையனுக்கு -ப்ரஸனாலிட்டி டிஸ் ஆர்டர்- என்ற மனநல பிரச்சனை இருக்குப்போலிருக்கு....இதுப்போன்ற வியாதி உள்ளவர்கள்,
தன்னை வேறொரு மனிதனாக சித்தரித்துக்கொண்டு தன்னுடைய இயல்பு வாழ்க்கையை மறந்துவிடுவார்கள்.ஏதோ ஒரு சித்தரின் கதையை கேட்டிருக்கலாம் உங்கப் பையன்.அது அவன் மனதை ஆழாமாக பாதித்து இருக்கலாம்.அதனால்கூட இப்படி நடக்கலாம்..",
என மருத்துவர் கூறும்போதே...

"இருக்கலாம்,,,நடக்கலாம்,,,,என்றுதான் உன்னால் கூறமுடியுமா?தீர்மானமாக கூற உன்னால் இயலாதா?
உன் கல்வி செல்வம் உறவு எல்லாம் கானல்நீரே.....",

என காசிநாதன் கலகலவென சிரிக்கத்தொடங்கினான்.
சற்றும் தளராமல் காசிநாதன் தர்க்கம் செய்வதை கண்டு...
அனைவரும் அதிர்ந்து நின்றனர்......

"விஸ்வநாத வேண்டாம் இந்த மருத்துவ ஆராய்ச்சி.உன் புள்ளை பேசுறதே பார்த்தால்.....அவனுக்கு ஏதோ அபரிதமான சக்தி இருக்கும் போலிருக்கு",
என காசிநாதனின் தந்தையினை,அருகில் இருந்த நண்பர்கள் எச்சரிக்கத் தொடங்கினர்.

"சித்தன் என்று கூறும் உனக்கு என்ன தெரியும்..???",
மருத்துவர் விடாபிடியாக கேள்வியினைத் தொடர்ந்தார்.
"தேவதாஸித்தி எனும் ஆருடம் மூலம்,இறந்தகாலம் நிகழ்காலம்,எதிர்காலம்,அனைத்தும் சொல்வேன்.அதை ப்ரஸன்னம் என்று நடக்கவிருக்கும் காலங்களில் அழைப்பார்கள்...அன்னை சோட்டாணிக்கரை பகவதி ப்ரஸன்னத்தில் தன் வாக்குனை சொல்வாள்.....",
என காசிநாதன் கண்கள் மூடியவன்னம் கூற,
"ப்ரஸன்னம் என்பதை பற்றி கூறு...",
மருத்துவரின் கேள்வி தொடர்ந்தது,
"ஸர்வ ப்ரஸன்னம்-என்றால் மனிதனின் வாழவைப் பற்றி அறிந்து சொல்வது.மாஹா ப்ரஸன்னம் --என்றால் கோவிலில் சுபகாரியங்கள் செய்வதற்கு பார்க்கப்படுவது,ஸ்தூல ப்ரஸன்னம்- என்றால் இறந்தவர்களின் கோரிக்கைகள் ஆசைகள் எண்ணங்கள் பற்றி அறீவது,இதுப்போல் இன்னும் எவ்வளவோ இருக்கிறது...",
என காசிநாதன் கூற,
அனைவரும் ஸ்தம்பித்துப் போனார்கள்.................................

(காசிநாதர் ,தன்னை சித்தரைப்போல எண்ணி ,பாடல்வடிவில் பேசும் வசனங்கள் யாவும்,
மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டவை)
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;3) Empty Re: காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;3)

Post by ஸ்ரீராம் Sat Oct 27, 2012 10:32 am

அருமை அருமை அரசன்.... மேலும் மேலும் படிக்க தூண்டுகிறது...

தொடர்ந்து எழுதுங்கள் .... ஆவலாய் உள்ளது எற்றுக்கொள்கிறேன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;3) Empty Re: காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;3)

Post by முரளிராஜா Sat Oct 27, 2012 1:21 pm

அட மிகவும் விறுவிறுப்பாக உள்ளது
தொடருங்கள் இம்சை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;3) Empty Re: காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;3)

Post by மகா பிரபு Sun Oct 28, 2012 7:23 am

அருமை இம்சை அண்ணா. தொடருங்கள்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;3) Empty Re: காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;3)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum