தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;4)

View previous topic View next topic Go down

காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;4) Empty காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;4)

Post by இம்சை அரசன் Tue Nov 06, 2012 7:25 pm

காசிநாதனின் தந்தை விஸ்வாநாதர்,தாய் இருவரும் அயர்ந்த உறக்கத்தில் இருந்தனர்.இரவு 12மணியை நெருங்கிக்கொண்டிருந்தது.
மனநல மருத்துவர் காசிநாதனுக்கு பர்ஸனாலிட்டி டிஸார்டர் என்ற பாதிப்பு உள்ளது,என்று கூறியதை எண்ணி, விஸ்வநாதர் பெரும் கவலை கொண்டார்.அந்தக் கவலையிலே கண்ணயர்ந்தார்.

"ஓடியா ஓடியா....என்ன வந்துப்பிடி பார்ப்போம்.....",
என காசிநாதனின் குரல் அந்த இரவு நேரத்தில் மெல்ல ஒலித்தது.
விஸ்வநாதர் சட்டென கண் விழித்தார்.அவர் அருகில் உறங்கிக்கொண்டிருந்த மகன் காசிநாதனை அருகில் காணவில்லை.பதட்டத்துடன் .,
"காசிநாதா....காசிநாதா.....",
என வாய்விட்டு அலறிய விஸ்வநாதர்,காசிநாதனின் குரல் வந்த திசையை நோக்கினார்.
அவர்கள் வீட்டு பூஜை ஆறைக்குள் இருந்து,காசிநாதனின் குரல் வருவதை அறிந்து பதட்டத்துடன் பூஜை அறைக்குள் நுழைந்தார்.

பூஜை அறையில் இருந்த பகவதிஅம்மன் சிலையின் முன் அருகே அமர்ந்தப்படி காசிநாதன் அழகாக சிரித்துக்கொண்டிருந்ததைப் பார்த்த விஸ்வநாதர்,
"காசி....இங்க என்னடா பன்றே....?",.,
என கேட்டப்படி மெல்ல காசிநாதன் அருகில் சென்றார்.
"ஷ்ஷ்.....சத்தம் போடாதே....நானும் பகவதியும் விளையாடிக்கிட்டு இருக்கோம்....",
என காசிநாதன் தன் தந்தையை எச்சரிக்க....
"என்னப்பா...சொல்றே?பகவதி அம்மன் உன் கூட விளையாடுறாளா??"<<
என மெல்ல காசிநாதனின் தோளைத் தொட்டு அருகில் அமர்ந்தார் விஸ்வநாதர்.
"ஆமாம் நாங்க ரெண்டுப் பேரும் விளையாடுறோம்....",
என சற்றும் சலிக்காமல் பதில் கூறினான் காசிநாதன்.
"நீ சொல்றதை நம்பமுடியலையேப்பா....நீ சொல்றது புரியவும் இல்லையேப்பா...",
என்ற விஸ்வநாதரின் குரல் சற்றே தழுதழுத்தது.
"ஆமாம் அப்பா.நானும் பகவதியும் விளையாடுறோம்....",
என்ற காசிநாதன்,

"அம்மே.....இவிட வரூ....(அம்மா இங்கே வா..)....",
என பகவதியம்மன் விக்கிரஹத்தைப் பார்த்துக்கூறினான்,
சிறிது நேரத்தில் அந்த பகவதியம்மன் விக்கிரஹம் மெல்ல அசைந்தது.....மெல்ல மெல்ல காசிநாதனை நோக்கி நகரத்தொடங்கியது.
அதைக் கண்டு காசிநாதன் வாய்விட்டு சிரித்தவன்னம்,
"ஓடியா ஓடியா....வந்து என்னைப்பிடி பார்ப்போம்....",
என கூற,
இவற்றையெல்லாம் கண்ட விஸ்வாநாதர் பிரம்மித்துப்போனார்..
"காசிநாதா....பகவதியம்மன் சிலை எப்படிடா நகருது?அதை நீ என்னடா பன்னே?",
என நடுங்கியப்படி கேட்க,

"பகவதி மந்திரங்களுக்கு கட்டுப்பட்டவள்.மந்திரங்களால்தான் அவளை என்வசம் ஆக்கினேன்....",
என்று குழந்தத்தனமாய் கூற,
"மந்திரத்தால் வசப்படுத்தினாயா?உனக்கு மந்திரங்களை நான் கற்றுத்தரவில்லையே...உனக்கு எப்படி மந்திரங்கள் தெரியும்?",
என்ற விஸ்வநாதரின் குரலில் குழப்பம் தெரிந்தது.

"ரிக்,யஜூர்,சாமம்,அதர்வண ,போன்ற 4வேதங்களில் ,அதர்ணவேதத்தை கையாளுவதுதான் ,நம் கேரள தேசம்.அதர்வண வேதத்தில்தான் இவையெல்லாம் சாத்தியமாகும். அதனால்தான் மந்திர தந்திரங்கள் இந்த தேசத்தில் அதிகம் உள்ளன.மந்திரஙகளை நீ எனக்கு கற்றுத்தரவேண்டிய அவசியம் இல்லை விஸ்வநாதா....நானே சகலமும் அறிந்தவன்.நான் நில் என்றாள் பகவதி அம்மன் நிற்பாள்.நான் அமர சொன்னாள் அமருவாள்.அவள் என் அன்புக்கு வசமானவள்....",
என்ற காசிநாதனின் குரலில் மாற்றம் தெரிந்தது...
தன்னை பெயர் கூறி அழைத்த மகனைக் கண்டு கலங்கிய விஸ்வாநாதர்,
"எனக்கு எதுமே புரியலை....",
என்றார் பரிதாபமாக.
"ரிக் வேதஙகளை கையாளும் தமிழக தேசத்தில் நான் மீண்டும் பிறப்பேன்...இன்று நான் ஆட்டிவைத்து வேடிக்கைப் பார்த்த பகவதி அம்மன்,அன்று என்னை ஆட்டிவைத்து அழவைத்து வேடிக்கைப் பார்ப்பாள்.ஆனால் என்னை கைவிடமாட்டாள்....",
காசிநாதனின் குரலில் முதிர்ச்சி தென்படத் தொடங்கியது,

"மறுஜென்மம்...உனக்கு உண்டா?இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?",
மிண்டும் விஸ்வாநாதரின் குரல் அச்சத்தில் தழுதழுத்தது.
"ஆமாம்.இன்று என் தந்தையாகிய நீ என் மறுப்பில் நண்பன் ஆவாய்.உனக்கும் எனக்கும் ஏதோ ஓர் பாசப் பிணைப்பு உருவாகும்.இறை நம்பிக்கை இல்லாமல் அப்பொழுது நீ இருப்பாய்.நான் உனக்கு இறைவனின் மகத்துவத்தை உனக்கு உணர்த்துவேன்...",
என்ற காசிநாதன் மெல்ல தன் தந்தை விஸ்வாநாதனின் தலையை வருடினான்.

தன் மகனது அசாதரணமான நடவடிக்கைகளைக் கண்ட விஸ்வநாதரின் கண்கள் குளம் ஆகின.
"கலங்காதே விஸ்வநாதா.உன் குடும்பத்தில் தோஷம் உள்ளது.உன் தலைமுறையினர் அதிகம் பாவம் செய்தவர்கள்.
இது அடுத்து அடுத்து தலைமுறைக்கும் தொடரும். இன்று உன் பிள்ளையாக பிறந்த நான் மறு ஜென்மத்தில் என் தாய் தாந்தையருக்கு அதிகம் கவலைகளை தருவேன்.பக்தியில் சிறந்து விளங்குவேன்.அந்தக் குடும்பத்தில் உள்ள குறைகளை என் தலையில் சுமப்பேன்....",
காசிநாதன் ஏதேதோ கூற,
விஸ்வநாதரின் உடல் ஜில்லென உறைந்துப்போனது,எனினும் தன்னை சுதாரித்துக்கொண்டு,
"தலைமுறை பாவமாஅதுக்கு நான் என்ன செய்யனும்?",
என காசிநாதனிடம் கைக்கட்டி கேட்கத் தொடங்கினார்.

"ஓம் ஆம் ஹ்வும் சவ்ம்

என்ற இந்த மந்திரத்தை,
அதிகாலை குளித்துவிட்டு,
மேலே சட்டை அணியாமல்,
ஈராம்காயாத வேஷ்டியுடன்,
நீ, ஒரே ஒருமுறை, பழமையான
சிவன் கோவிலில் ஜபித்தால்
உனது- அதாவது உன்
மனைவி மற்றும் உன் முன்னோர்களாகிய
உன் அப்பா அம்மா மற்றும் அவர்களின் முன்னோர்கள்
7 தலைமுறைக்கும் சுமார் 267 தம்பதிகள் செய்தபாவங்கள்
உடனே நீங்கிவிடும்....

இது உனக்குமட்டும்மல்ல ............இந்த எளிதான பரிகாரத்தை செய்பவர் யாராயினும் அவர் தலைமுறைகள் செய்த பாவம் விலகும் .இது பகவதி அம்மன் சத்தியாமக உண்மை......",
என்றுக்கூறிய காசிநாதன்...

"ஆன்மாவால் ஆடிடு மாட்டம் - தேகத்
தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம்
வான்கதி மீதிலே நாட்டம் - நாளும்
வையிலுனக்கு வருமே கொண்டாட்டம்.......
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.....
கடுவெளிசித்தனாம்......என் தோழனாம்....
அவன்கூறிற்ற கூற்று இது......",

என்று சித்தரின் பாடலினைக பாடியபடி மெல்ல மயங்கி வீழ்ந்தான் காசிநாதான்.............................................



தொடரும்....................................
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;4) Empty Re: காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;4)

Post by முரளிராஜா Wed Nov 07, 2012 6:54 am

படிக்க படிக்க ஆர்வமாய் உள்ளது
தொடரட்டும் இம்சை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;4) Empty Re: காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;4)

Post by ஸ்ரீராம் Fri Nov 09, 2012 1:00 am

ஆஹா ஆஹா இதை படிக்கிற போது எனக்கு ரோமம் சிலிர்த்துக்கொண்டது. அரசே நான் உங்களோடு பேச விரும்புகிறேன். இன்னும் சில தினங்களில் உங்களை போனில் சந்திக்கிறேன் அரசே.

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;4) Empty Re: காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;4)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum