தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சின்னச் சின்ன கதைகள்

Page 11 of 12 Previous  1, 2, 3 ... , 10, 11, 12  Next

View previous topic View next topic Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 11 Empty சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 13, 2015 7:27 pm

First topic message reminder :

கொடுத்துப் பெறுதல்
--------------------------------

ஒரு புத்த மடாலயத் தலைவர் மிகவும் கவலையில் இருந்தார். ஒரு காலத்தில் அவரது மடாலயம் அந்தப் பகுதியிலேயே சிறப்பும் மதிப்பும் பெற்று விளங்கிய ஆலயம். தற்போது மதிப்புக் குறைந்து பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது அவருக்குத் தெளிவாக விளங்கியது. மடத்தின் உள்ளேயே பிக்ஷுக்கள் யாரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள்.

பொறுக்க இயலாமல் ஒரு நாள் நம் தலைவர் தன்னை விட அனுபவத்தில் சிறந்த ஒரு குருவைத் தேடிப் போனார். தன் பிரச்சினையை எடுத்துச் சொன்னார்.

அந்தக் குருவும் சற்று நேரம் ஆழ்ந்து யோசித்து விட்டு பிறகு "உங்கள் மடத்தில் புத்தரே வந்து தங்கியிருக்கிறார். நீங்கள் எவரும் அவரைக் கண்டு கொள்ளவும் இல்லை. மதிக்கவும் இல்லை. பின் எப்படி சிறப்பு செழிக்கும்?" என்று கேட்டார்.

இதைக் கேட்ட நம் தலைவர் வியப்பு மாறாமலே மடத்திற்குத் திரும்ப வந்து அங்கே இருந்த புத்த பிக்ஷுக்களுக்கு விபரம் சொன்னார். அவர்களுக்கும் ஆச்சரியம். அந்தக் கணத்தில் இருந்து சுற்றியிருப்பவர்களில் ஒருவர் கடவுளாக இருக்கக் கூடும் என்ற அனுமானத்தில் எல்லோரையும் பணிவாகவும், அன்பாகவும், மிகுந்த மரியாதையுடனும் ஒவ்வொருவரும் அணுகினார்கள். நாளடைவில் மடத்தின் சிறப்பு பல மடங்கு உயர்ந்து போனது என்பதைச் சொல்லத் தேவையே இல்லை! கூடிச் செயல் படும் போது கொடுத்துப் பெறுதல் அவசியமான ஒரு சூட்சுமம் ஆகும்.

நன்றி: ந. உதயகுமார்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


சின்னச் சின்ன கதைகள் - Page 11 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jan 27, 2016 9:38 pm

குத்துங்க எஜமான் குத்துங்க....!!!
-----------------
முன்பு ஒரு சமயம் நான் மும்பையில் இருந்து ஊர் போன போது நடந்த சம்பவம். எங்கள் ஊரிலேயே உள்ள ஒரு பெண்ணை நண்பன் லவ்வி கொண்டிருந்தான். ஆனால் இருவரும் வேறு வேறு ஜாதி என்பதால் வீட்டில் கடுகடுமையான எதிர்ப்பு. நண்பர்கள் வழக்கம் போல சப்போர்ட் பண்ணி கொண்டிருந்தார்கள். ஓடிப்போகவும் முடியாத நிலை. நண்பன் பிளேடால் கைகளில் கீறி கொண்ட காயங்களை பார்த்து நொறுங்கி போனேன். யோசிக்க ஆரம்பித்தேன் ஹி ஹி ஹி ஹி நம்ம மண்டைதான் கிரிமினல் ஆச்சே... நண்பர்களை அழைத்து கொண்டு எங்கள் ஊருக்கு பக்கத்தில் இருக்கும் கிணற்றுக்கு போனேன், அந்த கிணறு நாங்கள் சிறுபிள்ளைகளில் குதித்து சாடி குளித்த கிணறு அதின் ஆதி அந்தம் நல்லாவே தெரியும் எங்களுக்கு. பிளான் ரெடியானது, அதன்படி...[[ அந்த கிணற்றில் இப்போது யாருமே குளிப்பது கிடையாது, எப்பவுமே அதில் ஆறு எழு அடி தண்ணீர் இருக்கும். ஆனால் அந்த சமயம் இடுப்பளவுதான் தண்ணீர் இருந்தது]] ராத்திரி பனிரெண்டு மணிக்கு ஊரே உறங்கிட்டு இருக்கும் நேரம், நண்பனின் காதலி, ஓ என அலறிக்கொண்டே ஓட....ஊராரும் எழும்ப, காதலி ஓடிபோயி கிணற்றில் குதித்து விட்டாள்....!!!

[[எங்கள் நண்பர்கள் குழு தயாராய் பார்த்து கொண்டு இருந்தோம்]] பின்னாலேயே ஓடி வந்த நண்பன், அவனும் கிணற்றில் குதிக்க ஊரே அல்லோலகல்லோல பட்டது. அந்த பெண்ணுக்கு நீச்சல் தெரியாது. எப்பிடியோ காப்பாற்றி பெண்ணையும் நண்பனையும் காப்பாற்றி வெளியே கொண்டு வந்து பஞ்சாயத்து நடந்தது. எவ்வளவு அன்பு இருந்தால் இந்த பெண் அவனுக்காக கிணற்றில் குதித்து இருப்பாள் என்று நாங்கள் ஸ்துதி ஏற்ற [[ஹி ஹி நாடகாசிரியர் மனோ]] இரண்டு வீட்டாரும் சாதி மறந்து சம்பந்தி ஆனார்கள். ஊரே வாழ்த்த கல்யாணம் நடந்தது. சரி இனி நாடகம் எப்பிடி அரங்கேறியது...???

சொல்றேன். . . . . இரண்டு நாள் முன்பே முதலில் நான் கிணற்றினுள் குதித்து ஆழம் எவ்வளவு என பார்த்தேன். தண்ணீர் இடுப்பளவுதான் இருந்தது. காதலனையும் குதிக்க சொன்னென் அவனும் குதித்து ஊர்ஜிதம் செய்தான். அப்புறமா காதலியை ரகசியமாக அழைத்து வந்து, செயல் முறை விளக்கினேன். அவள் பயந்துபோனாள் [[நீச்சல் தெரியாது]] , அவளுக்காக பத்து பதினஞ்சி முறை நான் மறுபடியும் மறுபடியும் கிணற்றில் குதித்து காண்பிக்க வேண்டியது ஆகிபோச்சு... அப்புறம்தான் அவளுக்கு தைரியம் [[என் மீது இரக்கபட்டோ என்னவோ]] வந்தது. நாடக அரங்கேற்றமும் வந்தது, அவள் கிணற்றில் குதிக்கும் போது நண்பர்கள் நாங்கள் எல்லோரும் சுற்றி உள்ள மரங்களின் மேலே இருந்தோம் [[ம்ஹும் குரங்கே]]

ஊராருக்கு தெரியாது. அப்புறம் என்ன டும் டும் டும் டும்தான்.... டிஸ்கி : நண்பனின் காதலியின் அண்ணனுக்கு ஒரு டவுட்டு வர, தற்செயலாக அந்த கிணற்றை சுத்தி பார்த்திருக்கிறான். அவனுக்கு லேசாக பொறி தட்ட, என் நினைவும் வர டவுட் கிளீயராகிருச்சி. ஏன்னா நான் ஊருக்கு போகும் போதெல்லாம் [[இப்பவும்]] எப்பவும் ஒரு பிரச்சினை நடந்துருக்கும், இல்லைனா நடக்கும் [[அதுவும் நல்ல காரியங்கள்தான்]] நாந்தான் அதின் தலைமை பொறுப்பில் இருப்பேன். அண்ணன் காரனுக்கு எங்கள் நாடகம் புரிஞ்சி போச்சு. ஆனால் என்ன ஒரு விஷயம்னா, அதுக்குள்ளே நண்பனுக்கும் காதலிக்கும் கல்யாணம் முடிஞ்சி போயிருந்தது. டிஸ்கி : பெண்ணின் அண்ணன் இப்போதும் எனக்காக காத்திருப்பதாக சொல்கிறார்கள் [[வேற எதுக்கு முதுகுல டின் கட்டத்தான் ஹி ஹி ஹி]]

அடகொன்னியா மூணு குழைந்தங்க உன் தங்கச்சிக்கு பிறந்த பிறகும் ஏன் இந்த கொலைவெறி...??? இப்போ இடையில் ஒரு லீவுக்கு போன போது அவனை ஒரு கல்யாண வீட்டில் பார்த்தேன். அவன் என்னோடு பேசவில்லை நானும் பேசவில்லை, ஆனால் அவன் என்னை முறைத்து பார்த்து கொண்டே இருந்தான். என் மனைவி அதை கண்டு என்னிடம் சொன்னாள். ஹி ஹி ஹி மேட்டரை நான் சொன்னதும் குஷி ஆகிவிட்டாள், ஏன்னா நாங்களும் காதலிச்சிதானே கல்யாணம் செஞ்சோம் [[இரு வீட்டாரின் சம்மதத்தோடு]].... இது ஒரு மீள்பதிவு, யார்லேய் அங்கே கல்லெடுக்க கீழே குனியுறது....? ள்பதிவு...[[யாருலேய் Posted by

MANO நாஞ்சில் மனோ
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 11 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jan 27, 2016 9:41 pm

விவசாய வாழ்வும் என் அம்மாவும்....!
***********
எனது சின்ன பிள்ளையில் நடந்த ஒரு சம்பவம்....... நானும் நண்பன் மகேஷும் நல்ல நண்பர்கள் மட்டுமில்லை ஒரே வகுப்பும் கூட....எப்போ பள்ளி போனாலும் திரும்பினாலும் ஒன்றாகவே போய் வருவோம், எங்கள் வீட்டிற்கும் பள்ளிக்கும் நடுவில்தான் அவன் வீடு, பள்ளி போகும் போதும் திரும்பும் போதும் அவன் வீட்டில் இருந்து சற்று விளையாடிவிட்டே செல்வது வழக்கம். மகேஷின் அம்மாவுக்கு என்னை ரொம்ப பிடிக்கும், எப்போ போனாலும் யய்யா தம்பி சாப்புடுய்யா சாப்புடுய்யான்னு கொஞ்சும், ஆனாலும் நான் சாப்பிட்டதில்லை, இதை என் அம்மாவிடம் அவர்கள் சொல்லக்கேட்டு என் அம்மா பெருமிதம் அடைவதை பார்த்திருக்கிறேன்.

ஒருநாள் பள்ளி விட்டு வரும்போது நல்ல மழை பெய்து கொண்டிருந்த படியால் மகேஷின் அம்மா என்னை மழை நிக்கட்டும் தம்பி அப்புறமா போகலாம், இருட்டுச்சுன்னா நானே உன்னை கொண்டு வீட்டில் விடுகிறேன் என சொல்லவும், அங்கேயே இருந்தேன் மழை நிற்பதற்காக..... சற்று நேரத்தில் நண்பனின் இரு தம்பிகளும் தங்கையும் பள்ளியில் இருந்து வந்ததும், அம்மா சாப்பாடு கொடு என நண்பனின் அம்மாவை நச்சரிக்க தொடங்கினார்கள், அம்மாவுக்கோ சங்கடமாக போய்விட்டது காரணம் என்னை வைத்துகொண்டு அவர்களுக்கு உணவு கொடுக்க முடியாது,

எனக்கு தந்தாலும் நான் சாப்பிடமாட்டேன், எனவே பிள்ளைகளை அதட்டி கொண்டிருந்தார்கள். எனக்கும் நல்ல பசி போதாததுக்கு அங்கே மணம் பரப்பி கொண்டிருந்த இறைச்சி கறி வேறு இன்னும் ஆசையை தூண்டிக்கொண்டிருந்தது, கண்டுக்காமல் இருந்தாலும் பிள்ளைகளின் நச்சரிப்பு தாங்காததாலும், மழை நிற்கிற நிலையில் இல்லை என்பதாலும், மகேஷின் அம்மா என்னிடம் யய்யா கொஞ்சோல சாப்புடுய்யா என பாசமாக கேட்கவும், சரி சொல்லிவிட்டேன். அந்த அம்மா அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை, தன் பிள்ளைகளுக்கும் சேர்த்து எனக்கும் இறைச்சி சாப்பாடு பரிமாறினார்கள், நன்றாக சாப்பிட்டேன்....கொஞ்ச நேரத்தில் மழை நிற்கவே, அதுக்கிடையில் என் அம்மாவும் என்னை தேடி வந்துவிட்டார்கள். இருவரும் கொஞ்சம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு கிளம்பினோம். வீட்டுக்கு வந்ததும் ஊரில் உள்ள மற்ற நண்பர்களோடு விளையாட போய்விட்டேன், இரவு ஆனதும் அம்மாவின் அழைப்பு சத்தம் கேட்டு வீட்டுக்கு ஓடி வந்தேன், அப்பா வியாபார விஷயமாக தூத்துக்குடி போயி இருந்தார். வீட்டுக்கு வந்ததும், எலேய் தம்பி வா சாப்பிடலாம்னு அம்மா கூப்பிடவும், அம்மா நான் சாப்டாச்சு என்று சொன்னேன். "எங்கலேய் தம்பி சாப்பிட்டே...?" "மகேஷ் வீட்டுல" "என்னாது மகேஷ் வீட்டுலையா...?

எலேய் இங்கே வா" "என்னம்மா" "கையை காட்டுலேய் தம்பி" என் கையை மோந்து பார்த்த அம்மா ஒன்னும் சொல்லவில்லை மாறாக சாப்பாடு பாத்திரங்கள் [[ பானை, சட்டிகள்]] மூடப்பட்டன உடனே...! என்னை வீட்டுக்கு வெளியே கூட்டிப்போன அம்மா...."எலேய் தம்பி இங்கினையே நில்லு"னு சொல்லிட்டு உள்ளே போனார்கள், நான் பேந்த பேந்த முழித்தபடி நின்றிருந்தேன். வெளியே வந்த அம்மா கையில் தண்ணீர் வாளியும் குடம் குடமாக தண்ணீரும் வெளியே வந்தது "என்னம்மா இது...?" சித்த பொறுலேய் மக்ளே" என்று சொன்ன அம்மா........என் டிரஸ்ஸை கூட கழட்டாமல் அம்புட்டு தண்ணீரையும் என் மீது ஊற்றினார்கள். எனக்கு ஒன்றும் புரியாமல் அழுது கொண்டிருந்தேன். அப்புறம் என் துணியை எல்லாம் கழட்டி விட்டு தன் முந்தானையால் துவட்டி விட்டு வேறு துணி மாட்டி விட்டாள்.

நான் ஒன்னும் புரியாமல் அழுது கொண்டே கேட்டேன் "ஏம்மா இவ்ளோ தண்ணி என் மேலே ஊத்துன...?" "இல்லப்பா தம்பி உன் உடம்புல அழுக்கு இருந்துச்சுப்பா அதான் அம்மா கழுவி விட்டேன்" என்று சொன்னாலும் எனக்கு என்னமோன்னு டவுட் இருந்து கொண்டே இருந்தது, அம்மா கோபமாக இருக்கும்போது ஒன்னுமே பேசமாட்டேன், அம்மா நார்மல் ஆகிட்டா அம்மாவும் எனக்கு குழந்தைதான் எனக்கு சரிசமமாக விளையாடுவாள் என்னோடு...! அப்புறம் ஒருநாள் இரவு அம்மாவுடன் படுத்து இருக்கும் போது, அம்மா என் முடிகளை கோதிவிட்டு கொண்டு இருக்கும் போது கேட்டேவிட்டேன் [[அம்மா கோபப்படும் பல புரியாத விஷயங்களை நான் கேட்டு தெரிந்து கொள்வது இங்கேதான்]] "அம்மா எதுக்கும்மா அன்னிக்கு என்மேல அவ்ளோ தண்ணி ஊத்துன...? அம்மாவின் பதில்..... "எலேய் தம்பி, அவங்க வீட்டுல மாட்டிறைச்சிதான் சாப்பிடுவாங்க நாம சாப்பிடமாட்டோம் தெரியுமில்ல...?" "எனக்கு எப்பிடிம்மா தெரியும் அவங்க என்ன இறைச்சி வச்சிருக்காங்கன்னு, சரிம்மா இனி எங்கேயும் சாப்பிடமாட்டேன் சரியா..?" "தெரியும்ய்யா உனக்கு தெரியாதுன்னு, அதான் அம்மா உன்னை அடிக்கலை புரியுதா...?" "சரிம்மா நாம ஏன் மாட்டிறைச்சி சாப்பிடமாட்டோம்னு சொல்லும்மா"

"மக்ளே......மாடு நமக்காக உழைத்து போடும் தெய்வம் மாதிரி, அது நமக்கு உழைத்து போடும் அளவுக்கு மனுஷன் ஒருத்தனும் உழைக்க முடியாது, அது நம்மை போன்ற விவசாயிகளுக்கு தெய்வம் போல உழைச்சு போடுது, உழைக்கும் சாமியை யாராவது சாப்பிடுவாங்களா சொல்லு பாப்போம்..?" "அதான் உன் மீது தண்ணீர் ஊற்றி பிரேயர் பண்ணினேன், இனி எங்கே போனாலும் மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது என்னய்யா...?" "சரிம்மா" [[ ம்ம்ம்ம் நாடோடி வாழ்க்கைக்கு வந்தபின்பு இதையெல்லாம் மறந்து ஊர்வன, நடப்பன, பறப்பன, நீந்துவன எல்லாம் சுவாக......ஸாரி அம்மா]] இப்போதும் மும்பையில் இருந்து ஊர் வரும்போது ராத்திரி வெளியே [[என் வீட்டம்மா இருந்தாலும்]] போய் விட்டு சாப்புட்டுட்டேன்னு சொன்னால், கண்டிப்பாக அம்மா கேள்வி கேட்பாள், எலேய் தம்பி மாட்டிறைச்சி சாப்பிடலைதானே தம்பி...? என்னதான் அம்மா கிறித்தவ வாழ்க்கை வாழ்ந்தாலும், இந்து விவசாய குடும்பத்தில் பிறந்த அந்த சுபாவம் அம்மாவுக்கு இன்னும் மாறவில்லை கால்நடைகள்,

பறவைகள் மீது அம்மாவுக்கு அம்புட்டு பாசம்...! எனக்காக அம்மா கோழி வளர்த்து வைப்பது உண்டு, லீவுக்கு நான் வரும்போது, அதோ அந்த கோழிதான் உனக்காக வளர்த்துட்டு இருக்கேன்னு சொன்னாலும் நான் வேண்டாம் என்று சொல்லுவேன் என்று தெரிந்தே அம்மா அப்படி சொல்வது உண்டு. இந்தமுறை அம்மா அதே டயலாக்கை சொல்ல....என் பையன் கேட்டுவிட்டான்....ஓடி விரட்டி பிடித்து பாட்டி இப்பவே இதை எனக்கு குழம்பு வச்சு தாங்கன்னு பாட்டியை பிடித்து கொண்டான்.....எப்பா எப்பிடியோ சமாளித்து அன்னிக்கு ஹோட்டலில் இருந்து அவனுக்கு கோழி கறி வாங்கி கொடுத்து சமாளித்தேன். அம்மாவுக்கு மாடு, ஆடு, கோழிகள் என்றால் அம்புட்டு பிரியம் அவைகள் மீது.....இந்த தள்ளாத வயதிலும் ஆடு, கோழிகள் வளர்ப்பது உண்டு, ஆட்டுக்கும், கோழிகளுக்கும் அம்மாவின் பாஷை புரியும்,

அம்மாவுக்கும் அவைகளின் பாஷை புரியும். ஆட்டுக்கு அடிபட்டால் காயத்திருமேனி எண்ணெய் போட்டு தடவி விடுவாள், ரெண்டு நாளைக்கு ஒருமுறை தேங்காய் எண்ணெயும் தடவி தேய்த்து விடுவாள், எனக்கு இப்போதும் அது ஆச்சர்யமாக இருக்கும்...! ஆட்டு குட்டிகளுக்கு அம்மா கையால் கஞ்சி எடுத்து வாயில் ஊட்டினால்தான் சாப்பிடும், நாங்கள் ஊர் போனால் என் மகள் கையால் மட்டுமே சாப்பிடும் அந்த குட்டிகள், வேறு யார் கொடுத்தாலும் சாப்பிடாது...! இப்போதும் மாட்டிறைச்சி சாப்பிட்டாலோ, பார்த்தாலோ என் அம்மாவின் நினைவு வந்து போகும்.........அந்த குளிரில் குடம் குடமாக தலையில் ஊற்றப்பட்ட தண்ணீரும்....!

MANO நாஞ்சில் மனோ
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 11 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jan 27, 2016 9:45 pm

வீட்டுக்குப் போகும் காற்றாறு
-------------
ஒரு மூங்கில் வெட்டுபவர் ஒருநாள் தனது பத்து வயது மகனையும் அழைத்துக் கொண்டு காட்டுக்கு மூங்கில் வெட்டச் சென்றார். பையனோ விடாமல் வழியெல்லாம் அவரைக் கேள்விகளால் துளைத்தெடுத்துக் கொண்டே வந்தான். அவரும் பொறுமையாகப் பதில் சொல்லிக் கொண்டே வந்தார்.

மூங்கிலை வெட்ட ஆரம்பித்தார். பையன் அப்போதும் கேள்விகள் கேட்டான். “”நாம அப்புறம் பேசிக் கொள்ளலாம். நீ நல்ல பையனாம். அப்பா வெட்டுற மூங்கிலையெல்லாம் எடுத்து அடுக்கி வைப்பியாம்” பையனும் மகிழ்ச்சியுடன் தலையசைத்தான்.

அவர் மூங்கில் வெட்ட ஆரம்பித்தார். “”அப்பா… அப்பா… ” என்றான் பையன்.

“”என்னடா?” கோபத்துடன் கேட்டார்.

“”இந்தக் காட்டாறு எங்கே போகுது?”

“”நம்ம வீட்டுக்குத்தான்”

பையன் அதற்குப் பிறகு கேள்விகள் கேட்கவில்லை.

மாலையானது. மூங்கில் வெட்டுபவர் பையனின் கையைப் பிடித்துக் கொண்டு “”வா, போகலாம். நான் வெட்டிய மூங்கிலையெல்லாம் எங்கே அடுக்கி வைச்சிருக்க?” என்று கேட்டார்.

பையன் சொன்னான்: “”நீங்க வெட்டினதை எல்லாம் ஆற்றிலே போட்டுட்டேன். இந்நேரம் அது நம்ம வீட்டுக்குப் போயிருக்கும்”

நன்றி ;தினமணி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 11 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jan 27, 2016 9:47 pm

சிறுகதை: மிதிவண்டி
---------------
மணிக்கு எப்போதுதான் பொழுது விடியுமோ என்று மனசு குதித்தது. இரவு அம்மா தந்த இட்லியும், சட்னியும் தொண்டையைத் தாண்டி இறங்கவேயில்லை. இரவு முழுக்க கலர்கலராய் கனவுகள் மனசுக்குள் வந்தபடி இருந்தன.
இன்றைக்குப் பார்த்து சூரியன் இறங்க மறுத்தது போல் அலுப்பாய் இருந்தது. காத்திருக்கும் போதுதான் நேரம் கடப்பது எத்தனை சிரமமென்று தோன்றியது. யாருக்கும் தெரியாமல் எழுந்து போய் இரண்டொருமுறை ஜன்னலை திறந்து வாசலை எட்டிப் பார்த்துவிட்டு வந்து படுத்துக் கொண்டான்.

நாளைக்கு முதன்முதலாய் சைக்கிளில் பள்ளிக்கு போகப் போகின்ற உற்சாகம் மனசுக்குள். அப்பா மாலையில்தான் புது சைக்கிளை வாங்கி வந்து, வாசலில் நிறுத்தி இருந்தார்.

இனி நாளை முதல் பள்ளிக்கும், டியூஷன் கிளாஸýக்கும் புது சைக்கிளிலேயே இறக்கைக் கட்டிப் பறக்கலாம். நினைப்பே இனிக்க, கண்ணைக் கவ்வ மறுத்த தூக்கத்திற்கு வலிய அழைப்பு விட்டு வலுவில் தூங்க முயற்சித்தான்.

ஏனென்றால் அப்போதுதான் கனவு வரும். கனவில் சைக்கிள் ஓட்டலாமில்லையா..?

விடிந்ததும் முதல் வேலையாய், சைக்கிளை அரைமணி நேரம் துடைத்தான். அம்மாவும், அப்பாவும் அவனுடைய செயலைப் பார்த்து சிரித்தார்கள்.

ஒன்பது மணி பள்ளிக்கூடத்திற்கு அவன் எட்டு மணிக்கே தயாராய் நிற்க, அம்மாவும், அப்பாவும் அசந்து போனார்கள்.
“”ஏண்டா… மணி, தினமும் எட்டரை மணிக்குப் போறவன் நீ. இப்போ சைக்கிள் வந்தாச்சு. இன்னும் ஐந்து பத்து நிமிடம் தாமதமா கிளம்பினா போதுமில்லையா… ஏன் இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்டே…” அம்மா ஆச்சர்யமாய் கேட்க, மணி செல்லமாய் சிணுங்கினான்.

“”அம்மா ப்ளீஸ்மா, நான் சீக்கிரம் போனாத்தான் என் பிரெண்ட்ஸ் கிட்டயெல்லாம் என் சைக்கிளை காட்ட முடியும்.”
அவனுடைய ஆர்வத்திற்கு தலைசாய்த்து அம்மாவும், அப்பாவும் அவனை அனுப்பி வைத்தார்கள்.

சைக்கிளை மிதிக்க மிதிக்க வானத்தில் பறப்பது போல மனசு பூரித்தது மணிக்கு. அவன் இத்தனை சீக்கிரம் வந்ததற்குக் காரணம் புது சைக்கிள் மோகம் மட்டுமல்ல, ஆனந்தும் தான் காரணம்.

ஆனந்த், மணி படிக்கிற அதே பள்ளியில் தான் படித்தான். பத்தாம் வகுப்பு. மணி ஒன்பதாம் வகுப்பு. மணி வசிக்கும் தெருவிலேயே வசிக்கிறான். அவன்தான் மணிக்கு சைக்கிள் ஓட்ட கத்துத் தந்தவன். அவனுடையப் பயிற்சிதான் மணி இத்தனை அழகாய் சைக்கிள் ஓட்டக் காரணமென்றால் மிகையில்லை.

நேற்று கூட சொன்னான்.

“”மணி, உனக்கு சைக்கிள் வந்ததும் எனக்கு ரொம்ப நிம்மதி ஆகிடும்டா. மணிக்கணக்கா பஸ்ஸýக்கு காத்துட்டு நிக்காம நான் நேரா உன் வீட்டுக்கு வந்துடறேன். ஆமாடா, நான் பத்தாம் வகுப்பு படிக்கறதால பள்ளியில நிறைய ஸ்பெஷல் கிளாஸý இருக்கு. என்னால சரியான நேரத்துக்குப் போக முடியாததால எல்லா வகுப்பிலேயும் திட்டு வாங்கறேன். எங்க அப்பாவால எனக்கு சைக்கிள் வாங்கித் தரமுடிலடா. அதனால நாம ரெண்டு பேரும் சேர்ந்து போகலாம்டா…”

அதுதான் மணிக்கு பிடிக்கவில்லை.

ரெண்டு வருஷமாய் அப்பா, அம்மாவிடம் போராடி, தான் சைக்கிள் ஓட்டும் திறமையை நிரூபித்து வாங்கிய சைக்கிள். அது முழுக்க முழுக்க இவனுக்கானதுதான். அதில் யாருக்கும் இடமில்லை. அதனால்தான் அவனை தவிர்த்துவிட்டு சீக்கிரமே கிளம்பி விட்டான்.
மறுநாள்…

“”என்ன மணி, இன்னைக்கும் சீக்கிரம் கிளம்பிட்டே..!” அப்பாவும், அம்மாவும் ஆச்சர்யமாய் கேட்க, ஏதோ ஒரு பாடத்தில் ஸ்பெஷல் கிளாஸ் இருப்பதாய் சொல்லிவிட்டு பறந்தான்.

சைக்கிளில் ஜம்மென்று பறப்பது சுகமாகவும், ரொம்பக் கவுரவமாகவும் இருந்தது. மாலையில் வீடு திரும்பும் முன்னரும் ஆனந்தை சந்திக்காமல் மாற்று வழியில் வீடு வந்து சேர்ந்தான். மனசு உற்சாகமாய் இருந்தது. மாலையில் ஆனந்த் வாசலில் சைக்கிளைப் பார்த்து விட்டு ஓடோடி வந்தான்.

“”என்னடா மணி, சைக்கிள் வாங்கிட்டியா..?” என்றான் ஆசையாக.

“”ஆமாண்டா..!” என்றான் சுரத்தில்லாமல்.

“”அப்புறம் ஏண்டா என்னைய விட்டுட்டு காலைல ஸ்கூல் போயிட்ட…” என்றான் அப்பாவியாய்.

“”இல்லடா… இப்பெல்லாம் எனக்கு ஸ்பெஷல் கிளாஸ் வெச்சுடறாங்க அதான்…”

“”எத்தனை மணிக்குப் போவே… நானும் வர்றேனே…”

“”எட்டரை மணிக்கு…” என்றவன் கால்மணி நேரத்திற்கு முன்னதாகவே கிளம்பி விட்டான்.

இரண்டொரு நாள் வந்து பார்த்து ஏமாந்த ஆனந்த், பிறகு வருவதேயில்லை. மணிக்கு நிம்மதியாய் இருந்தது. இது அவனுக்கே அவனுக்கான சைக்கிள். இதில் யாருக்கும் இடமில்லை.

அவன் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தைப் பார்த்து அப்பாவே ஒரு நாள் கேட்டார்.

“”என்னாச்சு… மணி, உனக்கும் ஆனந்துக்கும் ஏதாவது சண்டையா? அவன் ஏன் வீட்டுக்கு வர்றதில்லை…?”

“”இல்லப்பா, அவன் நான் சைக்கிள் வாங்கினதைப் பார்த்து பொறாமைப்படறான் போல…”

“”என்னடா… மணி, இப்படியெல்லாம் பேசுற? ஆனந்த் என்ன அப்படிப்பட்ட பையனா? அப்படியே இருந்தாலும் உன்னுடைய நண்பன் தப்பு செஞ்சா நீதானே பக்குவமாய் திருத்தணும். அத விட்டுட்டு இப்படியா புறம் பேசுவாங்க…” அம்மா அதட்டினார்.
“”ஆமாம் மணி, எப்பவும் நீ தனியா போறதை விடவும் நல்ல நண்பரோட போறது இன்னும் அழகாக இருக்கும்” என்றார் அப்பா.

ஆனால், மணி இதெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை.

அன்று பள்ளியில் இருந்து கிளம்பிய மணிக்கு மெயின் ரோட்டை தாண்டியதும் சோதனை ஏற்பட்டது. மெயின் ரோட்டில் ஒரு வளைவில் திரும்பிய போது, சைக்கிள் சறுக்கி கிழே விழுந்து கையில் அடிபட்டு விட்டது. இன்னொரு பக்கம், சைக்கிள் செயின் கழன்றுக் கொள்ள, அதையெப்படி மாட்டுவது என்று தெரியாமல் முழித்தான் மணி.

பக்கத்தில் உதவிக்கு யாருமில்லை. கடந்து போன ஓரிருவரும் இவனைப் பார்த்துக் கொண்டே போனார்கள். உதவிக்கு வரவேயில்லை. மணிக்கு அழுகை அழுகையாய் வந்தது. இப்படி ஆகுமென்று அவன் நினைக்கவேயில்லை. செயினை மாட்ட முன்னுக்குப் பின்னால் சுற்றிக் கொண்டிருந்த போது ஆனந்த் ஓடோடி வந்தான்.

“”என்னடா மணி ஆச்சு? கையெல்லாம் ஒரே சிராய்ப்பா இருக்கு. செயின் கழண்டுப் போச்சா. கொஞ்சம் தள்ளு, நான் மாட்டறேன்.”

ஐந்து நிமிடத்தில் மாட்டி விட்டான். மணிக்கு வெட்கமாய் இருந்தது.

“”ஆனந்த நீ எப்படிடா இங்கே வந்தே..?”

“”நான் பஸ்ல போகும் போது, நீ இங்கே விழுந்துக் கிடக்குறதைப் பார்த்தேன்டா. அதான் அடுத்த ஸ்டாப்ல இறங்கி ஓடோடி வர்றேன். மணி என் தப்புதாண்டா, சைக்கிள் ஓட்டக் கத்துத் தந்த நான், அதில் ஏற்படற சின்னச் சின்னப் பழுதுகளை எப்படி சரிபார்க்கறதுன்னு சொல்லித் தந்திருக்கணும். என்னை மன்னிச்சுருடா…”

ஆனந்துடைய வார்த்தைக் கேட்டு வெட்கித் தலைக்குனிந்தான் மணி. படிப்பில் மட்டுமில்லை, பண்பிலும் உயர்ந்து நின்றான் மணியின் நண்பனாய் ஆனந்த்.

“”ஆனந்த், இனிமேல் நாம் சேர்ந்தே போவோம்டா. என்னை மன்னிச்சுடுடா…” மணி நிஜமாகவே வருத்தப்பட்டான்.
“”நிஜமாவாடா…” ஆனந்த் குதூகலமாய் புன்னகைத்தப்படி மணியின் பின்னால் ஏறிக் கொண்டான். இருவரும் ஒன்றாக வருவதைப் பார்த்த மணியின் பெற்றோர், பிணக்குபட்ட நண்பர்கள் இருவரும் ஒன்றானதை அறிந்து மகிழ்ச்சியுற்றனர்.

நன்றி ;தினமணி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 11 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jan 27, 2016 9:48 pm

இதெல்லாம் இதற்குத் தானா?
-----------
இவாஞ்சலின் அதிகாலையில் பால் வாங்கக் கிளம்பிக் கொண்டிருந்தபோதுதான் கீரைக்காரம்மாளின் புருஷன் செத்துப் போன செய்தி கிடைத்தது.

கீரைக்காரம்மாளுக்கும் அவளின் குழந்தைகளுக்கும் இந்த மரணம் பெரிய இழப்பாக இருக்க முடியாது. அவர்களுக்கு நிஜத்தில் இது பெரும் விடுதலைதான்.

கீரைக்காரம்மாவுடன் இவாஞ்சலினுக்கு ஆரம்பத்தில் அதிகம் நெருக்கம் இல்லை. கீரைக்காரம்மாளின் பெண்ணால்தான் அந்த நெருக்கம் பின்னால் ஏற்பட்டது. ப்ளஸ் டூ முடித்தவர்கள் எல்லாம் உற்சாகமாக, கல்லூரிகளில் சேர்வதற்கான ஆயத்தங்களில் இருக்க, கீரைக்காரம்மாளின் பெண் மட்டும் இன்னும் எங்கோ வேலைக்குப் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்த இவாஞ்சலினின் மனசுக்கு வருத்தமாக இருந்தது.

அந்தப் பெண் ரொம்பவும் நன்றாகப் படிக்குமென்று அவள் கேள்விப்பட்டிருந்தாள். அப்படிப்பட்ட பெண், கல்லூரிக்குப் போகாமல் ஏன் வேலைக்குப் போய்க் கொண்டிருக்க வேண்டும்? ஒருவேளை படித்தது போதுமென்று நிறுத்தி விட்டார்களா? மனசுக்குள் உழலும் கேள்விகள் இவாஞ்சலினுக்கு மிகவும் கவலையளித்தன. கீரைக்காரம்மாளிடம் இதுபற்றி விசாரிக்கலாமென்றால், இப்போதெல்லாம் அவளைப் பார்க்கவே முடிவதில்லை. தண்ணீர்க் குழாயில் சந்தித்து கூட ரொம்ப நாளாகி விட்டது.

பிறகு ஒரு நாள் தண்ணீர் குழாய் அருகில் சந்தித்தப்போதுதான் இவாஞ்சலின் கீரைக்காரம்மாளிடம், ”அப்புறம் ரொம்ப நாளாவே உங்ககிட்ட ஒண்ணு கேட்கணும்னு நெனச்சிருந்தேன்; நல்லாப் படிக்கிற உங்க பொண்னோட படிப்பு ஏன் பாதியிலேயே நிறுத்திட்டீங்க? ஒரு டிகிரியாச்சும் படிக்க வச்சுருக்கலாமில்ல..!” என்றாள்.

கீரைக்காரம்மாளின் கண்களில் நீர் திரையிட்டது. ”அந்தக் கொடுமைய ஏன் தாயி கேட்குற..?” என்றபடி வாசல்படியில் கால்நீட்டி வசதியாக உட்கார்ந்து கொண்டு பேசத் தொடங்கினாள். ”என் பொண்ணு பத்தாவதுல நானூறுக்கு ஒரு மார்க் குறைவு; நம்ம தெருவே மூக்குல விரல் வச்சு சந்தோஷப் பட்டுச்சு; நான்தான் ப்ளஸ் டூ சேர்க்குறதுக்கு கவர்மென்ட் பள்ளிக் கூடத்துக்குக் கூட்டிட்டுப் போனேன்; என்ன குரூப் வேணுமின்னு கேட்டாங்க. எங்களுக்குச் சொல்லத் தெரியல! உன்னை மாதிரி விஷயம் தெரிஞ்ச மகராசி யாரையாச்சும் கூட்டிட்டாவது போயிருக்கலாம்; அப்பத் தோணாமப் போயிடுச்சு.

ஏழை வீட்டுப் புள்ளைய்யா; நல்லதா நீங்களே ஏதாவது படிப்புல சேர்த்துக்குங்க; உங்களுக்குக் கோடி புண்ணியம் கெடைக்கும்’ன்னு வாத்தியார்கிட்டயே பொறுப்பக் கொடுத்தேன். அவங்கதான் ஏதோ பேசன் டிசைன்னு ஒரு புதுக்குரூப்புல சேர்த்துக்குறோம்; ப்ளஸ் டூ படிச்சு முடிச்சாலே வேலை கிடைச்சுடும்னு ஆசைகாட்டி சேர்த்துக் கிட்டாங்க; ஆனா படிச்சு முடிச்சப்புறம் தான் அந்தப் படிப்போட வண்டவாளம் தெரிஞ்சுச்சு, வேலையும் கிடைக்கல; ஒரு மண்ணும் கிடைக்கல.

அந்தப் படிப்புல படிக்குறதுக்கு ஆளே சேரலைன்னு அரசாங்கமே அந்தக் குரூப்ப மூடச் சொல்லிருச்சாம்; அப்படி மூடிட்டா எங்க அதைச் சொல்லிக் குடுக்குற வாத்தியாருங்களுக்கு வேலை இல்லாமப் போயிருமோன்னு பயந்துக்கிட்டு வாத்திமாருங்களெல்லாம் ஒண்ணாச் சேர்ந்துகிட்டு விவரந்தெரியாத என்னை மாதிரி ஏழை வீட்டுப் புள்ளைங்கள அமுக்கி அந்தக் குரூப்ல சேர்த்துக்கிட்டாங்களாம்; இந்த உண்மையெல்லாம் இப்பத்தான் தெரியுது, என்ன செய்றது?

அந்தப் படிப்புலயும் கண்ணும் கருத்துமாப் படிச்சு ஆயிரத்துச் சொச்சம் மார்க் வாங்கியிருந்தா என் பொண்ணு. சரி இன்னொரு மூணு வருஷம் வாய, வயிறக் கட்டி ஒரு டிகிரியாச்சும் படிக்க வச்சா அது பொழைப்ப அது பார்த்துக்கிடட்டும்னு காலேஜ் தேடுனா, அக்கம் பக்கத்துல எந்தக் காலேஜுலயும் அந்தப் படிப்பு தட்டுப் படல. பெரிய பெரிய பணக்காரங்க படிக்கிற தனியார் காலேஜுல தான் அது இருக்காம். அவ்வளவு பணத்துக்கு நாங்க எங்கே போறது? அதான் கார்மென்ட்ஸ் கம்பெனிக்கு வேலைக்குப் போயிக்கிட்டு இருக்கா… எல்லாம் விதிம்மா! வேறென்ன சொல்றது? சரி தாயி, ரொம்ப நேரமாயிருச்சு, நான் கௌம்புறேன்” என்றபடி எழுந்து போனாள்.

இவாஞ்சலினுக்கு ரொம்பவும் துக்கமாக இருந்தது. அன்றைக்கு இரவே அருள்தாஸிடம் இதுபற்றி சொன்னபோது அவனும் அந்தப் பள்ளியின் மீது கோபப்பட்டான். அப்புறம் ”காலேஜுல போயி அந்தப் படிப்பப் படிச்சாலும் இந்தப் பொண்ணால அதுல கரை சேர்றது கஷ்டம்! அதுக்கெல்லாம் கத்தை கத்தையா பணமிருந்தால் தான் முடியும். வேணுமின்னா பாலிடெக்னிக்குல சேர்ந்து படிக்கச் சொல்லலாம்…” என்றான். அவள் மலர்ந்து, ”ரெண்டாவது வருஷத்துல சேர்த்துக்குவாங்களா..?” என்றாள்.

”அது சாத்தியமில்லப்பா… ப்ளஸ் டூ ல மேத்ஸ், பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி படிச்சிருந்தாத்தான் இரண்டாவது வருஷத்துல சேர முடியும். இந்தப் பொண்ண எஸ்.எஸ்.எல்.சி. மார்க்க வச்சு முதல் வருஷத்துல தான் சேர்த்து விடணும்…” என்றான். ”அப்ப ரெண்டு வருஷப் ப்ளஸ் டூ படிப்பு பாழ் தானா! சரி நான் நாளைக்கு அவங்க கிட்டப் பேசிப் பார்க்குறேன்…” என்றாள்.

அடுத்த நாள் கீரைக்காரம்மாளை அழைத்து இது சம்பந்தமாகப் பேசிய போது, ”எனக்கென்னம்மா புரியுது இதெல்லாம்! நான் என் பொண்ணையே கூட்டிட்டு வாறேன்; அவள் கிட்டயே பேசு…” என்றபடி உடனே ஓடிப்போய் தன் பெண்ணை அழைத்து வந்தாள்.

”உன் பேரென்னம்மா..?” என்றாள் இவாஞ்சலின் அவளின் தலையை வாஞ்சையாய் வருடியபடி. இத்தனை நாளில் இந்தப் பெண்ணின் பேரைக் கூடத் தெரிந்து வைத்திருக்கவில்லையே என்று மனசுக்குள் தன்னைத் தானே கடிந்து கொண்டாள் அவள்.

”சுகந்தி ஆன்ட்டி…” என்று அவள் சொல்லவும், ”அழகான பேரா இருக்கே, யாரு வச்சது?” என்றாள் இவாஞ்சலின். ”அவங்க அப்பாரு வச்ச பேரு தான்; நல்ல ரசனையான மனுஷன் தான். இப்பத்தான் எதுக்கும் பிரயோசனமில்லாமப் போயிருச்சு…” என்றாள் கீரைக்காரம்மாள்.

”பாலிடெக்னிக்குல சேர்ந்து டிப்ளமோ படிக்குறியா சுகந்தி?” என்று கேட்டாள் இவாஞ்சலின். அவள் கொஞ்சம் கூட யோசிக்காமல் சந்தோஷம் பொங்க ”சரி ஆன்ட்டி…” என்று தலையை ஆட்டினாள் வேகமாக.

அடுத்து வந்த நாட்களில் கீரைக்காரம்மாளும் இவாஞ்சலினும் பாலிடெக்னிக் பாலி டெக்னிக்காக ஏறி இறங்கி விசாரித்தார்கள்.

இருவரும் சில நாட்கள் சில பொழுதுகளாவது ஒன்றாகத் திரிய நேர்ந்ததில் இவாஞ்சலின் கீரைக்காரம்மாளின் வாழ்க்கை பற்றிய நிறைய விபரங்களை விசாரித்து அறிந்து கொண்டாள்.

”எங்க ரெண்டு பேருக்குமே சொந்த ஊர் மதுரை மேலூர் பக்கத்துல ஒரு கிராமம். சுகந்தி அப்பா அப்பல்லாம் நல்லா நையாண்டிமேளம் வாசிக்கும். கல்யாணம், கருமாதி, ஊர்த் திருவிழான்னு அதுக்குத் தகுந்தபடி அபாரமா வாசிக்கும். அப்ப அதோட கழுத்தசைவையும் விரலோட நாட்டியத்தையும் பார்த்துப் பார்த்து நான் சொக்கிப் போவேன். ரொம்பத் தெறமையான மனுஷன்ம்மா… நான்தான் மொதல்ல அதுட்டப் போயி, ‘எனக்கு உன்மேல ரொம்ப இஷ்டம்; என்னையும் உன்கூடவே கூட்டிட்டுப் போயிரு; உன் மேள வாசிப்பக் கேட்டுக்கிட்டே இருக்கணும் போலருக்கு’ன்னு சொன்னேன். அது முதல்ல ஒண்ணுஞ் சொல்லாம சிரிச்சிட்டுப் போயிருச்சு…

நான் திரும்பத் திரும்ப அதுகிட்டப் போயி இதையே சொல்லவும், சரி வான்னு கூட்டிட்டுப் போயி ஒரு கோயில்ல வச்சு தாலி கட்டிருச்சு. நாங்க ஒரே ஜாதிதான். எங்களோடது ரொம்ப வறுமையான குடும்பம். அன்னாடம் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுற குடும்பம். இவரோடது கொஞ்சம் வசதியானது. அதனால ரெண்டு குடும்பத்திலயும் எங்கள ஏத்துக்கல. வெட்டுவோம், குத்துவோம்னு மெரட்டுனாங்க. உங்களால ஆனதப் பார்த்துக்கங்கன்னுட்டு இந்தப் பட்டணத்துக்கு ஓடி வந்துட்டோம். ஏனோ பட்டணத்துக்கு வந்ததும் மேளம் வாசிக்கிறது விட்டுருச்சு. கேட்டா உண்மையான கலைஞனுக்கு இங்க மரியாதை இல்லைன்னு சொல்லும். அதுக்குப் பதிலா சென்ட்ரிங் வேலைக்குப் போக ஆரம்பிச்சது. நல்ல வருமானம் வந்துச்சு. சொந்தமா கான்ட்ராக்ட் கூட எடுத்துப் பண்ணுச்சு.

ஆரம்பத்துல எல்லாம் என்கிட்ட ரொம்ப ஆசையா பிரியமாத்தான் இருந்துச்சு. காதலிக்கும் போது இருக்குற கரிசனமான ஆம்பளைங்க கல்யாணத்துக்கப்புறம் எப்படி காணாமப் போறாங்கன்னே தெரியல. இதுவும் அப்படியே மாறிப் போயிருச்சு. கூடவே குடிப்பழக்கம் வேற” என்றாள் கசப்பு பொங்கும் குரலில்.

பெரும்பாலான பாலிடெக்னிக்குகளில் ப்ளஸ் டூ வில் சம்பந்தமில்லாத குரூப்பைப் படித்த பெண்ணைச் சேர்த்துக் கொள்ள தயக்கம் காட்டினார்கள். ஓரிரு அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்குகளோ எஸ்.எஸ்.எல்.சி.யில் குறைந்த பட்சம் நானூறுக்கும் அதிகமான மார்க் எடுத்திருந்தால் தான் இடம் கிடைக்குமென்று சொல்லி விண்ணப்பப்பாரம் தருவதற்கே மறுத்து விட்டார்கள். சுயநிதி பாலிடெக்னிக்குகளில் டொனேஷன் அது இதென்று கட்டணம் எக்குத் தப்பாய்க் கேட்டார்கள். கடைசியில் ஒரு முஸ்லீம் மைனாரிட்டி பாலிடெக்னிக்கில் விசாரித்தபோது ஆறுதலாயும் நம்பிக்கையாயும் பேசினார்கள். ஆனால் அங்கு சேர்வதற்கும் வருஷத்திற்கு குறைந்தது இருபதாயிரம் ரூபாய்த் தேவைப்படுமென்று தெரிந்தது.

”இதெல்லாம் கதைக்கு ஆகிற காரியமில்லை தாயி. அவளுக்கு விதிச்சபடி ஆகட்டும்…” என்று சொல்லி கீரைக்காரம்மாள் விடை பெற்றுக் கொண்டாள்.

இவாஞ்சலினுக்கு மனசு ஆறவே இல்லை. எந்த வகையிலாவது அந்தப் பெண்ணிற்கு உதவ வேண்டுமென்று

மனசு கிடந்து துடித்து. ”இப்படி பாலிடெக்னிக் படிக்கிற ஆசைய அந்தப் பொண்ணுக்கு ஊட்டிட்டு, அது இப்ப முடியாமப் போயிடும் போல இருக்குங்க…” அருள்தாஸிடம் சொல்லிப் புலம்பினாள். ”நாம வேணுமின்னா பணம் கட்டி அந்தப் பொண்ண படிக்க வைக்கலாம்ப்பா…” என்றான் அவன். ”நெசமாவா… பணம் கட்டுவீங்களா?” பரவசத்தில் அவள் குரல் பதறியது.

கீரைக்காரம்மாளையும் சுகந்தியையும் அழைத்து விவரம் சொல்லவும் அவர்களால் இதை நம்பவே முடியவில்லை. இரண்டு பேர்களின் கண்களிலும் தாரை தாரையாகக் கண்ணீர். கீரைக் கா ரம் மாள் தடா லென்று இவாஞ்சலினின் கால்களில் விழுந்து விட்டாள். இவாஞ்சலின் பதறிப்போய் ”அய்யோ என்னங்க இதெல்லாம்…” என்று அவளை எழுப்பி சோபாவில் உட்கார வைப்பதற்குள் போதும் போதென்றாகி விட்டது. அப்புறமும் பொங்கிப் பொங்கி அழுது கொண்டிருந்தாள் அவள்.

காரியங்கள் சரசரவென்று நடந்தேறின. அடுத்த நாளே இருவரும் போய் விண்ணப்ப படிவம் வாங்கி வந்தார்கள். அன்றைக்கே மூவரும் உட்கார்ந்து அதை நிரப்பி, ஒரு நல்ல நாளில் போய் பணம் கட்டி பாலிடெக்னிக்கில் சேர்த்து விட்டு வந்தாள் இவாஞ்சலின். இரண்டு நாள் சென்றிருக்கும். கீரைக்காரம்மாளின் புருஷன் இவாஞ்சலினின் வீட்டிற்கு வெளியே வந்து நின்று கொண்டு சத்தம்போடத் தொடங்கினார். அப்போது அவர் நிறைந்த போதையிலிருந்தார்.

”என் பொண்ணுக்கு நீ யாருடா பணம் கட்டிப் படிக்க வைக்குறதுக்கு! அப்படிச் செஞ்சு என் பொண்டாட்டிய வளைச்சுக்கலாம்னு பார்க்குறியா? வெளிய வாடா…” என்று அசிங்கமான வார்த்தைகளால் அர்ச்சிக்கத் தொடங்கினார்.

அருள்தாஸ் வெளியே வந்து சமாதானமாய்ப் பேசிப் பார்த்தார். அவர் அடங்குவதாக இல்லை. அப்புறம் போலீஸýக்குப் போன் பண்ணி, அவர்கள் வந்து ஸ்டேஷனுக்கு அழைத்துப் போய் நாலு சாத்து சாத்தி அனுப்பவும்தான் அமைதியானார்.

கீரைக்காரம்மாள் இவாஞ்சலின் வீட்டிற்கு வந்து அழுதாள். ”அந்த மனுஷன் பேசுனத மனசுல வச்சுக்காதீங்கய்யா” என்றாள்.

”பயப்படாதீங்க… யாருக்காகவும் எதுக்காகவும் சுகந்தியப் படிக்க வைக்கிறதுலருந்து நாங்க பின் வாங்க மாட்டோம்” என்று ஆறுதலாகப் பேசி அனுப்பி வைத்தார்கள். சுமார் மூன்று மாதங்கள் எந்தப் பிரச்சனையுமில்லாமல் கடந்தது. பாலிடெக்னிக்கில் சுகந்தி நன்றாகவே படித்தாள். அவ்வப்போது இவாஞ்சலினிடம் வந்து பரீட்சையில் எடுத்த மதிப்பெண்களையெல்லாம் காட்டிப் போனாள்.

திடீரென்று ஒருநாள் கீரைக்காரம்மாளின் வீட்டிலிருந்து குய்யோ முறையோ என்று அலறல் கேட்டது. இவாஞ்சலின் ஓடிப்போய் பார்த்தாள். கீரைக்காரம்மாள் மூலையில் உட்கார்ந்திருந்தாள். அவளின் கால்களைக் கட்டிக் கொண்டு பிள்ளைகள் மூன்றும் கதறிக் கொண்டிருந்தன. விசாரித்தபோது தான் விஷயத்தின் விபரீதம் புரிந்தது. கீரைக்காரம்மாள் தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள். அதற்குச் சாட்சியாக சீலிங்ஃபேனில் கீரைக்காரம்மாளின் சேலை படபடத்துக் கொண்டிருந்தது.

முதலில் எதுவும் சொல்ல மறுத்த கீரைக்காரம்மாள் பிறகு தயங்கியபடியே சொன்னாள். ”சொல்லித்தான் தீரணும்; உன்கிட்ட சொல்றதுல தப்பில்ல தாயி… என்கிட்ட வந்து ‘வாடி படுத்துக்கலாம்’னு கூப்பிட்டான். வீட்டுல இருக்கிறதே ஒரே ஒரு ரூம்தான்; வயசுக்கு வந்த பொட்டப்புள்ளையும் மத்த புள்ளைங்களும் அங்க உட்கார்ந்து படிச்சுக்கிட்டு இருக்காங்க; என்ன வக்கிரமான மனுஷன்னு பார்த்தியா தாயி? நான் முறைச்சுப் பார்த்துட்டு பேசாம இருந்தேன். உடனே அந்த ஆளு என்ன செய்தான் தெரியுமா? அவனோட உடைகள் மொத்தத்தையும் அவுத்துட்டு அம்மணமா நிற்குறான் தாயி…” என்றபடி முகத்தை கைகளால் மூடியபடி பெருங்குரலெடுத்து அழத்தொடங்கினாள். ”புள்ளைங்கெல்லாம் வெளியே ஓடிருச்சுங்க; இந்த வெறிபிடிச்ச மனுஷனோட எப்படி மிச்ச காலத்தையும் கழிக்குறதுன்ற வேதனையிலதான் செத்துத் தொலையிறதுன்னு முடிவுக்குப் போயிட்டேன். இனிமே எது நடந்தாலும் அப்படிப் பண்ண மாட்டேன். மன்னிச்சுக்கோ தாயி…” என்றாள்.

இது நடந்து பத்து நாட்களுக்குள் கீரைக்காரம்மாளின் புருஷனின் மரணம் நேர்ந்துவிட்டது. அவனின் கடைசி நேரக் கிரியைகள் எல்லாம் முடிந்து மரணத்திற்கு வந்திருந்தவர்கள் எல்லாம் கலைந்து போன பின்பும் அழுது கொண்டிருந்த கீரைக்காரம்மாளிடம், இவாஞ்சலின் ஆறுதலாய்ச் சொன்னாள்: ”நடந்தது நடந்து முடிஞ்சுருச்சு; அத மறந்துட்டு மேற்கொண்டு ஆக வேண்டிய காரியங்களைக் கவனிங்க…”

”எப்படித் தாயி… என்னால தாங்கவே முடியலயே! ஆசை, ஆசையா காதலிச்சு, சொந்த பந்தங்கள ஒதுக்கி கல்யாணம் பண்ணி, ஊருவிட்டு ஊரு ஓடி வந்து, கடைசியில நானே கொல்ல வேண்டியதும் ஆயிடுச்சே!”

இவாஞ்சலினுக்குச் சிலீரென்றிருந்தது. ”என்ன சொல்றீங்க? அவரு விஷச் சாராயத்தக் குடிச்சு செத்துப் போனதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க?”

”இல்ல தாயி, அந்த மனுஷன் சாராயம் குடிச்சு சாகல. நாலு நாளைக்கு முன்னாடி ஒரு நடு வயசுத் தாண்டிய பாதிக் கிழவன வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வந்து அவனுக்கு சுகந்திய கல்யாணம் கட்டி வைப்போம்ன்னார். நான் சண்டைக்குப் போனேன்… அதுக்கு அது என்ன சொல்லிச்சு தெரியுமா தாயி?”

”அவ படிச்சு ஒண்ணும் கிழிக்க வேணாம்; அதிகம் படிக்காத நீயே, என்னை மயக்கி வளைச்சு பட்டணத்துக்குக் கூட்டிட்டு வந்து என் வாழ்க்கையைப் பாழாக்கிட்ட; இப்ப என்னை ஒரு துரும்புக்கும் மதிக்கிறதில்ல! இவ படிச்சு முடிச்சா உன்னை மாதிரியே தட்டழிஞ்சு, எவனையாவது இழுத்துக்கிட்டு வந்து நிப்பா! அதனால வர்ற முகூர்த்தத்துலே கல்யாணம் பண்ணியே தீர்வேன்னு ஒத்தக் கால்ல நின்னுச்சுமா..

அது பேசுனத கேட்டதும் இந்த மனுஷனப் போயி காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டமேன்னு ச்சீய்ன்னு ஆயிருச்சு… என் மேலயே எனக்கு ஆத்தாமையா வந்துச்சு; இனியும் இந்தப் பூமியில உயிர் தரிச்சு இருக்கிறதுல ஒரு அர்த்தமும் இல்லைன்னு பிள்ளைகளோட சேர்ந்து செத்துப் போகலாம்னு விஷம் வாங்கிட்டு வந்தேன்; கடைசி நேரத்துல மனசு மாறி ‘நாம் ஏன் சாகணும்? அழிச்சாட்டியம் பண்ற அந்த மனுஷன்தான் சாகணும்’னுட்டு வீட்டுல அது வாங்கி வச்சுருந்த சாராயத்துல விஷத்தக் கலந்து வச்சுட்டேன் தாயி..” என்று மீண்டும் அழத் தொடங்கினாள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 11 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jan 27, 2016 9:51 pm

அவள்
-----------
அவள் நாளை வருகிறாள்.

என் இதயம் முழுவதும் சந்தோஷச் சுனாமி! இதுவரை
உணராத ஒருவித தவிப்பு. இறக்கைகள் முளைத்தது போல்
புதுவகை சுறுசுறுப்பு.

அவள் வந்ததும் அப்படியே அலாக்காக தூக்கி ஒரு
சுற்று சுற்ற வேண்டும். கட்டி அணைத்து முத்தமிட்டு
கதை பேச வேண்டும். என் அன்பை முழுவதுமாய்
குத்தகை எடுத்த அவளுக்கு ஏராளம் வாங்கித்தர
பட்டியல் தயார்.

உறக்கமில்லாமல் கழிந்தது இரவு.
புதுப்பூவாய் புலர்ந்தது பொழுது.

அழைப்பு மணி ஒலித்தது.

ஆம்...வந்துவிட்டாள்....
என் அக்காவின் ஐந்து வயது அழகு மகள்!

[ தினமலரில் 22 -8 - 2010 ல்௦ வெளியானது]
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 11 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jan 27, 2016 9:52 pm

அர்த்தங்கள்
----------
மீனா அபார்ட்மென்ட்ஸ். மூன்றாவது ப்ளோரின் 21ம் நம்பர் வீடு. சமையல் முடித்து ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி நிகழ்ச்சியினை காண கண்ணாடி ஜன்னலின் திரைச்சீலையை மூட வந்தவளுக்கு திக்கென்றிருந்தது.
உடனே கணவனிடம் சென்று,

"இதோ பாருங்க, உங்க அப்பாவும் அம்மாவும் கீழே வந்துகிட்டிருக்காங்க, சும்மா விட்டோம்னா இங்கயே ஒரேயடியா தங்கிடுவாங்க. அதனால அவங்க வந்ததும் நாங்க திருப்பதி போறோம், வர ஒரு வாரம் ஆகும்னு
சொல்லி அந்த கிழங்கள விரட்டிடுங்க ..சரியா?"


"சரி சரி"

அழைப்பு மணி அழைத்தது.

கதவை திறந்ததும் மலர்ந்த முகத்தோடு அந்த வயோதிக உள்ளங்கள் வந்தது. உடனே அவன் தன்மனைவி சொன்ன வார்த்தை பிசகாமல் படபடப்போடு அனைத்தையும் சொல்லி முடித்தான்.அவர்களும் பாவமாய்

"சரிப்பா...பரவாயில்லப்பா, இந்தப் பக்கம் ஒரு வேலையா வந்தோம்...இவ பேரன பாக்கனும்னா. நாங்க பார்த்துட்டு போயிடறோம்" என்றார்கள்.

குழந்தையை பார்த்ததும் சந்தோசம் கொள்ளவில்லை அவர்களுக்கு.
குழந்தையோ அழுது கதறியது.
கொஞ்சிவிட்டு அவர்கள் கிளம்பினார்கள்.


கதவை தாளிட்டு வந்து "அப்பாடா...போக வச்சாச்சு" என்று கணவனும், மனைவியும் சந்தோஷப்பட்டார்கள்.

அவ்வளவு நேரம் அழுத அந்த எட்டு மாதக் குழந்தை அவர்கள் இருவரையும் பார்த்து 'கக்கக்கவென' சிரித்தது.சத்தமாய் அழது அரற்றிய குழந்தை திடீரென சிரிப்பதை பார்த்து ஆச்சர்யப்பட்டனர்.

"பாசமாய் வந்த அய்யா அப்பத்தாவை விரட்டி விட்டீர்களே.எத்தனை வருடம் உங்களுக்காக அவர்களை சிதைத்து
கொண்டு உங்களை இந்த உச்சியில் வைத்திருக்கிறார்கள்.அடுத்தவரோட
உணர்வுகளை உணர்ந்து, மதிச்சு நடக்கிறவன் தான் மனுஷ ஜென்மம். உங்களுக்கு போய் நான் பொறந்ததுல வெட்கப்பட்டு, வேதனைப்பட்டு தான் என் அய்யா அப்பத்தாவோட நான் இருக்க முடியலயேன்னு அழுதேன். இப்படியும் அப்பா அம்மா இருக்காங்களேன்னு உங்கள பார்த்து சிரிக்கிறேன்" என்று அந்த குழந்தையின் சிரிப்பில் அர்த்தங்கள் இருப்பதாய் அவர்களுக்கு
உரைத்தது.

Ram Ananth
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 11 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jan 27, 2016 9:53 pm

கிளிப்பேச்சு

நெருக்கடியான நகரப் போக்குவரத்து நிறைந்த நெடுஞ்சாலை.வாகனங்கள்
அனைத்தும் பரபரப்பை,சத்தங்களோடு விரைந்து கொண்டிருந்தன. அதில் புதிதாய் வாங்கிய மாருதி-800 ல் இன்னும் ஒரு மாதத்தில்
நடக்கவிருக்கும் கல்யாணம் பற்றிய நினைவுகளோடு வண்டியை
ஓட்டிக்கொண்டிருந்தாள் ஹனு. வருங்காலக் கணவன்,வாங்க நினைக்கும் நகைகள், சேலைகள் என வண்ண வண்ண கனவுகளின் ஒத்திகையோடு அவள் சென்றுகொண்டிருந்த போது திடீரென
ஒரு வளைவில் வேகமாய் வந்த லாரி அவள் கார் மீது மோத அவள் தூக்கி எறியப்பட்டாள். சாலையோரம் இருந்த இரும்புக்கம்பியில் அவள் கழுத்து அடிபட்டு விழுந்தாள். கூட்டம் கூடியது.

பிறகு...

சோலை மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவு. டாக்டர்கள், நர்சுகள் என துரிதமாய் செயல்பட
அவளுடைய முகவரியறிந்து வீட்டுக்கு தகவல் சொல்லப்பட இரு வீட்டாரும் வந்து அழுகையும், பயமுமாய் தவித்து கொண்டிருந்தனர்.

சாயங்காலம் டாக்டர் அழைத்தார்.

"பெரிசா பயப்பட ஒண்ணுமில்ல.ஆனா இரும்பு கம்பில மோதி பலமா அடிபட்டதால இனி பேசுரதுங்கிறது
கொஞ்சம் கஷ்டம். ஆனா பேச்சே வராதுங்கிறது இல்ல. பேசி பேசி பழகனும்" என்றார். நிச்சயம் செய்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பத்திரிக்கைகள் எல்லாம் கொடுத்தாகி விட்டது.

இரண்டு வாரங்களுக்கு பின் ஹனு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள். வீட்டில் உள்ள தனது அறைக்கு சென்று ஊஞ்சல் நாற்காலியில் ஆடியபடியே பழைய நினைவுகள், கல்யாணம், விபத்து என்று சோகமாய் இருந்தாள்.

அப்போது "ஹனு...ஹனு..." என்று கூண்டுக்கிளி அழைத்தது.

அவள் அதை பார்த்தாள். தான் இருக்கும் நிலையை போல, சொல்ல முடியாத சோகங்களோடு தானே அந்தக் கிளியும் இருக்கும் என்று நினைத்தாள். அதை அடைத்து வைக்க கூடாது. சுதந்திரமாய் அது பறந்து திரியட்டும் என எழுந்து சென்று கூண்டை திறந்து விட்டாள். கிளி வெளியே போக மறுத்தது.

ஹனுவை பார்த்து "அம்மா...அம்மா..." என்றது... பிறகு" அப்பா...அப்பா.." என்று சொன்னது.

அவை,அந்த வார்த்தைகள் ஆசையோடு அந்த கிளியை வாங்கி வந்து ஹனு சொல்லி கொடுத்த வார்த்தைகள்.

கிளி மீண்டும் "அம்மா...அம்மா.." என்றது.

ஹனு கண்களில் நீர் திரள "அ....அம்....மா..." என்று பேச பழகினாள்.
Ram Ananth
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 11 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jan 27, 2016 9:54 pm

ஆத்தா

அலமேலுபுரம். பசுமையான கிராமம். நாற்பது வீடுகள்,ஒரு ஆஞ்சநேயர் கோவில், ஒரு சிறிய நூற்ப்பாலை என்று அடக்கமான கிராமம். அந்த நூற்பாலையை நம்பித்தான் அந்த கிராமமே இருந்தது.

ஆஞ்சநேயர் கோயிலுக்கு அருகே உள்ள மகிழ மரத்தடியில் வடை,பஜ்ஜி சுட்டு வாழ்ந்து கொண்டிருந்தாள் அனாதையான மீனாட்சி பாட்டி. அங்கு வரும் நூற்ப்பாலை தொழிலாளர்களுக்கு அன்போடு பரிமாறுவாள்.
அப்படி அங்கு சாப்பிட வருபவர்களுள் சண்முகமும் ஒருவர். நிறைய பேர் பிறகு காசு தருகிறேன்னு சொல்லி போய்விடுவர். ஆனால் சண்முகம் தானும் அனாதை என்பதால் ஆத்தா, ஆத்தா என்று
பாசத்தோடு பேசுவார்.

"ஆத்தா...வேற எதாவது வேணுமா? என்னோட வந்து தங்குன்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறே" என்பார்.

"வேண்டாம் ராசா...இப்படி அன்பா நாலு வார்த்தை பேசினா அதுவே இந்த அனாதைக்கு போதும்ப்பா" என்று கண் கலங்குவாள் பாட்டி. சண்முகம் பாட்டிக்கு நிறைய உதவ நெகிழ்ச்சியோடு படர்ந்தது பாசம்.

ஒரு நாள் வழக்கம் போல சண்முகம் மகிழமரத்தடி நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். ஒரே கூச்சலாய் இருந்தது. கூட்டத்தை விலக்கி சென்றவர் அதிர்ச்சியில் நின்றார். ஆத்தா, ஆத்தா என்று அவர் அழைக்கும் அந்த பாச ஜீவன் இறந்து கிடந்தது. கூட்டம் சிறிது நேரம் சலசலப்பை செய்து கரைந்தது. சண்முகம் தவிர வேறு யாரும் அங்கில்லை. கடைசியில் சண்முகமே தன் ஆத்தாவை தூக்கிக்கொண்டு சென்று இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு வந்து மகிழ மரத்தடியில் அமர்ந்தார்.
கண்களை மூடியபடி மரத்தில் சாய்ந்திருந்தார்.

ஆத்தாவின் நினைவுகள் நெஞ்சுக்குள் ஓடின. "களைப்பா இருக்கியே...எதாச்சும் சாப்பிடுறியாப்பா" - ஆத்தா கேட்பது
போல இருந்தது.

அவர் கண்களில் கண்ணீர்.
Ram Ananth
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 11 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jan 27, 2016 9:55 pm

நிறம்
----------
அண்ணா பூங்காவிற்குள் நுழைந்ததுமே புவனாவின் கண்களில் அவர் பட்டு விட்டதால் அவளுக்கு கோபம் தலைக்கேறியது...
நேராய் அவரிடம் சென்று... "நீங்கல்லாம் என்ன நினைச்சிகிட்டு இருக்கீங்க மனசுல?. நீங்க பொண்ணு பார்க்க வர்றீங்கன்னு நாங்க அலங்காரம் பண்ணிட்டு
இருப்போம். நீங்க வந்து பார்த்துட்டு, நல்லா சாப்பிட்டுட்டு ,பொண்ணே பிடிக்கலன்னு
சொல்லிட்டு போயிடுவிங்க. உங்களுக்கெல்லாம் மனசுல மன்மதன்னு நினைப்பா?" என்று மூச்சிரைக்க முடித்தாள் புவனா.

அவர் நிதானமாய் தொடங்கினார் ."இப்ப நான் பேசலாமா ? மேடம் நேற்று உங்க வீட்டுக்கு பொண்ணு பார்க்கத்தான் வர்றேன்னு எனக்கு தெரியாது வீட்டுல கிளம்பசொன்னங்கன்னு வந்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது. நான் கல்யாணம் பண்ணிகிட்டா கறுப்பான ஒரு பொண்ண தான் கல்யாணம்
பண்ணிக்கனும்னு இருக்கேன். ஏன்னா கறுப்பான பெண்கள் எப்படில்லாம் நிராகரிக்க படறாங்கன்னு எனக்கு தெரியும் . நீங்க அழகா இருக்கீங்க, உங்களுக்கு என்ன விட நல்லா மாப்பிள்ளை, நீங்க சொன்ன மாதிரி மன்மதன் கிடைப்பான். அதனால தான் பிடிக்கலன்னு சொன்னேன். இத உங்க கிட்ட சொல்ல நினைச்சேன் . உங்க அப்பா பேச ஒத்துக்கல ,அதான் வேண்டான்னு சொல்லிட்டேன் " என்று நிறுத்தி நிதானமாய் முடித்தார்.

தன் அவசரத்தனத்தை உணர்ந்து தலை குனிந்தாள் புவனா
" சாரி சார் ,என்ன மன்னிச்சிடுங்க .உங்க மனசு தெரியாம கோபப்பட்டுட்டேன்.இப்ப உங்கள நினைச்சு ரொம்ப சந்தோஷப்படறேன். உங்க கல்யாணத்துக்கு என்னை கட்டாயம்
நீங்க கூப்பிடனும்" என்று கண்களை துடைத்து வெளியேறினாள்.


Ram Ananth
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 11 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jan 27, 2016 9:56 pm

கொடுத்துப் பெறுதல்
-------------

ஒரு புத்த மடாலயத் தலைவர் மிகவும் கவலையில் இருந்தார். ஒரு காலத்தில் அவரது மடாலயம் அந்தப் பகுதியிலேயே சிறப்பும் மதிப்பும் பெற்று விளங்கிய ஆலயம். தற்போது மதிப்புக் குறைந்து பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது அவருக்குத் தெளிவாக விளங்கியது. மடத்தின் உள்ளேயே பிக்ஷுக்கள் யாரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள்.

பொறுக்க இயலாமல் ஒரு நாள் நம் தலைவர் தன்னை விட அனுபவத்தில் சிறந்த ஒரு குருவைத் தேடிப் போனார். தன் பிரச்சினையை எடுத்துச் சொன்னார்.

அந்தக் குருவும் சற்று நேரம் ஆழ்ந்து யோசித்து விட்டு பிறகு "உங்கள் மடத்தில் புத்தரே வந்து தங்கியிருக்கிறார். நீங்கள் எவரும் அவரைக் கண்டு கொள்ளவும் இல்லை. மதிக்கவும் இல்லை. பின் எப்படி சிறப்பு செழிக்கும்?" என்று கேட்டார்.

இதைக் கேட்ட நம் தலைவர் வியப்பு மாறாமலே மடத்திற்குத் திரும்ப வந்து அங்கே இருந்த புத்த பிக்ஷுக்களுக்கு விபரம் சொன்னார். அவர்களுக்கும் ஆச்சரியம். அந்தக் கணத்தில் இருந்து சுற்றியிருப்பவர்களில் ஒருவர் கடவுளாக இருக்கக் கூடும் என்ற அனுமானத்தில் எல்லோரையும் பணிவாகவும், அன்பாகவும், மிகுந்த மரியாதையுடனும் ஒவ்வொருவரும் அணுகினார்கள். நாளடைவில் மடத்தின் சிறப்பு பல மடங்கு உயர்ந்து போனது என்பதைச் சொல்லத் தேவையே இல்லை! கூடிச் செயல் படும் போது கொடுத்துப் பெறுதல் அவசியமான ஒரு சூட்சுமம் ஆகும்.

நன்றி: ந. உதயகுமார்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 11 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Feb 08, 2016 9:10 pm

ராகவனின் எண்ணம் - தாமோதரன்
---------------

வீட்டிற்குள் நுழையும் போது இரவு 7.30 ஆகி விட்டிருந்தது ராகவனுக்கு, அவர் மனைவி வாசலிலே இவருக்காக காத்திருந்தாள், ஏங்க! இன்னைக்கு இவ்வளவு லேட்.. எதுவும் பேசாமல் துணிமணிகளை கழட்டி விட்டு கொடியில் தொங்கிய துண்டை இடுப்பில் சுற்றிக்கொண்டு புழக்கடை சென்று வாளியில் இருந்த தண்ணீரை எடுத்து முகத்தில் பளீரென அடித்து, சர்ரென தண்ணீரை எடுத்து தன் இரு கால்களிலும் விட்டு, கால்களாலே மாறி மாறி தேய்த்து கழுவி விட்டு உள்ளே வந்தார்.அவர் மனைவி அவர் பதிலை எதிர்பார்த்தவாறு கையில் வேட்டியுடன் நின்றாள். அதை வாங்கி இடுப்பில் கட்டிக்கொண்டு துண்டை உருவி முகம் கை கால்களை துடைத்துக்கொண்டு அங்கிருந்த நாற்காலியில் அக்கடாவென உட்கார்ந்தார். உடல் அசதியக இருந்தது, இதற்குள் மனைவி கையில் காப்பியுடன் வர அதை வாங்கி இரசித்து குடித்து காலி டம்ளரை மனைவியின் கையில் திணித்தவர் இன்னைக்கு ஏதோ போராட்டமாம், பஸ் எல்லாம் திருப்பி விட்டுட்டாங்க, காந்திபுரத்துல இருந்து சாய்பாபா காலனி வர்றதுக்குள்ள... ஸ்..ஸ்.. அப்பப்பா.. சலித்துக்கொண்டார்.

இது அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிதான், தினமும் இவர் நேரம் கழித்து வருவது, பின் சலித்துக்கொள்வது.... மகன் ரமேசை வண்டியை எடுத்து வந்து ஆபிஸ் வாசலிலேயே ஏற்றிக்கொண்டு வீட்டில் கொண்டு விட சொன்னாலும் இவர் ஒத்துக்கொள்ள மாட்டார்.

கல்யாணமாகிச்சென்ற தன் மகள் கல்பனா அவள் புகுந்த வீடு போகும் வரை தன் தந்தையிடம் மன்றாடி பார்த்து விட்டாள் தன் வண்டியிலேயே அவரை ஆபிஸ் கொண்டு விட்டு விடுவதாகவும் மாலையில் வீட்டில் கொண்டு விடுவதாகவும், இவர் உனக்கு எதற்கு வீண் சிரமம் என்று அவளை தவிர்த்துவிட்டார். மகன் ரமேசுக்கும் இது ஒன்றும் பெரிய கஷ்டமில்லை, அவன் அரசு பொறியியல் கல்லூரியில்தான் படிக்கிறான், வரும்போதோ, போகும்போதோ அவரை கூட்டி செல்வது. ஆனால் அவர் ஒத்துக்கொண்டால்தானே! இது போக வீட்டில் கல்பனா உபயோகப்படுத்திய வண்டியும்.சும்மாதான் இருந்தது, ஒரு பத்து நாள் இவர் காலில் ஏதோ சுளுக்கு என்று நடக்க கஷ்டப்பட்டபொழுது ரமேசுதான் தினமும் அவரை அலுவலகத்துக்கு கூட்டிச்சென்று விட்டு பின் மாலையில் அழைத்து வந்துகொண்டிருந்தான் கால் சரியானதும் அவனை வரவேண்டாமென்றுவிட்டார், வழக்கம் போல வீட்டிலிருந்து அரை பர்லாங்கு தூரம் நடந்து பஸ் ஏறி அலுவலகம் சென்று வந்தார். ரமேசு அம்மாவுடன் புலம்புவான், அப்பா ஏம்மா இப்படி இருக்கறாரு அவரும் கஷ்டப்பட்டு நம்பளையும் கஷ்டப்படுத்தறாரு.ராகவனின் மனைவி ஒன்றும் பேசமாட்டாள், விடுறா அவரா கூப்பிடும்போது நீ போனா போதும்.

ராகவனும் அவர் மனைவியும் இந்த காலனியில் வீடு கட்டி குடி வருவதற்கு முன்பு ஏழெட்டு வீடுகளில் வாடகைக்கு குடியிருந்தனர், வீட்டுக்காரர்களின் ஆதிக்க மனப்பான்மை இவர்களால் தாளமுடியாமல் நகைகள் அனைத்தையும் விற்று ஒரு மனையை இந்த காலனியில் வாங்கி போட்டனர், அப்பொழுதெல்லாம் இந்த காலனி ஒரே பொட்டல் காடாக இருந்தது.அதன் பின் இவர் வேலை செய்யும் அலுவலகம் மூலமாக வீட்டு கடன் வாங்கி ஒரு வழியாக வீட்டைக்கட்டி முடித்தனர்.

அப்பொழுது கல்பனா சிறுமியாகவும்,ரமேசு கைக்குழந்தையாகவும் இருந்தனர். இவரோடு நான்கைந்து பேர் தொடர்ந்து அங்கு வீடு கட்ட ஒருவருக்கொருவர் அணுசரனையாக இருந்தனர், அப்பொழுதெல்லாம் வீடு கட்ட கடன் கிடைப்பது என்பது குதிரைக்கு கொம்பு முளைப்பது போல, பணத்துக்கு இவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், வீடு கட்டும் இடத்தில் ஒருவருக்கொருவர் அனுசரணயாக இருந்ததால் வருத்தம் தெரியவில்லை. வீடு கட்டி முடித்தவுடனேயே பாலைக்காய்ச்சி குடி வந்து விட்டனர். அப்பொழுதெல்லாம் தண்ணீர் கஷ்டமும் கூட, இருபது வீடுகள் மட்டுமே அப்பொழுது கட்டி முடித்து குடி வந்திருந்தனர், அவர்கள் கூடி பேசி ஒரு போர்க்குழாய் அமைத்து ஓரளவு தண்ணீர் பிரச்னையை தீர்த்துக்கொண்டனர்.

பின் காலனியில் வீடுகள் பெருக பெருக வசதிகளும் பெருகி அன்று இது பொட்டல் வெளியாக இருந்தது என்பதை இவர்களாலே இப்பொழுது நம்ப முடியவில்லை. வீடு கட்டி குடி வரும்பொழுது இவர்களுக்கு இருந்த கடன் கழுத்தளவு இருந்தது, ஆனால் ராகவனின் மனைவியின் சாமார்த்தியத்தால் கொஞ்சம் கொஞ்சமாக கடன் அடைக்கப்பட்டு நகை நட்டுக்கள் செய்து தன் மகளை நல்ல இடத்தில் திருமணமும் செய்து கொடுத்துவிட்டனர்.வீடு கட்டி பத்து வருடங்கள் வரை இவர் தினமும் சைக்கிளிலேயே அலுவலகம் சென்று வருவார், அதன் பின்
சைக்கிள் மிதிக்க உடல் ஒத்துழைக்காததால் பஸ்ஸை நாட ஆரம்பித்து எட்டு வருடங்கள் ஓடிவிட்டன.

ஒரு நாள் ரமேசின் வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை, அப்பாவுடனே வண்டியை தள்ளிக்கொண்டு வந்து வண்டி பழுது பார்க்கும் கடையில் விட்டு விட்டு அவ்ருடனே பஸ்ஸில் செல்வதற்கு அப்பாவுடனே கிளம்பினான், இருவரும் வெளியே நடந்து வர எதிரில் வந்த ஆட்டோ ஓட்டுனர் வணக்கம் ஐயரே என்று வணக்கம் சொல்ல இவரும் பதில் வணக்கம் தந்தார், அதன் பின் இவர் நடக்க வழியங்கும் விசாரிப்புக்கள், உங்க பையனா? என்ன பண்றார்? என்று, வழியெங்கும் கடைகள், ஏன் தள்ளுவண்டி வைத்திருப்போர், அனவைரும் இவருடன் ஒரு நிமிடம் நின்று பேசி விட்டி சென்றனர், அவசரமாக செல்வோர் ஒரு புன்னகையுடன் கையசைத்து விட்டு சென்றனர். ரமேசுக்கு வியப்பு, அப்பாவுக்கு இத்தனை நண்பர்களா ! அவரும் முகமலர்ச்சியுடன் எல்லோரிடமும் கல கலப்பாக பேசிக்கொண்டு வந்தார். பஸ் ஏறியும் இவரின் விசாரிப்புகள் குறையவில்லை, இவரைப்போல தினமும் பஸ்ஸில் வருபவர்களுடன் ஒரே
பேச்சுத்தான். இவன் தந்தையிடம் சொல்லி கல்லூரி செல்ல பாதியில் இறங்கிவிட்டான்.

மாலையில் ராகவன் வீடு வந்து சேர்ந்த பொழுது ரமேசு சீக்கிரமே வீடு வந்திருந்தான். ராகவன் தன் வழக்கமான சிரம பரிகாரங்கள் முடித்து உட்கார்ந்திருந்தபொழுது ரமேசு அப்பாவின் அருகில் மெல்ல வந்து உனக்கு எத்தனை பிரண்ட்ஸ்ப்பா..எல்லார்கிட்டயும் பேசறயே..ஆச்சர்யப்பட்டான்.

அவன் முகத்தை பார்த்த ராகவன் உங்கம்மாவும் நானும் இந்த வீடு கட்ட ஆரம்பிக்கும்போது சுத்தி இருக்கறவங்க எங்களுக்கு எத்தனையோ உதவி செஞ்சாங்க, நீங்க இரண்டு பேரும் சின்னக்குழந்தைங்க, அப்ப இருந்து இப்ப வரைக்கும் எல்லோரும் என்னிடம் நல்லா பழகுறாங்க, நானும் அவ்ங்களோட நல்லா பழகுறேன், நாம என்ன காசு பணமா செலவு பண்றோம், ஒரு வணக்கம், ஒரு சிரிப்பு, அல்லது எப்படி இருக்க்றீங்க அப்படீன்னு விசாரிப்பு,இது தாண்டா நமக்கு நட்பை கொடுக்கும். நான் ஏன் உன வண்டியிலோ, இல்ல கல்பனா வண்டியிலோ வரலை தொ¢யுமா? இந்த மாதிரி எல்லா முகங்களையும் நாம தினமும் சந்திச்சா நமக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்னு நம்புறேன். வீட்டுல வண்டி ஏறி ஆபிஸ்ல இறங்கி, அங்கிருந்து திரும்ப வண்டி ஏறி வீடு வந்து சேர்ந்து, அதுக்கப்புறம் தூங்கி காலையிலே யார் முகமும் தெரியாத நாலு மணிக்கு வாக்கிங் போயி, எதுக்குடா இந்த முகமூடி வாழ்க்கை என்னால் நடக்க முடியற வரைக்கும் இந்த முகங்களோட பரிச்சயம் இருக்கணும், அவ்வளவுதான்..

நான் நடக்க முடியாம இருக்கும்போது உங்க உதவி கேப்பேன் அப்ப எனக்கு உதவி செய்யுங்க.! ரமேஷ் அப்பாவின் கைகளை பிடித்துக்கொண்டான். ராகவன் மனைவி அவரை முன்னரே புரிந்து கொண்டதால் புன்சிரிப்புடன் நின்றாள்.

நன்றி தாமோதரன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 11 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Mar 12, 2016 11:47 am

தாயாகத் தந்தையாக…
--------------
சேர்மனியில் பிரதானமான நகரங்களில் ஒன்று பிராங்போட் மெயின்ஸ். அங்கே உள்ள மண்டபம் ஒன்றில் தனத்தின் நண்பரின் திருமண விருந்துபசார நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அவன் தனது இரண்டு பிள்ளைகளுடன் அதற்கு வந்திருந்தான். திருமணத் தம்பதியினருடன் புகைப்படம் எடுப்பதற்காக மேடைக்கு குழந்தைகளையும் அழைத்துச் சென்று, நின்றபோது, மேடைக்கு முன்னிருந்த அனைவரினது கண்களும் அவனையும் அவன் பிள்ளைகளையும் உற்று நோக்கின.

புகைப்படம் எடுந்து முடிந்தபின் தனம் தனது பிள்ளைகளை அணைத்துக் கூட்டிச் சென்று, முன்பிருந்த இடத்தில் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்தான். அப்போது அங்கே வந்த ஒருவர் "இவர்கள் என்ன இரட்டைப் பிள்ளைகளா" என வினாவினார்.

தனம் "ஓமோம்..." என்றான்
"இரட்டைப் பிள்ளைகள் ஆணும் பெண்ணுமாப் பிறப்பது அதிஸ்டம்தான்… இவையளின்ரை அம்மா எங்க? வேலைக்கா? "என்றார்
" இல்லை… வரவில்லை…. "
தொடர்ந்து அங்கே இருந்தால் பலபேரின் கேள்விக்கு உள்ளாகலாம் என நினைத்த தனம், அங்கிருந்து வெளியேறினான்.

அப்போது அவனுக்கு கடந்த கால நிகழ்வுகள் அலைபோல் மனதில் ஆர்ப்பரித்தன.
அவன் பிராங்போட் நகருக்கு அண்மையில் உள்ள சிறியநகரம் ஒன்றின் அலுவலகத்தில் பிரதான உத்தியோகத்தராகப் பணியாற்றி வந்தான். மதியச் சாப்பாட்டுக்கு அருகில் உள்ள உணவகத்துக்குச் சென்று உணவருந்துவது வழக்கம். அங்கே தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் பணியாற்றி வருவதைக் கண்டபோது அவருடன் பேச வேண்டுமென்ற எண்ணம் தலைதூக்க அப்பெண்ணுக்கு அருகில் சென்று, அவளுடன் பேசித் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

இருவரும் சிறிது நேரம் பேசினார்கள். பின்னர் அடிக்கடி சந்தித்துப் பேசத் தொடங்கினார்கள்.
ஒருநாள் ஏதோ வேலை விடயமாக தனம் உணவருந்த வரவில்லை.
வருவார் வருவார் என எதிர்பார்த்திருந்தவளுக்கு அவன் வராதது ஏமாற்றமாக இருந்தது.
மறுநாள் தனம் வந்தபோது, அவள் அவனருகில் சென்று "நேற்று நீங்கள் வராதது எனக்கு மகிழ்ச்சியைத் தொலைத்த மாதிரி இருந்தது " என்றாள்.

" ஏன் அப்படி? "
" இல்லை… இங்க… எந்தத் தமிழ் ஆட்களும் வாறதில்லை. நான் இருக்கிற இடத்திலும் தமிழ் ஆட்கள் இல்லை… உங்களைக் காணும்போது ஒரு பேச்சுத் துணை வந்த சந்தோசம்… அதனால்தான். நீங்க வராதது… ஒரு மாதிரி இருந்துச்சு…"
" அதென்ன ஒருமாதிரி… என்றவன், எனக்கும் அப்படித் தான்… " எனக் கூறினான்.
"மெய்யாவா!"
" மெய்யாகத்தான்."

இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக்கொண்டார்கள்.
ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கும்போது " வீட்டைபோனால் உங்களுக்கு என்ன பொழுதுபோக்கு? " எனத் தனம் கேட்டான்.
" ரிவி, இன்ரெநெற், ஸ்கைப், ரெலிபோன்…என பொழுதுபோகுது."
" அப்படியானால் ஒருநாளைக்கு நாங்க எங்கேயாவது சந்தித்து ஆறுதலாகப் பேசலாமே…"
" நல்லது… ஆனால் லீவு எடுக்கிறதுதான்…"
"ஏன் உங்களுக்கு லீவு இல்லையா?"
" இருக்கு… கேட்கவேணும்… உங்களுக்கு எப்ப லீவு?"
" எனக்கு… சனி ஞாயிறு லீவுதான். சனிக்கிழமை கொஞ்சம் வீட்டு வேலை செய்வன். ஞாயிறு… அங்கை இங்கையென்று….. ஓய்வுதான்… சிறிது நேரம் அவன் யோசித்தபின் உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால்... ஞாயிற்றுக்கிழமை லீவு எடுங்கள்… வேறை எங்காவது ஒரு இடத்துக்குப் போயிருந்து சாப்பிட்டுச் சாப்பிட்டு ஆறுலலாகப் பேசலாம்…"

" முயற்சி செய்கிறன்… "
மறுநாள் இருவரும் சந்தித்தார்கள்.
தனம் லீவைப் பற்றிக் கேட்டான்.
அவள் "ஒருமாதிரி ஞாயிற்றுக்கிழமை எடுத்திருக்கிறன்."
" நல்லது. அப்ப… நீங்கள் எத்தனை மணிக்கு வருவீங்கள்?"
" அடிக்கடி கள் பாவிக்கிறீங்க… "
" நான் கள்ளுப் பாவிக்கிறதில்லை… "
" நான் அந்தக் கள்ளைச் சொல்லவில்லை… "நீங்கள் என்று விகுதியிலை வாறத்தைச் சொன்னனான்."
" அப்படியா..? அப்ப பேரைச் சொல்லுங்களன்.".
" சுதாஜினி…. "
"நல்ல பெயர்… சுதாஜினி. நீங்கள்…"

" ம்ம்… பிறகும் கள்ளா? " என்று அவள் கூறி, அவன் கூற வந்த வார்த்தையை தடுத்து விட்டாள்.
அவன் அதைக் கைவிட்டு, " கள்ளா என்று என்னையா…" என்றான்.
அவளுக்குச் சிரிப்பு வந்தது.
அவனும் சிரித்தான்.
இருவரும் சேர்ந்து சிரித்து மகிழ்ந்தார்கள்.

எங்கே எப்போது சந்திப்பதென்று இருவரும்; தீர்மானித்துக் கொண்டதுடன் தொலைபேசி எண்களையும் பரிமாறிக் கொண்டார்கள்.
மறுநாள் சுதாஜினி அவனுக்காகக் காத்திருந்தாள். அவன் குறிப்பிட்ட நேரத்துக்கு வரவில்லை.
அவள் மனம் படபடத்தது.
சிறிது நேரம் தாமதமாக அவன் வந்தான். வரும்போதே, "மன்னிக்கவும் சுதாஜினி. வழியில வாகன நெரிசல் ஏற்பட்டுப்போச்சு." என்றான்.
அவள் பொய்க் கோபம் காட்டித் தலையை ஆட்டினாள்.
காரின் முன் கதவைத் திறந்து " ஏறுங்க…" என்று கூறிய பின், " முதலில் வலது காலை வைச்சு ஏறுங்க… " என்றான்.
அவள் சிரித்தபடியே " எல்லாம் என்ரை கால்தான் " எனக் கூறிக்கொண்டு, காரின் முன்பக்கம் ஏறி, அவனுக்கருகில் அமர்ந்துகொண்டாள்.
இருவரும் பிரபலமான ஒரு உணவகத்துக்குச் சென்றார்கள். .
தனம் '"உங்களுக்கு விருப்பமான சாப்பாட்டுக்குச் சொல்லுங்க…" என்றான்.
"எனக்கு என்னெண்டாலும் பிரச்சினையில்லை… நீங்க சொல்லுங்க... "
" இல்லை நீங்க சொல்லுங்க… நீங்கதான் முதலில் சொல்ல வேண்டும்... பன்மையில பேசாதீங்க…"
"சரி…. எதைச் சொல்ல…"
பேச்சில் இருவருக்குமிடையே நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் ஒருமையிலே குறிப்பிட்டார்கள்.

இருவரும் ஒரே உணவுக்கு சொன்னார்கள்.
உணவு வந்தது. இருவரும் உரையாடியபடியே சாப்பிட்டார்கள்.
உணவிற்கான கட்டணத்தை அவனே கொடுத்தான். பின்னர் இருவரும் ஒரு ஆற்றங்கரைக்குச் சென்று அதன் அருகில் அமர்ந்திருந்து பேசினார்கள். இவ்வாறு இருவரும் தொடர்ந்து சந்திக்க, சந்திக்க இருவரிடையேயும் மிக நெருக்கம் ஏற்பட்டு அது அவர்கள் உள்ளங்களில் காதலாக மலர்ந்தது.
ஒருநாள் ஒரு குளக்கரையிலே அமர்ந்திருந்து, அங்குள்ள நீர்பறவைகளைப் பார்த்துக்கொண்டு இருந்தபோது, இரண்டு வெள்ளை அன்னங்கள் சோடியாக நீந்தி வந்துகொண்டிருந்தன. அதைப் பார்த்தவர்கள் புகைப்படம் எடுத்தனர். சுதாஜினி அன்னத்தைச் சுட்டிக்காட்டி ஏதோ பேசினாள்.
அவன் சிரித்தான். பின்னர் அவன் " நானும் திருமணம் செய்யலாம் என யோசிக்கிறன்…" என்றான்.
" யாரை …? " அவன் முகத்தைப் பார்த்தாள்.
அதற்கு அவன் பதில் கூறவில்லை.

மீண்டும் கேட்டாள். "யாரைத் திருமணம் செய்யப் போகிறீர்கள்?"
" நாளைக்குச் சந்திக்கும்போது கூறுகிறன்."
மாலை வேளை குளிர்காற்று மெல்ல வீசியது. இருவரும் எழுந்து சென்றார்கள்.
இரவு முழுதும் சுதாஜினிக்கு, யாரைத் திருமணம் செய்யப் போகிறார்? என்பதே கேள்வியாக இருந்தது.
மறுநாள் காலை தனத்தின் அலுவலகத்துக்கு தொலைபேசி எடுத்தாள்.
" என்ன நீங்க இன்றைக்கு வேலைக்குப் பொகவில்லையா? " என்றான்.
" கொஞ்சம் தலையிடியாக இருந்தது…. அதனால போகவில்லை…"
" அப்ப உங்களைப் பின்னேரம் சந்திக்கிறன்…"
" ஓ சந்திப்பம்…. நேற்றுச் சந்தித்த இடத்தில் …. "அங்கே அன்னம் பார்க்கலாம்… வாறன்…"
மறுநாள் இருவரும் சந்தித்தார்கள்.
அவள் மௌனமாக இருந்தாள்.

"என்ன நீங்கதான் சந்திக்கலாம் எனக் கூறினீங்க… இப்ப மௌனமாக இருக்கறீங்க…"
" நேற்று இரவு ஒரே தலையிடி… அதுதான் ஒரு மாதிரி இருக்கு… பேசிக்கொண்டிருந்திட்டு திடீரெனவும் புறப்பட்டிட்டம். "
" எட… அதுதானா… விசயம். நான் கலியாணம் செய்யப்போவதாகக் கூறினதை பற்றி யோசிச்சிற்றீங்களா?"
" இல்லை… இல்லை… யாரைச் செய்யப் போகிறீங்க என்பதை அறியலாம் என்றுதான்…"

" ஒரு பெண்பிள்ளையைத்தான்… அறிஞ்சா உதவி செய்வீங்களா?"
" அறிந்த ஒருவர். தெரிந்த ஒருவர். செய்வன்தானே. " அவள் பதிலில் சோகம் இழையோடி இருந்தது.
அவள் முகத்தை அவன் பார்த்தான். அவளும் அதைப் பார்த்தாள். " யாரென்று அறிய ஆசைப்படுகிறீங்க… நானும் இன்று கூறுவதாகத்தானே சொன்னனான். யாரையும் இல்லை. உங்களைத்தான்…"

"என்ன என்னையா?"|
"என் மனத்தில் தோன்றியதைக் கேட்டன்… பிழையென்றால் மன்னியுங்கள். "
அவள் மௌனமாக இருந்தாள்.
" உடனடியாகப் பதில் சொல்ல வேண்டுமென்று இல்லை. யோசித்துச் சொல்லுங்க… "
அவள் சிறிது நேரம் குனிந்தபடியே மௌனமாக இருந்தாள்.
குளத்தில் நீர் பறவைகள் சோடியாகவும் கூட்டமாகவும் நீந்திக்கொண்டிருந்தன. அதைப் பார்த்த தனம் " நீங்கள் காட்டிய அன்னம் சோடியாக வருகுது.. "என்றான்.
தலை நிமிர்ந்து அதனைப் பார்த்தாள். அவள் பார்த்ததையிட்டு அவன் சிரித்தான். அங்கே அன்னமில்லை.

அவள் அவனைப் பார்த்தாள்.
" என்ன கோபமா? நான் கேட்டதில் பிழையிருந்தால் மன்னியுங்கோ என்றும் சொல்லிப்போட்டன். யோசிச்சுச் சொல்லுங்க எண்டும் சொல்லிப்போட்டன். அப்படியிருந்தும் நீங்க பேசாமல் இருக்கிறீங்க… அது எனக்கு உள்ளார தேனையாக இருக்கு… போவம்" என்றான்.
"இல்லை இல்லை இருப்பம்…"
"ம்ம்ம் என்று மூஞ்சியை நீட்டிக்கொண்டா?"
" ஏன் நான் மூஞ்சியை நீட்டிக்கொண்டா இருக்கிறன். மூஞ்சி ஒரே மாதிரித்தான் இருக்கு.

பார்த்தான். " இப்ப அழகாத்தான் இருக்கு…"
"இதுக்கு முந்தி அழகு இல்லையா?"
"அப்படி நான் சொல்லவில்லையே…அன்பாககப் பழகிறீங்க.. அழகா இருக்கிறீங்க.. அறிவா இருக்கிறீங்க… அன்னியோன்னியமாகப் பேசிறீங்க… நல்ல நட்பாக இருக்கிறீங்க.. வேலை செய்யிறீங்க… அதனாலதான் உங்களை எனக்குப் பிடித்தது. திருமணம் செய்யலாமா எண்டு கேட்டன். கேட்டதற்கே இப்படி?"
"உண்மையாகத்தான் கேட்டனீங்களா?"|

" இதென்ன கதையுங்க….. உண்மையாகக் கேட்;காமல்… இப்பவும் கேட்கிறன். உண்மையாகத்தான் கேட்கிறன்."
அவள் மௌனமாக இருந்தாள்.
"என்ன மௌனம்? என்னோடை பேசிறீங்க, பழகிறீங்க, இப்ப மௌனமாக இருக்கறீங்க…"
இபபொழுதும் அவள் தலைகுனிந்து மௌமாக இருந்தாள்.
"மௌமாக இருக்கிறீங்க… மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி என்று நான் எடுக்கலாமா?"
தலையசைத்தாள். குனிந்தாள். அவன் தன் கரம் கொடுக்க அதைப் பற்றி அவள் எழுந்தாள.; அவன் முகம் பார்க்க வெட்கப்பட்டாள். சினிமாக் காட்சியில் வருவதுபோல் இருவர் மனமும் உடலும் வானத்தில் மகிழ்வடன் சிறகடித்துப் பறந்தன. .
இருவரும் கை கோர்த்தபடி ஒரு கோப்பிக் கடைக்குச் சென்று கோப்பி அருந்தியபின் வீட்டுக்குச் சென்றார்கள்.

சில மாதங்களின் பின் திருமணம் நடைபெற்றது. இருவரும் சுவிஸ், கோலண்ட் போன்ற இடங்களுக்குச் சென்று வந்தார்கள். வேலைக்குச் சென்றார்கள். தனம் தன் வேலை நேரம் முடிந்தபின்
சுதாஜினி வேலை செய்த இடத்தி;குச் சென்று அவளை அழைத்து வருவது வழக்கமாக இருந்தது.
புதிய வீடு எடுத்தார்கள். புதிய தளம்பாடங்கள் போட்டார்கள். நண்பர்களை அழைத்தார்கள். விருந்துபசாம் செய்தார்கள். திருமண முதலாண்டு நிறைவையும் மிகச் சிறப்பாகச் செய்தார்கள்.
சுதாஜினி வேலை செய்த இடத்தில் புதிய வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்ட போது, சுதாஜினியின் வேலை மாலை நேரமாக மாற்றப்பட்டது. இவ் வேலை நேர மாற்றம் தனத்துக்கு பிடிக்கவில்லை. அதனால் வேலையை விடும்படி கூறினான். அவள் அதற்கு சம்மதிக்கவில்லை.
வேலைநேர மாற்றத்தினால் இருவரும் ஒன்றாகச் சந்திக்கும் நேரம் மிகக் குறைவாக இருந்தது. தனம் வீட்டுக்கு வரும் நேரங்களில் அவள் வீட்டில் இல்லாதது தனத்துக்கு உள்ளாறக் கவலையை ஏற்படுத்தியது.

அவன் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு தொலைபேசி எடுத்தாலும் மனைவியுடன் பேச முடிவதில்லை. அந் நேரங்களில் அவள் தொலைபேசி, ஸ்கைப்,, முகநூல் ஆகியவற்றில் ஏதாவதொன்றில் பொழுது போக்கிக் கொண்டிருந்தாள். இதனால் பல புதிய நண்பர்களின் தொடர்பும் அவளுக்குக் கிடைத்தது. ஆனால் கணவனின் தொடர்பு குறைந்தது.
" நான் ரெலிபோன் எடுக்கிற நேரங்களில் யாரோடை கதைக்கிறாய்… ஏதாவது அவசரமென்றாலும் தொடர்பு கொள்ள முடியாம இருக்கு…" என்று அவன் ஒருநாள் கோபமாகப் பேசினான்.
அதைக் கேட்டு அவள், அவன்மேல் சீறி விழுந்தாள். இச் செயல் தனத்துக்க மேலும் கவலையை அதிகரித்துக்கொண்டிருந்தது.
இந்நிலையில் சுதாஜினி தாய் தகப்பனைப் பார்க்க இந்தியா செல்ல வேண்டுமென்று தனத்திடம் கூறினாள்.

அவன் யோசித்தான். அதன் பின் போய் வர ஒழுங்க செய்வதாகக் கூறி அதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டான். விமான நிலையத்திற்கு சென்று அவளை வழியனுப்பி வைத்தான்.
மூன்று கிழமைகளின்பின் அவள் திரும்பி வந்தாள். தனம் விமான நிலையத்திற்கு சென்று அவளை அழைத்து வந்தான்.

வீட:டுக்கு வந்தவள் யாருக்கோ தொலைபேசி எடுத்து பேசினாள்.
"வீட:டுக்கு வந்து ஆறுதலாக இருக்கக்கூட இல்லை. அதுக்குள்ள ரெலிபோன்… யாரோடை பேசுகிறாய்…?"
" நான் யார்… யாரோடை பேசுகிறன் என்று எல்லாம் உங்களுக்குச் சொல்ல வேண்டும். " எனக் கூறி, சுதாஜினி சத்தம் போட்டாள்.
தனம் மௌனமாக இருந்தான்.
இதிலிருந்து இருவருக்கும் முறுகல் நிலை தோன்றி, படிப்படியாக அதிகரித்தது. அதனால் சில வேளைகளில் தனம் தன் நண்பர்கள் வீடடில் தங்கும் நிலை ஏற்பட, சுதாஜினி வீட்டில் தனிமையில் இருக்கும் நிலை தோன்றியது,
பாவம் என்ன செய்கிறாளோ.. என எண்ணித் தனம் வீட்டுக்கு செல்லும் வேளைகளிலும் அவள் தொலைபேசியிலோ, ஸ்கைப்பிலோ மற்றவர்களுடன் சிரித்துப் பேசிக்கொண்டுதான் இருப்பாள். இச்செயல் தனத்துக்கு மேலும் சினத்தைத் தூண்டுவதாகவே இருந்ததுடன், இருவருக்குமிடையே முரண்பாடுகளை மேலும் படிப்படியாக வளர்த்த வண்ணமாகவே இருந்தது.
எத்தனையோ பெண்களை இச் செய்தித் தொடர்புகள்தான் கெடுத்துள்ளன. என யோசித்த தனம் மனைவியைக் கண்டித்தான்.
ஆனால் அவள் கேட்கவில்லை. கோபம் கொண்டாள். "எங்களை அடக்கியாள நினைக்காதையுங்கோ…" என்று ஆவேசமாகக் கத்தி, " இப்படியானல் இருவரும் சேர்ந்த வாழ்வது கஸ்டம் " என்றம் கூறினாள்.
தனம் மௌனமாக இருந்தான்.

மீண்டும் அவள் " நாளைக்கே இதற்கு ஒரு முடிவெடுகிறன் " எனக் கூறினாள். அதற்கமைய சட்டத்தரணி ஒருவரை நாடினாள். அவளின் முறைப்பாடு கோடு வரை சென்றது.
நீதிபதி விவாகரத்துக்கு ஒருவருடம் அவகாசம் கொடுத்தார்.
அவள் வேறு இடத்துக்கு சென்று தங்கினாள்.

இக்காலத்தில் சுதாஜினியின் உடலில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. வைத்தியரை நாடினாள். உடல் பரிசோதனையின் போது அவள் கற்பமடைந்துள்ளதாகத் தெரியவந்தது. அதனைக் கலைக்க வைத்தியரிடம் ஆலோசனை கேட்டபோது அவர் மறுத்துவிட்டார்.
ஒன்றும் செய்யமுடியாத நிலை. அடிக்கடி வைத்தியப் பராமரிப்புக்கு செல்ல வேண்டி வந்தது.
ஒருமுறை ஆஸ்பத்திரியில் தங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்போது தனத்துக்க தெரிந்த ஒருவர் அங்கு சென்றதால் அச் செய்தி தனத்துக்க வந்தது.
தனம் ஆஸ்பத்திரிக்குச் சென்று அவளை நலம் விசாரித்தான்.

அவள் நடந்ததைக் கூறி, " குழந்தை பிறந்தால் இரண்டு குழந்தைகளையும் நான் வளர்க்க முடியாது. ஆண் பிள்ளையை நான் வளர்க்கிறன்… பெண் பிள்ளையை உனக்குத் தாறன்… " என்றாள். .
அவன் " எனக்குப் பிரச்சினை இல்லை… இரண்டையும் என்னட்டைத் தந்தாலும் நான் வளர்க்கிறன் " | என்றான்.

உரிய மாதத்தில் குழந்தை பிறந்தது. பெண் பிள்ளையை அவனிடம் ஒப்படைத்தாள். ஆண்பிளையை தான் வளர்த்தாள்.
இரண்டு குழந்தைகளும் வெவ்வேறு இடங்களில் வளர்ந்தன.
மூன்று வருடங்கள் சென்றன. சுதாஜினியின் மனநிலையில் மீண்டும் ஒரு மாற்றம் ஏற்பட்டது. முகநூல் மூலம் தொடர்பு கொண்ட ஒருவருடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. அது காதலாகக் கனிந்தது. திருமணம் செய்வதானால் குழந்தையை ஏற்க முடியாது என அவன் திடட்வட்டாகக் கூறிவிட்டான். அதனால் தனத்தின் தொலைபேசி இலக்கத்தை தேடிப் பெற்று, அவனுக்கு தொலைபேசி எடுத்தாள்.
" சுதாஜினி பேசுகிறன் "

" என்ன திடீரென்று… சுகமாக இருக்கிறாயா? மகன் எப்படி இருக்கிறார்?"
"அவன் விடயமாகத்தான் பேச வேண்டியுள்ளது. ".
" சொல்லுங்க பிரச்சினை இல்லை…"
"அவனையும் நீங்க வளருங்கோ… அதற்கான உரிமையைச் சட்டப்படி எடுத்துத் தாறன்."
" ஏன்? வளர்க்கிற ஆசை விட்டுப்போச்சா? "
" நான் வேறொருவரைத் திருமணம் செய்யப் போகிறன். அவருக்கு குழந்தையுடன் திருமைணம் செய்ய விருப்பம் இல்லை.. அதுதான்…"

" எனக்குப் பிரச்சினையில்லை…"
இரண்டு குழந்தைகளையும் தாய் தந்தையாக வளர்த்தான்.
"அப்பா… வீடு வந்திற்று நிப்பாட்டுங்கோ.." என்று மகள் உரத்துக் கூற, அவன் சிந்தனையும் தடைப்பட்டது. காரும் நின்றது.
யாவும் கற்பனை

நன்றி மணியம்
யாழ் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 11 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Mar 12, 2016 11:49 am

கசங்கிய கடிதம்
------------------
ஆடம்பரமான ஒரு சிறிய அழகிய மண்டபம். அங்கே உள்ள மேசை ஒன்றில் சிறிய படம் ஒன்று மாலை போட்டபடி இருக்க, அதற்கு முன் ஒரு விளக்கு, தான் எரிந்து, படத்துக்கு வெளிச்சம் கொடுத்தபடி இருந்தது.

படம் இருந்த மேடைக்கு, ஒருவர் எதையோ பறிகொடுத்தவர்போலவும், தொலைந்த எதையோ நிலத்தில் தேடுபவர் போலவும் தலைகுனிந்தபடி மேடைக்கு சென்றார். அங்கே வைக்கப் பட்டிருந்த ஒலிவாங்கியைக் கையால் திருப்பிச் சரிபார்த்து. பேசத் தொடங்கினார்.

உறவுகளே! எமது தாயக விடுதலையில் தன்னை இணைத்து, போராடி, இரத்தம் சிந்தி, விழுப்புண் அடைந்து, எமக்காகவே தமது வாழ்வை அர்ப்பணித்து, அங்கவீனமடைந்து உயிர் நீத்த உத்தமன் அவர்களின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் ஒன்றுகூடி இருக்கிறோம். குறுகிய நாளில் தமது எந்தக் கஸ்டத்தையும் பாராது. ஓடீ ஓடி வேலைசெய்து, இந் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்த என் நண்பர்களுக்கு நான் தலைவணங்குகிறேன். அதுபோல் நாம் எமது விடுதலைப் போராளிகளையும் மறக்கக்கூடாது. எமது விடுதலைப் போராட்டம் தோல்வியடைந்தாலும் அதில் ஈடுபட்ட அனைத்துப் போராளிகளையும் அரவணைத்து. அவர்களுக்கு கைகொடுத்து அவர்கள் வாழ்வை உயர்த்தவேண்டியது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். இதே வேளை மரணமான போராளிகளை மனத்தில் நிறுத்தி எந்நாளும் அஞ்சலி செலுத்த வேண்டும். அதேபோல் காயப்பட்ட போராளிகளையும்; அவர்களின் குடும்பங்களையும் பாதுகாத்து. அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழி செய்வதுடன் நம் மாவீரர்களின் பெற்றோர்களையும் விழிகளைப் பாதுகாக்கும் இமைகளைப்போல் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இப்படியான விழாக்களை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் தொடர்ந்து ஆதரவு நல்க வேண்டும்.

மேடைக்கருகில் நின்ற ஒருவர் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். ''இந்த ஆள் நேரகாலம் தெரியாமல் அறுக்குது… நான் வேலைக்கு போக வேணும். முதலில் ஆளை மேடையைவிட்டு இறக்கு… '' என்று பக்கத்தில் நின்றவரிடம் சத்தம் போட்டார்.

அதை உணர்ந்தவர் போல் பேசியவர் தனது பேச்சை நிறுத்தி மேடையை விட்டு இறங்க வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. இடை இடையே கொத்து ரொட்டித் தாளம்...... காற்றோடு அதன் வாசம்..... பார்வையாளர்கள் காதும் மூக்கும் அதன்பால் இழுபட மேடையின் முன்பு இருந்த மக்கள் ஒவ்வொருவராக மெல்ல மெல்ல எழுந்து செல்லத் தொடங்கி விட்டார்கள்.

நடந்தவர்களின் காலில் அகப்பட்டு நசிந்து, கசங்கிப் போன நிலையில் ஒரு கடிதம், மண்டப நடுவில் தேடுவாரற்றுக் கிடந்தது. குனிந்து எடுத்தேன்.

நான் என்ன தவறு செய்தேன்.? என்னை ஏன் மற்வர்கள் வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். என் கால்கள் ஏன் ஊனமுற்றன. என் கைகள் ஏன் முடமாகின. நான் எம் தேசம் காக்க…. எம் மக்களின் விடுதலைக்காகப் போராடியது தவறா?

இளவதிலே என் பெற்றோரைப் பிரிந்தேன். என் உறவுகளைப் பிரிந்தேன். அம்மாவின் பாசமோ அப்பாவின் பாசமோ அறியாமல் காட்டிலே வளர்ந்தேன். என் பிரிவால் என் குடும்பம் கலங்கியது. அவர்களின் துக்கத்தையம் துயரத்தையும் அறிந்தும் நான் அவர்களைப் பார்க்கச் செல்லாமல் என் தேசத்தை நேசித்து, அதற்கான பணியில் தொடர்ந்து ஈடுபட்டேன். துப்பாக்கியும் குண்டுகளும் ரவைகளும் என் உறவாகின. என்னைப்போல் இணைந்தவர்கள் நட்பானார்கள். நாம் வெற்றி பெற்றபோதெல்லாம் எல்லோரும் பாராட்டினாhர்கள். போராடினோம். ஆவேசத்துடன் போராடினோம்.

போராட்டத்தில் என் அண்ணனை இழந்தேன். அக்காவை இழந்தேன். தம்பியை இழந்தேன். தங்கையை இழந்தேன். இதனால் பாதிப்புற்ற என் பெற்றோரையும் இழந்தேன். நட்புகளும் நடந்து வந்த பாதையில் நடு ஆற்றில் வீழ்ந்தார்கள். போராட்டமும் முடிந்தது.

கைதியானேன். சிறைக்கூடங்கள் என்போன்றோரை வரவேற்றன. கொடுமைகளும் சித்திரவதைகளும் நாளாந்தம் எமக்காகப் பரிசாகக் கிடைத்தன. போராட்ட வடுவைப் பார்த்தவன் வகைவகையாச் சித்திரவதை செய்தான். அதனால் உடல் மேலும் ஊனமுற்றது. நோய்வாய்ப்பட்டேன். சிறைக்கு நான் பாரமானேன். பாராமானதை ஏன் வைத்திருப்பான் என எண்ணியவன் என்னைச் சிறையிலிருந்து தூக்கி வெளியிலே போட்டான்.

தத்தித் தத்தி நடந்து வந்தேன். என்னைப் பார்த்தவர் கண்களில் பரிகாசம்தான்; தெரிந்தது. போராட்டத்தைப் பாராட்டியவர்களோ. எஞ்சிய உறவுகளோ என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அருவருப்பான ஒரு பிராணியைப் பார்ப்பதுபோல் முகத்தைச் சுழித்தபடி என்னைப் பார்த்தார்கள். என் ஊரை நாடி நடந்தேன். என் வீடு இருந்த இடம் தெரியவில்லை. விபரம் அறியக் கூட அங்கு ஆட்களும் இல்லை. உண்ண உணவும் இல்லை. ஒதுங்க இடமும்; இல்லை. மாற்றிக் கட்டத் துணியும் இல்லை. மனத்தில் அமைதியும் இல்லை. யாரும் அற்ற நிலையில் அனாதையாக இப்படியான நிலையில்… வாழ்வதா…? சாவதா…? யோசித்தேன். வாழ்வதற்கு ஏதாவது ஒரு ஆதரவு வேண்டும். முயற்சித்தேன்…. முயற்சித்தேன்…. முடியவில்லை. எவருமே ஆதரவு கொடுக்கவில்லை. முன்வரவும் இல்லை. இதற்கு முன்னர் உங்களுக்கும் எழுதிய கடிதத்திற்கு இன்றுவரை பதிலும் இல்லை. என்னால் என்ன செய்ய முடியும்? எனக்கு ஒரு கயிறுதான் ஆதரவாகக் கிடைத்தது….

''என்ன நடுவில நின்று கடிதம் வாசிக்கிறீங்க… அங்கால கெதியாப் போங்கோ…'' என ஒருவர் என்னை அதட்ட.... வேறொருவர் ''அண்ணை... உத்தமனின் படம் ஒன்று வேண்டுங்க.... '' என்றார். விழாத் தொடர்ந்தது. நான் இடத்தைவிட்டு நகர்ந்தேன்

நன்றி Sembagan
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 11 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Mar 12, 2016 11:51 am

பைத்தியங்கள்
---------

இந்த உலகத்தில் பைத்தியங்கள் அதிகரித்து கொண்டு செல்கின்றது காரணம் நாம் ஒவ்வொரு பொருளின் மீதும் பைத்தியமாக இருக்கிறோம் உதாரணம் பணம் , பொருள் , நகைநட்டுக்கள் அடுத்தவன் சொத்துக்கள் ( மண் , பொண் ) இன்னும் பல இதை உங்கள் கண்ணாடியை பார்த்து கேட்டால் தெரியும் .நாம் பைத்தியமா இல்லையா என்று. உன்மையில் பைத்தியம் இல்லாதவரை நீங்கள் பைத்தியாமா என்று சொன்னால் அவர் சிரிப்பார் அல்லது முறைப்பார் .அதுவே பைத்தியமே இல்லாத ஒருவரை பைத்தியகார அதாவது மனநல நிலையங்கள் ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட இடங்களில் கண்டு அவரை பைத்தியம் என்று சொன்னால் அவர் மனம் எவ்வளவு பாடு படும் என்பது எத்தனை பேருக்கு தெரியும் அது போல எந்தன் வாழ்க்கையும் ஓடிக்கொண்டிருக்கிறது .

இந்த உலகத்தில் எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவர் ஆவதும் தீயவர் அவதும் அன்னை வளர்ப்பினிலே இது பலவருடமாக சொல்லிக்கொண்டிருக்கும் குழந்தை வளர்ப்பு முறை ஆனால் ஒரு குழந்தை பிறந்து சிறிது காலம் கழிந்த பின் அந்த குழந்தைக்கு நடை பழக்கி ,கதை பழக்கி உன்மை எது பொய் எது நன்மை எது தீமை எது என்று சொல்லி கொடுக்கிறோம் அதுவே சில ஆண்டுகள் போன பின்பு அந்த குழந்தைக்கு நீ அங்கே போகதே , அதை செய்யாதே ,அவர்களுடன் சேராதே, என்று ஒரு மனிதனின் குணங்களில் இல்லாத ஒரு மனித பழக்கத்தை அந்த குழந்தைக்கு திணிக்கிறோம்.

இப்படித்தான் எனது வாழ்க்கையும் ஆரம்பிக்கின்றது எனது பெயர் வசந்த் எனது அம்மா ஒரு பொலிஸ் காண்ஸ்ரபிள் அப்பா ஒரு தொழிநுட்ப உத்தியோகத்தர் இருவரும் காதலித்து கல்யாணம் கட்டிக்கொண்டவர்கள் ஆனால் எந்த ஒரு விசயத்திலும் எதையும் விட்டுக்கொடுத்து வாழ தெரியாதவர்கள் எனக்கு நினைவு தெரிந்த காலம் தொடக்கம் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை சச்சரவுகள்தான் வாய் பேச்சு அடிதடியில் முடியும் இடையில் நான் சிக்கி தவிக்க எனக்கும் அடி விழும் இதற்கு என்ன காரணம் என்னவென்று அறியாமல் அழுது கொண்டிருப்பேன் அந்த நாளில் நான்.

இப்படி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்ல அப்பா ஒரு நாள் இரவில் யாருக்கும் தெரியாமல் அப்பா தூங்கில் இட்டு அகாலமரணம் அடைய இன்னும் தனிமைக்கு என் வாழ்க்கை நகரத்தொடங்கியது. என்னை பார்த்த்துக்கொள்வது என் அப்பாதான் என்னை குளிப்பாட்டி வெளிகிடுத்தி பாடசாலலைக்கு கூட்டி செல்வது எல்லாம் அப்பாதான் அம்மா என்னை கவனிப்பதில்லை காரணம் அவக்கு நேரம் இல்லை என்று சொல்லுவா லீவு எடுப்பதில்லை அப்பாவுக்கும் சந்தேகம் வந்துதான் வாய்பேச்ச்சு முற்றி தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்பது போக போக எனக்கு புரிய ஆரம்பித்தது அம்மாவின் போக்கு எனக்கு எனக்கும் பிடிக்கவில்லை வீட்டுக்கு நேரத்துக்கு வருவதுமில்லை என்னை கவனிப்பதுமில்லை என்னை பார்த்துகொள்ள வேலைக்காரி ஒருவரை வீட்டில் வைத்தார் ஒரு குழந்தையை சொந்த தாய் பார்பதை போல வேறு யாராலையும் பார்த்த்துகொள்ள முடியுமா ? அந்த வேலைக்காரியோ வீட்டுக்கு நேரத்துக்கு வரவேண்டும் வெளியில் எங்கையும் ஊர் சுற்ற கூடாது யாருடனும் சேரக்கூடாது என்று அதட்டும் கட்டளை போடுவாள் நான் நடந்து கொள்ளும் வீதம் பற்றி என் அம்மாவின் தம்பி மாமாவுக்கு போட்டு கொடுப்பது இவள்தான் என் மாமாவுக்கு எங்கள் அம்மாவின் சொத்தை அபகரிக்க கனநாளா ஆசை அந்த மாமா பயலுக்கு. என்னை பயமுறுத்திக்கொண்டே இருப்பான் . நீ ஏதாவது தப்பு தண்டா செய்தால் உன்னை கொன்று விடுவேன் என்பான்.

நான் சந்தோசமாக இருக்கும் நாட்கள் அந்த பாடசாலை நடக்கு ஐந்து நாட்கள்தான் நண்பர்களுடன் விளையாடுவது வெளியில் சுற்றுவது எனது நண்பர்கள் ராஜன், அகிலன் இந்த இருவருமே எனது உயிர் நண்பர்கள் அன்றைய நாள் பாடசாலை விட்டு வீட்டுக்கு வந்தேன் அம்மாவும் மாமாவும் பேசிக்கொண்டிருந்தார்கள் அவர்கள் பேசிய சாரம்சம் மட்டுமே என் காதில் விழுந்தது என்னை விடுதியில் சேர்க்க வேண்டும் என்பது மாமாவின் பேராசை அதற்கு அம்மா சம்மதம் தெரிவிக்க வில்லை ஒரு சிறிய சந்தோசம் என்றாலும் என் அம்மவை பற்றி நினைப்பேன் என்னை அவள் அவரசரத்திற்கு பெற்றாளோ அல்லது வெறும் உணர்ச்சிக்கு மட்டும் பெற்றாளோ அல்லது சமுதாயம் தன்னை குற்றம் சாட்ட கூடாது என்பற்கு பெற்றாளோ என்ற கேள்வி மட்டும் என் மனதில் மரதன் ஓட்டம் போல ஓடி கொண்டிருக்கும் . இரவும் தனிமையும் என் வயதும் என்னை கொஞ்சம் கொஞ்சமாக என்னை வேட்டையாட தொடங்க நான் அதைச் செய்தால் என்ன இதை செய்தால் என்ன என்று என்மனம் ஆட்டம் காண ஆரம்பித்தது. வேலைக்காரிக்கு வேட்டு வைக்க தொடங்கினேன் வீட்டில் இருக்கும் கள்ள வழி அதுதான் யன்னல் வழியாக வெளியில் செல்ல ஆரம்பிக்க தொடங்கினேன்.

அன்றைய நாளில் இருந்து யாருக்கும் தெரியாமல் எனது நண்பர்களுடன் பீடி குடிக்க ஆரம்பித்தேன் ,அதில் என்ன ஒரு சுகம் கூட இல்லையே என்று ,சிகரட் ,கோல்ட்லீவ் என்பன குடிக்க ஆரம்பித்தேன் காசுக்கு வீட்டில் திருட ஆரம்பித்தேன் அதன் சுவையையும் அறிந்து விட்டேனே பிறகு என்ன சாரயம் ஏதாவது குடிக்கலாம் என்று நினைத்து ஆளாளுக்கு ஐம்பது ரூபாய் போட்டு கள் குடிக்க அடுத்த கிரமத்துக்கு சென்று கள் வாங்கி குடித்தோம் புது பழக்கம் என்ற படியால் ஆளாளுக்கு குடித்த கப்புக்கு மேலாக சத்தி எடுத்து கப்பை நிறைத்து கொண்டு மரத்தை பிடித்து கொண்டிருந்தோம் தலை சுற்றால் என்னடா இப்படி ஆகிவிட்டதே எப்படி ஊருக்கு செல்வது என்ற பயத்தினால் யாருக்கும் தெரியாமல் மாலை வரை அந்த ஊரில் உள்ள புதரில் ஒளிந்திருந்தோம் இப்படி யாருக்கும் தெரியாமல் இந்த பழக்கம் தொடர ,பியரிலிருந்து எல்லாவற்றையும் ருசிக்க ஆரம்பித்து விட்டோம் மது பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டோம் இப்படி சிலகாலமாக எங்கள் வாழ்க்கை ஓடியது வீட்டில் அம்மாவுக்கு தெரியாமல் அப்பாவின் சைக்கிளில் இருந்து ஒவ்வொரு பொருளாக மூவரும் அவரவர் வீட்டில் திருட ஆரம்பித்தோம். படிப்பு என்பது மக்கி போக எப்படி கள்ள வேலை செய்து பிடிபடாமல் வாழ்வது என்று மூவரும் திட்டம் வகுத்து வகுத்து எனக்களது வேலையை காட்ட ஆரம்பித்தோம்.பாடசாலைக்கு போவது போல போய் வெளியில் சுற்றுவதும் விளையாடுவதும் இப்படி போக மச்சான் நாம அந்த தூள் இருக்குதானே அதை ஒருக்கா போட்டு பார்க்க வேணும் மச்சான் என்று அது தான் கடைசி ஆசை என்றான் திட்டம் ஒன்று போட்டேன் உங்கட சொந்த காரர்கள் யாராவது கொழும்பில் இருக்கிறார்களா என கேட்க ஒம் என்றான் அகிலன் அப்ப சரி நீ உங்கட வீட்ட எப்படியாவது ஒரு காரணம் சொல்லி அங்க போக ஏற்பாடு செய் என்றேன் அவனும் ஏற்பாடு செய்ய ராஜனோ காசுக்கு என்னடா செய்யுற என்ற கேள்விக்கு நான் எடுக்கிறன் என்று சொல்லி வீட்ட போய் அம்மாவின் காப்பை திருடி விற்று கொழும்புக்கு மூவரும் புறப்பட்டோம் .

அன்று இரவு சென்று மருதானையில் ஒரு விடுதியில் றூம் போட்டோம் அங்கு மூட்டை இல்லாத றூமும் இல்லை ஓட்டை இல்லாத றூமும் இல்லை தானே அங்கு தங்கின ஆட்சளூக்கு தெரியும். றூமில் தங்கியிருந்து மூவரும் யோசிக்க அதுதான் யாரிடம் போவது எங்கே வாங்குவது பற்றி யோசிச்சு கொண்டிருக்கும் போது பக்கத்து றூமில் இருந்து அணுகிற சத்தம் கேட்க எங்கள் சிந்தனை தூளாக இருந்தது துவண்டு எழுந்து பெண்ணாக மாறியது மச்சான் இதையும் ஒருக்கா செய்து பார்ப்பமே என சொல்ல எங்கள் றூமில் இருந்து அடுத்த றூமுக்கான ஓட்டை பெருப்பிக்கலானோம் இருட்டு என்பதால் ஒன்றுமே தெரியவில்லை சத்தம் மட்டுமே கேட்டது அன்றிரவு தூக்கம் இல்லாமல் காத்திருத்தோம் அவளை அழைப்பதற்க்கு அடுத்த நாள் காலை அந்த றூம் வாசல் திறபடாத என அலிபாபாவின் மந்திரங்களை மறந்தவர்கள் போல அந்த றூம் கதவினை பார்த்துக்கொண்டிருந்தோம் . கதவு திறபட உள்ளே இருந்து ஒரு நீக்றோ போல கருபான கட்டையன் ஒருத்தன் வந்தான் என்ன தம்பி நிற்கிற என்றான் இல்லை அண்ணை இரவு முழுக்க சத்தம் கேட்டதே அண்ணே அது தான் பார்க்கலாம் என்று வந்த என்று சொல்ல ஓ அதுவா தம்பி எனக்கு இரவு முழுவதும் நடுக்கலும் காய்ச்சலும் என்றான் எப்படியிருக்கும் பரதேசி நாயே அதுக்காடா ஆளை எழுப்புற அளவுக்கு அணுகுவ என்று மனதுக்குள் திட்டி தீர்த்தாலும் ஆசை அடங்கவில்லை அடுத்த நாள் காலை ஆள் பிடிக்க மருதானையை சுற்ற ஆரம்பித்தோம் ஆளாளுக்கு ஒரு திசையில் மூவரும் சென்று தேட யாரும் கிடைக்க வில்லை நான் அடிக்கடி சுற்றி திரிவதை பார்த்த சி .ஐ. டி காரன் என்னை பிடித்து விசாரிக்க கொண்டு சென்றான் அவர்களின் காரியாலத்திற்கு.

அங்கு ஏற்கனவே என் நண்பர்கள் அங்க கோழியை குந்த வைச்சது போல இருக்க கண்கள் பேசின ஆளாளுக்கு சாத்திரிக்கானுகள் என்பது ஆட்களை பார்க்கவும் தெரிந்துகொண்டேன் விசாரிக்க தொடங்க நாங்கள் சொந்த காரங்கள் வீட்டுக்கு வந்தோம் ஆனால் வழி தெரியவில்லை அதனாலதான் சுற்றி கொண்டிருந்தோம் என்று சொல்லியும் மருதானையில தங்கியிருந்தோம் என்று சொல்ல விடுதிக்கு வந்து விசாரித்து விட்டு விட்டு சரி நீங்க ஊருக்கு போங்க என்று சொல்லி எச்சரித்து விட்டான் . தப்பினோம் சாமி என்று ஊருக்கு வந்து சேர வீட்டில் மாமாவும் அம்மாவும் எனக்காக காத்திருந்தனர் எங்கே போன நீ என்று விசாரிக்கும் பொழுது மாமாவின் கைகள் என்னை அடிக்க ஆரம்பிக்க அம்மாவின் கேள்விகள் ஒவ்வொன்றும் நான் செய்த தவறுகள் ஒவ்வொன்றையும் பக்கத்தில் இருந்து பார்த்தவர் போல கேட்க என்னை என்னால் பார்க்க முடியாமல் மாமாவுக்கு வீட்டு மூலையில் இருந்த தடியால் ஒன்றை போட மண்டை கிழிந்தது பதினாறு தையல் உடனே ஆஸ்பத்திரி பொலிஸ் முறைப்பாடு என ஆரம்பித்து அம்மாவோ பொலிஸ் முறப்பாட்டை சமாளிக்க பார்க்க மாமா விட வில்லை நீதிமன்றதுக்கு சென்றது வழக்கு. என்னை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க ஆணையிட்டார் நீதிபதி காரணம் நான் மாணவன் என்ற படியால் .

அப்போதுதான் எனக்கு புரிந்து கொண்டது நாம் எங்கு சென்று தவறு செய்தாலும் அதை கண்டு கொள்ளும் கண்கள் உண்டு என்பதை . அங்கே சீர்திருத்த பள்ளி என்பது கவுன்சிலிங் கோம் அங்கே ஒவ்வொரு மதத்துக்கும் உரிய பெரியவர்கள் வந்து உபதேசம் செய்வார்கள் எனக்கு அது பிடிக்காது அங்கும் தனிமை என்னை நானே திருத்தி கொள்ள வேணும் என்பதை முடிவு செய்தேன் மனநலம் பாதிக்கப்படவன் போல நடிக்கலானேன் அப்போதுதான் ஒரு கிறிஸ்தவ பாதரியார் வந்தார் அவரோ மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தனியாக வைத்து பராமரிப்பவர் அவரிடம் நான் உன்மையை சொல்ல அதாவது எனக்கு இந்த உலகத்தில் வாழ பிடிக்க வில்லை எப்படியாவது என்னை உங்க இடத்துக்கு அழைத்து செல்லுங்கள் என்றேன் அவர் மறுத்து விட்டு பின்னர் சரி அப்படியானால் நீ வாழ்க்கை பூரகவும் நடிப்பாயா எனக்கேட்க இல்லை ஐயா எனக்கு எப்ப வாழ பிடிக்கிறதோ அப்போது நான் தெளிந்தவன் போல விலகிவிடுவேன் என்றேன் அன்று சீர்திருத்த பள்ளியில் இருந்து என்னை பைத்தியம் போல என்னை கட்டி கூட்டி சென்றனர் அங்கே நான் உள் செல்ல என்னை எல்லா பைத்தியங்களும் சேர்ந்து என்னை பார்த்து பைத்தியம் பைத்தியம் என்றது எனக்கு சிரிப்பதா அழுவதா என்பது தெரியவில்லை இப்படி நாட்கள் சென்றன அந்த வாழ்க்கை பழகி கொண்டது மனதில் வஞ்சகம் இல்லாத ,அடுத்தவனுக்கு தீங்கு செய்ய நினைக்காத மனங்கள் ,அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படாத மனிதர்கள் அவர்களுக்கென ஒரு தனி உலகம் தனி வாழ்க்கை நடத்தும் மனிதர்கள் இவர்களை பார்த்து பைத்தியம் என்று சொல்பவர்களை என்னவென்று சொல்வது இந்த உலகத்தில்.

எனக்கு இந்த வாழ்க்கை மிக பிடித்தது என் அம்மாவும் அடிக்கடி வந்து பார்த்து செல்வார் இதே பாசத்தை ஆரம்பத்தில் என்னிடம் நீங்கள் காட்டியிருந்தால் நான் இப்படியிருந்திருப்பேனா என்றும் கேள்வி எழும் ஆனால் என் சுய சொந்த புத்தி எங்கே சென்றது என்றும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

சில நடந்த சம்பவங்களை வைத்து கற்பனையாக எழுதினேன்

நன்றி முனிவர் ஜீ
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 11 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Mar 12, 2016 11:57 am

அலுவலகத்தில் காட்டுப்புலி!
------------
காட்டுக்குள் இருந்து வழி தவறி வந்த அந்தப் புலி, எப்படியோ அந்த பன்னாட்டு நிறுவனத்தின் ரெஸ்ட் ரூமுக்குள் நுழைந்துவிட்டது. ஆளரவத்தில் அரண்டு மிரண்டுபோன புலி, அந்த டாய்லெட்டின் ஓர் இருட்டு மூலையில் பதுங்கிக்கொண்டது. மூன்று நாட்கள் மூச்சு காட்டாமல் இருந்த புலிக்கு, பசி வயிற்றைக் கிள்ளியது.
நாலாவது நாள்...

பசி தாங்க முடியாமல் ரெஸ்ட் ரூமுக்குள் தனியாக வந்த ஓர் ஆளை அடித்துச் சாப்பிட்டது. அவர், அந்த நிறுவனத்தின் அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர். அவர் 'மிஸ்’ ஆனதைப்பற்றிஅலுவலகத் தில் யாருக்கும் கவலை இல்லாததால், எந்த அதிர்வு நிகழ்வும் இல்லை பயப்படும் படி எதுவும் நிகழவில்லை என்பதால் இரண்டு நாட்கள் கழித்து, இன்னும் ஒரு நபரை அடித்துச் சாப்பிட்டது புலி.
அவர், அந்த நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர். யாரும் அவரைத் தேடவும் இல்லை, காணவில்லையே என்று பதறவும் இல்லை. (சொல்லப்போனால் அவர் அலுவலகத்தில் இல்லையே என்று சந்தோஷப்பட்டவர்கள்தான் அதிகம்!)

அடுத்த நாள், நிறுவனத்தின் வைஸ் பிரசிடென்ட்டை ஏப்பம்விட்டார் புலியார். நிறுவனத்தில் குண்டூசி விழுந்த சலனம்கூட இல்லை. இதனால் குளிர்விட்டுப்போன புலி, நாம் வசிக்க ஏற்ற இடம் இதுதான் என்று தீர்மானித்து செட்டில் ஆனது.

அடுத்த நாள் பசிக்கவே இல்லாவிட்டாலும், சும்மா இருக்கட்டுமே என்று ஒரு நபரை அடித்து மூர்ச்சையாக்கி, தனக்குப் பக்கத்தில் இருத்திக்கொண்டது.


காபி கோப்பைகளைக் கழுவ வந்த அந்த நபர்தான் அலுவலகத்தின் பியூன். காபி வாங்கச் சென்ற பியூனைக் காணவில்லை என்று மொத்த அலுவலகமும் திமிலோகப்பட்டு, தேடுதல் வேட்டையைத் துவங்கியது.

அடுத்த பத்தாவது நிமிடத்தில், ரெஸ்ட் ரூமில் மூர்ச்சையாகிக்கிடந்த பியூனையும், தொடர்ந்து புலியையும் கண்டுபிடித்துவிட்டார்கள்.

புலியை அடித்துத் துவைத்து, கூண்டுக்குள் அடைத்து ஜூவுக்கு அனுப்பிவைத்தார்கள்!

நீதி:

உங்களுக்கான நட்பு அல்லது மரியாதையை நிர்ணயிப்பது உங்கள் பதவியோ, செல்வமோ கிடையாது. நீங்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது!

////
நன்றி
யாழ் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 11 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Mar 12, 2016 12:00 pm

என் அறியாமை
------------
பஸ் பயணம் என்பது ஒரு சிலருக்கு பிடிக்கும் ஒரு சிலருக்கு பிடிக்காது அது என் வேலைக்கு ஒவ்வொரு நாளும் தேவைப்பட்டது. நான் காயத்திரி ஒரு ஆசிரியராக புதிதாக நியமனம் பெற்று மட்டக்களப்பில் ஒரு பாடசாலயில் கல்வி கற்பிக்கிறேன். மட்டக்களப்பு என்றால் மட்டக்களப்பு அல்ல கொஞ்சம் தூரம் செல்லவேண்டும் புதிய நியமனம் என்பதால் அங்கு சில காலம் பணியாற்ற வேண்டும் ஒரு நாள் காலை நான் எழும்புவதற்கு நேரமாகிவிட்டது அன்றைய நாள் எனக்கு சுடுதண்ணியை காலில் ஊற்றிக்கொண்டால் போல ஆகிவிட்டது சாப்பிடவும் இல்லை .ஒழுங்காக சாறி கட்டவும் தெரியாது அவதிபட்டுக்கொண்டே ஒருபடியாக சாறியை கட்டிக்கொண்டு புறப்பட ஆரம்பித்தேன் அம்மாவும் சாப்பிட்டு போடி என்று சொல்ல நான் தேவை இல்லை பஸ் போயிடும் என்று சொல்லி ஓட்டமும் நடையுமாக பஸ் தரிப்பிடத்திற்கு சென்றேன் நல்ல காலம் பஸ் அந்த நேரத்திற்கு வந்து விட ஏறினேன்.

அவசரத்தில் ஏறிய நான் சில்லறை காசு எடுக்க வில்லை பஸ் நடத்துனர் ரிக்கட் கொண்டு வர எனது பையை திறந்து பார்த்தேன் அதனுள் ஆயிரம் ருபாய் இருந்தது அதனை நீட்டினேன் அவர் அதை பார்த்து விட்டு சில்லறை தரும் படி கூற எனக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை பக்கத்தில் இருந்தவர்களிடம் வினவ யாரிடமும் அந்த காசை மாற்ற இருக்க வில்லை. ஒரு குரல் மட்டும் இந்தாங்கோ என்று என்னிடம் நீட்டியது அவருக்கு ந‌ன்றி சொல்லிவிட்டு ஒரு படியாக ரிக்கட்டை பெற்றுக்கொண்டேன் ஆனால் பஸ்சில் காலை நேரம் என்பதால் இருக்கைகள் எல்லாம் நிரம்பியிருந்தது எல்லாம் வேலைக்கு செல்பவர்கள் நின்று கொன்டே செல்ல நேர்ந்தது நிற்பது என்பது எனக்கு பிடிக்காது .பிடிக்காது என்று ஏன் சொல்ல வந்தேன் என்றால் உள்ள ஒரு சின்ன இடுக்கு ஒருவரே நிற்க முடியாது அதுக்குள்ள நின்று போவதென்றால் ??? ஒரு சில காமுகர்களால் பெண்கள் படும் வேதனை இருக்கே அம்மா சொல்ல முடியாது உரசுவது கிள்ளுவது .இடிப்பது இந்த நரக வேதனையில் இருந்து தப்ப நான் நான் படும் பாடு இருக்கே அம்மா அதை சொல்லவே முடியாது.

நான் இருக்கும் ஊரில் இருந்து மட்டுநகர் நாற்பது கிலோமீற்றர் தூரம். பஸ்சில் பாட்டு போட்டு சென்றார்கள் மாணவர்களும் உள் இருந்தார்கள் படிக்கிறார்கள் இல்லையோ ஆனால் பாட்டு மட்டும் நன்றாக பாடுகிறார்கள் , பஸ் இடையில் நின்றால் பிச்சைகாரர்கள் ஏறுவார்கள் இவர்கள் தொல்லை ஒரு பக்கம் இருக்க எனக்கு சில்லறை மாற்றிக்கொடுத்வர் என்னையே பார்த்து கொண்டிருந்தார் .நானும் அவரை உதவி செய்தவர் தானே என்று நினைத்து சிரித்தேன் அவரும் சிரித்து விட்டு மீண்டு மீண்டும் என்னையே பார்த்து கொண்டிருந்தார் அது எனக்கு அருவ ருப்பாக இருந்தது நான் முறைக்க அவர் அதை பொருட்படுத்தவில்லை என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். அவ‌ர் கிட்ட வரும் படி கூறி ஏதோ செய்கை காட்டினார் நான் ஒன்றும் பேசாமல் அவர் கிட்டே சென்று உதவி செய்யுங்கள் உபத்திரம் செய்யாதீர்கள் என்று சொல்லிவிட்டேன் .அவர் உடனே நீங்கள் இங்க இருங்க‌ள் என்ற‌படி எழும்பினார் .நான் இருக்கையில் அமர்ந்து கொண்டேன் அவர் என்னருகில் நின்று கொண்டிருந்தார் அவர் இறங்கும் இடம் வர அவர் என்னை பார்த்து காயத்திரி தானே நீங்கள் எப்படி இருக்குறீர்க்ள் என்று கேட்டு விட்டு இறங்கிவிட்டார் அவர் சென்ற பின்பு யார் அவர் என்ற சிந்தனை ஓடியது.



பின்பு அவர் பக்கத்தில் இருந்தவ்ர் ஒரு ஆண் பார்க்க நல்ல பண்பாக இருந்ததவர் அவர் வேலையை காட்ட ஆரம்பித்தார் அவர் தொடைகள் என்னை உரசி உரசி உறுத்தியது அவரை முறைத்து பார்த்தும் அவர் அவரின் வேலையை தொடர்ந்தார் என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை ஒருவனிடம் இருந்து இன்னொருவனிடம் சிக்கியுள்ளதாக நினைத்து கொண்டு ஆண்வர்கத்தை நினைத்தும் கல்யாணம் எல்லாம் கட்ட கூடாது என்றும் நினைத்தேன் பொறுத்து பொறுத்து பார்த்தேன் என்னால் முடியவில்லை கூச்சல் இட்டு நடத்துனரை கூப்பிட நினைக்கும் போது அவரோ தம்பி இங்க வாங்கோ என பஸ் நடத்துனரை கூப்பிட பஸ் நடத்துனர் நீங்கள் இறங்கும் இடமா என்று கேட்க ஓம் என்று சொல்ல ஒரு நிமிடம் பொறுங்கோ என்று சொல்லி விட்டு இரு ஊன்று கோல்களை எடுத்து அவரிடம் கொடுத்தார் அவர் அதை வாங்கிக்கொண்டு ஊன்றி எழும்பி நடக்க ஆரம்பிக்கும் போது தங்கை நீங்கள் என்னை மன்னித்து விடுங்கள் இருக்கையில் இருக்கும் போது என் கால்கள் என்னிடம் இருக்காது அது அங்கும் இங்கும் இருக்கும் அதனுள் பூட்டப்பட்டிருக்கும் ஆணிகள் உங்களை குத்தியிருந்தால் என்னை மன்னியுங்கள் என்று சொல்லிவிட்டு இறங்கி சென்றார் .



அப்பொழுது என்னால் எதுவும் பேச‌ முடியவில்லை ஒரு சில ஆண்கள் செய்யும் சம்பவங்களால் எல்லோரையும் தவறாகவும் தப்பாகவும் நினைக்க தோன்றினாலும் அவரிடம் மன்னிப்பு கேட்க நினைக்கிறேன் அவரை காணும் போது .பஸ் நடத்துனரோ அவர் போரில் இரு கால்களை இழந்தவர் என்ற் சொன்னார்.
பாடசாலை சென்றேன் அங்க நடந்தை நினைத்தும் என் அறியாமையை நினைத்தும் அவசரபுத்தியை நினைத்தும் கவலையுற்றேன் பாடசாலை நிறைவுற்றதும் மீண்டும் பஸ்சில் ஏறி வீடு வரும் பொழுது எனக்கு காசு மாற்றி தந்தவரை பார்த்தேன் ஆனால் அவர் என்னை பார்த்தும் பார்க்காம‌லும் ஒரு வெளிநாட்டவருடன் சரளமாக ஆங்கிலம் பேசி வருவதையும் அவர் தமிழர்களின் கலாச்சாரத்தை பற்றி பேசியும் வந்தார் .நான் பக்கத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்து அதை கேட்டு வந்தேன் .அதற்கு அந்த வெள்ளகாரன் உடன் கட்டை ஏறுவது பற்றி கேட்ட போது அது ஒரு காலத்தில் இருந்தது ஆனால் இப்ப இல்லை என்றும் அவருக்கு தமிழர்களின் கலை கலாச்சாரம் பற்றியும் சொல்லியும் வந்தார் .





நான் என் மனதுக்குள் அவரிடம் இவ்வளவு திறமை இருக்குமா என நினைத்துக்கூட பார்க்க வில்லை நான் அவரிடம் எப்படி என் பெயர் உங்களுக்கு தெரியும் என கேட்க உன் அண்ணனுடன் நான் வெளிநாட்டில் வேலை செய்த நான் அப்ப உங்களது குடும்ப‌ போட்டோவை உங்க அண்ணன் காட்டியிருக்கார் என்று சொல்ல ஓ நீங்கதானா? மதன் என்றாள் ஓம் என்று சொல்ல நீங்க நன்றாக படித்தவர் என்று அண்ணா சொன்னாரே ஓம் ந‌ல்லா படித்தால் இங்க வேலை கிடைக்காதே இப்ப நான் ஒரு பாடசாலையில் சாதாரண பியுனாக‌ வேலை செய்கிறேன் என்று சொல்லிவிட்டு அவர் இறங்கி செல்கிறார் நானும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவத்துடன் வீடு செல்கிறேன்

பெயர்கள் கற்பனை

முனிவர் ஜீ
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 11 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 13, 2016 12:03 pm

மாதம் பிறக்கிறதோ இல்லையோ, தவறாமல்
அண்ணன் வீட்டில் ஆஜராகி விடுவாள் சுமதி.

கண்ணைக் கசக்கி, அழுது புலம்பி, அண்ணனிடம்
வேண்டியதை அவள் வாங்கிக்கொண்டு போவதை
அண்ணி பூங்கொடி எரிச்சலுடன் பார்ப்பாள். அன்று
வீட்டுக்கு வந்த சுமதியை கோபத்துடன் கேட்டே
விட்டாள் பூங்கொடி.

‘‘கல்யாணம் ஆகி இத்தனை வருஷமாகியும்
இப்படி அடிக்கடி வந்து, அது வேணும் இது
வேணும்னு கேட்டு உன் அண்ணனைத் தொந்தரவு
பண்றியே, இது உனக்கு தப்பா தெரியலையா சுமதி?’’
சுமதி விரக்தியுடன் சிரித்தாள்.

‘‘அண்ணி! உங்களுக்கு வசதியான ஒரு நல்ல
மாப்பிள்ளை அமையணும்னு உங்க அண்ணனும்
அண்ணியும் அக்கறையா தேடித் தேடி என் அண்ணனை
உங்களுக்குக் கட்டி வச்சாங்க, இல்லையா?

அந்த மாதிரி என் அண்ணியான நீங்களும், என்
அண்ணனும் அக்கறையா தேடித் தேடி எனக்கு ஒரு
நல்ல, வசதியான மாப்பிள்ளையா பார்த்துக் கட்டி
வச்சிருந்தா, நான் ஏன் இங்கே வர்றேன்?

வீட்டை விட்டு போனா போதும்னு வசதி இல்லாத
இடத்தில்தானே நீங்க என்னைத் தள்ளி விட்டிருக்கீங்க?
தப்பை உங்க மேல வச்சுக்கிட்டு என் மேல
கோபப்படறது நியாயமா அண்ணி?’’

அண்ணி பூங்கொடி வாயடைத்து நின்றாள்.

———————-
ஜெயா மணாளன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 11 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 13, 2016 12:04 pm

என்ன முயன்றும் குழந்தை அஞ்சலி தூங்குவதாகத்
தெரியவில்லை. அஜித் குழந்தைக்கு சோட்டா பீம்
கதையெல்லாம் சொல்லிப் பார்த்தான்.

குழந்தை ‘உம்… உம்…’ என்று கண்களை விரித்து
ஆர்வமாகக் கேட்டதே தவிர, தூங்குவதாகத் தெரிய
வில்லை. ஷாலினியும் தன் பங்குக்கு மாய மந்திரக்
கதைகளை எல்லாம் சொன்னாள். களைப்பாகி
ஷாலினிக்கு தூக்கம் வந்ததுதான் மிச்சம். குழந்தை
கொட்டக் கொட்ட விழித்திருந்தாள். கொஞ்சமும்
கண் அசரவில்லை.

‘‘என்னங்க இது? உங்கம்மா கதை சொன்னா
மட்டும் உடனே தூங்கிடுறா. நாம இத்தனை
கதைகளைச் சொல்லியும் தூங்க மாட்டேன்னு அடம்
பிடிக்கிறா! அவங்க அப்படி என்ன கதையைத்தான்
சொல்வாங்க?’’
கிராமத்திற்குச் சென்றிருக்கும் தன் தாயையே செல்லில்
அழைத்தான் அஜித்.போன் வழியே அறிவுரை வந்தது…
‘‘விதவிதமான கதையெல்லாம் சொன்னா, ‘அடுத்து
என்ன? அடுத்து என்ன?’ங்கிற எதிர்பார்ப்பிலயே எந்தக்
குழந்தையும் தூங்காது. கேட்டுக் கேட்டுப் புளிச்சுப்
போன கதையைச் சொன்னா உடனே கொட்டாவி
வந்துடும். அழுத்திக் கேட்டா,
‘எனக்கு இந்தக் கதைதான் தெரியும்’னு சொல்லிடணும்.
நான் தினமும் அஞ்சலிக்குச் சொல்ற கதையையே
சொல்லுப்பா!’’ இதை ஒட்டுக் கேட்ட ஷாலினி, பாட்டி
வடை சுட்ட கதையைச் சொல்ல ஆரம்பிக்க, குழந்தையின்
கண்கள் சொக்க ஆரம்பித்தன. கூடவே அஜித்தின்
கண்களும்!

——————————–
சுபமி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 11 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 13, 2016 12:06 pm

முடிவு - ஒரு பக்க கதை
------------
தயக்கமாக வீட்டுக்குள் நுழைந்தான் அவன்.
‘‘சார், நான் இந்த தெருக் கோடியில இருக்குற ஆட்டோ டிரைவர்.
உங்க பொண்ணு ஒரு பையனோட சுத்தறாங்க... சந்தேகமா இருக்கு...
சொல்லிட்டுப் போலாம்னு வந்தேன்!’’ என்றான்.
-
தொழிலதிபர் கார்மேகம் முகம் கறுத்தது. பதில் எதுவும் சொல்லாமல்
உள்ளே போனார். அடுத்த நாள், ‘‘சார்! இன்னைக்கு அந்தப் பையனும்
உங்க பெண்ணும் வர்ற சனிக்கிழமை மகாபலிபுரம் போறதா
பேசிக்கிட்டாங்க. ஜாக்கிரதை சார்!’’ - ஆட்டோ டிரைவர் சொல்லி
விட்டுப் போனான். கார்மேகம் ரத்தம் கொதித்தது.
-
இப்படி தினம் தினம் ஒரு புதுத் தகவலோடு வருவான்.
-
அடுத்த வாரம் வந்தவன், ‘‘சார்! நானும் ஒரு வாரமா உங்ககிட்ட
வந்து சொல்லிக்கிட்டு இருக்கேன். நீங்க பேசாம இருந்தா எப்படி?
உங்க பொண்ணு வாழ்க்கையைப் பத்தி உங்களுக்குக் கவலை இல்லையா?’’
என கோபமாகக் கேட்டான்.
-
‘‘இருக்கு... இன்னியோட இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்!’’ -
விறுவிறு என்று வீட்டுக்குள் போனவர், மொபைலை எடுத்து வந்தார்.
‘‘ஹலோ, போலீஸ் ஸ்டேஷனா..? தொழிலதிபர் கார்மேகம் பேசறேன்.
என் தெருவுல ஒரு ஆட்டோ டிரைவர் என் பொண்ணைக் கண்காணிக்கறான்.
அவ பேசுறதைக்கூட ஒட்டுக் கேக்கறான். அவளைப் பத்தி தப்பா வெளியே
பேசறான். கொஞ்சம் கூப்பிட்டு கண்டிச்சு வைங்க..!’’ - முடித்தார்
கார்மேகம்.

---------------
-வி.சிவாஜி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 11 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 13, 2016 12:08 pm

கவனம் – ஒரு பக்க கதை
-
இப்படி நடக்கும் என ராமலிங்கம் கனவுகூட
கண்டதில்லை. அவர் பணம் போட்டு வைத்திருந்த
பைனான்ஸ் கம்பெனி திடீரென மூடப்பட்டுவிட்டது.

இன்னும் ஒரு மாதத்தில் மகள் கல்யாணம்.
இடிந்து போனவரை அவர் மனைவிதான் தேற்றினாள்.
‘‘உங்க அண்ணனைக் கேளுங்க. நாம நல்லா இருந்த
காலத்துல அவங்களுக்கு எவ்வளவோ செய்திருக்கோம்.
அவர் நிச்சயம் நம்மளைக் கைவிட மாட்டார்!’’
என்றாள்.

அண்ணன் சுந்தரலிங்கத்திற்கு போன் செய்து நடந்ததைச்
சொன்னார் ராமலிங்கம். எதிர்பார்த்தது போலவே
அண்ணன் திட்ட ஆரம்பித்தார். ‘‘படிச்சவன்தானே நீ?
பரிசுப் போட்டி, கார், ஃபிளாட், அதிக வட்டினு ஆசை
வார்த்தையைக் கேக்குறப்பவே எச்சரிக்கையாக இருக்க
வேணாம்..? இப்படி ஏமாந்து நிக்கிறீயே! சரி விடு…
நாளைக்கு சாயந்தரம் வீட்டிற்கு வா. பணம் தர்றேன்!’’
என்றார்.

அடுத்த நாள் அண்ணன் வீட்டில் வரவேற்ற அண்ணியின்
முகம் சரியில்லை. அண்ணன் ஒரு மூலையில் சோகமாக
அமர்ந்திருந்தார். அண்ணிதான் சொன்னாள்.‘‘உங்களுக்குக்
கொடுக்க, பணம் எடுத்துட்டு காலைல பேங்க்ல இருந்து
வெளில வந்திருக்கிறாரு… யாரோ ஒருத்தன், ஒரு நூறு
ரூபா தாளை கீழ போட்டுட்டு, ‘உங்களுதா’னு ஆசை
காட்டியிருக்கான். இவரு கவனமா இல்லாம குனிஞ்சு அதை
எடுக்க, மொத்தமா இவர் பணத்தை அடிச்சுட்டான்!’’
ராமலிங்கம் பேச்சற்றுப் போனார்.

———————-
வி.அங்கப்பன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 11 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 13, 2016 12:11 pm

சாட்டிங் -ஒருபக்க கதை
-
சாட்டிங்கில் நண்பனைத் தொடர்புகொண்டான் பரத்.
‘‘டே சிவா, பிஸியா?’’
‘‘இல்லை பரத், சொல்லு!’’
‘‘இன்னும் டெல்லியிலதான் வேலை பாக்குறியா?’’
‘‘ஆமா!’’

‘‘எனக்கொரு ஹெல்ப்…’’
‘‘சொல்லுடா?’’
‘‘வீட்டுல பொண்ணு பார்த்திருக்காங்க…’’
‘‘நைஸ்… கங்கிராட்ஸ்!’’

‘‘பொண்ணு டெல்லிலதான் இருக்கா, பேரு ஸ்நேஹா.’’
‘‘நீயும் டெல்லிக்கு டிரான்ஸ்பர் ஆகப்போறியா?’’
‘‘இல்லை… அவ சென்னைக்கு வந்துடுவா!’’
‘‘நான் என்ன பண்ணணும்?’’

‘‘அவ ஆபீஸ் வரைக்கும் போய் கொஞ்சம் விசாரிக்கணும்!’’
‘‘டன். அட்ரஸ், ஃபோட்டோ மெயில் பண்ணிடு!’’
‘‘டன்!’’

ஒரு வாரம் கழித்து…
‘‘என்னடா ஆச்சு? ஸ்நேஹாவைப் பார்த்தியா?’’
‘‘ம்…’’
‘‘எப்படி இருக்கா?’’
‘‘சூப்பர். ஆனா உனக்கு சரிப்பட்டு வரமாட்டா!’’
‘‘என்னடா சொல்றே?’’

‘‘அவளுக்கு டெல்லிதான் பிடிச்சிருக்கு. இங்கேயே செட்டில்
ஆக விரும்புறா. பேரன்ட்ஸ் கட்டாயப்படுத்துறதனாலதான்
உன்னைக் கல்யாணம் செய்துக்க சம்மதிச்சிருக்கா… அப்புறம்
ஒரு விஷயம்…’’

‘‘என்ன?’’

‘‘அவ இங்கே ஒரு பையனை லவ் பண்றா. இன்னிக்குதான்
எனக்குத் தெரியும். பையன் சுமாராதான் இருக்கான், ஆனா
அவளுக்குப் புடிச்சிருக்கு!’’

ஒரு மாதம் கழித்து, சிவா-சிநேஹா கல்யாணப் பத்திரிகை
பரத் கைக்கு வந்தது.

—————————————-
–அஜித்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 11 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 13, 2016 12:12 pm

பழக்கம் - ஒரு பக்க கதை

-
காலை டிபனாக பொங்கலை எடுத்து சுவைத்த ராகவனின் முகம் சிவந்தது.
‘‘எனக்கு இஞ்சி பிடிக்காதுன்னு தெரியுமில்ல? இத்தனை நாளா இஞ்சி போடாமதானே இருந்தே? அப்புறம் ஏன் இன்னைக்குப் போட்டே?’’ – பொங்கலைத் துப்பியபடி கேட்டான்.


‘‘இதுவரைக்கும் சாப்பிடலை. இனிமே சாப்பிடுங்க!’’ என்றபடி கிச்சனுக்குள் சென்றுவிட்டாள் சுசீலா. மதியம் பசியுடன் அமர்ந்த ராகவன், சாம்பாரில் முள்ளங்கி தெரிந்ததும், எரிச்சலானான்.


‘‘ஏண்டி! எனக்கு முள்ளங்கி வாசனையே பிடிக்காதுனு தெரியுமில்ல?’’ – போனில் கேட்டான்.


‘‘மூக்கை மூடிக்கிட்டுச் சாப்பிடுங்க!’’ என்று ‘கட்’ ஆனாள் சுசீலா.


அலுவலகம் முடிந்து திரும்பிய ராகவனை, சூடான மெதுவடைகள் வரவேற்றன. ‘‘ஆஹா!’’ என்று எடுத்துக் கடித்தவன், கோபத்தில் வெடித்தான்.
‘‘வடையில உங்களுக்குப் பிடிக்காத மிளகு போட்டிருக்கேன். அதனாலென்ன? சும்மா சாப்பிடப் பழகுங்க!’’ என்றாள் சுசீலா.
-
‘‘ஏண்டி! உனக்கு என்ன ஆச்சு?’’


‘‘கிராமத்துல தனியா இருக்கிற உங்க அம்மா, அடுத்த மாசத்திலிருந்து நம்ம கூடத்தான் இருக்கப் போறாங்க. அவங்களுக்கு இஞ்சி, மிளகு, முள்ளங்கி எல்லாம் ரொம்பப் பிடிக்கும்ங்க. இனிமே அதையெல்லாம் சேர்த்துதானே சமைக்கணும். அவங்க எதிர்ல நீங்க கோபப்பட்டா, வருத்தப்பட்டு திரும்பிப் போயிடுவாங்க. அதனால, நீங்களும் எல்லாத்தையும் இப்பவே சாப்பிடப் பழகுங்க!’’ என்றாள் சுசீலா. –
----------------

எஸ்.குமாரகிருஷ்ணன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 11 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 13, 2016 12:15 pm

ஒருநாள் தாத்தா தன் பேரனை அழைத்துக் கொண்டு வயல்வெளி பக்கம் போனார். அங்கு வீசிய காற்றும் வெயிலும் அழகான காட்சிகளும் அவனுக்கு பரவசமாக இருந்தது. அவன் தன் தாத்தாவின் பின்னாடியே பேசிக்கொண்டு நடந்தான். அவன் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சலி்க்காமல் பதில் சொன்னார் தாத்தா. ஊருக்கு வெளியிலிருந்த அம்மன் கோயிலை நெருங்குகையில், அங்கிருந்த பெரிய ஆலமரம் அவன் கண்ணில் பட்டது.
உடனே அவன் ஒண்ணும் தெரியாதவன் மாதிரி கேலியாக, “ கோயில்கள்லே குழந்தையில்லாதப் பெண்கள் பிரார்த்தனைத் தொட்டில்கள் கட்டித் தொங்கவிட்டிருக்கிறதைப் பார்த்திருக்கேன். ஆனா அதென்ன தாத்தா ஆலமரத்திலே பெரிசுபெரிசா பலாக்காய் காய்க்கிறாப் போல, நிறையக் காய்ச்சி தொங்குது? ” என்றான்.
பேரனின் கேள்வியினைக் கேட்டு சிரித்துக்கொண்டவர். “ டேய், அது பலாக்காய் இல்லேடா?. சின்னச்சின்ன மூட்டைங்கடா ” என்றார்..
“ என்ன மூட்டைங்கன்னு சொல்லுங்க தாத்தா ” என்றான்.
அதைப்பற்றி எப்படி பேரனுக்கு விளக்கி சொல்வதென்று புரியாமல் திணறினார் தாத்தா?.
“ என்ன தாத்தா யோசிக்கிறீங்க என்று மீண்டும் கேட்டான் ” பேரன்.
அதைப்பற்றிச் சொல்லாவிட்டால் விடமாட்டான் போலிருக்கே, என்று நினைத்துக் கொண்டவர்.
“ பக்கத்திலே வந்து நில்லுடா சொல்றேன் ” என்றார்.
பேரன் அருகில் வந்து நின்றான்.
“ கண்ணா, நீ நகரத்திலே வாழறே. செயற்கைப் பொருள்களோட அதிகம் புழுங்குறே. கிராமத்திலே நடக்கிற எத்தனையோ சம்பவங்க மனசை அதிரவைக்கவே செய்யும்டா டேய், நீ கேட்டியே, அது பலாக்காயுமில்லை. பூசணிக்காயுமில்லே. பசுமாடு எருமைமாடு இருக்கில்லே அதுங்க பிரசவமாயிருந்து கன்னுபோடும். அப்போ அதுங்க கருப்பையிலேயிருந்து கொடிகொடியா சுத்தியிருக்கும் நரம்புகளும் நிறைய ரத்தமும் நீரும் வெளியே வந்து கொட்டும். அந்த சமயத்திலே மாடுங்க எவ்வளவு வலி பொறுத்திருக்கும் பாரு. அப்ப கன்னுக்குட்டி வெளியே வந்து விழுந்ததும், அதை நல்லா துடைச்சி சுத்தம் பண்ணுவாங்க. பிறகு எல்லா கழிவுகளையும் வாரியெடுத்து, கீழே சிந்தாம பாதுகாப்பான கோணிப்பை இல்லேன்.னா துப்பட்டா துணியிலே இறுக்கமா சின்ன மூட்டையா கட்டி கொண்டு வந்து ஆலமரத்திலே ஏறி உயரத்திலே கட்டிட்டுப் போவாங்க. அந்த மூட்டையை பறவைங்க எதுவும் கொத்தி சாப்பிடாது. சேதப்படுததாது. காத்துலேயும் வெயில்லேயும் மழையிலேயும் பாதுகாப்பாயிருந்து, சிலநாள்கள்லே மெல்ல காஞ்சி உதிர்ந்துப்போகும்டா ” என்று விளக்கினார் தாத்தா.
“ நா கேலியா தான் கேட்டேன். ஆனா, நீங்க வாயில்லாப் பிராணிகளின் இயற்கைப் பிரசவத்தில் இத்தனைப்பாடு இருக்கு என்கிறதை நல்லாவே புரியவைச்சிட்டீங்க தாத்தா ” என்றான் பேரன்.
ந.க.துறைவன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 11 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun May 01, 2016 9:02 am

டெங்கு
---

ஒரு மாத காலமாகவே ஊருக்குள் எல்லாரும் பயந்தபடியேதான் இருந்தார்கள். பத்து கிலோமீட்டர் கிழக்கில் இருக்கும் சென்னிமலையில் இரண்டு பெண்களுக்கு டெங்கு காய்ச்சல் என்றும் பதினைந்தாயிரம் பக்கம் செலவு செய்து பிழைத்துக் கொண்டார்கள் என்றும் சேதிகள் ஊருக்குள் உலாவிக் கொண்டிருந்தன. டிவி செய்திகளில் நெல்லையில் நாற்பது பேருக்கும் மேலாக டெங்கு காய்ச்சலால் இறந்து போனதாக வந்த தகவல் எல்லாரையுமே பயமுறுத்திக் கொண்டேயிருந்தது. மூன்று வருடம் முன்பாக சிக்கன் குனியா என்று வந்தபோது சுள்ளிமேட்டூருக்குள் ஒரு ஆள் பாக்கியில்லாமல் துன்பப்பட்டார்கள்.

அதேபோல் தானோ என்று அவரவர் வீடுகளில் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டிகளை கவிழ்த்துப் போட்டு பாசம் பிடித்ததை சுரண்டிச் சுத்தப்படுத்தி தண்ணீர் மாற்றி உபயோகித்தார்கள். கொசுக் கடித்தால் மஞ்சள் பொடியை தண்ணீரில் கலந்து குடித்து நாட்டு வைத்தியம் செய்து கொண்டார்கள். சந்தோஷமும் துக்கமும் சொல்லிக்கொண்டு தான் வருவதில்லையே!

""ஏண்டி ருக்குமணி... உன்னோட பையன் ஒருவாய் சாப்டுட்டு பள்ளிக்கூடம் போனானா? என்கிட்ட இருக்கிற பணத்தைக் குடுன்னு என் பையன் கேட்டான். எதுக்குடா? பள்ளிக்கூடத்திலதான் துணிமணியில இருந்து புத்தகம் நோட்டு வரைக்கும் அரசாங்கமே தருதேன்னேன். அவன் பிரண்டுக்கு காய்ச்சல் வந்துட்டுதாம். குடுன்னு அழுது ஆர்ப்பாட்டம் பண்றான்'' என்று சிந்தாமணி பக்கத்து வீட்டு ருக்குமணியிடம் குரல் கொடுத்தது.

""என்னோட பையனும் அப்பிடித்தான் பணம் கேட்டுட்டு சாப்பிடாம பையைத் தூக்கீட்டு போயிட்டான் அம்மிணி. காலனில நம்ம வேணி பிள்ளை சீதா அஞ்சாப்பு நம்ம பசங்களோட படிக்குதுல்ல அதும்கூட சாப்பிடாமத்தான் போயிடுச்சாம். காசு என்ன மரத்துலயா காய்க்குது? இதுகள் கேட்டதும் போய் ரெண்டு உலுக்கு உலுக்கி எடுத்துட்டு வந்து தர்றதுக்கு? அதான் பள்ளிக்கூடத்துல தினமும் கோழிமொட்டோட மத்தியானம் சோறு போடுவாங்களல்ல காத்தால ஒருவேளை சோறு திங்காட்டி என்ன உடு அம்மிணி'' என்று குரல் கொடுத்தாள் ருக்குமணி.

ராத்திரி நானும் எம்பட பையனும் அந்த அப்புக்குட்டியோட பையனை வீடு போய் பார்த்துட்டு தான வந்தோம். ஒடம்பெல்லாம் அந்த முருகேசனுக்கு பொரிப் பொரியா செவந்தாப்ல இருந்துச்சு.

சின்னம்மை போட்டிருக்குதுன்னு தான எல்லாரும் சொன்னாங்க! தெய்வானை கூட அப்போத்தான் சின்னவெங்காயம், மஞ்சள், வேப்பங்கொழுந்து வச்சி அம்மியில அரைச்சுட்டு இருந்தாள். வேப்பந்தலை பொறிச்சுக் கொண்டாந்து வெறும் தரையில போட்டு பையனை அது மேல படுக்க வச்சிருந்தாள். அந்த அப்புக்குட்டி நான் வர்ற வரைக்கும் காணம். எங்க குடிச்சுப்போட்டு கெடக்கானோ! நாலு பேருக்கு கட்டிங் ஷேவிங் பண்டி காசு ஜோப்புல சேர்ந்தாப் போதும். நேரா குடிக்கப் போயிடறான்.

தெய்வானை கழுத்துல ஒரு பவுன் செயின் கெடந்துச்சு. அதையும் காணம் இப்ப. மஞ்சள் கயிறு ஒன்னுதான் கெடக்குது''

""ஊருக்குள் மாகாளியாத்தா கோவில் நோம்பி சாட்டி ரெண்டு வருசம் ஆச்சில்ல, அதான் முருகேசன் ஒடம்புல விளையாட வந்திருக்கா ஆத்தா!'' என்றாள் ருக்குமணி.

""அட ருக்குமணி உனக்கு விசயமே தெரியாதாட்ட இருக்குதே! நம்ம நர்ஸம்மா காலையில அப்புக்குட்டி ஊட்டுக்குப் போயி பார்த்துட்டு சத்தம் போட்டுதாமா தெய்வானையையும் அப்புக்குட்டியையும்''

""அட, அந்த நர்ஸம்மா எதுக்கு ஆத்தா பார்த்த வீட்டுல போயி சத்தம் போட்டுச்சு? ஊருக்குள்ளயே இருந்தாலும் ஒரு தகவலும் தெரியலையே! ஊசி போடச் சொல்லுச்சா அது? ஊசி எல்லாம் போடக் கூடாது ஆத்தா பார்த்த பையனுக்கு! ஆத்தா முத்துகளை அள்ளி வீசி விளையாடற நேரத்துல ஊசி ஒடம்புல ஏறுச்சின்னா கோபமாயிடும். தெரியாதா அந்த தெய்வானைக்கி?''

""நீயும் நானும் சொல்லி என்ன பண்றது? முருகேசன் ஒடம்புல முழுசா பத்துப் போட்டிருந்தாள்ல தெய்வானை. பத்து காய்ஞ்சு விழுந்த இடத்துல எல்லாம் நல்லா பார்த்துட்டு, இப்படி முட்டாள் தனமா பத்துவயசுப் பையனை வீட்டுல படுக்கப் போட்டுட்டீங்களே... சீட்டு எழுதித்தர்றேன். உடனே சென்னிமலை அரசாங்க மருத்துவமனைக்கு கூட்டுட்டுப் போங்கன்னு சொல்லிடுச்சாம். தெய்வானை மாட்டேன்னுதான் சொன்னாளாம். அங்க போனாத்தான் ரத்த டெஸ்ட்டு எடுத்து டெங்கு காய்ச்சலான்னு பார்ப்பாங்க. பையன் உயிர் பிழைப்பான்னு அப்புக்குட்டிகிட்ட சொன்னதும் அப்புறம் தான் நம்ம செல்வன் ஆட்டோவைப் பிடிச்சுட்டு காத்தாலயே சென்னிமலை போயிட்டாங்க... தெரியாதா உனக்கு?'' என்றாள் சிந்தாமணி.

""எனக்குத் தெரியாது அம்மிணி முருகேசனுக்கு வந்த டெங்கோ, டொங்கோ இனி நம்ம பிள்ளைங்களுக்கும் வந்துட்டா காசுக்கு எங்க அம்மிணி போவுறது? நாமளே நூறு நாள் வேலைக்கு ரோட்டுல கல்லு பொறுக்கீட்டு இருக்கிறோம். அது ஒட்டுவாரொட்டி நோவோ என்னமோ!'' என்று பதைபதைப்பாய் பேசினாள் ருக்குமணி.

""பையனை கையில ஏந்திட்டு ஆட்டோவுல அப்புக்குட்டி உட்கார்ந்தப்ப அந்த அழுவாச்சி அழுதானாமா!

அத்தாச்சோட்டு ஆம்பிளை அழுது பார்த்ததே இல்லையக்கான்னு சரஸா சொல்றாள். சென்னிமலை ஒரு எட்டு போயி பார்த்துட்டு வரலாம்னா பயமா இருக்குது ருக்குமணி. ஆஸ்பத்திரி வாசல்படி மிதிச்சாலே எனக்கு காய்ச்சல் வந்த மாதிரி ஆயிடும்'' என்றாள்சிந்தாமணி. ஊருக்குள் எல்லாப் பெண்களுமே இதே பேச்சாய்த்தான் இருந்தார்கள்.

அது சரி சொல்லி வச்சது மாதிரி எல்லா பொடுசுகளும் சோறுசாப்பிடாம பள்ளிக்கூடம் போயிருக்குது

களே! பதினொரு மணியைப் போல கோவில் பூசாரி உள்ளூர் சின்னான்தான் அந்தத் தகவலை வந்து அவர்களுக்கு சொன்னான்.

""நம்ம ஊர் பிள்ளைங்க எல்லாம் பள்ளிக்கூடத்துக்கு மேற்கே இருக்கிற புங்கை மரத்தடியில் உட்கார்ந்திருக்குதுக! மாரியம்மன் கோயில்ல முருகேசன் காய்ச்சல் குணமாயிடனும்னு என்னைய தனியா பூஜை பண்ணச் சொல்லிச்சுக, நானும் பூஜை பண்ணி திருநீறு குடுத்தேன். பணம் கேட்டாங்களாமா உங்ககிட்ட?

அதான் ஸ்கூலுக்கும் போகாம, சோறும் உங்காம மரத்தடியில உட்கார்ந்திருக்காங்க. என்னோட வயசுக்கு இப்பிடின்னு கேள்விப்பட்டதே இல்லை சாமிகளா! இந்தக் காலத்து பிள்ளைங்க நெனச்சா நெனச்சமானிக்கி எல்லாம் பண்ணுதுக! டீச்சரம்மா வந்து பிள்ளைங்களைக் கூப்பிட்டதுக்கு எங்கம்மா எல்லாரும் வரட்டும்னு உட்கார்ந்துடுச்சுக.'' என்று சொல்லிவிட்டு சின்னான் சென்றான்.

அப்புக்குட்டி பையன் முருகேசன் வறுமையில் வாடினாலும் நல்ல படிப்பாளி. கணக்குப் பாடமாக இருந்தாலும் சரி, ஆங்கிலப் பாடமாக இருந்தாலும் சரி, அது ஒன்னுமில்லை இப்படித்தான் என்ற புரியாத பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுப்பான். அவனிடம் இருக்கும் குட்டி சைக்கிளை வைத்துக் கொண்டு தன் ஊர் பிள்ளைகளுக்கு சைக்கிள் ஓட்டவும் கற்றுத் தந்திருந்தான். எல்லாருக்குமே அவனைப் பிடிக்கும். அதே போல் அவனுக்கும் எல்லாரையும் பிடிக்கும்.

""ஏண்டா துரையரசு... நேத்து முருகேசன் சொன்ன மாதிரி செத்துட்டான்னா நம்ம கூட சேர்ந்து படிக்க வரமாட்டான் தானடா? குழிக்குள்ள போட்டு மூடிடுவாங்க தான? எங்கம்மா உங்கம்மா எல்லாம் காசு எடுத்துட்டு இப்போ வருவாங்க பாரு... நாம முருகேசன்கிட்ட கொண்டுபோய் குடுக்கலாம். டாக்டர் ஊசி போட்டு முருகேசன காப்பாத்திருவாங்க ...பாவம்... அவன் பொழச்சு வந்துட்டா நல்லா இருக்குமல்ல'' என்ற மீனாட்சிக்கு நேற்று மாலையில் விளையாட முடியாமல் சோர்ந்து போய் வேப்பமரத்தடியில் முருகேசன் சுருண்டு படுத்துக் கொண்ட காட்சி கண்முன் வந்தது.

""முருகேசா முருகேசா... ஏன்டா படுத்துட்டே? என்றாது உன் கை, கால்ல எல்லாம் சிவப்பு சிவப்பா பொரிப் பொரியா இருக்குது?''

""மீனாட்சி... என்னால எந்திரிக்கவே முடியாது. போல இருக்குது... டீக்கடையில முந்தா நேத்து முட்டாய் வாங்க போனப்ப கணேசண்ணன்தான் பேப்பர்ல போட்டு இருந்ததை படிச்சு மூர்த்தியண்ணன்கிட்ட சொல்லிட்டு இருந்துச்சு... இப்படி பொரிப்பொரியா வந்து காச்சல் அடிச்சா அது டெங்கு காச்சலாம் மீனாட்சி... எங்கப்பன் கிட்ட காசு இல்ல மீனாட்சி... நேத்து கூட எங்கம்மாட்ட குடிக்க காசு கேட்டுட்டு அடிச்சிட்டு இருந்துச்சு... நான் செத்துப் போயிட்டா... எல்லாரும் நல்லா படிச்சு வாத்தியார் வேலைக்கு போங்க... எங்க அம்மாவைப் பார்த்துக்குங்க. அதுக்கு என்ன விட்டா யாரும் இல்லை. நான் பெரிய ஆபிஸராகி கஞ்சி ஊத்துவேன்னு கனாகண்டிட்டு இருந்தது'' என்றவன் அதற்கும் மேல் ஏதும் பேசமுடியாமல் அழுது கொண்டே சுருண்டு கிடந்தான். மீனாட்சி ஓட்டமாய் ஓடி அவன் அம்மாவிடம் சொன்னான்.

""ஐயோ என் சாமி... இப்படி நாரா கிடக்குதே!'' அழுதபடி ஓடிவந்த தெய்வானை மகனைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு உள்ளூர் நர்ஸம்மாவிடம் ஓடினாள். விளையாட்டில் இருந்த பொடியன்களும் பின்னாலேயே ஓடினார்கள். நர்ஸம்மா வீடு பூட்டிக்கிடந்தது. நர்ஸம்மா காசி பாளையம் மருத்துவமனைக்குப் போய்வந்து கொண்டிருந்தது. குப்பாயாள்தான் பையனைப் பார்த்துவிட்டு, ""அம்மை போட்டிருக்குமாட்ட இருக்குதாயா... போய் வேப்பிலையும், மஞ்சளையும் அரைச்சு இவன் உடம்புல பூசி உடு... நர்ஸம்மா இனி ஒன்பது மணிக்கி மேலதான் வரும்...'' என்றதும் தெய்வானை மகனோடு வீடு சென்றாள். அடுத்த நாள்தான் பிள்ளைகள் அனைவரும் பேசி வைத்துக்கொண்டார்கள். அதன்படியே காலையில் பள்ளிக்கூடம் போகாமல், பட்டினியோடு மரத்தடியில் அமர்ந்து கொண்டார்கள். இப்போதுதான் இவர்கள் விசயம் ஊரெங்கிலும் பரவியது!

நம்பிக்கையும் கெஞ்சலும் கலந்த கண்களுடன் அப்புக்குட்டி மேலங்காட்டுப்பாளையம் ராமசாமியண்ணன் முன்பு நின்றிருந்தான். கிராமத்தில் கொஞ்சம் காசுக்காரர் ராமசாமியண்ணன். அவர் எப்படியும் உதவுவார் என்றுதான் ஆஸ்பத்திரியில் மகனின் பக்கத்தில் தெய்வானையை நிப்பாட்டி விட்டு பஸ் ஏறி வந்திருந்தான். நர்ஸம்மா சொன்னது மாதிரி

அவனுக்கு டெங்குதான். தவிர இவனைப் போல நான்கு பேர் டெங்கு காய்ச்சலில் அங்கு படுத்திருந்தார்கள். டாக்டரும் இவனிடம், ""பயப்படாதப்பா... உன் பையனுக்கு ஒன்னும் ஆகாது...'' என்று அழும் இவன் தோளில் கை வைத்துச் சொன்னார். தெய்வானையின் கையில் இருந்த ஆயிரம் அவசரத் தேவைக்கென்று அவள் எப்போதும் பாதுகாத்து வைத்திருத்தது, ஆட்டோ வாடகை, ஆஸ்பத்திரியில் படுக்கை என்று காணாமல் போயிருந்தது!

""வாடா அப்புக்குட்டி... காத்தால நேரத்துல வர்றவன் பன்னண்டு மணிக்காட்ட வந்திருக்கே? பேரன் பள்ளிக்கூடம் போயிட்டான்... அவனுக்குத்தான் பொடணியில முடி வெட்டனும். நான் காத்தால கண்ணாடியைப் பார்த்துட்டே தாடியை இழுத்துட்டேன். இந்த மீசையை துளி கத்திரி போட்டு உடு...''

""சாமி நான் அடப்பப் பையை எடுத்துட்டு வரலீங்க... உங்களைப் பார்த்துட்டு போலாம்னு சென்னிமலை ஆஸ்பத்திரியில இருந்து ஓடிவாறனுங்க''.

""என்னடா சொல்றே?''

""பையனுக்கு ஒடம்புக்கு சுகமில்லீங்க சாமி'' என்றவன் உதடு பிதுங்கி அழவும் விசயத்தை யூகித்துக் கொண்டார் ராமசாமியண்ணன்.

""அதுக்கு என்கிட்ட காசு கேட்க வந்தியா? ஓட்டமே ஒன்னும் இல்லியேடா! திருப்பூர்ல சாயப்பட்டறை எல்லாத்தையும் சாத்திட்டாங்க... எம்பட பெரிய பையன் அதுதான போட்டிருந்தான்... இப்ப பேருக்கு சும்மா பெட்ரோலுக்கும் கேடா போயிட்டு வந்துட்டு இருக்கான்... மழை இல்லாம காடெல்லாம் சும்மா கெடக்குது.

வேணும்னா பத்து நூறு தர்றேன் வாங்கிட்டுப் போ''

""சாமி கொஞ்சம் சேத்திக் குடுத்தீங்கன்னா ஆவுமுங்ளே... எப்பிடியும் நாலு நாளைக்கி ஆஸ்பத்திரியில தான் நாங்க ரெண்டு பேரும் பையன் பக்கத்துலயே இருக்கணும்ங்ளே! ஒரு நாலாயிரமாச்சிம் குடுங்க சாமி...''

""மடியில நோட்டு இருந்தா உன்னை டாஸ்மாக் கடையில எல்லக்காட்டுல தான் வந்து புடிக்க முடியும்... இப்பத் தெரியுதா? ஒரு அத்து அவசரம்னா கையில காசு இருக்கணும்னு... கண்ணு போன பிறகுதான் சூரியனைக் கும்பிடோணும்னு நினைப்பீங்கடா... சரி சரி இந்த வருசம் கூலிப்பணம் இன்னும் நான் உனக்கு தரலீல்ல... அந்த ஐநூறோட... என் பையன் வந்தா வாங்கி ஆயிரமாத் தர்றேன்... நாளை மறுநாள் வாடா'' என்றவர் தன் வீட்டினுள் செல்லவும் அப்புக்குட்டி தன் சைக்கிளை நோக்கி தள்ளாட்டமாய் நடந்தான். அவனும் தெய்வானையும் ஒரு வாய் கஞ்சி குடித்தே இரண்டு நாட்கள் ஆகிவிட்டிருந்தன.

இனி யாரிடம் போய் பணம் கேட்பது? என்றே புரியாமல் அப்புக்குட்டி சைக்கிளில் பள்ளிக்கூடம் அருகே வருகையில் கூட்டமாய் மரத்தடியில் உள்ளுர் பெண்கள் நிற்பது கண்டு சைக்கிளை நிறுத்தினான்.

""இதென்ன அப்புக்குட்டி இங்க சைக்கிள்ல சுத்தீட்டு இருக்கறானே... ஏண்டா பையனை ஆஸ்பத்திரியில விட்டுட்டு இங்க என்னடா வேலை?'' சரஸக்காதான் அவனிடம் கேட்டது! ""அதான பாருங்கக்கா'' என்று பெண்கள் ஒருமித்த குரலில் கேட்டார்கள்.

""உன்னோட முருகேசன் உசுரு பிழைக்கோணும்னு எங்க பசங்க பிள்ளைங்க எல்லாரும் சோறு திங்காம எங்க கிட்ட காசு கேட்டுட்டு உட்கார்ந்துட்டு இருக்காங்கடா... ஞாயித்துக்கெழமை சீட்டுக்குன்னு ஐநூறு ரூபாய் வச்சிருந்தேன். அதை இப்பத்தான் எம்பட பையன் ராசுக்குட்டி கையில குடுத்தேன் என்றது பொன்னமக்கா. அப்புக்குட்டி கூட்டத்தில் நுழைந்து எட்டிப் பார்த்தான். உள்ளுர் பிள்ளைகள் எல்லாம் தலைமை ஆசிரியரை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தார்கள். தலைமை ஆசிரியர் சண்முகம் கையில் இருந்த பணத்தாள்களை எண்ணி மூவாயிரத்தி முன்னூற்றி ஐம்பது ரூபாய் இருக்குது என்றார்.

""இத்தனை பணம் அரசாங்க ஆஸ்பத்திரியில வேண்டியதே இல்லீங்கம்மா... தனியார் ஆஸ்பத்திரியில முருகேசனை சேர்த்தி இருந்தா இந்தப் பணம் கூட பத்தாது. டெங்கு காய்ச்சலுக்கு அரசாங்க மருத்துவமனையில மருந்துகள் ரெடியா இருக்குது. காய்ச்சல் பரவாம இருக்கத்தான் அரசாங்கம் இப்ப தீவிரமா நடவடிக்கை எடுத்துட்டு இருக்குது. அங்க இவ்வளவு செலவாச்சு, இங்க இவ்வளவு செலவாச்சுன்னு பேசுறதை காதுல கேட்டுட்டு பிள்ளைங்க முருகேசனை உசுரோட பார்க்க முடியாதோன்னு பயந்துட்டு உட்கார்ந்துட்டாங்க... இருந்தாலும் இதும் நல்ல விசயம் தான்... இவுரு தான அப்புக்குட்டி?'' என்று தலைமை ஆசிரியர் சண்முகம் அப்புக்குட்டியைப் பார்த்துக் கேட்கவும், ""சாமி நான் தானுங்க'' என்று அவர் காலில் விழுந்தான்.

""இதென்ன பழக்கம்?'' மிரண்டு போய் பின்வாங்கினார் சண்முகம். பெண்கள் "கொல்'லென்று சிரித்தார்கள். ""எப்பவுமே அப்படித்தான் பண்ணுவானுங்க சார்'' என்றார்கள்.

""எந்திரிப்பா மொதல்ல நீ... இந்தா இந்தப் பணத்தைப் பிடி... எப்படியும் நாலு அஞ்சு நாளைக்கு முருகேசன் ஆஸ்பத்திரிலதான் இருக்கணும். கம்பௌண்டர், நர்ஸ்களை அடிக்கடி கவனிச்சுட்டீன்னா உன் பையனை நல்ல விதமா பார்த்துப்பாங்க... உன் ஊர் பிள்ளைங்கதான் உன் முருகேசனுக்கா பட்டினி இருந்து அவங்க அம்மாக்கள் கிட்ட பணம் வாங்கி குடுத்திருக்காங்க''...

""சாமி, என் பையன் பிழைச்சா போதும் சாமி எனக்கு!

இந்தப் பணத்தை என் தலையை அடமானம் வச்சாவது பொறவு திருப்பிக் குடுத்துடறணுங்க சாமி''.

""உன் தலையை எவன் அடமானம் வாங்குவான்? பேச்சைப்பாரு... நீ நிறைய குடிப்பியாமா? சொன்னாங்க இவங்க?'' என்றார் சண்முகம்.

""இந்த குத்தமறியாத பிஞ்சுக சாட்சியா சொல்றனுங்க சாமி... சத்தியமா இனி தொடமாட்டனுங்க!'' என்று ஊர்ப் பிள்ளைகளைப் பார்த்து அழுதான் அப்புக்குட்டி.

ஒரு மணி சென்னிமலை பேருந்தில் ஏறி தலைமை ஆசிரியர் சண்முகமும், உள்ளுர் பிள்ளைகளும் சென்னிமலை மருத்துவமனை வந்திருந்தார்கள் முருகேசன் கொசுவலைக்குள் படுத்திருந்தான். நண்பர்களைப் பார்த்ததும் களைப்பாய் புன்னகைத்தான். சின்னான் மாரியம்மன் கோவில் விபூதியை முருகேசன் நெற்றியில் பூசிவிட்டான்.

""உனக்கு காய்ச்சல் சரியாகி வர்றதுக்கு ஒரு வாரமாயிடும்னு சார் சொன்னாருடா... நீ வந்ததும் ஒரு வாரம் என்ன என்ன பாடம் நடத்துனாங்கன்னு நான் உனக்கு சொல்லித் தர்றேன். சரியா?'' என்றாள் சீதா அவனிடம். முருகேசன் பலவீனமாக தலையசைத்தான்.

டாக்டர் உள்ளே வரவும் மாணவர்கள் மௌனமாக வெளியே வந்தனர். ஜன்னல் வழியாக அவர் முகத்தை பார்த்தனர். "எப்படியாவது எங்க நண்பனை காப்பாத்திருங்க டாக்டர்' என்ற இறைஞ்சுதல் எல்லார் கண்களிலும் தெரிந்தது.

நன்றி ;வாமுகோமு தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 11 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 12 Previous  1, 2, 3 ... , 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum