தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?

View previous topic View next topic Go down

என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்? Empty என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?

Post by rammalar Sun Dec 18, 2016 9:59 am




தமிழ்நாடு வெதர்மேன்! யார் இவர்?

-
கடந்த ஆண்டு சென்னையின் வரலாறு காணாத பெருவெள்ளத்தை முன்னரே கணித்துச் சொன்னதில் தமிழ்நாடு வானிலை மையத்தை அடுத்து அதிக பிரபலமாகி விட்டவர் இவர் தான்.


இவரது பெயர் பிரதிப் ஜான். ஆனால் இணையவாசிகளுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இவர் எப்போதும் ‘தமிழ்நாடு வெதர் மேன்.’ தமிழக வானிலையைப் பொருத்தவரை குறிப்பாக சென்னை வானிலையைப் பொருத்தவரை இவரது கணிப்புகள் பெரும்பாலும் தவறியதே இல்லை.


மழை நாட்களில் சென்னைவாசிகள் தினமும் காலை எழுந்ததும் பல் துலக்குகிறார்களோ இல்லையோ, காஃபி, டீ அருந்துகிறார்களோ இல்லையோ சுடச் சுட தமிழ்நாடு வெதர் மேன் வானிலை குறித்து என்ன கணித்துச் சொல்லி இருக்கிறார் என்பதைப் பார்ப்பது தான் முதல் வேலையாக இருக்கும். அந்த அளவுக்கு இவர் மீதும், இவரது கணிப்பின் மீதும் மக்களுக்கு அபார நம்பிக்கை.


எப்படி வந்தது இந்த ஆர்வம்?



பிரதிப் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது தன் வீட்டில் ஒரு முருங்கை மரம் வளர்த்திருக்கிறார். அப்போது வந்த ஒரு புயலில் பலமற்ற முருங்கை மரம் வீழ்ந்து போனது. அன்றிரவு உறங்கும் போது வீடே நிசப்தமாக இருந்த நேரத்தில் மீண்டும் புயல் வரப் போவதற்கான அறிகுறியாக ஊழிக் காற்றின் சத்தம், ஆந்தையின் கூவலைப் போல திகிலூட்டுவதாக கேட்கத் தொடங்கியது.


அச்சமாக இருந்தாலும் சற்றே பயம் கலந்த ஆர்வத்துடன் எழுந்து வானத்தை நோக்கும் போது மேகங்களின் இடம் மாறுதல், தொடர்ந்து வானில் நிகழும் மாற்றங்கள் அனைத்துமே ஏதோ ஒரு ஆர்வத்தை தூண்டும் விதமாக இருக்கவே அன்றிலிருந்தே பிரதிப் தொடர்ச்சியாக வானிலையைக் கவனிக்க ஆரம்பித்திருக்கிறார்.


பள்ளி முடித்து கல்லூரிக்குச் செல்லும் போது புவியியல் படிக்கத் தான் ஆசைப்பட்டாராம். ஆனால் அப்போதிருந்த சூழலில் குடும்பத்தினர் கணிப்பொறியியல் படித்தால் தான் எதிர்காலம் நன்றாக இருக்கும் எனக் கூறியதால் பிரதிப் கணிப்பொறியியல் எடுத்துப் படித்தார்.


வானிலை எப்படிக் கணிக்கப் படுகிறது?


வெதர் பிளாக்கர்கள் என்பவர்கள் மழையின் மீது ஆசை கொண்டவர்கள், எப்போதடா மழை வரும்? மழையின் அந்த முதல் துளி பூமியை எப்போதடா வந்தடையும்? என்றூ காத்திருக்கும் மனோபாவம் இருக்கும் அவர்களுக்கு. அதனால் மேகங்களின் தொடர்ச்சியான இடமாற்றம், காற்று வீசும் முறையில் ஏற்படும் மாறுபாடுகள், காற்றின் ஈரப்பதம் எல்லாவற்றையும் அவர்கள் கவனித்துக் கொண்டே இருப்பார்கள்.


இந்தக் குறிப்புகளை வைத்துக் கொண்டு வானிலையைக் கணிக்கவென்றே இருக்கும் நியுமெரிக்கல் மாடல்களை உபயோகித்து வானிலை கணிக்கப் படுகிறதாம்.

தமிழ்நாட்டு வானிலையைச் சொல்வதற்கு வானிலை
ஆய்வு மையம் என்ற ஒரு அமைப்பு இருக்கும் போது
இவரது தனிப்பட்ட ஆர்வத்திலான கணிப்புக்கு இது
வரை தடை வந்ததில்லையா?


அப்படி எல்லாம் தடை வந்ததில்லையாம். இது இயற்கையின் மீதான ஒரு கணிப்பு. இதை இந்த விசயத்தில் ஆர்வமுள்ள யார் வேண்டுமானாலும் கணிக்கலாம். வானிலையைக் கணிக்க எல்லோரும் ஏதாவது ஒரு நியூமெரிக்கல் மாடலைத் தான் பின்பற்றுகிறார்கள். மாடல்கள் வேண்டுமானால் மாறலாம்.
ஆனால் அவை கணித்துத் தரும் வானிலைத் தகவல்கள் பொதுவாக ஒரே மாதிரியானவையே. நமது மக்களைப் பற்றி நமக்குத் தெரியும். மழைக்காலத்தில் திறந்த வெளியில் திருமண நிகழ்ச்சி வைத்திருப்பார்கள், சிலர் ஊருக்குச் செல்ல டிக்கெட் புக் செய்து வைத்திருப்பார்கள். அம்மாதிரியான சமயங்களில் வானிலை மையத்தின் அறிக்கையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்க முடியாது இல்லையா?

இரவு 1 மணிக்கு, அதிகாலையில் எல்லாம் டி.வி யில் தோன்றி வானிலை கணிப்புகளைச் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்பதும் யதார்த்தம். எனவே இவரைப் போன்ற தனியார் வெதர் பிளாகர்கள் தன்னார்வத்தில் செய்யும் இந்தச் சேவைக்கு இது வரை யாரும் தடை சொன்னதில்லையாம்.
தமிழகத்தில் வர்தா புயலுக்குப் பின் அடுத்து மருதா புயல் வரும்
சூழல் இருக்கிறதாம்…

இப்போதைக்கு இல்லை. இன்னும் 10 நாட்களுக்கு தமிழகத்தில் கன மழைக்கோ, புயலுக்கோ வாய்ப்புகளே இல்லை. இப்போது தான் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி இருக்கிறது. அது இனி புயலாக உருவானால் மருதா என்று பெயர் வைக்கப் படலாம். டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரி ஆரம்பத்திலோ தமிழகத்தில் மீண்டும் மழை தொடங்க வாய்ப்பிருக்கிறது.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்? Empty Re: என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?

Post by rammalar Sun Dec 18, 2016 9:59 am

கடந்த ஆண்டு சென்னையே வெள்ளத்தில் மிதந்த பின்
பிரபலமடைந்தவர்களில் பிரதிப் முக்கியமானவர் அதைப்
பற்றிய அவரது கருத்து…
ஒவ்வொருவருக்கும் ஒரு ஹாபி இருக்கும். அப்படி பிரதிப்புக்கு வானிலையை முன் கூட்டி கணித்துச் சொல்வது ஒரு ஹாபி. அவருக்கு இது முழு நேர வேலையில்லை. ஒரு பன்னாட்டு நிறூவனத்தில் மென்பொறியாளராகப் பணிபுரியும் பிரதிப் தன்னுடைய தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாகவே இதையெல்லாம் செய்து வருகிறார். இதனால் பொருளாதார ரீதியாக இவருக்கு எந்தப் பலனும் இல்லை.
தனக்குப் பிடித்ததைச் செய்யும் போது கிடைக்கும் ஆத்ம திருப்தி தான் தொடர்ந்து அவரை இந்த விசயத்தில் இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது என்பதால் மக்களிடையே பிரதிப்புக்கு நல்ல வரவேற்பு உண்டு. அலுவலகத்திலிருந்து எப்போது வீடு திரும்பினாலும், தனக்கு எத்தனை அலுப்பிருந்தாலும் பிரதிப் மழைக்காலங்களில் வானிலையை கணித்துச் சொல்லாமல் இருந்ததே இல்லை. எனவே மக்கள் இவரது வானிலை கணிப்பை மிகவும் எதிர்பார்க்கிறார்கள்.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum