Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
முகநூலில் ரசித்தவை
Page 13 of 18 • Share
Page 13 of 18 • 1 ... 8 ... 12, 13, 14 ... 18
முகநூலில் ரசித்தவை
First topic message reminder :
[You must be registered and logged in to see this image.]
இந்த பகுதியில் முகநூலில் ரசித்த படங்களை பதிவிடலாம்
[You must be registered and logged in to see this image.]
இந்த பகுதியில் முகநூலில் ரசித்த படங்களை பதிவிடலாம்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: முகநூலில் ரசித்தவை
[You must be registered and logged in to see this image.]
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: முகநூலில் ரசித்தவை
[You must be registered and logged in to see this image.]
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: முகநூலில் ரசித்தவை
[You must be registered and logged in to see this image.]
இந்த உண்மை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..
ஒட்டுமொத்த இந்திய மொழிகளில் முதல் முதலில் அச்சுப் புத்தகம்' தமிழ் மொழியில் தான் எழுதப்பட்டது . எழுதப்பட்ட ஆண்டு - 1578 ஆண்டு
முதல் நூல் பதித்த இடம் இன்றைய கேரளாவின் கொல்லம் ,
முதல் நூல் பதித்த நாள் அக்டோபர் 20, 1578 .
புத்தகமாக பதிக்கப்பட்ட முதல் நூல் - புனிதசேவியர் என்கிற பாதிரியாரால் போர்த்துகீசிய மொழியில் எழுதப்பட்ட 'தம்பிரான் வணக்கம்' எனும் கிருத்துவ நூலாகும்
இந்நூலை தமிழுக்கு மொழிபெயர்த்தவர் பாதிரியார் ஹென்றிக் என்பவர் ஆவார் .
நன்றி :
Nsa Khadir via Kaleel Rahman
இந்த உண்மை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..
ஒட்டுமொத்த இந்திய மொழிகளில் முதல் முதலில் அச்சுப் புத்தகம்' தமிழ் மொழியில் தான் எழுதப்பட்டது . எழுதப்பட்ட ஆண்டு - 1578 ஆண்டு
முதல் நூல் பதித்த இடம் இன்றைய கேரளாவின் கொல்லம் ,
முதல் நூல் பதித்த நாள் அக்டோபர் 20, 1578 .
புத்தகமாக பதிக்கப்பட்ட முதல் நூல் - புனிதசேவியர் என்கிற பாதிரியாரால் போர்த்துகீசிய மொழியில் எழுதப்பட்ட 'தம்பிரான் வணக்கம்' எனும் கிருத்துவ நூலாகும்
இந்நூலை தமிழுக்கு மொழிபெயர்த்தவர் பாதிரியார் ஹென்றிக் என்பவர் ஆவார் .
நன்றி :
Nsa Khadir via Kaleel Rahman
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: முகநூலில் ரசித்தவை
[You must be registered and logged in to see this image.]
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: முகநூலில் ரசித்தவை
[You must be registered and logged in to see this link.]
Last edited by ஸ்ரீராம் on Mon Dec 30, 2013 12:38 pm; edited 1 time in total
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: முகநூலில் ரசித்தவை
[You must be registered and logged in to see this image.]
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: முகநூலில் ரசித்தவை
[You must be registered and logged in to see this image.]
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: முகநூலில் ரசித்தவை
[You must be registered and logged in to see this image.]
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: முகநூலில் ரசித்தவை
அமெரிக்க சிறுவன் ஒருவனுக்கு பயங்கர பணகஷ்டம். அவனுக்கு ஒரு அம்பது டாலர் தேவைப்பட்டது. கடவுளிடம் வெகு நாளாக வேண்டி பார்த்தான். ஒண்ணும் வேலைக்கு ஆகவில்லை.
கடைசியாக பணம் தர வேண்டி கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். உறையின் மேல் கடவுள், அமெரிக்கா என்று எழுதி தபாலில் சேர்த்து விட்டான். பட்டுவாடா பண்ண வேண்டிய தபால் அதிகாரிகள் இந்த கடிதத்தை பார்த்து ஆச்சரியபட்டார்கள்.
ஒரு ...விளையாட்டாக அதை வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைத்தார்கள்.ஒபாமாவிற்கு ஒரே ஆச்சர்யம். "சரி.. இந்த பையனுக்கு உதவுவோம்.
ஆனால் ஒரு சிறு பையனுக்கு அம்பது டாலர் எல்லாம் அதிகம். எனவே இருபது டாலர் மட்டும் அனுப்புவோம்" என்று அனுப்பி வைத்தார். பணம் கிடைத்தவுடன் பையனுக்கு குஷி தாளவில்லை. நன்றி தெரிவித்து கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். "ரொம்ப நன்றி கடவுளே.. நான் கேட்ட மாதிரி பணம் அனுப்பி வச்சுட்டீங்க..
ஆனாலும்.. நீங்க அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆபீஸ் மூலமா பணம் அனுப்புனத நான் கவர பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்.. தயவு செஞ்சு இனிமேல் அப்படி அனுப்பாதீங்க.. நீங்க அனுப்புன காசுல பாதிய அந்த ஒபாமா திருடிட்டான்.
நன்றி: முகநூல்
கடைசியாக பணம் தர வேண்டி கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். உறையின் மேல் கடவுள், அமெரிக்கா என்று எழுதி தபாலில் சேர்த்து விட்டான். பட்டுவாடா பண்ண வேண்டிய தபால் அதிகாரிகள் இந்த கடிதத்தை பார்த்து ஆச்சரியபட்டார்கள்.
ஒரு ...விளையாட்டாக அதை வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைத்தார்கள்.ஒபாமாவிற்கு ஒரே ஆச்சர்யம். "சரி.. இந்த பையனுக்கு உதவுவோம்.
ஆனால் ஒரு சிறு பையனுக்கு அம்பது டாலர் எல்லாம் அதிகம். எனவே இருபது டாலர் மட்டும் அனுப்புவோம்" என்று அனுப்பி வைத்தார். பணம் கிடைத்தவுடன் பையனுக்கு குஷி தாளவில்லை. நன்றி தெரிவித்து கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். "ரொம்ப நன்றி கடவுளே.. நான் கேட்ட மாதிரி பணம் அனுப்பி வச்சுட்டீங்க..
ஆனாலும்.. நீங்க அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆபீஸ் மூலமா பணம் அனுப்புனத நான் கவர பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்.. தயவு செஞ்சு இனிமேல் அப்படி அனுப்பாதீங்க.. நீங்க அனுப்புன காசுல பாதிய அந்த ஒபாமா திருடிட்டான்.
நன்றி: முகநூல்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: முகநூலில் ரசித்தவை
பெரும் புள்ளிகள்
1. நெப்போலியன் தோல்வியுற்றதும் பிரிட்டிஷ் அரசு, நெப்போலியனை இனி யாரும் பேரரசர் என்று அழைக்கக் கூடாது. வெறும் "ஜெனரல்' என்று அழைத்தால் போதும் என உத்தரவிட்டதாம். அதற்கு நெப்போலியன், "எப்படி அழைத்தாலும் நான் நானாகவே இருப்பேன்' என்றாராம் குலையாத தன்னம்பிக்கையுடன்!
2. தென் அமெரிக்காவில் உள்ள உருகுவே நாட்டின் அதிபர் ஜோஸ் மியுஜிகா உலகிலேயே ஏழ்மையான அதிபர் எனப் பெயரெடுத்தவர் ஆவார். விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவர் தனது மாத சம்பளத்தில் 90 சதவீதத்தை ஏழை மக்களுக்குத் தானமாக வழங்கி வருகிறார். அரண்மனையில் வசிக்காமல் விவசாயப் பண்ணை வீட்டிலேயே வசித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
3. இங்கிலாந்தில் வசிக்கும் 71 வயதான ஜான் மெக்காபெர்டி என்பவர் மாற்று இருதய அறுவைச் சிகிச்சை செய்த பிறகு 31 ஆண்டுகள் சுகமாக இருக்கிறார். மாற்று இருதயம் பொருத்திய பின்னர் மருத்துவமனையில் உள்நோயாளியாக மட்டும் 5 ஆண்டுகள் இருந்துள்ளார். இதன் காரணமாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் அவரது பெயர் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மாற்று அறுவைச் சிகிச்சைக்கென காத்திருப்பவர்களுக்கு இச்சம்பவம் ஆறுதல் அளிக்கிறது.
4. சவுதி இளவரசர் (பட்டத்து இளவரசர்) சல்மானுக்கு தனது நாட்டு பிரஜை ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய சட்டம் சகாரியா பாகுபாடு இல்லாமல் அனைத்துத் தரப்பினருக்கும் பொருந்தும் என அந்நாட்டு உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். மரண தண்டனைக்குப் பதிலாக குற்றவாளியிடமிருந்து ரத்ததானம் பெற்றிடுமாறு கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நன்றி: முகநூல்
1. நெப்போலியன் தோல்வியுற்றதும் பிரிட்டிஷ் அரசு, நெப்போலியனை இனி யாரும் பேரரசர் என்று அழைக்கக் கூடாது. வெறும் "ஜெனரல்' என்று அழைத்தால் போதும் என உத்தரவிட்டதாம். அதற்கு நெப்போலியன், "எப்படி அழைத்தாலும் நான் நானாகவே இருப்பேன்' என்றாராம் குலையாத தன்னம்பிக்கையுடன்!
2. தென் அமெரிக்காவில் உள்ள உருகுவே நாட்டின் அதிபர் ஜோஸ் மியுஜிகா உலகிலேயே ஏழ்மையான அதிபர் எனப் பெயரெடுத்தவர் ஆவார். விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவர் தனது மாத சம்பளத்தில் 90 சதவீதத்தை ஏழை மக்களுக்குத் தானமாக வழங்கி வருகிறார். அரண்மனையில் வசிக்காமல் விவசாயப் பண்ணை வீட்டிலேயே வசித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
3. இங்கிலாந்தில் வசிக்கும் 71 வயதான ஜான் மெக்காபெர்டி என்பவர் மாற்று இருதய அறுவைச் சிகிச்சை செய்த பிறகு 31 ஆண்டுகள் சுகமாக இருக்கிறார். மாற்று இருதயம் பொருத்திய பின்னர் மருத்துவமனையில் உள்நோயாளியாக மட்டும் 5 ஆண்டுகள் இருந்துள்ளார். இதன் காரணமாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் அவரது பெயர் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மாற்று அறுவைச் சிகிச்சைக்கென காத்திருப்பவர்களுக்கு இச்சம்பவம் ஆறுதல் அளிக்கிறது.
4. சவுதி இளவரசர் (பட்டத்து இளவரசர்) சல்மானுக்கு தனது நாட்டு பிரஜை ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய சட்டம் சகாரியா பாகுபாடு இல்லாமல் அனைத்துத் தரப்பினருக்கும் பொருந்தும் என அந்நாட்டு உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். மரண தண்டனைக்குப் பதிலாக குற்றவாளியிடமிருந்து ரத்ததானம் பெற்றிடுமாறு கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நன்றி: முகநூல்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: முகநூலில் ரசித்தவை
துரோணர் செய்த மிகவும் கீழ்த்தரமான செயல் இது!
மகாபாரத்தில் மிகவும் நல்ல மற்றும் பரிதாபத்திற்குரிய கதா பாத்திரம் எவர் என்றால் அது ஏகலை வன் மற்றும் கர்ணன் என்றும் சொல் லலாம்.
இந்த பதிவில் ஏகலைவனின் குருபக் தியையும், துரோணரின் கீழ்த் தரமான செயலையும் பற்றி பார்போ ம்.
ஏகலைவன், வேடுவர் குடுபத்தி லே பிறந்தவன். இவனுக்கு வில்வித் தையை கற்கவேண்டும் என்கிற எண் ணம் இருந்தது அதனால் அவன் துரோணாச்சாரியரிடம் சகல கலைக ளையும் பயிற்சிபெற குரு தட்சனை வைத்து அனுமதி கேட்டான்.
ஆனால் துரோணரோ ஏகலைவன் வேடுவர் கு லத்தை சேரந்ததால் வில் வித்தையை கற்றுத்தர மறுத்து விட்டார்.
சத்திரியர்களுக்கு மட்டுமே வில் வித்தை கற்று தரு வேன் என்று கூறிவிட்டார்.
இதனால் மனம் மகிழ்ச்சிடையாத
ஏகலைவன் மனத்தினை தளரவிடாது தனது இருப்பிடமான வனத்திற்குச் சென்றான்.
து ரோணாச்சாரியாரைப் போ லவே சிலை யொன்றினை செய்தான்.
அந்தச் சிலையையே தமது குருவாக எண்ணி நாள்தோ றும் வழி பாடு செய்து வித்தையைத் தாமே கற்றுக் கொள்ளத் துவங்கினான்.
இதனால் இவனிடம் அமைந்து இருந்த குரு பக்தியும் ஆர்வமும் சேர்ந்து மிகவும் திறமையுள்ளவனாகவு ம், போர்க் கலையில் தேர்ந்த பெருமகனாக இவன் உருவாக் கினான்.
இவனிடம் வில் வித் தையின் நுணுக்கங்கள் ஒன்று சேர்ந்து இவனை பெரிய வில் லாளனாக மாற்றியிருந்தது.
வில்வித்தையி ல் இவன் மிகவும் வல்லவனாக மாறி இருந் தான்.
இந்த நேரத்தில் துரோணரிடம் பயிற்சி பெ ற்று வந்த பாண்ட வர்களும் கெளரவர்களும் வேட்டைக்காக வனத்திற்கு வந்தார்கள்.
து ரோணரைப் பொறுத்த வரையில் அவருடை ய பயிற்சியாளர்களிலே வில்வித்தையில் சிறந்தவன் எனப் பெயர் பெற்றவன் அர்ச்சுனன் ஆவான்.
இத னால் தான் வில்லுக்கு விஜயன் என்கிற பெயர் பெற்றான் அர்ச்சுனன்.
எனவே மற்றவர்கள் புரிந்துகொள்ள முடியாத நுணுக்க மான வித்தைகளை கூட இவனுக் குக் கற்பித்து இருந்தார் துரோணர்.
வேட்டைக்கு அர்ச்சுனனும் வந்திரு ந்தான்.
அவனைத் தவிரவும் வில் வித்தையில் சிறந்தவர் ஒருவர்
யா ரும் இருக்கக் கூடாது என்பது து ரோணருடைய அபிப்பிராயமாக இருந்தது.
இவர்கள் வேட் டைக்கு செல்கின்ற போது உடன் நாய்களும் அழைத்துக்கொ ண்டு சென்றிருந்தனர்.
இதிலே ஒரு நாயானது ஏகலைவன் வில் வித்தையை பயிலும் இடத்திற்கு வந்துவிட்டது.
தமது ஆற்றலினால் அந்த நா யினை அடக்கி வைத்திருந்தா ன் ஏகலைவன். அது அவனு டைய வில்லாற்றலினால் அடங்கிப் போய், துரோணரு ம் ராஜகுமாரர்களும் இருந்த இடத்திற்கு வந்தது.
நாய் அவ்வாறு அடக்கி வந்ததைக் கண்ட யாவரும் அதிசயி த்துப் போனார்கள்.
இத்தகு ஆற்ற ல் உள்ளவன் யாரென்பதி னை அறிந்து கொள்ள அவர்கள் வனம் முழுக்கத் தேடி, அத்தகு சிறந்த வீரர் ஏகலைவன் என்பதனை அறி ந்து துரோணரிடம் வந்து அவனை ப் பற்றிக் கூறினார்கள்.
துரோண ருக்கு அவனைப் பற்றிய செய்தி மிகவும் வியப்பினைத் தந்தது. அவ னைக் காண அவரே அவனைத் தேடிச் செல்கின்றார்.
துரோணரைக் கண்ட ஏகலைவன் அவரை வணங்கி வரவே ற்று உபசரிப்பு செய்தான்.
நாயின் வா யைக் கட்டக்கூடிய
வித் தையை உனக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள் என்று துரோணர் அவனிடம் வினாவினா ர்.
எனது குருநாதர்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.
யார் உன்னுடைய குரு?
நீங்கள் தான் துரோணாச்சாரியாரே……
அர்ச்சுனன் ஒருவனைத் தவிர இந்த வில் வித்தையை நான் யாருக்கும் சொல்லித் தரவில்லையே…. நீ என்னுடைய சீடனும் கிடையாது.
என்னி டம் வித்தைகளை ப் பயின்ற வனும் கிடையாது. அப்படியி ருக்க நான் எப்படி உனக்குக் கற்றுக் கொடுத்தேன்,
உங்கள் உருவத்தினை செய்து அதனை யே தாங்களாக நினைத்து என து போக்கில் வித்தை களைக் கற்றுக் கொண்டேன்.
அவ்வளவு குருபக்தியா உன க்கு என்னிடம்.
ஆமாம். உங்க ளிடம் வில்வித்தை கற்றுக் கொள்ள குருதட்சிணையோடு வந்தேன்.
ஆனால் நான் வேடுவன் என்ப தினால் நீங்கள் கற்று த் தரவில்லை.
எனவே உங்களைப்போன்ற சி லையைசெய்து நானே இவற்றினைக் கற்றுக் கொண் டேன்.
அப்படியானால் எனது வித்தைகளை கற்ற நீ… எனக்கு குரு தட்சி ணையாக எதைக் கேட்டாலும் தருவாயா?
எப்போது நீங்கள் குரு என்றும் நான் உங்களின் சீடன் என்றும் அங்கீகா ரம் அளித்தீர்களோ அப்போது உங்களுக்கு குருதட்சணையா க எதுவும் தருவதற்கு நான் மிகவும் சித்தமாக உள்ளே ன்.
எது வேண்டு மானாலும் கேளுங்கள் என்றான்.
உன து வலதுகை கட்டை விர லை எனக்கு குரு தட்சினை யாக தருவாயா?
அப்படியே ஆகட்டும் என்று தமது வல து கைகட்டை விரலை அறு த்துக் கொடுத்தான் ஏகலை வன்.
இது தகாத செயல்தான், ஆனால் துரோணரைப் பொறுத்த வரையில் இது அவசியமான விஷய மாகும்.
இதனால் ஏகலைவனிடம் இ ருந்த தனுர் வேத நுணுக்கங்கள் மறை ந்தன.
வேடுவனுக்கு இக்கலை தே வையில்லை என்பதினாலேயே துரோ ணர் இவ்வாறு செய்தார்.
மேலும் எதிர் காலத்தில் பெரும் போர்கள் நேரிட் டால் அப்போது இவன் நம்க்கு எதரி யாக மாறினால் அது பெரும் ஆபத் தை நமக்கு விளைக்கும் என்ற எண் ணத்திலும் துரோணர் இவ்வாறு கீழ் த்தரமாக நடந்துகொண்டார்.
இருந் தாலும் ஏகலைவன் மிகவும் புகழ் பெ ற்றவனாக இதன் பொருட்டு ஆளாகி னான்.
நன்றி – தமிழ் கடல், முகநூல்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: முகநூலில் ரசித்தவை
[You must be registered and logged in to see this image.]
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: முகநூலில் ரசித்தவை
அக்கு பஞ்சர் சிகிச்சை என்பது சீனாவிலிருந்து
இந்தியாவுக்கு வந்த நரம்பு சிகிச்சை என்கின்றனர் .
ஆனால் அதற்கு முன்பே நாம் 'அக்கு பஞ்சர் '
ரகசியத்தை அறிந்து வைத்திருந்தோம்.
'தோப்புக்கரணம்'போடுவது ஒருவகை
அக்கு பஞ்சர் முறைதான் . அக்கு பஞ்சர்
நியதிகளின் படி ,வலது கண்ணின் மர்மஸ்தானம்,
இடது காதின் நுனியிலும் இடது கண்ணின் மர்மஸ்தானம் ,வலது காதின் நுனியிலும் உள்ளன .
ஆகவே ,காது நுனிகளை லேசாக அழுத்தம்
கொடுத்து கீழ் நோக்கி இழுத்தால் கண் தசை நார்கள்
பலம் பெறும் .
தோப்புக்கரணம் போடும் போது கை காதுகளைப்
பிடித்துக் கொள்வதாலும் ,அதே சமயம் கீழ் நோக்கி தாழ்ந்து எழுவதாலும் காது நுனிகள் போதுமான அழுத்தத்தில் கீழ் நோக்கி இழுக்கப் பட்டு ,
கண் பார்வை கூர்மை அடைய உதவுகிறது.
இதனால் கண் புரை உபாதைகள் தோப்புக்கரணம்
போடுபவர்களுக்கு வருவதில்லை !
நன்றி: முகநூல்
இந்தியாவுக்கு வந்த நரம்பு சிகிச்சை என்கின்றனர் .
ஆனால் அதற்கு முன்பே நாம் 'அக்கு பஞ்சர் '
ரகசியத்தை அறிந்து வைத்திருந்தோம்.
'தோப்புக்கரணம்'போடுவது ஒருவகை
அக்கு பஞ்சர் முறைதான் . அக்கு பஞ்சர்
நியதிகளின் படி ,வலது கண்ணின் மர்மஸ்தானம்,
இடது காதின் நுனியிலும் இடது கண்ணின் மர்மஸ்தானம் ,வலது காதின் நுனியிலும் உள்ளன .
ஆகவே ,காது நுனிகளை லேசாக அழுத்தம்
கொடுத்து கீழ் நோக்கி இழுத்தால் கண் தசை நார்கள்
பலம் பெறும் .
தோப்புக்கரணம் போடும் போது கை காதுகளைப்
பிடித்துக் கொள்வதாலும் ,அதே சமயம் கீழ் நோக்கி தாழ்ந்து எழுவதாலும் காது நுனிகள் போதுமான அழுத்தத்தில் கீழ் நோக்கி இழுக்கப் பட்டு ,
கண் பார்வை கூர்மை அடைய உதவுகிறது.
இதனால் கண் புரை உபாதைகள் தோப்புக்கரணம்
போடுபவர்களுக்கு வருவதில்லை !
நன்றி: முகநூல்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: முகநூலில் ரசித்தவை
நொந்துபோன ஒரு காதலன் காதலியிடம்
கேட்க நினைக்குற,ஆனா கேட்க முடியாம
மனசுக்குள்ளேயே புதைச்சு வெச்சுக்குற சில
கேள்விகளை பார்க்கலாம்.....
நாங்கதான் உங்களுக்கு ரீ-சார்ஜ்
பண்ணி அனுப்புறோம். ஆனாலும் நீங்க
எதுக்கு மிஸ்டு கால் கொடுத்தே எங்க
உயிரை வாங்குறீங்க?
உங்ககிட்ட ஃபோன்ல பேசின
காசையெல்லாம் சேர்த்து வெச்சிருந்தா,
நான் லோன் போட்டு பைக் வாங்கி இருக்க
வேண்டிய அவசியமே இருந்திருக்காது.
ஒரு பொண்ணு கொடுக்குற மிஸ்டு காலை
மட்டும் யாராலும் அட்டெண்ட் பண்ணவே முடியாது.
அவ்ளோ ஷார்ப்பா கட் பண்ணுவாங்க.
இப்படி மிஸ்டுகால் கொடுக்க நீங்க
எந்த யுனிவர்சிட்டியில ட்ரெயினிங்
எடுத்துகிட்டிங்க?
ஃபோன்ல நாங்களேதான் பேசிகிட்டு இருக்கோம்.
எதைக்கேட்டாலும் "நீங்க சொல்லுங்க,
நீங்க சொல்லுங்க'ன்னா" நாங்க என்னத்தை
சொல்லி தொலைக்குறது? உங்களுக்கு எதையுமே
பேச தெரியாது போலன்னு நினைச்சு நாங்க
பாட்டுக்கு எதையாவது சொல்லி தொலைச்சுடுவோம்.
அதையே மனசுல வெச்சுகிட்டு, கல்யாணத்துக்கு
அப்புறம் வாங்கி கட்டிக்கிறது எங்களுக்கு மட்டும்தான்
தெரியும். அது எப்படி பேசவே தெரியாத மாதிரி
சீன் போடுறீங்க?
மெசேஜ்'ல மட்டும் ரொம்ப ரொமாண்டிக்கா SMS
அனுப்பி எங்க தூக்கத்தை கெடுக்குறீங்க.
ஆனா அதையே நேர்ல சொல்ல சொன்னா மட்டும்
வெட்கத்தையே என்னமோ நீங்கதான் குத்தகைக்கு
எடுத்த மாதிரி வெட்கப்படுறீங்க?
இது எப்படி உங்களால மட்டும் முடியுது?
மெசேஜ் அனுப்பும் போதெல்லாம்
உங்க வெட்கத்தை என்ன
ஃப்ரிட்ஜ்'க்கு உள்ளே ஒளிச்சி வெச்சிடுவீங்களா?
நீங்க கிஃப்ட் கொடுத்தா மட்டும் விலையைப்
பார்க்க கூடாது. அதுல உங்க அன்பைத்தான்
பார்க்கணும். ஏன்னா நிச்சயமா அந்த கிஃப்ட்
கீ-செயினாவோ, கர்ச்சீஃபாவோ, இல்லை
அதிகபட்சமா மணிபர்ஸாவோதான்
இருக்கும். ஏன்னா அதுங்கதான் ஐம்பது
ரூபாய்க்கு கிடைக்கும். ஆனா இதே நாங்க
கிஃப்ட் கொடுக்கும் போது மட்டும் சுடிதாரோ,
செல்ஃபோனோ, தங்க செயினோ, வெள்ளி
கொலுசோ, குறைஞ்சது 3,000/- ரூபாய்க்கு
செலவு பண்ணாதான் நாங்க உங்க மேல
உண்மையான அன்பு வெச்சிருக்கிறதா
அர்த்தம். என்ன கரெக்ட்டா? உங்க அன்போட
அளவுகோலுக்கு எல்லையே கிடையாதா?
நீங்க யூஸ் பண்ணி தூக்கி போட்ட
பொருளை எல்லாம் நாங்க சேர்த்து
வெச்சிருக்கணும்னு எதிர்பார்க்குறீங்களே,
நாங்க என்ன நீங்க தூக்கி போடுறதை
எல்லாம் சேர்த்து வெக்கிற குப்பை தொட்டியா?
நண்பர்களே இந்தக் கேள்விகளை எல்லாம்
படிக்கிறதோட நிறுத்திக்குங்க. தப்பித்தவறி
கூட இந்தக் கேள்விகளை நீங்க உங்க
காதலிகிட்ட கேட்டீங்கன்னு வெச்சுக்குங்க........
அவ்வளவுதான் ஜோலி முடிஞ்சுது.
நன்றி முகநூல்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: முகநூலில் ரசித்தவை
இஞ்சிப் பால்..! இதை சாப்பிட்டால்…..
கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க.
ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?
ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.
அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.
அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?
1. நுரையீரல் சுத்தமாகும்.
2. சளியை ஒழுச்சு கட்டிடும்.
3. வாயுத் தொல்லை என்பதே வராது.
4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.
5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.
6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.
7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.
8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.
9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.
10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.
அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?
3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.
ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்.
மீதிப்பேர் சாப்பிடலாம்.
என்ன நாளையில இருந்து உங்க வீட்டில காப்பிக்கு பதில் இஞ்சிப்பால்தானே?
கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க.
ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?
ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.
அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.
அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?
1. நுரையீரல் சுத்தமாகும்.
2. சளியை ஒழுச்சு கட்டிடும்.
3. வாயுத் தொல்லை என்பதே வராது.
4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.
5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.
6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.
7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.
8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.
9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.
10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.
அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?
3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.
ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்.
மீதிப்பேர் சாப்பிடலாம்.
என்ன நாளையில இருந்து உங்க வீட்டில காப்பிக்கு பதில் இஞ்சிப்பால்தானே?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: முகநூலில் ரசித்தவை
[You must be registered and logged in to see this image.]
அத்தனை தெய்வங்களும் அருளும் அற்புத ஆலயம்
இன்று சங்கட ஹர சதுர்த்தி
ஒவ்வொரு சங்கட ஹர சதுர்த்தி தினத்தன்றும் இங்குள்ள பஞ்சமுக ஹேரம்ப கணபதிக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
இன்று இந்த ஆலயத்திற்கு சென்று இறைஅருள் பெறுவோமாக
சென்னை சேலையூர்-ஸ்கந்தாஸ்ரமம் புவனேஸ்வரி தேவி
புதுக்கோட்டை ஜட்ஜ் சுவாமிகளின் சீடர் ஸ்வயம்பிரகாசர்.
அவரது சீடர் சாந்தானந்த சுவாமிகள்.
1921ல் அவதரித்த அவரது இயற்பெயர் சுப்ரமணியம்.
அவரால் ஸ்தாபிக்கப்பட்ட தலங்கள் ஸ்கந்தாஸ்ரமம் என பெயர் பெற்றன.
சேலம் ஸ்கந்தாஸ்ரமத்தைத் தொடர்ந்து அவரால் எழுப்பப்பட்ட ஸ்கந்தாஸ்ரமம் எனும் அற்புத ஆலயம் சென்னை-சேலையூரில் உள்ளது.
2002ம் வருடம் மே 27ம் தேதி இவர் மகா சமாதி அடைந்தார்.
பிரமாண்ட முறையில் கண்களைக் கவரும் சிற்ப வேலைப்பாடுகளுடன் விளங்கும் இறை உருவங்களை இத்தலத்தில் தரிசிக்கலாம்.
ஆலயத்தில் நுழைந்ததும் பஞ்சமுக ஹேரம்ப கணபதியை தரிசிக்கலாம்.
ஐந்து யானை முகங்களோடு, அபயம், வரம், பாசம், தந்தம், ருத்ராட்சமாலை, அங்குசம், பரசு, உலக்கை, கொழுக்கட்டை, பழம் ஆகியவற்றைத் தன் பத்து கரங்களில் ஏந்தி அற்புத கோலத்தில் அருள்புரிகிறார்.
ப்ருசுண்டீ எனும் பக்தருக்கு அருள் வழங்க விநாயகர் எடுத்த திருக்கோலமாம் இது.
போஜராஜன் இயற்றிய ராமாயண சம்பூ எனும் காவியத்தில் கடவுள் வாழ்த்தில் இந்த ஹேரம்ப கணபதியின் திருவுருவை அவர் பாடிப் போற்றியுள்ளார்.
ஒவ்வொரு சங்கட ஹர சதுர்த்தி தினத்தன்றும் இந்த கணபதிக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
இவரை வலம் வரும்போது கோஷ்டத்தில் பாலகணபதி, ஹேரம்ப கணபதி, லட்சுமி கணபதி ஆகியோரின் சுதை உருவங்களையும் தரிசிக்கலாம்.
ஆலயத்தினுள் நுழைந்ததும் கருவறையில் 6 அடி உயரத்தில் அன்பே வடிவாய், அழகே உருவாய் பாசம், அங்குசம், வரத-அபய கரங்கள் தாங்கி புவனேஸ்வரி அருள்கிறாள்.
இத்தேவியை வலம் வரும்போது கோஷ்டங்களில் தசமகாவித்யா தேவியர்களையும் ஒருசேர தரிசிக்கலாம்.
செவ்வாய், வெள்ளி, பௌர்ணமி, ஆடிவெள்ளி, தைவெள்ளி, சாரதா நவராத்திரி தினங்களில் இந்த புவனேஸ்வரி தேவிக்கு வித விதமான அபிஷேகங்களும், அலங்காரங்களும் செய்யப்படுகின்றன.
தேவியை வழிபடுபவர்களுக்கு அவளின் கடைக்கண் பார்வையால் சகல சௌபாக்கியங்களும் கிட்டுகின்றன என அபிராமி பட்டர் கூறியதை மெய்ப்பிப்பவள் இந்த புவனேஸ்வரி தேவி.
அன்னைக்கு வலப்புறம் தல கணபதியான கமலசித்தி விநாயகர் கோயில் கொண்டுள்ளார்.
இடப்புறம் சாந்தானந்தரின் சந்நதி உள்ளது.
தன் குருநாதர்களோடு அவர் திருவருள் புரிகிறார். புவனேஸ்வரி தேவியின் சந்நதிமுன் பூரண மஹாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
‘ஸுமேருமத்ய ஸ்ருங்கஸ்தா ஸ்ரீமன்நகரநாயிகா’ என மஹாமேருவை லலிதா ஸஹஸ்ரநாமம் போற்றுகிறது.
தேவியை மேருவில் ஆவாஹனம் செய்து பூஜித்தால் அம்பிகையின் அருளால் சகல தோஷங்கள், கிரக தோஷங்கள் நீங்கி பக்தன் அனைத்து நலன்களும் பெறுவான் என மூகபஞ்சசதியும் கூறுகிறது.
பஞ்சமி, அஷ்டமி, நவமி, சதுர்த்தசி, பௌர்ணமி, அமாவாசை, ஆடிவெள்ளி, தைவெள்ளி, சாரதா நவராத்திரி காலங்களில் இந்த மேருவிற்கு நவாவரண பூஜைகள் செய்யப்படுகிறது.
ஆவரண தேவதைகளுடன் சேர்த்து அம்பிகையை பூஜிப்பது என்பது ‘மஹாயாக க்ரமாராத்யா’ என்ற ஒரு யாகத்தை நிறைவேற்றுவதற்கு ஒப்பாகும் என்றே சொல்லப்பட்டுள்ளது.
பக்தர்கள் பெருமளவில் இந்த பூஜையில் கலந்து கொண்டு தேவியின் திருவருளைப் பெறுகின்றனர்.
தேவிக்கு வலப்புறம் உள்ள சந்நதியில்
சரபேஸ்வரர் அருள்கிறார்.
நாராயணனே எல்லாம், அவனே எங்கும் உளன் என்பதை தன் மகன் கூறியதைக் கேட்ட ஹிரண்யன், அகந்தையால் இறையடி பணிய மறுத்தபோது நரசிம்மமூர்த்தி அவனைக் கொன்று ஆரவாரித்தார்.
அவரது ஆரவாரத்தால் உலகமே அழிந்துவிடுமோ என அனைவரும் அதிர்ந்தபோது ஈசன், சரபேஸ்வர அவதாரம் எடுத்தார்.
தன் இறக்கைகளாலும் கால்களாலும் நரசிம்மரை கட்டி அணைத்து அவர் சினம் தணித்து இந்த உலகைக்காத்தார் என காஞ்சிபுராணம் கூறுகிறது.
பட்சிகளின் அரசனாக ‘ஸாலுவேசன்’ எனும் திருநாமமும் இவருக்கு உண்டு. பத்தடி உயரத்தில் பஞ்சலோகத்தினாலான சரபேஸ்வரர் தன் திருக்கரங்களில் மான், மழு, சர்ப்பம், தீ ஏந்தியுள்ளார்.
கொடிய பகைவரை அழித்து தீராத இன்னல் தீர்த்து சரணடைந்தோர்க்கு அபயமளிக்கும் தெய்வம் சரபமூர்த்தி என வேதங்கள் போற்றுகின்றன.
பகைவர், நோய், வனத்தில் பயம், பாம்பு போன்ற விஷ ஜந்துக்களால் வரும் ஆபத்துகள், தீவிபத்து, யானை, கரடி போன்ற விலங்குகளின் தொல்லை, பஞ்சபூதங்களால் வரும் ஆபத்து போன்றவற்றிலிருந்து சரபேஸ்வரர் காப்பார் என அதர்வண வேத மந்திரம் குறிப்பிடுகிறது.
பிரதோஷ வேளைகளிலும் ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையிலும் இவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
இவரது பிராகார சுற்றுச் சுவர்களில் பைரவரின் பல்வேறு மூர்த்தங்கள் சுதைச் சிற்பங்களாக விளங்குகின்றன.
தமிழகத்தில் அறுபடை வீடுகள் கொண்டு அருளாட்சி செய்துவரும்
முருகனை ஸ்வாமிநாதனாக, 10 அடி உயரத்தில் எழில் கொஞ்சும் திருவடிவில் இத்தலத்தில் தரிசிக்கலாம்.
மிகவும் வரப்ரசாதி இவர். புவனேஸ்வரி தேவியின் நேர் எதிரே இவர் சந்நதி உள்ளது. தாயின் பார்வையில் எப்போதும் இருப்பதால் இந்த முருகப்பெருமான் கருணையில் வடிவாகவே அருட்காட்சியளிக்கிறார்.
‘குருவாய் வருவாய் அருள்வாய் குகனே’ என அருணகிரிநாதப் பெருமான் பாடியபடி இந்த முருகன் அடியார்களுக்கு குருவாய் இருந்து அவர் தமக்கு வருவாய் எனும் செல்வ வளத்தையும் அருள்கிறார்.
இவரது பிராகார சுற்றுச் சுவர்களில் அறுபடை வீட்டு முருகப்பெருமான்களும், கதிர்காம முருகனும், பாலமுருகனும் சுதை வடிவில் அருள்கின்றனர்.
ஞானமும், செல்வமும் வேண்டும் பக்தர்கள் இந்த மேற்கு பார்த்த சுவாமிநாதப் பெருமானை வணங்கி வளம் பெறுகின்றனர்.
சூரனை வதம் செய்ய, தாயை வணங்கி, சக்தி வேலைப் பெற்றதை நினைவுறுத்தும் வகையில் தாய் புவனேஸ்வரியின் திருவுருவின் எதிரில் பணிவுடன் கொலுவிருக்கிறார்.
தந்தைக்கே பாடம் சொன்ன, குருவின் குருவாக அருளும் இவரை குருபெயர்ச்சி நாளில் வணங்குதல் சிறப்பாகக் கூறப்படுகிறது.
கந்த சஷ்டி விரதத்தையொட்டி, ஆறு நாட்களிலும் வித விதமான அலங்காரங்களில் ஜொலிப்பார் இவர்.
கிருத்திகை தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படுகின்றன.
அதற்கு அடுத்த சந்நதியில் சரபேஸ்வரரின் நேர் எதிரே ப்ரத்யங்கிரா தேவி அருளாட்சி புரிகிறாள். சூலம், பாசம், டமருகம், கபாலம் ஆகியவற்றைத் தன் கைகளில் ஏந்தி அருள்கிறாள்.
சிங்கத்தின் மீது அமர்ந்த திருக்கோலம். சதி எனும் பார்வதியின் கோபமே ப்ரத்யங்கிராவாக உருவெடுத்ததாக மந்திர சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இந்திரஜித் ராம-லட்சுமணரை வெல்ல இந்த ப்ரத்யங்கிரா தேவியைக் குறித்தே நிகும்பலா யாகம் செய்தான்.
அந்த யாகம் நிறைவு பெற்றால் அவனை யாராலும் அழிக்க முடியாது என்பதற்காக லட்சுமணன் அவனை அழித்ததாக புராணங்கள் பகர்கின்றன. தன்னை வழிபடும் பக்தர்களுக்கு அருள்பவள்.
மது-கைடபர் வதத்தின்போது திருமாலுக்கே உதவிய பெருமை பெற்றவள். வறுமை, நோய், பகை போன்ற எல்லாவகை பயங்களையும் இந்த தேவி நீக்கியருள்கிறாள்.
நடுவில் மகாமேரு, நான்கு புறங்களிலும் புவனேஸ்வரி, ஸ்வாமிநாதன், சரபேஸ்வரர், ப்ரத்யங்கிரா சந்நதி என்ற இந்த அமைப்பு அபூர்வமானது; வேறெங்கும் காணக்கிடைக்காதது என்றும் சொல்லலாம்.
ராமாயணத்தில் வரும் மயில்ராவணனின் பஞ்ச பிராணன்களும் வண்டு வடிவாக இருந்தன.
அவற்றை ஒரே நேரத்தில் கொன்றால்தான் மயில் ராவணன் மடிவான் என்பதற்காக எடுத்த அவதாரமே பஞ்சமுக ஹனுமான். சீதையை மரணத்தில் பிடியிலிருந்து காத்தவன், சூளாமணி கொணர்ந்து ராமனுக்கு நிம்மதியளித்தவன்.
பரதனின் இன்னுயிர் காத்தவன் போன்ற பல பெருமைகளைப் பெற்ற அனுமானை இத்தலத்தில் பஞ்சமுகங்களோடு தரிசிக்கலாம்.
வானர, நரசிம்ம, கருட, வராஹ, ஹயக்ரீவ முகங்களோடு தன்னை வழிபடும் பக்தர்களுக்கு புத்தி, சக்தி, திவ்யஞானம், சத்ரு ஜெயம், சகல காரிய சித்திகளைத் தருகிறார்.
வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
சனிகிரக பாதிப்புகளிலிருந்து இந்த அனுமன் காப்பாற்றுகிறார்.
ஹனுமத் ஜயந்தியன்று இந்த அனுமனை பக்தர்கள் பெருமளவில் வந்து தரிசித்து அருள் பெறுகின்றனர்.
வறுமை, நோய், பேரச்சம் போன்றவற்றிலிருந்து மக்களைக் காக்கும் சுதர்சனர் 28 அடி உயரத்தில் பஞ்சலோகத்தால் உருவாக்கப்பட்டு இத்தலத்தில் கிழக்கு நோக்கி அருள்கிறார்.
அவரின் பின்புறம் லட்சுமி நரசிம்மர் பிரகலாதனோடு காட்சி தருவது எங்குமே காண இயலாத அற்புதம்.
கருவிலிருந்த குழந்தை பரீட்சித்தைக் காத்தது, கஜேந்திரன் எனும் யானையைக் காத்தது போல, தன்னை வணங்கி வலம் வரும் பக்தர்களையும் இவர் காக்கிறார்.
இவரை புதன், சனிக்கிழமைகளில் வழிபட சத்ருக்களினால் ஏற்பட்ட தீமைகள் விலகுகிறது.
இவருக்கு எதிரே 5 அடி உயரத்தில் சுதைச் சிற்பமாக திருமலையில் அருளும் வெங்கடாஜலபதியை தரிசிக்கலாம்.
ஹரிஹர புத்ரனாய்த் தோன்றி பாலவயதுடையவனாயினும் பக்தர்களை சம்சாரக் கடலிலிருந்து கரையேற்றும் படகாய்த் திகழ்பவனும், யோகியரின் மனத்தாமரையை இடமாகக் கொண்டு சுவர்க்கம், மோட்சம் போன்றவற்றை அருளும் ஐயப்பன், இங்கே 5 அடி உயர பஞ்சலோக மூர்த்தியாய் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.
வலது கரம் ஞானமுத்திரை காட்ட, இடக்கரம் தொடை மீது வரமுத்திரை காட்ட, மார்பில் யோக பட்டம் ஒளிர திருக்காட்சியளிக்கிறார் இவர்.
ஆலய பிராகாரத்தில் மகாலட்சுமி, மகாசரஸ்வதி, மகாதுர்க்கை மூவரும் ஓருருவாக அஷ்டதசபுஜமகாலக்ஷ்மியாய் அருள்கின்றனர்.
ராகு கிரகத்தால் வணங்கப்பட்டதால் ராகுகால துர்க்கை எனவும் மங்களசண்டி எனவும் இத்தேவி வழிபடப்படுகிறாள்.
ராகு தோஷம் போக்கும் அன்னை இவள்.
பெண்களின் திருமணம் தடைபடுவது, திருமண வாழ்வில் ஏற்படும் துன்பம், ராகு/செவ்வாய் தோஷங்கள் போன்றவை இந்த அன்னையை செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் வழிபடுவதால் நீங்கி நல்வாழ்வு கிட்டுகிறது என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.
அதை அடுத்து 10 அடி உயரத்தில் ஸஹஸ்ரலிங்கத்தையும் 6 அடி உயரத்தில் நந்தியம் பெருமாளும் திருவருள் புரிகின்றனர்.
ஒவ்வொரு பிரதோஷத்தன்றும் விசேஷ அபிஷேக அலங்காரங்களும், ஐப்பசி மாத பௌர்ணமி அன்று அன்னாபிஷேகமும், கார்த்திகை மாத சோமவாரங்களில் சங்காபிஷேகமும் இந்த ஸஹஸ்ர லிங்க மூர்த்திக்குச் செய்யப்படுகிறது.
தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய பாணத்தை விட உயரமான பாணத்தையுடைவர் இவர்.
இந்த லிங்கமூர்த்தியில் வரிசைக்கு 53 எனும் கணக்கில் 19 வரிசைகளில் 1007 சிறு லிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
மூல மூர்த்தியுடன் சேர்த்து 1008 லிங்கங்கள்.
இவரின் எடை 20 டன்.
அடுத்து காகத்தின் மேல் தன் வலக்காலை வைத்து எழிலார்ந்த கோலத்தில் பத்தடி உயர சனிபகவானை தரிசிக்கலாம்.
இவருக்கு தமிழ் மாதங்களின் முதல் சனிக்கிழமையில் விசேஷ வழிபாடுகள் நடக்கிறது.
ஒவ்வொரு சனிக்கிழமையிலும் எள்ளன்னம் பிரசாதம் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
அவரை அடுத்து மனிதர்களின் அறியாமையிருள் நீக்கி, ஞான ஒளிபெற தத்தகீதையை அருளிய தத்தாத்ரேயரை 12 அடி உயர மூர்த்தியாக தரிசிக்கலாம்.
கார்த்தவீர்யார்ஜுனன் எனும் ஆயிரம் கைகள் கொண்ட மன்னன், தத்தாத்ரேயரை உபாசித்து அவரருளால் பல வரங்களைப் பெற்றவன்.
சாந்தானந்த சுவாமிகளும் தத்த பரம்பரையில் வந்த பெருமை பெற்றவர்.
ஞானம் வேண்டுவோர் வணங்க வேண்டிய இறை ஆசான், இந்த தத்தாத்ரேயர்.
தினமும் பிரத்யங்கிரா சரப சூலினி ஹோமம் முடிந்தவுடன் ஆலயத்தில் அன்னதானம் செய்யப்படுகிறது.
அன்னதானகூடத்தில் அழகுருவாய் அன்னபூரணி தேவியை தரிசிக்கலாம்.
ஆலயத்தில் கோசாலையும் உள்ளது.
ஆலயம் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது.
ஆலய கோபுரங்கள் ஒடிஸா மாநில பாணியில் அமைக்கப்பட்டுள்ளன.
பக்தர்கள் அமைதியாக தியானம் செய்ய தியான மண்டபமும் இத்தலத்தில் உள்ளது.
ஆலயத் தொடர்புக்கு: (044)22290134, 22293388, 22291647
அத்தனை தெய்வங்களும் அருளும் அற்புத ஆலயம்
இன்று சங்கட ஹர சதுர்த்தி
ஒவ்வொரு சங்கட ஹர சதுர்த்தி தினத்தன்றும் இங்குள்ள பஞ்சமுக ஹேரம்ப கணபதிக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
இன்று இந்த ஆலயத்திற்கு சென்று இறைஅருள் பெறுவோமாக
சென்னை சேலையூர்-ஸ்கந்தாஸ்ரமம் புவனேஸ்வரி தேவி
புதுக்கோட்டை ஜட்ஜ் சுவாமிகளின் சீடர் ஸ்வயம்பிரகாசர்.
அவரது சீடர் சாந்தானந்த சுவாமிகள்.
1921ல் அவதரித்த அவரது இயற்பெயர் சுப்ரமணியம்.
அவரால் ஸ்தாபிக்கப்பட்ட தலங்கள் ஸ்கந்தாஸ்ரமம் என பெயர் பெற்றன.
சேலம் ஸ்கந்தாஸ்ரமத்தைத் தொடர்ந்து அவரால் எழுப்பப்பட்ட ஸ்கந்தாஸ்ரமம் எனும் அற்புத ஆலயம் சென்னை-சேலையூரில் உள்ளது.
2002ம் வருடம் மே 27ம் தேதி இவர் மகா சமாதி அடைந்தார்.
பிரமாண்ட முறையில் கண்களைக் கவரும் சிற்ப வேலைப்பாடுகளுடன் விளங்கும் இறை உருவங்களை இத்தலத்தில் தரிசிக்கலாம்.
ஆலயத்தில் நுழைந்ததும் பஞ்சமுக ஹேரம்ப கணபதியை தரிசிக்கலாம்.
ஐந்து யானை முகங்களோடு, அபயம், வரம், பாசம், தந்தம், ருத்ராட்சமாலை, அங்குசம், பரசு, உலக்கை, கொழுக்கட்டை, பழம் ஆகியவற்றைத் தன் பத்து கரங்களில் ஏந்தி அற்புத கோலத்தில் அருள்புரிகிறார்.
ப்ருசுண்டீ எனும் பக்தருக்கு அருள் வழங்க விநாயகர் எடுத்த திருக்கோலமாம் இது.
போஜராஜன் இயற்றிய ராமாயண சம்பூ எனும் காவியத்தில் கடவுள் வாழ்த்தில் இந்த ஹேரம்ப கணபதியின் திருவுருவை அவர் பாடிப் போற்றியுள்ளார்.
ஒவ்வொரு சங்கட ஹர சதுர்த்தி தினத்தன்றும் இந்த கணபதிக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
இவரை வலம் வரும்போது கோஷ்டத்தில் பாலகணபதி, ஹேரம்ப கணபதி, லட்சுமி கணபதி ஆகியோரின் சுதை உருவங்களையும் தரிசிக்கலாம்.
ஆலயத்தினுள் நுழைந்ததும் கருவறையில் 6 அடி உயரத்தில் அன்பே வடிவாய், அழகே உருவாய் பாசம், அங்குசம், வரத-அபய கரங்கள் தாங்கி புவனேஸ்வரி அருள்கிறாள்.
இத்தேவியை வலம் வரும்போது கோஷ்டங்களில் தசமகாவித்யா தேவியர்களையும் ஒருசேர தரிசிக்கலாம்.
செவ்வாய், வெள்ளி, பௌர்ணமி, ஆடிவெள்ளி, தைவெள்ளி, சாரதா நவராத்திரி தினங்களில் இந்த புவனேஸ்வரி தேவிக்கு வித விதமான அபிஷேகங்களும், அலங்காரங்களும் செய்யப்படுகின்றன.
தேவியை வழிபடுபவர்களுக்கு அவளின் கடைக்கண் பார்வையால் சகல சௌபாக்கியங்களும் கிட்டுகின்றன என அபிராமி பட்டர் கூறியதை மெய்ப்பிப்பவள் இந்த புவனேஸ்வரி தேவி.
அன்னைக்கு வலப்புறம் தல கணபதியான கமலசித்தி விநாயகர் கோயில் கொண்டுள்ளார்.
இடப்புறம் சாந்தானந்தரின் சந்நதி உள்ளது.
தன் குருநாதர்களோடு அவர் திருவருள் புரிகிறார். புவனேஸ்வரி தேவியின் சந்நதிமுன் பூரண மஹாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
‘ஸுமேருமத்ய ஸ்ருங்கஸ்தா ஸ்ரீமன்நகரநாயிகா’ என மஹாமேருவை லலிதா ஸஹஸ்ரநாமம் போற்றுகிறது.
தேவியை மேருவில் ஆவாஹனம் செய்து பூஜித்தால் அம்பிகையின் அருளால் சகல தோஷங்கள், கிரக தோஷங்கள் நீங்கி பக்தன் அனைத்து நலன்களும் பெறுவான் என மூகபஞ்சசதியும் கூறுகிறது.
பஞ்சமி, அஷ்டமி, நவமி, சதுர்த்தசி, பௌர்ணமி, அமாவாசை, ஆடிவெள்ளி, தைவெள்ளி, சாரதா நவராத்திரி காலங்களில் இந்த மேருவிற்கு நவாவரண பூஜைகள் செய்யப்படுகிறது.
ஆவரண தேவதைகளுடன் சேர்த்து அம்பிகையை பூஜிப்பது என்பது ‘மஹாயாக க்ரமாராத்யா’ என்ற ஒரு யாகத்தை நிறைவேற்றுவதற்கு ஒப்பாகும் என்றே சொல்லப்பட்டுள்ளது.
பக்தர்கள் பெருமளவில் இந்த பூஜையில் கலந்து கொண்டு தேவியின் திருவருளைப் பெறுகின்றனர்.
தேவிக்கு வலப்புறம் உள்ள சந்நதியில்
சரபேஸ்வரர் அருள்கிறார்.
நாராயணனே எல்லாம், அவனே எங்கும் உளன் என்பதை தன் மகன் கூறியதைக் கேட்ட ஹிரண்யன், அகந்தையால் இறையடி பணிய மறுத்தபோது நரசிம்மமூர்த்தி அவனைக் கொன்று ஆரவாரித்தார்.
அவரது ஆரவாரத்தால் உலகமே அழிந்துவிடுமோ என அனைவரும் அதிர்ந்தபோது ஈசன், சரபேஸ்வர அவதாரம் எடுத்தார்.
தன் இறக்கைகளாலும் கால்களாலும் நரசிம்மரை கட்டி அணைத்து அவர் சினம் தணித்து இந்த உலகைக்காத்தார் என காஞ்சிபுராணம் கூறுகிறது.
பட்சிகளின் அரசனாக ‘ஸாலுவேசன்’ எனும் திருநாமமும் இவருக்கு உண்டு. பத்தடி உயரத்தில் பஞ்சலோகத்தினாலான சரபேஸ்வரர் தன் திருக்கரங்களில் மான், மழு, சர்ப்பம், தீ ஏந்தியுள்ளார்.
கொடிய பகைவரை அழித்து தீராத இன்னல் தீர்த்து சரணடைந்தோர்க்கு அபயமளிக்கும் தெய்வம் சரபமூர்த்தி என வேதங்கள் போற்றுகின்றன.
பகைவர், நோய், வனத்தில் பயம், பாம்பு போன்ற விஷ ஜந்துக்களால் வரும் ஆபத்துகள், தீவிபத்து, யானை, கரடி போன்ற விலங்குகளின் தொல்லை, பஞ்சபூதங்களால் வரும் ஆபத்து போன்றவற்றிலிருந்து சரபேஸ்வரர் காப்பார் என அதர்வண வேத மந்திரம் குறிப்பிடுகிறது.
பிரதோஷ வேளைகளிலும் ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையிலும் இவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
இவரது பிராகார சுற்றுச் சுவர்களில் பைரவரின் பல்வேறு மூர்த்தங்கள் சுதைச் சிற்பங்களாக விளங்குகின்றன.
தமிழகத்தில் அறுபடை வீடுகள் கொண்டு அருளாட்சி செய்துவரும்
முருகனை ஸ்வாமிநாதனாக, 10 அடி உயரத்தில் எழில் கொஞ்சும் திருவடிவில் இத்தலத்தில் தரிசிக்கலாம்.
மிகவும் வரப்ரசாதி இவர். புவனேஸ்வரி தேவியின் நேர் எதிரே இவர் சந்நதி உள்ளது. தாயின் பார்வையில் எப்போதும் இருப்பதால் இந்த முருகப்பெருமான் கருணையில் வடிவாகவே அருட்காட்சியளிக்கிறார்.
‘குருவாய் வருவாய் அருள்வாய் குகனே’ என அருணகிரிநாதப் பெருமான் பாடியபடி இந்த முருகன் அடியார்களுக்கு குருவாய் இருந்து அவர் தமக்கு வருவாய் எனும் செல்வ வளத்தையும் அருள்கிறார்.
இவரது பிராகார சுற்றுச் சுவர்களில் அறுபடை வீட்டு முருகப்பெருமான்களும், கதிர்காம முருகனும், பாலமுருகனும் சுதை வடிவில் அருள்கின்றனர்.
ஞானமும், செல்வமும் வேண்டும் பக்தர்கள் இந்த மேற்கு பார்த்த சுவாமிநாதப் பெருமானை வணங்கி வளம் பெறுகின்றனர்.
சூரனை வதம் செய்ய, தாயை வணங்கி, சக்தி வேலைப் பெற்றதை நினைவுறுத்தும் வகையில் தாய் புவனேஸ்வரியின் திருவுருவின் எதிரில் பணிவுடன் கொலுவிருக்கிறார்.
தந்தைக்கே பாடம் சொன்ன, குருவின் குருவாக அருளும் இவரை குருபெயர்ச்சி நாளில் வணங்குதல் சிறப்பாகக் கூறப்படுகிறது.
கந்த சஷ்டி விரதத்தையொட்டி, ஆறு நாட்களிலும் வித விதமான அலங்காரங்களில் ஜொலிப்பார் இவர்.
கிருத்திகை தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படுகின்றன.
அதற்கு அடுத்த சந்நதியில் சரபேஸ்வரரின் நேர் எதிரே ப்ரத்யங்கிரா தேவி அருளாட்சி புரிகிறாள். சூலம், பாசம், டமருகம், கபாலம் ஆகியவற்றைத் தன் கைகளில் ஏந்தி அருள்கிறாள்.
சிங்கத்தின் மீது அமர்ந்த திருக்கோலம். சதி எனும் பார்வதியின் கோபமே ப்ரத்யங்கிராவாக உருவெடுத்ததாக மந்திர சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இந்திரஜித் ராம-லட்சுமணரை வெல்ல இந்த ப்ரத்யங்கிரா தேவியைக் குறித்தே நிகும்பலா யாகம் செய்தான்.
அந்த யாகம் நிறைவு பெற்றால் அவனை யாராலும் அழிக்க முடியாது என்பதற்காக லட்சுமணன் அவனை அழித்ததாக புராணங்கள் பகர்கின்றன. தன்னை வழிபடும் பக்தர்களுக்கு அருள்பவள்.
மது-கைடபர் வதத்தின்போது திருமாலுக்கே உதவிய பெருமை பெற்றவள். வறுமை, நோய், பகை போன்ற எல்லாவகை பயங்களையும் இந்த தேவி நீக்கியருள்கிறாள்.
நடுவில் மகாமேரு, நான்கு புறங்களிலும் புவனேஸ்வரி, ஸ்வாமிநாதன், சரபேஸ்வரர், ப்ரத்யங்கிரா சந்நதி என்ற இந்த அமைப்பு அபூர்வமானது; வேறெங்கும் காணக்கிடைக்காதது என்றும் சொல்லலாம்.
ராமாயணத்தில் வரும் மயில்ராவணனின் பஞ்ச பிராணன்களும் வண்டு வடிவாக இருந்தன.
அவற்றை ஒரே நேரத்தில் கொன்றால்தான் மயில் ராவணன் மடிவான் என்பதற்காக எடுத்த அவதாரமே பஞ்சமுக ஹனுமான். சீதையை மரணத்தில் பிடியிலிருந்து காத்தவன், சூளாமணி கொணர்ந்து ராமனுக்கு நிம்மதியளித்தவன்.
பரதனின் இன்னுயிர் காத்தவன் போன்ற பல பெருமைகளைப் பெற்ற அனுமானை இத்தலத்தில் பஞ்சமுகங்களோடு தரிசிக்கலாம்.
வானர, நரசிம்ம, கருட, வராஹ, ஹயக்ரீவ முகங்களோடு தன்னை வழிபடும் பக்தர்களுக்கு புத்தி, சக்தி, திவ்யஞானம், சத்ரு ஜெயம், சகல காரிய சித்திகளைத் தருகிறார்.
வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
சனிகிரக பாதிப்புகளிலிருந்து இந்த அனுமன் காப்பாற்றுகிறார்.
ஹனுமத் ஜயந்தியன்று இந்த அனுமனை பக்தர்கள் பெருமளவில் வந்து தரிசித்து அருள் பெறுகின்றனர்.
வறுமை, நோய், பேரச்சம் போன்றவற்றிலிருந்து மக்களைக் காக்கும் சுதர்சனர் 28 அடி உயரத்தில் பஞ்சலோகத்தால் உருவாக்கப்பட்டு இத்தலத்தில் கிழக்கு நோக்கி அருள்கிறார்.
அவரின் பின்புறம் லட்சுமி நரசிம்மர் பிரகலாதனோடு காட்சி தருவது எங்குமே காண இயலாத அற்புதம்.
கருவிலிருந்த குழந்தை பரீட்சித்தைக் காத்தது, கஜேந்திரன் எனும் யானையைக் காத்தது போல, தன்னை வணங்கி வலம் வரும் பக்தர்களையும் இவர் காக்கிறார்.
இவரை புதன், சனிக்கிழமைகளில் வழிபட சத்ருக்களினால் ஏற்பட்ட தீமைகள் விலகுகிறது.
இவருக்கு எதிரே 5 அடி உயரத்தில் சுதைச் சிற்பமாக திருமலையில் அருளும் வெங்கடாஜலபதியை தரிசிக்கலாம்.
ஹரிஹர புத்ரனாய்த் தோன்றி பாலவயதுடையவனாயினும் பக்தர்களை சம்சாரக் கடலிலிருந்து கரையேற்றும் படகாய்த் திகழ்பவனும், யோகியரின் மனத்தாமரையை இடமாகக் கொண்டு சுவர்க்கம், மோட்சம் போன்றவற்றை அருளும் ஐயப்பன், இங்கே 5 அடி உயர பஞ்சலோக மூர்த்தியாய் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.
வலது கரம் ஞானமுத்திரை காட்ட, இடக்கரம் தொடை மீது வரமுத்திரை காட்ட, மார்பில் யோக பட்டம் ஒளிர திருக்காட்சியளிக்கிறார் இவர்.
ஆலய பிராகாரத்தில் மகாலட்சுமி, மகாசரஸ்வதி, மகாதுர்க்கை மூவரும் ஓருருவாக அஷ்டதசபுஜமகாலக்ஷ்மியாய் அருள்கின்றனர்.
ராகு கிரகத்தால் வணங்கப்பட்டதால் ராகுகால துர்க்கை எனவும் மங்களசண்டி எனவும் இத்தேவி வழிபடப்படுகிறாள்.
ராகு தோஷம் போக்கும் அன்னை இவள்.
பெண்களின் திருமணம் தடைபடுவது, திருமண வாழ்வில் ஏற்படும் துன்பம், ராகு/செவ்வாய் தோஷங்கள் போன்றவை இந்த அன்னையை செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் வழிபடுவதால் நீங்கி நல்வாழ்வு கிட்டுகிறது என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.
அதை அடுத்து 10 அடி உயரத்தில் ஸஹஸ்ரலிங்கத்தையும் 6 அடி உயரத்தில் நந்தியம் பெருமாளும் திருவருள் புரிகின்றனர்.
ஒவ்வொரு பிரதோஷத்தன்றும் விசேஷ அபிஷேக அலங்காரங்களும், ஐப்பசி மாத பௌர்ணமி அன்று அன்னாபிஷேகமும், கார்த்திகை மாத சோமவாரங்களில் சங்காபிஷேகமும் இந்த ஸஹஸ்ர லிங்க மூர்த்திக்குச் செய்யப்படுகிறது.
தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய பாணத்தை விட உயரமான பாணத்தையுடைவர் இவர்.
இந்த லிங்கமூர்த்தியில் வரிசைக்கு 53 எனும் கணக்கில் 19 வரிசைகளில் 1007 சிறு லிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
மூல மூர்த்தியுடன் சேர்த்து 1008 லிங்கங்கள்.
இவரின் எடை 20 டன்.
அடுத்து காகத்தின் மேல் தன் வலக்காலை வைத்து எழிலார்ந்த கோலத்தில் பத்தடி உயர சனிபகவானை தரிசிக்கலாம்.
இவருக்கு தமிழ் மாதங்களின் முதல் சனிக்கிழமையில் விசேஷ வழிபாடுகள் நடக்கிறது.
ஒவ்வொரு சனிக்கிழமையிலும் எள்ளன்னம் பிரசாதம் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
அவரை அடுத்து மனிதர்களின் அறியாமையிருள் நீக்கி, ஞான ஒளிபெற தத்தகீதையை அருளிய தத்தாத்ரேயரை 12 அடி உயர மூர்த்தியாக தரிசிக்கலாம்.
கார்த்தவீர்யார்ஜுனன் எனும் ஆயிரம் கைகள் கொண்ட மன்னன், தத்தாத்ரேயரை உபாசித்து அவரருளால் பல வரங்களைப் பெற்றவன்.
சாந்தானந்த சுவாமிகளும் தத்த பரம்பரையில் வந்த பெருமை பெற்றவர்.
ஞானம் வேண்டுவோர் வணங்க வேண்டிய இறை ஆசான், இந்த தத்தாத்ரேயர்.
தினமும் பிரத்யங்கிரா சரப சூலினி ஹோமம் முடிந்தவுடன் ஆலயத்தில் அன்னதானம் செய்யப்படுகிறது.
அன்னதானகூடத்தில் அழகுருவாய் அன்னபூரணி தேவியை தரிசிக்கலாம்.
ஆலயத்தில் கோசாலையும் உள்ளது.
ஆலயம் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது.
ஆலய கோபுரங்கள் ஒடிஸா மாநில பாணியில் அமைக்கப்பட்டுள்ளன.
பக்தர்கள் அமைதியாக தியானம் செய்ய தியான மண்டபமும் இத்தலத்தில் உள்ளது.
ஆலயத் தொடர்புக்கு: (044)22290134, 22293388, 22291647
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: முகநூலில் ரசித்தவை
[You must be registered and logged in to see this image.]
ராபர்ட் கூச் (Robert Koch) அறிவியல் அறிஞர்கள் பற்றி அறிவோம்:-
ராபர்ட் கூச் 1843-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் நாள் ஜெர்மனிநாட்டிலுள்ள உயர்ந்த ஹார்ஸ் மலைப் பகுதியிலுள்ள கிளாஸ்தல் என்னுமிடத்தில் ஏழை சுரங்கத் தொழிலாளியின் மகனாக பிறந்தார். அவர் தனதுகடின உழைப்பால் 1862-ஆம் ஆண்டில் பல்கலைக்கழகம் சென்று மருத்துவம் படித்தார். அறிவியல் அறிஞர் லூயி பாஸ்டர் நுண்ணுயிர்களால் மனிதனுக்குநோய்கள் உண்டாவதைக் கண்டார். ஆனால், அவரால் ஒரு நுண்ணுயிர் ஒருநோயை ஏற்படுத்தும் என நேரே சொல்ல முடியவில்லை. இதனை நிரூபித்துவெற்றிக் கண்டார் கூச்.
1872 - ஆம் ஆண்டு கூச், பெர்லின் அருகே உள்ள ஊல்ஸ்டீன் என்னும்கிராம பகுதிக்கு மருத்துவ அதிகாரி ஆனார். அங்கே அவர் சிறிய ஆய்வு கூடத்தில்நுண்ணுயிர் பற்றி ஆராயத் தொடங்கினார். முதலில் கால்நடைகளுக்கு வரும்ஆந்த்ராக்ஸ் நோயை பற்றி ஆராய்ந்தார். 1868 - ஆம் ஆண்டு டவேய்ன் என்பவர்ஆந்த்ராக்ஸ் இரத்தம் வழியே பரவுவதைக் கண்டுபிடித்தார். மேலும், போலந்தர்,ரேயர், டவேய்ன் ஆகியோர் ஆந்த்ராக்ஸ் என்னும் பாக்டீரியாவைக்கண்டுபிடித்தனர். கூச் இந்த பெசில்லஸ் பாக்டீரியா தான் ஆந்த்ராக்ஸ் நோயைஏற்படுத்துகிறது என்பதை நிரூபிக்க பாடுபட்டார். இதற்காக, அவர் எருதின்கண்ணில் உள்ள ஈரப்பதத்தில் இதை வளர்த்து அதை ஆராய்ந்தார். இவரது கண்டுபிடிப்புகளை கோன் என்பவர் தனது பத்திரிகையில் 1876 - ஆம் ஆண்டுவெளியிட்ட போது அவர் பிரபலமடைந்தார்.
அதன்பின் அவர் மனிதர்களைத் தாக்கும் நுண்ணுயிர்களை பற்றி ஆராயத்தொடங்கினார். 1878 - ஆம் ஆண்டு இரத்தத்தை நஞ்சாக்கும் நுண்ணுயிரைக்கண்டுபிடித்தார். ஆனால், அதை அவர் நுண்நோக்கி மூலம் காண இயலாததால்அதை பிற ஆராய்ச்சியாளர்களுக்கு நிரூபிக்க முடியவில்லை. பின் அவர்மெத்தில் வையோலட் (Methyl violet dye) என்னும் சாயத்தின் மூலம்செப்டிகேக்மியா (Septicacmia) என்னும் அந்த நுண்ணுயிரைக் கண்டார்.
கூச் உருளைக்கிழங்கு, ஜெலாட்டினா ஆகியவை கலந்து செய்ததட்டுகளில் நுண்ணுயிர்களை வளர்க்கும் முறையைக் கண்டுபிடித்தார். கூச்இதை வைத்து 1881 - ஆம் ஆண்டு தன்னோடு ஒரு குழு ஆராய்ச்சியாளர்களைச்சேர்த்துக் கொண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகக் கொடிய நோய்களுள்ஒன்றான TB நோயை பற்றி ஆராயத் தொடங்கினார். TB கிருமி, ஆந்த்ராக்ஸ்கிருமியை விட மிகச் சிறியது. அதனால், அவரின் ஆராய்ச்சி கடினமானது. சாயமுறையை வைத்து அவர்கள் ஆராய்ச்சியில் முன்னேறினர். அவர்&lsquoட்யூபர்கூலின்&rsquo என்னும் கண்டுபிடிப்பால் காச நோயைத்தடுக்கத் தொடங்கினார். அவர் அதை ட்யூபர்கிளி பெசில்லி (Tubercle bacilli)என்பதை வளர்க்கும் தட்டுகளிலிருந்து உருவாக்கினார். தனது புதியகண்டுப்பிடிப்பான ட்யூபர்குலினை 1896 - ஆம் ஆண்டு வெளியிட்டார். இதுவேஅவரது மிகப்பெரிய கண்டுப்பிடிப்பு.
1896 ஆம் ஆண்டு கூச் தென் ஆப்பிரிக்கா சென்று ரிண்டர்பெஸ்ட்(Renderpest) நோய் பற்றி ஆராய்ந்தார். பின் அவர் இந்தியாவிலும்ஆப்பிரிக்காவிலும் மலேரியா, கருங்கடல் காய்ச்சல் மற்றும் சுரா (Surra)எனப்படும் கால்நடை வியாதி, பிளேக் (Plague) ஆகியவை பற்றி ஆராய்ந்தார்.தொடர்ந்து அவர் ஜெர்மனி சென்றபோது அங்கிருந்து இத்தாலிக்கு அனுப்பப்பட்டுஅங்கு ரொனால்ட் ராஸ் (Sir Ronald Ross) என்பவரோடு மலேரியா பற்றியும்அதை கட்டுப்படுத்தும் &lsquoகுனைன்&rsquo (Quinine) பற்றியும்ஆராய்ந்தார்.
1905 - ஆம் ஆண்டு அவர் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.காலரா நோய் ஏற்படுத்தும் விப்ரியோ பற்றிய ஆராய்ச்சிக்காக ஒரு இலட்சம்ஜெர்மனி மார்க்கையும் பெற்றார்.
ராபர்ட் கூச் (Robert Koch) அறிவியல் அறிஞர்கள் பற்றி அறிவோம்:-
ராபர்ட் கூச் 1843-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் நாள் ஜெர்மனிநாட்டிலுள்ள உயர்ந்த ஹார்ஸ் மலைப் பகுதியிலுள்ள கிளாஸ்தல் என்னுமிடத்தில் ஏழை சுரங்கத் தொழிலாளியின் மகனாக பிறந்தார். அவர் தனதுகடின உழைப்பால் 1862-ஆம் ஆண்டில் பல்கலைக்கழகம் சென்று மருத்துவம் படித்தார். அறிவியல் அறிஞர் லூயி பாஸ்டர் நுண்ணுயிர்களால் மனிதனுக்குநோய்கள் உண்டாவதைக் கண்டார். ஆனால், அவரால் ஒரு நுண்ணுயிர் ஒருநோயை ஏற்படுத்தும் என நேரே சொல்ல முடியவில்லை. இதனை நிரூபித்துவெற்றிக் கண்டார் கூச்.
1872 - ஆம் ஆண்டு கூச், பெர்லின் அருகே உள்ள ஊல்ஸ்டீன் என்னும்கிராம பகுதிக்கு மருத்துவ அதிகாரி ஆனார். அங்கே அவர் சிறிய ஆய்வு கூடத்தில்நுண்ணுயிர் பற்றி ஆராயத் தொடங்கினார். முதலில் கால்நடைகளுக்கு வரும்ஆந்த்ராக்ஸ் நோயை பற்றி ஆராய்ந்தார். 1868 - ஆம் ஆண்டு டவேய்ன் என்பவர்ஆந்த்ராக்ஸ் இரத்தம் வழியே பரவுவதைக் கண்டுபிடித்தார். மேலும், போலந்தர்,ரேயர், டவேய்ன் ஆகியோர் ஆந்த்ராக்ஸ் என்னும் பாக்டீரியாவைக்கண்டுபிடித்தனர். கூச் இந்த பெசில்லஸ் பாக்டீரியா தான் ஆந்த்ராக்ஸ் நோயைஏற்படுத்துகிறது என்பதை நிரூபிக்க பாடுபட்டார். இதற்காக, அவர் எருதின்கண்ணில் உள்ள ஈரப்பதத்தில் இதை வளர்த்து அதை ஆராய்ந்தார். இவரது கண்டுபிடிப்புகளை கோன் என்பவர் தனது பத்திரிகையில் 1876 - ஆம் ஆண்டுவெளியிட்ட போது அவர் பிரபலமடைந்தார்.
அதன்பின் அவர் மனிதர்களைத் தாக்கும் நுண்ணுயிர்களை பற்றி ஆராயத்தொடங்கினார். 1878 - ஆம் ஆண்டு இரத்தத்தை நஞ்சாக்கும் நுண்ணுயிரைக்கண்டுபிடித்தார். ஆனால், அதை அவர் நுண்நோக்கி மூலம் காண இயலாததால்அதை பிற ஆராய்ச்சியாளர்களுக்கு நிரூபிக்க முடியவில்லை. பின் அவர்மெத்தில் வையோலட் (Methyl violet dye) என்னும் சாயத்தின் மூலம்செப்டிகேக்மியா (Septicacmia) என்னும் அந்த நுண்ணுயிரைக் கண்டார்.
கூச் உருளைக்கிழங்கு, ஜெலாட்டினா ஆகியவை கலந்து செய்ததட்டுகளில் நுண்ணுயிர்களை வளர்க்கும் முறையைக் கண்டுபிடித்தார். கூச்இதை வைத்து 1881 - ஆம் ஆண்டு தன்னோடு ஒரு குழு ஆராய்ச்சியாளர்களைச்சேர்த்துக் கொண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகக் கொடிய நோய்களுள்ஒன்றான TB நோயை பற்றி ஆராயத் தொடங்கினார். TB கிருமி, ஆந்த்ராக்ஸ்கிருமியை விட மிகச் சிறியது. அதனால், அவரின் ஆராய்ச்சி கடினமானது. சாயமுறையை வைத்து அவர்கள் ஆராய்ச்சியில் முன்னேறினர். அவர்&lsquoட்யூபர்கூலின்&rsquo என்னும் கண்டுபிடிப்பால் காச நோயைத்தடுக்கத் தொடங்கினார். அவர் அதை ட்யூபர்கிளி பெசில்லி (Tubercle bacilli)என்பதை வளர்க்கும் தட்டுகளிலிருந்து உருவாக்கினார். தனது புதியகண்டுப்பிடிப்பான ட்யூபர்குலினை 1896 - ஆம் ஆண்டு வெளியிட்டார். இதுவேஅவரது மிகப்பெரிய கண்டுப்பிடிப்பு.
1896 ஆம் ஆண்டு கூச் தென் ஆப்பிரிக்கா சென்று ரிண்டர்பெஸ்ட்(Renderpest) நோய் பற்றி ஆராய்ந்தார். பின் அவர் இந்தியாவிலும்ஆப்பிரிக்காவிலும் மலேரியா, கருங்கடல் காய்ச்சல் மற்றும் சுரா (Surra)எனப்படும் கால்நடை வியாதி, பிளேக் (Plague) ஆகியவை பற்றி ஆராய்ந்தார்.தொடர்ந்து அவர் ஜெர்மனி சென்றபோது அங்கிருந்து இத்தாலிக்கு அனுப்பப்பட்டுஅங்கு ரொனால்ட் ராஸ் (Sir Ronald Ross) என்பவரோடு மலேரியா பற்றியும்அதை கட்டுப்படுத்தும் &lsquoகுனைன்&rsquo (Quinine) பற்றியும்ஆராய்ந்தார்.
1905 - ஆம் ஆண்டு அவர் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.காலரா நோய் ஏற்படுத்தும் விப்ரியோ பற்றிய ஆராய்ச்சிக்காக ஒரு இலட்சம்ஜெர்மனி மார்க்கையும் பெற்றார்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: முகநூலில் ரசித்தவை
[You must be registered and logged in to see this image.]
எடை குறைய பாட்டி வைத்தியம் :-
பசலைக்கீரை சாறில் ஒரு ஸ்பூன் முள்ளங்கி விதையை ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
காசினிக் கீரையை உலர்த்திப் பொடியாக்கி தினமும் இரவில் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.
குப்பைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் அதிகப்படியான உடல் எடை குறையும்.
நல்வேளைக் கீரையை பூண்டு சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.
நச்சுக்கொட்டைக் கீரைச் சாறில் பாதி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து குடித்தால் உடல் பருமன் குறையும்.
முள்ளிக் கீரை சாறில் கொள்ளை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு வேளை கஞ்சி காய்ச்சிக் குடித்தால் உடல் பருமன் குறையும்.
வங்கார வள்ளைக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.
நன்றி முகநூல்
எடை குறைய பாட்டி வைத்தியம் :-
பசலைக்கீரை சாறில் ஒரு ஸ்பூன் முள்ளங்கி விதையை ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
காசினிக் கீரையை உலர்த்திப் பொடியாக்கி தினமும் இரவில் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.
குப்பைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் அதிகப்படியான உடல் எடை குறையும்.
நல்வேளைக் கீரையை பூண்டு சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.
நச்சுக்கொட்டைக் கீரைச் சாறில் பாதி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து குடித்தால் உடல் பருமன் குறையும்.
முள்ளிக் கீரை சாறில் கொள்ளை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு வேளை கஞ்சி காய்ச்சிக் குடித்தால் உடல் பருமன் குறையும்.
வங்கார வள்ளைக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.
நன்றி முகநூல்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: முகநூலில் ரசித்தவை
"அக்கா .... துபாய்லருந்து சந்தோஷ் பேசறேன்"
"நல்லாருக்கியா? நானும் அத்தானும் இன்னைக்கு சென்னை வந்திருக்கோம்"
"தெரியும்கா, எக்ஸ்பிரஸ் அவெனியுலதானே இருக்கீங்க?"...
"ஆமாம். ஃபேஸ் புக்ல அத்தான் போட்ட ஃபோட்டோவை பாத்துட்டியா?"
"ஆமாம்கா; உன் ஒரு காதுல கம்மல காணோம் பாருக்கா. அங்க கொஞ்சம் தேடிப்பாரு.."
"அய்யய்யோ...அப்படியா...வச்சிடுடா... தேடி பாத்துட்டு ஃபோன் பண்றேன்."
>
>
>
>
>
>
>
>
"டேய்...ரொம்ப தேங்க்ஸ்டா. இங்கயேதான் இருந்துச்சி. பாரு நீ அங்கருந்து பாத்து சொல்லிட்ட... இவரும் இருக்காரே.. இங்கயே இருந்தும் கவனிக்கல..."
"நல்லாருக்கியா? நானும் அத்தானும் இன்னைக்கு சென்னை வந்திருக்கோம்"
"தெரியும்கா, எக்ஸ்பிரஸ் அவெனியுலதானே இருக்கீங்க?"...
"ஆமாம். ஃபேஸ் புக்ல அத்தான் போட்ட ஃபோட்டோவை பாத்துட்டியா?"
"ஆமாம்கா; உன் ஒரு காதுல கம்மல காணோம் பாருக்கா. அங்க கொஞ்சம் தேடிப்பாரு.."
"அய்யய்யோ...அப்படியா...வச்சிடுடா... தேடி பாத்துட்டு ஃபோன் பண்றேன்."
>
>
>
>
>
>
>
>
"டேய்...ரொம்ப தேங்க்ஸ்டா. இங்கயேதான் இருந்துச்சி. பாரு நீ அங்கருந்து பாத்து சொல்லிட்ட... இவரும் இருக்காரே.. இங்கயே இருந்தும் கவனிக்கல..."
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: முகநூலில் ரசித்தவை
[You must be registered and logged in to see this image.]
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: முகநூலில் ரசித்தவை
[You must be registered and logged in to see this image.]
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 13 of 18 • 1 ... 8 ... 12, 13, 14 ... 18
Similar topics
» முகநூலில் ரசித்தவை-4 :- '' செந்தில் ''
» நம்பிக்கை - முகநூலில் ரசித்தவை
» முகநூலில் ரசித்தவை ""செந்தில்
» முகநூலில் ரசித்தவை !!!!.......செந்தில்
» முகநூலில் ரசித்தவை -``செந்தில்``-3
» நம்பிக்கை - முகநூலில் ரசித்தவை
» முகநூலில் ரசித்தவை ""செந்தில்
» முகநூலில் ரசித்தவை !!!!.......செந்தில்
» முகநூலில் ரசித்தவை -``செந்தில்``-3
Page 13 of 18
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|