Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உணவில் உப்பை குறைத்தால் மாரடைப்பு ஏற்படும்:
Page 1 of 1 • Share
உணவில் உப்பை குறைத்தால் மாரடைப்பு ஏற்படும்:
உணவில் உப்பை குறைத்தால் மாரடைப்பு ஏற்படும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை
அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அதேபோல உப்போ, சர்க்கரையோ தேவையான அளவு இல்லாவிட்டாலும் அது ஆபத்துதான் என்கின்றனர் மருத்துவர்கள்.
உணவுப் பொருட்களில் உப்பு அதிகம் சேர்த்தால் உயர் ரத்த அழுத்தம் வரும் என்று பயமுறுத்துகின்றனர்.
இதை தவிர்க்க உப்பை குறைத்தாலும் இதயநோய் வரும் என்று சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
திடீரென மாரடைப்பு வருவதற்கு உயர்ரத்த அழுத்தமும், கொழுப்பு பொருட்களை சேர்ப்பதும் தான் காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள். எனவேதான் ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு உணவில் உப்பின் அளவைக் குறைக்க மருத்துவர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.
அதேசமயம் மாரடைப்பு வராமல் தடுப்பதற்காக உப்பைக் குறைத்துக் கொள்வதே, மாரடைப்பு முதலான இதய நோய்களை ஏற்படுத்தும் என்று புதிய ஆய்வுத் தகவல் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.
இது குறித்து டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழக மருத்துவமனையில் 40,000 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 67 ஆய்வுகளின் முடிவில், உப்பைக் குறைத்துக் கொள்வோரின் உடலில் 2.5 சதவீதம் கொழுப்பு அதிகரிப்பதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
இவ்வாறு தொடர்ந்து உப்பைக் குறைத்து வந்தோரின் சிறுநீரகத்தில் ரெனின் என்ற புரதமும், அல்டோஸ்டிரோன் என்ற ஹோர்மோனும் அதிகளவில் சுரந்து, உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
உப்பைக் குறைத்தால் அது இருதய நோயை ஏற்படுத்தும். அதற்குப் பதிலாக புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். அதிக உடல் எடை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர் நீல்ஸ் கிரெடல் தெரிவித்துள்ளார்.
நாளொன்றுக்கு உணவில் சராசரியாக 6 கிராம் அளவு உப்பைச் சேர்த்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நிலா முற்றம்
அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அதேபோல உப்போ, சர்க்கரையோ தேவையான அளவு இல்லாவிட்டாலும் அது ஆபத்துதான் என்கின்றனர் மருத்துவர்கள்.
உணவுப் பொருட்களில் உப்பு அதிகம் சேர்த்தால் உயர் ரத்த அழுத்தம் வரும் என்று பயமுறுத்துகின்றனர்.
இதை தவிர்க்க உப்பை குறைத்தாலும் இதயநோய் வரும் என்று சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
திடீரென மாரடைப்பு வருவதற்கு உயர்ரத்த அழுத்தமும், கொழுப்பு பொருட்களை சேர்ப்பதும் தான் காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள். எனவேதான் ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு உணவில் உப்பின் அளவைக் குறைக்க மருத்துவர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.
அதேசமயம் மாரடைப்பு வராமல் தடுப்பதற்காக உப்பைக் குறைத்துக் கொள்வதே, மாரடைப்பு முதலான இதய நோய்களை ஏற்படுத்தும் என்று புதிய ஆய்வுத் தகவல் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.
இது குறித்து டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழக மருத்துவமனையில் 40,000 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 67 ஆய்வுகளின் முடிவில், உப்பைக் குறைத்துக் கொள்வோரின் உடலில் 2.5 சதவீதம் கொழுப்பு அதிகரிப்பதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
இவ்வாறு தொடர்ந்து உப்பைக் குறைத்து வந்தோரின் சிறுநீரகத்தில் ரெனின் என்ற புரதமும், அல்டோஸ்டிரோன் என்ற ஹோர்மோனும் அதிகளவில் சுரந்து, உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
உப்பைக் குறைத்தால் அது இருதய நோயை ஏற்படுத்தும். அதற்குப் பதிலாக புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். அதிக உடல் எடை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர் நீல்ஸ் கிரெடல் தெரிவித்துள்ளார்.
நாளொன்றுக்கு உணவில் சராசரியாக 6 கிராம் அளவு உப்பைச் சேர்த்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நிலா முற்றம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உணவில் உப்பை குறைத்தால் மாரடைப்பு ஏற்படும்:
அப்படியா ????
பொதுவா பிரஷர் உள்ளவங்க உப்பை குறைத்துதானே சாப்பிடவேண்டும்...
அறிந்தவர்கள் விளக்குங்கள் உறவுகளே....
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணே
பொதுவா பிரஷர் உள்ளவங்க உப்பை குறைத்துதானே சாப்பிடவேண்டும்...
அறிந்தவர்கள் விளக்குங்கள் உறவுகளே....
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணே
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உணவில் உப்பை குறைத்தால் மாரடைப்பு ஏற்படும்:
உப்புச் சத்து பற்றி தகவல்…!
* உப்பு பெறாத விஷயம் இல்லே *
* உஷாராக இருக்க வேண்டிய எச்சரிக்கை *
* உப்பில்லா பண்டம் குப்பையிலே… என்று சொல்லி விட்டுப் போய்விட்டனர்.
* உப்பை குறையுங்க; இல்லே, தீராத தொல்லை தான் என்று பயமுறுத்திவிட்டனர் டாக்டர்கள்.
உப்பு பற்றி உப்பு பெறாத விஷயம் என்று யாரும் நினைக்கத் தயாரில்லை. ஆனால், உடம்புக்கு வராத வரை உப்பு பற்றி கவலைப்படுவதும் இல்லை. சிலரை பார்த்தால், தட்டில், அரை ஸ்பூன் உப்பை போட்டு வைத்திருப்பர். தேவைப்படும் போது, இவர்களே, சாம்பார் முதல் தயிர் சாதம் வரை சேர்த்துக்கொள்வர்.
கொழுப்பு தேவை; அதிகமானால் ஆபத்து; எண்ணெய் தேவை; அதிகமானால் ரத்த அழுத்தம் தான். இனிப்பு தேவை; அதிகமானால் ஷுகர். இப்படித்தான் உப்பு தேவை தான்; அதிகமானால் ரத்த அழுத்தம் எகிறிவிடும்; மாரடைப்பு வருமோ என்ற பீதி கிளம்பும்.
அப்படி என்ன தான் இருக்கு?
சோடியம் – குளோரின் ஆகிய இரண்டு ரசாயனங் களும் சேர்ந்தது தான் உப்பு; இயற்கை கனிமங்களில் ஒன்று ; சோடியம் குளோரைடு கலவைகளில் ஒன்று. வெண்மை நிறம் கொண்டது சோடியம்; குளோரினோ, பச்சை மஞ்சள் கலந்தது; தண்ணீரில் கரைந்து விடும்; காற்றில் வாயுவாகி விடும்.
பல்வேறு உப்புகள் உள்ளன:
* சோடியம் பைகார்பனேட்: பேக்கிங் சோடா என்பது இது தான். சுத்தம் செய்ய பயன்படுவது. மருத்துவ குணங்கள் கொண்டது.
* சோடியம் நைட்ரேட்: உரம், வெடிக்கு பயன்படுவது.
* சோடியம் ஹைட்ராக்சைடு: பேப்பர் , சோப்பு, சில உணவு வகைகளில் பயன்படுத்தப்படும் காஸ்டிக் சோடா எனப்படுவது.
வேணும்… ஆனா வேணாம்
உடலில் உப்பு தேவை; அதிக அளவில் உப்பு , வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேறி விட்டால், அதை ஈடு செய்ய வேண்டி உப்பு கரைசல் தேவை. உடலில் உப்பு குறைந்தால் தண்ணீர் வற்றிய நிலைக்கு தள்ளப்படுகிறது. அப்போது வாந்தி, மயக்கம் வருகிறது. அதை தீர்க்க அதிக அளவில் தண்ணீர், எலக்ட்ரால் கரைசல் குடிக்க செய்கின்றனர் டாக்டர்கள்.
உடலில் அதிக உப்பு சேர்ந்தாலும் தொல்லை தான். அதிக உப்பு உள்ளவர்களுக்கு அடிக்கடி தாகம் எடுக்கும்; அடிக்கடி சிறுநீர் போவர். சிறுநீர் மூலம் தான் அதிகப்படியான உப்பு வெளியேற்றப்படுகிறது.
உப்புல சூப்பர் பலன்
* வெது வெதுப்பான தண்ணீரில் உப்பை கரைத்து தொண்டையில் நிறுத்தி கொப்பளித்தால் தொண்டை கரகரப்பு போய்விடும். புண் இருந்தாலும் போய் விடும்.
* தேய்க்கும் பற்பசையில் உப்பு உள்ளது; அதுபோல சோப்பிலும் உள்ளது. உடலில் உள்ள எரிச்சல், தோல் பிரச்னை இதனால் போய் விடும். பல் பாதுகாப்புக்கு உப்பு முக்கியம்.
எவ்ளோ ஓகே
நாம் குடிக்கும் தண்ணீரில் உப்பு உள்ளது. அதனால், உணவில் சேர்ப்பது உட்பட ஒருவரின் உப்பு தேவை ஒரு டீஸ்பூன் தான் என்பது தான் நிபுணர்களின் கருத்து.
உப்பு போட்டாலே, உணவு அயிட்டங்களுக்கு தனி சுவை வந்து விடும் தான்; ஆனால், அதற்காக நாற்பதை தாண்டியும் உப்பை குறைத்துக் கொள்ளாமல் இருந்தால் தொல்லை தான்.
ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் கண்டிப்பாக உப்பை குறைத்துக்கொள்ள வேண்டும். உப்பினால் இவை ஏற்படுகிறதா என்று சர்வதேச சர்ச்சை நீடித்தாலும், உப்பை குறைத்தால் இதய நோய் கட்டுப்படுகிறது என்பது உண்மை .
பிரஷர் குறையும்
“லப் டப்’ என்று இதயத்துடிப்பு கேட்கிறதே, அப்போது இதயம் சுருங்கி, விரியும். அப்போது ஏற்படும் அழுத்தம் தான் “சிஸ்டாலிக்’ என்று அழைக்கப்படுகிறது.மற்ற உறுப்புகளுக்கு ரத்தம் செலுத்தப்படுவது அந்த அழுத்தம் மூலம் தான்.இதயத்துடிப்புகளுக்கு இடையே உள்ள இடைவெளியில் மட்டும் தான் இதயம் ஓய்வெடுக்கிறது. இந்த இடைவெளியில் ஏற்படும் அழுத்தம் தான் ரத்த அழுத்தம் “டயஸ்டாலிக்’ என்று பெயர்.
ரத்த அழுத்தம் 130/85 என்பது நார்மலானது; சுருங்கி விரியும்போது எடுக்கப்படுவது தான் முதலானது; அதை டாப் நம்பர் என்பர்; அதுபோல, இரண்டாவது குறிக்கப்படுவது தான் டயஸ்டாலிக்.
மருந்து, மாத்திரைகள் மட்டுமின்றி, உப்பு குறைக்கப்பட்டாலே, ரத்த அழுத்த அளவு தானாகவே குறைந்து விடும்.
எதை கைவிடணும்?
* பிரஷ் பழங்கள், காய்கறிகளை சாப்பிட பழகலாம்; உப்பு குறைத்து உணவு சாப்பிட பழக வேண்டும்.
* பாட்டில் பானங்களை கண்டிப்பாக கைவிட வேண்டும். அதில் உப்பு அதிகம்.
* பாக்கெட்டில் அடைக் கப்பட்ட உணவு, நீண்ட நாள் பாதுகாப்புக் காக சோடியம் பயன் படுத்தப்படுகிறது. உப்பு அதிகமாக உள்ளதால் அவற்றை தவிர்க்க வேண்டும்.
* ஊறுகாய், உப்பு போட்ட நொறுக்குகளை மறந்து விட வேண்டும்.
நன்றி தினமலர்!
(ஆரோக்கியம்)
* உப்பு பெறாத விஷயம் இல்லே *
* உஷாராக இருக்க வேண்டிய எச்சரிக்கை *
* உப்பில்லா பண்டம் குப்பையிலே… என்று சொல்லி விட்டுப் போய்விட்டனர்.
* உப்பை குறையுங்க; இல்லே, தீராத தொல்லை தான் என்று பயமுறுத்திவிட்டனர் டாக்டர்கள்.
உப்பு பற்றி உப்பு பெறாத விஷயம் என்று யாரும் நினைக்கத் தயாரில்லை. ஆனால், உடம்புக்கு வராத வரை உப்பு பற்றி கவலைப்படுவதும் இல்லை. சிலரை பார்த்தால், தட்டில், அரை ஸ்பூன் உப்பை போட்டு வைத்திருப்பர். தேவைப்படும் போது, இவர்களே, சாம்பார் முதல் தயிர் சாதம் வரை சேர்த்துக்கொள்வர்.
கொழுப்பு தேவை; அதிகமானால் ஆபத்து; எண்ணெய் தேவை; அதிகமானால் ரத்த அழுத்தம் தான். இனிப்பு தேவை; அதிகமானால் ஷுகர். இப்படித்தான் உப்பு தேவை தான்; அதிகமானால் ரத்த அழுத்தம் எகிறிவிடும்; மாரடைப்பு வருமோ என்ற பீதி கிளம்பும்.
அப்படி என்ன தான் இருக்கு?
சோடியம் – குளோரின் ஆகிய இரண்டு ரசாயனங் களும் சேர்ந்தது தான் உப்பு; இயற்கை கனிமங்களில் ஒன்று ; சோடியம் குளோரைடு கலவைகளில் ஒன்று. வெண்மை நிறம் கொண்டது சோடியம்; குளோரினோ, பச்சை மஞ்சள் கலந்தது; தண்ணீரில் கரைந்து விடும்; காற்றில் வாயுவாகி விடும்.
பல்வேறு உப்புகள் உள்ளன:
* சோடியம் பைகார்பனேட்: பேக்கிங் சோடா என்பது இது தான். சுத்தம் செய்ய பயன்படுவது. மருத்துவ குணங்கள் கொண்டது.
* சோடியம் நைட்ரேட்: உரம், வெடிக்கு பயன்படுவது.
* சோடியம் ஹைட்ராக்சைடு: பேப்பர் , சோப்பு, சில உணவு வகைகளில் பயன்படுத்தப்படும் காஸ்டிக் சோடா எனப்படுவது.
வேணும்… ஆனா வேணாம்
உடலில் உப்பு தேவை; அதிக அளவில் உப்பு , வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேறி விட்டால், அதை ஈடு செய்ய வேண்டி உப்பு கரைசல் தேவை. உடலில் உப்பு குறைந்தால் தண்ணீர் வற்றிய நிலைக்கு தள்ளப்படுகிறது. அப்போது வாந்தி, மயக்கம் வருகிறது. அதை தீர்க்க அதிக அளவில் தண்ணீர், எலக்ட்ரால் கரைசல் குடிக்க செய்கின்றனர் டாக்டர்கள்.
உடலில் அதிக உப்பு சேர்ந்தாலும் தொல்லை தான். அதிக உப்பு உள்ளவர்களுக்கு அடிக்கடி தாகம் எடுக்கும்; அடிக்கடி சிறுநீர் போவர். சிறுநீர் மூலம் தான் அதிகப்படியான உப்பு வெளியேற்றப்படுகிறது.
உப்புல சூப்பர் பலன்
* வெது வெதுப்பான தண்ணீரில் உப்பை கரைத்து தொண்டையில் நிறுத்தி கொப்பளித்தால் தொண்டை கரகரப்பு போய்விடும். புண் இருந்தாலும் போய் விடும்.
* தேய்க்கும் பற்பசையில் உப்பு உள்ளது; அதுபோல சோப்பிலும் உள்ளது. உடலில் உள்ள எரிச்சல், தோல் பிரச்னை இதனால் போய் விடும். பல் பாதுகாப்புக்கு உப்பு முக்கியம்.
எவ்ளோ ஓகே
நாம் குடிக்கும் தண்ணீரில் உப்பு உள்ளது. அதனால், உணவில் சேர்ப்பது உட்பட ஒருவரின் உப்பு தேவை ஒரு டீஸ்பூன் தான் என்பது தான் நிபுணர்களின் கருத்து.
உப்பு போட்டாலே, உணவு அயிட்டங்களுக்கு தனி சுவை வந்து விடும் தான்; ஆனால், அதற்காக நாற்பதை தாண்டியும் உப்பை குறைத்துக் கொள்ளாமல் இருந்தால் தொல்லை தான்.
ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் கண்டிப்பாக உப்பை குறைத்துக்கொள்ள வேண்டும். உப்பினால் இவை ஏற்படுகிறதா என்று சர்வதேச சர்ச்சை நீடித்தாலும், உப்பை குறைத்தால் இதய நோய் கட்டுப்படுகிறது என்பது உண்மை .
பிரஷர் குறையும்
“லப் டப்’ என்று இதயத்துடிப்பு கேட்கிறதே, அப்போது இதயம் சுருங்கி, விரியும். அப்போது ஏற்படும் அழுத்தம் தான் “சிஸ்டாலிக்’ என்று அழைக்கப்படுகிறது.மற்ற உறுப்புகளுக்கு ரத்தம் செலுத்தப்படுவது அந்த அழுத்தம் மூலம் தான்.இதயத்துடிப்புகளுக்கு இடையே உள்ள இடைவெளியில் மட்டும் தான் இதயம் ஓய்வெடுக்கிறது. இந்த இடைவெளியில் ஏற்படும் அழுத்தம் தான் ரத்த அழுத்தம் “டயஸ்டாலிக்’ என்று பெயர்.
ரத்த அழுத்தம் 130/85 என்பது நார்மலானது; சுருங்கி விரியும்போது எடுக்கப்படுவது தான் முதலானது; அதை டாப் நம்பர் என்பர்; அதுபோல, இரண்டாவது குறிக்கப்படுவது தான் டயஸ்டாலிக்.
மருந்து, மாத்திரைகள் மட்டுமின்றி, உப்பு குறைக்கப்பட்டாலே, ரத்த அழுத்த அளவு தானாகவே குறைந்து விடும்.
எதை கைவிடணும்?
* பிரஷ் பழங்கள், காய்கறிகளை சாப்பிட பழகலாம்; உப்பு குறைத்து உணவு சாப்பிட பழக வேண்டும்.
* பாட்டில் பானங்களை கண்டிப்பாக கைவிட வேண்டும். அதில் உப்பு அதிகம்.
* பாக்கெட்டில் அடைக் கப்பட்ட உணவு, நீண்ட நாள் பாதுகாப்புக் காக சோடியம் பயன் படுத்தப்படுகிறது. உப்பு அதிகமாக உள்ளதால் அவற்றை தவிர்க்க வேண்டும்.
* ஊறுகாய், உப்பு போட்ட நொறுக்குகளை மறந்து விட வேண்டும்.
நன்றி தினமலர்!
(ஆரோக்கியம்)
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» உணவில் உப்பின் அளவை குறைத்தால் இதயநோய் எச்சரிக்கை தகவல்!!
» உணவில் உப்பின் அளவை குறைத்தால் இதயநோய் எச்சரிக்கை தகவல்!!
» உணவில் அதிகம் இனிப்பு சேர்த்தால் ஆபத்தான நோய்கள் ஏற்படும்
» மாரடைப்பு ஏற்படும் நோயாளியை கண்டுபிடித்து சிகிச்சை உதவி அளிக்கும் ஆளில்லா விமானம் கண்டுபிடிப்பு
» இரத்த கொதிப்பு நோய் குணமாக அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்./சித்தர்கள்
» உணவில் உப்பின் அளவை குறைத்தால் இதயநோய் எச்சரிக்கை தகவல்!!
» உணவில் அதிகம் இனிப்பு சேர்த்தால் ஆபத்தான நோய்கள் ஏற்படும்
» மாரடைப்பு ஏற்படும் நோயாளியை கண்டுபிடித்து சிகிச்சை உதவி அளிக்கும் ஆளில்லா விமானம் கண்டுபிடிப்பு
» இரத்த கொதிப்பு நோய் குணமாக அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்./சித்தர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|